Wednesday, February 18, 2015

Fix deficiencies in 1 year or lose status, UGC tells deemed universities TNN | Feb 18, 2015, 03.27 AM IST

CHENNAI: The University Grants Commission has given seven deemed universities, including four from Tamil Nadu, a year to fix their deficiencies and submit a final compliance report, failing which they could lose their deemed university status.

In its latest meeting, UGC examined the reports of the expert committee on these institutions and found a number of deficiencies. "The commission noted that despite the lapse of several years, these institutions have not yet rectified their shortcomings," said the minutes of the meeting. It was decided at the meeting that the reports will be examined thoroughly to identify the major deficiencies, which will be then communicated to the ministry of human resource development and the Supreme Court, besides the seven institutions.

"After detailed deliberations, the commission has decided to give them a final opportunity to rectify their deficiencies within a maximum period of one year and submit the compliance report within this period, failing which recommendation will be made to the HRD ministry for denotification of their deemed-to-be status," the minutes said.

Some of the deemed universities claimed to have not yet received any official communication from UGC in this regard. Others said that they have started working on their deficiencies.

Chennai-based Bharath University, one of the seven, has to work on 23 major shortcomings and 17 minor ones. The report mentions that the university has to conduct national and international conferences in various fields, publish papers with high impact factors, follow the Sixth Pay Commission recommendations for faculty salary, and submit relevant land records and documents. Some of the minor recommendations include improving facilities for students and conducting cultural events in order to provide a holistic learning environment for them, encouraging the formation of professional associations like IEEE, and taking steps to empower women students.

"We held a meeting recently, and plan to meet the recommendations within a month or two. We are complying with most of the recommendations and expect to complete the preparations by March well before the January 2016 deadline," said K P Thooyamani, vice-chancellor of Bharath University.

Academics said that such a review should be extended to all the deemed universities across the country, irrespective of ranking, as it has been more than five years since the Tandon Committee inspected the institutions. "The Supreme Court has clearly held that review means physical inspection, which did not happen in the case of the Tandon Committee. This is an opportune time for UGC to exercise its statutory mandate to review all deemed universities. The Tandon Committee's findings cannot have an eternal validity without expiry date," said S Vaidhyasubramaniam, dean of planning and development of Sastra University.

SERVICES OF CONTRACT SATFF NOT TO BE TERMINATED..AAP

SICK DOCTOR ENDS LIFE AT MARINA

கேஜரிவாலின் தர்மசங்கடம்!

Dinamani

சென்ற ஆண்டில் தான் பதவி விலகிய அதே நாளில் பதவி ஏற்றிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தன்னிடம் எந்தத் துறையையும் வைத்துக் கொள்ளாமல், அத்தனை துறைகளையும் அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, அவர்களது செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது வித்தியாசமான அணுகுமுறை. கடந்த முறை செய்த தவறை தான் மீண்டும் செய்வதில்லை என்றும் இந்தத் தடவை முழுமையாக ஐந்தாண்டுகள் பதவி வகிப்பது என்று அவர் உறுதி எடுத்துக் கொண்டிருப்பதும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை.

முதல்வராகப் பதவி ஏற்பதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் நேரில் சந்தித்துத் தனது அரசுக்கு அவர்களது ஒத்துழைப்பை கோரியிருக்கிறார் அரவிந்த் கேஜரிவால். தனது அமைச்சரவையின் முக்கியமான கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்திருப்பது, அவருக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வைத்திருக்கும் முக்கியமான கோரிக்கை, நிலம், காவல் துறை இரண்டும் தில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பது. தில்லி, தேசத்தின் தலைநகரமாக இருப்பதாலும், பல முக்கியமான அரசு அலுவலகங்களும், அன்னிய நாட்டுத் தூதரகங்களும், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் இருப்பதாலும், தில்லியின் பாதுகாப்பும், நிலம் தொடர்பான உரிமையும் நடுவண் அரசிடம் இருக்கிறது. இதை தில்லி மாநில அரசின்வசம் விட்டுக் கொடுக்க மத்திய அரசு தயாராக இல்லை.

தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது முதல் தொடரும் பிரச்னை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித் 2004 முதல் 2013 வரை தில்லி முதல்வராக இருந்தும்கூட, அப்போதைய மத்திய அரசு, நிலம், காவல் துறை இரண்டையும் மாநில அரசின் அதிகாரத்திற்கு மாற்றித் தரவில்லை. ஷீலா தீட்சித்தின் கோரிக்கைகளை மன்மோகன் சிங் அரசு ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களில் மாநில அரசின் முடிவுகளை மாற்றியும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்கு சாதகமாக, மத்திய பா.ஜ.க. அரசு செயல்படும் என்றோ, நிலம், காவல் துறை ஆகியவற்றை மாநில அரசின் அதிகாரத்திற்கு மாற்றிக் கொடுக்கும் என்றோ எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. தில்லி என்பது மத்திய அரசு அலுவலகங்களும், தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததுமான பகுதிகள் மட்டுமல்ல. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கைந்து தொகுதிகளைத் தவிர ஏனைய தொகுதிகள் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளும், விவசாயப் பகுதிகளும் அடங்கியவை. குறிப்பாக, கிழக்கு தில்லி, மேற்கு தில்லி போன்றவை மத்திய அரசுடன் தொடர்பே இல்லாத குடியிருப்புப் பகுதிகள்.

இந்தப் பகுதிகளில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும், பள்ளிக்கூடம் கட்ட வேண்டும், மாநில அரசு அலுவலகம் நிறுவ வேண்டும் என்றால்கூட தில்லி அரசு நிலம் கையகப்படுத்திவிட முடியாது. மத்திய அரசின் அனுமதி பெற்றாக வேண்டும். அதேபோல, தலைநகர் தொடர்பான இடங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவோ, சாமானிய மக்களின் பாதுகாப்புக் கருதி காவல் துறைக்கு உத்தரவிடவோ மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. காவல் துறை துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டிலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.

தில்லி முதல்வர்களின் கோரிக்கையில் நியாயம் இருந்தாலும், மத்திய அரசில் இருப்பவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை எனும்போது, மாநில அரசால் என்ன செய்துவிட முடியும்? சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலால் உடனடியாகச் செய்ய கூடியது, கடந்த முறை தான் பதவி விலகக் காரணமாக இருந்த லோக்பால் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது. அதிலும்கூட, சட்டப்பேரவையின் தீர்மானத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அங்கீகரித்தாக வேண்டும். தண்ணீர், மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பது என்பது அரவிந்த் கேஜரிவால் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பும் மத்திய அரசின் ஆதரவும் இல்லாமல் அதுவும் சாத்தியப்படுமா என்பது சந்தேகமே.

அரவிந்த் கேஜரிவால் அரசால், அன்றாட நிர்வாகத்தில் லஞ்ச ஊழலைக் குறைக்க முடியும். அதிகாரிகளை நிர்வாகச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கச் செய்ய முடியும். ஆம் ஆத்மியின் கொள்கைக்கேற்ப மக்களின் பங்களிப்புடன் நிச்சயமாக நிர்வாகத்தை சீர்திருத்த முடியும். தொண்டுள்ளமும் அர்ப்பணிப்புணர்வும் உள்ள தலைவன் இருந்தால், அடிமட்டம் வரை மாற்றம் ஏற்படும் என்பது உண்மை. மத்தியில் நரேந்திர மோடியும், தில்லியில் அரவிந்த் கேஜரிவாலும் இந்த விஷயத்தில் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஒரு தர்மசங்கடம் உண்டு. நல்ல நிர்வாகத்தை வழங்க வேண்டுமானால் அவர் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாக வேண்டும். அதே நேரத்தில், அரசியல் சக்தியாக ஆம் ஆத்மி கட்சி தொடர வேண்டுமானால், அவர் மத்திய அரசை எதிர்த்துப் போராடிய வண்ணம் இருந்தாக வேண்டும்.

கேஜரிவால் என்ன செய்யப் போகிறார், பார்ப்போம்!

முன்பதிவு ரயில் பெட்டிகளில் அத்துமீறல்கள்



முன்பதிவு செய்யப்பட்ட விரைவு ரயில் பெட்டிகளில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு பெற்றவர்கள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல மாதங்களுக்கு முன்பாக ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் பெறும் இடையூறுகளை அனுபவித்து வருகின்றனர்.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண பயணச் சீட்டு எடுத்து அத்துமீறி பயணிப்பது வட மாநில ரயில்களில் அதிகம் காணலாம். மேலும், அவர்கள் முன்பதிவு செய்த பயணிகளிடத்தில் தகராறு செய்வதும் உண்டு.

தமிழத்திலும் விரைவு ரயில்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்து வருகின்றன. அவ்வப்போது ரயில் டிக்கெட் பரிசோதகர்களும், ரயில்வே பாதுôப்பு படையினரும் நடவடிக்கை எடுத்தாலும், இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படாமல் உள்ளது.

மேலும் இவர்களால் பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.

காற்றில் பறந்த உத்தரவு: ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவுப் பெட்டிகளில் பயணிப்பதற்கு 2014- ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, ரயில்வே துறை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஒரு பெட்டியில் பொருள்களை வைத்துக் கொண்டு மற்றொரு பெட்டியில் பயணம் செய்யக் கூடாது என்றும், இருக்கைக்கு அடியில் வைக்கப்படும் பெட்டிகள், பொருள்கள், பைகள் பற்றி ஒவ்வொரு பயணியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்து வருகிறது.

இதுதவிர முன்பதிவு செய்த பெட்டிகளில், சாதாரண டிக்கெட் எடுத்தவர்கள், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது என டிக்கெட் பரிசோதகர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்பதிவு பெட்டிகளில் படுக்கை உறுதி செய்யப்பட்டவர்கள். ஆர்.ஏ.சி. பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ரயில்வே ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் போன்றவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த விதிகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை எழும்பூர் ரயில்வே காவல் ஆய்வாளர் சேகர் கூறியதாவது:

முன்பதிவுப் பெட்டியில் அத்துமீறிப் பயணிப்பவர்கள் குறித்து முதலில் டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், டிக்கெட் பரிசோதகரால் மட்டுமே அத்துமீறிப் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க முடியும்.

டிக்கெட் பரிசோதர் இல்லையென்றால், பயணிகள் 9962500500 என்ற ரயில்வே காவல் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனடியாக, ரயில்வே போலீஸார் உதவி செய்து, அத்துமீறிப் பயணம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றார்.

Tuesday, February 17, 2015

வெட்டிவேரு வாசம் 23 - புழுதியில் எறியப்பட்ட வீணை!

சுபா
Return to frontpage
கும்பகோணம் பஜாரில் ‘மங்களாம் பிகை விலாஸ்’ இருந்தது. காலை 9 மணிக்கே சாப்பாடு போட ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 10 வரைக்கும் சுடச் சுட சாப்பாடு. அரைத்து விட்ட சாம்பார், வத்தல் குழம்பு, தக்காளி ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய் என்று முழு சாப்பாடு.

முதலாளி கிருஷ்ணமூர்த்தி ஐயர் வெள்ளைக் கதர்ச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். தலையில் குடுமி. கண்களில் கருணை கசியும். என்னுடைய ஐந்தாவது வயதில் அம்மாவும், அப்பாவும் அவ்வப்போது அந்த ஹோட்டலுக்குச் சாப்பிடக் கூட்டுச் சென்றது, இன்றைக்கும் நினைவு இருப்பதற் குக் காரணம், கிருஷ்ணமூர்த்தி ஐயர்தான்.

ஐயருக்கு என் மேல் ஏதோ பாசம். என்னை மேஜையிலேயே உட்கார வைத்து சிறு இலை போடுவார். சாப்பாடு பரிமாறச் சொல்வார். எனக்கென்று ஸ்பெஷலாகப் பருப்பு, நெய், தக்காளி ரசம். அம்மா பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பண்ணி வைப்பாள். ஒவ்வொன்றாகச் சாப்பிடுவேன். என் சாப்பாட்டுக்கு ஐயர் எப்போதுமே காசு வாங்கியது இல்லை.

காலை 8 மணிக்கு ஐயர் இரட்டை மாட்டுக் கூண்டு வண்டியில் ஹோட்ட லுக்கு வருவார். காசு இல்லாமல் வந்து பசி என்று சொல்லிவிட்டால் வயிறு நிறைய சாப்பாடு போடுவார். பெரிய மனசு. ஒவ்வொரு மகாமகத்துக்கும் 1,000 பேர் வரைக்கும் அன்னதானம் செய்வார். ஐயருக்கு ஆவூரில் வீடு. புடைவை வியாபாரத்துக்காக அப்பா அங்கே போனபோது, என்னையும் கூட்டிச் சென்றிருக்கிறார்.

பிரம்மாண்டமான தோட்ட வீடு. வாசலில் தெருவை அடைத்துப் பந்தல். மதில் சுவரையொட்டி மோர்ப் பந்தல். பானைகளில் வெண்ணெய் மிதக்கும் மோர். யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். உள்ளே தோட்டத்தில் கீற்றுப் பந்தலுக்குக் கீழே பசு மாடுகள், கன்றுகள். இன்னொருபுறம் கூண்டு வண்டி, அவிழ்த்து விடப்பட்ட இரட்டைக் காளைகள். வீட்டுக்கு முன்னால் திறந்தவெளியில் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் பொம்மை. அதைச் சுற்றியிருக்கும் வட்டமான அகழி நீரில் மீன்கள் நீந்தும்.

பிரதான கதவு கடந்தால் வரவேற்பறை. சுவரில் கருங்காலி மரத்தாலான பெண்டுலம் கடிகாரம். கால் மணி நேரத்துக்கு ஒரு முறை இனிமையாக ஒலிக்கும். ஒரு தேக்கு மர ஸ்டாண்டில் காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள். பிற்பாடு, அப்பா தொழிலை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். கும்பகோணம் போகும்போது எல்லாம் மங்களாம்பிகை விலாஸுக்குப் போய்ச் சாப்பிடுவேன். ஹோட்டலில் ஐயர் இல்லாவிட்டால் ஆவூருக்குச் சென்று பார்த்துவிட்டு வருவேன். வீட்டில் உண்மையான டிகிரி காபி கிடைக்கும்.

ஒருமுறை 7 வருட இடைவெளிக்குப் பிறகு கும்பகோணம் போனேன். மங்க ளாம்பிகை விலாஸ் இருந்த இடத்தில் ஒரு ஜவுளிக்கடை முளைத்திருந்தது. திக்கென்று இருந்தது. என்ன ஆயிற்று என்று விசாரித்தேன். ஐயரின் வாழ்க்கையில் விதி விளையாடி இருந்தது. வேலைக்காரர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஆற்று வெள்ளம் அவரது விளை நிலங்களைக் கொள்ளை கொண்டது. ஹோட்டலை நடத்த கடன் வாங்கியிருக்கிறார். திருப்பித் தர இயல வில்லை. ஹோட்டல் ஏலத்துக்கு வந்து விட்டது.

பதைப்புடன் ஆவூருக்குப் போனேன். தெருவை அடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலில் கீற்றுகள் இற்று விழுந்திருந்தன. மோர்ப் பந்தல் சரிந்திருந்தது. கூண்டு வண்டியின் சக்கரங்களை கரையான் புற்றுகள் மறைத்திருந்தன. கிருஷ்ண னின் கை, கால்கள் உடைந்து துருவே றிய இரும்புக் கம்பிகள் தெரிந்தன. அகழியில் தண்ணீர் இல்லை. அங்கு சருகு இலைகள் நிறைத்திருந்தன. பசுக்கள் இல்லை. தளைகள் மட்டும் இருந்தன.

சாய்வு நாற்காலியில் ஐயர் சிறுத்துக் கிடந்தார். என்னைக் கண்டதும் கண்களில் ஒளி. முக்காலியில் உட்காரச் சொல்லி கையைப் பற்றி அழுத்தினார். கருங்காலி கடிகாரத்தின் பெண்டுலம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

“போச்சு… எல்லாம் போச்சு. இந்த மாமாங்கத்துக்குக் கதை முடிஞ்சிரும்...” என்றார். ஆறுதலாக ஏதோ சொன்னேன். புறப்படும்போது வரவேற்பறை ஸ்டாண்டில் இருந்த குரங்கு பொம்மையைக் கொடுத்தார். “நல்லா இரு. ஞாபகம் வெச்சிக்கோ...” என்று ஆசிர்வதித்தார். நெஞ்சில் பாறையைச் சுமந்து திரும்பினேன்.

மாமாங்கம் அன்றைக்கு கும்ப கோணம் வரைக்கும் நடந்து வந்திருக் கிறார். யாரோ அளித்த அன்னதான வரிசையில் நின்று கையேந்தி சாப்பிட்டிருக்கிறார். நேராகக் காவேரிக் குச் சென்று குதித்து ஜலசமாதி ஆகிவிட்டார் என்று நண்பன் ஒருவன் போனில் கூறினான். கண் கலங்கியது. கயாவுக்குச் சென்றபோது அவருக்கும் சேர்த்துப் பிண்டம் கொடுத்தேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது!

‘கனாக் கண்டேன்' திரைப்படத்தில், கடன் வாங்கித் திருப்பித் தராத தயாரிப்பாளர் வீட்டுக்கு வில்லன் போய் மிரட்டுவது போல் ஒரு காட்சி. இயக்குநர் கே.வி.ஆனந்த் எங்களிடம், “வீட்டைப் பார்த்தாலே ஒரு பணக்காரர் வாழ்ந்து கெட்ட வீடு மாதிரி தெரியணும். எழுதிக் கொடுங்க...” என்றார்.

வீட்டை நோக்கிச் செல்லும் பாதையின் இரு மருங்கிலும் புதராக மண்டியிருக்கும் தாவரங்கள், தோட்டம் எங்கும் சருகுகள். ஒரு காலத்தில் கையில் குடமேந்தி நீர் வார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் சிதிலமடைந்த பொம்மை. காற்று இறங்கி வீணாகிப் போன சக்கரங்களுடன், சீட் கிழிந்த, பெயின்ட் உதிர்ந்த, விண்ட் ஷீல்ட் இல்லாத கார். பாசியும் மழை நீரின் அழுக்குத் தடமும் பதிந்த சுவர்கள். அங்கு வந்து நிற்கும் வில்லனின் புதிய கார் என்று எழுதிக் கொடுத்தோம்.

வர்ணனையில் ஓர் அம்சத்தைக் கூட மாற்றாமல் ஒரு வீட்டை இயக்குநர் தயார் பண்ண வைத்தார். வீட்டில் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்ணிடம் கடனைத் திருப்பிக் கேட்டு வில்லன் மிரட்டும் இடைவேளைக் காட்சியாக அது அழுத்தமாக விரிந்தது.

உலகக் கோப்பையை வென்றா விட்டோம்...?'- இந்திய வீரர்கள் அலுப்பு!



பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், உலகக் கோப்பையை வென்றா விட்டோம்? கொண்டாட்டத்தில் திளைக்க.. என்பதே இந்திய வீரர்களின் கருத்தாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து உலகம் முழுக்க உள்ள இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பாகிஸ்தான் அணியை வீழ்த்தினாலே போதும்... இனிமேல் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லா விட்டால் கூட பரவாயில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து. ஆனால் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருந்த இந்திய வீரர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடவில்லை என்ற வியப்பு செய்தி வந்துள்ளது.

இந்திய அணி வெற்றி பெற்ற அந்த தருணம் குறித்து இந்திய அணியின் உதவியாளர் ஒருவர் பி.டி.ஐ நிறுவனத்திற்கு அளித்த தகவலில், ''இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுமே அடிலெய்ட் நகரில் திரண்டிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். நகரத்தில் உள்ள ஒவ்வொரு இரவு விடுதியும் நிரம்பி வழிந்தது. ஆனால் இந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இந்திய வீரர்கள் இல்லை. வெற்றியை கொண்டாடும் அளவுக்கு தாங்கள் சாதிக்கவில்லை என்றும், உலகக் கோப்பையை வென்றா விட்டோம்? கொண்டாடி திளைக்க என்பதே பெரும்பாலான இந்திய வீரர்களின் கருத்தாக இருந்தது.

இந்த போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களுமே மிகுந்த சோர்வாக இருந்தனர். அதனால் போட்டி முடிவடைந்ததுமே ஹோட்டல் அறைக்கு சென்று விட்டனர். கேப்டன் தோனியும், அணி மேலாளர் ரவி சாஸ்திரி மட்டும் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்து ஏதோ பெரிய டென்ஷன் குறைந்தது போல நிம்மதியாக பேசிக் கொண்டிருந்தனர். அதிகாலையிலேயே அடிலெய்டில் இருந்து மெல்பர்ன் நகருக்கு புறப்படும் விமானத்தில் இந்திய வீரர்கள் கிளம்பிவிட்டனர். மெல்பர்ன் வந்த பின், இந்திய வீரர்கள் இரு நாட்கள் நன்றாக ஓய்வு எடுத்தனர். அதற்கு பின்தான் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டிக்காக தயாராகி வருகின்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

NEWS TODAY 11.06.2026