Thursday, December 29, 2016

When too much of Wikipedia is not a good thing

A routine search grew into an unhealthy Internet-based dependency and landed man at NIMHANS

Thousands of seekers of information may find Wikipedia an easy and useful way to gather information but the open source encyclopaedia turned into an addiction for a 24-year-old man.
What started as a casual search nearly five years ago had him spending an average of eight to ten hours a day on it, sometimes even without toilet breaks for hours.
Soon enough, he complained of neck pain, bodily fatigue, strain to the eyes and difficulty in sleeping as he mostly accessed Wikipedia on his phone, searching for and reading on topics related to spirituality, fiction and scientific information on the universe.

SHUT to the rescue

When he was brought to the Service of Healthy Use of Technology (SHUT) clinic at the National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS) here, he was diagnosed with interpersonal maladjustment, decreased communication with his parents, not being participative in family interactions, and reduced outdoor activities. Besides psychological problems, he was found to be getting irritable with any advice to shun Wikipedia. Naturally, his intense addiction took a toll on his academic pursuits.
At the SHUT clinic in NIMHANS, which has treated several kinds of addictions so far, this was the first case of its kind being reported. “We found the case to be novel and one that required wider awareness,” said Dr. Manoj Kumar Sharma, Additional Professor, Department of Clinical Psychology, NIMHANS, who has since published a paper ‘Wikipedia use: Risk for developing technology addiction’ in Industrial Psychiatry Journal.

Behavioural therapy

During the nearly two weeks of counselling the patient underwent in August 2015, Dr. Sharma said that the 24-year-old slowly acknowledged the need to reduce his dysfunctions.
Besides introducing behavioural therapy to address his anger, NIMHANS conducted sessions for his family to address their concerns. The paper also notes that gradually, over a period of time, he made lifestyle changes, and his dependence on Wikipedia also decreased.
ராமர் பாதுகை அரசாண்ட பாணி.. ஜெ. நாற்காலி முன்னிலையில் நடைபெறுகிறது அதிமுக பொதுக்குழு!
The Chair used by former CM Jayalalithaa has been brought to AIADMK GC council


சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஜெயலலலிதா இத்தனை காலமாக அமர்ந்த நாற்காலி கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த அதிமுக பொதுச் செயலர் யார் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. சசிகலாவை அப்பதவிக்கு கொண்டுவர தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே இந்த நிகழ்வுக்கு சென்டிமென்ட் டச் கொடுக்க அதிமுக தலைவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, இதுவரை ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலி பொதுக்குழு நடைபெறும் வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு இன்று காலை காரில் கொண்டு வரப்பட்டது. கூட்ட மேடையில் அந்த நாற்காலி நடு நாயகமாக போடப்பட்டது. அந்த நாற்காலி மீது, ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமாயண இதிகாசத்தில், ராமர் பாதுகையை வைத்து அவரது தம்பி பரதன் அரசாண்ட பாணியில் அதிமுக, ஜெயலலிதா இருக்கை முன்னிலையில், சசிகலாவை அடுத்த பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து, ஜெயலலிதாவே இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியும் ராம மோகன ராவின் மகன் விவேக் உட்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை


அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அதிகாரிகள் தீவிர ஆலோசனை

வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் ராம மோகன ராவின் மகன் விவேக் உட்பட 4 பேர் விசாரணைக்கு வராததால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் கடந்த 21-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தலைமைச் செயலகம் உட்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சேகர் ரெட்டியை தொடர்ந்து ராம மோகன ராவும், அவரது மகனும் சி.பி.ஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், ராம மோகன ராவ் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென போரூரில் உள்ள தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் 26-ம் தேதி வீடு திரும்பினார். யாரும் எதிர்பாராத வகையில், நேற்று முன்தினம் காலையில் ராம மோகன ராவ் தனது வீட்டில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

டெல்லி அதிகாரிகளுடன்..

பேட்டியில், வருமான வரித் துறை, மத்திய மற்றும் தமிழக அரசு மீது பல குற்றச்சாட்டு களை கூறினார். மருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பியதும் ராம மோகன ராவ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றே வருமான வரித்துறை அதிகாரி கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர் அதற்கு மாறாக பத்திரிகை யாளர்களை சந்தித்து விளக்கம் அளித்ததுடன், பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியது வருமான வரித்துறை அதிகாரி களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.

இதனைத் தொடர்ந்து ராம மோகன ராவ் விவகாரத்தில் அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம் என்று டெல்லி அதிகாரிகளு டன் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

சட்டத்தின்படியே சோதனை

இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் பேசிய போது, "வருமான வரிச் சட்டம் 132-ன் படி, வருமான வரித்துறை இயக்குநராக இருப்பவர் எந்த ஒரு இடத்திலும் புகுந்து சோதனை நடத்தும் அதிகாரம் படைத்தவர். அதன்படியே தலைமை செயல கத்தில் புகுந்து சோதனை நடத்தப்பட்டது.

வருமான வரிச் சட்டம் 132(2)-ன் படி, சோதனை நடத்தும் அதிகாரி களே தங்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். அது மாநில போலீ ஸாகவோ, மத்திய பாதுகாப்பு படையாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ இருக்கலாம்.

வருமான வரித்துறை சோத னையில், ராம மோகன ராவின் மகன் விவேக், அவரது வழக்கறிஞர் அமலநாதன், உறவினர்கள் ராஜ கோபாலன், முன்னாள் வன அதிகாரி கல்யாணசுந்தரம் ஆகியோ ரின் வீடுகளில் ஏராளமான ஆவணங் களும், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்கும் படி விவேக் உட்பட 4 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை 4 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

விவேக்கின் மனைவி ஹர்ஷினி கர்ப்பிணியாக இருக்கிறார். அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித் துள்ளனர். இதை காரணம் காட்டி விவேக் நேரில் ஆஜராகாமல் இருக் கிறார். இதேபோல ஒவ்வொரு வரும் வெவ்வேறு காரணங்களை கூறியுள்ளனர். இவர்கள் நேரில் ஆஜராகாமல் இருப்பதால் அடுத் தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றனர்.

தேர்வானார் ! எதிர்ப்பாளர்கள் யாரும் வராததால் சசி

சென்னை: பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு இன்று டிச. 29 ம் தேதி கூடியது . சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாஜலபதி மண்டபத்தில் காலை 9. 30 மணியளவில் துவங்கியது. இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் யாருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் எட்பாடி பழனிச்சாமி முன்மொழிய மறைந்த ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இரங்கல் தீர்மானம் நிறைவேற்றும் போது உரை நிகழ்த்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கண்ணீர் விட்டார். மற்றொரு தீர்மானத்தில் சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்றும் , தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2,490 உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். சூழ்ச்சிக்கு இடமளிக்காமல் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு கேட்டு கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு ,மகசேசே விருது வழங்க வேண்டும் என்றும் ஜெ., பிறந்த தினத்தை தேசிய தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தி்ல நிறைவேற்றிய தீர்மானத்தை போயஸ்கார்டன் சென்று ஓ.பி.எஸ்,. தலமையிலான குழுவினர் சசிகலாவிடம் வழங்குகின்றனர்.
ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை:‛‛ அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை, வானகரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் கட்சி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தகவலை சசிகலாவிடம் தெரிவித்து, அவரது சம்மதத்தை பெற நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பெரும் பாவங்களும் நீங்கும் தலம் இது! திருக்கண்ணார் கோயில்

By DIN  |   Published on : 27th December 2016 02:30 PM  |   அ+அ அ-   |  
1
தேவர்களில் இந்திரனும் சந்திரனும் சாபங்கள் பெற்றதாகப் புராணங்கள் மூலம் அறிகிறோம். தேவசபையில் ரம்பையர்களின் நடனத்தைக் கண்டு கொண்டிருக்கும் வேளையில் அங்கு எழுந்தருளிய துருவாச முனிவரையும் அவர் கொண்டு வந்த சிவ பிரசாதத்தையும் மதிக்காததால் முனிவரது சாபத்தைப் பெற்றான் என்று திருவிளையாடல் புராணம் கூறும். மற்றொரு சமயம் கௌதம முனிவரது துணைவியாரான அகலிகையை விரும்பியதால்  உடல் முழுதும் கண்களாகுமாறு சபிக்கப்பட்டான் இந்திரன். கல்லாக மாறிய அகலிகை ராமபிரானது பாதம் பெற்றுப் பழைய உருவை மீண்டும் பெற்றாள் என்று ராமாயணம் கூறுகிறது. இப்பாவத்தைச் செய்த தேவேந்திரன் எவ்வாறு சாபவிமோசனம் பெற்றான் என்று அறிய வேண்டாமா?
தேவசபையில் முனிவர் அளித்த சிவபிரசாதத்தை அருகிலிருந்த ஐராவதம் என்ற தனது யானையின் மத்தகத்தின் மீது இந்திரன் வைத்தவுடன், அந்த யானை அதனைத் தனது காலால் தரையில் தேய்த்தது. இதனால் வெகுண்ட துருவாசர், இந்திரன் தனது பதவியை இழக்குமாறும், அவனது யானை, காட்டானையாக மாறும் என சபித்தார். திருவெண்காட்டை அடைந்து தவம் செய்த ஐராவதம், பின்னர் மதுரையை அடைந்து தவமியற்றவே, அதனால் மகிழ்ந்த பெருமான் அந்த யானைக்குப் பழைய உருவம் வருமாறு அருளினார்.
கௌதம முனிவரின் சாபத்தால் பீடிக்கப்பட்ட தேவேந்திரன் இத்தலத்தை வந்தடைந்து தவம் செய்தான். அதன் பயனாக அவனது உடலில் இருந்த ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறின. அதனால் இறைவனுக்குக்  கண்ணாயிர  நாதர்  என்ற  நாமம்  வந்தது. இவ்வாறு  இந்திரன்  வழிபட்ட  திருக் கண்ணார் கோயில் என்ற தலத்தை நாம் இப்போது கண்ணாரக் கண்டு களிக்கிறோம்.
தலத்தின் இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சுமார் மூன்று கி.மீ. முன்பாக அமைந்துள்ள  கதிராமங்கலம் என்ற  இடத்திலிருந்து குறுமாணக்குடி என்ற ஊர் செல்வதற்கான கைகாட்டி உள்ளது.கிழக்கு நோக்கிச் செல்லும் அப்பாதையில்  திரும்பி சுமார் மூன்று கி. மீ. பயணித்தால் குறுமாணக்குடி என்று தற்போது வழங்கப்படும் திருக்கண்ணார் கோயிலை அடையலாம்.
மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட, திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் (குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி, மாபலியிடம் சென்று மூவடி மண் யாசித்தார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண் தருவதாக வாக்களித்தான். அப்போது வாமனர் , திரிவிக்கிரம வடிவெடுத்து, மண்ணை ஓர் அடியாலும், விண்ணை ஓர் அடியாலும் அளந்தார்.மூன்றாவது அடியாக மாவலியின் முடி மீது வைத்தார். இவ்வாறு குறு மாண் வடிவில் வந்த திருமால் வழிபட்ட தலம் இக் கண்ணார் கோயிலாகும். அதனால் தான் இத்தலத்திற்குக் குறு மாணக்குடி என்று பெயர் வந்தது. இக்கோயிலிலுள்ள ராஜ ராஜ சோழ மன்னரின் கல்வெட்டில் தலப்பெயர், குறு வாணியக்குடி என உள்ளது.  இவ்வரலாற்றை, இத்தலத்தின் மீது திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத் திருப் பதிகத்தில் வரும் பின்வரும் பாடலால் அறியலாம்.
மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்
செறு மாவலி பால் சென்று உலகெலாம் அளவிட்ட
குறு மாண் உருவன் தற் குறியாகக் கொண்டாடும்
கறு மாகண்டன் மேயது கண்ணார் கோயிலே.  
மேலும், இந்திரன் வழிபட்ட வரலாற்றுச் செய்தியையும் சம்பந்தரின் பதிகம் நமக்கு உணர்த்துகிறது:
முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம் பின் ஒரு நாள் அவ்விண்ணவர் ஏத்தப் பெயர்வெய்தித் தன்னருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர் கன்னியர் நாளும் துன்னமர்  கண்ணார் கோயிலே என்பது அப்பாடல்.
ஆலய அமைப்பு: கிழக்கு நோக்கிய அழகிய ஆலயம். மதில் சுவர்களால் சூழப்பெற்றுள்ளது. மண்ணியாற்றின் வளம் சேர்க்கும் ஊர். கோயிலுக்கு எதிரில் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. நாட்டுக்கோட்டை நகரத்தார்  திருப்பணி செய்துள்ளனர். திருக்குளத்தையும் சீரமைத்துள்ளனர். படிக்கட்டருகிலுள்ள விநாயகர் ஆலயச் சுவற்றில் திருக்குளப் புனரமைப்பு செய்த கல்வெட்டை அமைத்துள்ளனர்.
ஆலய முகப்பில் ராஜ கோபுரம் இல்லை. ரிஷபாரூடரின் சுதைச் சிற்பம் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும், விநாயகர், முருகன் ஆகிய மூர்த்திகள்  தங்களது வாகனங்களில் வீற்றிருக்கும் சுதைச் சிற்பங்கள் உள்ளன. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பிகையின் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. இந்திரனுக்கு ஆயிரம் கண் அருளியபடியால் பெருமானுக்குக் கண்ணாயிர நாதர் என்றும் அம்பிகைக்கு முருகு வளர் கோதை என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வளவு புராணச் சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தலத்தைத் தேவாரப் பாடல் பெற்ற தல யாத்திரை செய்பவர்களே பெரும்பாலும் தரிசிக்க வருகிறார்கள். தீராத பாவங்களும் தீர்க்கும் கோயில் என்று ஜோதிடர்கள் சொன்னால் தான் மக்கள் வருவார்களோ என்னவோ!  பாவம் தீரும் காலம் வந்தால் தான் வருவார்கள் போலும் . நாம் அறியோம்.  நவக்கிரகத் தல யாத்திரையாக வைதீஸ்வரன் கோயில் வருவோர் அநேகர் உளர். அதேபோல் வைத்திய நாத சுவாமியைக் குல தெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் ஏராளம். இவர்கள் எல்லாம் வைதீஸ்வரன் கோயிலுக்கு வரும்போது இது போன்ற கோயில்களைத்  தரிசிக்க வரலாம். பிறருக்கும் எடுத்துச் சொல்லலாம். இதனால் அர்ச்சகருக்கும் உபகாரமாக இருக்கும். கோயில்களும் பொலிவடையும்.  இனியாவது செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். கண்ணாயிர நாதரைப் பிரார்த்திப்போம்
- சிவபாதசேகரன்

பயிரை மேயும் வேலிகள்

By வாதூலன்  |   Published on : 29th December 2016 02:01 AM 
|  
கடந்த சில தினங்களாகத் தின ஏடுகளில் வெளியாகும் செய்திகள் மிக்க அதிர்ச்சி தருபவையாக உள்ளன. தமிழகத்தில் சில பெரும்புள்ளிகளின் இல்லத்தில் பல கோடிக்கும் மேல் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு முன், பெங்களூருவிலும், தில்லியிலும் இத்தகைய சம்பவங்கள் நேர்ந்துள்ளன. ஆனால், அங்கெல்லாம் தொகை குறைவு.
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அமலாக்கத் துறை கண்டுபிடிப்பதும், அவை பற்றிச் செய்திகள் வருவதும் இயல்புதான். அதுவும், கணக்கில் காட்டப்படாத, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொகைக்கு உச்சபட்ச வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
ஆனால் வேதனையான உண்மை என்னவென்றால், பிடிபட்டவர்களின் இல்லத்திலிருந்து பல கோடிக்கும் மேல் புதிய நோட்டுகள் கைப்பற்றிருப்பதுதான். இது எப்படிச் சாத்தியமாயிற்று?
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகப் பணம் படுத்தும் பாட்டையும், பொதுமக்கள் அவதிப்படுகிற காட்சியையும் சகல ஊடகங்களும் வெளியிட்டுக் கொண்டே வந்தன.
வங்கிக் கிளையொன்றில் வரிசைக் கிரமப்படி தொகை கொடுத்து வந்த காசாளர், "இனிமேல் கிடையாது; இரண்டு மணிக்கு மேல் வரவும்' என்று சட்டென்று நிறுத்தி விட்டார். மாதா மாதம் பத்திரிகைகளுக்கு பணம் கொடுத்து வந்த என் நண்பர், இப்போது வருகிற ஜனவரி மாதத்துக்கும் சேர்த்து கொடுத்து விட்டு, 2000 ரூபாய் நோட்டை மாற்றினார்.
இதேபோல் பக்கத்து தள இல்லத்தரசி, காய்கறிக் கடையில் தேவைக்கு அதிகமான காய்கறிகளை வாங்கி இரண்டாயிரம் ரூபாய்க்கு நூறு ரூபாய் நோட்டுகளைப் பெற்றார்.
வங்கிகளைப் பற்றியே சொல்ல வேண்டியதே இல்லை. அதுவும், அரசும் நிதி அமைச்சகமும் மாறி மாறி விடுக்கிற அறிக்கைகளைப் படித்து, வாடிக்கையாளர்கள், அதிகாரிகளைக் கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கிறார்கள்.
ஆனால், வங்கிக் கிளையில் போதுமான இருப்பு தொகை இல்லை; பல அரசு வங்கிகளின் ஏ.டி.எம்.கள் வேலை செய்வதில்லை. ஓரிரு தனியார் வங்கிகளிலும், பாரத் ஸ்டேட் வங்கியிலும் மட்டும்தான் ஏ.டி.எம். வேலை செய்கிறது; அதேசமயம் அங்கு காத்திருக்கிற வரிசை சொல்லி மாளாது.
நிலைமை இவ்வாறு இருக்க, கோடிக்கணக்கில் புத்தம் புது நோட்டுகளைச் சிலர் எவ்விதம் பதுக்குகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. அச்சடிக்கப்பட்ட புது நோட்டுகள், ரிசர்வ் வங்கி மூலம் பாதுகாப்பான வாகனம் மூலம் ஏற்றப்பட்டு, வங்கிகளின் பணப் பெட்டகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அவர்கள் கிளைகளின் தன்மைக்கு ஏற்ப- குடியிருப்புக் கிளை, வியாபாரக் கிளை- தொகையை விநியோகம் செய்கின்றன. இதுதான் நடைமுறை. தனி நபர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய்க்குப் புது நோட்டுகள் வைத்துள்ளார் என்றால், எங்கே கோளாறு?
ஏற்கெனவே இந்த விஷயத்தில், மைசூர் ஸ்டேட் வங்கியும், ஆக்ஸிஸ் வங்கியும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கொல்கத்தாவில், வாடிக்கையாளர்களுடன் இணைந்து போலி ஆவணங்களுடன் நடப்புக் கணக்கு துவக்க தனியார் வங்கி உதவி செய்யப் போக, அவர் பிடிப்பட்டிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, பிரபல ஏட்டில் முன்னாள் பிரதமர் இந்த பண மதிப்பு நீக்கம் குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். வேறொரு ஆங்கில ஏட்டில், 1946 ஜனவரியில் இதே போல நிகழ்ந்ததை ஒப்பிட்டு கட்டுரை வந்துள்ளது. ஜனதா ஆட்சியில் 1978-ஆம் வருடம் பண மதிப்பு குறைந்தது பலருக்கும் நினைவிருக்கலாம்.
ஒரு சிலர், பிரதமர் எடுத்த அதிரடி முடிவை, இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய அவசர நிலைமையுடன் ஒப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. இரண்டும் இரவில் அறிவிக்கப்பட்ட முடிவு என்பதைத் தவிர வேறு ஒற்றுமையில்லை. அவசர நிலையின் போது, தேசத் தலைவர்கள் கைதானார்கள்; பத்திரிகை தணிக்கை இருந்தது. வட இந்தியாவில் சஞ்சய் காந்தியின் அத்துமீறல்கள் இருந்தன.
இப்போது மோடி எடுத்த முடிவில் ஓர் உயரிய நோக்கம் உள்ளதென்று அனைவரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால், நடைமுறைப்படுத்துவதில்தான் மைய அரசு தெளிவின்றி குழம்பிப் போயிருக்கிறது என்று தோன்றுகிறது. இல்லாவிடில் வாரம் ஒரு அறிக்கை வருமா?
முன்னாள் நிதி அமைச்சர் கூறியது ஞாபகம் வருகிறது. "ஆயிரம் ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்தவர்கள், 2000 ரூபாயை அச்சடிப்பானேன்? இதைப் பதுக்க மாட்டார்களா?' என்ற கேள்வி எழுப்பினார். உள்ளபடிக்கே, அச்சடித்த ஈரம் காயுமுன் புது நோட்டுகளைப் பண முதலைகள் பதுக்கியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் நிதி அமைச்சர், பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு - அதாவது அட்டை மூலம் செய்யப்படுகிற - சில சலுகைகள் அறிவித்துள்ளார். இவை நடுத்தர மக்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று தெரியவில்லை. மாறாக, கடன் அட்டை மூலம் செய்கிற பரிவர்த்தனைகள், இப்போது ஓரளவு அதிகரித்து இருப்பதால், கடன் அட்டையின் வரம்பை உயர்த்தலாம்; அதற்கான நடைமுறைகளைத் தளர்த்தலாம்.
வீட்டுக்குக் காவலிருக்கிற காவலாளியே, திருட்டில் ஈடுபட்டால், வேலி பயிரை மேய்கிறது என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள். மோசடி நபர்களுடன் கூட்டு சேர்ந்து தவறான வழிகளில் செல்லுகிற வங்கி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

NEWS TODAY 08.06.2026