Thursday, January 5, 2017

Shekhar Reddy case: CBI given 2 days to name bank officials

TIMES OF INDIA 

CHENNAI: Turning its attention to bank officials who had apparently helped sand mining baron J Shekhar Reddy and his associates hoard crores of rupees in new currency notes, a special court for CBI cases has asked the agency to furnish by Friday the names of officials wanted in connection with the fraud. The court also asked why the CBI had not held an inquiry with the Reserve Bank of India(RBI) governor.

Suspecting the involvement of senior bank officials, special judge K Venkatasamy said it was the duty of the CBI to bring the errant bank officials before the court. Since crores of rupees are found in the possession of a few, the involvement of top bank officials cannot be ruled out, the judge said. Demonetisation and the resultant shortage of cur rencies led to a situation wherein crores of people were unable to withdraw or convert their own money. Under such a serious situation, it becomes the duty of the CBI to bring bank officials involved in the racket to the book... The main information that has to be obtained by the CBI is how such a huge quantity of money came into the possession of the accused persons," he said.

Since crores and crores of rupees are found in the possession of a few, the involvement of top bank officials cannot be ruled out, the judge said, adding that so far no bank official has been arrested in the case. There seems to be an attempt to book only the branch manager-level officials for such offences, he said. An order to this effect was given by special judge Venkatasamy on Wednesday when the court sent three suspects - J Sekhar Reddy, M Premkumar and K Srinivasulu - to police custody for two days. They shall be returned to court by Friday, along with the list of names of bank officials who helped them in the deceit. As of now, the CBI has arrested only five persons and none of them is a central government or bank official, despite the fact that the agency has slapped provisions of the Prevention of Corruption Act on the accused. In his order, special judge Venkatasamy said government schemes could succeed only if all stake holders and intermediaries such as officials played their role. Following the demonetisation policy, the central bank had been dispatching currency notes to every part of the country, the judge said. "We are witnessing complaints of ATMs not being filled up with currencies, or not properly distributed to the public by bank branches. It is following such complaints that the government had a suspicion as to where the money sent to banks were actually going."

Noting that about 76 people have died so far while waiting to withdraw money, special judge Venkatasamy said that if only the money had been distributed as per the advisories of the Centre and the RBI, such tragedies would not have occurred. Demonetisation policy also would have succeeded without much trouble, he said. "But instead of fairly implementing the policy, some bank officials had indulged in fraudulent transactions and given huge sums to a few people through unfair means.

Wednesday, January 4, 2017


மாற்றத்தின் ஆரம்பம்!

By ஆசிரியர் | Published on : 04th January 2017 01:36 AM |

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றாலும்கூட, அவ்வளவு சுலபத்தில் இந்தியாவில் யாருக்கும் கடவுச்சீட்டு கிடைத்து விடுவதில்லை. உலகத்திலேயே கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இந்த அளவுக்கு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு, கால அவகாசமும் தேவைப்படும் நாடு இந்தியாவாகத்தான் இருந்து வருகிறது. அந்த நிலைமை இனியும் தொடராத விதத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது 

மத்திய அரசு.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பின்படி கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடி கடவுச்சீட்டுகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 24.3% அதிகம். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். வெளிநாடுகளுக்கு பயணம் போவோர், வேலைக்குப் போவோர், உயர்கல்வி கற்பதற்குப் போகிறவர்கள் என்று ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், கடவுச்சீட்டுப் பெறுவதில் அனாவசியச் சிக்கல்கள் அகற்றப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய முடிவு.

கடவுச்சீட்டு வழங்குதல் குறித்த அரசின் முடிவு பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய ஒன்று. எழுத்து வேலையைக் குறைப்பது, ஆவண இணைப்புகளைக் குறைப்பது என்பன ஒருபுறம் இருக்க, அதைவிடக் குறிப்பிடத்தக்க ஒன்று, காலத்துக்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கும் விதிமுறை மாறுதல்கள். மாறிவிட்டிருக்கும் சமூகப் பொருளாதாரச் சூழலை மனதில் கொண்டு செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள், சாமானிய மக்கள் கடவுச்சீட்டுப் பெற நடத்தும் பகீரதப் பிரயத்தனங்களுக்கு முடிவு கட்டும்.

ஆள் மாறாட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், கடவுச்சீட்டு தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் பல கடுமையான விதிமுறைகள் கையாளப்பட்டன. ஒரு காலத்தில் அதற்கான தேவை இருந்திருக்கலாம். ஆனால் அதுவே நிர்வாகத் தடைகளை ஏற்படுத்தி உண்மையான விண்ணப்பதாரர்களைப் பெரும் சோதனைக்கு உள்ளாக்கின.
இனிமேல், பிறந்த தேதியை மாற்றுவது எளிதாக்கப்படுகிறது. அதேபோல எண்மக் கையொப்பமுள்ள (டிஜிட்டல் சிக்னேச்சர்) திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது. 

இந்தியாவில் பிறந்த தேதிச் சான்றாகப் பல ஆவணங்கள் இருக்கின்றன. ஜனன, மரணப் பதிவாளர்தான் முழு அதிகாரம் படைத்தவர் என்றாலும்கூட, பள்ளி இறுதி வகுப்பு ஆவணம், ஆதார் அட்டை, வருமான வரித் துறையின் நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை), குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று எதை வேண்டுமானாலும் இனிமேல் பிறப்புச் சான்றுக்கு ஆவணமாகத் தர முடியும்.

அதேபோலத் தவறான பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அதை மாற்றுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அதற்கான விண்ணப்பத்தையும் கடவுச் சீட்டு பெறப்பட்ட ஐந்து ஆண்டு
களுக்குள் கொடுத்து, சரியான பிறந்த தேதியைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்டவரின் கடவுச்சீட்டை முடக்கவும், அபராதம் விதிக்கவும் கடவுச்சீட்டு அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. இனிமேல், காலவரம்பு அகற்றப்பட்டிருப்பதுடன், விண்ணப்பதாரரின் விளக்கத்தின் அடிப்படையில் பிறந்த தேதியை அதிகாரிகள் மாற்றிக் கொடுக்கலாம்.
அரசின் இப்போதைய முடிவால் மிக அதிகமாக பயனடையப் போவது மகளிரும், குழந்தைகளும்தான். விவாகரத்து பெற்ற அல்லது கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மகளிர் கடவுச்சீட்டுப் பெற எதிர்கொண்ட பிரச்னைகளைச் சொல்லி முடியாது. கடவுச்சீட்டை மாற்றமே இல்லாமல் புதுப்பித்தல், குழந்தைகள் பெயரில் கடவுச்சீட்டுப் பெறுதல் போன்றவைகூடக் கடுமையான மனஉளைச்சலை அந்தப் பெண்களுக்கு அளித்து வந்தது.
கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மகளிர் கடவுச்சீட்டுப் பெற விவாகரத்துச் சான்றிதழை இணைத்தாக வேண்டும். விவாகரத்துப் பெறும்வரை அவர்களால் கடவுச்சீட்டுப் பெற முடியாது. ஆனால் இது ஆண்களுக்குப் பொருந்தாது. கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மகளிர் அவர்களது குழந்தைகளுக்குக் கடவுச்சீட்டுப் பெற வேண்டுமானால், குழந்தையின் தந்தையிடமிருந்து அனுமதி பெற்றாக வேண்டும். இப்போதைய முடிவால் இந்தத் தொந்தரவுகள் அகற்றப்பட்டிருக்கின்றன.

வெளியுறவுத் துறை, மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உயர் அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கும் முக்கியமான மாறுதல், குழந்தைகளுக்கான கடவுச்சீட்டில் தாய் அல்லது தந்தை என்று ஏதாவது ஒரு பெற்றோரின் பெயர் இருந்தாலே போதுமானது. திருமணச் சான்றிதழ், விவாகரத்துச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை அகற்றப்பட்டு விட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், எல்லா ஆவணங்களும் நீதிபதிகள், காப்புறுதி அலுவலர் (நோட்டரி) ஆகியோரால் உறுதிப்படுத்தப்படும் முறை கைவிடப்பட்டு, அவரவர் உறுதிப்பத்திரம் தந்தாலே போதுமானது என்று மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, அனாதைக் குழந்தைகளுக்கும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் எந்தவித ஆவணமும் இல்லாவிட்டாலும் சுய உறுதிமொழியின் அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கலாம் என்று விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

விரைவாகவும், அதிகச் சிக்கல் இல்லாமலும் கடவுச்சீட்டுக்களை வழங்க வழிகோலும் மத்திய அரசின் இந்த முடிவால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற வழிகோலப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சாமானிய குடிமகனை சிரமப்படுத்தும் ஏனைய பல விதிமுறைகளும் எளிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்போமாக!

தற்போது ஏர்டெல்லிலும் இலவச இன்டர்நெட்!



கடந்த ஆண்டு தொலைத் தொடர்பு சந்தையில் அறிமுகமான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை அறிமுகப்படுத்தியது. இதனால், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பல அதிரடி ஆஃபர்களை அறிவித்தது.

இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம், தனது 4G சேவைக்கு மாறும் அல்லது புதிதாக 4G சேவைக்கான சிம்மை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சில குறிப்பிட்ட பேக்குகளை ரிசார்ஜ் செய்யும் பட்சத்தில் கூடுதலாக 3GB இன்டர்நெட் சேவையைக் கொடுக்கும் என தெரிவித்துள்ளது. ஒரு ரிசார்ஜ் பேக் 28 நாட்கள் வேலிடிட்டி வரும். இந்த 28 நாட்களில்தான் கூடுதல் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும். இந்த சேவையை பெற பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் ஏர்டெல்லின் 4G சேவைக்கு மாற வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை கூடுதல் இன்டர்நெட் சேவை தொடரும் எனவும் ஏர்டெல் கூறியுள்ளது. இந்த ஆண்டு மட்டும், மொத்தம் 13 முறை இந்த சேவையைப் பெற முடியம். ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரண்டு ப்ளான்களுக்கும் இந்த ஆஃபரை அறிமுகம் செய்கிறது ஏர்டெல் நிறுவனம், குறிப்பிட்ட சில பேக்குகளை பயன்படுத்தும் போது மட்டும்தான் இந்த கூடுதல் இன்டர்நட்டை அனுபவிக்க முடியும் எனவும் கூறியுள்ளது.

பெண்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை விமர்சிக்கும் 'நியாயவான்'களுக்கு 5 கேள்விகள்! #BengaluruNewyearEveshame


பெங்களூருவில் புத்தாண்டு இரவுக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், ஆண்களால் கூட்டு பாலியல் சீண்டல்களுக்கு ஆளானது, தேசத்துக்கே அதிர்ச்சி தந்த செய்தி.

கடந்த சனி அன்று, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்ஜி சாலை மற்றும் பிரிகேட் சாலைகளில் புத்தாண்டைக் கொண்டாடக் கூடினார்கள் மக்கள். 'இரவின் சாலைகளும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் நமக்கும்தான்' என்று நம்பி வந்த இளம் பெண்களை, பாலியல் பொருளாக மட்டுமே பார்த்தது அங்கிருந்த ஆண்களின் மனம்.

கூட்டத்தை சாக்காக வைத்து, கடந்த பெண்களை எல்லாம் அருவருக்கத்தக்க பாலியல் சீண்டல்கள் செய்தார்கள் ஆண்கள். அதிர்ச்சியில், அவமானத்தில், வேதனையில், கோபத்தில், கொந்தளிப்பில் எழுந்த பெண் குரல்களுக்கு, அந்தக் கூட்டத்தில் எந்த நியாயமும் தரப்படவில்லை. பத்திரிகையாளர்களின் கேமராவில் பதிவானதில் வெளியிடப்பட்ட, பெண் காவலர் ஒருவரின் தோளில் முகம் சாய்த்து விம்மும் அந்தப் பெண்ணின் புகைப்படமும், தனக்கு நேர்ந்த வக்கிரத்தால் ஆற்றாமையில் அழும் மற்றொரு பெண்ணின் புகைப்படமும், அந்தச் சாலைகளில் மற்ற பெண்கள் அனுபவிக்க நேர்ந்த அநியாயத்தை அறைந்து சொல்கின்றன.

'பாதுகாப்புப் பணிகளுக்கு அங்கு 1600 காவலர்கள் இருந்தார்கள். ஆனால், கிட்டத்தட்ட 60,000 மக்கள் அங்கு குழும, அந்தச் சாலைகள் எங்கள் கட்டுப்பாட்டை இழந்தன' என்று சொல்லியிருக்கிறார், காவல் துறை அதிகாரி. தேசத்தையே தலைகுனிய வைத்த இந்தச் சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணும் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது, இன்னும் வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வராவ், 'கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, கூட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான்' என்று 'கவனிக்க வேண்டிய' தன் கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சமாஜ்வாடி கட்சியின் மகராஷ்டிர மாநில தலைவர், எம்.எல்.ஏ அபு ஆஸ்மி, 'பெண்கள் குட்டையான உடைகள் அணிவதால் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கின்றன' என்று தான் கண்டறிந்த உண்மையைத் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கு மட்டுமல்ல, 'பெண்கள் புத்தாண்டு கொண்டாடுறோம், மாடர்ன் டிரெஸ் போடுறோம்னு வந்தா, இதெல்லாம்தான் நடக்கும்' என்ற மனநிலையில், இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்துபவர்களுக்கும், சலனமின்றிக் கடப்பவர்களுக்கும் இந்த 5 கேள்விகள்...

* 'புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பெண்கள் கலந்துகொண்டால் அப்படித்தான் நடக்கும்' என்ற உங்களின் அதிகார வார்த்தைகளின் மூலம், அந்த அயோக்கியர்களின் வக்கிரங்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்ற அடிப்படைப் பிழைகூடப் புரியாதா உங்கள் புத்திக்கு?

* வீட்டைவிட்டு வெளியேறும் பெண்களும், நாகரிக உடை அணியும் பெண்களும்தான் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்றா நினைக்கிறீர்கள். நீங்கள் வீட்டுக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கும் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளும், தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளானவர்கள்தான் என்ற உண்மையை அறிவீர்களா? அதற்குக் காரணம், உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளின் உடையும், செயல்பாடுகளும்தான் என்று வழக்கம்போல் தீர்ப்பு சொல்லிவிடலாமா?

* 'புத்தாண்டு இரவுக் கொண்டாட்டம், பேன்ட், டி ஷர்ட் என வெஸ்டர்ன் கலாசாரங்களை பெண்கள் பின்பற்றுவதன் விளைவு இது' என்று சுட்டிக்காட்டுகிறீர்கள். பள்ளிச் சீருடையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகளின் மரணங்களுக்கு தொகுத்துத் தரவும் உங்களிடம் ஆண் மைய நியாயங்கள் இருக்கிறதா?

* ஐந்து வயதுப் பெண் குழந்தைகளுக்கு 'குட் டச்', 'பேட் டச்' கற்றுக்கொடுக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது என்பதை அறிவீர்களா? அவளிடம் அவள் மழலையைப் பிடுங்கிக்கொண்டு, 'நீ பெண்' என்ற கவசத்தை மாட்டிவிடும் அவலத்தை தந்தது யார்? ஆண்கள் ஆண்கள் ஆண்கள்!

* 'ஆண்கள் அப்படித்தான். பெண்கள்தான் அதற்கு வாய்ப்புத் தராமல் இருக்க வேண்டும்' என்ற உங்களின் மேலான எண்ணத்தை நீங்கள் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறீர்கள். எந்தப் பெண்ணும் ஆணுக்கு வாய்ப்புத் தர விரும்பி எதையும் செய்வதில்லை. அவள் தன் உரிமையை, தனக்கான மகிழ்ச்சியை, கொண்டாட்டங்களை பெறவே விரும்புகிறாள். எப்போதும் பெண்களின் உறுப்புகளையே உற்றுநோக்கும் கண்களும், அதை நியாயப்படுத்தும் வாய்களும் வெட்கப்பட வேண்டுமே தவிர, இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை பெண் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை.

புத்தாண்டும், இரவும், சாலைகளும், கொண்டாட்டங்களும் பெண்களுக்கும்தான். பெங்களூருவில் நடந்த அசிங்கத்துக்கு, ஒரு பெண்ணின் உடலை எந்தக் குற்ற உணர்வும் இன்றி வக்கிரமாகச் சீண்டலாம் என்று நினைத்து அந்த அசிங்கத்தைச் செய்த ஆண் மனங்களும், அந்த ஆண்களை அந்த மனநிலையில் வளர்த்தெடுத்த குடும்பங்களும், சக மனுஷி பாதிக்கப்பட்ட ஓலம் கேட்கும்நிலையில்கூட, 'பெண்கள் அப்படி இருக்கக்கூடாது' என்று வகுப்பெடுக்கும் நாட்டாமைகளும்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தலைகுனியுங்கள்!

‘கர்மவீரர் காமராஜர்ஜி!’ - கார்டனை பதறச் செய்யும் மோடி பிளான்

vikatan.com

தமிழகத்தின் அரசியல் சூழலை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ளது பா.ஜ.க தலைமை. 'ஜெயலலிதா இல்லாத சூழலில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பிரதமர் தலைமையில் வலுவாக எதிர்கொள்ளலாம்' என மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அனுப்பிய சில குறிப்புகளை வைத்தே, திட்டமிடும் பணிகள் தொடங்கிவிட்டன' என்கின்றனர் பா.ஜ.கவினர்.



முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, கார்டன் வட்டாரத்துக்கு நெருக்கமானவர்கள் மீது வருமான வரித்துறையின் சோதனைகள் பாய்ந்தன. அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என அடுத்தடுத்த நெருக்கடிகளால் அதிர்ந்தனர் மன்னார்குடி உறவுகள். 'கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசின் ரெய்டு நடவடிக்கைகள் அமைந்துள்ளன' என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் போன்றவர்கள் கொந்தளித்தனர். ஆனால், இந்த ரெய்டுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை.

"வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையை நிறுத்தி வைத்துள்ளனர். 'ராம மோகன ராவ் பேட்டிக்குப் பிறகு ரெய்டு நடக்கவில்லை' என்று சிலர் பேசுகிறார்கள். அது முற்றிலும் தவறானது. அடுத்தடுத்து நடத்த வேண்டிய சோதனைகள் பற்றிய விவரங்களோடு அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள். 'உறுதியான தகவல்கள் கிடைத்தால், எந்தவித தயக்கமும் இல்லாமல் சோதனைக்குச் செல்லுங்கள். யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்க வேண்டாம்' என நிதித்துறை அமைச்சகத்தில் இருந்து உத்தரவுகள் வந்துள்ளன. அதற்கேற்ப, வருமான வரித்துறையின் இயக்குநர் ஜெனரல் தலைமையில் தொடர்ந்து கூட்டம் போட்டு வருகின்றனர் அதிகாரிகள். எந்த நிமிடத்திலும் ரெய்டு நடவடிக்கைகள் தொடங்கும். 'தமிழகமே ஊழல் நிறைந்த மாநிலம்தான்' என்ற தோற்றம் வெளிமாநில மக்கள் மத்தியிலும் உருவாகிவிட்டது. அந்தவகையில் மத்திய அரசு நினைத்ததைச் சாதித்துவிட்டது. கூடவே, தேர்தலுக்கான வேலைகளும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன" என விவரித்த பா.ஜ.க சீனியர் நிர்வாகி ஒருவர் மேலும் தொடர்ந்தார்.

"வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் பா.ஜ.கவோடு கூட்டணி வைக்க முன்வந்தன. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணிக்குள் அங்கம் வகிப்பதையே இந்தக் கட்சிகள் விரும்பவில்லை. காரணம். 12 சதவீத அளவுள்ள கிறிஸ்துவ, முஸ்லிம் ஓட்டு வங்கியை இழப்பதற்கு இவர்கள் விரும்பாததுதான். அ.தி.மு.கவில் சசிகலாவை முன்னிறுத்தி, நடராசன் போன்றவர்கள் நடத்தும் திட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார் பிரதமர். 'உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்' என்று உறுதி கொடுத்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தியோடு, கார்டன் வட்டாரம் நட்பு பாராட்டுவதை மத்திய அரசு ரசிக்கவில்லை.

அதன் விளைவாகவே, ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை, பா.ஜ.க தலைவர் அமித் ஷா சந்திக்கிறார். அவர்கள் கொடுக்கும் மனுக்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெறுகிறார். இதுதொடர்பாக, ஜனாதிபதிக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. சசிகலா உறவுகளுக்கு எதிராக வரும் சிறு மனுக்களைக்கூட மத்திய அரசு ஒதுக்கித் தள்ளுவதில்லை. ஓ.பன்னீர்செல்வம் மூலமாகவே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. 'ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால், பன்னீர்செல்வம் வலிமையான தலைவராக மாறிவிடுவார். நமக்கான அரசாகவும் இருக்கும்' என பா.ஜ.க தலைமை திட்டமிடுகிறது. அதே சமயம் ஒருவேளை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு சசிகலா முதல்வராகிவிட்டாலும், அடுத்தடுத்த அதிரடிகளை மத்திய அரசு நிகழ்த்தும்.

முதலமைச்சர் பதவியை நோக்கி சசிகலா நகரும்போது, ஆளுநர் மூலமாக ஆட்சிக்குச் சிக்கல் ஏற்படுத்தும் வேலைகளும் நடக்க இருக்கின்றன. அரசைக் கலைக்கும் வேலைகளும் நடக்கலாம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால், 3 சதவீத வாக்கு வங்கியோடு இருக்கும் பா.ஜ.க, ஜெயலலிதா இல்லாத சூழலில் பத்து சதவீத வாக்கு வங்கியைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்கும். அதன்பிறகு, 'நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையை ஏற்று, தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகள் முன் வரும்' என நினைக்கிறார் பிரதமர். அதற்காகத்தான் படேல் வரிசையில் காமராஜரை முன்னிறுத்துகிறார். 'காமராஜர்ஜி இருந்திருந்தால், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை வரவேற்றிருப்பார்' என அவர் உரையாற்றினார். கடைசித் தேர்தலில் தோல்வியைத் தழுவும்போதும், 40 சதவீத வாக்குகளைக் கைவசம் வைத்திருந்தார் காமராஜர். அவரை முன்னிறுத்துவது தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத அரசியல் வியூகம். அதற்கெல்லாம் பலன் இருக்குமா என்பதை இப்போது கணிக்க முடியாது. ஆனால், அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தால், நாடார், முத்தரையர், கவுண்டர் உள்ளிட்ட பெரும் சமூகங்களின் வாக்குகள் பா.ஜ.கவின் பக்கம் வரும்' என மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விரிவான குறிப்பை அனுப்பியிருக்கிறார்கள். அதையொட்டியே, அனைத்து நடவடிக்கைகளும் வேகமடைந்து வருகின்றன" என்றார் விரிவாக.

எங்கோ தேள் கொட்டினால், எங்கெங்கோ நெறி கட்டுகிறதே..!

வான்கோழி ஒரே நாளில் மயில் ஆகிவிட்டதாம்...! சசிகலா தலைமைக்கு குட்பை சொன்ன நாஞ்சில் சம்பத்


அ.தி.மு.க மேடைகளில் இதுவரை ஜெயலலிதா புராணம் பாடி வந்த நாஞ்சில் சம்பத்... இப்போது, 'சசிகலா புகழ்பாட தயாராக இல்லை' என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அ.தி.மு.க-வுக்கு குட்பை சொன்ன அவர் இனி எங்கே செல்வார்?

தி.மு.க மேடைகளில் முழங்கி வந்த நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க என்றொரு கட்சியை வைகோ தொடங்கியபோது அவரோடு சென்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஊர் ஊராகச் சுற்றி வந்தார். 19 ஆண்டுகள் வைகோவின் நிழலாக வலம் வந்து கொண்டு இருந்த நாஞ்சில் சம்பத், 2012-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறினார்.

அப்போது அ.தி.மு.க தரப்பில் இருந்து நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தி.மு.க.விலும் பேசினார்கள். ‘அரசியல் மேடையே வேண்டாம். இலக்கியம் பேசி இனி இருக்கும் எஞ்சிய நாட்களை கழிக்கப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு நிறைய பட்டிமன்ற கூட்டங்களில் பிஸியானார். ஆனால், ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க அவருக்கு தூது மேல் தூதுவிட்டது. ஜெயலலிதாவே போன் போட்டு அவரை அழைத்தார். மறுப்பு சொல்ல முடியாமல் அந்தக் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த அன்றே அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி தரப்பட்டது.

அ.தி.மு.க வரலாற்றிலேயே இல்லாத வகையில், தமிழகம் முழுவதும் நாஞ்சில் சம்பத் கழகப்பணியாற்ற வசதியாக இனோவா கார் ஒன்றையும் கொடுத்தார் ஜெயலலிதா. கூடவே, காருக்கான எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவையும் ஒவ்வொரு மாதமும் தலைமைக் கழகமே கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



இதையடுத்து மீண்டும் சுறுசுறுப்பானார் நாஞ்சில் சம்பத். அ.தி.மு.க மேடைகளில் முழங்கினார். ஜெயலலிதா புகழ்பாடினார். 2015-ம் ஆண்டு, ஜெயலலிதா கைதாகி விடுதலை ஆன பிறகு நடந்த பொதுக்குழு கூட்டம் குறித்து தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘எறும்புகள் சாகிறதே என்று யானைகள் நடக்காமல் இருக்க முடியாது’’ என்று அவர் கூறியது விவாதப்பொருளானது. இதையடுத்து கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பின்னர், சில மாதங்களில் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. மீண்டும் மேடைகளில் அ.தி.மு.க பிரசார பீரங்கியாக வலம் வந்தார் சம்பத்.

ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நாஞ்சில் சம்பத், ஜெ. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கறுப்பு சட்டை அணிந்து வந்து ஜெயலலிதா உடல் முன்பு விழுந்து வணங்கி கதறி அழுது தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார். இறுதி ஊர்வலத்தின் போது கூட்டத்தோடு கூட்டமாக வாலாஜா சாலையில் நின்று ஜெயலலிதாவுக்கு விடைகொடுத்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தின் ஈரம் காய்வதற்குள்ளேயே மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சைதை துரைசாமி போன்றவர்கள் போயஸ் கார்டன் சென்று, கட்சிக்கு தலைமை ஏற்க வருமாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்தனர். அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் தலையைக் காணவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அம்மையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உள்ளது என்று முடிவெடுத்துவிட்டார்கள். அவரை ஏற்றுக் கொள்வதற்கான எந்த தகுதியும் எனக்கு இல்லை. விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!’’ என்று கூறினார்.

தற்போது நாஞ்சில் சம்பத் அ.தி.மு.கவில் இருந்து வெளியேறிவிட்டார். ஜெயலலிதா கொடுத்த காரையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். இனி எங்கே செல்வார் நாஞ்சில் சம்பத்? தி.மு.க பொதுக்குழு ஜனவரி 4-ம் தேதி கூடுகிறது. அங்கே பார்க்கலாமா?

Tuesday, January 3, 2017

என்னருமை தோழியே..!


பல நாட்கள் என்னிடம் நீங்கள் கூறியிருந்த சேதிகளை இதுவே அம்மாவின் நியதிகள் என்று பறைசாற்ற போகின்றேன்..

இன்னுயிர் தோழியே....

அன்றொரு நாள் உங்கள் வாழ்க்கை சரிதத்தை இயற்ற நான் அனுமதிகோரி நின்றபோது நீங்கள், ‘‘அதற்கான நேரம் வரும்.. நீதான் அதை எழுதுவாய்..'' என்றீர்கள்.
இதோ அந்த நேரமும் அமைந்துவிட்டது.
ஆனால்.. வாசிக்கத்தான் நீங்கள் இல்லை!

நான் கோரிய அனுமதியை அன்றே வழங்கியிருந்தால், யாரும் அறிந்திராத உங்களது மென்மையான இதயத்தினை உமக்குள் நீங்கள் ஒளிந்திருந்த.. குதூகல கோமளத்தின் சிறப்புகளை உங்கள் பார்வையிலேயே வெளிக் கொணர்ந்திருப்பேனே...!
இப்போது கூறினால் என்னாகும்?
இரும்புக்குள் ஏது மென்மை என்றல்லவோ கேட்பார்கள்?

உங்களைப் பற்றிச் சொல்கின்ற இந்த புதியவன் யார் என்கிற வினாக்களும் எழுமே...
அரசியலுக்காக உங்களைச் சுற்றியவர்கள், பொருளுக்காக உங்களைச் சுற்றியவர்கள் இன்னும் பதவி, புகழ் மற்றும் விருதுகளுக்காக உங்களைச் சுற்றியவர்களையெல்லாம் கடந்து, ‘உங்கள் மன நிம்மதிக்காகவும், ஆன்மிகத் தேடலுக்காகவும் நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட நட்பு நான்’ என்று என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த வாய்ப்பும் நீங்கள் எனக்கு நல்கியதுதான்.
என்னருமைத் தோழியே..!

அரண்மனை அறிந்தாய், அரியணை அறிந்தாய். உன்னுள் ஒருபுறம் இருந்ததை நினைத்திட மறந்தாய். வருகின்ற வழக்குகளைத் தீர்த்து முடித்தாய். உன்மனதின் வருத்தங்களைத் தீர்க்க மறுத்தாய்.. மகள், சகோதரி, மாணவி, நாட்டியத் தாரகை, பாடகி, நடிகை, எழுத்தாளர், விமர்சகர், தலைவி, முதல்வர், அம்மா ஆகிய நிலைகளையெல்லாம் கடந்து ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்த தனிமையில் மட்டும் நீங்கள் வெளிப்படுத்திய அந்த அம்மு என்கிற குறிஞ்சி மலரைப் பற்றிப் பேச விழைகிறேன்.

உமது நினைவுகளுக்குப் பல்லாண்டு பாடுகிறேன்.

(மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு பாராட்டியவரும், மனம் விட்டுப் பேசிச் சிரித்துப் பழகக் கூடிய வெகு சிலரில் ஒருவராகவும் இருந்தவரின் மனதில் நிலைத்த நினைவுகள் நமது நாளிதழில் பதிவு செய்யப்படவிருக்கின்றன. இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் ஜெயலலிதாவுடனான அவருடைய நேரடி சந்திப்புகள், இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு ஜெயலலிதாவை உங்களுக்கு அனுபவபூர்வமாக அறிமுகப்படுத்தும் என்பது நிச்சயம்)
(நாளை முதல் சந்திப்புகள் தொடரும்)

NEWS TODAY 08.06.2026