Monday, January 8, 2018

படித்த கல்லூரிக்கே, 'டீன்' : நெல்லை டாக்டர் பெருமிதம்

Added : ஜன 08, 2018 02:05 |




  திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரியில் படித்த மாணவர், அதே கல்லுாரியில், நேற்று டீனாக பொறுப்பேற்று கொண்டார். நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனை டீனாக இருந்த டாக்டர் கண்ணன், நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர், நேற்று நெல்லையில் பொறுப்பேற்றார்.
அவர் கூறியதாவது: நெல்லை அரசு மருத்துவ கல்லுாரியில் தான், மருத்துவம் படித்தேன். ஆரம்ப சுகாதார நிலையம், தென்காசி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினேன்.
பட்ட மேற்படிப்பு படித்து, சிறுநீரக துறை தலைவராக, நெல்லை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தேன். இங்கு, துணை முதல்வராகவும் பணியாற்றி உள்ளேன். தற்போது, டீனாக நியமிக்கப்பட்டுள்ளேன். நெல்லை அரசு மருத்துவ கல்லுாரியில், ஆரம்பத்தில், 75, 150 என, இருந்த மருத்துவ படிப்பு இடங்கள் தற்போது, 250 ஆக உயர்ந்துள்ளன. பல்வேறு சிறப்பு துறைகள் உள்ளன. ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இன்று கூடுகிறது தமிழக சட்டசபை : புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Added : ஜன 08, 2018

சென்னை: புத்தாண்டில், தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்குவதால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்துகிறார். இந்தத் தொடரில், மக்கள் பிரச்னைகள் குறித்து, புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டசபை இன்று காலை, 10:00 மணிக்கு கூடுகிறது. இதில் பங்கேற்க, காலை, 9:55க்கு, கவர்னர் வருகிறார். அவரை, சபாநாயகர், தனபால் வரவேற்கிறார். பின், சபாநாயகர் இருக்கையில் அமரும் பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும், அதன் தமிழ் உரையை, சபாநாயகர் தனபால், அவையில் வாசிப்பார். அதைத் தொடர்ந்து கூட்டம் முடிவடையும். பின், மதிய நேரத்தில், சபாநாயகர் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். அதில், எத்தனை நாள் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதையடுத்து, நடக்கவுள்ள கூட்டத் தொடரில், கேள்வி நேரம் முடிந்ததும், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இதில், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேச உள்ளனர். இறுதி நாளில், முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து பேச உள்ளார். அதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். மார்ச் மாதத்தில், 2018- - 19க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

கவர்னர் உரையாற்றியதும், பஸ் ஸ்டிரைக், 'நீட்' தேர்வு, ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம், உள்ளாட்சி வார்டு தொகுதிகள் மறுவரையறை குளறுபடி, 'ஒக்கி' புயல் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, புயலை கிளப்ப எதிர்கட்சிகளான, தி.மு.க., - காங்கிரஸ்
திட்டமிட்டுள்ளன.

சுயேட்சை எம்.எல்.ஏ., தினகரனுக்கு, சட்டசபையில், 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
ஆனால், தினகரன் அணி எம்.எல்.ஏ., வெற்றிவேல், 'நான் சட்டசபை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை காண விரும்புகிறேன். அதற்கு அனுமதி சீட்டு வேண்டும்' என, சட்டசபை செயலர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அவர் பார்வையாளர்கள் மாடத்தில் அமர முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சட்டசபை நிகழ்ச்சிகள் பொதிகை, 'டிவி'யில் நேரடியா ஒளிபரப்பாக உள்ளன. இன்று கூட்டத்தொடர் துவங்குவதால், சட்டசபை வளாகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

'நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்' : ''சட்டசபையில், வாய்ப்பு உருவானால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று துவங்கவுள்ள நிலையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், முதன்மை செயலாளர் துரைமுருகன் உட்பட, எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அப்போது, சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் குறித்தும், அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கறுப்பு சட்டை அணிந்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டம் முடிந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம், ''சட்டசபையில், வாய்ப்பு உருவானால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம், குட்கா போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.

40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள்...களமிறக்கம்!
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின், 'ஸ்டிரைக்'கை முறியடிக்கும் வகையில், 40 ஆயிரம் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை, இன்று முதல் களமிறக்க அரசு, தீவிரம் காட்டி வருகிறது. பணிக்கு வராத, 52 ஆயிரம் ஊழியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் பிடிவாதம் காட்டி வருவதால், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது.




அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரி, நான்கு நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். அதனால், மாநிலம் முழுவதும், 80 சதவீத பஸ்களின் போக்குவரத்து முடங்கி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்த ஊழியர்கள், 1.43 லட்சம் பேரில், முதல் நாளில், 1.13 லட்சம் பேர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முடங்கியது

பின், ஆளுங்கட்சியினர், அதிகாரிகள் முயற்சியால், 50 ஆயிரம் பேர் வரை பணிக்கு திரும்பி உள்ளதாகவும், 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், பஸ் போக்குவரத்து, நான்காவது நாளாக நேற்றும் முடங்கியது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்புமாறு, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

அரசு தரப்பிலும் வேண்டுகோள் விடுத்தாலும், ஊழியர்கள் பணிக்கு திரும்பாமல், போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். தொழிற்சங்கங்களின் விடாப்பிடியால்,ஸ்டிரைக்கைமுடிப்பதில், இழுபறி நீடிக்கிறது.எனவே, பஸ் ஊழியர்களின், ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர, அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி, நிலைமையை சமாளிக்க, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு பதிவு செய்துள்ள, 40 ஆயிரம் பேர் தற்காலிகமாக களமிறக்கப்படுகின்றனர்.அவர்களில், 20 ஆயிரம் பேரை, இன்று பரிசோதனை முறையில், பஸ்களை இயக்க வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கல்லுாரி டிரைவர்கள்

இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:பஸ் ஊழியர்கள், 2016 மே மாதம், 'ஸ்டிரைக்' நடத்திய போது, கல்லுாரி, பள்ளிகள் விடுமுறையில் இருந்ததால், அங்குள்ள டிரைவர்களை, பஸ்களை இயக்க பயன்படுத்தினோம்.

தற்போது, பள்ளி, கல்லுாரிகள் செயல்படுவதால், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், தனியார் பஸ்களின் மாற்று ஊழியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்திருந்தவர்களை தேர்வு செய்துள்ளோம்.


வேலை வாய்ப்பகங்களில், 40 ஆயிரம் பேர் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களை வைத்து, அனைத்து வழித்தடங்களிலும், இன்று முதல் பஸ்கள் இயக்கப்படும். பஸ்களை விபத்தின்றி பாதுகாப்பாக ஓட்ட, தற்காலிக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பறந்தது நோட்டீஸ்

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட, 18 தொழிற்சங்கங்களை சேர்ந்த, 52 ஆயிரம் பேருக்கு, முதற்கட்டமாக, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு வருகிறது. 'உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது; இதுகுறித்து, ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்' என, அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில், இவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

முதலில், போராட்டம் துவங்கிய, 4ம் தேதி இரவு, திடீரென பஸ்களில் இருந்து, பயணியரை பாதி வழியில் இறக்கி விட்டவர்கள், பஸ் நிறுத்தத்தில், பஸ்களை குறுக்கே நிறுத்தியவர்களிடம் விளக்கம் கேட்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- நமது நிருபர் குழு -
தற்காலிக ஊழியர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க நட வடிக்கை எடுத்திருந்த நிலையில் அந்த பஸ்களில் பயணம் செல்ல பயப்பட்டனர். சிலர் பயணத்தை தவிர்த்தனர். 
 
சாத்தூர்,

விருதுநகர் மாவட்டத்தில் 4-வது நாளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நேற்றும் தொடர்ந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள போக்குவரத்துக்கழக பஸ்களில் 80 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் காலை 6 மணிக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதாலும், பல கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் நிறுத்தப்பட்டதாலும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மொத்தமுள்ள 1,940 தொழிலாளர்களில் 557 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்காலிக ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.

சாத்தூர் பணிமனையில் மொத்தமுள்ள 57 பஸ்களில் 40 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இங்கு 20 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு சீருடை ஏதும் வழங்கப்படாதநிலையில் பணியாற்றினர். கண்டக்டர்களுக்கு பணப்பை வழங்கப்படாததால் மஞ்சள் பை மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தினர். மேலும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கும் எந்திரம் கொடுக்கப்படவில்லை. அனைவரும் டிக்கெட் சீட் கிழித்து கொடுத்தனர்.

பெரும்பாலான பஸ்களுக்கு அவை செல்லும் பெயர்பலகைகளை டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்களது சொந்த செலவில் வாங்கி எழுதி வைத்து ஓட்டி வந்துள்ளனர். வேலை நிறுத்தம் செய்ததால் அவற்றை கையோடு எடுத்து சென்று விட்டநிலையில் தற்போது பெயர் பலகை இல்லாமல் வெள்ளைத்தாளில் எழுதி ஒட்டி வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தார்கள். ஒரு சில பஸ்களில் டேப்ரிக்கார்டர் போன்றவற்றை ரெகுலராக ஓட்டிய டிரைவர்கள் தனது சொந்த செலவில் வைத்திருந்தார்கள். தற்போது அதனையும் அவர்கள் எடுத்துச்சென்று விட்டனர்.

பஸ் நிறுத்தும் இடங்களை முறையாக தெரிந்து வைத்திருக்காததால் விவரமான பயணிகளின் வழிகாட்டுதலோடுதான் பஸ் நிறுத்தத்தை அடையாளம் காண வேண்டியிருந்தது. கட்டண விவரம் தெரியாமலும் தடுமாறினார்கள். மேலும் சாத்தூர் உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் பஸ்களை நிறுத்தும் உரிய இடம் கூட தெரியாமல் புதிய டிரைவர்கள் திணறியதைக்காணமுடிந்தது. அதேபோல முறையாக விசில் கொடுக்க கூட தெரியாத கண்டக்டர்களும் இருந்தனர்.

முந்தைய காலங்களில் வேலை நிறுத்தம் செய்யும்போது புதிய டிரைவர் இயக்கும் பஸ்சுக்கு ஏற்கனவே பணியாற்றிய கண்டக்டர் இருப்பார்கள். கண்டக்டர் புதியவர் என்றால் டிரைவர் முன்பே பணியாற்றியவராக இருப்பார். ஆனால் தற்போது இருவருமே புதிய நபர்களாக இருந்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது.

விடுமுறைதினமான நேற்று பெரும்பாலான இடங்களில் பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. எனினும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தற்காலிக ஊழியர்கள் பணியாற்றிய பஸ்களில் பயணிக்க அஞ்சி சிலர் அதனை தவிர்த்து கூட்டம் அதிகமாக இருந்த நிலையிலும் தனியார் பஸ்களை நாடினர்.

வேலைநிறுத்தம் செய்து வரும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மின்வாரிய ஓய்வுபெற்றோர் நலஅமைப்பின் மாவட்ட தலைவர் செல்வராஜ், அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்ட செயலாளர் தங்கப்பழம், ஓய்வு பெற்ற ஆசிரியர் அமைப்பின் சார்பில் சிவபெருமான், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டக்கிளை செயலாளர் கருப்பையா, அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி நிறைவுரையாற்றினார்.
Goa-Mumbai Air India flight makes emergency landing at Mumbai airport

By PTI | Published: 07th January 2018 11:16 PM |



MUMBAI: A Mumbai-bound Air India flight from Goa with over 90 passengers on board today made an emergency landing here due to the failure of the aircraft's hydraulic system.

The Airbus A319 aircraft made a safe landing and all passengers were deplaned without any harm, an Air India spokesperson said.

Flight AI 662, carrying over 90 passengers, was forced to make a "priority" landing at the Chhatrapati Shivaji International Airport here this evening following a technical glitch, the spokesperson said.

However, airport sources said full emergency was declared for the flight after the pilot reported failure in the hydraulic system of the A319 aircraft.

The source said the flight made an emergency landing at the main runway at around 8:10 PM and full emergency was withdrawn 15 minutes after the aircraft made a safe landing at around 8:30 PM.
Too much frisking at PG NEET centres irks candidates

By Express News Service | Published: 08th January 2018 02:23 AM |

CHENNAI: Candidates who took the National Eligibility-cum-Entrance Test (NEET) for postgraduate medical courses complained of stringent frisking to the extent of women being told to remove their ‘thalis’ at a few exam centres. The NEET for admission to PG medical courses was conducted by the National Board of Examination across 49 centres in 11 cities in the State on Sunday.

Last year, such stringent frisking of candidates had triggered a national uproar and the authorities had then assured that the staff in the exam centres would be sensitised.

The Tamil Nadu Medical Officers Association (TNMOA) condemned the act and said that making women candidates remove thali would hurt the sentiments of people.

“We gave a representation last year to the National Board of Examination on the issue. It is sad that this year also the officials hurt the sentiments of the people here. At a few centres, women were allowed to write the exam wearing their thaalis after frisking. But at some centres such as the Sun Engineering College in Nagercoil and Sivanthi Adhithanar College in Thiruchendur, the officials did not allow women candidates to wear thali,” said Dr Kathirvel, the secretary of TNMOA.

When queried, an official of the National Board of Examination said, “We allowed women to write exam wearing thaali after frisking. But at a few centres, it was not permitted since we received complaints of possible malpractices. It is a competitive exam and so we did not want to take any chance.”

Though many candidates said the paper was easy, there were issues related to power cuts at a few centres, which delayed the three-and-a-half-hour exam.

In all, there were 300 questions, including a few mathematical problems. “We were not given scribbling pad in our centre. Frisking was too much and we were not allowed to wear socks also. But last year, there was not much frisking,” said Dr Vara Prasad, who appeared for the exam at the Nagercoil centre.

A total of 14,780 candidates had registered for the exam from State, in which 14,321 appeared and 549 were absent, an official from the National Board of Examination said.

Told to remove Thaali

Tamil Nadu Medical Officers Association condemned the act of making women candidates remove thaali, saying it would hurt sentiments of people. “We gave a petition last year. It is sad that this year also the officials repeated it. At a few centres, women were allowed to write the exam wearing their thaalis. But at some centres such as the Sun Engg College in Nagercoil and Tiruchendur Sivanthi Adhithanar College, the officials did not allow women to wear thaali.
New VCs of Periyar univ, and BDU call on governor

toi | Jan 8, 2018, 00:29 IST

Chennai: Newly appointed vice-chancellorsP Kolandaivel of Periyar University andP Manisankar of Bharathidasan University called on Tamil Nadu governor Banwarilal Purohit at the Raj Bhavan on Sunday.
The vice-chancellors, who were appointed by the governor on Saturday, will hold office for three years. Kolandaivel was head of the department of physics in Bharathiyar University. After C Swaminathan completed his term in July 2017, the vice-chancellor post in Periyar University had been vacant.

A total of 194 professors, including former vice-chancellors, had applied for the post.

The selection committee called 40 persons for an interview.

Manisankar is UGC BSR faculty fellow, department of chemistry, Alagappa University, Karaikudi. The vice-chancellor post in BDU had been vacant since V M Muthukumar's tenure ended in June 2017. As many as 241 candidates had applied for the post. The appointments were made after a lengthy selection process by the search committee.

NEWS TODAY 10.06.2026