Friday, January 19, 2018

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வு!- நாளை முதல் அமலுக்கு வருகிறது 

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.3-லிருந்து ரூ.5 ஆக உயர்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு நாளை (20-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
உயர்த்தப்பட்ட கட்டண விவரம்:-
பஸ்
மாற்றியமைக்கப்பட்ட புறநகர் மற்றும் மாநகரப் பேருந்துக் கட்டண விவரம்:-
பஸ்
மாநகர வால்வோ பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்சக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயருகிறது. தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பேருந்துக் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டண உயர்வை அறிவித்தன. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் இப்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணம் குறைவு தான் என்று தமிழக அரசு கூறியுள்ளது. புதிய பேருந்துகள் வாங்குதல், எரிபொருள் செலவு, பணியாளர் ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதை தவிர்க்க முடியாததாகி விட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ரேஷன் கடை விற்பனை பிரதிநிதி வேலைக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பம்: 117 பணியிடங்களுக்கு 18,200 பேர் போட்டி

Published : 18 Jan 2018 11:10 IST

சிறப்புச் செய்தியாளர் நெல்லை



சான்றிதழ் சரிபார்ப்புக்காக காத்திருப்பு

திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டறவு சங்கம் ரேஷன் கடை விற்பனை பிரதிநிதிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நேர்காணலை நடத்தி வருகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் 117. ஆனால், இந்த 117 பணியிடத்துக்கு 18,200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் பலர் இன்ஜினியரிங் பட்டதாரிகள். இவர்களைத் தவிர எம்.பில் பட்டம் பெற்றவர்கள், முதுநிலை பட்டதாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் பணியில் சேர அடிப்படைத் தகுதி என்னவோ பிளஸ் 2 தேர்வில் வெற்றி என்பது மட்டுமே. ஆனால், இந்த அளவுக்கு பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பித்தது அதிகாரிகளை அதிச்சியில் ஆழ்த்தியது.

இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.5000 வழங்கப்படும். ஓராண்டுக்குப் பின்னர் ஊதியம் மாற்றியமைக்கப்படும்.

விண்ணபித்த 18,200 பேரில் 15,000 பேர் நேர்காணலுக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டுள்ளனர். 10 நாட்கள் இந்தப் பணி நடைபெறும். ஒவ்வொரு நாளும் 1500 பேருக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இந்தப் பணியில் 220 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொறியியல் பட்டதாரிகள் சிலர் வேலை இல்லாமல் இருப்பதற்கு பதிலாக கிடைக்கும் வேலையைச் செய்வதில் எந்த தயக்கமும் இல்லை. பிளஸ் 2 மட்டுமே படித்தவர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தரக்குறைவாகவும் நினைக்கவில்லை என்றனர்.

இன்னும் சிலர் விஏஓ தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பதாகவும், அத்தேர்வில் வெற்றி பெற்று பணி கிடைக்கும் வரை இந்தப் பணியை செய்வோம் என்றனர்.
சனீஸ்வரர் அருள் பெற்ற குரு ஸ்தலம்! இழந்ததை அடைந்து இனிதே வாழ்வீர்கள்!

Published : 18 Jan 2018 13:49 IST

வி.ராம்ஜி




சனீஸ்வர பகவானின் அருளுடன் திகழும் திட்டை குரு பகவான் தலத்துக்கு வந்து வேண்டுங்கள். இழந்ததைப் பெறுவீர்கள். இனிதே வாழ்வீர்கள்!

தாயாரின் சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, தந்தையின் சொல்படி எமதருமன் வந்து, கடும் தவம் செய்து வழிபட்டு, சிவபெருமானின் அருளைப் பெற்று தருமராஜன் எனும் பதவியைப் பெற்றான் அல்லவா.

அதேபோல, தந்தையின் ஆணைப்படி சனி பகவானும் திட்டை திருத்தலத்துக்கு வந்தார். சிவனாரை நோக்கி தவமிருந்தார். நான்கு வேதங்களிலும் சொல்லப்பட்டிருப்பது போலவே, வேத நெறி பிறழாமல், சிவ பூஜையில் லயித்தார்.

நாம் என்ன செய்கிறோம்? கோயிலுக்குப் போகிறோம். அங்கே, ஸ்வாமிக்கு உரிய வஸ்திரத்தை வழங்கி, உரிய நைவேத்தியத்தைப் படைத்து, உரிய மலர்மாலைகளை அணிவித்து, முன்வரிசையில் நின்று கொண்டு, தீபாராதனை காட்டுகிற வேளையில், நம் கோரிக்கைகளையும் விருப்பங்களையும், ஆசைகளையும் தேவைகளையும் பட்டியல் போட்டு வேண்டிக் கொள்கிறோம். பிறகு மற்ற ஸ்வாமிகளையும் தரிசித்துவிட்டு, கோயிலை விட்டு வெளியே வந்தது முதல், ‘நம்மளோட வேண்டுதல் எப்போ நடக்கும் எப்போ நடக்கும்’ என்று எதிர்பார்த்தே காலத்தை ஓட்டுகிறோம்.

ஆனால் சனிபகவான், ஒருவருடமோ பத்து வருடமோ அல்ல... சுமார் ஆயிரம் வருடங்கள் சிவனாரை நினைத்து பூஜை செய்தார். சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்து, தவத்தில் மூழ்கிக் கிடந்தார். முழுவதுமாக தன்னையும் தன் எண்ணங்களையும் சிவபாதத்தில் ஒப்படைத்து, சரணடைந்தார். அதன் விளைவாக... சிவனார் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக பதவி தந்து அருளினார்.

நவக்கிரகங்களில் ஒருகிரகம்.. சனி கிரகம். அதிலும் கிரகங்களுக்கெல்லாம் நாதனாகத் திகழ்கிற பாக்கியமும் கிடைத்தது சனிபகவானுக்கு!

அதுமட்டுமா? சிவனாருக்கு இணையாக, ஈஸ்வரனுக்கு நிகராக, சனீஸ்வரன் என்று நாம் போற்றும் அளவுக்கு உயர்ந்த இடத்தில் இருந்து அருள்பாலிக்கிறார் சனீஸ்வர பகவான்.

பதவி உயர்வு நிச்சயம்!

எதிர்ப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் பதவியும் கிடைக்கலை; உயர்வும் இல்லை. உரிய ஊதியமும் தரலை என்று எதிர்பார்த்து ஏங்குபவர்கள், இந்தத் தென்குடித்திட்டை தலத்துக்கு ஒருமுறையேனும் வாருங்கள். உங்கள் குறைகளை சிவனாரிடம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். அப்படியே குரு பகவானிடம் வேண்டிக் கொண்டு, குரு பலத்தையும் பெற்று, நினைத்தபடி பதவி, உயர்வு, ஊதியம் ஆகியவற்றைப் பெற்று அமோகமாக வாழ்வீர்கள்.

அதுமட்டுமா? ஆத்மார்த்தமாக சிவனாரையும் அம்பாளையும் வேண்டுங்கள். இழந்த பதவியைப் பெறுவீர்கள். இனிதே வாழ்வீர்கள்!
கோவையில் இருந்து சென்னை வந்த ரயிலில் பாம்பு; பதறி ஓடிய பயணிகள்

Published : 19 Jan 2018 12:09 IST

எஸ்.விஜயகுமார் சென்னை




கோவையில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஏசி வசதி கொண்ட பெட்டியில் படுக்கையின் கீழ் பதுங்கியிருந்த பாம்பால் அதில் பயணித்த பயணிகள் பீதி அடைந்தனர்.

கடந்த வியாழனன்று கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான சேரன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (12674) வழக்கம்போல் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது.


ரயில் சென்னை சென்ட்ரல் நிலையத்தை அடையவிருந்தபோது பி-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர் அவரது உடைமைகளை எடுக்க முயன்றார். அப்போது படுக்கையின் கீழ் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்ததைக் கண்ட அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மற்ற பயணிகளும் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர்.

சம்பவ இடத்திலிருந்த டாக்டர் புவனா கூறும்போது, "அந்த் பாம்பு நீளமாக இருந்தது. விஷப் பாம்பு போலவே தெரிந்தது. பயணிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்த நிலையில், அவர்கள் வருவதற்குள் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துவிட்டது.

பயணிகள் அனைவரும் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறிவிட்டனர். நான் இறங்கியதும் அங்கிருந்த ரயில்வே போலீஸிடம் புகார் கொடுத்துவிட்டு புறப்பட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது" என்றார்.

இது குறித்து சென்னை பிரிவு டிவிஷனல் ரயில்வே மேலாளரிடம் வினவியபோது, "ரயில் பெட்டியில் பாம்பு இருந்தது. அதை அப்புறப்படுத்திவிட்டோம். ஆனால், அந்த பாம்பு எப்படி ஏசி ரயில் பெட்டிக்குள் வந்தது குறித்து ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.
இரு குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதித்தும் சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்தது

Published : 19 Jan 2018 14:17 IST



குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளை சீன அரசு அனுமதித்தும் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் துறை கூறியிருப்பது, "சீனாவில் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு ஒரு கோடியே 72 லட்சமாக உள்ளது. இது 2016-ம் ஆண்டை விட 18 லட்சம் குறைவு (2016-ல் சீனாவில் பிறப்பு விகிதம் 1 கோடியே 90 லட்சம்)" என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 1970-களில் ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டத்தை அந்த நாட்டு அரசு அமல்படுத்தியது. இதன்படி கடந்த 42 ஆண்டுகளில் 40 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளை சீன அரசு அனுமதித்தும் அந்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தில் சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழும் பழங்குடி மக்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.

கிராமங்களில் வாழும் பெற்றோருக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாகப் பிறந்தால் அவர்கள் 2-வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் தம்பதியர் இருவரும் அவர்களின் பெற்றோருக்கு ஒரே குழந்தை என்றால் அவர்களும் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

ஒரு குழந்தை திட்டத்தால் சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 2012 முதல் தொழிலாளர் பற்றாக்குறை சதவீதம் உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவில் குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

School News

வாட்ஸ்அப் பயனர்கள் பாதுகாப்புக்கான அப்டேட்!

 
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தகவல் பாதுகாப்புக்காகவும் போலியான
தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காகவும் புதிய அப்டேட் ஒன்றை வழங்க உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் போலி தகவல்களைத் தடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள வாட்ஸ்அப் செயலியிலும் அதை அமல்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு குறிப்பிட்ட தகவல் பல்வேறு நபர்களுக்கு அனுப்பப்படும் பட்சத்தில் அந்தத் தகவலை உறுதிபடுத்தக் கோரியும், அந்தச் செய்தி எத்தனை நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல்களையும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் காண்பிக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனால் அந்தத் தகவல் ஸ்பேம் ஆக இருக்கும்பட்சத்தில் அதைப் பயனர்கள் தவிர்த்துவிட முடியும், அதேசமயம் அது உண்மையான தகவல் என்றால் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு அதைப் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், ஒரு செய்தியை பலருக்கும் அனுப்ப, செயலியில் உள்ள பிராட்காஸ்ட் லிஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்த வாட்ஸ்அப் செயலின் மூலம் பயனர்களுக்கு நினைவூட்ட அந்நிறுவனம் முயற்சி மேற்கொள்ள உள்ளது.

இந்த புதிய அப்டேட் தற்போது பீட்டா வெர்ஷனாக வெளியாகி சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும், விரைவில் அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த அப்டேட் வெளியாகும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

NEWS TODAY 11.06.2026