Wednesday, January 24, 2018

அம்மா இருசக்கர வாகன திட்ட விதிமுறையில் திருத்தம்: பழகுநர் உரிமம் இருந்தாலே விண்ணப்பிக்கலாம்

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில், பணிபுரியும் பெண்கள் பயன்பெற, பழகுநர் உரிமம் (LLR) வைத்திருந்தாலே போதும் என்று விதிமுறையைத் திருத்தி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
பணிபுரியும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன இத்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி 5 கடைசித் தேதி

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் மேற்கூறிய இடங்களில் அளிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க முடியாது.இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்கள் 18முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 125 சிசிக்கு குறைவான வாகனத்தையே வாங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனங்களும் வாங்கலாம்.பயனாளியின் தனி ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாலான ஆண்களும், பெண்களும் போக்குவரத்து போலீஸாரின் சோதனைக்கு பயந்தே ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். மாநகரங்களில் உள்ள பெண்களில் கூட, இருசக்கர வாகனங்களை வைத்திருப்போர் மட்டுமே ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். என்றாவது தேவைப்படும் என்று பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்வது போன்று ஓட்டுநர் உரிமத்தை பெண்கள் வாங்கி வைத்துக்கொள்வதில்லை.2-ம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் போலீஸார் கெடுபிடி இல்லாத நிலையில் அங்கு பெரும்பாலான ஆண்களே ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதில்லை.கிராமப்புற பெண்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது குறைவே.

கால அவகாசம் இல்லை

மேலும், மோட்டார் வாகன சட்டத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார் வாங்க ஓட்டுநர் உரிமம்அவசியம் என குறிப்பிடப்படவில்லை. புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் 40 நாட்கள் தேவை. வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் இந்த ஆண்டுக்கான விண்ணப்பிக்கும் காலம் முடிவடையும் நிலையில், புதிய ஓட்டுநர் உரிமம் பெறவும் அவகாசம் இல்லை.

இந்நிலையில் இத்திட்டத்துக்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டிருப்பது பெண்கள்மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விதிமுறையால் உண்மையான பயனாளிகளால் பயன்பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்திட்டத்தை செயல்படுத்தும் ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்ற விதிமுறையைத் திருத்தி பழகுநர் உரிமம் வைத்திருந்தாலே விண்ணப்பிக்கலாம் என மாற்றியமைத்துள்ளோம். அதற்கேற்ற வகையில் விண்ணப்பங்களிலும் விவரங்களை மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
`கொள்ளைக் காசைக் கொடுத்து பஸ்ல எதுக்குப் போகணும்' - 3 கி.மீட்டர் நடக்கும் பொதுமக்கள் ஆவேசம் 

பாலஜோதி.ரா



தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியதன் விளைவாக, சாமானிய மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். 'இந்தக் கட்டண உயர்வு தாங்கமுடியாத சுமையானது மக்களுக்கு. எனவே, இந்த உயர்வைக் குறைக்க வேண்டும்' என்று எல்லா கட்சித் தலைவர்களும் அறிக்கை விட்டு, போராட்டங்களுக்கும் நாள் குறித்துவிட்டார்கள். எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று (22-ம் தேதி) மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துவிட்டார்கள். கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்களைத் தன்னெழுச்சியாக முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், புதுக்கோட்டை நகரமக்கள் புதுவிதமான பிரச்னையை, இந்த கட்டண உயர்வால் சந்தித்துவருகிறார்கள். என்ன அது என்று பார்ப்போம்.

புதுக்கோட்டை நகர மக்கள், தினமும் சொந்த அலுவல், வியாபாரக் கொள்முதல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அருகில் உள்ள திருச்சி மாநகருக்குப் பேருந்தில் போய்வருவார்கள். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்ல அதிகப்பட்ச கட்டணமே 33 ரூபாயாக இருந்தது. கட்டண உயர்வுக்குப் பிறகு அது, 51 ரூபாயாகிவிட்டது. அவ்வளவா... என்று மலைத்த மக்கள், இனி ரயிலே துணை என்று வழக்கம் போல மனம் மாறியிருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு பாசஞ்சர் ரயிலில் போகவும் வரவும் சேர்த்து மொத்தமே 30 ரூபாய்தான் கட்டணம். இந்த மார்க்கத்தில் திருச்சியிலிருந்து காரைக்குடிக்கும் மானாமதுரைக்கும் விருதுநகருக்கும் தனித்தனியாக டெமோ ரயிலும் பாசஞ்சர் ரெயிலும் தினமும் ஓடுகின்றன. இதில் டெமோ ரயில், ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற வார நாள்களில் இயங்குகின்றன. புதுக்கோட்டை நகர மக்கள் சந்திக்கும் புதுவிதப் பிரச்னை ரெயிலைப் பிடிப்பதிலோ, அதில் பயணிப்பதிலோ இல்லை. ரயில்வே நிலையத்துக்குச் செல்வதில்தான் இருக்கிறது.

அதாவது, பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்கு, பேருந்துகள் மிக அரிதாகவே வரும். ஆட்டோ ஒன்றுதான் வழி. ஆட்டோக்காரர்கள் 70 ரூபாய்க்குக் குறையாமல் வருவதே இல்லை. அவர்களுக்கு 70 ரூபாய் கொடுத்து, ரெயிலுக்கும் டிக்கெட் எடுக்க ஆகும் செலவைக் கூட்டிக்கழித்து கணக்குப்போடும் மக்கள் திகைத்துப்போய்விடுகிறார்கள். அதேசமயம், கூடுதலான கட்டணம் கொடுத்து பேருந்தில் பயணிக்கவும் மக்கள் தயாராக இல்லை. 'இவ்வளவு மலிவான கட்டணத்தில் ரயில் போகும்போது, நாங்கள் எதுக்குங்க கொள்ளைக் காசைக் கொடுத்து பஸ்ல போகணும்' என்று கேட்டபடியே மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்குப் பொடிநடையாகவே நடந்து சென்றுவிடுகிறார்கள். மேலும், "பஸ்காரனுக்கு அநியாயமா குடுக்குற காசில், வீட்டுக்கு காய்கறியாச்சும் வாங்கலாம். ஓட்டல்காரங்கிட்டே கொடுத்து வயிறார சாப்பிடலாம்" என்கிறார்கள்.

சரி, மக்கள் இப்படி சிரமப்படுவதற்கு என்னதான் தீர்வு? அதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் இரா.கணேசன் நம்மிடம் பேசினார். "பஸ் ஸ்டாண்டிலிருந்தும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்தும் ரயில்வே ஸ்டேஷனுக்கு அதிக எண்ணிக்கையில் டவுன் பஸ் விடவேண்டும். புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து திருச்சிக்கு மட்டுமல்ல, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமேஸ்வரம் வரை செல்வதற்கு ரயில் வசதி இருக்கிறது. அதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளத் தடையாக இருப்பது, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக பஸ் வசதி இல்லாமல் இருப்பதுதான். போக்குவரத்து நிர்வாகம் உடனடியாக அந்த வசதியைச் செய்துகொடுக்க வேண்டும்'' என்றார்.
லைசென்ஸ் இருக்கா எனக் கேட்ட போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுமை! வாலிபர் வெறிச்செயல்
துரை.வேம்பையன்

RAJAMURUGAN N

Karur:

கரூரில் நேற்றிரவு வாகன சாேதனையில் ஈடுபட்டிருந்த பாேக்குவரத்துக் காவலரை குடிபாேதையில் வந்த வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் பாேக்குவரத்து ஏட்டாக இருப்பவர் இளங்காே. இவர் வழக்கம்பாேல் நேற்றிரவு (22.1.2018) கரூர் நகரில் வாகன சாேதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பாேது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்திருக்கிறார் முரளி என்ற வாலிபர். அவரை மடக்கிய இளங்காே அவரிடம், 'லைசென்ஸ், ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த வாலிபர், 'என்கிட்ட அதெல்லாம் இல்லை. முடிந்ததைப் பார்த்துக்குங்க' என்று தெனாவெட்டாகப் பதில் சாெல்லி இருக்கிறார். உடனே இளங்காே, முரளியின் வாகனத்தைப் பறிமுதல் செய்ததாேடு, `காேர்ட்டில் பைன் கட்டிட்டு பைக்கை எடுத்துக்க' என்று சாெல்லியிருக்கிறார்.

இதனால், காேபமான முரளி, 'ஒழுங்கா வண்டியைக் காெடுத்திடுங்க. இல்லைன்னா, நான் சும்மா இருக்க மாட்டேன்' என்று மிரட்டலாகச் சாெல்லியிருக்கிறார். ஆனால், இளங்காே, 'டேய்... முடிஞ்சதைப் பாருடா. பாேலீஸையே மிரட்டுறியா' என்று பதிலுக்குச் சாெல்லியிருக்கிறார். காேபம் குறையாமல் பாேன முரளி ஒயின்ஷாப்புக்குச் சென்று மது அருந்திவிட்டு, நேராக இளங்காேவிடம் சென்று, 'என்கிட்டயே லைசென்ஸ் கேட்பியா. என் வண்டியையே சீஸ் பண்ணுவியா' என்றபடி கையில் மறைத்து எடுத்து வந்த கத்தியால் இளங்காேவின் கழுத்தை கரகரவென அறுத்திருக்கிறார்.

இதனால், இளங்காே அலற, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து முரளியை மடக்கிப்பிடித்து, இளங்காேவை அவரிடமிருந்து மீட்டனர். உடனடியாக இளங்காேவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியாேட முயன்ற முரளியையும் விரைந்து வந்த கரூர் நகர பாேலீஸார் கைது செய்தனர்.
டாக்டரும் இல்லை; செவிலியரும் இல்லை! ஸ்ட்ரெச்சருக்காக ஒரு மணி நேரம் போராடிய பெண்ணுக்கு காரில் பிரசவம்!

RAGHAVAN M

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அலட்சியத்தால் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு காரிலேயே பிரசவமான அவலம் நடந்திருக்கிறது.

திருவாரூர் அருகே புளிச்சக்காடு கிராமத்தைச் சேர்ந்த தனலெட்சுமி என்ற கர்ப்பிணிக்கு நேற்று (21-ம்தேதி) நள்ளிரவு பிரசவ வலியெடுக்க, வாடகைக் காரில் அவசரமாகத் திருவாரூர் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தனலெட்சுமியுடன் வந்த உறவினர்கள், விரைந்தோடிச் சென்று காரிலிருந்து தனலெட்சுமியைக் கொண்டுவர ஸ்ட்ரெச்சர் கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, செவிலியர் மற்றும் மருத்துவரின் உதவியை நாடியிருக்கின்றனர். அப்போது, அவர்களும் அங்கு இல்லை. இப்படி உறவினர்கள் அலைந்த ஒரு மணிநேரப் போராட்டத்துக்குள் காரிலேயே தனலெட்சுமிக்கு குழந்தை பிறந்துவிட்டது.

தனலெட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த பெண்கள், துணியால் மறைத்து உதவியிருக்கிறார்கள். அதன்பின் அங்கிருந்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்த்துக் குரல்கொடுக்க ஆரம்பித்ததும் குழந்தையும் தனலெட்சுமியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் வரும் நோயாளிகளுக்கு ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. கடந்த மாதத்தில் திடீர் மாரடைப்பால் வந்த நோயாளிக்கு, உங்களுக்கு ஒன்றுமில்லை என்று கூறி வெளியே அனுப்பிவிட்டார்கள். அவர், மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து, பனியால் நடுங்கி உயிரிழந்தார். எனவே, தனலெட்சுமிக்கு நேர்ந்த அவலம் குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை இன்ஜினீயர் திருமணத்தை நிறுத்திய காதலி - மணக்கோலத்தில் தவித்த பட்டதாரிப் பெண்

நமது நிருபர்



தாலிகட்டும் நேரத்தில் சென்னை இன்ஜினீயரின் திருமணத்தை அவரின் காதலி வீட்டினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் குமார். இன்ஜினீயர். இவருக்கும் திருவள்ளூர் மணவாள நகரைச் சேர்ந்த எம்.சி.ஏ பட்டதாரிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இருவருக்கும் வெகுவிமர்சையாக நேற்று (22.1.2018) திருமணம் நடத்தப்படவிருந்தது. அதற்கு முன்பு ஜனவரி 21-ம் தேதி இரவு வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மணவாளநகரில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர். பரிசு பொருள்களைக் கொடுக்கும்போது மணமக்களுடன் அவர்கள் போட்டோவும் எடுத்துக்கொண்டனர். அப்போது, மணமக்கள் இருவரும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் இரவில் அனைவரும் தூங்கச் சென்றனர். திருமணத்துக்கான அலங்காரம் மணமகளுக்கு நேற்று காலை நடந்தது. மணமகன் குமாரையும் தயார்படுத்த அவரது அறைக்கு உறவினர்கள் சென்றனர். அங்கு அவர் இல்லை. உடனடியாக அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டனர். அந்த நம்பரும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. குமாரின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை மணமகள் வீட்டினரால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் மணமகள் வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர்.

மணமகன் தலைமறைவானத் தகவல் கேட்டு மணமகள் அதிர்ச்சியில் உறைந்தார். திருமணத்துக்கு வந்தவர்களிடம் பதில் சொல்ல முடியாமல் மணமகள் வீட்டினர் தவித்தனர். வரவேற்பு நிகழ்ச்சி வரை மணமக்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர். தாலிகட்டும் நேரத்தில் மணமகன் தலைமறைவானது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. முகூர்த்த நேரம் முடிந்தும் மணமகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமணம் நின்றுபோனது.

இதனால் மனவேதனையடைந்த மணமகள் வீட்டினர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு, மணமகன் குமாரை நள்ளிரவில் ஒரு தரப்பினர் சந்தித்துள்ளனர். அப்போது, குமாருக்கும் அந்த தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகே மணமகன் குமார் மாயமாகியிருப்பது தெரியவந்தது. குமாரிடம் தகராறு செய்தவர்கள் யார் என்று போலீஸார் விசாரித்தபோது, குமார், ஒரு பெண்ணை காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தப் பெண்ணின் தரப்பினரே குமாரிடம் தகராறு செய்ததும் தெரிந்தது.

இந்தத் தகவலையறிந்த மணமகள் வீட்டினர், நல்லவேளை திருமணத்துக்கு முன்பே மணமகனின் சுயரூபம் தெரிந்துவிட்டது. இருப்பினும் திருமணத்துக்கு செலவு செய்த பணத்தை மணமகன் வீட்டிலிருந்து பெற்றுத்தரும்படி போலீஸாரிடம் கோரிக்கை வைத்தனர். மணமகள் வீட்டினரின் கோரிக்கையை மணமகன் வீட்டினரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து, வழக்கு சமரசமாக முடித்துவைக்கப்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
Reliance Jio Republic Day offer: Now, get 500MB more on popular data plans 

Reliance Jio steps up the tariff war with its new Republic Day offer. Here are the details. tech Updated: Jan 23, 2018 19:57 IST
Press Trust of India


Reliance Jio launches Republic Day offer: Now, get unlimited data at Rs 98 for 28 days(REUTERS)

Shortly after Airtel revised its select data plans, Reliance Jio has announced offering 500MB more data to its subscribers. The benefit is available for select plans including 1GB and 1.5GB per day data packs with effect from January 26, according to company sources.

The telecom operator as part of its ‘Republic Day offer’ will double the validity of Rs 98 pack to 28 days from the current 14 days from January 26 onwards, they said.

“Jio will always offer more value to its customers, and offer Rs 50 lower price than competition and 50 per cent more data on its plans. As part of Republic Day offer, all existing 1 GB per day packs enhanced to 1.5 GB per day, 1.5 GB per day packs enhanced to 2 GB per day,” sources said.

IANS reports that the flagship Rs 399 plan will now provide free voice, unlimited data of 1.5 GB daily, unlimited SMS (short message service) and premium subscription to Jio Apps for 84 days.

“Jio packs to be Rs 50 lower than competition and to provide 50 per cent more data at similar price points,” added IANS.

With this new offer, Jio’s flagship Rs 399 plan will provide free voice, unlimited 4G data with 1.5 GB daily, unlimited SMS and premium subscription to Jio Apps for 84 days.
Read more

The Rs 98 pack at present offers 2.1 GB data at 4G speed and thereafter speed drops to 64 kilobit per second with 14 days validity.

According to Bharti Airtel MD and CEO, India & South Asia, Gopal Vittal, the battle among telecom operators is now for market share and the pressure on tariff will continue for some time even though it is at an unsustainable level at present.

Earlier, Airtel revised its prepaid plans priced at Rs 199, Rs 448, and Rs 509 to offer 1.4GB of 3G/4G data daily. Previously, these three Airtel prepaid plans came with 1GB data per day limit.

(With inputs from IANS)
DGCA suspends licences of two Jet Airways pilots THE ASIAN AGE. 
Published : Jan 24, 2018, 12:41 am IST
Jet Airways had recently sacked the two senior commanders including the lady-pilot. 



The serious incident mid-air that could have jeopardised the lives of hundreds of passengers.

New Delhi: Aviation regulator DGCA has suspended — for five years — the licences of the two pilots, one of them a lady, who had fought in the cockpit during a Jet Airways Mumbai-London flight earlier this month on January 1, top DGCA sources have confirmed. The incident was serious since the cockpit had been left unmanned by the male co-pilot who came out of the cockpit after the lady-pilot had left the cockpit in tears. As per rules, one of the two pilots have to be in the cockpit at all times. The action was taken by the DGCA due to the safety lapses that resulted in endangering of aircraft operations.

Jet Airways had recently sacked the two senior commanders including the lady-pilot. The serious incident mid-air that could have jeopardised the lives of hundreds of passengers. The aircraft had 338 people including 324 passengers on board. Aviation sources had earlier pointed out that there would have been a major catastrophe had the cockpit door shut by mistake and jammed and not responded to the access codes since the pilots would have then been unable to get in. This is why both aviation authorities and Jet Airways have viewed the matter very seriously.

The incident occurred when the lady pilot and her male co-pilot, both of whom are senior pilots in the airline, had an argument in the cockpit of Jet Airways flight 9W 119 from London to Mumbai after take-off. According to sources in the airline, the male co-pilot had allegedly slapped the lady-pilot commander who left the cockpit in tears and started sobbing outside.

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...