Saturday, April 14, 2018

State govt to repeal BEd degree order 

TIMES OF INDIA 14.04.2018

Chennai: The Tamil Nadu government has decided to repeal its order declaring BEd degrees obtained from Vinayaka Missions University, Salem as not equal to a degree obtained from Tamil Nadu Teachers Education University, Chennai, from the academic year 2015-16 for the purpose of recruitment through Teachers Recruitment Board (TRB).

Sunil Paliwal, higher education secretary who appeared in court in view of a contempt plea, made this submission. He further submitted that appointment orders would be issued to six persons who were declared ineligible in view of the GO.

The court directed the officials to produce the said appointment orders by April 19. TNN
Tougher tests await DL, LLR applicants

Ram.Sundaram@timesgroup.com 14.04.2018

Chennai: Candidates applying for driving licences and learner’s licences (LLR) from regional transport offices (RTOs) will soon have to sweat alot harder to pass their tests.

The state road safety council on Friday resolved to double the number of questions in the objective test for getting an LLR and upgrade the question bank. The council has also told the RTOs to conduct an oral test for licence applicants on rules to be adopted while driving at night and at hill stations. Besides this, applicants will have to demonstrate a predrive vehicle safety check.

These reforms are part of the transport department’s efforts to regulate the driving licence system to cut the road accident rate.

At present, the objective test for LLR applicants contains 10 questions and most RTOs conduct it as a token exercise. Moreover, the questions from the question bank are repetitive in nature. The evaluation process is lenient and even those who score 50% are declared passed, said an official. “To eliminate this shortcoming, the state transport department would soon be coming out with an upgraded question bank containing more than 500 questions from topics related to road safety, road signs and driving theories,” he added.

RTOs told not to be lenient with test evaluation

A total of 20 questions would be selected from the question bank on a random basis.

As far as licence applicants are concerned, candidates are expected to demonstrate a pre-drive vehicle safety check before undergoing the actual driving tests at testing tracks. A pre-drive check includes checking the brakes, belts, position of the rear-view mirrors and headlights.

Besides this, an oral test on rules to be followed while driving at night and hill stations would be conducted alongside other mandatory tests.

The RTOs have been instructed not to be lenient while evaluating the test results, the official added. LLR applicants will have to score at least 60% to clear the written test. Candidates who have failed the tests can reappear after a week (for LLR) or a month (for driving licences).

The road safety council has also resolved to make rules pertaining to speed governors more stringent. The council said it would not go soft on commercial vehicles without speed governors.

RTOs across the state have stopped issuing fitness and registration certificates to commercial vehicles without the speed-control devices. The sale of spurious and old equipment has increased as a consequence.
Happy New Year! Sorry, there is no new Tamil film

D.Govardan @timesgroup.com   14.04.2018

Chennai: This is one script that has gone wrong from the beginning. With egoistic characters having taken centre stage, even the best of the script-writers in Kollywood are finding it difficult to give a happy ending to the ongoing strike in Tamil film industry.

As a result, people across Tamil Nadu, who are gearing up to celebrate the Tamil New Year on Saturday, have to make do their celebrations without a customary visit to a cinema hall nearby to watch a new Tamil film of their favourite stars. This is the first time in decades that a new Tamil film is not being released on this festival day, placed on a par with Diwali and Pongal releases.

While the Tamil Film Producers’ Council (TFPC) had banned the release of new Tamil films from March 1, 2018, over the issue of high rates being charged by the digital distribution companies as virtual print fee (VPF), a segment of theatre owners, representing the stand-alone and single-screen theatres across the state, went on strike from March 16, 2018, demanding the state to waive off the local entertainment tax on cinema tickets.

Also, the TFPC called for stoppage of all pre & post-production works of films, including shootings from March 16, until a whole lot of industry issues are sorted out. Though the theatres have since withdrawn their strike, after the state assured to look into the issue, they have been forced to screen only old Tamil or other language films for the past several weeks. “This is a very sad scenario. But, we can do little to change that. I have not seen such a thing in my four-decade industry experience,” says Tiruppur K Subramanian, a leading distributor and industry spokesman. “Talks are on, but no solution seems to be around,” he added.

“The industry is heading to a downfall. I have not come across anything like this for decades. Due to the strike, the industry would have lost an estimated Rs 200 crore across segments so far. There seems to be no end to this, any soon,” said Abirami S Ramanathan, president, Tamil Nadu Theatre Owners’ Association. 




HOLIDAY BUMMER: This is the first time in decades that a new Tamil film is not being released on this festival day
Superbug in city beef could make you very sick

TIMES NEWS NETWORK 14.04.2018

Chennai: Samples of buffalo meat from Chennai have tested positive for a superbug — methicillin-resistant staphylococcus aureus (MRSA), a drug-resistant strain of bacterium — that could cause a variety of infections if the tainted beef is not cooked enough, a study shows.

But people who handle such meat are at risk of infections that are hard to treat, and could pass on the bacterium, causing an outbreak.

Of 40 samples of raw meat collected from retail outlets, 29 tested positive for Staphylococcus bacteria and 13 for MRSA, said the study’s author Dr S Wilfred Ruban of Veterinary College, Bangalore. “We picked only a small sample but the danger was clear,” he said of the study, published in scientific journal Buffalo Bulletin.

Staphylococcus aureus settles in the skin and mucous membranes of humans and animals and infects meat when there is poor sanitation in slaughter and processing. There has been no large-scale study on MRSA-infections in meat in the country. “The focus here should be humans and for this we need larger studies on both meat and meat handlers,” Ruban said.

Meat dishes in most Indian cuisines are safe because high heat kills the bacteria but there is the possibility that infections can spread.

“If a cook uses a knife to cut infected meat and then to chop vegetables, the bacteria will get on your plate,” infectious diseases expert Dr V Ramasubramanian said. 




இரக்கமில்லா அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்; மனநலம் குன்றிய மகனை தந்தையுடன் நடுரோட்டில் இறக்கிவிட்ட கொடூரம்: மனித உரிமை ஆணையம் சம்மன்

Published : 13 Apr 2018 21:02 IST

சென்னை



தந்தை மகன், அரசு பேருந்து- சித்தரிக்கப்பட்ட படம்

மனநலம் குன்றிய இளைஞரையும், தந்தையையும் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த பணம், சான்றிதழைப் பிடுங்கி நடு சாலையில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

மதுரை திருமங்கலத்தை அடுத்த சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (54). இவரது மகன் முத்துக்குமார் (23) மனநலம் குன்றியவர். அவருக்கு மதுரையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார். வசதி இல்லாததால் அரசுப் பேருந்தில் மகனை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கம் போல் மனநலம் குன்றிய தன் மகன் முத்துக்குமாரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, விருதுநகர் மீனாம்பிகை பங்களா பஸ் நிறுத்தத்தில் இருந்து, விருதுநகர் கோட்ட அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்தபோது நடத்துநர் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது மாரிச்சாமி மாற்றுத் திறனாளியான மகன் முத்துக்குமாருக்கும், அவருக்கு துணையாக செல்பவருக்கும் இலவசப் பயணம் செய்வதற்கான அரசு அளித்த சான்றிதழைக் காட்டியுள்ளார் .

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த நடத்துநர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். சான்றிதழை ஏற்க மறுத்துள்ளார், நடத்துநரின் செயலைச் சொல்லி ஓட்டுநரிடம் மாரிச்சாமி முறையிட்டுள்ளார். ஆனால் ஓட்டுநரும், 'ஒழுங்காக டிக்கெட் எடு இல்ல இறங்கிப் போயிடு' என்று மிரட்டியுள்ளார்.

ஆனால், 'தன்னிடம் சிகிச்சைக்கு மட்டுமே பணம் உள்ளது, அரசு அளித்த இலவசப் பயணச் சான்றிதழ் இருக்கும்போது நான் ஏன் டிக்கெட் எடுக்கவேண்டும்?' என்று மாரிச்சாமி கேட்டுள்ளார்.

'சட்டமா பேசுகிறாய்' என்று மாரிச்சாமியிடம் இருந்த சான்றிதழ் மற்றும் சிகிச்சைக்கு வைத்திருந்த ரூ. 6 ஆயிரத்து 570 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் இல்லாத இடத்தில் மனநலம் குன்றிய மகனையும், அவரது தந்தையையும் இரக்கமில்லாமல் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

இந்தச் செயலைப் பேருந்தில் இருந்த பயணிகளும் தட்டிக்கேட்கவில்லை. கையில் பணம் இல்லாமல் மனநலம் குன்றிய மகனுடன் நட்டநடு சாலையில் இறக்கிவிடப்பட்ட மாரிச்சாமி சில நல்ல உள்ளங்கள் உதவியதால் ஊர் வந்து சேர்ந்துள்ளார்.

தனக்கு நேர்ந்த அவமானம் மற்றும் மனிதாபிமானமற்ற ஓட்டுநர், நடத்துநர் செயல் குறித்து மாரிச்சாமி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகஹ் ட்துணை மேலாளர் ஆகியோரை ஏப்ரல் 25-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.

தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 14, 2018 00:17

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ராந்தம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இதில், ரீட்டா, 47, என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர், 1996 அக்., 7ல், பணியில் சேர்ந்தார். இவரது இடைநிலை கல்வி மதிப்பெண் சான்றிதழ், மாவட்ட கல்வித்துறை மூலம், உண்மை தன்மை ஆய்வுக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், போலி சான்றிதழ் என தெரிந்தது.

இதையடுத்து, ரீட்டாவை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளவரசு உத்தரவிட்டார். அவர் மீது, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டே வருக! புதுவாழ்வு தருக!

Added : ஏப் 14, 2018 02:03



விளம்பி ஆண்டின் ராஜா சூரியன். சூரியனின் அதிதேவதையான சிவபெருமானை போற்றும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது. இதை படித்தால் வாழ்வில் வெற்றி உண்டாகும்.

* உலகாளும் சிவனே! நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திரனை முடியில் அணிந்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடாமுடி தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! நன்மைகளை வாரி வழங்குபவனே! எங்களை காத்தருள்வாயாக.

* பார்வதியின் நாயகனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலை மேல் தாங்கியவனே! பக்தர் மேல் அன்பு கொண்டவனே! பயத்தைப் போக்குவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.

* ஜோதியாய் ஒளிர்பவனே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் நிரந்தரமாக குடி கொள்ள வருவாயாக.

* ஐந்து முகம் கொண்டவனே! புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! பிறவிக்கடலில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! நீலகண்டனே! கைலாய நாதனே! பிரபஞ்சத்தை இயக்குபவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத வரம் தருவாயாக.

* புண்ணியம் செய்தவர்களுக்கு அருள்புரிபவனே! திரிசூலம் ஏந்தியவனே! மானும், மழு என்னும் கோடரியும் கொண்டவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்கு பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், உடல்நலத்தையும் தந்தருள்வாயாக.

* தேவாதி தேவனே! மகாதேவனே! விருப்பத்தை நிறைவேற்றுபவனே! சங்கரி, மகாகணபதியுடனும் காட்சி அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் பிரணவ மந்திரத்திற்கு உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழ் தந்தருள்வாயாக.

* திரிபுரங்களை எரித்தவனே! அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பியவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டியத்தின் நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய தீய குணங்களை நீக்குவாயாக.

* கிரக தோஷம் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினைகளை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! உலகாளும் பரம்பொருளே! சிவசங்கரனே! நாங்கள் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் வந்து காத்தருள்வாயாக.

* இன்பத்தின் எல்லையே! இகபர சவுபாக்கியம் தருபவனே! பாவம் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்தவனே! அண்ணாமலை வாழும் ஈசனே! சரணடைந்தவரைக் காப்பவனே! நல்லவர் நெஞ்சில் வாழ்பவனே! மனநிறைவை தந்தருள்வாய்.

* மங்கள குணம் உடையவனே! பயம் போக்குபவனே! பூத கணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த வெண்ணிற காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! பரமேஸ்வரனே! இந்த விளம்பி புத்தாண்டில் எங்கள் வீடும், நாடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.

32வது ஆண்டு :

தமிழ் ஆண்டுகள் அறுபதில் 32வது ஆண்டு விளம்பி ஆண்டு. இதன் பலன் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.நவக்கிரகங்களில் இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக சூரியனும், மந்திரியாக சனீஸ்வரரும் ஆட்சி செய்கின்றனர். நல்ல மழை பொழியும். தங்கம், வெள்ளி விலை குறையும். கோயில்களில் திருவிழா விமரிசையாக நடந்தேறும். மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வர்.. எல்லா உயிர்களுக்கும் குறைவில்லாத நன்மை உண்டாகும்.

வெற்றி மேல் வெற்றி :

புத்தாண்டின் ராஜாவாக சூரியன் இருக்கிறார். அவருக்கு அதிதேவதையான சிவபெருமானை ஆண்டு முழுவதும் ஞாயிற்றுக்கிழமையில் வழிபட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். ஞாயிறன்று அதிகாலை நீராடி, அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலில் 'ஓம் நமசிவாய:' என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். தேவாரம், திருவாசகம், சிவபுராணம் போன்ற பாடல்களைப் படிப்பதும் நல்லது.

தீர்க்காயுசுடன் வாழுங்க! :

சித்ரா பவுர்ணமியன்று கையில் ஏடும், எழுத்தாணியுமாக அவதரித்தவர் சித்ரகுப்தர். உயிர்களின் பாவபுண்ணிய கணக்கை நிர்வகிக்கும் கணக்கராக இருப்பவர் இவரே. கேதுவின் அதிதேவதையாக விளங்குபவர் சித்ரகுப்தர். இவரை வழிபட்டால் கேது தோஷம் நீங்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவர். காஞ்சிபுரத்தில் இவருக்கு தனிக்கோயில் உள்ளது. சித்ராபவுர்ணியன்று விரதமிருந்து இவரை வழிபட்டால் முன் செய்த பாவம் நீங்கும். உடல்நலத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் உண்டாகும். இந்த ஆண்டு ஏப்ரல் 29 சித்ராபவுர்ணமியன்று சித்ரகுப்த ஜெயந்தி நடக்கிறது.

இது நம்ம வீட்டு கல்யாணம்!

மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியனும், அவனது மனைவி காஞ்சன மாலையும் குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். யாகத் தீயில் பார்வதி குழந்தையாக அவதரித்தாள். தடாதகை என பெயரிட்டான். அவளை இளவரசியாக்கி போர் பயிற்சி அளித்தான். அவள் எண்திசைக் காவலர்களையும் வென்றாள். இறுதியாக, சிவலோகமான கைலாயத்தின் மீது போர் தொடுத்தாள். அங்கிருந்த சிவனின் அழகு கண்டு நாணம் கொண்டாள். 'உன் மணாளன் இவரே' என்று வானில் அசரீரி ஒலித்தது. அதன்படி சிவன் தலைமையில் பிரம்மா, திருமால், நந்தீஸ்வரர், தேவர்கள் அனைவரும் மதுரையில் ஒன்று கூட திருமணம் நிகழ்ந்தது. அவர்கள் இன்று வரை மதுரையில் நல்லாட்சி புரிந்து வருகின்றனர். மீன் போல் துõங்காமல் ஆட்சி செசய்பவள் என்பதால் 'மீனாட்சி' என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது. மீனாட்சி திருக்கல்யாணத்தை 'இது நம்ம வீட்டு கல்யாணம்' என பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஆண்டு ஏப்.27ல் திருக்கல்யாணமும் 28 ல் தேரோட்டமும் நடக்கிறது.

மங்கல குங்குமம் :

பெண்களின் அழகு சாதனமாக பொருளாக திகழும் குங்குமத்திற்கு ஆன்மிகத்தில் சிறப்பிடம் உண்டு.
* புருவ நடு, உச்சி வகிட்டில் குங்குமம் இடுவதால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும், லட்சுமிகரமான தோற்றமும் உண்டாகும்.
* படிகாரம், சுண்ணாம்பு, மஞ்சள் ஆகிய மூன்றும் சேர்ந்ததே தரமான குங்குமம். இதிலுள்ள மஞ்சள் இரும்புச் சத்தாகவும், படிகாரம் கிருமி நாசினியாகவும் மாறி உடலுக்கு நன்மை அளிக்கிறது.
* நெற்றி வகிட்டில் இடும் போது மூளை, நரம்பு மண்டலத்திற்கு சக்தி உண்டாகிறது.
* மூளைக்கு அதிக உஷ்ணம் செல்லாமல் தடுப்பதோடு குளிர்ச்சியை பாதுகாக்கிறது.
* குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.
* சூரியக்கதிர்கள் குங்குமத்தின் மீது படும் போது உடலுக்கு காந்த சக்தி கிடைக்கிறது.

சுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள் :

தெய்வத்தின் அருளை பெற உதவும் சாதனம் விரதம். எந்த தெய்வத்திற்கு விரதம் இருந்தாலும், விநாயகரை வழிபட்டே தொடங்க வேண்டும். காரடையான்நோன்பு, சுவர்ண கவுரி விரதம், வரலட்சுமி விரதம், நவராத்திரி விரதம் ஆகியவை சுமங்கலி பாக்கியம் தரும் சுபவிரதங்கள்.

காரடையான் நோன்பு:
மாசியும், பங்குனியும் இணையும் நேரத்தில் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ இதனை மேற்கொள்வர். கலசத்தில் தேங்காய், மாவிலை, சந்தனம், குங்குமம் வைத்து அதையே அம்பிகையாக பாவித்து மஞ்சள் கயிறு சுற்றி வைக்க வேண்டும். கார அடை, பழம், பொரி படைத்து வழிபாடு செய்ய வேண்டும். மாலையில் அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. இந்த விரதம் மாசி30ல் (மார்ச்14) இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கவுரி விரதம்:
ஆவணியில் விநாயகர் சதுர்த்திக்கு முதல்நாள் அனுஷ்டிப்பது கவுரி விரதம். மணமான பெண்கள் 16 ஆண்டுகள் மேற்கொள்வது வழக்கம். நெய்தீபமேற்றி, தீபத்தின் முன் புது மஞ்சள் கயிறு வைத்து வழிபட வேண்டும். கவுரியம்மனுக்கு அவல், பொரி, கடலை, தேங்காய், பழம் படைக்க வேண்டும். பூஜையின் நிறைவாக, கையில் மஞ்சள் கயிறை கணவர் மூலம் கட்டிக் கொள்ள வேண்டும். இதனை பெண்கள் குழுவாக சேர்ந்து மேற்கொள்வது நல்லது. வரும் ஆவணி 27ல் (செப்.12) இவ்விரதம் வருகிறது.

வரலட்சுமி விரதம்:
கன்னிப்பெண்களும், மணமான பெண்களும் ஒன்று கூடி மேற்கொள்வது வரலட்சுமி விரதம். ஆடி அல்லது ஆவணி மாத வெள்ளியில் இதனை மேற்கொள்வர். கலசத்தை லட்சுமியாகப் பாவித்து தேவியின் முகம் வைத்து அலங்காரம் செய்வர். தாயாருக்கு இனிப்பு பலகாரம், நோன்புக்கயிறு, மலர்ச்சரம் வைத்து பூஜை செய்வர். பூஜையின் முடிவில் பெண்கள் அனைவரும் மலர் சூடிக் கொண்டு கயிறு கட்டிக் கொள்வர். இதனால், கன்னியருக்கு விரைவில் மணவாழ்வு அமையும். ஆவணி 8ல்(ஆகஸ்ட் 24) வரலட்சுமி விரதம் வருகிறது.

நவராத்திரி விரதம்:
புரட்டாசியில் ஒன்பது நாட்கள் பெண்களால் மேற்கொள்ளப்படும் விரதம் நவராத்திரி. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் வழிபடுவதால் தீர்க்க சுமங்கலி பாக்கியம், செல்வ வளம், கல்வி வளம் உண்டாகும். தினமும் மாலையில் கொலு மேடையில் தேவியை அலங்கரித்து, தினமும் ஒரு நைவேத்யம் செய்து வழிபடுவர். இந்த விரத காலத்தில் பெண்கள் அனைவரும் தேவியின் அம்சமாகவே போற்றுவர். வரும் ஆண்டில் புரட்டாசி 23 முதல் ஐப்பசி1 வரை (அக்.10-18 ) வரை நவராத்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

டிப்ஸ்...டிப்ஸ்...டிப்ஸ்:

* தினமும் காலையும் மாலையும் குத்துவிளக்கு ஏற்றுங்கள். கிழக்கு நோக்கி ஏற்றினால் இன்பமான வாழ்க்கை அமையும். பிறரை வசீகரிக்கும் சக்தி அதிகரிக்கும். வடக்கு நோக்கி ஏற்றினால், கல்வி, சுபநிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தடை நீங்கும். பணம் பெருகும்.
* தாமரைத்தண்டு திரியில் விளக்கேற்றினால், முன்வினைப்பாவம் தீரும். வாழைத்தண்டு திரியில் விளக்கேற்றினால் குலதெய்வ ஆசி கிடைக்கும். புதுமஞ்சள் துணியைத் திரியாக்கி ஏற்றினால், கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். புது வெள்ளைத் துணியைத் திரியாக்கி அதை பன்னீரில் நனைத்து உலர வைத்து விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிலைக்கும். *பெண்களுக்கு அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் திருமணம் நடத்தலாம். ஆனால், பிறந்த கிழமையில் நடத்தக் கூடாது.

* உங்கள் குழந்தைகளை பள்ளி, கல்லுாரியில் சேர்க்க அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.

* இந்த புத்தாண்டில் புதுமணத்தம்பதிகளை விருந்து அழைக்க திங்கள், புதன், வெள்ளி, சனி நல்ல நாட்கள்.

* குடும்பத்தில் சீமந்தம் நடக்கப் போகிறதா? ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், உத்திராடம், திருவோணம், ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள். அன்று திரிதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதசி, திரயோதசி திதியாக அமையுமானால் இன்னும் சிறப்பு.

* குழந்தை பிறந்ததும் தொட்டிலில் இட, ரோகிணி, திருவோணம், பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.

இந்தாண்டு உங்கள் பெண்ணுக்கு, சகோதரிகளுக்கு திருமணம் முடிக்கிறீர்களா? திருமாங்கல்யம் வாங்க, அசுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம். உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்களைத் தேர்ந்தெடுங்கள்.

அரி சிவா இங்கிலையோ!

ஊருக்குள் புதிதாக வந்த ஒருவன், ' அரிசி வாங்கலையோ! அரிசி வாங்கலையோ!' என்று கூவிக் கொண்டே போனான். ஆனால், தலையில் மூடை இல்லை. வண்டியிலும் அரிசி ஏற்றி வரவில்லை. முதலில் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், தினமும் வீதியில் அவன் வந்து கூவிச் செல்வதைக் கண்டதும் தெருவிலுள்ளவர்கள் ஒன்று கூடினர்.

“புதிதாக வந்திருக்கும் இந்த நபர் யார்? ஆளைப் பார்த்தால் வியாபாரியாகத் தெரியவில்லை. அரிசி மூடையும் இல்லை. அவனை விசாரிக்க வேண்டும்” என்று பேசினார்கள். பெரியவர் ஒருவரிடம் இது பற்றி கேட்டனர். விஷயமறிந்த அவர் சற்று யோசித்து விட்டு, “இப்போது எனக்கு புரிந்து விட்டது. இந்த ஊருக்குள் கோயில் எதுவுமே இல்லை. யாரும் கடவுளைப் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. அதை தெரிவிக்கவே, 'அரி.. சிவா.. இங்கிலையோ?” அதாவது ஹரியாகிய திருமாலுக்கும், சிவபெருமானுக்கு கோயில் இந்த ஊரில் இல்லையோ? என்று மறைமுகமாக கேட்டபடி செல்கிறான்” என விளக்கினார்.

இதையடுத்து ஊர் மக்கள் சிவன்,பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவு செய்தனர். சிவ, விஷ்ணு கோயில் வழிபாடு அனைத்து ஊர்களிலும் இருக்க வேண்டும் என்பதற்காக காஞ்சிப் பெரியவர் சொன்ன கதை இது.

பச்சடி பரிமாற மறக்காதீங்க!

புத்தாண்டன்று உணவில் வேப்பம்பூ பச்சடி சேர்ப்பது அவசியம். வேப்பம்பூ, புளி, வெல்லம், உப்பு, நெய் ஆகிய ஐந்தும் இதில் இடம் பெற வேண்டும். பேருக்கு கொஞ்சமாக வைக்கமால், அதிகமாக செய்வது நல்லது. அதை அம்பிகைக்கு ஒரு கிண்ணம் வைத்து நைவேத்யம் செய்ய வேண்டும். அப்போது பெண்கள் என்ன கோரிக்கை வைத்தாலும், அம்பிகையருளால் நிறைவேறும். அடுத்ததாக கணவருக்கு கொடுக்க வேண்டும். அதன் மூலம் ஆண்டு முழுவதும் கணவரின் அன்பு கிடைக்கும். இதன் பிறகே, குழந்தைகள், பெண்கள் பச்சசடி சாப்பிட வேண்டும்

NEWS TODAY 27.06.2026