Saturday, April 14, 2018

தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

Added : ஏப் 14, 2018 00:17

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ராந்தம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இதில், ரீட்டா, 47, என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர், 1996 அக்., 7ல், பணியில் சேர்ந்தார். இவரது இடைநிலை கல்வி மதிப்பெண் சான்றிதழ், மாவட்ட கல்வித்துறை மூலம், உண்மை தன்மை ஆய்வுக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், போலி சான்றிதழ் என தெரிந்தது.

இதையடுத்து, ரீட்டாவை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இளவரசு உத்தரவிட்டார். அவர் மீது, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...