Saturday, April 14, 2018


'காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை 

கல்யாணசுந்தரம்'

காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு புகழாரம் சூட்டினார்.

பட்டுக்கோட்டையிலுள்ள கவிஞர் கல்யாணசுந்தரம் நினைவு மணிமண்டபத்தில் அவரது 89-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழக அரசு சார்பில், மணிமண்டபத்திலுள்ள கவிஞர் கல்யாணசுந்தரம் சிலைக்கு அமைச்சர் இரா.துரைக்கண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசியதாவது:

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடியவை. அவருடைய தத்துவப் பாடல்களின் வரிகள் எளிய நடையில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. காலத்தால் அழியாத பாடல்களை தந்த அவரது எழுத்தாற்றலுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவருடைய பிறந்த நாளை தமிழக முதல்வரின் ஆணைப்படி அரசு விழாவாக இங்கே நடத்தி சிறப்பு செய்கிறோம் என்றார். அமைச்சரைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோரும் கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவையொட்டி, 10 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை, 2 பேருக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, ஒருவருக்கு விபத்து காப்பீட்டுக்கான நிதியுதவி என மொத்தம் ரூ.1லட்சத்து 36 ஆயிரத்து 500 மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை எம்.பி.
ஆர்.கே. பாரதிமோகன், எம்எல்ஏக்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் துரை.திருஞானம், தஞ்சை மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசு, வட்டாட்சியர் ஜி.சாந்தக்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Dailyhunt

சித்திரை மாத முக்கியப் பண்டிகைகள், விசேஷ தினங்கள்! #VikatanPhotoStory 



த மிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை. சித்திரை என்றால் 'ஒளி பொருந்திய' அல்லது 'அழகிய' என்று பொருள். ஆண்டின் தொடக்கமாக வந்து நல்ல நல்ல மாற்றங்களைத் தரும் மாதம். கடுமையான கோடைக்காலமாக சித்திரை இருந்தாலும், காய்-கனிகளில் பல இந்தக் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை. ஆலயம்தோறும் திருவிழாக்கள் நடைபெறும் மாதமும் இதுதான். சித்திரை மாதத்தில் வரும் விழாக்கள், பண்டிகைகள், விசேஷங்களையும் இங்கே காண்போம்.

ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு

`ஹே விளம்பி' ஆண்டு முடிவடைந்து, 'விளம்பி' ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது. 'மக்களுக்கு மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக இந்த ஆண்டு அமையும்' என ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

ஏப்ரல் 15 - சித்திரை அமாவாசை


சித்திரை அமாவாசை 'பித்ரு பூஜை' சிறப்பான வாழ்வைத் தரும். கடுமையான கோடைக்கால அமாவாசை என்பதால், அம்மன் ஆலயங்களில் 'பால்குட திருவிழா' நடைபெறுவது வழக்கம். சித்தர்களுக்கு உகந்த இந்த அமாவாசையில் சதுரகிரி, திருவண்ணாமலை, வெள்ளியங்கிரி போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

ஏப்ரல் 18 - அட்சய திருதியை

அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளில் வரும் இந்தப் புனித நாள் எப்போதும் குறையாத செல்வ வளங்களைத் தரும் திருநாள். பரசுராமர் ஜனித்த திருநாளும் இதுவே. பாஞ்சாலிக்கு, கிருஷ்ணர் துகில் அளித்ததும் இந்த நாளில்தான். இந்த நாளில் லட்சுமி மற்றும் குபேரரை வணங்கினால் ஐஸ்வர்ய யோகம் பெறலாம்.



ஏப்ரல் 20 - ஆதிசங்கரர் ஜயந்தி



சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி, புவியில் சாந்தியும் சமாதானமும் தழைக்கப் பாடுபட்ட மகாஞானி ஆதிசங்கரர். அத்வைத தத்துவத்தின் பிதாமகரான ஆதிசங்கரர், கேரள மாநிலத்தின் 'காலடி' என்ற ஊரில் இதே நாளில்தான் பிறந்தார். எட்டு வயதில் துறவியாகி மக்களை முறையான வழிபாட்டுக்குக் கொண்டு சென்ற அவதாரப் புருஷரின் ஜன்ம நாளின்று.

ஏப்ரல் 21 - ஸ்ரீராமாநுஜர் ஜயந்தி



தான் அறிந்துகொண்ட திருமந்திரத்தை உலகமும் அறிந்துகொள்ளட்டும் என்று குருவின் கட்டளையையும் மீறி ஓதிய திருவடிவத்தின் பெயர்தான் ஸ்ரீராமானுஜர். எந்த உயிரிலும் பேதம் பார்க்காமல், நாராயணனை மட்டுமே பார்த்து மகிழ்ந்த உடையவர் ஸ்ரீராமாநுஜரின் அவதார தினம் இன்று.

ஏப்ரல் 23 - வாஸ்து தினம்



பூமியின் இயல்புக்கேற்றவாறு வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாள்களில் வாஸ்து வழிபாடு செய்தால், எந்தத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை மாதம் 10-ம் நாளில் பூமி பூஜை செய்து வேலையைத் தொடங்கலாம்.

ஏப்ரல் 24 - சத்ய சாய்பாபா ஸித்தி தினம்

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று. பல கோடி பக்தர்களின் வழிபாட்டுக்குரிய பகவான் ஸ்ரீபாபா ஆன்மிகப் பணிகளோடு பல சமூக நலப்பணிகளும் செய்தவர்.

ஏப்ரல் 25 - பட்டாபிஷேகம்



மதுரை நகராளும் அன்னை மீனாட்சிக்கு நடைபெறும் 'சித்திரைத் திருவிழா'வில் இன்று ஸ்ரீமீனாட்சிக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். அரியணை ஏறிய அன்னை மீனாட்சியின் அழகுக் கோலம் காண்பதற்கரியது.

ஏப்ரல் 27 - மீனாட்சித் திருக்கல்யாணம்



மலையத்துவஜ பாண்டியனின் திருமகளாகப் பிறந்து பாண்டியப் பேரரசின் வீர இளவரசியாக வளர்ந்த மீனாட்சியை, சௌந்திர பாண்டியனாக வந்து ஈசன் கரம் பிடிக்கும் திருநாள் இன்று.

ஏப்ரல் 29 - சித்ரா பௌர்ணமி, அழகர் ஆற்றில் இறங்குதல்.



தங்கை மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் நடந்த திருமணத்துக்கு சீர்வரிசையளிக்க, அண்ணனான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி வரும் வைபவம் நடைபெறும் நாள் இன்று. சித்ரா பௌர்ணமி நாளில் கண்ணகிக்கான வழிபாடும் நடைபெறும்.

மே 04 - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

சூரியன், பரணி 4-ம் பாதத்தில் தொடங்கி, கார்த்திகை, ரோகிணி முதல் பாதம் வரை சஞ்சரிக்கும் காலம்தான் அக்னி நட்சத்திரக் காலம். பொதுவாக, `இந்தக் காலத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக் கூடாது' என்பார்கள். அர்ஜுனன் 'காண்டவ வனம்' எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.

மே 7 - சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம்



நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள். அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் இன்று நடைபெறும். உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால், பிறப்பிலா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.

மே 10 - தத்தாத்ரேயர் ஜயந்தி



பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக வணங்கப்படும் ஸ்ரீ தத்தாத்ரேயர் நித்ய சஞ்சீவிகளில் முதன்மையானவர். இவர் அத்திரி மகரிஷிக்கும் அகல்யாவுக்கும் இதே நாளில் பிறந்தார். இவர் பிறந்த தலம் சுசீந்திரம். 'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனநிம்மதியை அளிக்கக்கூடியது.
Dailyhunt

முக்கிய குற்றவாளிகள் விடுதலையா? சேலத்தில் தண்டனை பெற்றவர்கள் வேதனை! 

dailyhunt   14.04.2018

சேலம் வீராணத்தை அடுத்த பள்ளிக்கூத்தானூர் பகுதியில் 2003-ஆம் ஆண்டு சுந்தரராஜன், குப்புசாமி கொலை வழக்கு சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ரவீந்தரன் விசாரணை செய்துவந்த இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு ஒற்றை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. அதையடுத்து, நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் கதறிக் கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, "நாங்கள் சேலத்தை அடுத்த வீராணம் பள்ளிக்கூடத்தானூர் பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கில் கொலை செய்யப்பட்ட சுந்தரராஜன், குப்புசாமி ஆகியோர் ஊருக்குள் ரவுடிகளாக வலம் வந்தார்கள். ஊருக்குள் அனைவரிடமும் பிரச்னைகள் செய்துவந்தார்கள். ஊரையே இவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அனைவரையும் மிரட்டி, அடித்து தொந்தரவு செய்துவந்தார்கள்.

சம்பவம் நாளான 15.7.2003-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, அவர்கள் இருவரும், பூசாரி அருணாசலம் கடையில் சிக்கன் வாங்கிவிட்டுப் பணம் கொடுக்கவில்லை. பூசாரி, பணம் கேட்டதால் அவரை அடித்து உதைத்தார்கள். இதையடுத்து, அவர் ஊருக்குள் வந்து முறையிட்டார். ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து சுந்தரராஜனையும், குப்புசாமியும் அடித்துக் கொலை செய்துவிட்டார்கள். அதையடுத்து, அன்றைய சேலம் மாவட்ட எஸ்.பி.பொன்மாணிக்கவேல் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்துவிட்டு, "பரவாயில்லை. ரவுடிகளை ஊரே சேர்ந்து அடித்துக் கொலை செய்திருக்கிறீர்கள். இப்படிச் செய்தால்தான் ரவுடிகள் திருந்துவார்கள். வயதானவர்கள் 6 பேரும் சரணடைந்துவிடுங்கள். மேற்கொண்டு நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால், இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக அந்த ஊரில் 103 பேரைக் காவல் துறை கைதுசெய்தது. பிறகு, அதில் 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ரவீந்தரன் விசாரித்துவந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் கிருபைவரன், திருநீலகண்டன் ஆஜரானார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தனித்தனியே வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடி வந்தார்கள்.

விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நடேசன், ஜெகன் (எ) ஜெகநாதன், குமரவேல், அண்ணாமலை, செல்வம், தியாகராஜன், செல்வராஜ் ஆகிய 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சேகர், தர்மலிங்கம், செல்வம், குமரேசன், மாணிக்கம் ஆகிய 5 பேருக்கு ஒற்றை ஆயுள் தண்டனையும், விஜயா, கிருஷ்ணம்மாள், மாது ஆகிய 3 பெண்களுக்கு 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குட்டி (எ) செல்வம், பூசாரி (எ) அருணாசலம், முருகேசன், கலைவாணன், மணிமாறன் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த சடையன், கருப்பன், நிலா ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டனர். இதுதவிர இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பழனிவேல் என்பவரை நக்சல் தொடர்பு இருப்பதாகச் சொல்லி தனிவழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதி ரவீந்தரன் வழங்கிய தீர்ப்பையடுத்து, ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் குவியத் தொடங்கினார்கள். தண்டனை பெற்றவர்களை அவர்களுடைய குடும்பத்தினர்களும், உறவினர்களும் கட்டிப்பிடித்துக் கதறி அழுத காட்சி, அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. தங்கள் அப்பாக்கள் சிறைக்குச் செல்வதைப் பார்த்து கண்ணீர் வடித்த குழந்தைகள், அவர்களுடைய கன்னத்தில் முத்தம் கொடுத்து அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. அதையடுத்து தண்டனை பெற்றவர்கள் 3:00 மணிக்கு காவல் துறை வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கோவை மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.



இதுபற்றி ஒற்றை ஆயுள் தண்டனை பெற்ற சேகர் என்பவரிடம் பேசிய போது, "நான் 5 வயது குழந்தையாக இருந்தபோது போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகிட் கால் செயலிழந்ததால் என்னால் சரியாக நடக்க முடியாது. 75 சதவிகிதம் கால்கள் ஊனம் என்ற சான்றிதழ் பெற்றிருக்கிறேன். எனக்குக் கண் பார்வையும் குறைவு. சம்பவம் நடந்தபோது ஊரே கூடி கும்பலாக இருந்தது. அந்தக் கும்பலைவிட்டு விலகி ஓர் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறார்கள்'' என்றார், வேதனையுடன்.

இரட்டை ஆயுள் வழங்கப்பட்ட குமரவேல், "சம்பவம் நடந்தபோது நான் ஊரிலேயே இல்லை. கலரம்பட்டியில் தறி ஓட்டிக் கொண்டிருந்தேன். இந்த வழக்குக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாதவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்'' என்றார். செந்தில் என்பவர், ``எங்கள் குடும்பத்தில் 4 பேர்மீது ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள். எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொலைக்குச் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள். இதனால் எங்கள் குடும்பமே பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம்'' என்று கண்ணீர்விட்டார்.



இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் தனசேகரன், "பாதிக்கப்பட்டவர்கள் பல கதைகளைச் சொல்லலாம். அதைப் பற்றி நான் பேச முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதியரசர் முழுமையாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இது சரியான தீர்ப்பு'' என்றார்.

அப்போது, சேலத்தில் எஸ்.பி-யாக இருந்த பொன்மாணிக்கவேலிடம் விளக்கம் கேட்பதற்காகப் பலமுறை தொடர்புகொண்டும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருடைய விளக்கம் கிடைத்தால் அதையும் பதிவு செய்வோம்.
Dailyhunt
அந்தக் குடிசை வீடு... அவள் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது! 

dailyhunt

அ தோ... உங்கள் வீட்டில், தெருவில் கோடை விடுமுறையில் விளையாடிக்கொண்டிருக்கிறாளே அந்தக் குழந்தை... அவளைப்போலதான் அசீஃபாவும். எட்டு வயதுச் சிறுமி. அவள், தனது கிராமத்தின் ஒரு கோயிலில் வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஐந்து நாள்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டபோது, அவ்வப்போது கண்களைத் திறந்து பார்த்ததைத் தவிர, அழக்கூட முடியவில்லை அந்தக் குழந்தையால். அந்தளவுக்கு வீரியம் மிகுந்த மயக்கமருந்து அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இறுதி நாளில், கொலை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்டாள். இது, பாலியல் இச்சைக்காகச் செய்யப்பட்ட கொடூரம் மட்டுமல்ல. ஆசிஃபா சார்ந்த நாடோடி சமூக மக்களுக்கான ஒரு மிரட்டலாக, திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் என்பது, உயிர் உருவி பதைபதைக்க வைக்கிறது. உலகமே ஜம்மு - காஷ்மீரைத் திடுக்குற்றுத் திரும்பிப் பார்க்கிறது.

காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்நிலையில், ஜம்முவில் கால்நடைகள் மேய்க்கும் பக்கர்வால் எனப்படும் முஸ்லிம் நாடோடிச் சமூகத்துக்கும், ஜம்மு இந்துகளுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்தது. காரணம், பொது நிலங்களிலும், காடுகளிலும் பக்கர்வால் சமூகத்தினர் தங்கள் கால்நடைகளை மேய்க்கின்றனர். எனவே, பக்கர்வால் சமூகத்தை அச்சுறுத்தி, ஜம்முவைவிட்டு வெளியேற வைக்கவேண்டும் என்று ஊருக்குள் அவ்வப்போது ஆலோசனைகள் நடைபெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம், சிலரால் அதற்காகத் திட்டமும் தீட்டப்படுகிறது. அதற்கு பலியாக்கப்பட்டவள்தான், ஆசிஃபா.

ஜம்முவிலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள ரசானா கிராமத்தில், அன்று தனக்கு நடக்கவிருக்கும் கொடூரம் பற்றி அறியாமல், பட்டாம்பூச்சியாகத் திரிந்தாள் ஆசிஃபா. இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒருவனின் வீட்டருகே தனது குதிரையை மேய்த்துகொண்டிருந்தவளை அந்தக் கயவனும், வழக்கின் மற்றொரு குற்றவாளியான அவனுடைய நண்பனும், அவள் கால்நடைகளை காட்டுக்குள் விரட்டி, அவற்றைத் தேடிச்சென்ற ஆசிஃபாவை வழிதடுமாறச் செய்து, காட்டுக்குள் வரவைத்தனர்.

குதிரை வீடு திரும்பியது, ஆசிஃபா வீடு திரும்பவில்லை. அவளைத் தேடி அவளது குடும்பமே இரவு முழுவதும் தவித்தலைந்தது. எந்தத் தகவலும் கிடைக்காததால், மறுநாள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கச் சென்றனர். `அவள் யாருடனாவது ஓடிப்போயிருப்பாள்' என்றார்கள் காக்கிச்சட்டையினர். ஆம், எட்டு வயதுச் சிறுமியைத்தான் அப்படிச் சொன்னார்கள் அந்தக் காவல் அதிகாரிகள்.

ஆசிஃபாவின் சிரிப்புச் சத்தமும், துள்ளலும் இல்லாமல் அவள் குடிசை வாடிக்கொண்டிருந்தது. முகம்மது யூசூஃப் புஜ்வாலா, தன் வீட்டின் வாசலில் அமர்ந்துகொண்டு தன் மகளின் பாதம்பட்ட தரையில் அவளது சுவடைத் தேடிக்கொண்டிருக்க, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஓடிவந்து, `உங்கள் பெண்ணின் சடலம் நம் ஊரிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கிற காட்டுப் புதரில் கிடக்கிறது' என்றார். புஜ்வாலாவின் உடல், தன் மகளின் உடலைத் தேடி ஓடியது. அவரது ஜீவன், தன் மகளைத் தேடிக்கொண்டிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் புஜ்வாலா - நசீமா தம்பதியின் இரண்டு மகள்களும் இறந்துவிட, அவர்கள் புஜ்வாலாவின் மைத்துனரின் மகளைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். அவள்தான் ஆசிஃபா.

இந்தக் கொலையைத் திட்டமிட்டதாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான சஞ்சி ராம், அவர் மகன், கல்லூரி மாணவர் விஷால் குமார், காவல்துறை அதிகாரி தீபக் கஜுரிய, ராமின் உறவினரான பதின்வயதுப் பையன் ஒருவன், அவனுடைய நண்பன் பர்வேஷ் குமார். விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள், மனித மனங்களின் குரூரத்தைப் பிளந்து காட்டுகின்றன.

ஜனவரி 10ம் தேதி கடத்தப்பட்ட ஆசிஃபாவை, காட்டில்வைத்து வன்புணர்வு செய்த பதின்வயதுக் குற்றவாளி, பின்னர் தன் நண்பன் பர்வேஷுடன் இணைந்து அவளை ஒரு கோயிலுக்குத் தூக்கிச் சென்றான். அது, ராம் பாதுகாவலராக இருக்கும் ஒரு கோயில். பதின்வயதுக் குற்றவாளி, கல்லூரி மாணவன் விஷாலுக்கு போனில் தகவலைத் தெரிவிக்க, நகரத்தில் செமஸ்டர் பரிட்சை எழுதிக்கொண்டிருந்த அவன், ஊர் திரும்புகிறான். ஆசிஃபாவுக்குத் வீரியமான மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்த நாள்களில், கல்லூரி மாணவன் விஷால், பதின்வயதுக் குற்றவாளி, காவல்துறை அதிகாரி தீபக் என அவள் மாறி மாறி வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள். ஜனவரி 14ம் தேதி, அவள் காட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, தலை பெரும் கல்லால் சேதப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவளது உடல் மீண்டும் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மறுநாள் காட்டில் புதைக்கப்படுகிறது.

ஆசிஃபா கொலைக்குப் பிறகான காட்சிகள், இன்னும் கொடூரம். தடயங்களை அழிக்க, காவல்துறை அதிகாரிகளே அவளது ஆடைகளை அலசுகிறார்கள். வழக்கு க்ரைம் பிரான்ச்சுக்கு மாற்றப்படுவதற்கு முன், அவளது பிறப்புறுப்பின் காயங்கள் உள்ளிட்ட பல தடய அறிக்கைகளை அழிக்கிறார்கள். ராம், இதற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு நான்கு லட்சம் லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு `இந்து' கவசங்கள் மாட்டப்படுகின்றன. `வழக்கின் விசாரணையில் நியாயமில்லை; ஒருதலைபட்சமாக, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இது மேற்கொள்ளப்படுகிறது' என்று போராட்டங்கள் வெடிக்கின்றன. பிடிபி - பிஜேபி கூட்டணி அரசு ஆளும் ஜம்மு அரசின் இரண்டு பிஜேபி அமைச்சர்கள், இந்து அமைப்பின் பேரில் நடத்தப்படும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். குற்றவாளிகளில் ஒருவனின் தாய் உள்பட, நான்கு பெண்கள் முடிவில்லா உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்கிறார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீஸார் நீதிமன்றத்தில் நுழைவதை, வழக்கறிஞர்களே தடுக்க முயற்சி செய்கிறார்கள். உச்சகட்டமாக, இந்தப் போராட்டங்களில் தேசியக்கொடி ஏந்தி சிலர் நியாயம்(!) கேட்கிறார்கள்.

காட்சிகள் தொடர்கின்றன.

பாலியல் வன்முறை, பாலியல் கொலைவழக்குகளில் `இந்தியாவின் மகள்'களின் ரத்தம் தோய்ந்த வலியும் கண்ணீரும், நீதிமன்ற வழக்குக் கோப்புகளில் கசிந்தபடியே காத்துக்கிடக்கின்றன தீர்ப்புக்காக. ஆசிஃபாவின் கோப்பு, நகரும் திசையும் வேகமும் என்னவாக இருக்கப்போகின்றன..?

ஆசிஃபாவின் இறுதி நாள்களை நினைத்துப் பார்த்தால், கருவிழியில் செலுத்தப்படும் முள்போல ரணமாய்த் தைக்கிறது.

'நான்
என் குதிரையைத்தானே மேய்த்துக்கொண்டிருந்தேன்...
என்னை ஏன் இங்கே கூட்டிவந்தீர்கள் அண்ணா?
என் குதிரை, கால்நடைகள் வீடு திரும்பியிருக்குமா?
சாதி, மதமா?
அதெல்லாம் எனக்குத் தெரியவில்லையே!
என்னை விட்டுவிடுங்கள்.
நான் என் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
என் தோழி எனக்காகக் காத்திருப்பாள்.
அந்தக் காட்டுப் பூக்களை
நாளையும் பறித்து விளையாட வேண்டும்.
அய்யோ, என்ன செய்கிறீர்கள்..?
அய்யோ வலிக்கிறதே...
என்னால் அழக்கூட முடியவில்லையே...
நீங்களெல்லாம் யார்..?
என் கண்களை மட்டுமே என்னால் திறக்கமுடிகிறது...
நான் இறந்துவிட்டேனா..?
இல்லையா..?
நான் இறந்துவிடுகிறேன்
என்னை விட்டுவிடுங்களேன்..!
ஆனால்...
நான் என்ன தவறு செய்தேன்?'

ஆசிஃபாவின் குடிசை வீடு, அந்தப் பட்டாம்பூச்சியின் சிரிப்பும் துள்ளலும் இன்றி வாடிக்கிடக்கிறது!
Dailyhunt

கோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா? - மருத்துவம் சொல்வது என்ன? 

#IceWater

VIKATAN

சுட்டெரிக்கும் கோடை... ஆறு, குளம், ஏரி, அணைகள் என அனைத்து நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகிக்கொண்டிருக்கிறது. அதேபோல் நமது உடலிலிருந்தும் நீர் அதிக அளவில் வெளியேறுகிறது. இதனாலேயே உடலின் நீர்த் தேவை அதிகரிக்கிறது. அதை ஈடுகட்டாதபட்சத்தில் நீர்க்கடுப்பு, கல்லடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள் என நோய்கள் வரிசைகட்டும். கோடையில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்ய நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், தொண்டைக்கு இதமாக குளிர்ச்சியான நீரை அருந்துவதையே நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். `கொளுத்தும் கோடையில் ஐஸ் வாட்டர் அருந்துவது நல்லதுதானா?' - பொது மருத்துவர் ஆர்.சுந்தரராமனிடம் கேட்டோம்.

``கோடை வெயிலின் வெம்மையைத் தணிக்க வழக்கத்தைவிட அதிகமாக நீர் அருந்தவேண்டியது அவசியம். இதை எல்லா மருத்துவ முறைகளுமே வலியுறுத்துகின்றன. சாதாரணக் காலங்களைவிட கோடையில் நம்மையும் அறியாமல் அதிகமாக நீர் அருந்துவோம். அப்போது அது குளிர்ந்த நீரா... சாதாரண நீரா... சுடுநீரா என்றெல்லாம் பார்க்கத் தேவையில்லை; எந்த நீராக இருந்தாலும், தாராளமாக அருந்தலாம். தொண்டைக்குக் கீழே சென்றதும் நம் உடலின் வெப்பநிலைக்கு ஏற்ப அது மாறிவிடும். ஆகவே `ஐஸ் வாட்டரைக் குடிக்கலாமா?' என்று கேட்டால், `தாராளமாகக் குடிக்கலாம்' என்றே சொல்லலாம். அதனால் பெரிதாக எந்தப் பிரச்னையும் ஏற்பட்டு விடாது என்றே அலோபதி மருத்துவம் சொல்கிறது.

வெயிலில் வியர்க்க விறுவிறுக்க அலைந்து திரிந்து, வீடு திரும்பும் நம்மில் பலர் ஐஸ் வாட்டர் அருந்துவதையே வழக்கமாகக்கொண்டிருக்கிறோம். ஃப்ரிட்ஜிலிருந்து அப்படியே எடுத்துக் குடிப்பவர்களும் இருக்கிறார்கள். இதனால் உடல்நிலையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும், அதன் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவோம். காரணம், நம் உடல்நிலைக்குத் தகுந்தவாறு அது மாற்றப்பட்டுவிடும். எனவே, ஐஸ் வாட்டர் குடிப்பது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், ஐஸ்க்ரீம், செயற்கைக் குளிர்பானங்கள் வேண்டுமானால் சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.




நம் நாட்டில் விற்கப்படும் ஐஸ்க்ரீம்களுக்கு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முறையான சான்றிதழ்கள் பெறப்படுவதில்லை. காரணம், அவர்களால் அந்த அளவுக்குத் தரமான, முறையான பொருள்களைக் கொடுக்க முடிவதில்லை. அதனால் ஐஸ்க்ரீம்களால் சிலருக்கு பாதிப்பு ஏற்படலாம். ஐஸ்க்ரீம் சாப்பிடும் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லிவிட முடியாது. பல்சொத்தை, அலர்ஜி, தொண்டையில் பிரச்னை உள்ளவர்கள் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் அது பிரச்னையை அதிகரித்து, தொல்லையை ஏற்படுத்தலாம்.ஐஸ் வாட்டர் குடிப்பதால் பிரச்னை வராது. அதேபோல குளிர்ந்த நீரில் குளிப்பதால் பிரச்னை வராது என்பதைவிட, பலன்களே அதிகம் கிடைக்கின்றன. குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது விழிப்புஉணர்வை அதிகரிக்கும். சுவாசம் நிதானமாக இருப்பதால், சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். மன உளைச்சல், மனஅழுத்தத்தை உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு குறையும். உண்ணும் உணவு எளிதாகச் செரிமானமாகி நச்சுத்தன்மைகளை வெளியேறச் செய்யும்.சருமத்தை இறுகச் செய்து, வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவும். கோடைக்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

குளிர்ந்த நீரை அருந்துவதாலோ, குளிர்ந்த உணவுகளை உண்பதாலோ சளிக்குக் காரணமான வைரஸ் கிருமிகள் உருவாகாது. குளிர்ந்த நீர் அல்லது உணவால் அலர்ஜி இருந்தால் மட்டுமே ஒருவருக்குப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மருத்துவக் காரணங்களின்படி ஐஸ் வாட்டர் குடிப்பதால் பிரச்னைகள் இல்லை. இன்றைய சுற்றுச்சூழல் மாசு நீரையும் விட்டுவைக்கவில்லை. சுகாதாரமில்லாத நீரே பெரும்பாலும் கிடைக்கிறது. அந்த நீர் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டால் இன்னும் சுத்தமில்லாமல்தான் போகும். எனவே, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுதான் உடல்நலத்துக்கு சிறந்தது.'' என்கிறார் மருத்துவர் சுந்தரராமன்.

Dailyhunt

PENSIONERS INFORMATION

Education 

At least 4 students kill themselves, hours after Inter results announced in Telangana

 
According to media reports, the cases were reported from Kukatpally, Vanasthalipuram, Medipally and Ushodaya Nagar.

TNM Staff 

 
Saturday, April 14, 2018 - 08:36

At least four cases of student suicides were reported across Hyderabad on Friday as results of the Intermediate exams were announced by the Telangana government.

According to media reports, the cases were reported from Kukatpally, Vanasthalipuram, Medipally and Ushodaya Nagar.

According to media reports, in Moosapet near Kukatpally, a first year student of MNR Junior college was found hanging from the ceiling after he failed his exam. He was declared brought dead when rushed to the hospital.

In another incident at Subhadranagar under the jurisdiction of the Vanasthalipuram police, a 17-year-old girl committed suicide despite scoring 325 out of 440 marks, as she failed to score as much as she expected, the police said.

The girl was reported to be studying in Sri Chaitanya Junior College in Dilsukhnagar and took the extreme step when her parents were away from home.

The third incident took place at Ushodaya Nagar under Jagadgirigutta police limits, when another 17-year-old girl studying in Sri Gayathri Junior College, jumped from the third floor of her apartment. She was a first-year student.

Another first-year student, aged 16, also killed herself on Friday by hanging from her ceiling fan at her residence in Medipally, after failing to pass some subjects.

Meanwhile, in another tragic incident, 18-year-old Neerav Marshu, a second-year Intermediate student of St. Francis Xavier Junior College and a resident of Kacheguda, jumped from the fifth floor of his building after he feared that he would fail his exams.

However, he was found to have passed when the results were declared.

The results of the Intermedia examinations were announced by Telangana Deputy Chief Minister and Education Minister Kadiam Srihari on Friday, who said that girls outshone boys.

The pass percentage of Intermediate first year and second year was 63.73% and 67.06% respectively.

The pass percentage of Intermediate first year girls and boys was 68.85% and 56.36% respectively, while that of second year girls and boys was 72.70% and 60.99% respectively.

NEWS TODAY 27.06.2026