Thursday, April 26, 2018

நீட்' தேர்வில் வெற்றி பெற்றும் தவிக்கும் மேற்படிப்பு மாணவர்கள்

Added : ஏப் 26, 2018 04:50

திண்டுக்கல்: 'நீட்' தேர்வில் முன்னிலை பெற்றும் மாநில அரசின் கவுன்சிலிங் தாமதத்தால் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.முதுநிலை பட்ட மேற்படிப்பில் கிராமப்புறத்தில் பணியாற்றிய டாக்டர்களுக்கான ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில், மருத்துவ கவுன்சில் விதிமுறையின்படியே நடத்த வேண்டும்' என தீர்ப்பளித்துள்ளது. இதே போன்று தொலைதுாரத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு' தனி ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்து உத்தரவிட்டது. இது அரசுக்கு பின்னடைவாக அமைந்தது. இதில் மேல் முறையீடு செய்ய தமிழக சுகாதாரத்துறை உயரதிகாரிகள் முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசித்து வருகின்றனர். இதனால் மாநில பட்ட மேற்படிப்பு கவுன்சிலிங் தாமதமாகி வருகிறது.இதற்கிடையே 'நீட்' தேர்வில் பங்கேற்று, தரவரிசையில் முன்னிலை பெற்ற தமிழக டாக்டர்கள், பட்ட மேற்படிப்புக்கு அகில இந்திய கவுன்சிலிங் மூலம் வேறு மாநிலங்களில் கிடைத்த படிப்புகளில் அனுமதி பெற்றுள்ளனர். மாநில அரசு கவுன்சிலிங் நடத்தினால் இங்கு, விரும்பிய பிரிவில் 'சீட்' பெற வாய்ப்புள்ளது. அதற்காக கிடைத்த இடங்களில் சேராமல் காத்திருக்கின்றனர். ஆனால் மேல்முறையீடு சிந்தனையால் கவுன்சிலிங் நடத்தாமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில கவுன்சிலிங் நடத்தாவிட்டால், கிடைத்த வேறு மாநில வாய்ப்பையும் இழக்க நேரிடும் என அந்த மாணவர்கள் குமுறுகின்றனர்.
சித்ரா பவுர்ணமிக்கு தி.மலை : வாராந்திர ரயில்கள் தயார்

Added : ஏப் 26, 2018 04:02

திருவண்ணாமலை: 'சித்ரா பவுர்ணமி தினத்தன்று, திருவண்ணாமலை வழியாக, கடந்து செல்லும் வாராந்திர ரயில்களை, பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 சித்ரா பவுர்ணமியன்று, 29ல், காலை, 6:58 மணிக்கு துவங்கி, 30 காலை, 6:52 வரை, பவுர்ணமி திதி உள்ளது. இந்த நேரத்தில், 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கிரிவலம் செல்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலை வழியாக செல்லும் வாராந்திர ரயில்களை பயன்படுத்தி கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதன்படி, தாதர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில்; ராமேஸ்வரம் - திருப்பதி; பாமணி எக்ஸ்பிரஸ் ரயில்; புதுச்சேரி - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.'

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியன்று, வி.ஐ.பி., கடித தரிசனத்துக்கு, அனுமதி இல்லை' என, கோவில் நிர்வாகம் அறிவித்துஉள்ளது.சித்ரா பவுர்ணமி திதி, வரும், 29 காலை, 6:58 மணி முதல், 30 காலை, 6:52 மணி வரையுள்ளது. வார விடுமுறை நாளான அன்று, பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.வரும், 29 மற்றும், 30ல், அருணாசலேஸ்வரர் கோவிலில், அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கு, சிறப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும், 29 அன்று, இரவு நடை சாத்தப்படாமல், முழுவதும் திறந்திருக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நாளை திருக்கல்யாணம் : மதுரை விழாக்கோலம்

Added : ஏப் 26, 2018 04:03

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், முத்திரை பதிக்கும் நிகழ்வாக மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், நாளை காலை, 9:05 மணிக்கு மேல், 9:29 மணிக்குள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு மதுரை விழாக்கோலம் பூண்டது.மீனாட்சி அம்மனுக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. மீனாட்சி அம்மன் திக்கு விஜயம் இன்று நடக்கிறது.

200 டன், 'ஏசி' : மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் நாளை காலை, 9:05 மணிக்கு மேல், 9:29 மணிக்குள் நடக்கிறது. இதற்காக மணமேடை வண்ண மலர்கள், வெட்டி வேர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. 200 டன், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணம், எல்.இ.டி., அகண்ட திரை களில் கோவிலுக்குள், வெளியே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். வரும், 28 காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு, நீர் இருப்பு குறைவாக இருந்ததால் திறக்கப்படவில்லை.
நாளை நீர் திறப்பு : சில நாட்களாக, பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு நீர் வரத்து தொடர்கிறது. இதனால், அணை நீர் மட்டம் நேற்று, 37.96 அடியாக உயர்ந்தது.வரும், 30ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, வைகை அணையில் இருந்து, நாளை காலை, 6:00 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது, என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
முதல்வர் இன்று சேலம் பயணம்

Added : ஏப் 26, 2018 03:48

சென்னை: முதல்வர் பழனிசாமி, இன்று மாலை, சென்னையில் இருந்து விமானத்தில், சேலம் செல்கிறார். நாளை, திருச்சியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். நாளை மறுதினம், சேலத்தில் இருந்து, காரில் திருவாரூர் செல்கிறார். அங்கு, இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.பொதுக்கூட்டம் முடிந்ததும், மீண்டும் சேலம் திரும்புகிறார். ஏப்., 30ல், சென்னை திரும்புகிறார். மே, 1 அன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும், மே தினக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டம், மே, 2ல், டில்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, முதல்வர் டில்லி செல்வது, இன்னமும் முடிவாகவில்லை.
தலையங்கம்

‘பாலியல் பலாத்கார வழக்கு’ புலன்விசாரணை




இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக சிறுகுழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருவது எல்லோருடைய மனதையும் துடிதுடிக்க வைக்கிறது.

ஏப்ரல் 26 2018, 03:00 AM

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக சிறுகுழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருவது எல்லோருடைய மனதையும் துடிதுடிக்க வைக்கிறது. கதுவா சம்பவம் வெளிவந்த உடனேயே மத்திய மந்திரி மேனகா காந்தி, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ஒரு வரைவு மசோதாவை தன் அமைச்சகம் தயாரித்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னார். அரசு எந்திரம் நினைத்தால் எவ்வளவு வேகமாக சுழலமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வகையில் ஒரு அவசரசட்டம் கொண்டுவருவது குறித்து கடந்த சனிக்கிழமை மத்திய அமைச்சரவை முடிவு செய்து ஒப்புதலும் அளித்தது. அடுத்த நாளே இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுத்து உடனடியாக அமலுக்கும் வந்துவிட்டது.


இந்த சட்டத்தின் கீழ் 12 வயதிற்கும் குறைவான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அல்லது ஆயுள் முழுவதும் ஜெயில் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பலர் கூட்டாக சேர்ந்து 12 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால், ஆயுட்காலம் முழுவதும் தண்டனை அல்லது தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வழக்குகளில் புலன்விசாரணை 2 மாதங்களுக்குள் முடிவடையவேண்டும். நீதிமன்ற விசாரணை 2 மாதங்களுக்குள் முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் இதுதொடர்பான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை அளிக்கும் பல அம்சங்கள் இந்த அவசர சட்டத்தில் கூறப்பட்டாலும், மரண தண்டனை மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுத்துவிடுமா? என்பதில் எல்லோருக்கும் சற்று மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. 2012 டிசம்பர் மாதத்தில் நடந்த நிர்பயா கற்பழிப்பு வழக்கில் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா தலைமையிலான கமி‌ஷன், ‘கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை என்பது ஏற்கத்தக்கதல்ல’ என்று கூறியுள்ளது. உச்சநீதிமன்ற வக்கீல் ரவிகாந்த், ‘கற்பழிப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வெளிநாடுகளில், கற்பழிப்புக்கு பிறகு கொலை செய்யும் சம்பவங்கள் நடக்கின்றன’ என்று அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் சட்டம் தெரிந்த ஒரு வக்கீலே கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஓடும் ரெயிலில் 9 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.


நாடு முழுவதிலும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகே பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. பொதுவாக கற்பழிப்பு வழக்குகளில் புலன்விசாரணை செய்து தண்டனை வாங்கிக்கொடுத்த வழக்குகளின் எண்ணிக்கை 25–லிருந்து 35 சதவீதமும், சிறுகுழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்குகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான வழக்குகளில்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புலன்விசாரணை உரியமுறையில் நடத்துவதற்கு போலீசாருக்கு பயிற்சி அளிக்கவேண்டும். இதுபோன்ற வழக்குகளை நன்கு திறமைமிக்க பெண் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுப்பது சாலச்சிறந்ததாகும். இந்த அவசர சட்டத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களைப் பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மொத்தத்தில், தண்டனை வழங்க சட்டம் பிறப்பித்தால் மட்டும் போதாது. அதை வாங்கிக்கொடுக்கும் வகையில் போலீசாரின் புலன்விசாரணையும், நீதிமன்றத்தில் வாதாடும் அரசு வழக்கறிஞர்களின் திறமையிலும்தான் இருக்கிறது.


Wednesday, April 25, 2018

Video shows BU dept head taking money

Says ‘A Friend Was Returning Owed Money’

Vishnu.Swaroop@timesgroup.com

Coimbatore: Corruption charges and the arrest of former vice-chancellor of Bharathiar University A Ganapathi still fresh, another controversy erupted on Monday, this time in the form of a video. The clip that surfaced on Monday showed the head of the Tamil department D Gnanasekaran receiving money from a person, allegedly for a posting in the university.

In the video, Gnanasekaran is seen entering his residence, where people are waiting to meet him. He tells them he had come back after meeting the VC, but does not specify the VC’s name. Later, he is seen demanding money from a person who is not seen in the video, but purportedly a job aspirant. He then receives cash from the person.

The state higher education department has decided to send the video to the police department and probe its authenticity as well as the allegations. “We will send the video to the Directorate of Vigilance and Anti–Corruption for an inquiry,’’ higher education secretary Sunil Paliwal told TOI.

“They will conduct an interview, but there will be no selection list,” Gnanasekaran had said. He is also seen asking the aspirant for ‘payment’ and later receiving cash. He tells the aspirant that he will hand over the ‘payment’ to the VC.

However, when contacted, Gnanasekaran denied the allegations. “The voice in the video doesn’t seem to be mine. The video seems to have been taken around five years ago, as the track suit I’m wearing in the video was used by me back then. The situation might also have been an instance where a friend who had borrowed money from me had returned it. Also, I used to help friends and students by giving referrals, the video might also have been taken in such a situation,” said Gnanasekaran. He said he became the head of the department only in September 2017. “I was not the head of the department when the appointments were made during Ganapathi’s tenure,” he said. “I had contested for the post of the university's vice-chancellor last time. My name had also surfaced in the list of VC candidates for Thiruvalluvar University. The video seems to have been taken out of context by someone who wanted to tarnish my reputation,” he said. He added that he had explained his position to the university registrar and members of the convener committee. Gnanasekaran, however, said he could not recall the “friend” from whom he was seen receiving the money.

When contacted, registrar in-charge of the university B Vanitha said the university officials had come to know about the allegation only when the video was telecast in a Tamil news channel.


FRESH SCANDAL: The clip that surfaced on Monday showed the head of the Tamil department D Gnanasekaran receiving money from a person, allegedly for a posting in the university
TN to take help of pvt firm to improve varsity rankings

State Govt Signs MoU With iCARE

TIMES NEWS NETWORK  25.04.2018

Chennai: To help improve areas of concern in the academic functioning of universities in the state, the Tamil Nadu higher education council on Tuesday signed an MoU with, Indian Centre for Academic Rankings and Excellence (iCARE).

The private firm will work for free and will also analyse different departments to identify its weaknesses and address them across 13 universities in the state. This would also automatically help improve the overall rankings in the National Institutional Ranking Framework (NIRF), said officials.

Higher education secretary Sunil Paliwal said institutions of Tamil Nadu were faring well in the NIRF rankings. Seven universities including Anna University, Bharathiar University, University of Madras, Madhurai Kamraj University, Bharathidasan and Periyar universities are among the top 100 institutions. With this partnership, the government hopes that the analysis undertaken by iCARE would help propel all its universities to higher positions on the ranking list.

“There are five broad parameters and 18 sub-parameters based on which performance of universities are measured. There will be a department wise analysis carried out by the firm. Each university’s authorities may be measuring the performance of the institution through his or her understanding. A more data-based analysis will help identify strengths and weaknesses and further enhance their academic performance,” said Paliwal.



AIM FOR TOP RANKS: (From right to left) Chief minister Edappadi K Palaniswami, higher education minister K P Anbazhagan, higher education secretary Sunil Paliwal and vice president of iCARE Karthick Sridhar

NEWS TODAY 30.06.2026