Tuesday, February 5, 2019

இயற்கை உபாதைக்காக பஸ்சிலிருந்து குதித்த பெண் : பஸ்சை நிறுத்தாத டிரைவர், கண்டக்டர் இடம்மாற்றம்

Added : பிப் 04, 2019 22:57


ஸ்ரீவில்லிபுத்துார்: தேனியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் வந்த அரசு பஸ்சில் பயணித்த பெண் இயற்கை உபாதைக்காக பஸ்சை நிறுத்த கூறியும் டிரைவர் நிறுத்தாததால் ஓடும் பஸ்சிலிருந்து குதித்ததில் காயமடைந்தார். டிரைவர்,கண்டக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் இடையன்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை 30. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாண்டியம்மாள் 27. நேற்று முன்தினம் தேனிக்கு சென்றுவிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் அரசு பஸ்சில் கணவர் மற்றும் மகனுடன் ஏறினார். வழியில் பாண்டியம்மாளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மாலை 6:40 மணிக்கு பஸ் டி.கல்லுபட்டியை கடந்தபோது கணவர் செல்லத்துரை, டிரைவர் முருகபூபதி, கண்டக்டர் கோவிந்தராஜூவிடம் பஸ்சை நிறுத்தக்கோரினார். பஸ் நிறுத்தப்படவில்லை. அழகாபுரி செக்போஸ்ட் அருகே பஸ் வேகம் குறைந்தபோது, வலிதாங்கமுடியாத பாண்டியம்மாள் பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டார். அப்போது பஸ் வேகம் எடுத்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாண்டியம்மாளின் புகாரில் டிரைவர் முருகபூபதி, கண்டக்டர் கோவிந்தராஜ் மீது நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விருதுநகர் அரசு போக்குவரத்துகழக பொதுமேலாளர் மகேந்திரன் கூறுகையில், ''பயணியின் நலன் காக்காத டிரைவர், கண்டக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

வானில், 'பறந்த' தருணம் : மகிழ்ச்சியில் முதியோர்

Added : பிப் 04, 2019 21:53


திருப்பூர்: விமானத்தில் பறந்து, சுற்றுலா சென்ற முதியோர், மகிழ்ச்சியில் உள்ளனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, தேவராயன்பாளையம் இளைஞர்கள் சிலர், கிராமத்தைச் சேர்ந்த, 120 முதியோரை தேர்வு செய்து, 2ம் தேதி, கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து சென்றனர். 100 வயது நிரம்பிய குப்பம்மாள், 'விமானத்தில் சென்றது, என் வாழ்நாள் சாதனை' என, மகிழ்ச்சி தெரிவித்தார்.

நேற்று, ஊர் திரும்பிய முதியோர் கூறுகையில், 'விமானத்தில் பறந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெ., கருணாநிதி நினைவிடங்களை பார்த்தோம். காஞ்சிபுரத்தில் தங்கி, திருவண்ணாமலை, வேலுார் போன்ற ஊர்களில், கோவில்கள், பூங்காக்களுக்கு சென்றோம்' என்றனர்.

பயணத்தை ஏற்பாடு செய்த ரவிகுமார் கூறியதாவது:பயண திட்டத்துக்கு, பெரியவர்களின் வீட்டில் அனுமதி பெற்று, மருத்துவ பரிசோதனை செய்து புறப்பட்டோம். இறைவனின் கருணையால், அனைத்தும் சிறப்பாக நடந்தது. பயணத்துக்கு உதவியவர்களை மறக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
மெட்ராச சுத்திப்பாக்க போறோம்' : குதூகலத்துடன் முதியோர் பயணம்

Added : பிப் 03, 2019 01:02 |




அவிநாசி: அவிநாசி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த, 115 முதியோர்கள், இரு விமானங்களில், நேற்று சென்னை சுற்றுலா சென்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள, தேவராயம் பாளையத்தைச் சேர்ந்த நண்பர்கள் இணைந்து, இப்பகுதி முதியோர்களை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலுார் உள்ளிட்ட இடங்களுக்கு, சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்தனர்.பட்டியல் தயாரிக்கப்பட்டு, 60 - 100 வயதுள்ள முதியோர்கள் நேற்று புறப்பட்டனர். மதியம், 12:00 மணிக்கு, 30 பேரும், பிற்பகல், 3:00 மணிக்கு, 85 பேரும், கோவை விமான நிலையத்தில் இருந்து, சென்னை புறப்பட்டனர். பாதுகாப்புக்காக, இளைஞர்களும் உடன் சென்றனர்.

முதியோர் சிலர் கூறுகையில், 'விமானத்தில் செல்வோம் என, நினைத்து பார்க்கவே இல்லை; இன்று நிஜமாகியுள்ளது. ஊரை தாண்டி சென்று வர முடியாத எங்களை, செலவில்லாமல், விமானத்தில் அழைத்துச் சென்று, பல ஊர்களையும், கோவில்களையும் சுற்றிக் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றனர்.

விமானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆந்தை

Updated : பிப் 05, 2019 04:12 | Added : பிப் 05, 2019 04:10




மும்பை: மும்பையில் நின்றிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்குள் ஆந்தை இருந்தது கண்டறியப்பட்டது. 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர்- லண்டன் செல்லும் ஜெர் ஏர்வேஸ் போயிங் ரக விமானத்தில் நேற்று விமான ஓட்டுனர் இருப்பிடமான காக்பிட் என்ற இடத்தில் ஆந்தை இருப்பதை விமான பணியாளர்கள் கண்டறிந்தனர்.





தகவலறிந்த சக ஊழியர்கள் ஆந்தையை பிடித்து தீயணைப்புத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.சிங்கப்பூர்-லண்டன் இடையே 14 மணி நேரம் பறந்து செல்லக்கூடியா போயிங் ரக விமானத்திற்குள் ஆந்தை எப்படி புகுந்தது எங்கிருந்து வந்தது குறித்த விவரம் வெளியாகவில்லை.


பத்மஸ்ரீ விருதுபெற்ற டீக்கடைக்காரர்



‘‘54 ஆண்டுகளாக, நான் சாலையோர டீ விற்பனையாளராக இருந்தேன். இன்று பத்மஸ்ரீ டீ விற்பனையாளராக அடையாளப்படுத்தப்படுகிறேன்’’ என்று பெருமிதம் கொள்கிறார், பிரகாஷ் ராவ்.

பதிவு: பிப்ரவரி 03, 2019 16:26 PM

‘‘54 ஆண்டுகளாக, நான் சாலையோர டீ விற்பனையாளராக இருந்தேன். இன்று பத்மஸ்ரீ டீ விற்பனையாளராக அடையாளப்படுத்தப்படுகிறேன்’’ என்று பெருமிதம் கொள்கிறார், பிரகாஷ் ராவ். 61 வயதாகும் இவர் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர். சமீபத்தில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களுள் பிரகாஷ் ராவும் ஒருவர். தான் விற்பனை செய்யும் ஒவ்வொரு கப் டீயிலும் பாதி தொகையை குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தை களின் கல்விக்காக செலவிட்டுக்கொண்டிருக் கிறார். இதற்காக பள்ளிக்கூடம் ஒன்றையும் தொடங்கி நிர்வகித்து வருகிறார். இவரது பள்ளியில் படிக்கும் ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி மட்டுமின்றி கல்வி சார்ந்த உபகரணங்கள், சீருடைகள், காலணிகள், காலை வேளையில் பால், மதிய உணவு போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.

2000-ம் ஆண்டு ‘ஆஷா ஓ ஆஷ்வசனா’ என்ற பெயரில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் பள்ளியை தொடங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் நான்கு பிள்ளைகள்தான் சேர்ந்திருக்கிறார்கள். இன்று 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பிரகாஷ் ராவ் 10-ம் வகுப்பு வரை படித்தவர். படிக்கும்போது 6 வயதிலேயே தந்தை நடத்திவந்த டீ கடையில் அவருக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் டீக்கடையை நிர்வகிக்க தொடங்கி இருக்கிறார். டீக்கடை வருமானத்தில் பாதியை கல்விக்காக செலவிடுவதற்கு அவர் படிக்க முடியாமல் போனதும், குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தைகள் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு பணி அமர்த்தப்படுவதும் காரணமாக இருந்திருக்கிறது. அதுபற்றி பிரகாஷ் ராவ் சொல்கிறார்.

‘‘நான் குடிசைப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன். அங்கு வசிக்கும் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வருமானம் ஈட்டித்தருபவர்களாகவே பார்க்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் அவர்களை சேர்ப்பதற்கு பதிலாக கூலி தொழிலாளர்களாகவும், வீட்டு வேலைக்காரர்களாகவும் ஆக்கிவிடுகிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மதுபானம் வாங்கி குடிப்பதற்கே பெரும்பாலான தந்தைகள் செலவிடுகிறார்கள்.

மது போதையில் வீட்டில் தகராறு செய்வதும் வாடிக்கையாக மாறிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது என் மனதை ஆழமாக பாதித்தது. நான் படிக்கும்போது சிறந்த மாணவனாக இருந்தேன். மேலும் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான கல்வி வாய்ப்புகள் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. அதுபோன்ற நிலைமை குடிசை பகுதியில் வசிக்கும் குழந்தை களுக்கும் தொடர்வதை நான் விரும்பவில்லை. ஒவ்வொரு கப் டீ விற்பதிலும் கிடைக்கும் பணத்தை குடிசை பகுதி குழந்தைகளின் சுகாதாரத்திற்கும், கல்விக்கும் செலவிட முடிவு செய்தேன். அதுபற்றி அங்குள்ள மக்களிடம் பேசியபோது, ‘என் மகள் வீட்டு வேலைக்கு சென்று மாதம் 700 ரூபாய் சம்பாதிக்கிறாள். அவளை படிக்க வைத்தால் படிப்பு எங்களுக்கு சோறு போடுமா?’ என்று கேட்டார்கள். இன்று அதே பெற்றோர் என் பள்ளிக்கூடத்தில் படித்த தங்கள் மகனும், மகளும் கல்லூரிக்கு படிக்க செல்வதை பார்த்து பெருமைப்படுகிறார்கள்’’ என்கிறார்.

பிரகாஷ் ராவ் படிக்க வைக்கும் ஏழைக்குழந்தைகளை பிரதமர் நரேந்திரமோடி நேரில் சந்தித்திருக்கிறார், அவரை பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியிலும் பேசி இருக்கிறார்.
தலையங்கம்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளை மாணவர்கள் நாடுவதற்கு என்ன காரணம்?



அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதை உறுதிசெய்யவேண்டும் என்ற சீரியநோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருகிறது.

பிப்ரவரி 05 2019, 04:29

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் பள்ளிக்கூட கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் தொகை உயர்ந்துகொண்டே போகிறது. 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளிக்கூட கல்வித்துறைக்காக மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்றாலும், தமிழக அரசு நடத்தும் அரசு பள்ளிக்கூடங்களில் 3,100 பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருக்கிறது. 812 பள்ளிக்கூடங்களில் 15 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. 2014-15-ல் அரசு பள்ளிக்கூடங்களிலுள்ள மாணவர்களின் சேர்க்கை 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 ஆக இருந்தநிலையில், 2018-19-ல் 46 லட்சத்து 60 ஆயிரத்து 965 ஆக குறைந்துள்ளது.

தற்போது ஏறத்தாழ 59 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இது ஒரு அதிர்ச்சி என்றால், அடுத்த அதிர்ச்சி 10-ம் வகுப்புவரை மாநில கல்வித்திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்கள், 11-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் சேருவதற்குத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்குகாரணம், ‘நீட்’ தேர்வுதான். ‘நீட்’ தேர்வு அமலுக்கு முன்பு 10-ம் வகுப்புவரை சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், பிளஸ்-2-வில் அதிக மார்க் பெறவேண்டும் என்ற எண்ணத்தில், 11-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை விட்டுவிட்டு, மாநில கல்வித்திட்டத்தின் கீழ் நடக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்வார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறவேண்டுமென்றால், மாநில கல்வித்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பில் படித்தால் போதாது. சி.பி.எஸ்.இ. பள்ளியில் சேர்ந்தால்தான் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள முடியும் என்ற மனோபாவம் மாணவர்களிடம் வந்துவிட்டது. இதன்காரணமாக, இந்த ஆண்டு 61 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்புவரை மாநில கல்வித்திட்டத்தில் படித்துவிட்டு, சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் போய் சேர்ந்திருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், பல பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1 வகுப்பில் பயோலஜி பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. வணிகவியல் பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம், மாணவர்கள் மத்தியில் மருத்துவம் போன்ற உயர்கல்வியில் சேர வேண்டுமென்றால், தனியாக ‘கோச்சிங்’ வகுப்பில் சேர தங்களால் முடியுமா?, அதற்கு நிறைய பணம் செலவாகும். அந்தளவு நமக்கு பணவசதி இல்லை என்ற தயக்கத்தால், வணிகவியல் பிரிவில் படித்து கலைக்கல்லூரியில் சேர்ந்தால்போதும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறார்கள். இந்தநிலை தொடர்வது நல்லதல்ல. இதற்கு காரணம், அரசு பள்ளிக்கூடங்களில் கல்வித்தகுதி சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு இணையாக இல்லை என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், அரசு பள்ளிக்கூடங்களைவிட, தனியார் பள்ளிக்கூடங்களில்தான் கல்வித்தரம் நன்றாக இருக்கிறது என்ற எண்ணம் பரவலாக இருப்பதால்தான், அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் சேர்க்கை வீதமும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலைமையை தவிர்க்க வேண்டுமென்றால், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்ற சீர்த்திருத்தங்களை எல்லாம் செய்வதில் முனைப்பு காட்டுவதுபோல, கல்வித்தரத்தை உயர்த்துவதில் அதிக முனைப்பு காட்டவேண்டும்.
Asked For PM's Degree, Delhi University Says RTI Reduced To Joke

The submission was made before Justice AJ Bhambhani who fixed the matter for further hearing on February 4, when other similar petitions were also listed.

 Updated: January 31, 2019 20:19 IST



Solicitor General Tushar Mehta appeared for the Delhi University in Delhi High Court. (File)

NEW DELHI:

The Delhi University on Thursday contended before the Delhi High Court that the RTI Act has been reduced to a "joke" with queries seeking records of all students who had passed BA examination in 1978, including that of Prime Minister Narendra Modi.

The submission was made before Justice AJ Bhambhani who fixed the matter for further hearing on February 4, when other similar petitions were also listed.

Solicitor General Tushar Mehta, appearing for DU, said, "The RTI Act has been reduced to a joke with such queries. Degrees of two public functionaries were sought. One is the honourable prime minister and the other is a minister."

Referring to some of the provisions of the Right To Information (RTI) Act, the law officer said personal information is never to be given unless there is some public interest.

"This (Act) cannot be used for some extraneous reasons," he said while giving an overview of the issue to the judge who was new to the matter.

He also said these degrees were already in the public domain at different forums and there was nothing to hide but "we should not reduce the Act to this level".

The court was hearing the DU's plea challenging a Central Information Commission (CIC) direction to allow inspection of the university''s records of all students who had passed BA examination in 1978.

The CIC had directed the DU to allow inspection of records related to all the students who had passed BA degree in 1978, the year in which, according to the university, Prime Minister Narendra Modi had also cleared the examination.

The CIC had rejected the contention of the central public information officer of the university that it was a third party personal information, saying it finds "neither merit, nor legality" in it.

The court had on January 23, 2017 put on hold the operation of the CIC order.

In the affidavit filed through central government standing counsel Arun Bhardwaj, the DU had earlier said the result of a student once declared is accessible only to that student and is "personal" to her or him.

The varsity had said that disclosure of exam results of all the students could lead to "public embarrassment" of some or may cause "disturbance" of his/her routine life.

It had said the information was held in a fiduciary capacity and was exempt from disclosure under the RTI Act.

It had also said that a separate mechanism is available for other institutions which want to verify the results or degrees of a student who has passed out from the DU.

NEWS TODAY 10.06.2026