Tuesday, February 5, 2019

இயற்கை உபாதைக்காக பஸ்சிலிருந்து குதித்த பெண் : பஸ்சை நிறுத்தாத டிரைவர், கண்டக்டர் இடம்மாற்றம்

Added : பிப் 04, 2019 22:57


ஸ்ரீவில்லிபுத்துார்: தேனியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்துார் வந்த அரசு பஸ்சில் பயணித்த பெண் இயற்கை உபாதைக்காக பஸ்சை நிறுத்த கூறியும் டிரைவர் நிறுத்தாததால் ஓடும் பஸ்சிலிருந்து குதித்ததில் காயமடைந்தார். டிரைவர்,கண்டக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்துார் இடையன்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை 30. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பாண்டியம்மாள் 27. நேற்று முன்தினம் தேனிக்கு சென்றுவிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் அரசு பஸ்சில் கணவர் மற்றும் மகனுடன் ஏறினார். வழியில் பாண்டியம்மாளுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மாலை 6:40 மணிக்கு பஸ் டி.கல்லுபட்டியை கடந்தபோது கணவர் செல்லத்துரை, டிரைவர் முருகபூபதி, கண்டக்டர் கோவிந்தராஜூவிடம் பஸ்சை நிறுத்தக்கோரினார். பஸ் நிறுத்தப்படவில்லை. அழகாபுரி செக்போஸ்ட் அருகே பஸ் வேகம் குறைந்தபோது, வலிதாங்கமுடியாத பாண்டியம்மாள் பஸ்சிலிருந்து இறங்க முற்பட்டார். அப்போது பஸ் வேகம் எடுத்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாண்டியம்மாளின் புகாரில் டிரைவர் முருகபூபதி, கண்டக்டர் கோவிந்தராஜ் மீது நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.விருதுநகர் அரசு போக்குவரத்துகழக பொதுமேலாளர் மகேந்திரன் கூறுகையில், ''பயணியின் நலன் காக்காத டிரைவர், கண்டக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024