Saturday, February 23, 2019


விருதுநகர், ராஜபாளையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Added : பிப் 23, 2019 01:01

விருதுநகர், விருதுநகர் சமூகநலத்துறை, ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் விருதுநகர் மாவட்ட பயனாளிகளுக்கு கடந்த மாதம் நிதி வழங்கப்பட்டது. 275 பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்க வில்லை. இந்த நிதி உதவி பெறுவதற்கு பயனாளிகளிடம் வட்டார விரிவாக்க அலுவலர், ஊர்வல அலுவலர்கள் குறிப்பிட்ட தொகை வசூலித்து அதிகாரிகளுக்கு வழங்குவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.பயனாளிகளிடம் வசூலித்த பணத்தை வட்டார விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள், உயர் அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக விருதுநகரில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு வந்தனர்.தகவல் அறிந்து நேற்று மாலை 4:30 மணிக்கு விருதுநகர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நிலம் எடுப்பு தனித் தாசில்தார் ராமநாதன் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 

அலுவலகத்தில் இருந்த இளநிலை உதவியாளரிடம் ரூ.9,480, 5 வட்டார விரிவாக்க அலுவர்களிடம் ரூ.19,590 என மொத்தம் ரூ.29,070 கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம் உள்பட ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொழிலாளர் துறைராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா முடங்கியார் ரோட்டில் தொழிலாளர்துறை உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு தொழிலாளர் நல உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சிவகங்கையை சேர்ந்த மாரிமுத்து. இவர் கடைகள், ஓட்டல்கள் வணிக நிறுவனங்களில் சென்று தராசுகளில் முத்திரையிடப்பட்டுள்ளதா, பொட்டலங்களில் காலாவதி தேதி உள்ளதா, குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்கின்றனரா என ஆய்வு செய்வார். வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்பதாக வியாபாரிகள் புகார் வந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு டி.எஸ்.பி. ரகுபதி தலைமையில் இன்ஸ்பெக்டர் விமலா உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அருப்புக்கோட்டை சிவில் சப்ளை தாசில்தார் ஷாஜகான் குழுவினர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ.48 ஆயிரம் பணம் கைப்பற்றினர். உதவி ஆய்வாளர் மற்றும் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர். மாவட்டத்தில் ஒரே நாளில் இரு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...