Saturday, February 23, 2019


பள்ளியில் ஆசிரியை கழுத்தறுத்து கொலை: ஒருதலை காதலால் விபரீதம்

Added : பிப் 23, 2019 00:48 |




வடலுார், திருமணத்திற்கு சம்மதிக்காத தனியார் பள்ளி ஆசிரியையை, வகுப்பறையில் கழுத்தை அறுத்து கொலை செய்தவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ரம்யா, 23, தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று காலை, 8:15 மணிக்கு, பள்ளிக்கு வந்தார். 

பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து,வகுப்பறைக்கு சென்று பணியை மேற்கொண்டார்.இந்நிலையில், ரம்யா வகுப்பறையில் மயங்கி கிடப்பதாக, பள்ளி துப்புரவு பணியாளர் சாந்தி தலைமையாசிரியரிடம் தெரிவித்தார். தலைமை ஆசிரியர் சென்று பார்த்த போது, ரம்யா இரண்டு கை விரல்கள் துண்டிக்கப்பட்டு, கழுத்தில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.ரம்யாவை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்தார்.

இது குறித்து, குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை நடத்திய போது கிடைத்ததாவது:ரம்யா, கடலுார், கே.என்.சி., கல்லுாரியில் எம்.எஸ்சி.,படித்த போது, தினமும் தனியார் பஸ்சில் சென்று வந்தார். 

விருத்தகிரிகுப்பத்தைச்சேர்ந்த கல்லுாரி மாணவர் ராஜசேகர், 24 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில், ராஜசேகர் ரம்யாவை ஒரு தலையாக காதலிக்க துவங்கினார். இதனால், ராஜசேகருடன் பேசுவதை, ரம்யாநிறுத்தினார்.இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு முன், ரம்யாவை திருமணம் செய்து கொடுக்குமாறு அவரது தந்தை சுப்ரமணியிடம், ராஜசேகரின் வீட்டார் பெண் கேட்டுள்ளனர். திருமணத்திற்கு, ரம்யாவின் தந்தை மறுத்து விட்டர்.குறிஞ்சிப்பாடி ரெட்டியார் காலனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த ரம்யாவை, தினமும் பின் தொடர்ந்து, ராஜசேகர் தொந்தரவு செய்துள்ளார். இதனால் பள்ளியில் இருந்து நின்ற ரம்யா, தந்தையிடம் சொல்லி ராஜசேகரை கண்டித்து, போன் எண்னை மாற்றியுள்ளார்.கடந்தஆறு மாதங்களாக ரம்யாவை பற்றிய தகவல் தெரியாமல் இருந்த ராஜசேகர், அவர், குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவில் உள்ள பள்ளியில் பணியாற்றுவதை கண்டறிந்து, ஒரு வாரமாக பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.நேற்று முன்தினம் ரம்யா போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி உள்ளார். இதை கண்டு கொள்ளத ரம்யா, நேற்று வழக்கமாக பள்ளிக்குவந்துள்ளார்.இதனால் கோபமடைந்த ராஜசேகர், பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் வகுப்பறைக்கு சென்று, கத்தியால் ரம்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து, பைக்கில் தப்பிச் சென்றார்.குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து ராஜசேகரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...