Tuesday, February 5, 2019


வானில், 'பறந்த' தருணம் : மகிழ்ச்சியில் முதியோர்

Added : பிப் 04, 2019 21:53


திருப்பூர்: விமானத்தில் பறந்து, சுற்றுலா சென்ற முதியோர், மகிழ்ச்சியில் உள்ளனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, தேவராயன்பாளையம் இளைஞர்கள் சிலர், கிராமத்தைச் சேர்ந்த, 120 முதியோரை தேர்வு செய்து, 2ம் தேதி, கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து சென்றனர். 100 வயது நிரம்பிய குப்பம்மாள், 'விமானத்தில் சென்றது, என் வாழ்நாள் சாதனை' என, மகிழ்ச்சி தெரிவித்தார்.

நேற்று, ஊர் திரும்பிய முதியோர் கூறுகையில், 'விமானத்தில் பறந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜெ., கருணாநிதி நினைவிடங்களை பார்த்தோம். காஞ்சிபுரத்தில் தங்கி, திருவண்ணாமலை, வேலுார் போன்ற ஊர்களில், கோவில்கள், பூங்காக்களுக்கு சென்றோம்' என்றனர்.

பயணத்தை ஏற்பாடு செய்த ரவிகுமார் கூறியதாவது:பயண திட்டத்துக்கு, பெரியவர்களின் வீட்டில் அனுமதி பெற்று, மருத்துவ பரிசோதனை செய்து புறப்பட்டோம். இறைவனின் கருணையால், அனைத்தும் சிறப்பாக நடந்தது. பயணத்துக்கு உதவியவர்களை மறக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024