Tuesday, February 5, 2019

தலைமை செயலக பணிக்கு போலி நியமன ஆணை : லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

Added : பிப் 05, 2019 00:42

சென்னை: தலைமை செயலகத்தில் வேலை என, போலி பணி நியமன ஆணை வழங்கி, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ள கும்பல் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.தலைமை செயலகத்தில், வேலை வாங்கி தருவதாகக் கூறிய ஒரு கும்பல், லட்சக்கணக்கில் பணம் பெற்று, பலருக்கு, போலி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளது. பணியில் சேர ஆர்வமுடன் தலைமை செயலகம் சென்றதும், தாங்கள் ஏமாற்றப்பட்டது, அவர்களுக்கு தெரிய வந்தது.சட்டசபை செயலகத்தில், சித்திரக்கனி என்பவர், உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கான ஆணையுடன், பணியில் சேர வந்துள்ளார். அவர் வைத்திருந்தது போலி நியமன ஆணை என, சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் செய்துள்ளனர்.அதேபோல, தொழில் துறை உட்பட, பல்வேறு துறைகளில், 20க்கும் மேற்பட்டோர், போலி நியமன ஆணையுடன் பணியில் சேர வந்துள்ளனர். ஒவ்வொருவரும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். உதவிப்பிரிவு அலுவலர் பணிக்கு, 4 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.இம்மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். உயர் நீதிமன்ற நீதிபதியின், உதவியாளர் மகன் ஒருவரும், பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இது குறித்து, சம்பந்தப்பட்ட நீதிபதி, தலைமை செயலரிடம் புகார் செய்துள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.09.2024