Monday, February 18, 2019

Unfair that disabled cannot practice MBBS, say experts to Nadda 

Our Bureau New Delhi | Updated on February 13, 2019 Published on February 13, 2019



Union Health Minister JP Nadda. File Photo

Union Health Ministry's revised regulations prohibiting those with certain disabilities from getting admitted to MBBS has attracted ire from activists and experts.

The revised regulations state that those with locomotor disabilities above 80 per cent are prohibited from getting admitted to MBBS, as it pronounces them “ineligible”.

The latest “Amendment Notification” of February 4, 2019 to modifying the Regulation on Graduate Medical Education, 1997 states these clauses.

Same is true with those with blood disorders. The notification also debars students with chronic neurological conditions with a disability of over 80 per cent. It further states that those with visual impairment and hearing impairment would be eligible only if their disability is brought down to less than 40 per cent with the aid of assistive devices.

In the new notification, dysgraphia – the inability to write coherently, has been excluded from Specific Learning Disabilities (SpLD). Experts find this intriguing. “The notification does admit that currently there is Quantification scale available to assess the severity of SpLD. We however, apprehend that this will be utilized to deny admission to students with Specific Learning Disorders,” said Muralidharan Vishwanath, General Secretary, National Platform for the Rights of the Disabled (NPRD).

Activists have urged Union Health Minister JP Nadda seeking revision of discriminatory regulations for admissions to MBBS.

“These amended regulations debarring certain categories of disabled persons from pursuing medicine is a clear violation of the provisions of the Rights of Persons with Disabilities Act, 2016 and the rules framed thereunder. It is also in contempt of the Supreme Court directions,” said Muralidharan.

The revision of regulations was based on what NPRD had deemed highly objectionable guidelines published by Medical Council of India last year.

“These guidelines were drafted without proper application of mind, oblivious of the best practices worldwide and divorced from the reality that advances in science and technology have become great enablers,” said Muralidharan.

“Permit me to quote, Stanley F. Wainapel who says, how many physicians who are not specialists in the medical care of people with disabilities would be aware that a paraplegic doctor can stand up in the operating room using a special device, that a physician whose vision precludes reading chart notes can easily access electronic medical records using screen-reading software, or that a medical student with a hearing impairment can do cardiac auscultation using an electronic stethoscope? These examples of existing technological accommodations emphasize the central role of technology in enhancing the functional potential of those with motor or sensory limitations.”

Noted Hemato-oncologist, Suresh Advani who was awarded the Padma Vibhushan is a living example of a wheel chair user with disability of above 80 per cent, stated the NPRD letter to Nadda

“Making such persons “ineligible” in fact militates against the suggestion made by your ministry that persons having a disability of above 80 per cent may be allowed subject to their functional competency being determined with the aid of assistive devices post their selection,” the letter further states.

NPRD has urged Nadda to direct the MCI to reframe guidelines that would act as an enabler for persons with disabilities to pursue a career in medicine rather than act as a deterrent.

“We also opine that department/institutions like Department for Empowerment of Persons with Disabilities, ICMR, DGHS, Directors of all National Institutes on Disabilities under Ministry of Social Justice & Empowerment as well as experts from other institutions who jointly framed disability assessment guidelines, also be involved in this process, as they are better equipped to deal with disability related issues,” states the letter.

Sunday, February 17, 2019


சி.ஆர்.பி.எஃப். என்றால் என்ன... அவர்களின் பணிகள் என்ன?

vikatan

எம்.குமரேசன்


இந்திய ராணுவத்தில் தரைப்படை, விமானப்படை, கடற்படை உள்ளன. இவை ராணுவ அமைச்சகத்துக்குக் கீழ் செயல்படுபவை. குடியரசுத் தலைவர் முப்படைக்கும் தலைவர். ராணுவத்தில் இருந்து சி.ஆர்.பி.எஃப் என்று அழைக்கப்படும் துணை ராணுவத்தினர் வேறுபடுகிறார்கள். சி.ஆர்.பி.எஃப். 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும். கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் இதில் பணி புரிகின்றனர். உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதுதான் இதன் முக்கிய பணி.



நக்ஸல்கள், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இவர்கள்தான். 1965-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் எல்லையையும் இவர்கள்தான் பாதுகாத்தனர். எல்லை பாதுகாப்புப் படை தனியாக உருவாக்கப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் வசம் பாகிஸ்தான் எல்லை ஒப்படைக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் 5 தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தியதும் இவர்கள்தான். ஐ.நா அமைதிப்படைக்கும் இந்தியா சார்பில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்தான் பெரும்பாலும் அனுப்பப்படுவார்கள். சி.ஆர்.பி.எஃப் போன்று நம் நாட்டில் பல பாதுகாப்பு அமைப்புகள் உள்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கி வருகின்றன. அவற்றைப் பார்ப்போம்.

அஸாம் ரைஃபில்ஸ் (AR)

இந்த அமைப்பு இந்தோ-திபெத், இந்தோ- மியான்மர் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1835-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பராமிலிட்டரி அமைப்பு இது.

எல்லை பாதுகாப்பு படை (BSF)

1965-ம் ஆண்டு பாகிஸ்தான் போருக்குப் பிறகு எல்லையைப் பாதுகாக்க தனி அமைப்பு உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்தது. இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் 2.4 லட்சம் பேர் பணி புரிகிறார்கள்.


மத்திய தொழிற்நிறுவனங்கள் பாதுகாப்புப் படை (CISF)



மத்திய அரசுக்குச் சொந்தமான தொழிற் நிறுவனங்களின் பாதுகாப்பை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. தற்போது, 300-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை இந்த அமைப்புதான் பாதுகாத்து வருகிறது. நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் தொழிற்சாலையும் இந்த அமைப்பின் வசம்தான் உள்ளது. இதில், 1,65,000 பேர் பணி புரிகிறார்கள்.

இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை (ITBP)

1962-ம் ஆண்டு இந்திய - சீன போருக்குப் பிறகு, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. எல்லையைக் காப்பது மட்டுமல்லாமல் போதை மருந்து கடத்தலைத் தடுப்பதும் இந்த அமைப்பின் முக்கிய பணி.

தேசியப் பாதுகாப்பு முகமை (NSG)

ஆபரேஷன் ப்ளு ஸ்டார் காரணமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, 1984-ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள் போன்றவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கறுப்புப் பூனை படையினர் இந்த அமைப்புக்குக் கீழ்தான் வருகிறார்கள். இதில் 8,000 பேர் பணி புரிகிறார்கள்.

சாஷத்ரா சீமா பால் (SSB)

இந்தோ - நேபாள, இந்தோ - பூடான் எல்லையில் இந்த அமைப்பு பாதுகாப்பில் ஈடுபடுகிறது. 2014-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் பெண்களும் தேர்வு செய்யப்பட்டு எல்லை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பு 1963-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்திய கடலோரக் காவல்படை (ICG)

எல்லையைப் பாதுகாப்பதுபோல கடல் எல்லையைப் பாதுகாப்பது இந்த அமைப்பின் பணி. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. Director General Indian Coast Guard இந்த அமைப்பின் தலைவர்.
கோஷமிட்ட மக்கள்; நெகிழ்ந்த சின்னத்தம்பி... பாசப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள்!


இரா. குருபிரசாத்


தி.விஜய்


அழிந்தும் வரும் காடுகள், ஆக்கிரமிக்கப்படும் யானை வழித்தடங்கள் என்று வனவிலங்குகளுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து வனத்துறைக்கே நன்கு தெரியும். ஆனாலும், வனவிலங்குகள் மீதே நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.


பரபரப்பான வாழ்க்கையில் சக மனிதர்களின் வலிகள், வேதனைகள் குறித்தே யாரும் கவலைப்படுவதில்லை. அப்படியிருக்கும் போது, வனத்தில் இருக்கும் வன விலங்குகள் பற்றியோ, அதன் வாழ்விடம் பற்றியோ யோசிக்க நமக்கு நேரமில்லை. இந்நிலையில், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்று அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறான் சின்னத்தம்பி யானை. தன் இனத்துக்குச் சூழப்பட்டுள்ள பிரச்னையை அனைத்துத் தரப்பிலும் பேச வைத்துவிட்டான்.



கோவையில் இருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானை, ஒரு வாரத்துக்குள் மீண்டும் வெளியில் வந்தான். ஜனவரி 31-ம் தேதி முதல், பிப்ரவரி 15-ம் தேதி வரை சின்னத்தம்பி சுமார் 100 கி.மீ-க்கு மேல் நடந்துவிட்டான். நூற்றுக்கணக்கான வனத்துறை ஊழியர்கள் இரவு பகலாக இவனுடன் ஓடிக் கொண்டிருந்தனர். சின்னத்தம்பியை காண ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணாடிப்புத்தூர் பகுதிக்குப் படையெடுத்தனர். சின்னத்தம்பி எப்போது தூங்குவான், எத்தனை மணிக்கு எழுந்திருப்பான் என்பது வனத்துறைக்கு மட்டுமல்ல, மக்களும் தெரிந்து வைத்திருந்தனர். அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டான் இவன்.

அங்கலக்குறிச்சி பகுதியில் இருந்து உடுமலைப்பேட்டை நோக்கி இவன் வந்தபோது பலரும் பதற்றமடைந்தனர். குழந்தையுடன் ஒரு பெண் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென எதிரில் வந்துவிட்டான். அந்தப் பெண் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க, ஆரவாரம் இல்லாமல் சின்னத்தம்பி அவர்களைக் கடந்து சென்றுவிட்டான். இரண்டு வாரங்களில் இப்படி எத்தனையோ நெகிழ்ச்சி சம்பவங்கள் அரங்கேறிவிட்டன.



யானை சேதப்படுத்திய விளை நிலத்துக்குச் சொந்தமானவர்கள் கூட, "எங்களுக்கான இழப்பீட்டை அரசு உடனடியாக தரவேண்டும். அந்த யானை ரொம்ப புத்திசாலி. அதனால் எங்களுக்கு வேறு எந்த சேதமும் இல்லை. நல்ல காட்டு பகுதியில் விட்டால் போதும்" என்று கூறினர். கண்ணாடிப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஓர் முதியவர், "சின்னத்தம்பியை நல்லா பார்த்துக்கோங்க சாமி" என்று வனத்துறை அதிகாரிகளிடம் கையெடுத்துக் கும்பிட்டார். 15 நாள்களாக உணவு, உறக்கம் எல்லாம் துறந்தாலும், சின்னத்தம்பியை தங்களது செல்லத்தம்பியாகவே பார்த்துக் கொண்டனர் வனத்துறையினர்.

சின்னத்தம்பியை பிடித்த கடைசி நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். ஐஸ் க்ரீம், பழங்கள், டீ, தின்பண்டங்கள் என்று ஊரே விழாக்கோலம் பூண்டது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சின்னத்தம்பிக்கு எந்த துன்புறுத்தலும் இல்லாமல் பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தது. இதனால், வனத்துறையினர் மிகுந்த கவனத்துடன் களமிறங்கினர். வனத்துறை மூத்த மருத்துவர் அசோகனின் அனுபவத்தால், யானைக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் வெற்றி கரமாக ஊசி போடப்பட்டது. கடந்த முறை பெரிய சர்ச்சையைக் கிளப்பிய ஜே.சி.பி-க்கு பதிலாக, கேரளாவில் இருந்து ஹைட்ராலிக் லாரி கொண்டு வரப்பட்டது. ஒரு பக்கம் மக்களைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு, மறுபக்கம் சின்னத்தம்பியை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு இரண்டையும் வனத்துறை ஊழியர்கள் பக்குவமாக சமாளித்தனர்.



காட்டு யானைகளில் இந்த சின்னத்தம்பி சிறந்தவன் என்று மருத்துவர் அசோகனும் இவனுக்கு சர்டிஃபிகேட் கொடுத்தார். அனுபவசாலியான கலீம் (கும்கி) இருந்தாலும் சின்னத்தம்பியை லாரியில் ஏற்றுவதற்கான பொறுப்பு சுயம்புவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரிய அளவுக்கு அனுபவம் இல்லாத சுயம்பு, இவனை லாரியில் ஏற்றுவதற்கான பெரிய பொறுப்பை வெற்றிகரமாக முடித்தது. கடைசியாக கண்ணாடிப்புத்தூர் பகுதியில் இருந்து லாரி கிளம்பும்போது அந்த மக்கள், "சின்னத்தம்பி"… "சின்னத்தம்பி..." என்று குரல் எழுப்ப, மயக்க நிலையில் இருந்த சின்னத்தம்பி தனது தும்பிக்கையை தூக்கிக் காட்டிவிட்டு விடைபெற்றான்.

நள்ளிரவு வரகளியாறு சென்றபோது, சின்னத்தம்பியை எப்படி கூண்டுக்குள் அடைப்பது என்று வனத்துறையினர் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். கும்கி கலீமுடன், மேலும் இரண்டு பெண் வளர்ப்பு யானைகள் நிறுத்தப்பட்டன. வனத்துறை ஊழியர்களும், கும்கிகளும் கயிறு கட்டி இழுக்கத் தொடங்கினர். ஆனால், சின்னத்தம்பி யானை அவர்களுக்குக் கஷ்டம் கொடுக்காமல் தானாகவே கூண்டுக்குள் சென்றுவிட்டான்.



விளை நிலங்களைச் சேதப்படுத்துகிறான். மனிதர்கள் வாழ்விடத்தில் வாழ்ந்து பழகிவிட்டான் என்பது சின்னத்தம்பி மீது கூறப்படும் புகார்கள். அழிந்தும் வரும் காடுகள், ஆக்கிரமிக்கப்படும் யானை வழித்தடங்கள் என்று வனவிலங்குகளுக்கு இருக்கும் நெருக்கடிகள் குறித்து வனத்துறைக்கே நன்கு தெரியும். ஆனாலும், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வனவிலங்குகள் மீதே தொடர் நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.

"தமிழகம் முழுவதும் 101 இடங்களில் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன" என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையே பேச வைத்தான் சின்னத்தம்பி. ஆனால், தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழ்நிலையில், சின்னத்தம்பி பிரச்னைக்கு தீர்வு கொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. ஒரு வேளை சின்னத்தம்பிக்கு வாக்களிக்கும் உரிமை இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்களோ என்னவோ?



வாழ்விடமும், வழித்தடமும் பாதிக்கப்பட்டதால் வெளியில் வந்த சின்னத்தம்பியை, பழக்க வழக்கம் மாறிவிட்டதாகக் கூறி கூண்டில் அடைத்துவிட்டோம். அதன் பழக்க வழக்கத்தை மாற்றிய மனிதர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறோம்?

கோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை பெரிய அளவில் தொடங்கப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 3ஜி இணைய சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் வருவாயை பெருக்க 4ஜி சேவையை வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் தொழிலாளர்கள் தரப்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவையை பெரிய அளவில் தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராகி வருவதாக தமிழ்நாடு தொலைதொடர்பு வட்டத்தின் தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது: பிஎஸ்என்எல் தமிழகத்தில் 4ஜி சேவையை தொடங்க தயாராகி வருகிறது. முதல்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய 2 நகரங்களில் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு 3ஜி சிம்மிற்கு பதிலாக, இலவசமாக 4ஜி சிம் வழங்கப்பட்டு வருகிறது. கணிசமான எண்ணிக்கையில் 4ஜி சிம் வழங்கப்பட்ட உடன் 4ஜி சேவை இந்த இரண்டு இடங்களிலும் தொடங்கப்படும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு டேட்டா பதிவிறக்க வேகம் அதிகரித்து 21 எம்பி வரை கிடைக்கும். பின்னர் திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் நாகர்கோவிலில் 4ஜி சேவை தொடங்கப்படும்  என்றார்.மூடும் எண்ணம் இல்லைபிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவது குறித்து எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை. மாறாக இந்திய மக்களுக்கு நாடு முழுவதும் சிறந்த சேவையை அளிக்கும் வலுவான ஒரு நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என பிஎஸ்என்எல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலத்த போட்டியின் காரணமாக ஏற்பட்ட கட்டண குறைப்பினால் உண்டான நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிதி உதவி திட்டத்தை தயாரித்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் என்றென்றும் மிகச்சிறந்த தொலைதொடர்பு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் என  கூறியுள்ளது.

சென்னையில் பொதுக்கழிப்பிடம் எங்கு உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்: மாநகராட்சி தகவல்

2019-02-16@ 14:05:26





சென்னை: சென்னையில் பொதுக்கழிப்பிடம் எங்கு உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. கூகுள் மேப்பில் Toilet என பொதுமக்கள் டைப் செய்தல் அருகிலுள்ள பொதுக்கழிப்பிடத்தை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் பயன்பாட்டிற்காக 853 இடங்களில் 6,71 இருக்கை வசதி கொண்ட கழிப்பிடம் உள்ளது.

ஒரு நபரை அவர் அனுமதியின்றி குரூப்களில் சேர்க்க முடியாது'..வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி


வாட்ஸ்அப்பில் இருக்கும் குரூப் மூலமாக ஒரே நேரத்தில் பலருடன் கலந்துரையாடுவது, தகவல்களை எளிதாகப் பகிர்ந்துகொள்வது எனப் பல விஷயங்களைச் செய்ய முடிகிறது. இப்படி உபயோகமாக இருக்கும் குரூப்கள் சிலருக்குத் தொந்தரவாகவும் அமைந்து விடுவதுண்டு. அதற்குக் காரணம் வாட்ஸ்அப்பில் இப்போது யார் வேண்டுமானாலும் எந்த குரூப்பில் வேண்டுமானாலும் ஒருவரை அனுமதியின்றி சேர்த்து விட முடியும். விருப்பமில்லாமல் ஒரு குரூப்பில் சேர்க்கப்படுவதால் அது சிலருக்கு தொல்லை தரும் விஷயமாக அமைந்து விடுகிறது. தற்போது இந்தச் சிக்கலை தீர்க்க முடிவு செய்திருக்கிறது வாட்ஸ்அப். அதன்படி இனிமேல் ஒருவரின் அனுமதி இல்லாமல் ஒரு குரூப்பில் அவரைச் சேர்க்க முடியாது.


இந்த வசதி WhatsApp Settings > Account > Privacy > Groups என்ற பகுதியில் கொடுக்கப்படும். இதில் Everyone, My Contacts, Nobody என்ற மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஒரு குரூப்பில் இணைப்பதற்கு யாரெல்லாம் அழைப்பை விடுக்க முடியும் என்பதைத் தேர்வு செய்துகொள்ளலாம். அழைப்பை ஏற்காவிட்டால் 72 மணி நேரங்களில் அழைப்பானது தானாகவே காலாவதியாகிவிடும். இந்த வசதி தற்பொழுது ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் ஆண்ட்ராய்டு பதிப்புக்கும் இந்த வசதி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் ஏன்?


தமிழக சுகாதாரத் துறை ஆணையராக சுமார் ஏழு ஆண்டுகள் பதவி வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைக்கு நேற்று (பிப்ரவரி 16) மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்த்து பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

2012 செப்டம்பர் மாதம் முதல் சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பலோவில் சிகிசை மேற்கொண்ட காலங்களில் சுகாதாரத்துறை சார்பில் முக்கியப் பங்காற்றியவர். அண்மையில் இதுகுறித்து அவர் ஆறுமுகசாமி ஆணையத்திலும் சாட்சியம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி. சண்முகம் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு புகார்களை சுமத்தினார். ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் கடுமையாகப் பேசினார் அமைச்சர் சிவி சண்முகம். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சைக்குப் பிறகு ராதாகிருஷ்ணனே தன்னை சுகாதாரத் துறையில் இருந்து விடுவிக்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டதாகவும் உடனடியாக அதைச் செய்தால் அதுவும் சர்ச்சை ஆகும் என்பதால் சற்று காலம் எடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோட்டை வட்டாரங்களில் 
தெரிவிக்கிறார்கள்.
 

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...