Sunday, August 4, 2019

மருத்துவமனைகள் உரிமம் விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

Added : ஆக 04, 2019 



சென்னை:தமிழகத்தில், மருத்துவமனைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, உரிமம் வழங்குவதற்கான, இறுதி வாய்ப்பாக, நவ., 30 வரை கால நீட்டிப்பு வழங்க, சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்படுகின்றன; இவற்றிற்கு உரிமம் பெறுவது அவசியம். அதை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதுப்பிக்க வேண்டும்.இந்த நடைமுறைகளுக்கு, மார்ச், 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், 80 சதவீத மருத்துவமனைகளும், கிளினிக்களும், அந்த காலக்கெடுவுக்குள் உரிமம் கோரி விண்ணப்பிக்கவில்லை. இதனால், மே, 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 24 ஆயிரம் மருத்துவமனைகள், கிளினிக்குகள் புதிதாக பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்தன.இந்நிலையில், அனைத்து மருத்துவமனைகளும் உரிமம் பெறுவதற்கான இறுதி வாய்ப்பாக, நவ., 30 வரை கால நீட்டிப்பு வழங்க, மருத்துவ சுகாதார சேவைகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, மருத்துவ சுகாதார சேவைகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:பதிவு உரிமம் கோரிய, மருத்துவமனைகளில், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு, உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்பட உள்ள, வாய்ப்பை பயன்படுத்தி, அனைத்து மருத்துவமனைகளும், உரிமம் கோரி விண்ணப்பிக்கும் என, எதிர்பார்க்கிறோம். நவ., 30க்குள் பதிவுக்கு விண்ணப்பிக்காத மருத்துவமனைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...