Wednesday, August 7, 2019


மருத்துவ படிப்புகளில் சேர இன்று இறுதி கட்ட கவுன்சிலிங்

Added : ஆக 07, 2019 01:25


சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, இறுதி கட்ட கவுன்சிலிங், இன்று நடக்கிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இரண்டு கட்டங்களாக முடிந்துள்ளது. இடங்கள் ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு வகுப்புகளும் துவங்கி உள்ளன.

இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலர் கல்லுாரியில் சேரவில்லை; கல்லுாரியில் சேர்ந்த சிலர், படிப்பை கைவிட்டுள்ளனர்.அந்த வகையில், தனியார் மருத்துவ கல்லுாரியில், அரசு ஒதுக்கீட்டில், 17; ராஜா முத்தையா கல்லுாரியில், இரண்டு என, 19 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரியில், ஆறு பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான, இறுதிகட்ட, 'மாப் - ஆப்' கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று நடக்கிறது. மேலும் விபரங்களை, www.tnhealth.org www.tnmedicalselection.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

T.N. govt. to launch health insurance for the elderly

T.N. govt. to launch health insurance for the elderly The Hindu Bureau CHENNAI. 18.08.2026 Tamil Nadu will launch the ‘Chief Minister’s Elde...