Thursday, October 30, 2025

NEWS TODAY 30.10.2025

 


























செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி!

 செயற்கை நுண்ணறிவு - இருமுனைக் கத்தி! 

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

 தினமணி செய்திச் சேவை Published on:   Updated on:  30 அக்டோபர் 2025, 4:43 am 3 min read 

எஸ். எஸ். ஜவஹர் 30.10.2025

மனித நுண்ணறிவு கடந்த நூற்றாண்டில் பல அதிசயங்களை உருவாக்கியது. ஆனால், இப்போது, மனிதனே உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அந்த மனித நுண்ணறிவுக்கே சவால் விடும் நிலையை அடைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மருத்துவ உலகில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஆனால், அது லாபம் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வணிகமாக மாறும்போது, அதன் அதீதமான நன்மைகள் சாதாரண மக்கள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக அமையும்.

மருத்துவத் துறையில் நோயைக் கண்டறிதல், புதிய மருந்துகள் உருவாக்கம், துல்லியமான மற்றும் சரியான மருத்துவக் கண்காணிப்பு, நோயாளிகள் பராமரிப்பு என எல்லாத் துறைகளிலும் இதன் தடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரு எக்ஸ் ரே அல்லது எம்.ஆர்.ஐ. படத்தில் மனிதக் கண்களால் காண முடியாத நுண்ணிய மாற்றங்களை ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறை (அல்காரிதம்) கண்டறிய முடியும்.

இந்த முறையில் மனித தவறுகள் தவிர்க்கப்படுவதோடு, விரைவான தீர்வுகளுக்கும் வழிவகுக்க முடியும். இதனால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே துல்லியமாக அடையாளம் காண முடியும்.

நோயாளியின் மரபணு, வாழ்க்கை முறை, மருத்துவ வரலாறு போன்றவற்றை சில விநாடிகளில் அலசி ஆராய்ந்து, அவருக்கென தனித்துவமான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இதுவே "தனிப்பட்ட மருத்துவம்' என்ற புதிய பரிமாணத்தை மருத்துவ சிகிச்சை மற்றும் சேவைத் துறையில் உருவாக்கியுள்ளது.

மருந்து ஆய்வகங்களிலும் இதுவரை கண்டிராத புரட்சியை இது உருவாக்கத் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மூலக்கூறுகளை விரைவாகப் பகுப்பாய்வு செய்து சாத்தியமான மருந்துகளை அடையாளம் காணும் திறன் இதற்குண்டு; இதனால், மருந்துக் கண்டுபிடிப்பு ஆண்டுகள் அல்ல, மாதங்களில் முடிகிற நிலை உருவாகி வருவது கண்கூடு. எனவே, குறைந்த விலையில் சிறந்த மருந்துகள் உருவாகும் வாய்ப்பும் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

இன்றைய அளவில் மருத்துவமனைகளின் நிர்வாகச் சுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையை மாற்றி மருத்துவர்கள் நோயாளிகளுடன் நேரடியாகச் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவும் இது உதவுகிறது. வயது முதிர்ந்தோரின் மக்கள்தொகை தொடந்து அதிகரித்துவரும் சூழலில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) பெரும் உதவியாக இருக்கும்.

தொலைநிலை மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காணிப்பு எளிதில் சாத்தியமாவது மனிதகுல வரப்பிரசாதம். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மூலமாக மருத்துவ சிகிச்சை மற்றும் உதவியை நகரங்களின் எல்லைகளைத் தாண்டி கிராமங்களுக்கும், ஏன் வீடுகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீடு மற்றும் அரசு மருத்துவ நல்வாழ்வுத் திட்டங்கள் ஆயுஷ்மான் பாரத், தமிழ்நாடு மருத்துவ நலவாழ்வு திட்டம் போன்றவை மக்களின் நல்வாழ்வு பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. செயற்கை நுண்ணறிவை இவற்றில் பயன்படுத்தும்போது இந்தத் திட்டங்களை மேலும் விரிவாக்கம் செய்யவும் செயல்திறனை அதிகரிக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

நோயாளிகளின் மருத்துவ வரலாறு, மருந்து உபயோக நடைமுறை, மற்றும் ஆபத்து மதிப்பீட்டுத் தரவுகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அமைப்புகள் துல்லியமான தீர்மானங்களை எடுத்து விடும். இதன்மூலம் போலி காப்பீட்டு கோரிக்கைகள் குறையவும், உண்மையான பயனாளிகளுக்கு விரைவான நிதி உதவி சென்றடையவும் வழிவகுக்கும்.

செயற்கை நுண்ணறிவு ஊடாக மருத்துவ வசதிகளைத் திட்டமிடும் அரசின் திறனும் மேம்படும். எந்த மாவட்டத்தில் அல்லது எந்தப் பகுதியில் எத்தகைய நோய் அதிகம் பரவுகிறது, எந்த இடங்களில் மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவர்கள் அல்லது எத்தகைய மருந்துகள் கையிருப்பு தேவைப்படுகின்றன போன்ற விவரங்களை முன்கூட்டியே கணிக்கும் திறனுடன் அரசுத் திட்டங்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட முடியும். இதனால், மருத்துவ சிகிச்சை செலவுகள் மட்டுமின்றி உயிரிழப்புகள்கூட குறையும்.

செயற்கை நுண்ணறிவின் பலம் மனிதநேய நோக்குடன் இணைந்தால்தான் அது உண்மையான மருத்துவ விடுதலைப் புரட்சியாக மாறும். ஆனால், இதன் மறுபக்கம் மிகவும் கூர்மையானது. தனி நபரின் மருத்துவத் தரவுகள் என்பது மிக ரகசியமான தனிப்பட்ட சொத்தாகும். அவரது அனுமதியின்றி அந்தத் தரவுகளை மருத்துவமனைகளோ அல்லது வேறு வணிக நிறுவனங்களோ லாப நோக்கில் பயன்படுத்தும் ஆபத்தை மறுக்க முடியாது.

செயற்கை நுண்ணறிவு படிமுறைகள் (அல்காரிதம்) அவற்றுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளை மட்டுமே சார்ந்திருப்பதால், சமூக சார்புகள் அதில் ஊடுருவும் வாய்ப்பும் ஆபத்தும் அதிகம். இது சமத்துவமின்மையை உருவாக்கும் அல்லது இருப்பதை அதிகரிக்கும்.

விலை உயர்ந்த கருவிகள் மற்றும் சிகிச்சை முறைகள் மருத்துவ சேவை பொருளாதார ரீதியில் வசதி உள்ளவர்களுக்கே கிடைக்கும் என்ற நிலை உருவாகி விடும். அதேபோல், கணினி மற்றும் மென்பொருள் பயன்பாடுகளைக் கையாளும் திறன் படைத்தோர் மட்டும் பயன் அடைய முடியும் என்ற நிலை உருவாகி சமூகத்தில் உள்ள எண்மப் பிளவை மேலும் அதிகரித்து விடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளில் மிகப் பெரிய சிக்கல் பொறுப்புக்கூறல் குறித்ததுதான்.

ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக நோயைக் கண்டறிந்தாலோ அல்லது தவறான சிகிச்சை அளித்துவிட்டாலோ அந்த மருத்துவ சேவை குறைபாட்டுக்கும், அதன் விளைவுகளுக்கும் யார் பொறுப்பு ஏற்பது? மருத்துவரா, மருத்துவமனையா அல்லது மென்பொருள் நிறுவனமா? இந்த பிளாக் பாக்ஸ் சிக்கல் நீதியியல் உலகையே குழப்புகிறது.

மேலும், மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவின் மீது முழுமையாகச் சார்ந்தால், அவர்களின் தீர்மானிக்கும் தனித் திறனும் மருத்துவ நுண்ணறிவும் மங்கும் அபாயம் உண்டு. அதே சமயம், லாப நோக்கத்தை மட்டுமே கொண்ட சில நிறுவனங்கள் தேவையற்ற சோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் போன்றவற்றை செயற்கை நுண்ணறிவின் பெயரில் பரிந்துரைத்து மக்களைச் சுரண்டும் ஆபத்தும் மறுக்க முடியாதது. இதை சமநிலைப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளின் மிக முக்கியமான பொறுப்பாகும்.

தனிநபர் மருத்துவத் தரவுகளைப் பாதுகாக்கும் வலுவான சட்டங்கள் அவசியம். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு முடிவுகளை எடுக்கிறது என்பது குறித்த வெளிப்படைத்தன்மை கட்டாயமாக்கப்பட வேண்டும். தவறுகள் ஏற்பட்டால் யார் பொறுப்பு என வரையறுக்கும் சட்ட அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பல்வேறு சமூகப் பிரிவினரிடமும் பரிசோதிக்கப்பட்டு, சார்பற்றவை என்ற சான்று பெற்ற மாதிரிகளே மருத்துவத் துறையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் செயற்கை நுண்ணறிவை முழுமையாகச் சாராமல், மனிதநேய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இறுதி முடிவை எப்போதும் மனித மருத்துவரே எடுக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு உருவாக்குநர்களும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். லாப நோக்கத்தைக் கடந்து, பொதுநல நோக்கத்தையும் நெறிமுறையையும் இணைத்த வடிவமைப்புகள் தேவை. மேலும், மலிவு விலையில் பலருக்கும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எவ்வாறு அவர்களின் தரவுகளைப் பயன்படுத்துகிறது என்பதை அறியும் உரிமை நோயாளிகளுக்கும் இருக்க வேண்டும். மருத்துவம் பயில்பவர்களுக்கு மருத்துவக் கல்வியோடு எண்மக் கல்வியும் சேர்த்து வழங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதற்கு மருத்துவக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாடத் திட்டங்களைச் சேர்க்க வேண்டியது அவசியம். இது தொடர்பாக, மருத்துவக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைக் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

மக்களும் தங்கள் தரவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர்களின் உரிமை காக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு தரமான மருத்துவ சேவையை ஜனநாயகப்படுத்தும் திறனைக் கொண்டது. ஆனால், அதன் பயன் சிலருக்கு மட்டும் சுருங்கிவிடாமல், மக்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும். அதற்கு வலுவான சட்டங்கள், தெளிவான நெறிமுறைகள், சரியான மனித மேற்பார்வை, சமூகப் பொறுப்புணர்வு ஆகியவை இணைந்திருக்க வேண்டும்.

இறுதியில், செயற்கை நுண்ணறிவு என்பது ஓர் இருமுனைக் கத்தி; சரியான கைகளில் இருந்தால் அது உயிரைக் காப்பாற்றும் கருவி; தவறான கைகளில் விழுந்தால் அது நியாயத்தையும் நம்பிக்கையையும் காயப்படுத்தும் ஆயுதமாக மாறும்.தொழில்நுட்பத்துக்கும் மனிதநேயத்துக்கும் இடையே சமநிலையைப் பேணும் நாடுகள்தான் எதிர்கால மருத்துவத்தின் உண்மையான தலைவர்கள்!

கட்டுரையாளர்:

ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Wednesday, October 29, 2025

NEWS TODAY 29.10.2025
























பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்... அந்தக் காலத்தில்

பொதுக்கூட்டம்- அன்றும் இன்றும்... அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும்.

 தினமணி செய்திச் சேவை Published  Updated on:  29 அக்டோபர் 2025, 3:00 am 

 முனைவர் கோ.விசுவநாதன்

அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்கள் பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேல்தான் நடக்கும். காரணம் உழைக்கும் வர்க்கம் தங்கள் பணிகளை எல்லாம் முடித்துவிட்டு வீடு திரும்ப நேரம் ஆகும் என்ற உண்மை தெரிந்தவர்கள். அதற்குக் காரணம் பேரறிஞர் அண்ணாதான். அவர் மக்களின் நாடித் துடிப்பு தெரிந்த அறிஞர்.

அப்போதெல்லாம் திமுகவின் பொதுக்கூட்டம் இரண்டு வகையாக இருக்கும். சாதாரண பொதுக்கூட்டம், சிறப்புப் பொதுக்கூட்டம் என்று வகைப்படுத்தப்படும். சிறப்பு பொதுக்கூட்டத்துக்கு அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற பெரிய தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். சிறப்புக் கூட்டத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்களுக்கு ஒரு ரூபாய்; பெண்களுக்கு எட்டணா. அந்தக் காலத்தில் பெண்களையும் அரசியல் கூட்டங்களுக்கு அழைக்கும் அளவுக்கு திராவிட கட்சிகளின் மேடைப்பேச்சு இருந்தது. அவர்கள் பெண்களுக்காகவும் பேசினார்கள். தினந்தோறும் அண்ணாவும் மூத்த தலைவர்களும் ஏதாவது பொதுக்கூட்டங்களில் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.

இப்போது பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும். அவர்கள் உட்காருவதற்கு இருக்கைகள், விளம்பர விளக்குகள், இதுதவிர கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவு மற்றும் இதர வசதிகளை கூட்டத்தை நடத்துபவர் செய்துதர வேண்டும். இதேபோல், கூட்டத்துக்கு வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்து தரவேண்டும். அந்தக் காலத்தில் நாங்கள் இந்த வசதி எல்லாம் செய்து தரவில்லை. அப்போது, கூட்டத்துக்கு வந்தவர்கள் தானாக வந்தவர்கள்தான். பொதுக்கூட்டத்துக்கு வருபவர்கள் தரையில்தான் உட்காருவார்கள்.

அண்ணா கட்சி நிகழ்ச்சிக்குச் செல்லும் போதெல்லாம் மாவட்டச் செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர்வரை எல்லோர் பெயரும் சொல்லி "அவர்களே' என்று அழைத்து அதன்பின்தான் தமது உரையைத் தொடங்குவார். இதனால், அந்தக் கட்சித் தொண்டர்களுக்கு உள்ளூரில் மதிப்பு மரியாதை கூடியது. சில பெயர் விடுபட்டுப் போனால் தமது உரையின் நடுவில் அவர்கள் பெயரை மறக்காமல் குறிப்பிடுவார். அண்ணாவின் இந்த அரசியல்பாணி பின்னாளில் எல்லா கட்சியினராலும் பின்பற்றப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது.

கட்சித் தொண்டர்களை "தம்பிகளே' என்றுதான் அழைப்பார் அண்ணா. கட்சியில் குடும்ப பாசத்தை புகுத்திய புதுமையாளர் அண்ணா. அதன் பிறகு கருணாநிதி "உடன்பிறப்பே' என்று அழைத்தார். எம்ஜிஆர் "என் ரத்தத்தின் ரத்தமே' என்று அழைத்தார். இவையெல்லாம் தொண்டர்களிடையே இடைவெளி இல்லா நெருக்கத்தை அதிகரித்தது.

1965-இல் குடியாத்தம் வந்தார் அண்ணா. குடியாத்தத்தில் சிறப்புக் கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் அண்ணா முன்னிலையில் நான் பத்து நிமிஷம் பேசினேன். எனக்கு தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை இரண்டிலும் ஒரு திருப்புமுனையாக அன்றைய எனது பேச்சு அமைந்தது என்பது எனக்கு பின்னாளில்தான் தெரிந்தது. அன்றைய பொதுக்கூட்டத்தில் நான் பேசிய பேச்சுதான் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.

குடியாத்தம் கூட்டம் முடிந்து சில வாரங்களுக்குப் பின்பு மதுரைக்குப் போனார் அண்ணா. பொதுக்கூட்டத்தில் பேசி முடித்து கட்சிப் பிரமுகர்கள் வீட்டில் இரவு உணவுக்குப் பிறகு, கட்சி வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருந்தார். குடியாத்தம் பொதுக்கூட்டத்தில் ஒரு பையன் பேசினான்; வக்கீலுக்கு படித்திருக்கிறான்; அருமையாக பேசினான் என்று அங்கு இருந்தவர்களிடம் சொன்னார் அண்ணா.

அப்போது, அங்கிருந்த சட்டக் கல்லூரியில் என்னுடன் படித்த மைனர் மோசஸ் "அவன் பெயர் விசுவநாதன். நானும் அவனும் சட்டக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்'. மாணவர் கழகத்தில் செயலாளராக இருந்தான் என்று சொன்னார்.

அப்போது, அண்ணா அவனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம் என்று சொன்னார்.

இதை மைனர் மோசஸ் சில தினங்களுக்குப் பிறகு என்னிடம் சொல்லி மகிழ்ச்சியாகப் பகிர்ந்து கொண்டார். இப்படித்தான் நான் ஒரு பொதுக்கூட்டம் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டேன்.

அந்தக் காலத்தில் பொதுக்கூட்டம் நடக்கும் போது, நடுவில் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் "துண்டு ஏந்தி தொண்டர்கள் வருகிறார்கள், உங்களால் ஆன நிதி உதவி செய்யுங்கள்' என்று அறிவிப்பு செய்வார். பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்கள் 10 பைசா, நாலணா, 50 பைசா என்று அவர்களால் முடிந்ததைத் தருவார்கள். அதைவைத்து கூட்டச் செலவுகளைச் சமாளிப்போம். இதேபோல், கட்சி பிரசார நாடகங்களும் போடுவது உண்டு. கருணாநிதி, இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கட்சி பிரசார நாடகங்களில் நடித்திருக்கிறார்கள்.

1967 தேர்தலின் கதாநாயகன் பேரறிஞர் அண்ணா. கட்சி தொடங்கிய சில ஆண்டுகளில் 1977-இல் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இவை இரண்டுமே அரசியல் வரலாறுதான். இப்போது 1967 தேர்தல் மற்றும் 1977 தேர்தல் இரண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.

1967 தேர்தல் தேசியக் கட்சியான காங்கிரஸ் சகாப்தத்தை தமிழ்நாட்டில் முடித்துவைத்தது. அன்றைய திமுக வேட்பாளர்கள் எல்லோருமே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். ஆனால், படித்தவர்கள். இளைஞர்கள், படித்தவர்கள், சாமானியர்களை முதன்முதலில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைக்கும் அனுப்பிய பெருமை அண்ணாவையே சேரும்.

இந்திய அரசியலில் முதல்முறையாக ஆளுங்கட்சிக்கு எதிராக மிகப் பெரிய பலம்வாய்ந்த கூட்டணியை உருவாக்கினார் அண்ணா. எதிரும் புதிருமாக இருந்த அரசியல் தலைவர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி பெற்றார்அண்ணா. சுதந்திராக் கட்சியும், பொதுவுடமைக் கட்சியும் ஒரே கூட்டணியில் வந்ததே அண்ணாவின் அரசியல் சாதுரியத்துக்குக் கிடைத்த வெற்றி. அரசியல் தீண்டாமை முடிவுக்கு வந்தது; வெற்றிக் கூட்டணி உதயமானது.

திமுகவின் தேர்தல் பிரசாரம் ஆடம்பரம் இன்றி இருந்தது. மொத்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் செலவுக்கு என்று பதினோரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி செலவு செய்தது. தேர்தல் செலவுக்கு ஒவ்வொரு வேட்பாளருக்கும் நாலாயிரம் ரூபாய் தந்தார் அண்ணா. அதுகூட காசோலையாக; அந்த தேர்தல் மாதிரி சிக்கனமான தேர்தல் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.

வேட்பாளர்களிடம் கட்சிக்காரர்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் வேட்பாளர்களிடம் எதிர்பார்த்தது கொடி, தோரணம், சுவரொட்டி; இவற்றுடன் ஓட்டு கேட்க ஊருக்கு வர வேண்டும் இவ்வளவுதான்.

அதற்கு முன்பெல்லாம் காங்கிரஸ்காரர்கள் வீடுவீடாக ஓட்டுகேட்கும் வழக்கமெல்லாம் இல்லை. முக்கிய பிரமுகர்கள், மிட்டாமிராசுதாரர்கள், மணியக்காரர்கள், நாட்டாண்மை போன்றவர்களைச் சந்தித்துப் பேசி அந்தப் பகுதி மக்களை ஓட்டுபோட வைக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார்கள். அண்ணா அதை அப்படியே அடியோடு மாற்றினார். ஒவ்வொரு திமுக வேட்பாளரும் ஓட்டு கேட்க ஒவ்வொரு வீட்டு வாசல்படியும் ஏறி இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுக வேட்பாளர்களும் அப்படியே செய்தார்கள். இது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

அண்ணா யாரையும் அவதூறாகப் பேசமாட்டார். எனவே, தம்பிமார்களும் அப்படியே இருந்தார்கள். இதுபோதாது என்று எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவம். இவை எல்லாம் சேர்த்து தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சுனாமியை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் நான் உட்பட 25 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். இதை உலக சாதனை என்று பாராட்டினார் ராஜாஜி.

காமராஜர் தனது சொந்த ஊரான விருதுநகரில் கல்லூரி மாணவர் பெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார். மத்திய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதனிடம் தோற்றுப் போனார். மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் பதவியை ராஜிநாமா செய்து வேட்பாளராக நிறுத்தப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரத்திடம் தோற்றுப் போனார்.

1977 தேர்தல் அதிமுக வெற்றிக்கு முன்பு திண்டுக்கல் இடைத்தேர்தல் வரலாறு தெரிந்து கொள்வது அவசியம். அண்ணா திமுக என்ற புதிய கட்சிக்கு வைக்கப்பட்ட சோதனைதான் திண்டுக்கல் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், பழைய காங்கிரஸ், இந்தக் கட்சிகளுடன் புதிதாக தொடங்கப்பட்ட அதிமுகவும் களத்தில்.

அதிமுகவுக்கு ஓட்டு கேட்டவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள், அவர்களுடன் சிவப்பு துண்டு போட்ட சில கம்யூனிஸ்ட் தோழர்கள். அந்தத் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். திண்டுக்கல் தேர்தல் எம்ஜிஆருக்கும், அண்ணா திமுகவுக்கும் மக்கள் தந்த அங்கீகாரம்.

1977-ஆம் ஆண்டு தேர்தல் என்பது ஒரு வரலாறு. எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கிய பின்பு நடந்த தேர்தல்.

எம்ஜிஆரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்த போது, எதிர்க்கட்சிகள் கேட்ட மிக முக்கியமான கேள்வி எம்ஜிஆருக்கு பொருளாதாரம் தெரியுமா? பொருளாதாரம் தெரியாதவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? அரசியலில் வேஷம் போட முடியாது. திரைப்படம் என்பது நடிப்பு, அரசியல் என்பது நிஜம். ஆட்சி செய்வது என்பது அவ்வளவு எளிதான பணி அல்ல என்றெல்லாம் எம்ஜிஆரை எதிர்த்து பிரசாரம் செய்தார்கள்.

ஆனாலும், எம்ஜிஆரின் கூட்டங்களுக்கு மக்கள் பெருந்திரளாக கூடினார்கள். நீங்கள் எனக்கு ஆட்சி செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள்' என்று மட்டும்தான் மக்கள் மன்றத்திடம் எம்ஜிஆர் கோரிக்கை வைத்தார்.

அவர் அரசியலில் வெற்றி பெற்றதற்கு அவர் ஒரு திரைப்பட நடிகர் என்பது மட்டும் காரணம் அல்ல. அவரது அர்ப்பணிப்புடன்கூடிய உழைப்பு. விமர்சனங்களையும் தாண்டி அரசியலில் உழைத்தவர் அவர். அண்ணாவும், எம்ஜிஆரும் அரசியல் மாற்றங்களின் நாயகர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்:

வேந்தர், விஐடி பல்கலைக்கழகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter


Design your retirement, it’s tougher once you exit office

Design your retirement, it’s tougher once you exit office 

Beyond Hanging Up Your Boots: Consider Entrepreneurship Or Learn A New Skill; 

Network Early If You Want To Continue Working 

By Prabir Jha 29.10.2025 TIMES OF INDIA AHAMEDABAD

When we begin our careers, retirement is a distant, almost unimaginable milestone. And yet, inevitably, that day arrives for everyone. Over the next five years, an entire generation will retire, a moment that invites both reflection and reinvention. And yet, not much is done or written about this career reality. It is a moment with a deep sense of redundancy. 

People worry about their loss of identity, and many are unable to imagine a different life as most have lived just one cookie-cutter way. But it can still be life with purpose. And possibly one that is happier. Here are some pointers on how to deal with what comes next: 

Start early In the corporate world, with turbulence all around, that date could dramatically move closer. Start working on post-retirement pursuits early, if you still want the classical work. Maybe there is some post retirement sinecure you are able to wrangle within your organisation or beyond. It is not easy for many executives to let go so this makes them buy time but does not change the end goal post. Or you can offer to do part-time work for firms who will value your skills and experience. 

Network early enough. It gets tougher once you demit office. Think entrepreneurial pursuits Entrepreneurial creativity is not a function of age. Those who are creative, and now free of both family and official encumbrances, could initiate a completely different venture. Give wings to a dream which you never could pursue thus far. Remember, some of the biggest brands today were started by people after their retirement. It will help you stay alert, be purposeful and help grow with a renewed passion and purpose. Live experientially Possibly with family responsibilities behind, one could focus on securing experiences one never did yet. 

It could be learning a new musical instrument, writing a book, travelling places or feeding a hobby. So many people complain they have so much time to kill. This is because their thinking is linear. Think wide and you will discover a range of things you can do

Give back to the community We all got so much from the world we live in.

After retirement, it is time to clear that debt. Join a social cause that you relate with. Help guide, mentor, advise, inspire a demographic slice that needs your time, interest and activism. You will discover it is more gratifying to make a difference to lives of people. And who knows, if politics is a way of doing this, you can always explore that route of public service. 

Finally, put your feet up A ‘susegad’ life is a reward well-earned and it should come without guilt. Let go of the crutches you once mistook for your identity, and rediscover the person behind the professional. Embrace laughter, ease, and unhurried days. After all, what did you work so hard for if not this? 

A comfortable, peaceful retirement free from the frenzy of a fast-paced career may well be the most fitting reward for a life fully lived. Why should that ever be seen as a lesser choice? There is no one magic potion for a post-retirement existence. Neither work nor retirement gives you everything but each stage offers its own gifts. 

Think through all these options and their attendant consequences. Make your pick and be at peace with that choice. 


(Prabir Jha is the founder & CEO, Prabir Jha People Advisory)

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...