Friday, April 3, 2015

Can’t make doctors work over 12 hrs, hospitals told...INDIAN EXPRESS

The Delhi government has issued a circular restricting duty hours of resident doctors in all hospitals in the city to not more than 12 hours per shift per day. While in theory and in the rulebook of foreign accreditation agencies this is the norm, in practice it was never followed with resident doctors often forced to do back-to-back shifts, sometimes clocking up to 36 hours without a break.

In the circular issued on March 16, Director (hospital services) Dr Sanjay Agrawal wrote: “All director/medical superintendents and heads of clinical departments of hospitals/institutions/departments are advised that in case resident doctors are assigned continuous duties across multiple shifts in their hospitals/institutions/departments, then this practice must stop forthwith and duty rosters for resident doctors are prepared in a way that they are out on clinical duties not exceeding 12 hours in a shift in a day.”

Longer durations of clinical duties can only be sanctioned by the director or medical superintendent of the hospital but even in such exceptional cases, the total duration of the shift cannot exceed 17 hours, the circular specifies. In all such cases, the concerned authority would have to inform the secretary (health and family welfare) in the government of Delhi through email.

While hospitals in both the private and public sectors are still working out schedules to follow the new guidelines, there are some though who feel that not mentioning the maximum number of work hours per week was the government’s sleight of hand, so as not to provoke a debate on the ticklish issue of manpower shortage in hospitals.“Doctors routinely work 36-hour shifts twice, sometimes even thrice a week. As a postgraduate student, we often clock up to 100-120 hours in the hospital. This is insane in a high-precision vocation like medicine because fatigue would inevitably take a toll on your clinical judgement, your ability to concentrate and in case of surgeons especially, mere physical ability. It is a violation that has gone on for too long,” a senior doctor at Maulana Azad Medical College said, on condition of anonymity.

“While specifying shifts is certainly an improvement, a better way to do this would have been to lay down that like every other worker in the country, a doctor will not work more than 40 hours. They did not do that because the moment that is specified, there would be questions about the number of staff members in the hospital. There, the government may find itself in a spot even worse than in private.

What this may essentially do for doctors is to force them to work without a weekly off,” another doctor at a Delhi government hospital said.

10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம்: மதுரையில் கணக்கீடு அட்டவணை விநியோகம்



மின் பயன்பாட்டில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு 10 யூனிட்டை சேமித்தால் ரூ.866 மிச்சப்படுத்தலாம் எனக்கூறி மின்கட்டண கணக்கீட்டு அட்டவணையை ஜனதா தொழிலாளர் சங்கத்தினர் வீடு,வீடாக விநியோகித்து வருகின்றனர். | முழு அட்டவணை - கீழே |

தமிழ்நாடு மின்சார வாரியம் 2014 டிச. 12-ம் தேதி மின்கட்டணத்தை திருத்தியமைத்தது. இதன்படி 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப் படுகிறது. 100 யூனிட்வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1,200 யூனிட்வரை ரூ1.50, 500 யூனிட்வரை பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்களுக்கு ரூ.2, மீதியுள்ள 300 யூனிட்களுக்கு ரூ.3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

500 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்தினால் 200 யூனிட்வரை ரூ.3.50, அடுத்த 300 யூனிட்டுக்கு ரூ.4.60, இதற்குமேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நிலைக்கட்டணமாக 500 யூனிட்வரை ரூ.20, இதற்கும் மேல் எனில் ரூ.50 வசூலிக்கப்படுகிறது. அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.1 முதல் 3 வரை பயன்பாட்டுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. 500 யூனிட்களுக்கும் மேல் பயன்படுத்து வோருக்கு மொத்தமாக ரூ.1,170 மானியம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மதுரை மண்டல தலைவர் ச.சசாங்கன் கூறியதாவது: மின்பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் 10 யூனிட் கூடுதலாகிவிட்டாலும் ரூ.866 வரை கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.

எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என முழுமையாகத் தெரியாததால் கூடுதலாக செலவிடும் கட்டாயம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மின் கணக்கீட்டு அட்டவணையை வெளியிட்டு, இதை வீடு,வீடாக விநியோகித்து வருகிறோம். இதுவரை 10 ஆயிரம் பிரதிகளை விநியோகித்துள்ளோம். 100 யூனிட்டுக்கு ரூ.120, 110 யூனிட் எனில் ரூ.185 கட்டணமாக செலுத்த வேண்டும்.

10 யூனிட்டுக்காக ரூ.85 கூடுதலாக செலவாகிறது. இதேபோல் 200 யூனிட்டுக்கு ரூ.320 கட்டணம் செலுத்தும் நிலையில், 210 யூனிட்டுக்கு ரூ.460 செலுத்த வேண்டும். 10 யூனிட்டுக்கு ரூ.250 கூடுதலாக செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதேபோல் 500 யூனிட்டுக்கு கட்டணம் ரூ.1,330 செலுத்தும் நிலையில் 510 யூனிட்டுக்கு ரூ.2,196 செலுத்த வேண்டும். இந்த பிரிவில் வருவோர் 10 யூனிட்டுக்காக ரூ.866 கூடுதலாக செலுத்த வேண்டும்.


10 யூனிட் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தும்போது, அடுத்த கட்டண கணக்கீட்டு பிரிவுக்கு மாறிவிடுவதால் இந்தளவுக்கு கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது. எப்போதும் 500 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்துவோருக்கு பிரச்சினை இல்லை. அதே நேரம், 100, 200, 500 யூனிட்டுக்குள் பயன்படுத்துவோர் அடுத்த கட்டண கணக்கீட்டு முறைக்கு மாறிவிடாத அளவுக்கு மின்சாரம் பயன்படுத்துகிறோமா என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

கணக்கீட்டுக்கு ஓரிரு நாளுக்கு முன்னதாகவே, எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம் என்பதை கண்காணிக்க வேண்டும். மின்கணக்கீட்டாளர் யூனிட்டுக்கு ஏற்ப சரியாக கணக்கிட்டுள்ளாரா என, கடந்தமுறை கணக்கீட்டை ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கூடுதல் செலவை தவிர்க்கலாம் என்றார். ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் உட்பட பலர் அட்டவணை விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எளிமையாக கணக்கிடும்விதம்

500 யூனிட்டுக்குமேல் வரும் மொத்த யூனிட்டுக்கும் X 6.60 (-) 1170

( எடுத்துக்காட்டு: 550 யூனிட் x 6.60 = 3630-1170 = 2460 )

13 entry points to Central station to be shut at night

Following the increase in platform ticket prices, the next step in decongesting Chennai Central station and beefing up security will be the closing of certain exit and entry points at night.

The Railway Protection Force (RPF), Government Railway Police (GRP) and Railways officials will form a three-tier security structure to prevent people from loitering inside the station.

“Armed policemen will monitor people walking into the station and railway officials will check the travel or platform tickets of those walking out. Vehicles will not be allowed to halt after dropping passengers. We are evolving a plan for car parking,” said an RPF officer.

“We will take measures to rehabilitate mentally ill persons and beggars who rest on the station premises,” said a GRP officer.

Certain entry and exit points will be closed between 11 p.m. and 4 a.m. “There are over 13 such spots at Central alone,” added the RPF officer.

Once the gates are closed, the entire station will be combed. “Those without valid tickets will be sent out,” said a railway official.

K.S. Gopalakrishnan, former zonal railway users’ consultative committee member, lauded the move. “Especially during summer, many platform dwellers sleep inside the suburban and Chennai Central railway stations. They should be directed to the Corporation’s night shelters,” he said.

“Incidents such as the train ‘hijack’ from the Moore Market Complex in 2009 and the recent bomb blast at Central can be avoided if stringent checking is at place,” said a former police officer.

கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்: பாஸ்போர்ட் பறிப்பால் சிக்கல்..DINAMALAR 23.4.2015

மலேசியாவில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக, அழைத்துச் சென்ற ஏஜன்ட், பந்து பொறுக்கி போடும் வேலையை தான் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், சிவகாசி இளைஞர் தவித்து வருகிறார்.

பி.பி.ஏ., பட்டதாரி:

சிவகாசி, சசி நகரைச் சேர்ந்தவர் ராஜா கனி; பெயின்டர். இவரது மனைவி அஞ்சாதேவி. இவர்களின் மகன் அருண்பிரசாத், 24; பி.பி.ஏ., பட்டதாரி. இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கீதா மற்றும் ரத்தினசாமி ஆகியோர், அருண்பிரசாத்திடம், மலேசியாவில், கணினி ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக, 25 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டனர். கடந்த மாதம் மலேசியாவுக்கு, அருண் பிரசாத்தை, ரத்தினசாமி அழைத்துச் சென்றார். அங்கு சென்றபின், சொன்ன வேலையை வாங்கித் தரவில்லை; பாஸ்போர்ட்டை யும் பறித்துக் கொண்டார்.

இதுகுறித்து, மலேசியாவில் இருந்து, 'தினமலர்' அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அருண்பிரசாத் கூறியதாவது: என்னை மலேசியாவிற்கு அழைத்து சென்ற ரத்தினசாமி, பிரிக்பீல்ட்ஸ் நகர் கிளப் ஒன்றில், கோல்ப் பந்துகளை பொறுக்கிப் போடும் வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும். அதற்கு, பணம் இல்லை. அதனால், இந்த வேலையைச் செய்தால், சம்பளம் வரும், ஊருக்குப் போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், ஒரு மாதம் வேலை பார்த்த பின், ரத்தினசாமி சம்பளம் வாங்கித் தரவில்லை. வேலை செய்த இடத்தில் கேட்டால், 'ஏஜன்ட் வாங்கிச் சென்று விட்டார்' என்றனர். ரத்தினசாமியிடம் பணம் கேட்டபோது, 'நீயே, இன்னும் பணம் தரணும்; வேலையை செய்' எனக்கூறி பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டார். 'ஊருக்கு போக வேண்டும்; விட்டுவிடு' என, கெஞ்சியும், பாஸ்போர்ட்டை தராமல், என்னை அடித்துத் துன்புறுத்தினார். ஏதாவது செய்து விடுவரோ என பயந்து, தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டேன். ரத்தினசாமியின் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சுற்றுலா விசாவில் தான் என்னை மலேசியா அழைத்து வந்தார். ஒரு மாத சுற்றுலா விசா முடிந்து விட்டது.

முறையீடு:

விசா இல்லாவிடில், போலீசார் பிடித்துக் கொள்வரோ என பயந்து, அங்கும், இங்கும் அலைந்து கொண்டுஇருக்கிறேன். இங்குள்ள, இந்திய தூதரகத்துக்குச் சென்று முறையிட்டேன். அரசு விடுமுறை, 5ம் தேதி வரை இருப்பதால், 6ம் தேதி வருமாறு கூறி அனுப்பி விட்டனர். இப்போது, என்ன செய்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு, அருண்பிரசாத் கூறினார்.

அரசு சொல்வது என்ன?


இப்பிரச்னை குறித்து, தமிழ்நாடு அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் கூறியதாவது:

* பதிவு செய்யப்பட்ட ஏஜன்ட்கள் மூலம், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்.
* வெளிநாடு செல்வது குறித்து, கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விஷயங்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இவை எதையும் பின்பற்றாமல், பணத்தைக் கொடுத்து ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இவ்வாறு, அந்த அலுவலகம் சார்பில் கூறப்பட்டது.

தந்தை கதறல்:

இப்பிரச்னை குறித்து, சிவகாசியில் உள்ள அருண் பிரசாத்தின் தந்தை, ராஜா கனி கூறியதாவது: கீதா, எங்கள் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார். அவரை கேட்டபோது, 'ரத்தினசாமியை என்னாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடம் பேசினால், விவரம் சொல்கிறேன்' என்கிறார். மகனை மீட்டுத் தருமாறு, போலீசில் புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு, ராஜா கனி கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

தலையங்கம் :தேர்வில் 'பிட்' கலாசாரம் தமிழகத்தில் வந்தது எப்படி?

பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. தமிழகத்தில், 8.6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்த தடவை பீகாரைப் போல பெருமளவில் காப்பி அடிக்கவில்லை என்ற ஆறுதல் இருந்தாலும், சில சம்பவங்கள்
தமிழகத்தை அதிரச் செய்தன. இந்த ஆபத்தான கலாசாரம் எப்படி வந்தது? இதை முற்றிலும் நீக்க முடியுமா என்பதற்கும் விடை
காண்பது சிரமம்.
சமீப காலங்களில், தேர்வு முடிவுகளில், அதிக உச்சத்தை தொடவைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் மாணவ, மாணவியரை தேர்வுக்கு, இயந்திர கதியில் அதிக அளவில் இயங்க வைக்கின்றனர்.சமீபத்தில், 'வாட்ஸ் அப்' மூலம் வினா-விடை விவரங்களை தந்த அதிர்ச்சி தகவல் வந்த பின், பல விஷயங்களை, முன்னாள் ஆசிரியர்கள் தமிழகத்தில் வெளிப்படையாக பேசுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 'கொள்குறிவகை'யில் 30 மதிப்பெண்களுக்கான வினாக்களுக்கு, ஏற்கனவே மாணவர்கள் சில தவறான உத்திகளை பின்பற்றும் வழக்கம், சில பள்ளிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்வு எழுதும் அறையில், நன்கு படிக்கும் தலையாய மாணவர் ஒருவர் அல்லது மாணவி, இக்கேள்விகளுக்கு ரகசிய சமிக்ஞை மூலம் மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் வழக்கம் இருக்கிறதாம்.தலையை தொட்டால், 'ஏ' என்ற விடை, மூக்கைத் தொட்டால், 'பி' சரியானது என்று சமிக்ஞை மூலம், 'பிட்' பாணிக்கு முன்னோட்டமாக இந்த முறை இருக்கிறதாம். இதை தேர்வு கண்காணிப்பாளர் எப்படி தடுக்க முடியும்?கல்வி ஒரு வியாபாரமாக ஆன அடையாளத்தின் ஒரு கூறு இது என்று பலரும் கூறலாம்.'வாட்ஸ் அப்' மூலம் பரவிய கலாசாரத்தை, இனி அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இம்மாதம், 20 தேதிக்குள் முடிந்து விடும் என்றும், அதற்குப்பின் வெளிவரும் முடிவுகளில், அதிகம் பேர்
ரேங்க் பட்டியலில் முன்னணியில் நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் மற்றொரு நல்ல அம்சமாக, புதிய சூழ்நிலை வரும் அறிகுறிகள் காணப்
படுகின்றன.தமிழகத்தில் அதிகமாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை மற்றும் அதிக
கட்டண வசூல் இத்தடவை குறையும் என கூறப்படுகிறது. காரணம், முன்னணி
கல்லூரிகள் கூட, சில துறைகளில், முழு அளவில் இடங்களை நிரப்ப முடியவில்லை.
மேலும் பல கல்லூரிகளில் குறிப்பிட்ட துறைகளுக்கான ஆசிரியர்கள் முனைவர் பட்டம் மற்றும் அதிக அனுபவத் தகுதி பெற வேண்டிய நிலை முற்றிலும் உருவாகவில்லை. அதிலும் சீர்திருத்தம் வரவேண்டும்.அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் போட்டி போடும் சூழ்நிலை, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறதா என்று எடைபோடும் காலம் வருகிறது. வேலைவாய்ப்பு தரும் கல்வி எது என்று ஆராயும் வகையில் சமுதாயம் சிந்திப்பது நல்ல அறிகுறி. அதை நோக்கி உயர் கல்வி சீராகப் போகிறது என்பதும் நல்ல அடையாளமாகும்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: வீடு தேடி வரும் அலுவலர்கள்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக விவரங்களைப் பெற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தேடி வருவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்குடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தின் படி வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் பெறப்படும். தகவல்களைப் பொதுமக்கள் தாமாக முன்வந்து மக்கள் சேவை மையம், இணையதளம், சிறப்பு முகாம்கள் போன்றவற்றில் அளிக்கலாம்.
அதேவேளையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர்களின் வீடு தேடி வந்து விவரங்களைப் பெறுவார்கள். அப்போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒரே பக்கத்தில் நகல் எடுத்துத் தர வேண்டும். அலுவலர்கள் வீடு தேடி வரும் போது கால தாமதத்தைத் தவிர்க்க முன்கூட்டியே பொதுமக்கள் நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான மனுக்கள் குறித்து சந்தேகங்களுக்கு பிரதி திங்கள், புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஏற்கெனவே வீடு வீடாகச் சென்று விவரம் பெறும் பணியைத் தொடங்கிவிட்டனர். ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் அட்டை எடுக்கும்போது வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவின் கால் லிட்டர் பாக்கெட் பால்: இன்று முதல் விற்பனை

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கால் லிட்டர் (250 மி.லி.) அளவு கொண்ட பாக்கெட் பால் சென்னை மாநகர் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 26.50 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11.67 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றில் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 7.5 லட்சம் லிட்டரும், மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் 4.17 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.
தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலையில், தரமான முறையில் கிடைக்கும் என்பதால் ஆவின் பாலை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
சந்தையில் தற்போது 4 வகையான பாலில், 500, 1,000 மி.லி. கொள்ளளவு கொண்ட பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
பிப்ரவரியில் அறிமுகம்:
இந்த வரிசையில், நிகழாண்டில் பிப்ரவரியில் பொதுமக்கள் வசதிக்காக 250 மி.லி. அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. ஆவின் நிறுவனம், சென்னை மாநகரில் ஒவ்வொரு பகுதியாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனையை விரிவுப்படுத்தி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.3) முதல் சென்னை மாநகர் முழுவதும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலைப்படுத்தப்பட்ட பால் வகையில் (பச்சை நிறம்) 250 மி.லி. அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் முதல் கட்டமாக ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை போன்ற வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளிலும், வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர், விருகம்பாக்கம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் 2-ஆவது கட்டமாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை விரிவுபடுத்தப்பட்டது.
மாநகர் முழுவதும் விற்பனை:
பரிசோதனை முயற்சியாக, நாளொன்றுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு பாக்கெட்டின் விற்பனை விலை ரூ.11 ஆகும். இதற்கு நுகர்வோர் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகையால், வெள்ளிக்கிழமை முதல் சென்னை மாநகர் முழுவதும் 250 மி.லி. கொள்ளளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும்.
ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகங்களில் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும். அதைத் தொடர்ந்து, ஓரிரு வாரங்களில் சில்லறை விற்பனை கடைகளிலும், முகவர்கள் வாயிலாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும் என்றார் அவர்.

தாமதங்களைத் தவிர்க்க முடியும் ....By க.ப. அறவாணன்

 Dinamani

கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
  
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகை புரிந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நாடு திரும்பியவுடன், செய்தியாளர்களின் வினாக்களுக்கு விடையளித்தபோது, இந்திய நிர்வாக முறை நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்று சொல்லிச் சிரித்தார்.
சிங்கப்பூர் சென்றவர்களுக்குத் தெரியும் 1965 வாக்கில் சுதந்திரம் பெற்று மலேசியாவில் இருந்து தனி நாடாகப் பிரிந்த சிங்கப்பூர் தொடக்கக் காலத்தில் தொழிலாளர்களின் கலவர பூமியாக இருந்தது. தொழிலாளர் அமைதியின்மை, வேலையின்மை ஆகியன அந்த நாட்டை வாட்டி வதைத்தன. முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற லீ பத்தே ஆண்டுகளில் இரண்டு முக்கியமான சிக்கல்களைத் தீர்த்தார்.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத அந்த நாட்டில் குடிநீர் வேண்டுகிற அளவு கிடைக்க வழி செய்தார். மலேசியாவில் இருந்து இடையில் உள்ள கடல் மேல், குழாய் அமைத்து சிங்கப்பூரில் வந்து தண்ணீர் கொட்டும்படி செய்தார். இப்போது நம் நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுக்களின் படையெடுப்பு அங்கும் இருந்தது. அவற்றை ஒழிக்க நவீன நடவடிக்கை எடுத்தார். நீங்கள் அங்கு சென்றால், கொசுக் கடி என்றால் என்ன என்று கேட்கும்படியாக இருக்கும்.
வீடு கட்ட நிலம் இல்லாத நாட்டில், 15 அடுக்கு, 20 அடுக்கு என்று அடுக்கு வீடுகளைக் கட்டினார். இந்த வீடுகளில் 24 மணி நேரமும் இயங்கும் மின்தூக்கி (லிஃப்ட்) வசதிகள். கொசு மருந்து அடிக்கிற நகராட்சி ஊழியர் வீடுவீடாக வந்து வீட்டில் ஈரம் ஒதுங்கும் இடங்களிலும் கழிவறைகளிலும் மருந்து அடித்துச் செல்வதைக் காணலாம்.
நிர்வாகத்தில் சொல்லவே வேண்டாம், அவ்வளவு வேகம். சிங்கப்பூர் தொலைக்காட்சியோ, வானொலியோ உங்களை அழைக்குமானால், உங்கள் நிகழ்ச்சி பதிவாகி நீங்கள் வெளியே வரும்போது கையில் காசோலையை நீட்டுவார்கள். இப்படியெல்லாம் எப்படி முடிகிறது?
நான் ஐந்தாண்டுகள் பிரெஞ்சு காலனி நாடான செனகலில் பணியாற்றினேன். அந்த நாட்டின் அதிபர் செங்கோர் அழைப்புக்கு இணங்க, அங்கு உள்ள டக்கார் பல்கலைக்கழகத்தில் மானிட இயல் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினேன்.
இந்தியாவுக்கும் சென்னைக்கும் வந்து சென்றவர். இந்தியப் பழக்கவழக்கங்களுக்கும் ஆப்பிரிக்கப் பழக்கவழக்கங்களுக்கும் ஆதி காலம் முதல் தொடர்பு இருந்தது என்பதை ஆராய்ச்சிப்பூர்வமாக அறிந்தவர், நம்புகிறவர். அவருடன் எனக்குக் கடிதத் தொடர்பு அடிக்கடி நிகழும். நான் கடிதம் எழுதிய அதே நாள் மாலையிலோ அல்லது அடுத்த நாளிலோ விடை மடலை எடுத்துக்கொண்டு அதிபர் அலுவலக மோட்டார் சைக்கிள் நம் வீட்டுக்கு வந்துவிடும்.
அவ்வளவு விரைவாக இயங்க முடிந்தது, இயங்க முடிகிறது. இதே வேகம் நம் நாட்டில் நிகழ்வதில்லையே, ஏன்?
உடனடியான விடை, ஆங்கிலேயர் காலத்தில் நம் மேல் அவநம்பிக்கையால் அவர்கள் அறிமுகப்படுத்திய நிர்வாக முறை, அப்படியே அட்சரம் பிசகாமல் நீடிப்பதுதான். அதுவே நாம் தற்போது கடைப்பிடித்து வரும் சிவப்பு நாடா முறை.
நம் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்றால், அங்கே உள்ள அலுவலக மேஜை ஒவ்வொன்றிலும் பத்துக்குக் குறைவில்லாத கோப்புகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கோப்பையும் அட்டையால் சாத்தி, சிவப்பு நாடா கொண்டு முடிந்து வைத்திருப்பார்கள்.
அலுவலர் ஒவ்வொன்றாகப் பிரித்து, கோப்பைப் பார்த்து அவரது கையொப்பத்தைத் தன்னுடைய கருத்தோடு பதிவு செய்வார். அந்தக் கோப்பை நாம் உற்றுப் பார்த்தால், ஒரு 10, 15 கையெழுத்துகள் சில குறிப்புகளுடன் அமைந்திருக்கும்.
கோப்பை முதலில் வாங்கிய எழுத்தர், தலைமை எழுத்தர், அதற்கு மேல் உள்ள கண்காணிப்பாளர், அவருக்கு மேல் உள்ள உதவிப் பதிவாளர், அவருக்கு மேல் உள்ள துணைப் பதிவாளர் ஆகியோர் கையெழுத்தோடும், குறிப்புகளோடும் பதிவாளர் மேஜைக்கு அடுக்கடுக்காக வந்து சேரும்.
அடுத்து அந்தக் கோப்பைப் பார்க்கிறவர், அதில் எழுதப்பட்ட அனைவருடைய வாசகங்களையும் படித்து முடிவெடுக்க வேண்டும். ஒரு கோப்பு கீழேயிருந்து மேல் அதிகாரிக்கு வந்து சேர நாள் கணக்கும் ஆகும். மாதக் கணக்கும் ஆகும். சில சமயம் ஆண்டுக் கணக்கும் கூட ஆகும்.
பல்கலைக்கழகத்தை ஆளும் பல்கலைக்கழக நல்கைக் குழு (யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் - யு.ஜி.சி.) தில்லியில் உள்ளது. நான் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, அங்கிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்து முடியாமலும், அங்கிருந்த வரவேண்டிய காசோலையை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாமலும் நேரே செல்வோம். முதலில் நமது கோப்பு எங்கே இருக்கிறது, எந்தப் பிரிவில் இருக்கிறது, எந்த மேஜையில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
யு.ஜி.சி. ஒரு சிறிய கட்டடமன்று. பல அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடம். கோப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்த பிறகு தேடி எடுத்துப் பார்ப்பார், உரிய கையெழுத்து ஆகிவிட்டதா என்று. சில சமயம் ஆகியிருக்கும், பல சமயம் ஆகியிருக்காது. அப்பொழுது நாமே கெஞ்சிக் கூத்தாடி உரியவரிடம் கையெழுத்துப் பெற்று நமக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால், அடுத்து செல்ல வேண்டிய ஒவ்வொரு பிரிவுக்கும் கோப்பை நாமே எடுத்துச் சென்று கையெழுத்துப் பெற்று வருவதற்கு நாள் முழுக்க ஆகிவிடும்.
கடைசியில் வெற்றியோடும் திரும்புவோம். பின்னர் வாருங்கள் என்ற அன்பு வார்த்தையோடும் திரும்புவோம். காசோலைகள் கூட தேங்கி விடுவதுண்டு.
நம் நாட்டில் பல்கலைக்கழக பி.எச்டி. ஆராய்ச்சிகள் நிகழுகின்றன. பதிவு செய்திருப்பவர் தம் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து, தேர்வாளரிடமிருந்து சாதகமான அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக் காத்திருப்பு ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை நீடிக்கும்.
டாக்டர் மால்கம் ஆதிசேஷையா காலத்தில் பி.எச்டி. பட்டம் பெறுவதற்கு முன்பு வாய்மொழித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் உள்ள நடைமுறை. இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று தேர்வாளரிடமிருந்து அறிக்கைகள் வந்தபின் 15 நாள் இடைவெளி வைத்து வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும். புறத்தேர்வாளர் ஒருவர் அழைக்கப்பெற்றுத் தேர்வை நடத்துவார். கேள்விகள் கேட்பவர்களுக்கு ஏற்ற விடையை ஆய்வாளர் அளித்தால், புறத்தேர்வாளர் இவருக்குப் பல்கலைக்கழகம் பி.எச்டி. பட்டம் வழங்கலாம் என்று பல்கலைக்கழகத்துக்குப் பரிந்துரை செய்வார்.
இந்தப் பரிந்துரை பெறப்பெற்று மூன்று தேர்வாளருடைய பரிந்துரைகளும், அவற்றுக்கு உரிய கோப்புகளும் ஆராய்ச்சி நிர்வாகப் பிரிவைத் தாண்டி, உதவிப் பதிவாளர், துணைப் பதிவாளர், பதிவாளர் ஆகியோரையும் கடந்து துணைவேந்தருக்கு வந்து சேரும். துணைவேந்தர் கோப்பைப் பார்த்துக் கையெழுத்து இட்ட பின்னர், இக்கோப்பு வந்த வழியே திரும்பி வரும்.
இதனை அடியொற்றி உரிய பிரிவு ஆய்வாளருக்கு பி.எச்டி. பட்டம் வழங்கலாம் என்பதைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது என்று தெரிவிப்பார். இது நடந்து முடிவதற்கு மாதக் கணக்காகும்.
எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தினோம். புறத்தேர்வாளர் முன்னிலையில் வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும். தேர்வு முடிந்து புறத்தேர்வாளர் உரிய ஆய்வாளர் பட்டத்துக்குத் தகுதி உடையவர் என்று அறிவிக்கும்போதே அந்த மேடையிலேயே பி.எச்டி. சான்றிதழைத் தாற்காலிகமாக (புரொவிஷன்) வழங்க ஏற்பாடு செய்தோம். அத்தனை பேரும் வரவேற்றனர்.
ஆனால், இதனை அறிமுகப்படுத்திய துணைவேந்தர் பணிக் காலம் முடிந்த பிறகு இந்த முறை கைவிடப்பட்டது. காரணம் என்ன? நிர்வாக எதிர்ப்பு. மீண்டும் பழைய முறையிலேயே ஒவ்வொரு மேஜை, மேஜையாக கோப்பு பயணம் செய்தது.
நமது காலதாமதத்துக்குத் தனிப்பெரும் காரணம் முடிவெடுக்க அதிகாரம் இல்லாத அமைப்புகள்தான். நம்முடைய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாமல் தலைமையை நோக்கிக் குவிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, ஒவ்வொரு கோப்பும் நெடும்பயணம் மேற்கொள்ளும்போது தாமதம் தவிர்க்க முடியாததாகிறது.
அதிகாரத்தைப் பரவலாக்கி, முடிவெடுப்பதை கீழே உள்ளவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்கும்படி செய்தால் நம் நிர்வாகம் சீர்பெற வாய்ப்புண்டு. தற்போது செல்லிடப்பேசி அறிமுகம் ஆகிவிட்ட நிலையில், செல்லிடப்பேசியிலேயே பல தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் பெறுகின்றன.
மின்னஞ்சல், நெடுந்தொலைவை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. இதைப் பயன்படுத்திக் கொள்கின்ற நிர்வாக முறையை நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்த நாளில் குறித்த நேரத்தில் செய்து முடிக்கும் பழக்கம் நம்மிடம் பொதுவாக இருப்பதில்லை. ஆனால், இந்தக் கால தாமதம் எல்லாவற்றிலும் நிகழ்வதில்லை.
சான்றாக, குறித்த நாளில், குறித்த நேரத்தில் ஒரு நொடி கூடப் பிசகாமல் திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகள் நிகழுகின்றன. கோயில் அபிஷேகங்கள் நிகழுகின்றன. இவற்றையெல்லாம் குறித்த நேரத்தில் ஒரு கணம் கூடப் பிசகாமல் கடைப்பிடிக்கும் நமக்குக் கடமைகளைக் கடைப்பிடிக்க முடியாதா என்ன? முயற்சியிருந்தால் முடியும்.

சட்டம் போட்டால் ஆயிற்றா?

இரண்டு பேரின் மரணத்துக்கு காரணமான ஒரு சாலை விபத்தில் வாகனத்தை ஓட்டிய நபருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறைத் தண்டனையை, பஞ்சாப் நீதிமன்றம் 24 நாள்களாக குறைத்ததை உச்சநீதிமன்றம் இரு நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது. 

இந்திய குற்றவியல் சட்டம் 304ஏ-இன் கீழ் தண்டனை வழங்கும் நடைமுறைகள் மீள்பார்வை செய்யப்பட வேண்டும், இந்த சட்டப் பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றோம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304ஏ-இன் படி, ஒரு நபர் தனது கவனக்குறைவினால் ஏற்படுத்தும் மரணத்துக்காக அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கின்றது. இந்த சட்டப் பிரிவை அனைத்து வகையான சாலை விபத்துகளுக்கும் பொருத்துவது முறையல்ல என்பதைத்தான் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

வாகன விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் பணக்காரர்களும் வலியோரும் குறைந்த தண்டனையுடன் தப்பித்துவிடுகிறார்கள்; கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதற்கான சட்ட நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
2007-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நடிகர் சல்மான் கான் அதிவேகமாக காரை ஓட்டி, சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் இரண்டு பேர் இறந்த விவகாரம், இன்னும்கூட முடிவுக்கு வராமல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் சூழலில், பணக்காரர்களும் வலுத்தவர்களும் குறைந்த தண்டனை பெற்று தப்பிவிடுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியிருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் கருத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த களம் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பான பயண மசோதாவை, மக்கள் கருத்துக்கேட்பு முடிந்த நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் கருத்துக் கேட்புக்காக அனுப்பியிருக்கிறது மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் மது அருந்தி வாகனம் ஓட்டுதல்தான். ஆகவே, இந்த மசோதாவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு அபராதம், தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988-இல் விதிக்கப்பட்டுள்ள அபராதம், தண்டனையைக் கடுமையாக மாற்றியுள்ளனர். 

தற்போதைய நடைமுறைப்படி, ஒருவர் மது அருந்தியிருந்தார் என்பதற்கு, அவரது 100 மில்லி கிராம் ரத்தத்தில் 30 மில்லி கிராம் மது இருக்க வேண்டும். புதிய மசோதா இந்த அளவை, 100 மில்லி கிராம் ரத்தத்தில் 20 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தாலும் அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டுநர் என்றால், முதல்முறை குற்றத்துக்கு ரூ.5,000 அபராதம், 50 மணி நேர சமூக சேவை (கம்யூனிட்டி சர்வீஸ்) அல்லது 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும், தொடர்ந்து அதே குற்றத்தைச் செய்தால் ரூ.10,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து என்றும் மாற்றப்பட்டிருக்கிறது. 

இதுவே கார், பேருந்து போன்ற நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் முதல் முறையாகப் பிடிபட்டால், ரூ.10,000 அபராதம், 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும், தொடர்ந்து அதே தவறைச் செய்து பிடிபட்டால் ரூ.20,000 அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, ஓராண்டுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும் மாற்றப்பட்டிருக்கிறது.
எந்த மாநிலமும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்காது என நம்பலாம். இதனை இன்னும் கடுமையாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

ஆனால், காவல் துறையினர் இந்தக் கடும் சட்டத்தை வெறும் லஞ்சம் பெறுவதற்கான மற்றொரு "சலுகைச் சட்டமாக' மாற்றிக்கொண்டால் குடிமகன் தப்பிப்பதும், இந்தியக் குடிமகன் இறப்பதும் தொடர் கதையாகவே இருக்கும். ஓட்டுநர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டும் வழக்கத்தை கடுமையான நடவடிக்கையால் தடுத்து நிறுத்த முடிந்தால் மட்டுமே, அதன் தொடர் நிகழ்வாகிய விபத்து மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆகவே, இந்தச் சட்டம் உயிர்ப்புடன் இருப்பதும் இல்லாததும் காவல் துறையின் அணுகுமுறையில்தான் உள்ளது. 

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளில் வாகன ஓட்டுநர் மது போதையில் இருந்தார் என்பது மறைக்கப்படுகிறது. இதற்காகப் பெருந்தொகை லஞ்சமாகத் தரப்படுகிறது. இதில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு கிடையாது. ஏழை என்றால் லஞ்சத்தின் அளவு குறையும். பணக்காரர் என்றால் லஞ்சத்தின் அளவு கூடும் என்பதாகத்தான் நிலைமை இருக்குமென்றால், இந்தச் சட்டத்தைக் கடுமையாக்கினாலும் பயன் விளையாது. 

குறைந்தபட்சமாக, மரணம் ஏற்படுத்திய விபத்துகளிலாகிலும் ஓட்டுநரின் ரத்த மாதிரிகளை எடுப்பதை காவல் துறை மட்டுமன்றி, வேறு அதிகாரிகளின் மேற்பார்வையிலும் நடத்தலாம். வேறு தடயங்கள், விடியோ பதிவுகள் மூலம் அந்த ஓட்டுநர் மது அருந்தியிருந்ததை காவல் துறையும் அதிகாரிகளும் மறைத்தார்கள் என்பது உறுதிப்படும்போது அவர்களைத் தண்டிக்கும் வெளிப்படைத்தன்மையும் உருவாக வேண்டும்.

நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் மது விற்பனை, மதுக்கூடம் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தும்கூட இதுநாள்வரை அது நடைமுறைக்கு வரவில்லை. நிலைமை இதுவென்றால், பணக்காரர்களும் வலுத்தவர்களும் சட்டத்தின் பிடியிருந்து தப்பிக்கத்தான் செய்வார்கள்!

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி பேட்டி

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்லவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி கூறினார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 580–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க். உள்ளிட்ட படிப்பை ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் செய்து வருகிறது.
இவர்களுக்கு உடை கட்டுப்பாடு குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கண்ணியமாக உடை அணிய வேண்டும் உடை கட்டுப்பாடு மாணவ– மாணவிகளுக்கு மிக தேவையான ஒன்று. இதை அந்தந்த கல்லூரி டீன்கள் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மாணவர்களின் ஆடை கட்டுப்பாடு குறை குறித்து புகார் எதுவும் வரவில்லை. மாணவ– மாணவிகள் கல்லூரிகளுக்கு கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும்.
மாணவராக இருந்தால் டி–சர்ட், பனியன் ஆடை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை, சட்டை அணிந்து வரலாம். மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட், பனியன் ஆடை, கை இல்லாத ரவிக்கை ஆகியவை அணியக்கூடாது. மாறாக சேலை அணியலாம். சுரிதார் அணிந்து வரலாம். மொத்தத்தில் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும். இப்படித்தான் பெரும்பாலான கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது.
செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செல்போன்கள் இன்றைய காலக்கட்டத்தில் அவசியம்தான். கல்லூரிகளுக்கு செல்போன் கொண்டு வரலாம். ஆனால் வகுப்புக்கு செல்லும் முன் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். வகுப்பு முடிந்த பின்னர் செல்போனை ஆன் செய்து கொள்ளலாம். உடைகளையும், செல்போன்களையும் டீன் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஓய்வூதியம் பெறுவதை எளிதாக்க புதிய தகவல்களை தாக்கல் செய்ய வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

 

ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓய்வூதியதாரர்கள்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் ‘‘பென்சன் பைலட் ஸ்கீம்’ என்ற திட்டத்தின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்றிதழ், வேறு வேலைக்கு சேர்ந்த சான்றிதழ், வேறு வேலையில் சேராமல் இருப்பதற்கான சான்று, மறு திருமணம் அல்லது திருமணம் ஆகாததற்கான சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் அளிக்கும் வங்கி அதிகாரிகள் முன்பு ஓய்வூதியதாரர் நேரிலும் ஆஜராகலாம்.

நோய் உட்பட தவிர்க்க முடியாத காரணங்களால் வாழ்வுச் சான்றிதழை பெறமுடியாமல் போய்விட்டால், அவர்களை வீட்டிலோ அல்லது ஆஸ்பத்திரியிலோ அந்த வங்கி அலுவலர் நேரில் சென்று சந்தித்துவிட்டு வாழ்வுச் சான்றிதழை அளிக்கலாம்.

புதிய மாற்றங்கள்

இந்த ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது, ஓய்வூதியம் வழங்குவதை எளிமைப்படுத்துவது குறித்து அரசுக்கு கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாவட்ட வாரியாக ஓய்வூதியம் வழங்கு அலுவலங்களிலும், ஓய்வூதியம் அளிப்பதை கண்டறிவதற்கான மென்பொருள் மற்றும் தகவல் மையம் இணைக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

மேலும், அவர்கள் டிஜிட்டல் முறையில் வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிப்பது, ஓய்வூதியத்தை தாமதமில்லாமல் வழங்குவது போன்றவற்றுக்காக ஓய்வூதியதாரரின் ஆதார் எண் இணைப்பு போன்ற சில உயிரி தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்கள்

அதன்படி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவரும் இம்மாதம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய வாழ்வுச் சான்றிதழ் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட முறையில் கூடுதல் தகவல்கள், தேவையான சான்றிதழ்கள் போன்றவற்றை ஓய்வூதியம் வழங்கு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். அவை அரசு அதிகாரியால் சான்றொப்பம் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஜூலை மாதம் நேரிலும் ஆஜராகலாம்.

மேலும், பொதுத்துறை வங்கிகள் திட்டம் என்ற பி.எஸ்.பி. திட்டத்தின்படி ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தேவையான சான்றிதழ்களை நவம்பர் மாதம் ஓய்வூதியம் வழங்கும் வங்கிப் பிரிவில் வழங்க வேண்டும். இந்த கூடுதல் தகவல்களை ஓய்வூதியம் வழங்கு அலுவலகத்துக்கு வங்கி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.

என்னென்ன தகவல்கள்?

இது ஒருமுறை செய்யப்பட வேண்டிய அம்சங்களாக உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்காத விவரங்களை, அவை கிடைத்த பிறகு சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் கூடுதல் தகவல்களை கொடுப்பது பற்றிய தகவல்களை பத்திரிகை செய்தியாக கருவூலம் மற்றும் கணக்குகள் இயக்குனர் வெளியிட வேண்டும்.

கூடுதல் தகவல்கள் பற்றிய விவரங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகியவை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், வங்கிகளின் அறிவிப்புப் பலகையில் பார்வைக்கு வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, April 2, 2015

Indian-origin Singaporean nurse to be given achievement award



An Indian-origin nurse here will receive an international achievement award for her work in the healthcare sector of women and refugees, becoming the first Singaporean to get the prestigious biennial prize.

Dr Subadhra Devi Rai, a nurse and a senior lecturer at the School of Health Sciences (Nursing) at Nanyang Polytechnic in Singapore, will be bestowed by this year's International Achievement Award by the Florence Nightingale International Foundation.

Rai was selected as the recipient of the award for her outstanding work in the health of women and refugees.The International Achievement Award will be presented to Rai at a conference in Seoul on June 21.

FNIF is the International Council of Nurses (ICN) premier foundation. Its purpose is to support the advancement of nursing education, research and services.

The award recognises Rai's work in the health of women and refugees, and is the first time a Singaporean will be awarded the biennial award since its introduction in 1999.

Speaking to the media today, Rai said she felt "honoured and humbled to receive this recognition" and hopes that this award sends a "powerful message to other nurses to serve beyond the healthcare setting".

"Without a strong understanding and awareness of the people you are helping, there would be a mismatch between the support rendered and what is needed," Rai was quoted as saying by the local media.

Her area of interest focuses on issues such as gender-based violence, sexual health and the reintegration of refugees. Over the years, she had been volunteering and working with different organisations to help and raise policy awareness for these issues.

The NYP lecturer decided to go into teaching when she realised that the younger generation is the key to a better nursing industry in the future.

"Being in this position allows me to inculcate in my students what is it actually is to be a nurse," she said, adding that she wants to initiate change in the nursing profession by instilling pride of being a nurse in students.

Rai hopes that with this award, she can inspire her colleagues to aspire more, and that the "sky's the limit".

HRD Ministry rejects media report of UGC being scrapped

The Ministry of Human Resource Development (MHRD) has rejected media reports of the University Grants Commission (UGC) being scrapped.

Describing the news report as incorrect and uncalled for, the ministry in a statement said on Wednesday that it has constituted a committee of experienced and credible academicians to recommend the restructuring and strengthening of the UGC for attaining even better performance to meet the desired objective.

It said that the committee headed by Dr. Hari Gautam has submitted their report to the Secretary (Higher Education).

It said that the report is yet to be examined.

It said that the mandate given to the committee was to analyse, review and recommend to the ministry, the architecture required for the restructuring process.

"No such decision on the UGC getting scrapped has been taken and the recommendations are yet to be understood and analysed before any decision is taken in the matter. The UGC has been created by an Act of the Parliament and cannot be unilaterally scrapped," the MHRD statement said.


பணம் கொடுத்தால் வேலை... வலை வீசும் மோசடிக் கும்பல்!



வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி விதம்விதமாக ஏமாற்றும் நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இதுமாதிரியான ஒரு மோசடிக் கும்பலிடம் சிக்கி, தப்பித்து வந்திருக்கிறார் சூரியகுமார். இந்த மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவத்தை நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

வேலைவாய்ப்பு விளம்பரங்கள்!

“படித்து முடித்துவிட்டு, வேலை கிடைக்காத காரணத்தினால் நம்பிக்கை இழந்திருந்த எனக்கு, கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்புக் கான அந்த விளம்பரம் என் கண்ணில்பட்டது. நம்பகத்தன்மையான வேலைவாய்ப்பு வலைதளத்தில் விளம்பரம் வந்திருந்ததால், அதில் குறிப்பிட்டிருந்த நபரைத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு பிரபல தொழிற்சாலையில் மனிதவள மேலாளர் என்று தன்னை சொல்லிக் கொண்டார். எனக்கு வேலை கிடைக்க உதவுவதாகவும், வேலை கிடைத்தப்பின் நான் அவருக்கு 2 லட்சம் ருபாய்த் தரும்படியும் கேட்டார். கடந்த ஆறு மாதங்களாக வேலை தேடி மிகவும் அவதிப் பட்டதால், பணம் கொடுத்து வேலை வாங்குவதில் விருப்பம் இல்லாதபோதும் வேறு வழி இல்லாததால் ஒப்புக்கொண்டேன்.



இரண்டு லட்சம் பணம்!

அவர் சொன்ன பெயரில் நிஜமாகவே ஒரு பெரிய நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் போலவே, ஒரு மின்னஞ்சலில் இருந்து என்னைத் தொடர்புகொண்டனர். தொலைபேசி மூலம் இன்டர்வியூ நடத்தப்பட்டது. அந்த இன்டர்வியூவிலேயே துறை சார்ந்த கேள்விகளை கேட்டு என்னைத் திக்குமுக்காட வைத்தார்கள்.

சில நாள் கழித்து, நான் அந்த இன்டர்வியூவில் தேர்ச்சியும் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனால், நேரில் பார்க்காமல் வேலைக்கான அப்பாயின் மென்ட் ஆர்டரை தரமுடியாது என்பதால் என்னை டெல்லிக்கு அழைத்தனர். டெல்லியில் அப்பாயின்மென்ட் ஆர்டர் வாங்கியவுடன் பேசியபடி பணத்தைத் தரவேண்டும் என்று கேட்டனர்.

கடைசி நேரத்தில்..!

டெல்லியில் அந்த நிறுவனத்தின் வாசலில் ஒரு பெண் என்னைச் சந்தித்தார். நிறுவனத்துக்குள் என்னை வரச் சொல்லாமல், வெளியில் சந்தித்ததால் எனக்குச் சந்தேகம் வந்தது. அவரைச் சந்தித்த சிறிது நேரத்தில் அவர்கள் வழங்குவதாகச் சொல்லியிருந்த அப்பாயின்மென்ட் ஆர்டர் என் மின்னஞ்சலுக்கு வந்தது. பேசியபடி பணத்தைத் தர டெல்லியிலுள்ள ஒரு இடத்துக்கு வரும்படி அழைத்தனர். என் சந்தேகம் வலுவடைந்ததால், முதல் வேலையாக செல்போனை அணைத்து விட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டேன்.

சிக்கியவர்கள் பலர்!

ஒரு மாதத்துக்குப் பிறகு ஃபேஸ்புக் மூலம் கிடைத்த தகவலின்படி, அந்த மோசடிக் கும்பல் 12 பட்டதாரிகளை ஏமாற்றியுள்ளதாகச் செய்தி கிடைத்தது. டெல்லியில் என்னைச் சந்தித்த பெண்ணின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, அந்த மோசடிக் கும்பலைப் பற்றி எழுதியிருந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் சமீபத்தில் என்னைத் தொடர்புகொண்டார். அவரும், அவரது நண்பர்கள் ஐந்து பேரும் அதே மோசடிக் கும்பலிடம் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் ரூ.12.5 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அதே மோசடிக் கும்பல் தொடர்ந்து இதேபோன்ற நூதன மோசடி வேலைகளில் ஈடுபட்டு வேலை தேடும் பட்டதாரி களின் வாழ்கையில் விளையாடி வருகின்றனர். வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், இதுமாதிரியான மோசடிக் கும்பலிடம் சிக்காமல் உஷாராக இருக்க வேண்டும். இந்த மாதிரியான மோசடிக் கும்பலிடம் இருந்து பட்டதாரிகளைக் காக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிற கோரிக்கையுடன் முடித்தார் சூரியகுமார்.



இளைஞர்கள் கவனிக்க!

இதுபோன்ற நூதனமான வேலை மோசடியில் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று சென்னையிலுள்ள மனிதவள மறுமலர்ச்சி மையத்தின் இயக்குநர் மற்றும் மனிதவள ஆலோசகர் கே.ஜாபர் அலியிடம் பேசினோம்.

“ஒரு இளைஞன் பணம் கொடுத்து வேலை வாங்க முடிவெடுத்துவிட்டால், அவன் ஏமாறத் தயாராகிவிட்டான் என்று அர்த்தம். தனது திறமையை, அறிவைக் கொண்டுதான் வேலையைத் தனதாக்க வேண்டுமே தவிர, எந்தவொரு சூழ்நிலையிலும் இதுபோன்ற காரியங்களில் இளைஞர்கள் இறங்கவே கூடாது.

இன்றைய இளைஞர்கள் பலவிதமான நூதன வேலை மோசடிகளைக் கவனிக்க வேண்டும்.

ஏமாற்றும் விதம்!

1. இல்லாத நிறுவனம், அங்கு வேலை செய்யாதவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

2. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள், இல்லாத வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

3. இருக்கும் நிறுவனம், அங்கு வேலை செய்பவர்கள் இருக்கும் வேலையை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி. ஆனால், இவர்கள் பலே கில்லாடிகளாக இருப்பார்கள். அவர்கள் சொன்னபடி வேலையையும் வாங்கித் தருவார்கள். ஆனால், அந்த வேலையானது ஓரிரு மாதங்கள்கூட இருக்காது அல்லது அங்கு ஓரிரு மாதங்கள்கூட ஒருவரால் தாக்கு பிடிக்க முடியாது.

4. பணம் வாங்கிப் பயிற்சி தந்துவிட்டு, அதன்பிறகு வேலை வாங்கித் தருவதாகக் கொடுக்கும் வாக்குறுதி.

5. புதிய நிறுவனங்களை ஆரம்பிப்பவர் கள் வேலை கொடுப்பதாகத் தரும் வாக்குறுதி. இவர்கள், “நாங்கள் புதிதாக நிறுவனம் ஆரம்பித்திருக்கிறோம். எங்களால் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்ய முடிந்தது. மீதித் தொகையை இந்த நிறுவனத்தில் வேலை செய்யத் தயாராக இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளலாம். நிச்சயமாக வேலை நிரந்தரமாகும்” என்பார்கள். இவர்களின் ஒரேநோக்கம் பணமாக மட்டுமே இருக்கும்.

முதலில், எந்தவொரு நிறுவனமும் ஆட்களை நேரில் பார்க்காமல் தொலைபேசி இன்டர்வியூ எடுத்து பணியாளர்களைத் தேர்வு செய்ய மாட்டார்கள். அதுபோல, வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்கிறவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் மையம் அமைத்து அங்குதான் தேர்வு செய்வார் களே தவிர, பொது இடங்களுக்கு மாணவர்களை வரவைத்து இன்டர்வியூ நடத்த மாட்டார்கள். இதை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மற்றும் எம்பிஏ முடிக்கும் மாணவர்களில் 15% பேர் மட்டுமே உடனடியாக வேலை செய்வதற்குத் தகுதியானவர் களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் நடத்தும் கேம்பஸ் இன்டர்வியூக்களில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். மீதி இருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்குத்தான் ஏமாற்று நிறுவனங்கள் வலைவிரிக்கின்றன.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் வேலை!

வேலைக்காகப் பணத்தைக் கொடுத்து ஏமாற்றத்தைச் சந்திப்பவர்களில் பெரும்பாலும் சமூகத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தால், ஏதேனும் ஒருவேலை கிடைத்தால் போதும் என்று நினைத்து, சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இன்றைய இளைஞர்கள் செய்யும் பெரிய தவறு, பணம் கொடுத்தாவது பெரிய நிறுவனத்தில் அதிகச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்று முனைவதுதான். இன்றைய நிலையில் தரமான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்குப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் தன்னைத் தேடிவரும் திறமையாளனை தவறவிடுவதே கிடையாது. அதே சமயம், தானாகத் தேடிப் போய்த் திறமையாளர் களை அழைத்து வருவதும் கிடையாது. அதனால், அதிக சம்பளம், பிரபலமான நிறுவனம் என்று மட்டும் வேலை தேடாமல் ஆரம்பத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் சேர்ந்து அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு சில ஆண்டு களுக்குப் பிறகு அதிக சம்பளத்துக்காக வேலையை மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனம்.

இதை விடுத்து பணத்தைக் கொடுத்து வேலைக்குச் சேர முயற்சித்தால், வேலையில்லா பட்டதாரியாகவே நிற்கவேண்டும். தவிர, பணத்தைத் தந்து வேலை வாங்கும் பணியாளரிடம் சுயமதிப்பு என்பதும், தன்னம்பிக்கை என்பதும் இல்லாமல் போய்விடும். இந்த நிலையானது தொடரும்பட்சத்தில் வேலையிலாகட்டும், பொது வாழ்க்கையில் ஆகட்டும், வெற்றியைத் தனதாக்கிக் கொள்ளவே முடியாது” என்றார்.

மோசடி நிறுவனங்கள் தீவிரமாக வலைவிரித்து அலையும் இந்தக் காலத்தில் எச்சரிக்கை அவசியம் இளைஞர்களே!

விசாரித்த பிறகு களமிறங்குங்கள்!

வேலை வாங்கித் தருவதாக சொல்லும் மோசடி நிறுவனங்கள் பற்றி சைபர் கிரைம் வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘இன்றைய நிலையில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களைக் குறிவைத்து பெரும்பாலான ஏமாற்று நிறுவனங்கள் முளைத்து வருகின்றன.இதைக் களைவதற்கான நடவடிக்கைகளை சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து எடுத்துவருகிறது. இதுமாதிரியான மோசடி நிறுவனங்களிடம் சிக்காமல், இன்றைய இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பணம் கொடுத்து வேலைக்குச் செல்லலாம் என்கிற மனநிலைக்கு வரவேண்டாம்.

இன்றைய நிலையில் பேருந்துகள், ரயில் வண்டிகள் எனப் பல இடங்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்க்கிறோம். இதைப் பார்த்ததும் நாம் நம்பிவிடுகிறோமா என்ன? அதுபோல, நம்பகத்தன்மையான வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் வேலைக்கான விளம்பரங்களைப் பார்த்தாலும் அதுகுறித்து முழுமையாக விசாரித்து, அதில் உண்மைத்தன்மை இருக்கும்போது அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. வேலைகான வாய்ப்புகளை அந்தந்த நிறுவனங்களின் வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்களா என்பதையும் பார்ப்பது அவசியமாகும். மேலும், வேலை மோசடி குறித்த புகார்களுக்கு சென்னை எழும்பூரிலுள்ள மத்திய க்ரைம் குற்றப்பிரிவு கிளையை அணுகலாம்” என்றனர்.

செ.கார்த்திகேயன்

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக ஒப்பாரி போராட்டம்: இந்து அமைப்புகள் முடிவு!

cinema.vikatan.com

சென்னை: தி.க. சார்பில் நடக்கவிருக்கும் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக பெண்களை திரட்டி ஒப்பாரி போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

அம்பேத்கர் பிறந்த நாளான 14ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என கி.வீரமணி அறிவித்திருந்தார். இதில் கலந்து கொண்டு தாலியை அகற்ற விரும்பும் பெண்கள் செல்போன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள செல்போன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலமும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாளான ஏப்ரல் 14ஆம் தேதி இந்து அமைப்புகளின் பெண்களை திரட்டி, நூதன முறையில் எதிர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆயிரக்கணக்கான பெண்களை திரட்டி, பெரியார் திடல் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

'தாலி அகற்றுவதற்கும், மாட்டிறைச்சி உண்பதற்கும் சட்டம் இயற்றக் கூடாது!'

cinema.vikatan.com

மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் அண்மையில் தாலி வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் நடத்திய தொலைக்காட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் திராவிடர் கழகம் சார்பில் கடந்த வாரம் இயற்றப்பட்ட தீர்மானங்களுள் ஒன்றாக, வரும் ஏப்ரல் 14-ம் தேதியன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியையும், மாட்டுக்கறி விருந்தையும் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். தமிழகத்தில் இந்த விவாதங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர் திராவிடர் கழகம் நிறைவேற்றி இருக்கும் தீர்மானத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒருசிலரிடம் நாம் கருத்து கேட்டோம்.


தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ''நாடு எவ்வளவோ முன்னேறிக் கொண்டிருக்கிறது. பெண்களும் பலவழிகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வறுமை, வேலை வாய்ப்பு என நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. தாலியை அகற்றுபவர்களைப் பிற்போக்குவாதிகள் என்றே சொல்வேன். பொதுவாக இந்து மதத்தில், தாலி உணர்வோடும், உயிரோடும் மதிக்கப்படுகிறது என்பது ஒரு மருத்துவராக எனக்கு நன்றாகத் தெரியும். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தது முதல் இன்று ஹைடெக் மருத்துவம் வரை என் அனுபவத்தில் பலரையும் பார்த்திருக்கிறேன்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பெண்களைத் தாலியை கழட்டச் சொன்னால்கூட அவர்கள், ஒரு மஞ்சள் கயிற்றை எடுத்துக் கழுத்தில் கட்டிக்கொண்டே பின்புதான், தாலியைக் கழட்டித் தருகிறார்கள். மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது யாரும் சொல்லிக்கொடுத்தோ இத்தகைய செயலை எவரும் செய்யமாட்டார்கள். பெண்களுக்கு தாலியின் நம்பிக்கை அவர்களுடைய உயிரோடு, உணர்வோடு கலந்திருக்கிறது. பெண்கள் இனத்தை, உணர்வை யாரும் இழிவுபடுத்த முடியாது. இத்தகைய செயல் தமிழ்ப் பெண்களுக்கு அவசியமில்லாத ஒன்று. இயற்கையைப் புறந்தள்ளுவதோடு, இதற்காக தமிழ் மக்கள் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்'' என்றார்.



கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. டி.ராஜா,''என்னைப் பொறுத்தவரை தாலி அகற்றுவது என்பது வேறு அர்த்தத்தைக் கொண்டது. உணவு முறை, பழக்கவழக்கம், சீதோஷ்ண நிலை போன்றவற்றால் ஒவ்வொரு நாட்டிலும் உணவு வகைகள் வேறுபடுகின்றன. எந்த ஒரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட உணவைத்தான் உண்ணவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுவது கிடையாது. ராஜஸ்தானில் ஒட்டகப்பால் குடிக்கிறான். தமிழகத்தில் பசு, எருமை போன்றவற்றின் பால் சாப்பிடுகிறான்.

நில அமைப்பு, தட்பவெப்பம், இயற்கைச் சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டுக்கு இது எல்லாம் பொருந்தாது. மாட்டு இறைச்சியை சிலர், தாழ்வாகவும் இழிவாகவும் நினைக்கிறார்கள். ஆனால் லண்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் மாட்டு இறைச்சி அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிலர், ஆட்டிறைச்சி, மாட்டு இறைச்சியை ஒதுக்கிவிட்டு கோழிக்கறியைச் சாப்பிடுகின்றனர். சமூக உணர்வுகள் மாறி வருகிறபோதிலும் மத நம்பிக்கைகளை வைத்து கட்டாயப்படுத்தக் கூடாது. சட்டம் போட்டு இயற்றக் கூடாது'' என்றார்.

என்னதான் நாடுதான் முன்னேறினாலும், பெண்கள் புதுமையை விரும்பினாலும் இதுபோன்ற தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல என்பதே பொதுவான கருத்தாகும்.

- ஜெ.பிரகாஷ்

பற்றெல்லாம் பற்றல்ல...

By அ. அறிவுநம்பி

பற்று. இந்தச் சொல் மூன்றே எழுத்துகளால் உருவாகியிருக்கலாம். ஆனால், அது தரும் பொருள் வானளவு பெரியது. இச்சொல்லினுடைய அடர்த்தியான அர்த்தம் புரியாததால்தான் மிகமிகச் சாதாரணமான ஆசை, விருப்பம், வேட்கை, தேவை, இச்சை, பிரியம் போன்றவற்றையும் பற்று எனத் தவறாகக் கருதுகின்றனர். கணவன் மனைவியிடம் காட்டும் அன்போ, பெற்றோர் தம் மக்களிடம் காட்டும் பாசமோ, மாணவர் தம் ஆசிரியரிடம் காட்டும் குருபக்தியோ பற்றாகாது.

உண்மையான பற்று எது? இலக்கு ஒன்றைப் பற்றிக் கொண்டு தன்னலம் மறந்து, தன் சுற்றம் துறந்து, தன்னையே மறந்து நிற்பதுவே.

மனிதர்களின் பற்றுகள் பலவகையாக அமையக்கூடும். அவற்றுள் மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப் பற்று ஆகியவை முதன்மையானவை. அதனாலேதான் பாரதி "வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு' என்று நிரல்படுத்திப் பாடம் தந்தான். ஒரு கட்டத்தில் இந்தப் பற்றுகள் பொலிவுடன், அணுக்க உணர்வுடன் மேற்கொள்ளப் பெற்றன.

எங்கோ, கண்காணாத வட்டாரத்தில் தன் இன மக்கள் அன்றாடம் காயம்படுகின்றனர் எனக் கேட்டறிந்தவுடன் கரும்புத் தோட்டத்துத் தமிழர்க்காகப் பாப் புனைந்தவன் பாரதி.

"ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்' என்பது வள்ளுவவழி.

தன் இனமக்களின் அழிவுகளைக் கண்டு இனப்பற்று மீதூரத் தீக்குளித்தவர்களை எப்படிப் போற்றுவது? இன்னும் ஒரு படி மேலே போய்த் "தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் இவ்வுலகை அழிக்கவும் முன்வருவோம்' என்ற முழக்கம் எழுந்தது இந்த மண்ணில்தானே!

தன் சுகம், குடும்ப வளம், உறவினர் நலம் போன்றவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு நாட்டு விடுதலைப் பற்றைத் தன் மனம், மொழி, மெய் எல்லாவற்றிலும் நிரப்பிக் கொண்ட தியாகிகள் பலர்.

வருமானந்தரும் வழக்குரைஞர் பதவியை உதறிவிட்டு மக்கள் நலனுக்காகச் சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார், கொடிகாத்த குமரன் போன்றோரின் அருஞ்செயல்கள் அவர்களின் தேசப்பற்றை எடுத்தோதும்.

காலம் அவ்வப்போது மாற்றங்களை தரும். அவை நல்ல மாற்றங்களாக அமையின், உலகிற்குப் பயன் கிடைக்கும். மாறிப்போனால் மக்களின் வாழ்வியல் நெறி சிதிலமடையும். இந்தச் சேதாரம் எல்லாக் கூறுகளிலும் ஏற்படும். இன்றைய பற்றுகளை உற்றுநோக்கினால் பலவற்றை இனங்காண முடியும்.

லால் பகதூர் சாத்திரி அமைச்சராக ஆகும் முன் கட்சிப் பேச்சாளராகத் திகழ்ந்தவர். கட்சிக் கூட்டங்களில் அவர் பேசுவதற்காக அந்தக் காலத்தில் அவருக்கு வழங்கப்பெற்ற மாத ஊதியம் ஐம்பது ரூபாய்.

ஒருமுறை மாதத்தின் கடைசி நாள்களில் திடீர்ச் செலவு ஏற்பட்டு அவர் திண்டாடியபோது, அவருடைய மனைவி ஐந்து ரூபாயை அவரிடம் நீட்டி, "கடந்த மாதம் மிகவும்

கடினப்பட்டு மாதச் சம்பளத்தில் இந்த ரூபாயை மிச்சம் பிடித்தேன்' என்று கூறியபோது மனைவியை அவர் பாராட்ட முன் வரவில்லை.

உடனடியாக "என்னுடைய மாதச் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் நாற்பத்தைந்து ரூபாயாக மாற்றிக் கொள்ளுங்கள்' எனக் கட்சித் தலைமைக்குக் கடிதம் அனுப்பினார். தன் இல்ல வசதியைவிடக் கட்சிப் பற்றைக் கருதிய சிலர் வாழ்ந்தனர் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.

இன்றும் அரசியலில் ஒரு பற்று உண்டு. அதன்பெயர் நாற்காலிப் பற்று. இதையடைய அரசியல்வாதிகள் கொள்கைகளைக் காற்றில் விடுகின்றனர். அரசியல் நெறிகளை அடமானம் வைக்கின்றனர். போற்றிக்கொண்டிருந்த கட்சித் தலைமைகளைத் தூற்றி நிற்கின்றனர்.

"இலக்கு' என்பது "வருமானம் தரும் பதவி' என்பதால் பகையை நட்பாக்கிக் கொள்ளவும், நட்பைப் பகையாக்கிக் கொள்ளவும், இவர்கள் தயங்குவதேயில்லை. இது சுயநலப் பற்றாகும்.

அரசியல் உலகைப் போலவே பிற உலகிலும் சில உண்டு. நடிகர், நடிகை, விளையாட்டு வீரர் போன்றாரின் திறமைகளைப் புகழுவது என்பது சரி. அவர்களை இறைவன் நிலைக்கு உயர்த்துவதும் கோயில் கட்டுவதும் எப்படி உவப்பானதாகும்? உறுதியற்றவை இப்பற்றுகள்.

எப்படி ஒரு நடிகரின் பெயரைத் தன் பெயருக்கு முன்னால் முன்னொட்டாக்கும் இரசிகன் அந்த நடிகரின் "கட் அவுட்' எனப்படும் ஓட்டுமர உருவுக்குப் பாலாபிடேகம் செய்கிறான். அந்த நடிகரின் படம் சரியாக ஓடவில்லை என்றால் வேறொரு நடிகரின் பெயரைச் சூட்டிக் கொள்வதும், சுவரொட்டி ஒட்டுவதும் என அந்த இரசிகன் மாறிக் கொள்கிறான்.

ஒரே உணவகத்தில் உணவு உண்டு வந்த ஒருவர் அதே ஊரில் புதியதாக வந்த கடையில் நல்ல உணவு கிடைக்கும்போது கடையை மாற்றிக் கொள்ளுவதைப் போன்றது இது. இது நிலையற்ற பற்று.

இன்றைக்குக் கட்சி மாறுபவர்களின் கொடி வண்ணம், துண்டு வண்ணம், சட்டை வண்ணங்களை அலசினால் அவர்களின் சாயம் வெளுத்துவிடும். தனக்குப் பிடிக்காத ஒரு குறிப்பிட்டவண்ண ஆடையைக் கட்சி அல்லது இயக்கம் அல்லது அமைப்பின் கட்டுப்பாட்டுக்காக அணிபவர்கள் பலர். வேறு வழியில்லாமல் அந்த வண்ணத் துணிகளை அவர்கள் அணிய வேண்டியதாகிறது. மனம் ஒன்றாப் பற்று இது.

தந்தை ஒருவர் தன் மகனையோ மகளையோ நன்கு படிக்கவைப்பதும், நல்லவிதமாக வளர்த்து வருவதும் பற்றாகா. அவை அவரின் கடமைகள். "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' என்பது சங்கப் பா வரி.

முதல்நாள் போருக்குத் தந்தையை அனுப்பித் தந்தையை இழந்த ஒருத்தி இரண்டாம் நாள் கணவனை அனுப்பி அவனையும் இழக்கிறாள். கவலையில் சிக்காமல் அந்த மங்கை அடுத்த கட்டமாகத் தனக்குத் துணையாக எஞ்சியுள்ள மகனையும் மூன்றாம் நாள் போர்க் களத்துக்கு அனுப்பும்போதுதான் நாட்டின் மீதான அவளின் பற்று வெளிப்படுகிறது.

அண்மையில் தென் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது. மணமகனின் தம்பி அயல் நாட்டில் பணிபுரிகிறார். அவரிடம் வயது

முதிர்ந்த உறவினர் ஒருவர் "நம்ம நாட்டுக்கு எப்பப்பா வருவ படிச்ச படிப்புக்கேத்த வேலை இங்கயும் கெடைக்குமே' எனக் கேட்டார். "ஒங்க நாட்டைக் குப்பைல போடுங்க' இது

அந்த இளைஞரின் விடை.

பள்ளிக்கூட ஆசிரியராக இருக்கும் குடும்ப நண்பர் அந்த இளைஞர் முன்பாக "நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நாட்டுக்காக நீ என்ன செய்தாய்' என்று யோசி எனக் கென்னடி சொல்லியிருக்கிறார் என ஒரு கருத்தைப் பரிமாறினார்.

இதற்கு அந்த இளைஞர் தந்த பதிலிது: "இந்த நாடு எனக்கு எதுவும் செய்யவில்லை நானும் அதற்கு எதுவும் செய்யவில்லை. எனவே இதுக்கும் அதுக்கும் சரியாய்ப் போயிற்று'.

வெளிநாடுகளில் பணிபெற்றுக் குடும்பம் நடத்துபவர்களில் பலபேர் தங்கள் மகளின் திருமணத்திற்கு வரன்தேடும்போது மட்டும் தாய் நாட்டைத் திரும்பிப் பார்க்கின்றனர்.

அதே வெளிநாட்டிலுள்ள இளைஞர்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதே நடப்பியல்.

இங்கே வருந்தத்தக்க செய்தி எதுவென்றால் அவர்களின் மகள்கள் அந்தந்த அயல்நாடுகளிலே வாழ்க்கைபெற நினைக்கிறார்களே தவிரத் தாய் நாட்டிற்குத் திரும்ப ஆசைப்படவில்லை. பூர்வீகம், பாரம்பரியம், சொந்த ஊர், உறவின் முறை என்ற சொற்கள் யாவும் இன்று செல்லாக் காசுகளாக, உள்ளீடற்றவையாகக் காணப்படுகின்றன. திசை மாறிய பற்று இது.

பக்தி உலகிலும் வேரற்ற பற்றுகள் தென்படுகின்றன. இறைவனின் திருவடிப் பேறே தன் பற்று என முடிவு செய்தவர் காரைக்காலம்மையார். இதற்காகத் தன் இளமைக் கோலத்தைத் துறந்தவர். வாழ்வு நலத்தை இழந்தவர். பேயுருவாக அமர்ந்து ஈசனில் கரைந்தவர்.

இன்றைய நிலைக்கு வரலாம். மூன்று பெரிய ஆலயங்களில் கள ஆய்வு செய்தபோது ஆய்ந்து பெற்ற முடிவுகள் இங்கே பதிவாகின்றன. கோயிலுக்கு வருபவர்களில் அறுபது விழுக்காட்டினர் மட்டுமே மெய்யன்பர்கள். இருபது விழுக்காட்டினர் கோயிலுக்கு வருவதை ஒரு பகட்டு நாகரிகமாகக் கொண்டவர்கள்.

குழுக்களாக வருபவர்களில் பாதிப்பேர் பிறருக்குத் துணையாக வந்தவர்கள் என்பதையும் இதிலடக்க வேண்டும். மீதி இருபது விழுக்காட்டினர் பொய்யான பக்தியால் ஆலயத்திற்கு வருவோர். இது போலிப்பற்று.

நின்று உயரத்துடிக்கும் ஒரு முல்லைக்கொடி காற்றில் அலைந்து தவிக்கும்போது பக்கத்தில் இருக்கும் கள்ளிச்செடியில்கூடப் பற்றிப் படரும். அறிவுடைய மனிதர்கள் அப்படிச் செய்யலாமா? இவ்வுலகில் இருவகைப் பற்றுகள் உள.

முதலாவது, மெய்யை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு, தூய்மை நிறைந்ததாக, உண்மை மாறாமல் அமையும் முறையானபற்று. இது குன்றின் மீது செதுக்கப்பட்ட உருவங்களைப் போன்றது. காற்றின், மழையின், வெயிலின் வீச்சுகளால் அவை கலங்குவதில்லை.

இரண்டாவது, பொய்யை அடிநாதமாகக் கொண்டு, போலித்தனத்தை மூலமாக்கிக் கொள்ளும் விளம்பரப் பற்றுகள். இவை நீர்க்குமிழிகள் போன்றவை. இவை பார்க்க அழகாகத் தோன்றும் அடுக்கடுக்காய் வரும். ஆனால், நிலைப்புத் தன்மை இல்லாதவை.

இந்த இருவகையில் எந்தப் பற்றைப் பற்றிக் கொள்ளப் போகிறது உங்கள் பற்று?

தடம் மாறும் இளம் தலைமுறை

Dinamani

ஒரு தந்தை "என் மகன் தலையெடுத்துட்டான்னா, எனக்கு கவலையில்லை' என எண்ணுவார். ஓர் ஆசிரியர் "மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்' என்பார்.

ஒரு நாட்டின் தலைவர் "இளைஞர்களின் வலிமையால், எழுச்சியால் இந்த சமுதாயத்தையே மாற்றிக் காட்டுவேன்' என்று மேடைகளில் பேசுவார். இவ்வாறு நாட்டின் சாதாரண குடிமகனில் இருந்து, அந்நாட்டின் தலைவர் வரை இளம் ரத்தத்தைச் சார்ந்தே சிந்திக்கிறார்கள்.

உலக நாடுகள் அனைத்துமே தத்தம் நாடுகளின் வளர்ச்சியை இளைஞர்களின் சிந்தனை, செயலாற்றலைக் கொண்டே நிர்ணயித்து வருகின்றன.

கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அந்தத் துறையில் இளைஞர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.

இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்களின் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இளைஞர்களின் எதிர்காலம் சிதைந்து வருவதையும் காண முடிகிறது.

குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கக் கூடிய மாபெரும் அழிவு சக்தியாக போதைக் கலாசாரம் பெருகி வருகிறது.

நாட்டையே உலுக்கிய தில்லி மாணவி மானபங்க சம்பவத்திலும், இன்னும் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட முக்கிய குற்றச் செயல்களுக்கும் ஊக்கியாக இந்த உற்சாக பானம் என்றழைக்கப்படும் மது இருந்து வருகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

முன்பெல்லாம் இளைஞர்கள், தெரிந்தவர்களோ, உறவினர்களோ பார்த்துவிடக்கூடாது என்பதற்காக புகைப்பதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்துக்கோ, குளத்துக்கரைக்கோதான் செல்வார்கள்.

இன்றோ கடையின் ஒரு பக்கம் நின்று தந்தை புகைத்தால், மறுபக்கம் நின்று மகன் புகைக்கும் அளவுக்கு, புகைப் பழக்கம் என்பது மிகச் சாதாரணமாகிவிட்டது. இதேபோலதான் மதுப் பழக்கமும்.

இதில், அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல், தற்போது மாணவர்களும் பெருமளவில் புகை, போதை உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாகி வருவதுதான்.

முன்பெல்லாம் கல்லூரிக் கல்வி முடித்த பிறகு அல்லது திருமணத்துக்குப் பிறகுதான் புகைப் பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகும் நபர்களைக் காண முடியும். ஆனால், தற்போது 8}ஆம் வகுப்பு மாணவர்கள்கூட சாலைகளில் சர்வ சுதந்திரமாக தைரியமாக நின்று புகைப்பதைக் காண முடிகிறது.

10}ஆம் வகுப்பு வரும்போது, இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் நல்லது, கெட்டது என அனைத்துக்கும் "பார்ட்டி' என்ற பெயரில் சிறுவர்களும் இளைஞர்களும் புகைப்பதையும், மது அருந்துவதையும் கண்கூடாகக் காண முடிகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று 10 வயதுக்குள்பட்ட சிறுவர்கள்கூட விதவிதமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவலாக இருக்கிறது.

முன்பு பள்ளிகளில் எழுதப் பயன்படுத்தும் குச்சி, சாக்பீஸ் போன்றவற்றைச் சாப்பிடும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பதையும், தண்டிப்பதையும் பார்த்திருப்போம்.

ஆனால், இன்று சிறுவர்கள், தங்கள் பெற்றோரின் இரு சக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்க்கை திறந்து, அதனை முகர்ந்து ஒருவிதமான போதையில் கிறங்கி இன்புறுகின்றனர்.

அதேபோல், பந்துமுனை பேனாவால் எழுதியதை அழிக்கப் பயன்படும் ஒயிட்னருடன் ஒருவித ரசாயனத்தையும் முகர்ந்து போதையில் லயிக்கின்றனர்.

மேலும், இருமல் மருந்தாகப் பயன்படும் டானிக்கை மருத்துவர் குறித்துக் கொடுக்கும் அளவுக்கும் மேலே பருகி, அதனால் ஏற்படும் போதையில் திளைக்கின்றனர். வலி நிவாரணியாகப் பயன்படும் ஒரு சில மாத்திரைகளை குளிர்பானங்களில் போட்டு அதைப் பருகி ஏற்படும் போதையில் மகிழ்கின்றனர்.

இவை தவிர, அரசால் தடை செய்யப்பட்ட பாக்கெட் புகையிலை, போதைப் பாக்குகள், கிளர்ச்சியூட்டிகள் என மாணவர்களை போதையின் பாதையில் தள்ளுவதற்கு ஏராளமான பொருள்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

இவற்றையெல்லாம் வெளியுலகுக்கும், தங்களது பெற்றோருக்கும் தெரியாமல் மாணவர்களும், இளைஞர்களும் பயன்படுத்தி போதையில் சுகம் (?) காணத் தொடங்கியிருக்கின்றனர்.

தற்போது மிகக் கொடூரமான முறையில் பாம்புக் குட்டியை வைத்து இளைஞர்கள் போதையேற்றிக் கொள்வது இணையதளம் மூலம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு முறை பாம்புக் கடி போதைக்கு ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறதாம்.

இப்படி போதையில் மூழ்கி வீணாகும் இளைஞர்களையும், சிறுவர்களையும் மீட்டெடுக்க கேரள அரசு "கிளீன் கேம்பஸ்' எனும் திட்டத்தை பள்ளிகளில் தொடங்கி போதை குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

இதுபோன்ற ஆக்கப்பூர்வமான, மறுமலர்ச்சித் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால்கூட நல்லதுதான்.

ஏனெனில், போதையின் பாதையில் இளைய சமுதாயம் தடுமாறி, தடம் மாறி போனால் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

By இராம. பரணீதரன்

சமையல் எரிவாயு நேரடி மானியத்திற்கு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி நேரடி மானியத்திட்டம் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் சிலிண்டர் மானியத்தொகை போடப்பட்டு வருகிறது.

இதனிடையே, சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனிடையே, வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அதில் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு கட்டாயம் என அரசு கூறுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த திட்டத்தில் சேர, அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக அரசு காலக்கெடு விடுத்துள்ளதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார். ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரடி மானியம் பெறுவதற்கு இதுவரை 86 சதவீதம் நுகர்வோர்கள்தான் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டாள் யார்? - விடை சொல்லும் டிராபிக் ராமசாமி!

01.04.1934 அன்றுதான் இந்த அவதாரப் புருஷன் அவதரித்த நாள். ஆமாம்... அன்றைய தினம் முட்டாள்கள் தினம். ‘குற்றங்களையும் குணக்கேடுகளையும், சமூக அவலங்களையும் எவனொருவன் சகித்துக்கொள்கிறானோ அவனே முட்டாள்’ என உரத்துச் சொல்லும் இந்தக் கிழட்டுப்பயல், முட்டாள்கள் தினத்தில் அவதரித்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஊரே கூடும் அளவுக்கு ஒப்பாரி வைத்து புழுதி கிளம்பும் அளவுக்குப் பூமியை உதைத்த பிறகே நான் பிறந்தேன் என்றாள் என் அம்மா சீத்தம்மாள்.

புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில்தான் வீடு. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இங்குதான். என் அப்பா ரெங்கசாமி எங்கள் ஏரியாவில் பெரிய மனிதர். இங்குள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் பக்த சபாவின் தலைவராக இருந்ததால் ஏரியாவாசிகளிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. தீவிர காங்கிரஸ்காரர். நேர்மைமிகு ராஜாஜியின் பக்தர்.
நான் வீட்டுக்குத் தலைப்பிள்ளை. எனக்கு அடுத்து ஐந்து தம்பிகள், ஐந்து தங்கைகள். வீடு குழந்தைகளால் நிரம்பி வழிந்தது. வீட்டு வேலைகள் செய்யவும், அப்பாவுக்குப் பணிவிடை செய்யவுமே அம்மாவுக்குத் தலைசுற்றும். தம்பி, தங்கைகளைக் கவனிப்பதுதான் என் முதல் முக்கிய வேலை. அவர்களுக்கு ஆயா முதல் அம்மா வரை எல்லாம் நான்தான். பிறகுதான் படிப்பு, பள்ளிக்கூடம் எல்லாம். தம்பி தங்கைகளைப் பராமரித்தப் பிறகு, அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்பிப் போவேன். தெருவுக்குப் பக்கத்தில் இருந்த கார்ப்பரேசன் பள்ளியில் தொடக்கக் கல்வியையும், முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியையும் முடித்தேன்.

அப்பா பெரம்பூர் பி.என்.சி. மில்லில் வேலை செய்தார். அவரின் வருமானம் மட்டும்தான். பிள்ளைகளின் தேவைகளைத் தீர்த்து வைப்பதற்குப் போராடுவார். நானும் வேலைக்குப் போனால் அப்பாவின் கஷ்டத்தைக் குறைக்கலாம் என்று எண்ணி ஒரு வேலையில் சேர்ந்துவிட முடிவெடுத்தேன்.

அப்பா வேலை பார்த்த பி.என்.சி. மில்லில் எனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தார். 1954ல், 48 ரூபாய் சம்பளத்தில் வீவிங் மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று வருடம் ட்ரெய்னியாக வேலை. தேடும் நேரத்தில் கிடைக்கிற வேலை வயிற்றைப் பிடித்து இழுத்தபோது கிடைக்கிற ஆகாரத்தைப்போல். அதனால், அந்த வேலையில் மிகுந்த ஆர்வத்தோடு பணியாற்றினேன். இதுதான் வேலை, இத்தனை மணிக்கு வந்தால் போதும் என்கிற சுதந்திரத்தை எல்லாம் சட்டை செய்யாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்தேன். எவனொருவன் கடிகாரத்தைப் பார்க்காமல் உழைக்கிறானோ... அவனே கடமைக்காரன். வயிற்றுக்குப் படியளப்பவனிடம் வரையறைக் காட்டி உழைப்பது தவறு. வேலை முடிய இரவு எந்நேரமானாலும் அதுவரை இருந்து பணியை முடித்த பிறகே கிளம்புவேன். இந்தக் கடமை உணர்வு மில்லின் மேலாளர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. அதனால், என்னை விரைவிலேயே பாராட்டி பணி நிரந்தரம் செய்தார்கள்.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்து இயங்கியதால் அந்த மில்லில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். எல்லா விதத்திலும் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். ஒரு மிலிட்டரி கேம்ப்போல் அந்த மில் இயங்கும்.

நேரம் எவ்வளவு நெகிழ்வானது, நேர்த்தியானது, நேரத்தின் நாடிபிடிக்கும் வித்தையை இங்குதான் கற்றுக்கொண்டேன். நேரத்தை நேர்மையாகச் செலவிடக் கற்றுக்கொண்டால் வாழ்வின் நேர்கோட்டுப் பயணத்தில் நாம் எந்த நெருடலுக்கும் ஆளாக மாட்டோம் என்பது என் எண்ணம்.

மில்லில் நல்லபடியான உத்யோகம்தான் என்றாலும், என் சமூக ஆர்வம் அடிக்கடி கண்விழித்து என்னை உசுப்பேற்றும். காக்கி யூனிபார்முடன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெறிப்படுத்துதலில் இயங்கும் போலீஸாரைப் பார்க்கும்போது அவ்வளவு ஆசையாக இருக்கும். எத்தகைய அர்ப்பணிப்பான பணி இது? காக்கி உடுப்பை உடுத்திக்கொள்ளும்போது எவ்வளவு பெருமிதமாக இருக்கும்? கைநிறையச் சம்பளத்துக்கு வேலை பார்த்தாலும், இந்த போலீஸ் அதிகாரிகளைப்போல் சமூகப் பொறுப்பு மிக்க மனிதனாக உருவெடுக்க முடியவில்லையே என்கிற உறுத்தல் எனக்கு மிகுதியாக இருந்தது.

வேலையை விட்டுவிட்டு போலீஸ் பயிற்சி, அதற்கான படிப்புகளில் இறங்கிவிடலாமா என்கிற எண்ணம் பெருக்கெடுத்து ஓடியது. காக்கிச் சட்டையின் மீது நான் கட்டி வைத்திருந்த காதல் அத்தகையது. எந்தக் காக்கி உடுப்பை விரும்பினேனோ... எதை அணிய முடியவில்லை என ஏங்கித் தவித்தேனோ... அந்தக் காக்கிச் சட்டைகளையே பிடித்து உலுக்கும் ஒருவனாக நான் உருவெடுத்தது காலத்தின் கோலம். இன்றைக்கு வேண்டுமானால் காக்கி உடுப்பின் மீது எனக்கு தீராதக் கோபமும், ஆத்திரமும் இருக்கலாம். ஆனால், அன்றையக் காலகட்டத்தில் நான் காவல்துறை மீது வைத்திருந்த மரியாதை சாதாரணமானது அல்ல.

‘போலீஸ் உத்தியோகம் பார்க்கிறோமோ இல்லையோ... அவர்கள் செய்யும் சேவையில் பாதியையாவது செய்தே தீருவது’ என முடிவெடுத்தேன். சனி, ஞாயிறு நாட்களில் மில் விடுமுறை என்பதால், ஊர்க்காவல் படையில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டேன். அப்போது ஊர்க்காவல் படை, போலீஸுக்கு நிகராக இருந்தது. அதில் வேலைக்குச் சேர்ந்தது கிட்டத்தட்ட பாதி போலீஸ் அதிகாரி ஆனதற்குச் சமம்? அதனால், எனக்குப் பெருமை பிடிபடவில்லை. 1963ல் இருந்து 1971 வரை அதில் பணிபுரிந்தேன். 3 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள்.

கோவிந்தசாமி நாயுடு அவர்கள்தான் அப்போது ஏரியா கமாண்டராக இருந்தார். கடமையைக் கண்ணியத்தோடு செய்யக் கூடியவர். சனி, ஞாயிறுகளில் ஜெயின் ஜார்ஜ் ஸ்கூலில் (புத்தகக் கண்காட்சி நடக்குமே) ட்ரெய்னிங் இருக்கும். ட்ரெய்னிங்கில் உடற்பயிற்சி ஹெவியாக இருக்கும். டிராஃபிக் கிளியர் செய்வது எப்படி என்கிற பயிற்சியை இங்குதான் தெரிந்துகொண்டேன். போலீஸின் அதிகாரங்கள் என்னென்ன என்றும், அவர்களின் வேலை என்ன என்பதையும் விளக்கமாக அறிந்தேன்.

மில்லில் வேலை செய்வது, ஊர்க்காவல் படையில் பணியாற்றுவது என 24 மணி நேரமும் பிஸியாக இருந்தாலும், நிமிட நேரத்தைக்கூட வீணடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். கிடைக்கும் நேரத்தைப் பயன்படுத்தி ஜவுளி தொடர்பான உயர் படிப்பை (A.I.M.E.) அஞ்சல் வழியில் படித்து பாஸ் செய்தேன். டாடா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பம் அனுப்பிவிட்டு, பழைய மில் வேலையிலேயே தொடர்ந்தேன்.

நிர்வாகம் நடத்திய பதவி உயர்வுத் தேர்வுகள் பலவற்றை பாஸ் செய்து மேலாளருக்கு அடுத்த நிலையில் வந்து அமர்ந்தேன். பொறுப்பு அதிகரிக்கும்போது வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். ஒருகட்டத்தில் 24 மணி நேரமும் போதாது என்கிற அளவுக்கு வேலைப்பளு. வேலையைப் பார்த்து அலுத்துக்கொள்கிற ஆள் இல்லை நான். ஆனாலும், வெளி உலகக் கவனிப்புகள் மீது ஆர்வம் பூண்டிருந்த என்னால் ஒரு கட்டடத்துக்குள் அடைபட்டுக் கிடக்க முடியவில்லை என்பதே உண்மை. பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நமக்குக் கீழே நான்கு பேர் கைக்கட்டி நிற்பதைப் பார்த்துப் பெருமிதப்படுவது என நம் எண்ணங்களுக்கு எதிரான சூழல் உருவாகிவிடுமோ... நாமும் அதற்குப் பழக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயம் எனக்குள் உருவானது. அதனாலேயே மில் வேலையில்  இருந்தப் பிடிப்பு மெல்ல மெல்லத் தகர்ந்தது. இருப்பது ஒரு வாழ்க்கை. இந்த வேலையிலேயே நம் ஆயுள் கரைந்து போய்விடுமோ என்கிற யோசனை என்னை விழுங்கத் தொடங்கியது. எப்போது நாம் பார்க்கின்ற வேலையில் நம் பிடி தளர்கிறதோ... அப்போதே அதில் இருந்து வெளியேறுவது நல்லது. நமக்கு மட்டும் அல்ல... நாம் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அது நல்லது.
அதனால், மிக நல்ல பதவி, கைக்குப் போதுமான சம்பளம் என்கிற நிலையிலும் தைரியமாக ராஜினாமா கடிதம் எழுதினேன். மேல் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. ‘என்னாச்சு உங்களுக்கு?’ எனப் பதறினார்கள். 48 ரூபாயில் தொடங்கிய என் ஊதியம் 2,700 ரூபாயாக உயர்ந்து நிற்பதைச் சுட்டிக் காட்டினார்கள். அன்றைய காலகட்டத்தில் 2,700 ரூபாய் என்பது இன்றைய அரை லகரத்துக்குச் சமம். ‘இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்யணும்னு நினைக்கிறேன் சார். இந்த மில்லுக்குள் அடைந்து கிடந்தால் என்னால் ஏதும் செய்ய முடியாமல் போய்விடும். அதனால்தான் வெளியே போறேன்’ எனச் சொன்னேன். ஏதோ பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார்கள்.

வேலையை உதறிவிட்டு வீட்டுக்கு வந்தால்... டாடா மில்லில் இருந்து வேலைக்கான அழைப்பு வந்திருந்தது. எந்த வேலைக்காக நான் விண்ணப்பம் அனுப்பிக் கனவுகளோடு காத்திருந்தேனோ... அதே வேலை! உடனே கிளம்பி பம்பாய்க்கு வரச் சொல்லி இருந்தார்கள். சம்பளம் 4,500 ரூபாய். ‘அலுவலக வேலைகளே வேண்டாம்... இந்த சமூகம் சார்ந்த ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டுமே’ என்கிற எண்ணத்தைத் தவிடுபொடியாக்க எத்தனை விதமான தூண்டில்கள் என்னை மொய்க்கின்றன? எப்போதுமே எதை நாம் விட்டுவிட நினைக்கிறோமோ... அதுதான் நம்மை விடாப்பிடியாகத் துரத்தும். வேலை கேட்டு நாயாக அலைந்தபோது கிடைக்காத வேலை... அதைவிட்டுவிடத் துடிக்கிறபோது வீடு வரை துரத்தி வருகிறது. அதுதான் விதி. அதுவும் பெரிய அளவு சம்பளம் என்கிறபோது கொள்கையாவது கோட்பாடாவது என மனதைத் தோற்கடித்துவிடுகிறது புத்திசாலி மூளை.

நீண்ட நேரம் யோசனையில் இருந்தேன். 4,500 ரூபாய் அல்ல... நாலு லட்சமே சம்பளம் கொடுத்தாலும் அது எனக்குத் தேவை இல்லை என உறுதியாக முடிவெடுத்தேன். பம்பாய் டாடா கம்பெனியின் அழைப்புக் கடிதத்தை சட்டெனக் கிழித்துப் போட்டேன். காரணம், அது கையில் இருக்கும் வரை மனதும் சலனத்துடனேயே இருக்கும். எந்த முடிவையும் யோசித்து எடுப்பது நல்லதுதான். ஆனால், அந்த யோசனை ஒருபோதும் நம்மை சபலப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது.

சமூகம் சார்ந்து இயங்க வேண்டும் என்கிற உந்துதல் ஒருபக்கம்... அதே நேரம் குடும்பத்தினரைப் பிரிந்து பம்பாய்க்குப் போய் வாழ்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை. இந்த ஒரு பிறப்பில் நம் உறவுகளாக வாய்த்தவர்களைப் பிரிந்துபோய் லட்சக்கணக்கில் சம்பாதித்துத்தான் என்ன புண்ணியம்? குடும்பத்தைப் பிரிந்து போனால் கோடி ரூபாய் லாபம் என்றாலும், அது நமக்கு வேண்டாம் என முடிவெடுத்தேன். அன்பின் கதகதப்பை இழந்து எதையும் சம்பாதித்துவிட முடியாது என்பது என் எண்ணம். ஆனால், எந்தக் குடும்பத்தைப் பிரியக் கூடாது என்றெண்ணி பம்பாய் வேலையை உதறினேனோ... அந்தக் குடும்பமே என்னை அநாதையாகத் தவிக்கவிட்டுப் போனதுதான் வாழ்க்கையின் விசித்திரம்!

- டிராஃபிக் ராமசாமி எழுதிய விகடன் பிரசுரத்தின் ‘ஒன் மேன் ஆர்மி’ நூலில் இருந்து...

Madras HC fines govt Rs 25,00 for delay in filing affidavit

CHENNAI: Slamming bureaucratic delays in filing replies in cases pending in courts, the first bench of the Madras high court has imposed Rs 25,000 cost on the Tamil Nadu government, and directed it to recover the sum from the salary of the officer responsible for filing counter-affidavit in a PIL.

The bench of Chief Justice Sanjay Kishan Kaul and Justice M M Sundresh, hearing a PIL filed by advocate V Vasanthakumar on implementation of Supreme Court orders pertaining to judicial reforms, pointed out that despite four adjournments since November 2014, the government has not filed its counter-affidavit. On December 11, 2014, the court imposed Rs 10,000 as cost and adjourned the matter to February 26, 2015. Still, neither the cost was paid nor counter-affidavit filed.

On Wednesday, taking serious note of the delay, the judges said: "The counter-affidavit should be filed by the state government within four weeks, subject to a cost of Rs 25,000. The cost be recovered from the delinquent officer responsible for not filing the counter-affidavit, and certificate of recovery be filed, failing which the secretary shall remain present in court."

The judges also rapped the state government for keeping the law secretary's post vacant, and making do with an additional secretary. They then directed the additional law secretary to be personally present in court on June 25. As for a counter-affidavit by the Centre, the judges gave four weeks for it to file the reply otherwise additional secretary in the Union law ministry should be present in court with relevant records. The judges also rued that pleadings were not filed in time by authorities.

Misconduct no basis to deny pension: Delhi HC

NEW DELHI: A misconduct of an employee cannot entitle the government to cut pension and other post retirement benefit, the Delhi High Court has held.

Only when the misconduct is "grave" can the employer slash benefits.

"For a retired government servant a cut in pension can be ordered if the misconduct of which he is found guilty is grave. Mere misconduct, without a finding of it being grave, would not empower the competent authority to order a cut in pension," a bench of justices Pradeep Nandrajog and Pratibha Rani ruled recently.

The court was hearing a petition filed by a retired CRPF commandant who had challenged the decision of the higher authorities to slash his pension. The court not only quashed the move to cut pension but also restored the gallantary medal awarded to him. The CRPF top brass penalized the commandant for using official vehicle while on casual leave, but the court said his misconduct is not grave.

The judges said "the penalty imposed upon the petitioner of 5 per cent cut in pension for six months is set aside and the action initiated to withdraw the gallantry medal awarded to the petitioner is also quashed."

The officer had challenged the charges and penalties imposed for using service car and escort vehicle to return from his residence at Chandigarh to his base at 14 Battalion of CRPF at Amritsar in 1993, an act which was considered serious misconduct and unbecoming of government servant. Under the provisions of conduct rules, officers on casual leave are not entitled for government vehicles.

The bench noted that the gallantry medal and the citation were issued conferring an honour upon the petitioner for an operation dated October 4, 2006, which has no connection with the incident dated December 21, 1993, for which the petitioner was named in a charge sheet. "Further, the basis to initiate the action to withdraw the gallantry medal is founded on the penalty levied upon the petitioner of 5 per cent cut in pension for six months, which penalty we have quashed and thus for said additional reason the said action to initiate cancellation/withdrawal of the gallantry medal is required to be quashed. We do so," the bench said.

It observed that the period in question in 1993, was when terrorism was not fully eradicated in Punjab and thus the petitioner having required a dispatch service car and Gypsy to be sent to Chandigarh to transport him back to Amritsar was justified. "Under the circumstances we hold that the misconduct, if any committed by the petitioner, is not a grave misconduct and thus we quash the penalty levied of 5 per cent cut in pension for a period of six months," the bench said.

காவிரி மேலாண்மை வாரியம்

நடந்தாய் வாழி காவிரி என்று காவிரி டெல்டா பாசன விவசாயிகளெல்லாம் தங்கள் வாழ்க்கையின் வசந்தமாக போற்றிப்பாடுவதுதான் காவிரித்தாய். ஒரு பெண்ணின் பிறந்த வீடு ஒன்று என்றாலும், புகுந்த வீடுதான் அவள் வாழ்க்கையில் பெருமை சேர்க்கும். புகுந்த வீட்டுக்குத்தான் அவள் பங்களிப்பு அதிகமாக இருக்கும், இருக்கவேண்டும், இருப்பதுதான் காலத்தின் நியதி என்பதுபோல, காவிரி கர்நாடகத்தில் உள்ள தலைக்காவிரியில் பிறந்தாலும், அவளுக்கு புகுந்த வீடு தமிழ்நாடுதான் என்ற வகையில்தான் எப்போதும் ஆண்டாண்டுகாலமாக கருதப்பட்டுவருகிறது. அந்த வகையில், எப்படி புகுந்தவீட்டுக்கு வந்த ஒரு பெண், அந்த வீட்டின் குடும்பத்தலைவியாக சகல உரிமைகளும் பெற்று வலம் வருவாளோ அதுபோலத்தான், காவிரியையும் விவசாயிகள் கருதுகிறார்கள். அந்த நிலையில், புகுந்த வீட்டுக்கு போகக்கூடாது என்று ஒரு பெண்ணை பிறந்தவீடு தடுப்பது எந்த வகையிலும் அவளுக்கு சிறப்பு சேர்க்காது. அதுபோல, ஒரு நிலையைத்தான் இப்போது காவிரி ஆற்றுக்கு மேகதாது அணை மூலமாக எற்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது. பெருக்கெடுத்து ஓடும் காவிரியை தடுக்கும் வகையில் தமிழக எல்லையில் மேகதாது அணையைக் கட்டினால், காவிரி ஆற்றுத்தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் ஓடி வருவது பெரிதும் தடைபட்டுப்போய்விடும். வாழி காவிரி என்று பாடவேண்டியதற்கு பதிலாக வறண்ட காவிரி என்ற நிலை உருவாக வழிவகுத்துவிடும்.

கர்நாடகத்தில் உள்ள குடகு மலையில் தலைக்காவிரியில் உற்பத்தியாகி ஓடிவரும் காவிரி கனகபுரா தாலுகாவில் சில இடங்களில் பாறை இடுக்குகளுக்கு இடையில் ஓடிவருகிறது. மிகவும் குறுகலான அந்த இடம் ஒரு ஆடு தாண்டிவிடும் அளவிலேயே இருப்பதால், அந்த இடத்தில் ஓடிவரும் காவிரியை ஆடு தாண்டும் காவிரி என்பார்கள். ஆடு தாண்டி என்பதற்கு கன்னட மொழியில் மேகதாது என்பார்கள். அந்த மேகதாதுவில்தான் கர்நாடக அரசு அணைகட்டி காவிரியின் ஓட்டத்தை தடுக்க முயல்கிறது. மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி கர்நாடக அரசாங்கத்தால் இப்போது மட்டுமல்ல, 1981–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதியே தொடங்கிவிட்டது. அப்போது கர்நாடகத்தில் குண்டுராவும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும் முதல்–அமைச்சர்களாக இருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். அடுத்த ஒரு மாதத்துக்குள் அப்போது ஜனாதிபதியாக இருந்த சஞ்சீவ ரெட்டியை வைத்து அடிக்கல் நாட்டவும் ஏற்பாடு நடந்தது. இந்த தகவலை அப்போது எம்.எல்.ஏ.யாக இருந்த பழ.நெடுமாறன், எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு கொண்டுவந்த நேரத்தில், உடனடியாக எம்.ஜி.ஆர் மிகவும் ராஜதந்திரத்தோடு எடுத்த நடவடிக்கைகள் அப்படியே இந்த திட்டத்தை முடக்கிப்போட்டுவிட்டது.

மீண்டும் இப்போது இது தலையெடுத்துள்ளது. இதற்கு ஒரேவழி காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் ஆணையத்தையும் அமைக்க மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், இதுபோன்ற புதிய திட்டங்கள் எதையும் அது கர்நாடகம் என்றாலும் சரி, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி என்றாலும் சரி, அந்த வாரியத்தின் அனுமதியில்லாமல் தொடங்கவே முடியாது. எனவே, இந்த கோரிக்கையை மத்திய அரசாங்கத்திடம் தமிழக அரசு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும். நாளையும், நாளை மறுநாளும் பெங்களூருவில் நடக்கும் பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசி தீர்மானம் நிறைவேற்றச் செய்யவேண்டும். 2012–ம் ஆண்டு நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் இவ்வாறு தாமதம் செய்வதில் நியாயமே இல்லை.

Wednesday, April 1, 2015

Assistant surgeons in health department: Only 54 join service

THIRUVANANTHAPURAM: The state health service has become a non-attractive career option for the MBBS graduates it seems, as only 54 out of 239 candidates in the PSC assistant sugeon ranklist joining service.

The candidates were asked to report at the directorate of health service on Monday for their placements across the state in different hospitals. Even though 160 reported at the directorate only 54 candidates showed the willingness to join service. The remaining 106 candidates sought extension of time for joining citing various reasons including time to complete the post graduate courses they are undergoing at present. However, the authorities have claimed that these 106 candidates would join the service and a written undertaking had been taken from them on this.

For those who are undergoing post graduate courses at present the directorate of health service has executed a bond worth Rs 5 lakh from the candidate with an assurance that they would report for duty soon after the completion of the course. "In case they fail to join, they will be debarred from any other employment in the government service and they will have to pay Rs 5 lakh to the government," said a senior health department official.

At present there are vacancies of 219 assistant surgeons, 51 civil surgeons, 156 junior consultants, 107 consultants, 26 senior consultants, two chief consultants and 17 posts in the administrative cadre.

UGC a failure, must be scrapped: HRD panel

NEW DELHI: One of the first committee set up by HRD minister Smriti Z Irani to review the working of the University Grants Commission has said that the regulator not only has "failed to fulfill its mandate but also has not been able to deal with emerging diverse complexities."

Headed by former UGC chairperson Hari Gautam, the committee has said any "reshaping or restructuring" of UGC "will be a futile" exercise and so will be amending the UGC Act. Therefore, it has recommended setting up of National Higher Education Authority through an act of Parliament. It has also prepared a draft of the bill but said that till the time such a body is set up, HRD ministry can bring about many changes through executive order.

For instance, it has suggested a national research aptitude test for admission to Ph.D and doing away with 10 years as professor criteria to become vice-chancellors. It has also emphasized teaching of yoga and transcendental meditation. Ministry sources said, "Recommendations are far-reaching and will be looked into seriously."

The two-volume report submitted to the ministry says UGC is "plagued in the main by reductionism in its functioning." The report also states, "It (UGC) has side-stepped its function of being a sentinel of excellence in education and embraced the relatively easier function of funding education." It has specifically pointed out that the UGC staff is unhappy as only "few find favour and are delegated with powers to perform in important areas while many of them are left out with hardly much to contribute." "It is said that they are pushed around through an element of fear and threat. The overall impression is that there is a man-made crisis which seems to be cause of unhealthy ambience and poor performance of UGC," the report said, adding there should be pay parity with central government employees.

Advising reform from the top, the committee has said that UGC chairperson "should be advised to strictly keep a vigilant track of the various performance areas of the UGC and assess the contribution at all levels." It has recommended that chairperson should spend more time in his "seat" than go around the "country and the world on occasions that have not much relevance for the system he governs." In this regard, the committee has recommended that chairperson be held accountable and "his performance be assessed once after three years and then at the end of his tenure of five years by a committee constituted by HRD."

As for members of the UGC, the committee said "all kinds of people have been appointed" "Eminent educationists or men of eminence in any field should have been the natural choice but at times it is observed that businessmen, hotel owners and even readers in colleges" have been made members. The report has recommended that members be given more active role and asked to attend review meetings.

Pointing out various ills of functioning of UGC, the report said "working structure of UGC is so ad-hoc that many do not know how many bureaus represent various disciplines and activities are currently existing." The report has said regional offices of UGC and even Consortium of Educational Communication (CEC) have failed to deliver and are a waste of "good money and manpower."

PAHAL OR DBTL ENROLLMENT CAN BE DONE TILL JUNE NOW

உயிரியல் தேர்வு மிகக் கடினம்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்



பிளஸ் 2 தேர்வில் கடைசிப் பாடமான உயிரியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரியல் பாடத்தில் விலங்கியல் பிரிவில் பெரும்பாலான கேள்விகள் எதிர்பாராதவையாக இருந்தன. விலங்கியல் பிரிவில் 10 மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகள் நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளுக்கு நிகராகக் கடினமானவையாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வு தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. 2,377 தேர்வு மையங்களில் 8.82 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.

உயிரியல் பாடத்தில் தாவரவியல் பகுதி வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தன. ஆனால், விலங்கியல் பகுதியில் இருந்த வினாக்கள் மிகக் கடினமாக இருந்தன. 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்த ஆண்டு வினாத்தாள்தான் கடினமானதாக இருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், இதில் எந்தக் கேள்வியும் புத்தகத்துக்கு வெளியிலிருந்து வந்ததாகவோ, தவறானதாகவோ இல்லை. பாடங்களுக்கு இடையே அதிகம் எதிர்பார்க்காத பகுதிகளில் இருந்து வினாக்கள் வந்திருந்தன. ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கும், சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கும் இது மிகவும் கடினமான வினாத்தாளாக இருந்தது. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட 150 மதிப்பெண்ணுக்கான உயிரியல் தேர்வில் 130 மதிப்பெண்ணைத் தாண்டுவது சிரமம் என அவர்கள் தெரிவித்தனர்.

விடைத் தாள் திருத்தும் பணிகள் ஏப்.6-இல் தொடக்கம்: முக்கியப் பாடங்களுக்கான விடைத் தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணிகள் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மே முதல் வாரத்துக்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட வாய்ப்பில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

உயிரியல் பாட விடைத் தாள்கள் சேகரிப்பு மையங்களில் இருந்து, விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு 2 நாள்களில் எடுத்துச் செல்லப்பட உள்ளன.

பிடிபட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

பிளஸ் 2 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்தபோது மொத்தம் 394 மாணவர்கள் சிக்கினர். கடந்த ஆண்டு 194 மாணவர்கள் பிடிபட்டனர். துண்டுச் சீட்டு வைத்திருத்தல், பக்கத்தில் உள்ள மாணவர்களைப் பார்த்து எழுதுதல் போன்ற தேர்வறை ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டது.

ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பிடிக்காமல் இருந்தால், அந்த தேர்வறை கண்காணிப்பாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் காரணமாகவே, இந்த ஆண்டு காப்பியடித்தபோது பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

33 பேர் சிக்கினர்: உயிரியல், தாவரவியல், வரலாறு பாடங்களில் காப்பியடித்ததாக செவ்வாய்க்கிழமை 33 பேர் சிக்கினர். உயிரியல் பாடத்தில் காப்பியடித்ததாக 10 பேரும், தாவரவியல் பாடத்தில் 8 பேரும், வரலாறு பாடத்தில் 15 பேரும் பிடிபட்டனர்.

சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு



தமிழகத்திலுள்ள சில சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு புதன்கிழமை (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து, நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. ஒவ்வொரு நிதியாண்டு தொடக்கத்திலும் 10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சாலைப்புதூர், பள்ளிகொண்டா, வாணியம்பாடி, எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை, சிட்டம்பட்டி பூதக்குடி, லெம்பலாக்குடி, லஷ்மணப்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம் ஆகிய 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இதனால் மீண்டும் சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார் கட்டணம் ரூ. 38 லிருந்து ரூ. 44 ஆகவும், லாரி ரூ. 139லிருந்து ரூ. 155 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

வாழ்க ஜனநாயகம்!

Dinamani

ஒர் அரசு ஊழியர் ஓய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். இப்படி இருக்கும்போது, ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியேற்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டாலே போதுமானது அவர் ஓய்வூதியம் பெறுவதற்கு என்றால், அது எந்த வகையில் நியாயம்?

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறியுள்ள கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் ஊதியம், படிகள், ஓய்வூதிய மசோதாவின் மூலம் கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு ஊதியம், படிகள், தொகுதிப் பயணப்படி எல்லாமும் சேர்த்து மாதம் ரூ.1.40 லட்சம் கிடைக்க வகை செய்கிறது. மேலும், அவர்களது ஓய்வூதியம் ரூ.25,000-லிருந்து ரூ.40,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஓராண்டு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்ற விதியையும் நீக்கியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அஜய் சிங் (முன்னாள் முதல்வர் தரம்சிங்கின் புதல்வர்) இந்த ஊதியம், படிகள் உயர்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், என்னைப் பார்க்க என் அலுவலகத்துக்கு

தினமும் 200 பேர் வருகிறார்கள். இவர்களுக்குத் தேநீர், பிஸ்கட் வழங்கவே எனக்கு நாளொன்றுக்கு ரூ.1,500 செலவாகிறது என்று நியாயப்படுத்தியுள்ளார். ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் அவர் அப்பதவியை வகிக்கும் காலத்தில் இந்தப் படிகளைப் பெறுவதை ஒரு வகையில் நியாயப்படுத்தினாலும், இவர்களுக்கான ஓய்வூதியத்தை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஓய்வூதியம் 58 வயதுக்குப் பிறகு தொடங்குவதில்லை. அவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆனவுடனே தொடங்கிவிடும். அதுமட்டுமல்ல, அவர் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பதவி வகிக்கும் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.1,000 ஓய்வூதியத்தில் கூடுதலாகும் என்கிறது சட்டம்.

தமிழ்நாட்டிலும் இதே நிலைதான். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம், அது நீங்கலாக ஆண்டுக்கு ரூ.40,000 மருத்துவப்படி என்பதுடன் அரசு மருத்துவமனைகளில் "அ' அல்லது "ஆ' பிரிவுகளில் இலவச மருத்துவமும் பெறலாம். அரசுப் பேருந்துகள் அனைத்திலும் அவர் ஒரு துணையுடன் இலவசமாகப் பயணம் செய்யலாம். கர்நாடகத்தைப் போலவே தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவியேற்றிருந்தாலே போதும் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர் ஆகிவிடுகின்றனர்.

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கான மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பிலும் எழும் அதிருப்தி மற்றும் எதிர்ப்புக்குக் காரணம், இத்திட்டத்தில் அரசின் பங்களிப்புத் தொகை கிடையாது என்பதுதான்.

அதாவது, ஊழியரின் பணத்தைப் பிடித்தம் செய்து அதையே அவர்களுக்கு ஓய்வூதியமாகத் தருகிறார்கள் என்பதுதான் மிகப்பெரும் ஆட்சேபணையாக அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மட்டும் ஊதியத்தில், படியில் எந்தப் பிடித்தமும் இல்லை. ஓய்வூதியம் உண்டு. உறுப்பினராக உறுதிமொழி ஏற்றிருந்தாலே போதும், மக்கள் வரிப்பணத்தில் ஓய்வூதியம் உண்டு.

இதே நிலைமைதான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்! இவர்கள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கும் போது அனுபவிக்கும் பயன்கள் ஒருபுறம் இருக்க, இவர்களுக்கும் ஓய்வூதியம் உண்டு. அவர்களும் பதவி வகித்தாலே போதும் ஓய்வூதியம் பெறத் தகுதி பெற்றுவிடுகிறார்கள்.

இன்றைய நிலையில் உள்ளாட்சிப் பதவிகளில் உள்ள மேயர், மாமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியமோ படியோ கிடையாது.

கூட்டப் படி ரூ.800 மட்டும்தான். அதுவும் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே. அதற்கும் கூடுதலாக கூட்டம் நடத்தப்பட்டால் அந்தக் கூட்டங்களுக்குப் படி கிடையாது. நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சித் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் யாருக்குமே

ஊதியம், ஓய்வூதியம் கிடையாது. இவர்களில் ஒன்றியக் குழுத் தலைவருக்கு ரூ.750-ம், ஒன்றியக் குழு உறுப்பினருக்கு ரூ.400-ம் கெüரவ ஊதியமாக அளிக்கப்படுகிறது. கிராம ஊராட்சித் தலைவருக்கு கெளரவ ஊதியமாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

ஆனால், அவர்களால் தங்களுக்குத் தாங்களே ஊதியத்தை நிர்ணயித்துக் கொள்ளவோ, உயர்த்திக் கொள்ளவோ, ஓய்வூதியம் அறிவித்துக் கொள்ளவோ முடியாது. சட்டப்பேரவைதான் அவர்களது சலுகைகளை நிர்ணயிக்கும்.

விடுதலை கிடைத்த காலகட்டத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பொது வாழ்க்கைக்கு தங்களை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். பதவி வகித்த காலத்தில் பணம் சம்பாதிக்கத் தெரியாத நேர்மையான அரசியல்வாதிகளாக இருந்தார்கள். அவர்களுக்குத் தரப்பட்ட சொற்பமான ஓய்வூதியம், சலுகைகள் பேருதவியாக அமைந்தன.

இன்றைய உறுப்பினர்கள் அப்படியா? வசதி படைத்தவர்கள் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுக்கும் நிலையில், பல கோடி ரூபாயை சொத்துகளாக காட்டியிருக்கும் இவர்கள், தங்களுடைய ஊதியம், படியை விட்டுக்கொடுக்க முன்வராவிட்டாலும், ஓய்வூதியத்தையாவது விட்டுக்கொடுக்கலாமே!

சட்டம் இயற்றுபவர்களின் இந்தச் சட்டாம்பிள்ளைத்தனத்தைச் செம்மறியாட்டுக் கூட்டம் போல நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் வரை அவர்கள் இதுவும் செய்வார்கள், இனியும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்! "நமக்கு நாமே' என்கிற திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்துச் செய்பவர்கள் நமது மதிப்பிற்குரிய மாண்புமிகு சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் போலும்!

NEWS TODAY 16.09.2024