Thursday, April 2, 2015

சமையல் எரிவாயு நேரடி மானியத்திற்கு பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி நேரடி மானியத்திட்டம் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் சிலிண்டர் மானியத்தொகை போடப்பட்டு வருகிறது.

இதனிடையே, சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனிடையே, வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அதில் ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு கட்டாயம் என அரசு கூறுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த திட்டத்தில் சேர, அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக அரசு காலக்கெடு விடுத்துள்ளதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார். ஆனால் இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, சமையல் எரிவாயு நேரடி மானியம் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரடி மானியம் பெறுவதற்கு இதுவரை 86 சதவீதம் நுகர்வோர்கள்தான் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...