Thursday, April 2, 2015

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக ஒப்பாரி போராட்டம்: இந்து அமைப்புகள் முடிவு!

cinema.vikatan.com

சென்னை: தி.க. சார்பில் நடக்கவிருக்கும் தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு எதிராக பெண்களை திரட்டி ஒப்பாரி போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

அம்பேத்கர் பிறந்த நாளான 14ஆம் தேதி திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என கி.வீரமணி அறிவித்திருந்தார். இதில் கலந்து கொண்டு தாலியை அகற்ற விரும்பும் பெண்கள் செல்போன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள செல்போன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்தும் என இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலமும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில், தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாளான ஏப்ரல் 14ஆம் தேதி இந்து அமைப்புகளின் பெண்களை திரட்டி, நூதன முறையில் எதிர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஆயிரக்கணக்கான பெண்களை திரட்டி, பெரியார் திடல் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Medical council to cancel exprincipal’s registration

Medical council to cancel exprincipal’s registration  RG KAR MED COLLEGE RAPE AND MURDER Sumati.Yengkhom@timesgroup.com  Kolkata : The West ...