Friday, May 29, 2015

ட்விட்டர் கேள்வி-பதில்

பாஸ்போர்ட் தொடர்பான உங்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி க.பாலமுருகன்.






  1. என் மகனுக்கு வயது 21. இவனுக்கு பாஸ்போர்ட் எடுக்க நடைமுறைகள் என்ன?
வெளியுறவுத் துறை அமைச்சக இணையதளம் (http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink) மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பம் சமர்பிக்கவும். இணைய தளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி செலான் மூலமாகவோ பாஸ்போர்ட் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன் பின் விண்ணப்பத்தாரருக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க வேண்டும்..

அ. இருப்பிட சான்றிதழ் (அட்ரஸ் புரூப்)
 
ஆ. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
 
இ. கல்வித் தகுதிக்கான சான்றிதழ் (10 ம் வகுப்பு  அல்லது 12 ம் வகுப்பு  அல்லது  பட்டப் படிப்புக்கான சான்றிதழ்)
 
மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்பிக்க வேண்டும், இந்த நகல்களின் அசல் ஆவணங்களையும் சரி பார்க்க  கொண்டு வர வேண்டும்.
 
2. என் வயது 69. என் மகன் இங்கிலாந்தில் செட்டிலாகிவிட்டான். அவனோடு நானும் சென்று செட்டிலாக திட்டமிட்டிருக்கிறேன். இது நாள் வரை பாஸ்போர்ட் எடுக்கவில்லை. இப்போது எனக்கு பாஸ்போர்ட் கிடைப்பது சிரமம் என்று சொல்கிறார்கள். உண்மையா?

இதில் எந்த சிரமும் இல்லை. முந்தைய கேள்விக்கான பதிலில் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பம் செய்வது பற்றி விளக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 258 1800 - ஐ தொடர்பு கொள்ளவும். தமிழிலும் பதில் பெறலாம்.

3. பாஸ்போர்ட் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சொல்கிறார்கள், அதற்கான லிங்கை கொடுக்க முடியுமா?
http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink
4. நான் பாஸ்போர்ட்க்காக விண்ணப்பித்து போலீஸ் வெரிஃபிகேஷனுக்காக கடந்த 5 நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். போலீஸ் வெரிஃபிகேஷன் எத்தனை நாட்களுக்குள் நடைபெறும்?
 
பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்களின் ரிப்போர்ட் அனுப்பி வைக்கப்படும். பொதுவாக 5 முதல் 10 நாட்களில் போலீஸ் வெரிஃபிகேஷன் இருக்கும்.
 
5. கடந்த மாதம் என் பாஸ்போர்ட் திருடு போய்விட்டது. போலீஸில் புகார் கொடுத்திருக்கிறேன். நான் அடுத்த மாதம் வெளிநாட்டிற்கு செல்ல இருக்கிறேன். இப்போது என்ன செய்யலாம். மீண்டும் ஒரு புதிய பாஸ்போர்ட்டை வாங்கலாமா?
 
நீங்கள் பாஸ்போர்ட் தொலைந்தற்கான போலீஸ் புகாருடன் பாஸ்போர்ட் ரீ இஸ்யூவிற்காக விண்ணப்பிக்கவும். தொலைந்த பாஸ்போர்ட் -ன் நகல் இருந்தால் இணைக்கவும். அனக்சர் எல் என்ற உறுதிமொழி பத்திரம், நோட்டரி பப்ளிக் ஒப்புதலை சமர்பிக்க வேண்டும்.
6. என் பாஸ்போர்ட் வரும் ஆகஸ்ட் மாதம் எக்ஸ்பெயரி ஆகிவிடும். அதன் பின் எப்படி புதுப்பிப்பது?
நீங்கள் எக்ஸ்பெயரி  தேதிக்கு ஒரு ஆண்டு முன்போ அல்லது எக்ஸ்பெயரி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணபிக்கலாம். பழைய பாஸ்போர்டை கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம்.
 
7. என் தந்தை துபாயில் வேலை பார்க்கிறார். அடுத்த வாரம் அவரின் பாஸ்போர்ட் காலாவதியாக உள்ளது. என் தந்தையின் பாஸ்போர்ட்டை நான் இங்கிருந்து புதுப்பிக்க முடியுமா?
 
தங்களின் தந்தை துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம். தாங்கள் இந்தியாவில் விண்ணப்பிக்க இயலாது.
 
8. என் சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர். நான் தற்போது சென்னையில் வேலை காரணமாக செட்டிலாகிவிட்டேன். தற்போது நான் சென்னையில் இருந்து கொண்டு பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க முடியுமா? எனக்கு தமிழ்நாட்டில் ரேஷன் அட்டை இல்லை? வோட்டர் ஐடியும் கேரளாவில் எடுத்தது தான் இருக்கிறது?
 
தாங்கள் சென்னையில் வசிப்பதால், சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவா மையத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும். தங்களிடம் மற்ற இருப்பிட சான்றிதழ்கள் (பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு, வாட்டர் பில், கேஸ்பில், லேண்ட் லேன் போன் அல்லது போஸ்ட் பெயிட் பில், இன்கம் டாக்ஸ் அஸஸ்மென்ட் ஆர்டர், டிரைவிங் லைசென்ஸ், பிரபலமான மதிக்கத்தக்க வேலை செய்யும் கம்பெனியிடம் லெட்டர் ஹெட்டில் சர்டிபிகேட்) கொண்டு விண்ணப்பிக்கலாம். பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் இவைகளையும் கொண்டு விண்ணப்பிக்கவும்.
 
9. விசாவுக்கும் பாஸ்போர்ட்க்கும் என்ன வேறுபாடு?
 
பாஸ்போர்ட் பிற நாட்டிற்கு செல்வதற்கான அனுமதிச் சீட்டு. விசா என்பது அந்த நாட்டுக்கு எதற்காக செல்கிறோமோ அதற்கான அந்த நாட்டின் அனுமதிச் சீட்டு.
 
10. பாஸ்போர்ட் எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? கட்டணங்கள் என்னென்ன செலுத்த வேண்டும். அதிகபட்சம் ஒரு பாஸ்போர்ட் எத்தனை நாளைக்குள் கிடைக்கும்?
 
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.
1. இருப்பிடத்திற்கான சான்றிதழ்
2. பிறந்த தேதிக்கான சான்றிதழ்
3. கல்வித் தகுதிக்கான சான்றிதழ்
பாஸ்போர்ட் கட்டணம் நார்மல் பாஸ்போர்ட் 36 பக்கங்கள் கொண்டது ரூ.1500/- ஆகும். 60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட்டிற்கு ரூ.500/- கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும்
* தட்கல் - ரூ.3,500
* மைனர் - ரூ.1,000
*  PCC - ரூ.500/
* டேமேஜ்  / லாஸ்ட் (Damage / lost) - ரூ. 3,000
போலீஸ் விசாரணை முடித்து, எல்லா ஆவணங்களும் சரியாக இருந்து, போலீஸ் வெரிஃபிகேஷன் ரிப்போர்ட் ஆன்லைனில் சமர்பிக்கப்பட்ட மூன்று நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
 
11. பாஸ்போர்ட் சேவை மையங்களின் சேவை குறித்து விளக்கி சொல்லுங்களேன்?
 
வெளியுறவுத் துறை அமைச்சகம் பாஸ்போர்ட்களை வழங்க, 77 பாஸ்போர்ட் சேவா மையங்களை (PSK) இந்தியா முழுவதிலும் செயல்படுத்தி வருகிறது.
 
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் வரும் 11 மாவட்டங்களில் (பாண்டிச்சேரி, காரைக்கால் உள்பட) வசிக்கும் விண்ணப்பதாரரின் வசதிக்காக மூன்று சேவா மையங்கள் சென்னையில் கீழ்க்கண்ட விலாசங்களில் இயங்கி வருகிறது.
 
* பாஸ்போர்ட் சேவா மையம், சாலிகிராமம் - டாக்டர் .பானுமதி ராமகிருஷ்ணா ரோடு, சாலிகிராமம், சென்னை
 
* பாஸ்போர்ட் சேவா மையம், அமைந்தக்கரை - நவீன்ஸ் பிரசிடியம், நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை
 
* பாஸ்போர்ட் சேவா மையம், தாம்பரம் - துரைசாமிரெட்டி தெரு, தாம்பரம். (டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை அருகில்), சென்னை.
 
இந்த மூன்று சேவா மையங்களிலும் 2450 விண்ணப்பங்கள் தினமும் பெறப்படுகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட் எடுத்தப் பிறகு  பரிசீலிக்கப்படுகிறது. மனுதாரரின் வசதிக்காக கீழ்க்கண்ட விண்ணப்பதாரர்கள் வாக்-இன் (walk-in)  அதாவது முன்பதிவு (Appointment) இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.
 
* வயது முதியோர் (65 வயதுக்கு மேல்) மாற்று திறனாளிகள், PCC விண்ணப்பதாரர்கள்.
இவர்கள் பாஸ்போர்ட் சேவா மையம், சாலிகிராமத்தில் விண்ணப்பிக்கலாம்.
 
* மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் -  பாஸ்போர்ட் சேவா மையம் அமைந்தகரையில் விண்ணப்பிக்கலாம்..
 
* மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், PCC விண்ணப்பதாரர்கள் - பாஸ்போர்ட் சேவா மையம், தாம்பரத்தில் விண்ணப்பிகலாம். 

12. தற்போது நான் குவைத்தில் வசிக்கிறேன். என் பாஸ்போர்ட்டை வெளிநாட்டில் ரெனீவல் செய்தால் என்ன ஆகும்?

வெளிநாட்டிலும் நமது பாஸ்போர்ட்டை, அந்தந்த நாட்டில் உள்ள  இந்திய தூதரகத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம். 

13. என் பாஸ்போர்ட் கடந்த மார்ச் 2015 ல் காலாவதி ஆகிவிட்டது. தற்போது எப்படி என் பாஸ்போர்ட்டை ரெனீவல் செய்வது. அதே நேரத்தில் பாஸ்போர்டில் எப்படி என் பெயரை மாற்றுவது எப்படி?

தற்போது  பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ரெனீவல் செய்யப்படுவது இல்லை. ஒரு முறை பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட் பெற வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ள நீங்கள் http://www.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink  இணையதளத்திற்கு சென்று reissue காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போட்டுக்கு விண்ணப்பிக்கலாம். நீங்கள் இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளை பின் பற்ற வேண்டும்.
 
14. பாஸ்போர்ட் வழங்கும் போது போலீஸ் சரிபார்த்தலின் போது கட்டாயம் லஞ்சம் தர வேண்டும் என்கிறார்களே? இதற்கு யாரிடம் புகார் அளிப்பது?

இது தொடர்பாக தகுந்த ஆதாரத்துடன் உங்களுடைய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரை அணுகி முறையீடு செய்யலாம் அல்லது இதற்காக தமிழ்நாடு காவல் துறையினுடைய  சிறப்புப் பிரிவான THE DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION, NCB 21 TO 28, P.S.KUMARASAMY RAJA SALAI (GREENWAYS ROAD), RAJA ANNAMALAIPURAM, CHENNAI – 600 028, Telephone : 91-44-2461 5929 / 2461 5949 / 2461 5989 / 2495 4142 / 94450 48999 / 94450 48990, Fax : 91-44-2461 6070, E-mail: dvac@nic.in ஐ தொடர்பு கொள்ளலாம்.

15. நான் சென்னையில் வசிக்கிறேன். ஆனால் கல்லூரி படிப்புக்காக கோவையில் தங்கி இருக்கிறேன். கடைசி ஆறு மாதம் கோவையில் தங்கி இருந்ததால் அங்கும் வெரிஃபிகேஷன் வேண்டும் என்கிறார்கள். இது அவசியமா?

பொதுவாக பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுடைய போலீஸ் வெரிஃபிகேஷன் விண்ணப்ப தேதியிலிருந்து கடந்த ஒரு வருடத்தில் அவர் எந்த எந்த முகவரிகளில் தங்கி இருந்தாரோ அங்கு எல்லாம் வெரிஃபிகேஷன் செய்த பின்பே  பாஸ்போர்ட் வழங்கப்படும்.  

16. பாஸ்போர்ட்டில் பெயர் தவறுதலாக இடம்பெற்றால் எங்கு சென்று திருத்தம் செய்ய வேண்டும்?

அவர் மீண்டும் சரியான ஆவணங்களை (பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை) கொடுத்து பாஸ்போர்ட்டை re issue செய்து கொள்ளலாம். சிறிய பெயர் மாற்றம் (உச்சரிப்பாலான எழுத்து பிழைகள்) என்றால் ரூ. 500 அபராதத் தொகை வசூலிக்கப்படும். இதே பெரிய பெயர் மாற்றங்கள் என்றால் (Major Name Change) மாற்றப்பட்ட பெயரை தங்களுடைய  நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசூரமாகுமாறு தினசரி செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும். நீங்கள் பெயர் மாற்றத்திற்கு கொடுத்த விளம்பரத்தின் செய்தித் தாளோடு மற்ற தேவையான ஆவணங்களுடன் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்க வேண்டும்.
 
17. வெளிநாட்டில் இருக்கும் போது  பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.?

உடனடியாக நமது நாட்டின்  தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

18. தட்கல் முறையில்  எத்தனை நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும், எவ்வளவு தொகை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்?

தட்கல் முறையில் விண்ணப்பித்த பாஸ்போர்ட் 3 - 5 நாட்களுக்குள் கிடைக்கும். இதற்கான கட்டணம் 3,500 ரூபாய்.

19. நான் ஒரு என்ஆர்ஐ தற்போது அமெரிக்காவின் குடிமகனும் கூட. நான் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தலாமா?

வேறு நாட்டின் குடியுரிமை பெற்றவுடன் இந்திய பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அலுவலகத்திலோ, இந்திய தூதரகத்திலோ  உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது.
 
20. என் அண்ணன் அபுதாபியில் வேலை செய்கிறார். அவரின் பாஸ்போர்ட் சமீபத்தில் காணாமல் போய்விட்டது. இப்போது என் அண்ணன் அங்கிருந்து எப்படி இந்தியா வருவது?

அபுதாபியில் உள்ள நமது நாட்டின் தூதரகத்தை ஆவணங்களுடன் சென்று புகார் கொடுக்கவும். அவர்கள் எல்லாவற்றையும் பரிசீலித்து எமர்ஜென்சி சர்டிஃபிகேட் (Emergency Certificate) ஒன்றை வழங்குவார்கள், அதன் மூலம் இந்தியாவிற்கு வரலாம்.

21. நான் புருனேவில் வேலை பார்க்கிறேன். என் குடும்பத்தையும் புருனேவுக்கே அழைத்து வந்துவிடலாம் என்று யோசித்திருக்கிறேன். எனக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்க என்ன செய்ய வேண்டும்?

கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு சென்று பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 
* புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தின் அட்டெஸ்டேஷன் உடைய சுய உறுதி மொழி பத்திரம் (Sworn affidavit), 
*  தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல் (இதிலும் துதரகத்தின் அட்டெஸ்டேஷன் இருக்க வேண்டும்).'
* தங்களுடைய மனைவியின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டையும் எடுத்துச் செல்ல வேண்டும், அதில் கட்டாயமாக  (ஸ்பவுஸ் நேம் காலத்தில்)  உங்கள் பெயர் இருக்க வேண்டும், 
* குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், 5.தங்கள் மனைவியின் கையொப்பம் இட்ட Annexure H மற்றும் முகவரி சான்றிதழ் (Address Proof).

22. என் மகனின் பாஸ்போர்ட் 2014 டிசம்பரில் காலாவதி ஆகிவிட்டது. இதனை இப்போது புதுப்பிக்க முடியுமா? நான் மற்றும் என் கணவர் நேரடியாக வர வேண்டுமா?

பெற்றோரில் யாரேனும் ஒருவர் வந்தால் போதும். ஆனால் யார் வரவில்லையோ அவருடைய பாஸ்போர்ட்டை உடன் எடுத்து வர வேண்டும்.
 
23. திருமணத்துக்கு பிறகு பெண் எப்படி பாஸ்போர்ட்டில் பெயரை மாற்ற வேண்டும்.  விவரம் தேவை?

நவம்பர் 24, 2009க்கு பிறகு திருமணம் ஆகி இருந்தால் திருமண சான்றிதழுடன் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமண சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃப்ஃபிடவிட் (Joint Notary Affidavit) கொண்டு வர வேண்டும். சர் நேம் காலத்தில் பெயர் மாற்றுவதற்கு Annexure D அஃப்ஃபிடவிட் அவசியம். 

Note: பாஸ்போர்ட்டில் Annexure A - M வரையிலான அனைத்து அனெக்சர்களும் கீழ்கண்ட லிங்கில் கிடைக்கும் -  http://passportindia.gov.in/AppOnlineProject/online/annexureAffidavit

எல்லா பாஸ்போர்ட்டிற்கும் என்ன என்ன  டாக்குமென்டுகள் தேவை என்பதை இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள லிங்கை சொடுக்குங்கள்  - http://passportindia.gov.in/AppOnlineProject/docAdvisor/attachmentAdvisorInp
 

சவீதா மருத்துவக் கல்லூரியில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை பயிலரங்கம்

இதய ரத்தக் குழாய் அடைப்புக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிலரங்கம் சவீதா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் மருத்துவர் சூர்யபிரகாஷ் ராவ், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் கண்ணன், செட்டிநாடு மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் பிரதீப் நாயர், குளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் நாகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 9 முதுநிலை மாணவர்களும் இதில் பங்கேற்ற னர். இதய நோய்கள் குறித்த பல்வேறு தகவல் கள் இந்த பயிலரங்கில் விரிவாக விவாதிக்கப் பட்டன. சவீதா மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை தலைவர் டாக்டர் ஆஷா மூர்த்தி, டாக்டர் நாராயணஸ்வாமி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சவீதா பல்கலை. வேந்தர் என்.எம்.வீரய்யன் தலைமை தாங்கினார்.

டாக்டர் சூர்யபிரகாஷ் ராவ் பயிலரங்கை நடத்தினார். இதய ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த 3 பேருக்கு பயிலரங்கின்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் களுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அதே கல்லூரி மற்றும் வெளி கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 101 மாணவ, மாணவிகள் இந்த பயிலரங்கில் பயனடைந்தனர்.

MBBS exam delayed by 3 hrs

Students of Government Medical College, Patiala, and Gian Sagar Medical College kept on waiting for almost three hours for their MBBS final year exam of ENT to begin at Patiala Medical College today as invigilators failed to reach the examination centre on time. The paper which was supposed to begin at 8.30 am started at 11.30 am causing great inconvenience to the students.

As per rules, the students were supposed to reach the centre half an hour before the beginning of the exam. Even though all students reached the centre in time at 8 am, the two invigilators- Dr LM Garg of Maulana Medical College, Ambala, and Dr Rathore of Agroha Medical College reached the examination hall after three hours. They said though they had reached Patiala on time, they could not find the exam centre since they did not have the contact number of the college authorities. Similarly, the college authorities also did not have the contact numbers of the teachers following which they could not coordinate.

The Baba Farid University of Health Sciences in order to check the practice of cheating and assure that no one could approach the examiners seeking any favours has made a new rule according to which an invigilator is informed about the centre only a day before the exam.

Vice-chancellor of Baba Farid University of Health Sciences Dr Raj Bahadur said the university would look into the matter. “We are dealing with a large number of examiners and sometimes small hiccups arise. However, we will find out what caused the delay," he added.

HC upholds MCI action on medical admissions

Hyderabad: A two judge bench of the High Court at Hyderabad comprising Justice Ramesh Ranganathan and Justice M Satyanarayana Murthy on Wednesday refused to interdict the decision of the Medical council of India (MCI) in deleting MD (Biochemistry) from eligibility into admission in the super-specialty course of Doctor of Medicine (DM) in Endocrinology as arbitrary and illegal. 
The bench dismissed a writ plea filed by Dr P Harsha Vardhan and others seeking such declaration. A postgraduate degree in Paediatrics, General Medicine or Biochemistry was prescribed as qualifying subjects prior to the impugned amendment. The petitioners contended that they chose Biochemistry in the hope of taking up a post doctoral course and the exclusion derailed their professional plans. 
The MCI justified its action contending that it had constituted a Speciality Board to re-examine the eligibility criteria for admission into various super specialty courses and based on the recommendations the said decision was arrived at. Dismissing the writ petition Justice Ramesh Ranganathan said: Discrimination was the essence of classification and would do violence to the constitutional guarantee of equality only if it rested on an unreasonable basis. 
It was, therefore, incumbent on the petitioners to show that the classification of students into those who held a postgraduate medical degree either in Medicine or Paediatrics, and those who held a postgraduate medical degree in Biochemistry, was unreasonable and bore no rational nexus with its purported object,” the bench then went on to detail the various parameters. 
“As long as the broad features of the categorisation are identifiable and distinguishable, and the categorisation is reasonably connected with the object targeted, Article 14 does not forbid such a course of action.” 
On the question of whether the said students satisfied the eligibility and as to whether the expert body had erred in the exclusion, Justice Ramesh Ranganathan said, “The Court lacks the expertise to examine academic policies and would, ordinarily, abide by the opinion of experts. Courts should be slow to interfere with the opinions expressed by experts, and must leave such decisions to those who are more familiar with such problems, than the Courts generally can be”.

"விதி, சதி செஞ்சாலும்... வாழ்க்கைய விட்டுறாதீக!" கிராமத்து மனுஷியின் நம்பிக்கைப் பாடம்

சதியான வாழ்க்கை, வளமான தொழில், நிறைவான சொத்து என இருந்துவிட்டு, திடீரென ஒரு நாளில் உயிர் ஒன்றைத் தவிர, உடைமை என்று எதுவும் இல்லாத வறுமை சொந்தமானால்? அப்படி ஒரு நிலைதான் சாந்திக்கும் ஏற்பட்டது. ஆனால், இன்று, பூஜ்யத்தில் இருந்து ஆரம்பித்து, தன் மூன்று பிள்ளைகளையும் கரை சேர்த்து கம்பீர நடை போட்டு வருகிறார் சாந்தி! ஊர்க்காரர்களுக்கு வாஞ்சையுடன் ‘சாந்தியம்மா!’
‘‘யேத்தா முத்துலட்சுமி... அந்த முறுக்கு மாவ எடுத்து விரசா பிசஞ்சாதேன் நாளைக்குள்ள அம்புட்டையும் சுட்டு எடுத்து கடைகளுக்கு சப்ளை கொடுக்க முடியும். யேய்யா ராசா... செத்த நேரம் இருங்க அதிரசத்த பெட்டியில, அடுக்கிட்டு அஞ்சு நிமிசத்துல வந்துடுறேன்!’’
- 50 வயதிலும் தேனீ போல் பறந்து கொண்டிருக்கும் சாந்தியம்மா, தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி பகுதியில் விதவிதமான உணவுப் பதார்த்தங்கள் தயாரித்து கடைகளுக்கும், விசேஷங்களுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யும் நம்பர் - 1 சுயம் சார்ந்த விற்பனையாளர்.
‘‘நானு கலியாணம் பண்ணிப்போன வீடு, வசதியான குடும்பம். மாமனாரும் வீட்டுக் காரரும் வாழை வெள்ளாமையும், வாழைக்கா யாவாரமும் பாத்துட்டு இருந்தாக. ரெண்டு லாரி வெச்சிருந்தோம். வாரத்துக்கு ரெண்டு நாளு பெங்களூருல இருக்குற பெரிய கடைகளுக்கு எல்லாம் எங்க தோட்டத்துக்காயோட, மத்த சம்சாரிககிட்டயிருந்தும் வாழைக்கா வாங்கி சப்ளை பண்ணிக்கிட்டு இருந்தோம்.
தொழில்ல திடீர்னு 10 லட்சம் நஷ்டம் ஆயிருச்சு. குடும்பம் நொடிச்சுப் போச்சு. வாழ்வாங்கு வாழ்ந்துட்டு வறுமையைப் பொறுக்க முடியாத மாமனாரு, விஷம் குடிச்சு இறந்துட்டாரு. ‘சொந்தக்காரவுக முன்னால வாழ்ந்துகெட்ட குடும்பமா இருக்க வேணாம், வா வெளியூருக்குப் போகலாம்’னு சொன்ன என் வீட்டுக்காரரு, பொள்ளாச்சிக்கு என்னையும் எம் மூணு புள்ளைகளையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு. அங்க காய்கறிக்கடை போட்ட எடத்துலயும், தொழில் கைகூடாம பசிதேன் மிஞ்சிச்சு!’’
- வியர்வையை முந்தானையில் துடைத்து, அடுப்பில் தீயைத் தூண்டிவிட்டபடி தொடர்ந் தார் சாந்தியம்மா.
‘‘வெள்ளம் தலைக்கு மேல போனதுக் கப்புறம் சாண் போனாயென்ன, மொழம் போனாயென்ன? நாம நம்ம சொந்த ஊருக்கே போயிருவோம். எல்லாரும் என்ன நெனப்பாகன்னு கலங்காம, பொழப்புக்கு வழி தேடுவோம்னு சொல்லி, அனுமந்தப்பட்டிக்கே வீட்டுக்காரரைக் கூட்டிக்கிட்டு வந்துட்டேன். எத்தனையோ பேருக்கு மொதலாளியா இருந்தவர, இன்னொருத்தர்கிட்ட சம்பளத்துக்கு வேலைக்குப் போகச் சொல்ல எனக்கு மனசு வரல. ஆனாலும் அவரா சில எடங்கள்ல வேலைக்குப் போனாரு.
எனக்கு சமையல் நல்லா வரும். எட்டு வருசத்துக்கு முன்ன ஒரு படி அரிசி போட்டு, அதிரசம் சுட்டு, வீட்டுக்கு முன்னாடி கொண்டு போய் வெச்சு வித்தேன். அன்னிக்கு எனக்குக் கெடச்ச லாபம் 50 ரூவா. நெதமும் இப்படியே நான் அதிரசம் சுட்டு விக்க, கெடைக்குற 50, 100 ரூவாயில அடுத்த நாளுக்கான சாமான் வாங்கனு ஓடிச்சு. இந்தத் தொழில் நம்மளக் காப்பாத்தும்னு மனசுல தெம்பு வரவும், 5,000 ரூவா கடன் வாங்கி, கணிசமா மளிகை சாமான், வீட்டுக்கு முன்னாடி பெரிய அடுப்புனு போட்டு அதிரசத்தோட சேர்த்து இன்னும் ரெண்டு, மூணு பலகாரங்கள் சுட்டேன். தரத்தையும், சுவையையும் பாத்துட்டு, வீடு தேடி ஆர்டர் வர ஆரம்பிச்சது!''
- சாந்தியம்மா நெருப்பில் வெந்து, குடும்பத் தின் வயிற்றைக் குளிர வைத்திருக்கிறார்.
‘‘என் மக, மருமகனோட துபாயில இருக்குறா. பெரியவன் பேக்கரி கடையிலயும், சின்னவன் செல்போன் கடையிலயும் வேலை பாக்குறானுங்க. ‘போதும்மா நெதமும் 10 மணி நேரம் அடுப்புச் சூட்டுல நீ கஷ்டப்பட்டது’னு அவனுங்க சொல்லும்போது பெத்த மனசு குளிர்ந்து போகுது. ஆனாலும் ஒடம்புல வலுவுள்ள வரை ஒழைப்போமே? முன்னயெல்லாம் நான் ஒரே ஆளாதேன் அதிரசம், எள்ளுச்சீடை, சமோசா, மைசூர் பாகுனு எல்லாம் செஞ்சேன். தொடர்ச்சியா விசேஷம், கடைகள், வெளியூர், வெளிநாட்டுக்குச் சீர்னு ஆர்டர்கள் குவிஞ்சுட்டே இருக்க, ஒரு மாஸ்டரையும், இந்தப் பொண்ணு முத்துலட்சுமியையும் வேலைக்கு வெச்சிருக்கேன். மாசம் பதினஞ்சாயிரத்துல இருந்து இருவதாயிரம் வரைக்கும் வருமானம் கெடைக்குது!’’ என்று பெருமிதத்தோடு சொன்னவர்,
‘‘வாழ்க்கை கொடுத்த வசதிய, விதி பறிச்சா, தொவண்டு போகாதீக. மனசுல வைராக்கியம் இருந்தா, வாழ்ந்து கெட்டவுகளும் மறுபடியும் வாழ்ந்து காட்டலாம்!’’
- பெரிய நம்பிக்கைப் பாடத்தை எளிமயாகச் சொல்லிவிட்டார் அந்த கிராமத்து மனுஷி!
ம.மாரிமுத்து, படங்கள்: சே.சின்னத்துரை

ஸ்பீடு போஸ்ட்டா அல்லது ஸ்லோ போஸ்ட்டா?


க்களிடையே அதிக நம்பிக்கை பெற்ற மத்திய அரசு துறை அஞ்சல்துறைக்கு, கிராமம் முதல் நகரம் வரை அதிக வரவேற்பு இருந்தது ஒருகாலம். ஆனால், இன்றோ கூரியர் சேவையாலும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும் அஞ்சல் துறை ஆரவாரமில்லாமல் அமைதியாக செயல்படுகிறது. அஞ்சல் துறை கொஞ்சம் கொஞ்சமாக பின்னடவை சந்திக்க நேர்ந்தது. 

இதன்விளைவு, அஞ்சல் துறையின் முக்கியமான சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. அஞ்சல் துறையின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அக்கறை செலுத்தத் தொடங்கியது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நன்மதிப்பு பெற்ற அஞ்சல் துறை 'போஸ்டல் லைப் இன்ஸ்சூரன்ஸ்', 'தங்க நாணயங்கள் விற்பனை' ஆகியவற்றில் கால்பதித்தது. தனியார் பங்களிப்புடன் செயல்படும் தங்க நாணய விற்பனை சில தலைமை தபால் நிலையங்களில் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. வங்கிகளைப் போல சேமிப்பு கணக்கு சேவையையும் விரிவுப்படுத்திய அஞ்சல் துறை இப்போது ஏ.டி.எம் மையம் வரை தொடங்கி இருக்கிறது. 

அடுத்தக்கட்டமாக, ஷாப் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளது. இருப்பினும், அஞ்சல் துறையில் கடமைக்குப் பணியாற்றுபவர்களின் சிலரால் அதன் அணுகுமுறை மக்கள் மத்தியில் பெரியளவில் சென்றடையவில்லை. சமீபத்தில் 'செல்வமகள்' என்ற சேமிப்புத் திட்டம் அஞ்சல் துறை மீண்டும் மக்களை தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அஞ்சல் துறையில் விரைவு தபால் (ஸ்பீடு போஸ்ட்) என்ற சேவை உள்ளது. இதற்கு சாதாரண தபால் சேவையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், சாதாரண தபாலை விட விரைவாக இது செயல்படும். இதன் காரணமாக இந்த சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால், சில ஊழியர்களின் மெத்தனப் போக்கு சில நேரங்களில் ஸ்பீடு போஸ்ட், ஸ்லோ போஸ்ட்டாக மாறி விடுகிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மும்பையிலிருந்து ஸ்பீடு போஸ்ட்டில் அனுபப்படும் தபால்கள் அல்லது பார்சல்கள் மூன்று நாட்களுக்குள் சென்னைக்கு வந்து, சென்னை முகவரி இருந்தால் அது உடனடியாக டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆனால், சமீபத்தில் மும்பையிலிருந்து ஸ்பீடு போஸ்ட் மூலம் ஒரு பார்சல் அனுப்பப்பட்டது. அந்த பார்சலை அஞ்சல் துறை ஊழியர்கள் பந்தாடிய சம்பவம் இது.


கடந்த 7-ம் தேதி மும்பையிலிருந்து சென்னை திருநின்றவூருக்கு ஒரு பார்சல் முன்பதிவு செய்யப்படுகிறது. 9-ம் தேதி சென்னை அண்ணா சாலைக்கு அந்த பார்சல் வந்து சேருகிறது. பிறகு அங்கிருந்து 12-ம் தேதி விழுப்புரத்துக்கு செல்கிறது. (விழுப்புரத்துக்கு எதற்காக அனுப்பப்பட்டது என்று தெரியவில்லை). பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னை அண்ணா சாலைக்கு அனுப்பப்படுகிறது. அண்ணா சாலையிலிருந்து 13-ம் தேதி திருநின்றவூருக்கு அனுப்பப்படுகிறது. 

திருநின்றவூரில் பார்சலின் முகவரி தவறு என்று குறிப்பிட்டு 14-ம் தேதி அண்ணா சாலைக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. 15-ம் தேதி அண்ணா சாலையிலிருந்து மும்பைக்கு முன்பதிவு செய்த இடத்துக்கே திரும்ப அனுப்பப்படுகிறது. 16-ம் தேதி மும்பைக்கு சென்றடைந்த அந்த பார்சல் 17-ம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. இவ்வாறு 7-ம் தேதி மும்பையில் முன்பதிவு செய்யப்பட்ட அந்த பார்சல், அங்கிருந்து வரும் போது தாமதமாகினாலும் மீண்டும் அனுப்பும் போது விரைவாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்காக அந்த பார்சல் திரும்ப அனுப்பப்பட்டது என்று விசாரித்தபோது முகவரியில் வீட்டின் எண் மாறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அஞ்சல் துறையினர் தெரிவித்தனர். சரியான முகவரி இல்லை என்று சொல்லும் அஞ்சல் துறையினரின் வாதம் சரி என்று எடுத்துக்கொள்ளலாம். ஸ்பீடு போஸ்ட் என்பது விரைவான சேவையாகும். அந்த சேவையில் குறிப்பிட்ட தினத்துக்குள் டெலிவரி செய்யப்பட வேண்டும். ஆனால், அஞ்சல்துறையில் சிலரின் கவனக்குறைவு மற்றும் மெத்தனப்போக்கு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதால் பொது மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "மும்பையிலிருந்து சென்னைக்கு ஸ்பீடு போஸ்ட் சேவை மூலம் அனுப்பப்படும் எந்த ஒரு பொருளும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவருக்கு டெலிவரி செய்து விடப்படும். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தில் எதற்காக கூடுதல் நாட்கள் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர் புகார் கொடுத்தால் அதற்கு காரணமாக ஊழியர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

நுகர்வோர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "இந்திய அரசின் அஞ்சல் துறையில் சிலர் செய்யும் தவறுகளாலும், நுகர்வோருக்கு அங்கு போதிய வரவேற்பு இல்லாததாலும் தனியார் கூரியர் நிறுவனங்களைத் தேடி மக்கள் செல்கிறார்கள். அஞ்சல் துறையை விட கூடுதல் கட்டணம் என்றாலும் கூரியர் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்த பார்சலை அஞ்சல் துறை ஊழியர்கள் தவறுதலாக விழுப்புரத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள். 

இதனால், காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட நுகர்வோர், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வழக்கு தொடர்ந்தால் சேவையில் குறைபாடு என்ற காரணத்துக்காக அஞ்சல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு (நிவாரணத் தொகை) பெற சட்டத்தில் வழிவகை உள்ளது. அடுத்து பார்சல் அனுப்பிய நிறுவனம் தவறுலாக வீட்டின் முகவரியில் எண்ணை மாற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதுவே பார்சல் திரும்ப அனுப்பபட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்டவர் சரியான முகவரியை கொடுத்து இருக்கிறார். இதனால் கவனக்குறைவு என்பதற்காக அந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். நுகர்வோர் சேவையில் குறைபாடு ஏற்படும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் நீதிமன்ற கதவை தைரியமாக தட்டலாம்" என்றார்.

- செல்வ மகேஷ் ( திருநின்றவூர்)

ஜூலை 1 முதல் அறிமுகமாகிறது சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் திட்டம்

ரயில் டிக்கெட் முன்பதிவில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 1ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது சுவிதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் டிக்கெட் திட்டம்.

டைனமிக் டிக்கெட் முன்பதிவு முறையில், தேவைக்கு ஏற்ப ரயில் டிக்கெட் விலை பல மடங்கு உயர்வதால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தடுக்கும் வகையில் சுவிதா ரயில் டிக்கெட் முறை அறிமுகமாகிறது.

இந்த திட்டத்தின் கீழ், ரயில் டிக்கெட், தேவைக்கு ஏற்ப உயரும். ஆனால், இரண்டு மடங்கை விட அதிகமாக இருக்காது என்பதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படாது.

எனவே, ப்ரீமியம் ரயிலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு திட்டமே இதன் மூலம் மாற்றியமைக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக மட்டும் அல்லாமல், ரிசர்வேஷன் கவுண்டர்களிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கு ஜாதிச் சான்று மறுப்பு மருத்துவ விண்ணப்பம் ஏற்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு



மதுரை:'மாணவிக்கு ஜாதிச் சான்று மறுக்கப்பட்டதை காரணமாகக்கூறி மருத்துவப் படிப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.அழகர் என்பவர் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி விமான நிலையத்தில் பியூனாக வேலை செய்கிறேன். நான் பழங்குடியினர் (இந்து- மலைக்குறவன்) வகுப்பை சேர்ந்தவன் என தாசில்தார், உதவி -கலெக்டர் சான்று அளித்துள்ளனர். எனது மனைவிக்கும் அதே ஜாதிச் சான்று உள்ளது. பள்ளியில் எனது மகன், இரு மகள்கள் படிக்கின்றனர்.

இவர்களுக்கு ஜாதிச் சான்று கோரி திருநெல்வேலி ஆர்.டி.ஓ.,விடம் 2013ல் விண்ணப்பித்தோம். துாத்துக்குடி உதவி கலெக்டரிடம் மனு அளிக்குமாறு கூறினார். அவரிடம் 2015 பிப்.,25 ல் மனு அளித்தோம்.உதவி கலெக்டர், ஸ்ரீவைகுண்டம் தாசில்தாருக்கு பரிந்துரைத்தார். வல்லநாடு வி.ஏ.ஓ., மூலம் விசாரணை நடந்தது. ஜாதிச்சான்று வழங்க உதவி கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். ஆனால் ஜாதிச்சான்று வழங்கவில்லை.

துாத்துக்குடி கலெக்டரிடம் புகார் செய்தேன். கோபம் அடைந்த உதவி கலெக்டர், மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.எனது பெற்றோர் பழங்குடியினர் ஜாதிச்சான்று வைத்துள்ளனர். எனது மகள் புவனேஸ்வரி பிளஸ் 2 தேர்வில் 1123 மதிப்பெண் பெற்றார்.

பொறியியல், மருத்துவப் படிப்புகளில் விண்ணப்பிக்க கடைசிநாள் மே 29. ஜாதிச்சான்று வழங்காவிடில் புவனேஸ்வரியின் எதிர்காலம் பாதிக்கப்படும்.பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டின் கீழ் புவனேஸ்வரிக்கு ஜாதிச்சான்று சமர்ப்பிப்பதில் தற்காலிகமாக விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்க மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வுக்குழு செயலர்களுக்கு உத்தரவிட வேண்டும். எனது வாரிசுகளுக்கு ஜாதிச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசு கூடுதல் வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன், மனுதாரர் வழக்கறிஞர் ஆதித்ய விஜயாலயன் ஆஜராகினர்.நீதிபதிகள் ஆர்.மாலா, வி.எம்.வேலுமணி கொண்ட அமர்வு உத்தரவு:

ஜாதிச்சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதை காரணமாகக்கூறி புவனேஸ்வரியின் விண்ணப்பத்தை பொறியியல், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வுக்குழு செயலர்கள்

நிராகரிக்கக் கூடாது. தகுதி அடிப்படையில் மனுவை பரிசீலித்து ஜூன் 12 க்குள் ஜாதிச் சான்று வழங்குவதாக அரசுத் தரப்பில் தெரிவித்துள்ளனர். அவ்வாறு வழங்காத பட்சத்தில் மாணவர் சேர்க்கை செயலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.

கள்ளநோட்டு என அறியாமல் வைத்திருந்தால் குற்றமில்லை



மும்பை:'கள்ளநோட்டு என அறியாமல் கரன்சி நோட்டுகளை வைத்திருப்பது குற்றமல்ல' என, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மும்பையை சேர்ந்த ஒருவர், வங்கியில் செலுத்திய கரன்சி நோட்டுகள், சிலவற்றில் கள்ள நோட்டுகள் இருந்தன. இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.விசாரணை நீதிமன்றம் அவருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து, பாதிக்கப்பட்ட நபர், மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி அனுஜா பிரபுதேசாய் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி தன் தீர்ப்பில் கூறியதாவது:கள்ளநோட்டு வைத்திருந்த நபருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சரியல்ல. தன் கையில் இருக்கும் நோட்டுகளில், சில கள்ளநோட்டுகளும் உள்ளன என்பதை அவர் அறியாத நிலையில், அவரை குற்றவாளியாக கருத முடியாது.

வங்கியில் அவர் செலுத்திய நோட்டுகள் கள்ள நோட்டுகள் என, வங்கியில் தெரிவித்த பிறகும் அவர் தப்பி ஓடவில்லை என்பதால், அந்த கள்ளநோட்டை அவர் வேண்டுமென்றே வைத்திருக்கவில்லை என்பது புலனாகிறது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்கிறேன்.இவ்வாறு, நீதிபதி அனுஜா உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், கள்ளநோட்டு புழக்கம் அதிகமாக உள்ள தற்போதைய நிலையில், கள்ளநோட்டு என தெரியாமல், பிறர் கொடுக்கும் நோட்டுகளை வைத்திருந்ததால், பலர் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.அத்தகையவர்களுக்கு இந்த தீர்ப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Rare honour for AU V-C

Vice-Chancellor of Andhra University G.S.N. Raju is accompanying President of India Pranab Mukherjee on a tour to Sweden from May 30 to June 5.

It is for the first time that a Vice-Chancellor of AU is made a member of President’s delegation on a foreign tour.

New VC takes over at Annamalai University

S. Manian has assumed charge as Vice-Chancellor of Annamalai University.

Dr. Manian, former head of Department of Botany, Bharathiar University, takes over from Shiv Das Meena, senior bureaucrat who was appointed Administrator after the Government took over the controversy-mired university in 2013.

Dr. Manian, with over 18 years experience as professor, was previously head of the Department of Botany, Bharathiar University where he is credited with launching an MSc bio-informatics course. The new Vice-Chancellor’s mandate would include bringing in probity in administration, especially in financial management.

Annamalai University had been in the doldrums when the Government decided to take over the institution and appointed an administrator after passing the Annamalai University Act, 2013.

Over 1,000 student visas processed at US embassy

I’m interested in mixing with American culture and international students,” said Rohan, who is headed to the University of Colorado to study business.

“Education drives economic growth in both the United States and India. I am thrilled to meet so many young students headed to America as the next step in their educational careers,” said U.S. Consul General Phillip Min. “Perhaps next time, these inspiring students will meet in boardrooms, laboratories, or even on the space station.”

Since May of 2014, the consular section at U.S. Consulate General of Chennai has processed over 25,000 student visas.

Father-in-law kisses girl, bride returns baraat

KANPUR: A band, baja and baraat went empty handed after the bride refused to marry the bridegroom on moral grounds when her would be father-in-law kissed her cousin.

The incident took place in Farrukhabad district in Kanpur.

The marriage of Ruchi, daughter of Parmeshwari Dayal from Nagla Khairband village in Farrukhabad, was fixed with Rajesh, son of Baburam from Nehru Nagar of Jaithara in Etah.

On the wedding day, the baraat reached Nagla Khairband village. All was well till the time of 'jaimal' ceremony when the bride's cousin Anita (name changed), who had come from Nagla Bhamrasa village of the district, also sharing the stage with her sister, was kissed by the groom's father Baburam even as the bride and her family looked on in deep disapproval.

Piqued at his behaviour, Ruchi refused to marry and ordered the marriage party to return immediately. Sensing seriousness of the situation, Rajesh's father apologised to the girl and her parents publicly. But Ruchi refused to give in. Ruchi's mother, who also rushed from Etah, tried to pacify her but she refused to budge citing moral reasons.

Later, the bridegroom and his father were confined to an enclosure by the girl's side and police were informed. While narrating the incident on phone, bride's cousin Brijesh Kumar said that the wedding party was allowed to return to Etah only after it agreed to return the gifts and reimburse the expenses amounting to Rs 27,900 incurred by the family of the girl on marriage arrangements.

The groom's family returned the gifts and paid the money to the bride's family for the expenses incurred, the police said. "Though police assistance was sought, the matter was resolved mutually by both the sides," said SHO Kotwali RP Yadav.

For child's higher education, Tamil Nadu parents offer to sell their organs

"I want sell my kidney. I am a 37-year-old married woman ... I have no money for my son's studies and I have family problems. So can you help me sir? It's very urgent ... My blood group is B positive,'' says an email sent to transplant surgeons in Chennai on May 25.

Anyone caught buying or selling organs can be jailed for up to seven years, with or without a fine of Rs 20,000, according to the Transplant of Human Organs Act and Rules, 1994.

But desperation, more than ignorance, is driving many people to break the law, especially during the college admission season.

Dr Sunil Shroff, who heads MOHAN Foundation, a non-government organization that campaigns for cadaver donations, says the emails are a new trend.

"Higher education is so expensive and parents get desperate. These are people who are not illiterate or very poor. Earlier most people who offered to sell organs (through middlemen) were below poverty line, trying to repay loans or marry off their daughters," he said.

These mails, doctors say, will subside once the college admissions are over, but people may continue to email them for other reasons.

They leave phone numbers and expect a call. Like this one received by organ registry: "Sir, I like to sell my kidney to anyone because of my family situation. Feel free to contact 09*********.

Some transplant surgeons say they dread to think what would happen if these people contact organ brokers.

Officials at the state transplant registry say that they have been receiving at least one email every two days regarding organ sale.

"We call and counsel every person who mails us. We tell them it is illegal to offer organs for sale. We also talk to them about the medical complications," says Dr J Amalorpavanathan, who heads the state cadaver transplant authority.

As a long term plan, the authority is planning a series of awareness programmes on benefits of cadaver donations and the need to stop trafficking. The state authority will also network with NGOs, doctors, hospitals and police to stop the illegal trade.

"People approach brokers only when the organ isn't available. Once we increase cadaver donations, people will not go to the black market. It's a long process, but an achievable one," he said.

Thursday, May 28, 2015

JIPMER gets over one lakh applications from MBBS aspirants

An unprecedented 1,37,435 applications have been received for the All India Entrance Exam for admission to 150 seats in the MBBS course at the Jawaharlal Institute of Post graduate Medical Education and Research (JIPMER) this year, which will be held on June 7.

The All India Entrance Exam for admission to Post Graduate (MD and MS) courses will be conducted on May 31.

Addressing a press conference on Wednesday, Dr. Subhash Chandra Parija, Director, JIPMER, said this is the first time that received applications have crossed the 1 lakh mark.

Boom in sales

“We are seeing a tremendous boom in number of applications for MBBS seats. This is not just in JIPMER. Our colleagues in the All India Institute of Medical Sciences New Delhi, and other institutes have reported the same,” said Dr. Parija.

Last year, over 93,000 candidates had taken the MBBS entrance exam in 360 centres in 36 cities, while this year, the MBBS entrance exam will be held in 581centres in 75 cities across India. Around 2,559 applications have been received from Puducherry.

On being asked about plans to increase intake in view of the large number of applicants, Dr. Parija said that JIPMER has many priorities apart from its MBBS course, like increasing focus on kidney and bone marrow transplants.

He added that infrastructure and manpower would also be crucial factors in increasing intake. Dr. Mahadevan Subramanian, Dean Academic, JIPMER said that the institute wanted to increase focus on offering specialisation courses.

Seat increase in PG courses

A total of 18,527 applications were received for the PG courses. From this year, there will be twice-a-year intakes (January and July) for PG courses, and the seats have been increased from 165 to 200. The PG entrance exam will be held in 86 centres in 30 cities. A new course, MD in Emergency Medicine, with 5 seats was introduced last year.

Low chance of fraudulent practices

Like last year, the 2 and half hour exam will be a computer-based or online test (single shift).

The online mode of exam helps in avoiding errors, said Dr. Subramanian. This year the English component of the exam has been split as logic and quantitative reasoning (10 questions) and English and comprehension (10 questions).

He added that collection of biometric data and taking of photographs have ensured that chances of fraudulent practices and impersonation are low.

“Mobile phone jammers will be installed at the exam venues. Apart from biometric data, we also take thumbprints of candidates.

We also have handwriting experts who examine the address entry written by candidates,” said Dr. Subramanian.

One case from 2006 and another from 2010 of fraudulent practices are currently in court, he added.

Results on June 15

Results for the MBBS course is expected to be declared on June 15, and counselling for the same will commence from June 22.

Results for the post graduate courses are expected to be declared on June 5, and counselling will commence from June 17.

Classes for all the courses will begin on July 1.

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து இந்தத் தேர்வை 30 ஆயித்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓர் நாள் தாமதமாக வியாழக்கிழமை வெளிவருகிறது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். சென்னை மண்டலத்தில் 1.7 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். முன்னதாக, சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 25) வெளியிடப்பட்டன.

ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் துறை புதிய உத்தரவு

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பாக, நிதித் துறை புதிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, தமிழக நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழக அரசுத் துறைகளிலும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வோர் ஆண்டும் தங்களது வாழ்வுச் சான்றிதழுடன், மறுபணி நியமனம், மறு திருமணம் ஆகியன செய்யவில்லை என்பதற்கான சான்றையும் அளிக்க வேண்டும்.
இதற்கென தனியான வரையறுக்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளன. இந்தச் சான்றிதழில் சான்றொப்பம் அளிக்க, அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதால் அந்த நடைமுறைக்குப் பதிலாக இப்போது புதிய நடைமுறையைப் பின்பற்றலாம் என கருவூலம்- கணக்குத் துறை, தமிழக அரசின் நிதித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
அதன்படி, சான்றொப்பம் அளிக்க அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் இருந்து கையொப்பம் பெறுவதற்குப் பதிலாக, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்களே சுய சான்றொப்பமிட்டு சான்றிதழை அளிக்கலாம் என கருவூலம்- கணக்குத் துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும், தாங்கள் மறுபணி நியமனமோ அல்லது மறுதிருமணமோ செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை அவர்களே சுய சான்றொப்பமிட்டு அளிக்கலாம். இந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையும், அதற்கான முழு பொறுப்பும் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களைச் சார்ந்தது என்று நிதித் துறை செயலாளர் சண்முகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதமானது சட்டப் பேரவைச் செயலகம், ஆளுநர் மாளிகை, துறை அலுவலகங்கள் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

'CBSE students to get certificates in digital format as well'

NEW DELHI: The Central Board of Secondary Education is likely to start issuing mark sheets and certificates in digital format as well along with hard copies which can be stored by students in their digital lockers, according to a top official in the IT Ministry.

"We are working with CBSE on digital certificates. The proposal is to enable students to store their CBSE certificates in their digital locker. I expect CBSE will issue these certificates within couple of months," IT Secretary R S Sharma told PTI.

The government launched digital lockers on February 10 and within three months over 1 lakh people have started using it. Madhya Pradesh (over 24,000), Uttar Pradesh (over 17,000) and Gujarat (over 13,000) are top three states where people have registered for this facility.

The concept of digital locker is to make people free from carrying files or getting copies attested.

Any person having Aadhaar number can open digital locker account for free.

"When a government department is issuing a certificate then other government department should not make people run for verifying same document again and again. Our priority is to bring all educational institutes on board for issuing certificates that can be stored in digital locker," Sharma said.

He added, the Department of Electronics and IT is also working with various other entities to issue digital certificates.

"Along with academic certificates we are approaching other government departments that are involved in issuing any kind of certificates. PAN Card, Voter ID are also in pipeline," he said.

IT Ministry will soon start working with Oil PSUs to issue digital LPG books and with state governments for ration cards and state education board certificates.

"This all will be linked to Aadhaar number of people. People can choose documents which they want to share with someone. It can be shared by e-mail by just clicking on the share option button. Department are also making changes in their system to start accepting documents online," Sharma said.

Thanjavur college gets its first medical super speciality course

The Thanjavur Medical College has been granted its first Medical Super Speciality Course – DM Neurology.

The Medical Council of India (MCI) has permitted one seat of three-year DM Neurology course from the 2015-16 academic year. Already the college has three surgical super speciality courses .

Disclosing this to The Hindu , TMC Dean P.G.Sankaranarayanan said the MCI gave its nod after approving faculty, special equipment and infrastructure for the department. Candidates who have completed MD General Medicine and MD Paediatrics are eligible for selection through entrance examination for the course.

Apart from addressing the neurological care needs of poor patients, particularly from rural and semi-urban areas, the course would usher in a definite improvement in the teaching component in the medical colleges in the zone, Dr.Sankaranarayanan said. Treatment for brain and spinal chord conditions such as stroke, myelitis and demyelinating disorders would see significant improvement.

The Thanjavur Medical College was started in 1959 and at present offers postgraduate courses in psychiatry, orthopaedics, general surgery, general medicine, anaesthesia, dermatology, chest medicine, anatomy, physiology, biochemistry, microbiology, paediatrics, ophthalmology, and surgical super specialty courses such as neurosurgery, plastic surgery and paediatric surgery apart from the staple 150 MBBS seats every year.

The college has also petitioned for increasing the intake of MBBS seats though that might take a little more time before the proposal fructifies.

Candidates who have completed MD General Medicine and MD Paediatrics are eligible for the course

இதற்குத்தான் சி.பி.ஐ. கேட்கிறார்கள்

காவல்துறையில் பல பிரிவுகள் இருக்கின்றன. முக்கியமான கொலையோ, திருட்டோ நடந்தால், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காக, இந்த வழக்கை உள்ளூர் போலீசார் விசாரிக்காமல், சி.பி.சி.ஐ.டி. அதாவது, குற்றப்பிரிவு ரகசிய போலீஸ் விசாரணைக்கு அனுப்புகிறோம் என்று அரசு சொல்வது வழக்கம். ஆனாலும், சில வழக்குகளில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுக்கிறது. சி.பி.ஐ. அதாவது, மத்திய புலனாய்வு பிரிவு என்பது மத்திய அரசாங்க உள்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்பாகும். இவ்வளவுக்கும் இருஅமைப்புகளுமே முசோரியில் உள்ள ஒரே அகாடமியில் பயிற்சிபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் இயங்குகிறது. மாநில காவல்துறையில் பணியாற்றிய போலீசார், இன்ஸ்பெக்டர்கள் போன்றவர்கள்தான் அயல் பணியாக சி.பி.ஐ.க்கு பணியாற்ற செல்கிறார்கள். அப்படியிருக்க மாநில போலீசார் மீது நம்பிக்கை வைக்காமல், சி.பி.ஐ. விசாரணை கோருவது தார்மீக அடிப்படையில் நல்லதல்ல என்று கருத்து நிலவுகிறது.

ஆனாலும், சி.பி.ஐ. விசாரணை கேட்பது சரியான முடிவுதான் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் துடிப்பான இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்து, மக்களிடம் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்தவர் டி.கே.ரவி. மிக மிக சாதாரண குடும்பத்தில் பிறந்த ரவி, 2009–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி, முதலில் குல்பர்காவில் உதவி ஆணையராகவும், பின்பு கோலார் மாவட்டத்தில் துணை ஆணையராகவும் பணியாற்றினார். மக்கள் சேவையிலேயே தன் முழுநேரத்தையும் செலவிட்ட ரவி, கோலாரில் பணியாற்றியபோது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், மணல் கொள்ளைக்காரர்கள் அவர்கள் அரசியலில், சமுதாயத்தில் எவ்வளவு செல்வாக்கு மிகுந்தவர்கள் என்றாலும், இவரது அதிரடி நடவடிக்கைக்கு முன்பு நிற்கமுடியவில்லை. அதேநேரத்தில், ஏழை–எளிய பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காக எந்த நேரத்திலும் அவரை அணுக முடிந்தது, குறைகளும் நிவிர்த்தியானது. இதனால் அவரை உடனடியாக அந்த பதவியில் இருந்து வணிகத்துறைக்கு மாற்றிய நேரத்தில், கோலார் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். வணிக வரித்துறையிலும் மிகுந்த செல்வாக்குள்ள நிறுவனங்களில் சோதனைகளை நடத்தி, வரி ஏய்ப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். இப்படி ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளை சம்பாதித்து, அவர்களின் நிர்ப்பந்தங்களையும் சமாளிக்கமுடியாத ரவி, ஒருநாள் தூக்கில் தொங்கினார். அவரது பிரேத பரிசோதனை முடியாத நேரத்திலேயே, தற்கொலை என்று அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு, அதற்கு மாநில போலீசாரால் புதுப்புது காரணங்களும் கற்பிக்கப்பட்டன. அவருடன் ஐ.ஏ.எஸ். பயிற்சிபெற்று அதே கர்நாடக மாநிலத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணுக்கு அதேநாளில் 44 முறை செல்போனில் பேசினார், ஒருதலை காதல் என்றெல்லாம் கரடிவிட்டார்கள்.

பொதுமக்கள் இதையெல்லாம் நம்பவில்லை. சி.பி.ஐ. விசாரணை கேட்டார்கள். கடைசியில் சோனியா காந்தியும் வலியுறுத்தியவுடன் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இப்போது சி.பி.ஐ.யின் பூர்வாங்க அறிக்கையில், பெண் அதிகாரியுடன் ரவி 44 முறையெல்லாம் பேசவில்லை, ஒரே ஒரு முறைதான் பேசியிருக்கிறார் என்று ஆதாரத்தோடு கூறி மாநில போலீசாரின் கூற்றை தவிடுபொடியாக்கிவிட்டனர். வீணாக மறைந்த அதிகாரிக்கும் அவப்பெயர், ஒரு பெண்ணுக்கும் தேவையில்லாத அவப்பெயரை சி.பி.ஐ. விசாரணை காப்பாற்றிவிட்டது. சி.பி.ஐ.யின் முழுவிசாரணையில் இன்னும் என்னென்ன வெளிவரப்போகிறதோ?, மாநில போலீசார் இனியாவது அரசியல் அல்லது செல்வாக்குள்ளவர்கள் நிர்ப்பந்தத்தால் உண்மையை விட்டு விலகாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கும் நல்லது. இதற்கு அரசுகளும், அரசியல்வாதிகளும் துணை நின்று சி.பி.ஐ.க்கு இணையாக, மாநில போலீசை செயல்பட உறுதுணையாக இருக்கவேண்டும்.

Wednesday, May 27, 2015

குறள் இனிது: அது இது எது?..by சோம.வீரப்பன்



டிஸ்கவரி சேனலில் ஒரு காட்சி. ஒரு பெரிய மான் கூட்டம். அதை தூரத்திலிருந்து படம் பிடிக்கும் கேமிரா, பின்னர் ஒரு பாறையின் மேல் இரு கால்களை ஊன்றி அந்த மான்களைக் கவனமாகப் பார்க்கும் ஒரு சிறுத்தையைக் காண்பிக்கிறது. மெதுவாகக் கீழிறங்கும் சிறுத்தை, மான் கூட்டத்தை நோக்கி மிக வேகமாகப் பாய்கிறது.

சுமார் 30 மான்கள் அங்குமிங்குமாக பயத்தில் ஓடுகின்றன. ஆனால் சிறுத்தையோ அதில் ஒன்றை மட்டும் குறிவைத்து அதன் பின்னால் விடாமல் துரத்தி ஓடி, கவ்விப் பிடித்து விடுகிறது. அடுத்த காட்சியைப் பார்க்கும் மனநிலை இல்லாததால் டிவியை அணைத்து விடுவோம்.



ஆனால் இந்நிகழ்ச்சி கற்பிக்கும் ஒரு நல்ல பாடம் நம் மனதில் தொடர்ந்து நிழலாடும். அச்சிறுத்தை மான் கூட்டத்தைப் பார்க்கும் பொழுதே எந்த ஒரு மானைப் பிடிப்பது என்று முடிவு செய்து, அந்த ஒரு குறிப்பிட்ட மானை மட்டும்தான் பின் தொடர்ந்தது.

அவ்வேட்டையின் சில தருணங்களில் வேறு சில மான்கள் சிறுத்தையின் அருகில் வந்துவிட்டாலும் அது தன் கவனத்தைத் திசை திருப்பவில்லை. சிறுத்தையின் வெற்றிக்குக் காரணம் அதன் கவனம் மாறாமல் ஒரே குறியாக இருந்ததுதானே. வெவ்வேறு மான்களைத் துரத்தியிருந்தால் பல திசைகளில் ஓடி இரை சிக்காதிருந்திருக்கும்.

ஒரு செயலைச் செய்யுமுன் அது குறித்த தெளிவான சிந்தனை அவசியமாயிற்றே. எதைச் செய்கிறோம் என்பதில் சலனமோ ஏன் செய்கிறோம் என்பதில் சஞ்சலமோ இருப்பது எந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென்பதே தெரியாமல் ரயில் வண்டி ஏறுவதற்கு ஒப்பானதாயிற்றே? முடிவு பெறாத செயல்களைச் செய்பவர்கள் ஏளனமாகப் பேசப்படுவர்; அந்த அவப்பெயருக்கு அஞ்சுபவர்கள் தெளிவு இல்லாத செயலைத் தொடங்கவே மாட்டார்கள் என்கிறது குறள்.

ஒரு செயலை மேற்கொள்ளும் முன் நம்பிக்கைக்குரிய வல்லுநர்களுடன் அதை எப்படிச் செய்தால் சாத்தியமாகும், எப்பொழுது எவ்வாறு செய்ய முடியும் என்று ஆராய வேண்டும். அச்செயல் குறித்த குழப்பமில்லாத வரையறை இருந்தால்தானே நன்று. இக்காலத்தில் நிறுவனங்களின் Vision Statement & Mission Statement சொல்வது இவைகளைத் தானே?

நன்றாகக் கட்டப்பட்டிருக்கும் எந்த ஒரு வீடும் தெளிவான திட்டத்துடனும் வரைபடத்துடனுமே தொடங்கப்பட்டிருக்கும் என்பார் நெப்போலியன் ஹில். அலுவலகங்களிலும், வணிகத்திலும் அப்படித்தான். எடுத்த செயல் வெற்றிபெறத் தெளிவான குறிக் கோளும் அதைச் சென்றடைவதற்கான ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சியும் வேண்டும். Management by Objectives இதற்குப் பெரிதும் உதவும்.

குறிக்கோள்களை எண்களாகச் சொல்வதுதான் பலன்தரும். புரிந்து கொள்வதும் எளிது. “விற்பனையைக் கூட்டுவோம், இயன்றவரை கூட்டுவோம், அதிகமாகக் கூட்டுவோம்” என்றால் என்ன புரியும்? “வரும் நிதியாண்டில் சென்ற ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்து ரூ.122 கோடியை எட்டுவோம்” என்றால் குழப்பமிருக்காதே. வெறும் எண்கள் போதாது. எந்தத் தேதியில் செய்ய வேண்டும் என்று சொல்வது முக்கியம். வள்ளுவரின் தெள்ளத் தெளிவான குறள் இதோ

தெளிவில் அதனைத் தொடங்கார் இளிவென்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர்

நம்ப முடிகிறதா?- பிரம்மாண்ட நட்சத்திரம்



மே மாதம் வந்தாலே வெயிலைக் கரித்துக்கொட்டுகிறோம். வெயில் தாங்க முடியவில்லை, வியர்த்துக்கொட்டுகிறது என்று புலம்புகிறோம். ஆனால், சூரியன் இல்லாமல் உலகில் எந்தக் காரியமும் நடக்காது. சூரியன் பற்றி கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்துகொள்வோமா?

பால்வெளி மண்டலத்தில் 10000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன. சூரியனும் ஒரு நட்சத்திரம்தான், நடுத்தர அளவுடைய நட்சத்திரம். என்ன ஒரே வித்தியாசம், அது பூமிக்கு மிக அருகில் உள்ளது. ஆனாலும் அதன் நிறம் வெள்ளைதான். மஞ்சள் குள்ள நட்சத்திரம் என்று இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது. இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அளவு கடந்த வெப்பம் வெளியாகிறது.

சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்துவிட்டது. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இதேபோல எரிந்துகொண்டிருக்கும்.

சூரிய ஒளி சூரியனிலிருந்து புறப்பட்டுப் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன. சூரியனில் இருந்து தான் பூமி அனைத்துசக்திகளையும் பெறுகிறது.

பூமியில் இருந்து ஒரு சாதாரண விமானத்தில், அதன் வழக்கமான வேகத்தில் சென்றால் (மணிக்கு 645 கி.மீ. வேகம்) சூரியனை அடைய 20 ஆண்டுகள் ஆகும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வருவது சூரியக் கிரகணம். ஒரு முழு சூரிய கிரகணம் ஏழரை நிமிடங்களுக்கு நீடிக்கும்.

சூரியனின் சில பகுதிகள் கறுப்பாகத் தோற்றமளிக்கும். அவை சூரியப் புள்ளிகள். அப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் அப்படி இருக்கிறது.

சூரியனைப் பற்றி ஆராய்வதற்காக நாசாவின் ‘ஸ்கைலாப்’ என்ற முதல் விண்கலம் விண்வெளி வீரர்களுடன் 1974 பிப்ரவரியில் சென்றது.

பூமி முட்டை வடிவில் சூரியனைச் சுற்றி வருவதால், இரண் டுக்கும் இடையிலான தொலைவு 14.7 கோடி கி.மீ. முதல் 15.2 கோடி கி.மீ. என மாறிமாறி இருக்கும்.

பூமியைப் போல 28 மடங்கு அதிகமான புவியீர்ப்பு விசையைக் கொண்டது சூரியன். அதன் காரணமாகத்தான் ஹைட்ரஜன் பிணைவின்போது அது வெடிக்காமல் இருக்கிறது. இல்லையென்றால், ஒட்டுமொத்த சூரியக் குடும்பமே வெடித்துச் சிதறிவிடும்.

வரலாற்றில் இதுவரை மனிதன் பயன்படுத்தியுள்ள மொத்த எரிசக்தியின் அளவு, சூரியன் வெறும் 30 நாள் பயன்படுத்திய அளவுதான்.

பெருவெடிப்பின் ஒரு கட்டத்தில் சுழலும் பெரும் வாயு மேகம் மூலம் சூரியனும், அதன் குடும்பத்தைச் சேர்ந்த மற்றக் கோள்கள், நிலவுகள், நூற்றுக்கணக்கான சிறுகோள்கள், எரிநட்சத்திரங்கள், விண்கற்கள் உருவாகின. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பெரும் வாயு மேகத்தில் 99.8 சதவீதத்தைச் சூரியன் மட்டுமே உருவாக எடுத்துக்கொண்டது. எஞ்சிய 0.2 சதவீதத்தில்தான் மற்ற அனைத்தும் உருவாகியிருக்கின்றன.

பண்டைய நாகரிகங்களில் பலவும் சூரியனை மையமாகக் கொண்டு இயங்கின. எகிப்தியர்கள் ரா என்றும், மெக்சிகோவின் அஸ்டெக் நாகரிகத்தினர் டோனாடியு என்றும், கிரேக்கர்கள் ஹீலியோஸ் என்றும், இன்கா நாகரிகத்தினர் இன்ட்டி என்றும் சூரியனை அழைத்தனர். ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற வட்டமாக அமைக்கப்பட்ட கற்கள், சூரியனை வழிபடும் வகையில் அமைக்கப்பட்டவையே.

இயற்கையில் உள்ள கச்சிதமான வட்ட வடிவத்துக்குச் சிறந்த உதாரணம் சூரியன். சூரியன் தன் அச்சில் 25.38 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது.

பூமியைவிட, சூரியன் 10 லட்சம் மடங்கு பெரியது. பூமியைப் போல 110 மடங்கு அதிக விட்டத்தைக் கொண்டிருக்கிறது சூரியன்.

சூரியனின் மேற்புற சராசரி வெப்பநிலை 10,000 டிகிரி ஃபாரன்ஹீட். சூரியனின் மையப் பகுதி மிக மிக வெப்பமானது. அதன் வெப்பநிலை 27 லட்சம் டிகிரி ஃபாரன்ஹீட்.

சூரியனை பூமி சுற்றி வருவதாக 16-ம் நூற்றாண்டில் நிகோலஸ் கோபர்நிகஸ் கூறினார். புவியீர்ப்பு விசைக் கொள்கையையும், அதன் காரணமாகச் சூரியனை மற்றக் கோள்கள் சுற்றி வருவதையும் ஐசக் நியூட்டன் நிரூபித்த பிறகே சூரியக் குடும்பம் என்ற கருதுகோள் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிரேக்க சூரிய கடவுள் முழு சூரிய கிரகணம் சூரிய தீக்கொளுந்து

உறவுமுறை சொல்லி அழைப்பது அழகு!


உறவுமுறை சொல்லி அழைப்பது அழகு!

‘விமானத்தில், ‘அங்கிள்’ என்று தன்னை அழைத்ததால், ஜூனியர் விமானியைத் தாக்கிய சீனியர் விமானி!’

சமீபத்தில் வெளியான இச்செய்தியைப் படித்ததும், `வேடிக்கையாக இருக்கிறதே' என்று நினைத்திருப்பீர்கள். இது, வேதனையானதும்கூட! இது செய்தியல்ல; கலாசார சீரழிவு. ஒருவரை ஒருவர் உறவு முறை சொல்லி அழைக்கும் நம் பாரம்பர்யம் சமாதியாவதைக் குறிக்கும் சம்பவம். இன்னொரு பக்கம், இன்று திரைப்படங்களில் காதலனை ‘பிரதர்’, ‘அண்ணா’ என்றெல்லாம் அழைத்து, கலாசாரக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

நம் தலைமுறையில் குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உறவு முறைகளையும் அழகாக அறிமுகப்படுத்தினார்கள் நம் பெற்றோர். அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று... நம் தமிழ் மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் உண்டு, அழகழகான பெயர்கள்! ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் ‘அங்கிள்’, பெண்கள் அனைவரையும் ‘ஆன்ட்டி’ என இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே சுருக்கிவிடுகிறார்கள். இதனால் நாம் தொலைத்தது, ஒவ்வோர் உறவுக்கான பிரத்யேக சொல்லை மட்டுமல்ல... அந்த பந்தங்களின் பிரத்யேகத்தையும்தான்!

அண்ணன், அக்கா என்று அழைக்கும்போது, வயதில் சிறிது மூப்பு என்பதற்கான மரியாதையுடன், மனதில் கொஞ்சம் சிநேகத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும் அந்த அழைப்பு. சித்தியும், சித்தப்பாவும் அப்பா, அம்மாவிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், உறவையும் தரக்கூடியவர்கள். அத்தை, மாமா, மச்சான், அத்தான் என இவையெல்லாம் ‘முறைக்கார’ உறவுகள். கேலியும், கிண்டலும் ததும்பும் பந்தங்கள். வயதில் மூத்தவர்கள் ஆனாலும் வார்த்தைகளில் சீண்டி விளையாடும் உரிமை தரும் சொந்தங்கள்.

அத்தாச்சி, மதினி, அண்ணி என்பவர்களும் கிண்டல் செய்யும் உரிமைக்கு உட்பட்டசொந்தங்களே! அப்பா வழி அப்பத்தா, அய்யாவும், அம்மா வழி தாத்தா, பாட்டியும்... கிளைகளின் வேர் சொந்தங்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், நம் தமிழ்க் குடும்பங்கள் ரத்த சொந்தங்களுக்கு மட்டும் இந்த உறவை எழுதிவைக்கவில்லை. பக்கத்து வீட்டு ‘அத்தை’, எதிர்வீட்டு ‘சித்தப்பா’, கடைசி வீட்டு ‘அப்பத்தா’, தெரு முக்குக் கடை ‘அண்ணன்’ என்று அனைவரையும் முறை சொல்லிக் கூப்பிடும் அன்பு நிறை கலாசாரம் நம்முடையது. இதில் வயதின் அடிப்படையில் தங்களுக்குப் பிடித்தமான, பாதுகாப்பான, கண்ணியமான உறவுமுறைப் பெயர்களை அவரவர்க்கு ஏற்ப அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். உதாரணமாக, ஒரு பெண் தன்னைவிட வயதில் சற்று மூத்த ஆணை, ‘அண்ணே’ என்று அழைத்து, ஒரு பாதுகாப் பான பந்தத்தை உருவாக்கிக்கொண்டார். அதேபோல, தங்களைவிட வயதில் இளைய பெண்ணாக இருந்தாலும்கூட, ஆண்கள் பலர், திருமணமான பெண்களை ‘அண்ணி’, ‘மதினி’ என்று அழைத்து, தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.

ஆனால் ‘வெஸ்டர்ன்’ கலாசார மோகத்தில் இருக்கும் குடும்பங்கள், ‘என் பிள்ளைக்கு தெரிஞ்ச ரெண்டே உறவுகள்... அங்கிள், ஆன்ட்டிதான்!’ என்று அதைப் பெருமையாகவே சொல்வதைக் கேட்கும்போது, வருத்தமாக இருக்கிறது. மேலும், நெருங்கிய ரத்த சொந்தங்களையும்கூட, அவர்களுக்கு ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்றே பழக்குவது கொடுமை! இன்னும் கொடுமையாக, இன்று பல இளம்பெண்கள் தங்கள் மாமனார், மாமியாரையும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்று அழைப்பதைப் பார்க்கிறேன்.

நீங்களே யோசித்துப் பாருங்கள். ஓர் இளம்பெண், தெரியாத ஓர் இடத்தில், எதிர்ப்படும் ஓர் ஆணிடம் விலாசம் கேட்கிறாள். ‘சார் இந்த அட்ரஸ் சொல்லுங்க’ எனும்போது, அவரும் சம்பிரதாயமாக வழி சொல்வார். ‘அங்கிள்... இந்த அட்ரஸ் தெரியுமா?’ என்று கேட்டால், 30+ ஆசாமியாக இருந்தால், அந்த விமானி போல கோபப்படவும் வாய்ப்பிருக்கிறது. ‘அண்ணே... இந்த அட்ரஸ் எங்கனு சொல்றீங்களாண்ணே..?’ என்று கேட்டால், அந்த உறவுமுறைக்கான பொறுப்பை தான் ஏற்று, அக்கறையுடன் வழி சொல்லி அனுப்பி வைப்பார். சந்தேகமாக இருந்தால், உங்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் இந்தச் சூழலைச் சொல்லி அவர்களின் மனதைக் கேட்டுப் பாருங்கள். அதேபோல, வெளியிடத்தில் ஓர் ஆண், பெண்ணிடம் பேசும் சூழலை ‘அக்கா’, ‘அண்ணி’ போன்ற அழைப்புகள் சுமூகமாக்கும். இதை நீங்களே உணரலாம்.

உறவுமுறைப் பெயர் சொல்லி அழைப்பது, வெறும் வார்த்தை இல்லை. அது அந்த உறவுக்குத் தரும் மரியாதை. இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை, இடைவெளியை நிர்ணயிப்பது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்... உறவு களையும், அதன் உன்னதங்களையும்!

- ரிலாக்ஸ்...

ஒரு நிமிடம் பெற்றோர்களே..!

பெரியவர்களைப் பார்த்து தான் குழந்தைகள் அதிக விஷயங் களைக் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, உங்களின் உறவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, ‘என் அப்பாவோட தம்பி எனக்கு சித்தப்பா’ என்று உறவு வழிகளை விளக்குங்கள்.

‘நீ அண்ணி என்றால், உன் கணவர் எனக்கு என்ன முறை வேண்டும்?’ என்று உறவுகளை விளையாட்டு விடுகதைகளாக குழந்தைகளுக்கு மனப்பாட மாக்குங்கள்.

குழந்தைகள் சொல்லும் உறவுமுறைகளைக் கவனித்து சரி செய்யுங்கள்.

பள்ளி, கடைகள் என்று, ‘சார்’ என்ற பொதுஉறவை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை யும் கற்றுக்கொடுங்கள்.

வயதில் பெரியவர்களை ‘வா, போ’ என்று அழைப்பது, பெயர் சொல்லி அழைப்பது போன்ற தவறான பழக்கங்களைத் திருத்துங்கள்.

டாக்டர் அபிலாஷா, தொகுப்பு: சா.வடிவரசு ‪#‎ஆல்இஸ்வெல்‬‪#‎அவள்விகடன்‬ ‪#‎உறவுமுறை‬

ஏ.சியில் வேலை பார்த்தால் ஓ.சியில் சிறுநீரக கல்: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

சென்னையில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்ப்பானங்களையும், இளநீர், நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கை பானங்களையும், குளிர்ச்சியான உணவுகளையும் தேடி செல்கிறோம்.
அண்டை மாநிலமான ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்கு 850க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் உருவாகத் தொடங்கிவிடும். இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகின்றன. சிறுநீரகக்  கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த கல் சிறுநீரக பையில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. சிறுநீரக பாதையில் அது பயணிக்கும் போது குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி ஏற்படும். இதற்கு இரண்டு வகையான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நவீன அறுவை சிகிச்சை அல்லது மருந்து, மாத்திரைகள் மூலம் குணப்படுத்துகிறார்கள்.

சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள் ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, உணவு முறை, போதியளவு தண்ணீர் பருகாதது ஆகியவை மட்டுமே சிறுநீரக கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

பால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடை யாது. உண்மையில் பால் அளவுக்கு ஏற்ப குடித்தால் கிட்னியில் கல் உருவாகுவதை தவிர்க்க முடியும்.

உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி வாய்க்குள் நுழையாத பல நோய்களை பரிசாக அளித்து வருகின்றன. ஆண்டுதோறும் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போல சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் யுரோலாஜிஸ்ட் டாக்டர் சேகர் கூறுகையில், "சிறுநீரகத்தில் கல் உருவாகுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கல் உருவாகும். அதை ஆரம்பக்கட்டத் திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்தி விட லாம். கல்லின் தன்மை, எடையை பொறுத்தே சிகிச்சை முறைகள் மாறுபடுகின்றன. தொடர்ந்து ஏ.சி அறை களில் இருந்தால் தாகம் எடுப்பது குறையும். இதனால் சிறுநீரகத்தில் கல் உருவாக வாய்ப்புள்ளது. 

முன்பெல்லாம் சிறுநீரக கல் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிகம் ஏற்படும். ஆனால் இப்பொழுது ஆண் களை விட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.  தக்காளி, முந்திரி பருப்பு, சாக்லெட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு சிறுநீர் கழிக்கும் பொது எரிச்சல், சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், முதுகுவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.
ஒரு முறை கல் உருவாகிவிட்டால் அவை மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்தகை யவர்கள் கோடைக்காலத்தில் ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. தண்ணீர் பருகும் அளவை அதிகப்படுத்தினால் சிறுநீரகத்தில் கல் உருவாகுவதை தடுக்க முடியும். தண்ணீரில் கால்சியம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தாதுக்கள் இல்லாமல் அதை சுத்திகரித்து பருகினால் சிறுநீரக கல் பாதிப்பி லிருந்து தப்பிக்கலாம். 

இளநீர், வாழைத்தண்டு, எலும்பிச்சைச்சாறு போன்றவற்றை சாப்பிட்டாலும் சிறுநீரக தொடர்பாக கோளாறு கள் ஏற்படுவதை தடுக்க முடியும். தமிழகத்தை விட வடஇந்தியா பகுதிகளில் சிறுநீரக கல் பாதிப்பு அதிக மாக இருக்கிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்த பாதிப்பு இருக்கிறது" என்றார்.

- எஸ்.மகேஷ்

இப்படியும் பார்க்கலாம்: மரியாதை வேணுமா உங்களுக்கு?



பரிமாறுகிறவர்களால் நிறைந்தது உலகம். அன்பை, நட்பை, காதலை, துரோகத்தை, வெறுப்பை… ஒவ்வொரு கணமும் எதையாவது ஒன்றைப் பரிமாறிக்கொண்டே இருக்கிறோம். நாமும் பரிமாறப்படுகிறோம். நம் தட்டில் விழும் உணவுக்கேற்பவும் நமது தன்மைக்கேற்பவும் எதிர்வினையாற்றுகிறோம்.

வயிற்றுப் பசிக்கான உணவைப் பரிமாறுகிற சமையல்கார்கூட கூலியைவிடப் பாராட்டையே டிப்ஸாக எதிர்பார்க்கிறபோது, அன்பைப் பரிமாறுகிற மென் உள்ளங்கள் அங்கீகாரத்தை எதிர்பார்க்கத் தானே செய்யும்...?

செக்யூரிட்டி மரியாதை

அடுக்குமாடிப் பிரஜையான சங்கீதாவுக்கு வாசலில் நிற்கும் செக்யூரிட்டிகூடத் தன்னை மதிப்பதில்லை என்று ஆதங்கம். ஆனால், அதே செக்யூரிட்டி அதே குடியிருப்பில் உள்ள வேறு சிலருக்குப் பரிவட்டம் கட்டி, முப்படை அணிவகுப்பை நிகழ்த்தி மரியாதை செய்வார். அவர்களின் காலடி ஓசையை காதுகளுக்கு அப்பாற்பட்ட புலன்களில் உணர்ந்து காற்றைவிட வேகமாய் விரைவார். அவர்களின் லக்கேஜைத் தூக்குதல், கார் கதவைத் திறத்தல் ... என்று சிறந்த அடிமை ஆவார்.

ஆனால், சங்கீதாவைப் பார்க்கும்போது மட்டும் அவருக்குள் ளிருந்து இன்னொருவர் வருவார். “இரும்மா, வரேன்...மனிஷனுக்கு ரெண்டு காலுதான இருக்கு...?” என்பார். “ஜெனரேட்டர் போடணுமா... பேசாம ஸ்டெப்லயே நடந்து போயிருங்களேன்...” என்பார்.

இத்தனைக்கும் அவள், அவரிடம் அன்பாகத்தான் நடந்துகொள்கிறாள். வயதுக்கு மரியாதை கொடுப்பாள். அவரது குடும்பத்தின் சில சோகங்களை அவள் அறிவாள். மற்றவர்களைப் போல் மிச்சமான உணவைத் தராமல், நல்ல உணவையே அவருக்குக் கொடுப்பாள்.... இருந்தாலும்... ஏன்...?

பதில் மரியாதை

அன்பைப் பரிமாறுபவர்களின் நியாயமான பிரச்சினை இது.

இவ்வளவு அன்பாக நடக்கிறோம், மற்றவர்களை மதிப்பதுபோல் தன்னை ஏன் மதிப்பதில்லை..? அடுத்தவரை மனுஷனாய் மதிக்கிற தனக்கு ஏன் மரியாதை கிடைப்பதில்லை...?

எது மரியாதை...?

முதலில், நாம் எதை மரியாதை என்று புரிந்து வைத்திருக்கிறோம்...?

பாசாங்கு மரியாதை

ஒரு மேலாளர் சும்மா பேசினாலே திட்டுறமாதிரி தான் இருக்கும். அப்படியானால் திட்டு...? அவரால் இடைவிடாமல் ஐந்து நிமிடங்கள் திட்ட முடியும். எனவே, அங்கே வேலை பார்ப்பவர்கள் அவரது கண்ணசைவு, முகபாவத்தின் பொருள் சொல்லும் அகராதியுடன் அலைந்ததில் ஆச்சரியம் என்ன?

அவர் மட்டுமல்ல...அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுமை செய்தல், வார்த்தைகளால் வடு செய்தல், பலத்தினால் மனதை நசுக்குதல்...போன்ற செயல்களுக்குப் பயந்து, அவற்றைத் தவிர்க்க விரும்பி “ வந்துட்டேங்க...” என்று ஓடி வந்தால்--- அந்த நடிப்பை, பாசாங்கை --- நிறையப் பேர் மரியாதை என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தவருக்குப் பயந்து நாம் செய்யும் எந்தச் செயலும் “ மரியாதை “ என்னும் பிரிவினுள் வராது.

உண்மையான மரியாதை

எனில், உண்மையான மரியாதை எது...?

ஒருவரின் உன்னதத்தை உணர்ந்து அதன் காரணமாக, பிறப்பதே மரியாதை. உதாரணமாக, காந்தியடிகளின் கொள்கைகளைப் பிடிக்காதவர்கூட அவருக்கு மரியாதையே செய்வர். அன்னை தெரசாவைக் கண்டதும் ஒருவர் எழுந்து நிற்கிறார் என்றால், அது பயத்தின்பால் வருவதல்ல...

தன்னை ஆளுமை செய்ய நினைக்கும் மனிதனை சக மனிதன் விரும்பவே மாட்டான். எனவே தான், அவன் வேறு வழியின்றி அவரது வார்த்தைகளை அல்ல--உறுமல்களைத் தவிர்க்க விரும்பி நெருங்கிச் செல்கிறானே தவிர, உண்மையில் அவன் அவரிடம் இருந்து வெகுதூரத்தில் தான் இருக்கிறான்...அவன் மனதில் மைண்ட் வாய்ஸ் “வந்துட்டேன்டா நாயே...” என்று தான் சொல்லும்.

இதைப்போல்தான் அன்பும்.

உங்கள் அன்பு நிபந்தனைக்கு உட்பட்டதாக இருந்தால் “ரிப்ளை பை ரிட்டர்ன் மெய்ல்..” என்று பலனை எதிர்பார்க்கும். தன் அன்பு மதிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கும். பின்னே ஏமாறும்--சங்கீதாக்களைப் போல.... சங்கீதா “என்ன பெரியவரே, உடம்பு சரியில்லையா...?” என்ற தன் அன்பான வார்த்தைகள், தான் வரும்போது கரண்ட் போனால் லிஃப்ட் போட அவரது கால்களுக்கு வேகத்தைத் தரும் என நம்பினாள். ஏமாந்தாள். நம்மில் பெரும்பாலானவர்கள் அன்பு என்ற பெயரில் பூ விலங்கைத்தான் மற்றவர்களுக்கு அணிவிக்கிறோம்.

மரியாதை கெட்ட அன்பு

ஆனால், தூய அன்பு---எவ்வித நிபந்தனைகளும் அற்றது. ...மரியாதையாவது, மதிப்பாவது....! அங்கு உரிமையும், இயல்பான தன்மையுமே இருக்கும்.

நீங்கள் அன்பாக இருக்கலாம். ஆனால், மனிதன் தன்னை யார் சிறுமை செய்கிறார்களோ அவர்களுக்கே முதல் வணக்கம் செய்வான். அன்பான உங்களிடமும் வருவான்.. ஆனால், சிவாஜி தேவர் மகன் திரைப்படத்தில் சொன்னது போல “திடீர்னு வான்னா, அவன் எப்படி வருவான்...? அவன் மெல்லத்தான் வருவான்...”

அன்பாய் இருக்கிறோம்; எனவே, அடுத்தவர் நம்மை மதிக்க வேண்டும்; “நாய் மாதிரி விழறவனுக்குத்தாங்க காலம் “ என்பது உங்கள் வாதமாக இருக்குமானால், அவரது வாதம் “இவ்வளவு அன்பான உள்ளம் படைத்தவர்களால் என் வேதனையை, வலியை, சூழலைப் புரிந்து கொள்ள முடியாதா...?” என்பதாகத்தான் இருக்கும்.

நீங்கள் அன்பைக் கொடுத்தீர்கள். பதிலுக்கு அன்புதான் கிடைக்கும். மரியாதை ஸ்லோமோஷனில் பின்னால்தான் மெதுவாக வரும். உங்கள் அன்பு நிபந்தனையற்றது என்றால், அவரது செயல்களில் எவ்வித நடிப்பும் இல்லாததையும், வார்த்தைகளின் உண்மையையும் புரிந்து கொள்வீர்கள்.

எது வேண்டும்?

எனவே, மரியாதை செய்பவர்கள், பெரும்பாலும் பாசாங்குதான் செய்கிறார்கள். அந்தப் போலிச் செயல்களின் பின்னால் உள்ள அன்பின் சதவீதம் ரொம்பக் குறைவாகவே இருக்கும்.

அன்பு வேண்டுமா...? போலி மரியாதை வேண்டுமா என்பதில் தெளிவாக இருங்கள்.

உங்கள் வாகனத்தில் பெட்ரோல், டீசல் இரண்டையும் ஒன்றாகப் போட்டால் என்ன ஆகும்? “ இரண்டும் சந்தித்தபோது... பேச முடியவில்லையே ....” என்ற நிலை ஏற்படும். அதன் விளைவுகள் வேறுவிதமாகத்தான் இருக்கும்.

தொடர்புக்கு: shankarbabuc@yahoo.com

Med PG seats: Plea seeks priority to merit over service

The Supreme Court on Monday sought response from the State government and the Medical Council of India on a plea by two rank-holder doctors, challenging preference being given to the in-service candidates, instead of merit, in admission to PG courses.

A vacation bench of Justices A K Sikri and U U Lalit admitted the petition by Dr Saikumar V, medical officer of Krishnarajendra Hospital, Mysuru and Dr Pradeep Kumar H D of Government McGann Hospital of Shimoga Institute of Medical Sciences for hearing on Monday (May 25).

The court, however, refused to pass any interim direction even as senior advocate S Guru Krishna Kumar and advocate Nishanth Patil, sought stay on the Karnataka High Court's order of April 30.

The counsel contended that the HC had erroneously allowed slab system for admission to PG courses through Karnataka State PGET 2015, instead of relying on merit, in violation of the MCI guidelines and the apex court rulings.

“As per faulty slab system, merit lists are prepared based on the length of the service of the in-service candidates, i.e, preference is given to the first slab (persons who have completed five years of regular service) than to persons in second slab (persons who have completed four years of service) and lastly to the third slab (persons who have completed three years of service),” they claimed.

“If the High Court's order is allowed to sustain, the country would be deprived of meritorious candidates and left with only undeserving candidates who have secured much lesser scores and in all likelihood are less competent doctors.

In that event, the public at large would suffer as they would be at mercy of such incompetent doctors and the meritorious candidates may not be in a position to serve the country at all,” they added.The counsel claimed that after the HC order, a revised list was announced in May wherein Dr Pradeep Kumar, who was placed at rank no. one in the merit list of autonomous candidates list (issued in March 2015, solely on the basis of merit) has now been placed at no. 15 owing to the implementation of slab system.
Dr Saikumar, who was placed at rank 10, has now been placed at rank 19. The petitioners said since the Medical Council of India was the fundamental authority governing the conduct of doctors in the country, the State government was incompetent to legislate on the issue.

“There are limited seats for autonomous institution candidates. Although petitioner number 2 has stood first and has secured more marks than anybody in the examination, he may not be able to procure a single seat in the PG course,” they claimed.

Helmets a Must on Tirumala Ghats from July 1 onwards

TIRUPATI:The Andhra Pradesh Government’s decision to make helmets mandatory for two-wheeler riders in the state from July 1 has come as a shot in the arm for the Tirumala Tirupati Devasthanams, which too has been trying in vain for the last few years enforce it on the Tirumala Ghat Roads.

As the serpentine Ghat Roads with several sharp curves are prone to accidents, mostly involving two-wheelers, the TTD had decided to implement the helmet rule in 2008 and again in 2014. It had then proposed to either levy fines on the errant riders or prevent them from entering the Ghat Roads.

Both times, the Tirumala Tirupati Devasthanams had to withdraw the same after a few days, following mounting criticism of its action from various quarters.

According to TTD officials, Tirumala Tirupati Devasthanams employees, shopkeepers at Tirumala, pilgrims mostly from Chittoor, Kadapa, Nellore and the bordering districts of neighbouring Tamil Nadu and Karnataka form a major chunk of the violators on Ghat Roads.

With the government itself announcing to make helmets compulsory, the Tirumala Tirupati Devasthanams officials felt they too could insist on its implementation on Ghat Roads from July 1.

Most of the two-wheeler riders in the temple city felt the government would postpone the implementation of the proposal.

However, the police and transport department officials maintained that they would strictly implement the new rule from the said date itself.

“All two-wheeler and pillion riders should wear helmets compulsorily and we will enforce the new rule from July 1. As there is enough time to buy helmets, we expect all cooperation,” said Tirupati Urban SP Gopinath Jetty.

பி.இ. சேர்க்கை; விண்ணப்பிப்போர் எண்ணிக்கை குறைந்தது: கால அவகாசம் நீட்டிப்பு இல்லை

பெறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டுகளை விட குறைந்திருப்பதோடு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் இந்த முறை குறைந்து காணப்படுகிறது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் 80 ஆயிரம் பேர் மட்டுமே சமர்ப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விண்ணப்ப விநியோகமும் இதுவரை 2 லட்சத்தை எட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

2013-14 கல்வியாண்டில் 2.35 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகின. இதில், 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2014-15 கல்வியாண்டில் 2.13 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகமாகின. 

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 1.75 லட்சம் பேர் சமர்ப்பித்திருந்தனர். ஆனால், இந்த முறை பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் 80 ஆயிரம் பேர் மட்டுமே சமர்ப்பித்துள்ளனர். இதுபோல, விண்ணப்ப விநியோகம் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 27-ஆம் தேதியும், சென்னை மையங்களில் 29-ஆம் தேதியும் முடிவடையவுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வரை 1.87 லட்சம் என்ற அளவுக்கே விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளன.

கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: இந்த நிலையில், கடந்த 2014-15 கல்வியாண்டில் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் குறைவாக இருந்ததால், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதுபோல, இந்த முறையும் கடைசித் தேதி நீட்டிப்பு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.இதுகுறித்து அண்ணா பல்
கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:
இந்த முறை போதிய கால அவகாசம் இருப்பதால், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பே இல்லை. மேலும், புதன்கிழமை முதல் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

வெற்றி முழக்கமா? வெற்று முழக்கமா?

பல லட்சக்கணக்கான நமது பிள்ளைகள் ஆண்டுதோறும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். அந்தத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்ற மே மாதத்தின் சில நாள்கள், தமிழகம் தழுவிய அளவில் மாணவ, மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் தொடர்பான வெற்றி முழக்கங்களால் களைகட்டி விடுகின்றன. அதிக மதிப்பெண்களை எடுக்கிற மாணவ, மாணவிகள் நம் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்தான். 

ஆனால், இந்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே பள்ளிக் கூடத்தின் பக்கம் போகவே முடியாமல்போன, தப்பித்தவறிப் போனாலும் தங்களது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டுவிட்டு பல்வேறு வேலைகளுக்குச் சென்று சீர்குலைந்து போய்விடுகிற, நமது நாட்டின் கோடிக்கணக்கான பிள்ளைகளைப் பற்றிய எத்தகையக் குரல்களும் நம்மிடமிருந்து பெரிதாக எழுவதில்லை, எழுந்தாலும் எடுபடுவதில்லை.

அனைத்து வகையான ஊடகங்களிலும், அவற்றில் முன்வைக்கப்படுகிற விளம்பரங்களிலும், பள்ளிக் கல்வி நிறுவனங்களின் சுவரொட்டிகளிலும், ஆங்காங்கே லட்சக்கணக்கில் வாரியிறைக்கப்படுகின்ற துண்டறிக்கைகளிலும், பெருமிதங்கள் நிறைந்த நேர்காணல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்ற மதிப்பெண் முழக்கங்களை அறிய நேரும்போது, இந்த நாட்டில் எல்லாப் பிள்ளைகளும் படித்துக் கொண்டிருப்பது போல் ஒரு தோற்றம் மின்னுகிறது.

நியாயமாகப் பார்க்கப் போனால் இந்த நாட்டில் படிக்கப் போகாத, பள்ளிப் படிப்பைக்கூடப் பாதியிலேயே கைவிட்டுவிட்ட, பல லட்சக்கணக்கான பிள்ளைகளைப் பற்றிய வேதனை முழக்கங்கள்தான் அதிக அளவில் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இங்கே அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. 

தனி ஒருவனுக்கு உணவில்லையென்றாலும் இந்த உலகத்தையே அழிப்போம் என்று முழங்கிய பாரதியின் அறச்சீற்றம் தனியொரு குழந்தைக்குக் கிடைக்கப் பெறாத கல்விக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். எந்தவொரு துறையிலும் வெற்றிகளை நோக்கிய நமது இந்திய மக்களின் ஓட்டப் பந்தயத்தில் தோற்கடிக்கப்பட்டு துவண்டுபோய்க் கிடப்பவர்களைக் குறித்துச் சிந்திக்க யாருக்கும் நேரமில்லை; அதற்கு விருப்பமும் இல்லை.
சகல துறைகளிலும் தோற்றுப் போனவர்கள் அல்லது தோற்கடிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கே வெற்றிகள் எனப்படுவதெல்லாம் வெற்றிகள்தானா என்றால் அப்படியும் இல்லை.
கல்வி, பொருளாதாரம், வேளாண்மை, விளையாட்டு, அரசியல், சினிமா என்று நமது பல்வேறு துறைகளின் வளர்ச்சிகளும், வெற்றிகளும் இன்றைக்குக் கொடும் சாபங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. கல்வியில் நாம் பெற்றிருக்கும் வெற்றி தாய்மொழிவழிக் கல்விக்கு மரண அடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
வேளாண்மையில் பெற்ற வெற்றி மண்ணை மரணிக்கச் செய்துவிட்டன. பொருளாதாரத்தில் பெற்ற வெற்றி கணிசமான அளவில் பசிப் பிரிவினரை உருவாக்கி ஒதுக்கி வைத்திருக்கிறது.

விளையாட்டில் பெற்ற வெற்றி மிகக் கேவலமான சூதாட்டங்களுக்கும், சில சுயநலக் கிருமிகளின் சூறையாடல்களுக்கும் வழிவகுத்திருக்கின்றன. அரசியலில் பெற்ற வெற்றி மக்களாட்சித் தத்துவத்தையே கேலிக்குரியதாக்கி இருக்கிறது. திரைப்படத் துறையில் பெற்ற வெற்றி மிகவும் இழிவான கலாசாரச் சீர்கேடுகளுக்கு வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கிறது.
விடுதலைக்குப் பிறகான நமது ஜனநாயகத்தில் மிகப் பெரும்பான்மை மக்கள் தாங்கள் பெறவேண்டிய வாழ்வியல் வெற்றிகளை இன்றுவரை பெறவில்லை. இங்கே எந்த வெற்றியும் மக்களுக்கானதல்ல. மக்களை முன்நிறுத்திக் கொண்டிருக்கும் வலிமையான ஒரு சில வணிகர்களுக்கானது.
ஆண்டுதோறும் மே மாதத்தில் போடப்படுகிற பொதுத் தேர்வு மதிப்பெண்கள் தொடர்பான கூச்சல்களும் மேற்படி வணிக வெற்றி வகையைச் சேர்ந்தவைதான்.

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறுகிற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு வளமான வணிக வெற்றியைத் தேடித் தருகிறார்கள். ஆனால், அவர்கள் பின்னாளில் தங்களது மதிப்பெண்களுக்கு ஏற்ப வாழ்வில் வெற்றியடைய இருக்கிறார்கள் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.
வணிகத்தில் இரண்டு வகை உண்டு. தானே நேரடியாகச் செய்யும் வணிகம். தன்னைச் சார்ந்தவர்களை முன்வைத்துச் செய்யும் வணிகம். இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தது இன்றைய பள்ளி கல்வி வணிகம்.
ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறுகிற பல லட்சக்கணக்கான மாணவர்களும், அவர்களில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் என்று முன்னிறுத்தப்படுகின்ற மாணவர்களும் ஆங்கிலவழிக் கல்வி வணிகத்துக்கான ஊதுகுழல்களாகவும், அவர்களது தாய்மொழியான தமிழ், கல்விக்கு உகந்தமொழி அல்ல என்பதை நிறுவுவதற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறார்கள். 

மதிப்பெண் கூச்சல்கள் மிகுந்து ஆங்கிலவழிக் கல்வி என்பது வணிகமயமாகிப்போன இன்றையக் காலக்கட்டத்தில் சில கேள்விகளை எழுப்பியாக வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
ஆங்கிலவழிக் கல்வி வணிக முறை தலைதூக்கி, மதிப்பெண் கூச்சல்கள் பேரோசையாக ஒலிக்கத் தொடங்கியுள்ள கடந்த முப்பது ஆண்டுகளில், அதிக மதிப்பெண் பெற்றவர்களாக முன்னிறுத்தி விளம்பரப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இன்றைய வாழ்க்கையில் எந்தெந்த இடங்களில் இருந்து என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அவர்களைவிடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றவர்கள் எந்த வகையிலும் வெற்றியடைய முடியவில்லை என்று நிறுவ முடியுமா? மாணவர்களுக்கிடையிலேயும், கல்வி நிறுவனங்களுக்கிடையிலேயும் நடத்தப்படுகிற ஒரு போட்டியைக் கல்வி முறை என்று சொல்ல முடியுமா?
அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கணிசமான ஊதியத்தில் நல்ல வேலைகளைச் செய்கிறார்கள் எனில், அவர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் அவர்களைக் காட்டிலும் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களா?

தங்களது பள்ளியில் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் தொடர்புடைய பள்ளிகள் எவ்வகையிலேனும் பொறுப்பேற்றுக் கொள்கின்றனவா?
கல்வி என்பது அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்குக் கைதட்டி, அவர்களுக்கு இனிப்பு ஊட்டுவதா? அல்லது கற்க முடியாமல் இருப்பவர்களைக் கைதூக்கி விடுவதா?
இன்றைய மனப்பாடக் கல்வி முறையில், அதுவும் வேறு ஒரு மொழியிலான கல்வி முறையில் தேர்வுக் காலங்களிலும், தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளிலும் மாணவர்களுக்கு ஏற்படுகிற உளவியல் அழுத்தங்களுக்கும், தாழ்வு மனப்பான்மை உணர்வுகளுக்கும், மாணவர்களின் தற்கொலைகளுக்கும், அவர்கள் சந்திக்க நேரும் ஒப்பீட்டு அவமானங்களுக்கும் யார் பொறுப்பேற்றுக் கொள்வது?

அறிவியல், உளவியல், சமூகவியல், மொழியியல் பூர்வமான கல்வி முறையாக இருக்கக் கூடிய தாய்மொழிவழிக் கல்வி முறையை அறவே ஒழித்துக் கட்டவும், மேற்கூறிய அனைத்துக்கும் புறம்பான ஆங்கிலவழிக் கல்வி முறையை நியாயப்படுத்தவும்தான் மதிப்பெண் கூச்சல்கள் போடப்படுகின்றனவா?
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பெரும்பாலும் அடுத்து மருத்துவம் படிக்கவும், மிஞ்சிப் போனால் ஆட்சி நிர்வாகவியல் படிக்கவும் மட்டுமே ஆசைப்படுகிறார்களே, அது ஏன்?
இவ்விரண்டு வகைப் பணிகளுக்கு மட்டும்தான் நமது சமூகத்தில் பற்றாக்குறை நிலவுகிறதா?

வேளாண்மை, இசை, ஓவியம், சிற்பம், பொதுச்சேவைகள், இலக்கியம், சொற்பொழிவு, விளையாட்டு, சுயதொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பழ உற்பத்தி, பால் உற்பத்தி, பசுமாடு வளர்ப்பு, நீர் நிர்வாகவியல் போன்றெல்லாம் நீளுகின்ற வாழ்வாதாரக் கல்விக் கூறுகள் யாவும் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கற்கக்கூடாத கல்வி வகையினங்களா?
ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெறுகின்றனர். அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெறுகின்றனர். ஆனாலும், இவர்களில் எத்தனை பேர் இந்திய அளவிலான எய்ம்ஸ், ஐ.ஐ.டி. போன்ற அதி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பெற முடிகிறது?
அப்படியெனில், இந்த மதிப்பெண் வெற்றி முழக்கமெல்லாம் தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும்தானா?

உயர்கல்வி பெறும் பொருட்டுத் தமிழ்நாட்டை விட்டுத் தாண்ட முடியாத ஆங்கிலவழிக் கல்வி எதற்காக?

தனித்தனித் திறமைகளைக் கொண்ட மாணவர்கள், அவரவர் தனித் திறமைகளுக்கேற்ப உருவாக்கப்பட வேண்டியவர்களா? அல்லது சுய சிந்தனையற்று அச்சிட்ட பாடங்களை மனப்பாடம் செய்து எழுதுகிற இயந்திரங்களாக மாற்றப்பட வேண்டியவர்களா?
கோடிக்கணக்கான இளைய சமுதாயத் தமிழ் மரபுவழிப் பிள்ளைகளை அவர்களது தாய்மொழியில் இருந்து துண்டித்து, அவர்களைத் தாய்மொழி மறந்தவர்களாக மாற்றியதைத் தவிர, இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

இன்னமும் இவை போன்ற வினாக்கள் விடை சொல்வாரின்றி நீள்கின்றன... நீண்டு கொண்டேயிருக்கின்றன. மனப்பாட மதிப்பெண் முறையும், அதைக் கூவிக் கூவிக் கொண்டாடும் போக்கும் தமிழ்ச் சமூகத்தை மாபெரும் பள்ளத்தாக்கில் வீழ்த்திக் கொண்டிருப்பதை அரசும், அடிப்படைகளற்ற ஆங்கில மோகம் கொண்ட மக்களும் இன்னும் முறையாக உணரவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது மாநிலமெங்கும் ஒரு பரபரப்பும், பதற்றமும் நிலவுகின்றன. தான் தேர்ச்சி பெறாமல் போய் விடுவோமோ என்று அஞ்சிய ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதும், தேர்வு முடிவில் அவர் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருந்த கொடுமையும்கூட அண்மையில் அரங்கேறியிருக்கிறது.
உண்மையான, முறையான தமிழ்வழிக் கல்வி, மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் கல்வி, முழுமையான அரசுப் பள்ளிக் கல்வி, முறையான சமச்சீர் கல்வி, அனைத்துப் பொருளாதாரத் தரப்பினருக்குமான அருகமைக் கல்வி, சுகமான கல்வி, சுமையற்ற கல்வி, கட்டணமில்லாத கல்வி, மாணவர்களுக்கு உளைச்சல் தராத கல்வி, துறைசார்ந்த பணிகளுக்கு உத்தரவாதம் தரும் கல்வி, மாணவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும் கல்வி, மாணவர்களின் பெற்றோரை வதைக்காத கல்வி, தனிப்பயிற்சிக்கு என்று பணத்தை தண்டம் கட்ட வைக்காத கல்வி, விளையாட்டுகளோடும், கலை, இலக்கியங்களோடும் இரண்டறக் கலந்த கல்வி, சூழலியல் கல்வி, வாழ்வியல் கல்வி, அறநெறிகளைப் புகட்டி மாணவர்களை அறவுணர்வு மிக்கவர்களாக உருவாக்கும் கல்வி ஆகியவையே இன்றைய தேவை.

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
கோடிக்கணக்கான இளைய சமுதாயத் தமிழ்
மரபுவழிப் பிள்ளைகளை அவர்களது தாய்மொழியில் இருந்து துண்டித்து, அவர்களைத் தாய்மொழி
மறந்தவர்களாக மாற்றியதைத் தவிர,
இன்றைய ஆங்கிலவழிக் கல்வி சாதித்தது என்ன?

எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி

மிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ்., விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை (மே 28) கடைசி நாளாகும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர வேண்டும்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து மே 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நாளை கடைசி: விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மே 28-ஆம் தேதி கடைசி நாளாகும். சுகாதாரத் துறையின் இணையதளமான www.tnhealth.org -இல் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தாங்கள் அனுப்பிய விண்ணப்பம் சென்று சேர்ந்ததா என்பதை உறுதி கொள்வதற்கான இணைப்பு (link) சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மொத்தம் 590 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நிறைவு செய்யப்பட்ட 17,843 விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்ககத்துக்குச் சென்று சேர்ந்துள்ளன என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

RTI query revels SBI has unclaimed deposits of Rs367.97 cr

Nagpur: The unclaimed deposits have become a major worry for the all the leading banks in the country and, with every year, their numbers are growing grew fast.

An RTI query has revealed that banking behemoth State Bank of India (SBI) has a staggering amount of such deposits to the tune of Rs367.96 crore from over 10 lakh accounts till March 31.

However, the SBI has refused to share information on its non-performing assets (NPA) stating that its auditing process was still underway. It also refused to divulge details about number of frauds recorded in its various branches and amount involved in them, as well as involvement of employees.

Moreover, it declined to share information on number of fraud cases registered with the police and total losses suffered by the banking major in these scams.

The reply by information officer Joy Aryakara to a query by RTI activist Abhay Kolarkar stated that this information was sensitive and therefore exempted under Section 8(1)(a) of the RTI Act, 2005. Ironically, SBI also didn't have the information on money spent on advertisements published so far.

Nonetheless, the SBI has informed that it had total 56,51,326 Public Provident Fund (PPF) accounts across its various branches where outstanding amount was Rs2,24,523.16 crore till the end of last fiscal. Explaining on the Pradhan Mantri Jan Dhan Yojana, launched by Prime Minister Narendra Modi, it informed that about 333.14 crore accounts were opened under it where it had a balance of Rs2593.13 crore till the same date as of above.

Kolarkar had also sought information on number of employees working with the country's largest bank along with number of ATM's it had opened at various places. The bank officials replied that they operate 44,419 ATMs machines all over India, each equipped with security camera.

It however declined to inform about number of security guards it had deployed at these ATMs. The RTI activist expressed concerns over this aspect citing earlier incidents of women being robbed, stabbed and even raped inside the ATMs in absence of guards in last couple of years.

The information officer further informed that SBI had employed over 2.13 lakh employees across its various branches in the country of which 78,654 were in officer's rank and 94,129 were clerical staff. It also has 40,269 other employees, including lower cadre. It had published over 10 lakh calendars from April 1, 2014, to March 31 that accounted for Rs2.82 crore.

Anna University publishes rank list of non-autonomous colleges affiliated to it

COIMBATORE: With almost a month left for the single-window engineering counselling to begin, Anna University on Tuesday morning released the rank list of non-autonomous colleges affiliated to it.

The Madras high court had directed the university two weeks ago to publish the rank list of colleges within 15 days.

The Anna University-Chennai, has published the rank list of colleges based on the academic performance for the semester exam conducted in April-May 2014 (even semester), and for that conducted in November-December 2014 (odd semester). While 528 colleges have been ranked in the April-May 2014 semester exam, 523 colleges figured on the list of November-December 2014 examination.

In the April-May 2014 examination, the National Engineering College in Tuticorin topped the list with 96.95% of its students passing the exam. In the November-December semester examination, the Coimbatore-based PSG Institute of Technology and Applied Research topped the list with a pass percentage of 98.33%. This college was started in the academic year 2014-15, and in its first semester itself it bagged the top position in academic performance.

The rank list is released to help engineering aspirants choose the colleges and courses before they appear for the single-window counselling for admission. The counselling is likely to begin on July 1 this year.

While there are 538 engineering colleges affiliated to Anna University-Chennai, according to a Supreme Court order only non-autonomous colleges would figure on the rank list. Autonomous colleges follow their own pattern of examination and thus is considered unfair to rate them with those who follow the university's examination system.

R K Nagar bypoll on June 27, metro will have to wait

CHENNAI: The byelection for Dr Radhakrishnan Nagar constituency in Chennai, where chief minister J Jayalalithaa is expected to contest in her bid to return to the assembly, will be held on June 27 along with bypolls to five other assembly seats across the country.

With the Election Commission announcing the bypoll schedule on Tuesday, the model code of conduct has come into force in Chennai district. No projects, including the first stretch of metro rail, work on which is nearly complete, can be inaugurated nor can any new schemes be launched until the entire election process is completed. The counting of votes will take place on June 30.

The bypoll was necessitated by the resignation of AIADMK MLA P Vetrivel last week, apparently to pave way for Jayalalithaa to contest. The AIADMK leader was sworn in as CM for the fifth time on May 23 after her acquittal by the Karnataka high court in the disproportionate assets case on May 11. If she wins, she could be back in the assembly by the time the next part of the budget session begins.

When the code of conduct, applicable in respect of the district within which the constituency falls, is in place, ministers and other authorities cannot announce any financial grants, lay foundation stones for projects and make promises like construction of roads and provision of drinking water. Advertisements in the media at the cost of public exchequer also have to be avoided.

"All schemes in Chennai, including metro rail, will have to wait," said a senior official. Even the opening of the annexe tower at Ripon Buildings, the headquarters of Corporation of Chennai, and a primary health centre will have to be put off.

Colleges can’t seek notarised application for documents

PUNE: Students and parents can now complain to the inspector general of registrations and controller of stamps office against colleges that ask for a notarised application for seeking documents for admission to courses.

It was a common practice till several complaints by parents prompted the state government to make a 'self-declaration' form compulsory instead of a notarised application for seeking documents from schools and colleges.

The instructions were issued through a government notification. However, several colleges in Pune and Pimpri Chinchwad continue to ask for notarised applications.

Inspector general of registrations N Ramaswami said, "The state government had issued a notification almost a year ago stating that the practice of notarised applications for seeking important documents should be stopped and instead a self-declaration from students must be accepted. Accordingly, we issued this circular to all departments across the state to follow orders which also included the education department."

Ramaswami said the office of the sub-registrar of every district has been assigned to take complaints regarding schools and colleges that still ask for notarised applications.

Parents had complained about a delay in seeking documents due to this lengthy process and the costs involved. Considering their grievances, the state government cancelled its rule of notarised applications.

With the admission season almost here, students need documents such as leaving certificate, birth certificate, domicile certificate, caste certificate and transcripts among others while applying for courses.

In such a case, applying for these documents became a long process with schools and colleges asking for notarised applications wherein students were asked to mention the purpose of seeking the documents on a stamp paper recommended by schools and colleges.

Ramaswami said, "Only in case of a specific act where it is mentioned that the applications must be notarised, colleges and schools must ensure that the students sign a self-declaration form and apply for the required documents."

Rats spotted in AI aircraft in Leh, plane grounded..TOI

NEW DELHI: An Air India (AI) aircraft was grounded in Leh on Tuesday after some rats were spotted in the Airbus A-320.

An aircraft needs to be fumigated after a rodent is sighted to ensure it is eliminated and does not pose a threat to safety by cutting electric wires and sending the systems haywire.

With these facilities not available at the high altitude Leh airport, the plane had to be grounded.

AI would fly the equipment to Leh by another flight on Wednesday. "The aircraft will be fumigated on Wednesday morning and kept locked for a couple of hours. After that it will hopefully be flown back to Delhi in the little window of operation that Leh offers maximum up to noon," said an official.

The Leh airport has a short window of flight operations that begins from 22 minutes after sunrise (by when shadows of nearby hills do not linger over the airfield) to just after noon from when winds become so strong that aircraft movement is not possible.

"Forget something as big as fumigation equipment being stationed in Leh, our machine used to load and unload baggage from aircraft has not been functional for almost two years now. Loaders load and unload baggage by hands in Leh. As a result, the turnaround time of an AI aircraft with 90 passengers on board is an hour, while a private airline that operates 180-seater aircraft to Leh is able to take off from there after landing in half an hour. And then, the higher ups talk of improving on time performance!" said an AI source.

Once even a single rat is observed on an aircraft, the plane has to be fumigated. "Rats on board an aircraft can lead to a catastrophe if they start chewing up electric wires of a fly by wire plane. If that happens, pilots will have no control on any system on board leading to a disaster," a senior commander said.

What usually prevents such a situation is that passengers inadvertently drop a lot of food on the cabin floor, which keeps rats busy.

The most common way for rats to get on board an aircraft is through catering vans. "This is a universal phenomenon. Rats follow the large storage cases in which food trays are kept. The catering vans are like a home for them as food keeps getting dropped. Rats get on the high lifts that take those storage cases to aircraft and then remain there. This happens across the world," said an official.

PG medical: SC not to interfere in slab system

Noting that every State has the right to frame its own service rules, the Supreme Court on Tuesday refused to quash Karnataka government’s rules giving preference to in-service candidates in admissions to postgraduate medical courses.

A vacation Bench of Justices A.K. Sikri and U.U. Lalit passed the order after the petition filed by two doctors, Saikumar V. and Pradeep Kumar, challenged the slab system for admissions to PG courses through Karnataka State PGET 2015.

Under this system, the State gave preference to five-year, four-year and three-year service candidates. The petition had claimed that the government should have relied on merit rather than such a slab system for admissions.

They said the High Court of Karnataka order of April 30, allowing the slab system for admissions, violated the Medical Council of India guidelines and judicial precedents.

“We are not inclined to interfere with the HC’s order. The writ petition challenging the validity of the rules is pending before the High Court. The court should decide the matter on its own merit,” the Bench said.

The Bench acknowledged contentions raised by senior advocate Amit Singh Chadha, appearing for successful candidates, that the MCI rules permitted classification of the doctors working in the government services.

NEWS TODAY 20.09.2024