Friday, October 16, 2015

பருப்பு வளர்க்கும் வெறுப்பு!


Dinamani


By ஆசிரியர்

First Published : 16 October 2015 01:39 AM IST


வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ததுபோல, இப்போது பருப்பு விலையைக் கட்டுப்படுத்த பருப்புகளை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே 5,000 டன் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டு, துறைமுகங்களுக்கு வந்துள்ள நிலையில், மேலும் 2,000 டன் பருப்பு முன்னெச்சரிக்கையாக இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.85-ஆக இருந்தது. சில வாரங்களாக ரூ.130 முதல் 150 வரை விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு, கடும் தட்டுப்பாடு காரணமாக தற்போது சந்தையில் ரூ.180 வரை விற்கப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால், இந்த விலை உயர்வின் பயனை அனுபவிப்பது இடைத்தரகர்களான பருப்பு வியாபாரிகளே தவிர, விவசாயிகள் அல்ல.
பருப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும் என மத்திய வேளாண் துறை கடந்த மே மாதத்திலேயே தோராய மதிப்பீடு செய்து அறிவித்தது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில்தான் இந்தியாவின் 60% பருப்பு சாகுபடி செய்யப்படுகிறது. பருவமழைப் பற்றாக்குறை, புயல் காரணமாக, பருப்பு சாகுபடி பாதிக்கும் என்றும், எதிர்பார்க்கப்பட்ட 180 லட்சம் டன் பருப்பு உற்பத்தி, குறைந்தபட்சம் 6% வீழ்ச்சி அடைவதால், 170 லட்சம் டன் பருப்பு உற்பத்திக்கே வாய்ப்பு உள்ளது என மத்திய வேளாண் துறை கணக்கிட்டு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வந்தபோதே மத்திய அரசு சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியாவில் சமையல் எண்ணெய், பருப்பு இவற்றுக்கான தேவை, உற்பத்தி இரண்டுக்கும் இடைவெளி இருக்கிறது. சமையல் எண்ணெய், பருப்பு இரண்டையும் நாம் ஆண்டுதோறும் இறக்குமதி செய்துதான் தேவையை நிறைவு செய்கிறோம். இதில் உள்நாட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரத்துக் குறையும் என்றால் பற்றாக்குறையும் விலையேற்றமும் நடைபெறுவது இயல்பு.
எப்போதெல்லாம், மத்திய வேளாண் துறை விளைச்சல் குறையும் என்று கணித்துச் சொல்கிறதோ, அப்போதெல்லாம் பருப்பு வியாபாரிகள் உடனடியாகப் பதுக்கல் வேலைகளைத் தொடங்கி விடுகிறார்கள். ஏற்கெனவே உள்ள பற்றாக்குறையுடன் இந்தப் பதுக்கலும் சேர்ந்தால், தட்டுப்பாடு கடுமையாகி, விலையேற்றமும் அதிகரிக்கிறது. இது சாமானியனுக்குக்கூட தெரிந்த உண்மை.
மத்திய வேளாண் துறை உற்பத்திக் குறைவு பற்றி கணித்தபோதே, மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், இந்நேரம் சந்தையில் பருப்புத் தட்டுப்பாடு இருந்திருக்காது. மத்திய அரசு பருப்பு வகைகளை சந்தையில் சரியான நேரத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று தெரிந்தால், லாபம் இல்லாத பதுக்கலில் வியாபாரிகளும் ஈடுபட மாட்டார்கள்.
உள்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு, வெளிநாடுகளில் பருப்பைத் தேடிப் போகும்போது அவர்களும் நமது இயலாமைப் புரிந்து கொண்டு விலையை ஏற்றிவிடுகிறார்கள். அதிக விலைக்கு வாங்கி வந்து, அதை இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் கொடுப்பதால் அரசுக்கு ஒருபுறம் நஷ்டம். இதுதவிர, விலைக் கட்டுப்பாட்டு நிதி என்று ரூ.500 கோடியை ஒதுக்கி, பருப்புகளின் இறக்குமதிக் கட்டணம், பருப்பு உடைப்பு மற்றும் சுத்திகரிப்பு கட்டணம், லாரி வாடகை அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டு, சந்தையில் குறைந்த விலையில் பருப்பை விற்பனை செய்யும் கட்டாய நிலைமையும் ஏற்படுகிறது.
உணவுப் பொருள்கள் பற்றாக்குறை அல்லது சமையல் எண்ணெய்ப் பற்றாக்குறை என்பது பேரிடர் மேலாண்மை போன்றது அல்ல. வேளாண்மைத் துறை இவற்றின் உற்பத்தியைக் கணித்துச் சொல்லிவிடுகிறது. அப்போதே நாம் இறக்குமதியைச் செய்யத் தொடங்கினால், சந்தையில் விலையேற்றம் என்பது இயல்பாகவே கட்டுப்பாட்டில் இருக்கும். இது ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாமல் போனது என்பதை நம்ப முடியவில்லை.
பருப்பு அழுகும் பொருள் அல்ல. சரியான முறையில் பாதுகாக்கப்பட்டால் ஓராண்டுக்கும் மேலாக இருப்பில் வைக்கக்கூடிய பொருள். பருப்புத் தேவையைப் பொருத்தவரையில், ஒவ்வோர் ஆண்டும், இந்தியா 40 லட்சம் டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்துதான் தனது தேவையை நிறைவு செய்கிறது.
"எப்போதும் கூடுதலாகவே இறக்குமதி செய்து, பருப்புக்கு தனி சேமிப்பு கிடங்கு உருவாக்கப்படும்' என்று இப்போது மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். இந்த நிலையைப் புரிந்துகொள்ள நிதி அமைச்சருக்கும், வர்த்தக அமைச்சருக்கும் வேளாண் அமைச்சருக்கும் இவ்வளவு நாள் தேவைப்படுகிறது என்றால், அவர்களது திறமையின்மையைத்தான் அது வெளிச்சம்போடுகிறது.
சேமிப்புக் கிடங்கில் போதுமான அளவு எப்போதும் இருப்பில் இருக்கவும், தேவைக்கு அதிகமாக பருப்பு, எண்ணெய் கையிருப்பில் மிகும்போது, அதை மட்டும் அவ்வப்போது பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யவுமான நடவடிக்கை, இவற்றின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். பருப்பு விலை உயர்வு திறமையின்மையின் விளைவா? இல்லை ஆட்சியாளர்கள் தெரிந்தே செய்த தவறா?
உணவுப் பொருள்கள் விலைவாசி ஏற்றம் தொடருமேயானால் அதனால், பாதிக்கப்படப் போவது அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள்தான். ஐந்து ஆண்டுகள் என்னதான் நல்லாட்சி நடத்தினாலும் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஏற்படுமேயானால், அந்த ஆட்சிகள் மக்களால் அகற்றப்பட்டிருப்பதுதான் சரித்திரம் காட்டும் உண்மை. அதனால்தான், மத்திய அரசு மெத்தனமாக இருந்துவிட்டதோ?

Thursday, October 15, 2015

3 years ago she was murder accused, now puffed up with pride of PG degree Padmini Sivarajah,TNN | Oct 15, 2015, 09.52 AM IST

MADURAI: A mother of four children, 43-year-old Usha Rani made use of a chance provided by the law to bounce back after a tragic event rocked her life three years ago.

On February 9, 2012, when Usha Rani came home from work, she saw her estranged husband trying to rape her teenage daughter. In an instinctive reaction, Usha grabbed a cricket bat and bludgeoned her drunk husband to death. She immediately called an ambulance to send her husband's body to mortuary and surrendered at the police station. Usha Rani told the police she had killed her husband in a desperate attempt to rescue her daughter from being raped by her own father.

She was arrested immediately. The following day, however, the then superintendent of police Asra Garg invoked section 100 of the Indian Penal Code and released her from the rarest of rare case. As per the section, if a death is caused in the process of private defence (to prevent or escape rape or murder), the person need not be tried for murder.

From then on, it was no turning back for Usha, who has completed post-graduation despite having three young daughters and a son to take care of. She went to her parents' house and brought up her children after the 'incident'.

She had completed only schooling when she got married in 1990. Her life became muddled after her husband became an alcoholic a few years after the marriage. But this did not hold her back from pursuing B.Sc (psychology) which she completed in 2011.

After the death of her husband, she went on to do her M.A in sociology through the Tamil Nadu Open University (TNOU) and received her certificate on October 10 this year at a grand function held in Chennai. Governor K Rosaiah was the chief gues at the function.

"We shifted our house soon after the 'incident' and not many neighbours here know of my past. I still do not know how they will react if they come to know about it. But today, I am able to look after my children with my job as a DTP operator in the TNOU," Usha said proudly.

"It is a temporary post and will be helpful if it is made a permanent one," she said. She canvasses and enrolls people who have completed Class 10 to take up courses with the TNOU's distance learning programme and exceeds the target given to her.

Usha said women should not continue to endure alcoholic abuses. They should come out and seek relief, she added.

"They should believe that there is a life beyond marriage, in which every woman can realise her dreams," she said. If she comes across any woman facing abuse, she teaches her meditation. Usha is also now part of a SHG and works there in the evenings.

While Usha's first daughter has completed her studies in aviation, her second daughter is doing her post-graduation, third daughter B.Com and her son will sit for the SSLC board examination next year.

Women should believe that there is a life beyond marriage, in which every one of them can realise their dreams. They shoud not endure alcoholic abuses

JAIPUR: Aiming to simplify the process of filing Right to Information queries and usher in transparency in the system, Rajasthan information commissioner P L Agrawal on Wednesdaysaid people in the state will soon be able to seek information under the RTI Act online.

"The Rajasthan Information Commission (RIC) is working on having an online process of RTI in collaboration with state's information and technology department, and it would be made functional soon," Agrawal said during a conference here on 'RTI: Present Status and Prospects'.

Pointing out lacunae in the existing RTI Act which had been implemented in 2005, the commissioner said there was no deadline or time frame for the second appeal authority to give reply to an RTI seeker, and thus, it required amendments.

"A lok soochna adhikari (public information officer) has a limit of 30 days while the first appeal authority gets 30 to 45 days of limit to give reply, but the second appeal authority has been given no time limit," he said

"RTI applicants have been seeking information from the state government or bodies even before 2005 when RTI act did not exist," he said, adding that many of the departments in the state government did not have a record room or keeper.

More public information officers are required to be deputed in departments like Housing Board, Municipal Corporation and Jaipur Development Authority so that information can be given to the applicants faster, he said. pti

On waitlist? Railways to allot seat in next train..TOI

CHENNAI: Booking train tickets this festive season will be a bit easier with the railways providing the option to shift waitlisted tickets from one train to the next on which seats/ berths are available.

The 'Alternate Trains Accommodation Scheme' (Vikalp), will be launched on November 1. Under the present system, passengers are allowed to book on one train at a time and waitlisted tickets do not gurantee a seat. It often has to be cancelled. The new system allows a passenger to select alternative trains they wish to travel while booking tickets. The option will be available also for passengers travelling from stations which are not origins or destinations.

Some of the premier trains operated from Chennai such as Chennai-Madurai Pandian Express and Tamil Nadu Express to New Delhi have more than 300 passengers on the waitlist during holiday seasons. Beyond a limit, the railways doesn't allow reservation and allots only open tickets. Thus long-distance travellers are forced to reserve on multiple trains and wait for confirmation.

The new system works well for the passenger and the railways: It gives the passenger a hassle-free experience of booking just once; the railways gets to fill seats of special trains in a more streamlined manner. A circular sent out by Railway Board to zonal railways said that the scheme as suggested by Centre for Railway Information System (CRIS) "will be implemented across mail / express trains of the same category, and no extra charges shall be taken from passengers, and no refund shall be provided for the difference of fares". Separate seats will not be earmarked for the scheme.

A senior official said the railways is preparing a list of trains and stations to be covered under the scheme. "On most occasions, passengers do not prefer to travel by special trains. Though new trains are introduced, several passengers continue to prefer a few popular trains. We will now be able to shift waitlisted passengers from a scheduled train to a special one."

Passengers welcomed the move as it promises confirmed berths or seats. Arun Pandian, a frequent traveller, said, "Some of the long-distance now run with empty coaches. An example is Dehra Dun-Madurai Express via Chennai that often runs with several of its compartments vacant. People prefer Pandian Express which has a long waitlist. The new scheme will help seats in such trains get filled, reducing the holiday rush."

Man couriers cobras to electricity compay staffer as warning Arun Dev,TNN | Oct 14, 2015, 10.22 PM IST

BENGALURU: Hiss or her. That was the rather frightening message that a Bescom (Bengaluru Electricity Supply Company Limited) employee got when he opened a parcel that came for him in office. Out crawled a couple of cobras leaving him and other staffers panic-struck. Later, some letters in the courier package revealed the truth behind the bizarre gift. It was a warning to the employee to stay away from the sender's wife, or else more such dangerous surprises would be in store for him.

The entire drama played out on Tuesday afternoon at the Bescom's vigilance office near Shivananda Circle. The sender of the parcel is suspected to be a 48-year-old man from Tumakuru.

High Grounds police have taken up a complaint of criminal intimidation. They said the parcel came from a courier service for the Bescom employee (whose identity has been withheld). When he opened the parcel, two cobras popped out of the box.

Terrified, the employee quickly threw the box outside the office. After the snakes slithered out of the premises, he and other staffers checked the box and found some letters addressed to him. The letters stated that the employee was getting too close to the sender's wife and if he didn't keep himself under check, more dangerous things would come his way.

Sandeep Patil, DCP (central), said a complaint has been lodged by the Bescom employee and an investigation ordered into the case. "The employee has provided some leads which we are following. We are also in touch with the courier company that delivered the parcel. We will make an arrest in the case soon," he said. The employee had shifted to the Bengaluru office recently following a transfer from Tumakuru.

The parcel carrying the snakes had holes in it for ventilation, added sources in Bescom.

From October 20, most taxis to pay Rs 150 to enter Terminal 3 of Indira Gandhi International Airport Anvit Srivastava,TNN | Oct 15, 2015, 05.03 AM IST

NEW DELHI: Taking a taxi to or from the Indira Gandhi International Airport may now burn a hole in your pocket with the Delhi International Airport Limited (DIAL) planning to impose an entry fee of Rs 150 on every commercial vehicle, including taxis, entering the T3 arrival terminal from October 20. DIAL says the step has been taken to ensure passenger safety and to curb touts at the airport.

Besides paying the new fee, commercial vehicles are also likely to be towed away or have their tyres clamped if they exceed the time limit of eight minutes they will be allowed at the terminal, DIAL said.

Under the current conditions, he arrival area remains congested with all sorts of commercial vehicles driving in and causing raffic confusion, said DIAL. It added that the main objective in imposing the new fee was to curb he presence of touts who tarnish he image of the airport.

However, Mega Cabs, Meru Cabs and the black-yellow taxis have been exempted from paying he entry fee because, DIAL explained, these taxis occupied lane one and two at Terminal 3, while other commercial vehicles used the third lane. Congestion in the third lane caused traffic jams and slowed the movement at the airport. This then turned into a security concern, officials said.

"DIAL has proposed to regu late and decongest the forecourt area to prevent unauthorized parking for long periods which is causing inconvenience to passengers and users at large. The said charge is not a parking charge but deterrence for unauthorised parking. Such practice is prevalent in many airports across India and globally . This step is will also prevent touting activities around the passenger area and will thus enhance the passenger's safety ," said a DIAL spokesperson.

Vehicles entering the 1D domestic terminal have also been exempted for the time being but may soon have to pay the entry fee. According to DIAL, there is construction going on in a large area there for the expansion of the Delhi Metro station.Since this may lead to clogging at the terminal, vehicles at 1D are presently exempted from the new rule.

The airport company also clarified that no charge will be levied on private vehicles for entering the airport.

Tuesday, October 13, 2015

இனி தேவை வேலைவாய்ப்புகள்தான்

logo

கல்வி சிறந்த தமிழ்நாடு என்று அன்று கனவு கண்டார், பாரதியார். இன்று அவர் கனவு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. இந்தியா முழுவதும் கடந்த 2001–ம் ஆண்டில் இருந்து 2011–ம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 18 சதவீதம் மக்கள் தொகை உயர்ந்து இருக்கிறது. ஆனால், அதே காலகட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் உயர்ந்து இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். கல்வி வளர்ச்சியைப் பொருத்தமட்டில், தமிழ்நாடு உயர்கல்வியில் மிக உன்னதமான இடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் நாடு முழுவதும் 8 சதவீதம் பேர்களே பட்டதாரிகள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மக்கள்தொகையில் 10.5 சதவீதம் பேர் பட்டதாரிகள் என்பது ஒவ்வொரு தமிழனையும் பெருமைகொள்ள வைக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் 5 கோடியே 18 லட்சம் பேர்கள் கல்வியறிவு பெற்றவர்கள். கல்வி வளர்ச்சிக்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், கல்வி என்பது யாருக்கும் எட்டாக்கனியாக இருக்கவில்லை. 12–வது வகுப்பு வரையிலான இலவச கல்வியும், அதற்குமேல் வழங்கப்படும் சலுகைகளும், வசதிகளும் எல்லோரையும் கல்விபக்கம் கொண்டு சென்றுவிடுகிறது.

ஆக, இனி கவனம் செலுத்தவேண்டியது வேலைவாய்ப்பை பெருக்குவதில்தான். கல்வி வளர்ச்சியின் அளவுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வேகம் இல்லை. இந்தியாவில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.23 சதவீதம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், வேலைவாய்ப்போ 1.4 சதவீதம்தான் இன்றைய தொழில் வளர்ச்சியிலேயே உயர்ந்துவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில், தற்போதைய நிலவரப்படி 84 லட்சத்து 97 ஆயிரத்து 402 பேர்கள் அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைதேடி பதிந்து இருக்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 16 லட்சத்து 10 ஆயிரத்து 760 பேர்கள் வேலைதேடி பதிந்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதியாமலேயே ஏராளமானவர்கள் வேலைதேடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அரசாங்கமே வேலை வழங்கிவிடமுடியாது. தனியாரின் பங்களிப்பு அத்தியாவசிய தேவையாகும். சமீபத்தில் சென்னையில் நடந்த உலகளாவிய தொழில் முதலீட்டாளர்கள் கையெழுத்திடப்பட்ட 98 ஒப்பந்தங்கள் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய தொழில்களெல்லாம் சென்னையை சுற்றி மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் பரவலாக தொடங்க வசதிகளை செய்து கொடுக்கவேண்டும்.

தனியாரைப் பொறுத்தமட்டில், இப்போது இருக்கும் தொழிலாளர் சட்டங்கள் மிகக்கடுமையாக இருக்கின்றன என்பதால், தொழில் தொடங்க தயக்கமாகயிருக்கிறது என்கிறார்கள். எனவே, தொழில் வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் கருத்தில்கொண்டு இருதரப்பையும் அழைத்துபேசி, உகந்த சூழ்நிலையை உருவாக்கவேண்டும். வேலைவாய்ப்பில் ‘புளூ காலர்’ வேலைகள் என்று அழைக்கப்படும் தொழிலாளர் வேலைவாய்ப்புகளும், ‘ஒயிட் காலர்’ வேலைகள் என்று அழைக்கப்படும் அலுவலர் பணிகளும் இருக்கிறது. இனி நமது இளைஞர்கள் இந்த பாகுபாடு பார்க்காமல், எந்த தொழிலிலும் நிபுணத்துவம் பெற்றால் உயர்வைக்காணலாம் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ளவேண்டும். இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்புகளை அதிகம் அள்ளித்தரும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதிய தொழில் கொள்கையை தமிழக அரசு உருவாக்கும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

Monday, October 12, 2015

சீக்கிரம் செய்யுங்கள்

logo

என்றைக்கு ஒரு பெண் கழுத்து நிறைய நகைகள் அணிந்துகொண்டு நள்ளிரவில் தன்னந்தனியாக தலைநகரில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றுதான் உண்மையான சுதந்திரம் என்றார், தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் டெல்லியில் மட்டுமல்ல, மற்ற நகரங்களிலும் கற்புக்கு பங்கம் இல்லாமல் ஒருபெண் தனியாக இரவில் எங்கும் செல்லமுடியாத சூழ்நிலைதான் இருக்கிறது. கடந்த 3–ந் தேதியும், 5–ந் தேதியும் பெங்களூருவில் நடந்த இரு சம்பவங்கள் நெஞ்சை பதறவைக்கிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பெங்களூருவில் ஒரு கால்செண்டரில் பணிபுரிந்து வருகிறார். இரவில் தன் வீட்டுக்கு செல்ல ஒரு வேனில் சென்றபோது, கத்தி முனையில் அந்த இளம்பெண்ணை, 2 டிரைவர்கள் 4 மணி நேரம் கதற கதற கற்பழித்துவிட்டு, மடிவாலா போலீஸ் நிலையத்துக்கு சற்று தூரத்தில் இறக்கிவிட்டுவிட்டு ஓடிவிட்டார்கள்.

இது ஒரு பயங்கர சம்பவம் என்றால், அடுத்தும் ஒரு கொடிய சம்பவம் அரங்கேறி ஒரு பெண்ணின் உயிரை பறித்துவிட்டது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக்கொண்ட 15 வயது பள்ளிக்கூட மாணவியை அவள் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பும்போது, 4 பேர்கள் கடத்திக்கொண்டுபோய் ஆடைகளை களைந்து நிர்வாணமாக போட்டோ எடுத்துவிட்டனர். ‘‘மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் சாதி தமிழ்பெண் அவள். மானம் பறிபோன பிறகு உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’’ என்ற உணர்வுடன் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டாள்.

2012–ம் ஆண்டு இதுபோல டெல்லியில் நிர்பயா என்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப்போல, இந்தியாவில் வேறு எந்த பெண்ணுக்கும் நேரிடக்கூடாது என்ற வகையில்தான் அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்காக நிர்பயா நிதி என்ற ஒரு தனி நிதி உருவாக்கப்பட்டது. இதுவரையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், இன்னும் பெண்கள் பாதுகாப்புக்காக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் காணோம். சாலைபோக்குவரத்து பொதுவாகனங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டு, அதற்காக 1,405 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆபத்து நேரங்களில் போலீஸ் நிலையங்களோடு தொடர்புகொள்ளவும், உடனடி நடவடிக்கை எடுக்கவும் மற்றொரு திட்டம் வகுக்கப்பட்டு, அதற்காக 321 கோடியே 69 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்படி மேலும் சில சிறிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டு, இப்போது 1,273 கோடியே 31 லட்ச ரூபாய் எதற்கும் ஒதுக்கப்படாமல் தூங்கிக்கொண்டு இருக்கிறது. நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களும் முழுமையான செயலுக்கு வரவில்லை.

இப்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி, பெண்களுக்கு ஆபத்தான நேரங்களில் செல்போன்கள் மூலம் காவல்துறை மற்றும் 10 எண்களுக்கு அபாய குரல் எழுப்ப செல்போன்களில் ஆபத்து பட்டன்களை அந்த பெண் எந்த இடத்தில் இருக்கிறாள் என்பதையும் காட்டும் ஜி.பி.எஸ். வசதியுடன் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசாங்கம் செய்துவருகிறது என்று கூறியுள்ளார். இது மிகவும் நல்ல திட்டம். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத பெண்களே இல்லை எனலாம். இதுவரையில் நிர்பயா நிதியை பெண்கள் பாதுகாப்புக்காக செலவழிக்க பல யோசனைகள் கூறப்பட்டாலும், இது மிகவும் நல்ல திட்டம். ஆபத்தில் இருந்து தப்பிக்க ஒரு நொடியில் பட்டனை அழுத்தினால் போதும். ஆனால், அறிவித்து ரப்பராய் இழுக்காமல், உடனடியாக இந்த திடத்தை செயல்படுத்தும் முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடவேண்டும்.

Sunday, October 11, 2015

5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்கை வரலாறு!

vikatan.com
மிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் இவர் நடிக்காத கேரக்டேரே கிடையாது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26 ஆம் தேதி  காசி குலோகுடையார் - ராமாமிதம் தம்பதிக்கு  மகளாக மனோரமா பிறந்தார். இயற்பெயர் கோவிந்தம்மாள் . குடும்பத்தில் வறுமை சூழல்.இதனால் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு வந்து சேர்ந்தது மனோரமா குடும்பம். யார் மகன்? என்ற நாடகத்தில் மனோரமா நடிக்கும் போது அவரது வயது வெறும் 12 .

நாடக இயக்குநர் திருவேங்கடம்தான்   இவருக்கு "மனோரமா' என பெயர் சூட்டினார்.  முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் நடிக்க மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். கவிஞர் கண்ணதாசன்தான் இவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார். முதல் படமே காமெடி ரோலில் கலக்கினார். அந்த காலக்கட்டத்தில் நகைச்சுவை நடிகர் நாகேசுடன் மனோரமா தோன்றினார் தியேட்டரை சிரிப்பலையில் மூழ்கி கிடக்கும். 

தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களில் மனோரமா நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எத்தனை பக்கம் வசனமென்றாலும் காட்சிக்கு ஏற்றவாறு பேசி அசத்தி விடும் தனித்திறமை மனோராமாவுக்கு உண்டு.

தில்லானா மோகனம்பாள் படத்தில்  சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டர் அந்த காலத்திலேயே மிக பிரபலமாக இருந்தது. 

"கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமாநாதனை  மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார். கடைசியாக மனோரமா நடித்த படம் பொன்னர் சங்கர் ஆகும்.100 க்கு மேற்பட்ட பின்னணி பாடல்களையும் மனோரமா பாடியுள்ளார். 
 
1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார்.
இவரது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. ஆயிரம் படத்திற்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் நடிகை மனோரமா இடம் பெற்றுள்ளார்.

யுஜிசி வழங்கும் எஸ்.டி. மாணவர்களுக்கான பெல்லோஷிப்



எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பயிலும் 750 எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான, தேசிய உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழு நேர வகுப்பில் எம்.பில்., அல்லது பிஎச்.டி., படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அறிவியல், மனிதவியல், சமூக அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவை தனது ஆராய்ச்சிப் படிப்பில் தேர்வு செய்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: எம்.பில்., படிப்பவர்களுக்கு ரூ. 25,000 மற்றும் பிஎச்.டி., படிப்பவர்களுக்கு ரூ.28,000.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 23

மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in

விருதுநகரில் 100-வது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய முதியவர்

Dinamani





விருதுநகரில் 4 தலைமுறையை கண்ட முதியவர் 100-வது பிறந்த நாளை தனது குடும்பத்தினர், பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் ஆகியவைகளால் வாழ்நாள் 50 வயது முதல், 60 வயதாக சுருங்கி வருகிறது. மேலும், 40 வயது தொடக்கத்திலேயே சர்க்கரை உள்பட பல்வேறு நோயால் அவதிப்படும் நிலையுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாடான உணவு பழக்கம், நடைபயிற்சி ஆகியவைகளால் 100-வயது தொடக்க விழாவை மகிழ்ச்சியுடன் முதியவர் பேரன், பேத்திகளுடன் கொண்டாடியுள்ளார்.

விருதுநகரில் உள்ள இளங்கோவன் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.எ.நடராஜன்(100). வியாபார சங்கத்தின் நிர்வாகியாகவும், பருப்பு வியாபாரமும் செய்து வந்தார். இவருக்கு பன்னீர்ராஜன்(68), ஜெயக்கர்(66), ராமநாதன்(64), தயானந்தம்(62) என 4 மகன்களும், தனலட்சுமி(60) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து சென்னை, விருதுநகர், ஈரோடு, அமெரிக்கா, கலிபோர்னியா போன்ற இடங்களில் தனித்தனியாக வசித்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.எ.நடராஜனும், அவரது மனைவி பரமேஸ்வரி(88) ஆகிய 2 பேர் மட்டும் மேற்குறிப்பிட்ட இடத்தில் வசித்து வருகின்றனர். தற்போது, இவருக்கு 100-வது வயது தொடங்கியுள்ளது. இதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவரது மகன்கள் தனியார் அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கு முன்னதாக தங்களது குடும்பத்தினர், சம்பந்திகள், மாமனார் மற்றும் மைத்துனர், பங்காளி நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டும் அழைப்பிதல் அனுப்பியிருந்தனர். இதையடுத்து 4 தலைமுறையை கண்ட உறவினர்கள் மற்றும் பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் என 69 பேருடன் தனது 100-வது வயது தொடக்க விழாவை முதியவர் சிறப்பாக கொண்டாடினார்.

இது குறித்து அவரது 3-வது மகனும், கூட்டுறவு துறையில் ஓய்வு பெற்ற அதிகாரியுமான ராமநாதன்(66) கூறுகையில், தந்தையும், தாயாரும் பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழவும், எவ்வித தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக தனியாக வசித்து வருகின்றனர். அவர்களது தேவைகளையும் அவர்களாகவே பூர்த்தி செய்து கொள்வார்கள். நாள்தோறும் காலையில் 2 கி.மீ தூரம் நடைபயிற்சி செய்து, ஊருக்கு வெளியே சென்று குளியலை முடித்து வருவார். எப்போதும் போல் கட்டுப்பாடன சைவ உணவும், இதுவரையில் மழை நீரையே பருகியும் வருகிறார். கால்பந்து விளையாட்டு வீரர். எவ்விதமான கெட்ட பழக்கம் இல்லாத நிலையில் கதராடையை மட்டும் அணிவார். அதோடு, காந்தி, காமராஜர், இந்திராகாந்தி ஆகியோருடன் நெருங்கி பழகியவர். எனது தந்தை கட்டிய வீட்டையும் காமராஜர் முதல்வராக இருந்த போது திறந்து வைத்துள்ளார். மேலும், அப்போது இருந்த வண்ணக்கலர் வாக்கு பெட்டிகள் வைத்த தேர்தல் முதல், வாக்குபதிவு இயந்திரம் பயன்படுத்திய ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மனநலம் காப்போம்


Dinamani


By க. சண்முகவேலாயுதம்

First Published : 10 October 2015 01:42 AM IST


ஆடையைக் கிழித்துக் கொண்டு, சாலையில் கூச்சலிட்டு, தலைவிரி கோலமாகக் கல்லெடுத்து எறிபவர் மட்டுமே மனநலம் பாதித்தவரல்லர். வாழ்வில் ஏற்படும் எத்தனை எத்தனையோ தொல்லைகள், மன அழுத்தங்கள், துன்பங்களால் பாதிக்கப்பட்டு தங்களது விருப்பங்கள் நிறைவேறாமல் போகும்போது, மனமுடைந்து விபரீதமாக நடந்து கொள்வோரும் மனநலம் பாதித்தவரே ஆவர்.
வெளித் தோற்றத்தைக் கொண்டு இவர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று கணிக்க முடியாது. மனநலம் பாதித்தவர்களைத் தனிநபர் நோயாக மட்டும் கருதாமல், ஒரு சமூகப் பிரச்னையாகக் கருத வேண்டியிருக்கிறது.
மனநலம் பாதிப்பு (Mental Health Problems) என்பது உள - சமூகரீதியான வேதனையான நிலையாகும். இப்பிரச்னை அதிக நபர்களைப் பாதிப்புக்குள்ளாக்குகிறது.
மன நோய்க்குக் காரணம் பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை என்ற தவறான அபிப்ராயம் இன்றளவும் இருந்து வருவது வருந்தத்தக்கது. மன நோய் உள்ளவர்களைப் பைத்தியக்காரன் என்று சொல்லி ஒதுக்குவதும், உறவினர் என்று சொல்லக் கூச்சப்படுவதும் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
மனநலம் பாதித்தவர்கள் இழைக்கும் வன்முறைகளைவிட அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்குப் பலியாவது குறைந்தபட்சம் 14 மடங்கு அதிகமானதாக உள்ளது என்று ஆய்வுகள் உணர்த்துகின்றன.
பெண்கள், குழந்தைகள், சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் மீது இழைக்கப்படும் அநீதிகள், அவர்கள் மனநலத்தைப் படிப்படியாகப் பாதிப்படையச் செய்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 45 கோடி மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 10 - 15 சதவீதம் பேர் மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடல்நலத்தைப் போல, மனநலத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மன நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் நாட்டில் மன நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிப்புக்கான காரணங்கள்: குடும்பப் பிரச்னை, பாலியல் பிரச்னை, வேலையில்லா நிலை, மரபியல் பிரச்னை, ஏமாற்றம், தோல்வி, சந்தேகம், போட்டி, பொறாமை, போதைப் பழக்கம் போன்றவையாகும்.
மனநலப் பாதிப்பால் சோகம், தொடர் தலைவலி, பசியின்மை, உடல் சோர்வு, ஜீரணக் கோளாறு, பயம், விபரீதக் கற்பனை, நம்பிக்கையற்ற, எதிர்மறையான எண்ணங்கள், குற்ற உணர்வு, தற்கொலை எண்ணம் ஆகியவை தோன்றும்.
உடல் நலம் பாதித்தால் உடனே மருத்துவரைப் பார்க்கிறோம். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்லத் தயங்கும் நிலைதான் காணப்படுகிறது.
அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவர்களில் 15 முதல் 44 வயதுக்குள்பட்டோரே அதிகம். ஒரு வயது குழந்தைக்குக்கூட மன அழுத்தம், மனச் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் உணர்த்துகின்றன.
மன நோய் உள்ளவர்கள் சமூகத்தின் ஓர் அங்கமாக உயிர் வாழ்வதற்கு உரிமை உண்டு. சமுதாயப் பராமரிப்பு மையங்கள், இடைக்காலத் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை அரசு அமைக்க வேண்டும்.
தற்கொலை என்பது குற்றச் செயல்பாடு அல்ல, தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு மனநலச் சிகிச்சை அளிக்க வேண்டும். மனித உரிமை சார்ந்த அணுகுமுறையை புதிய மனநலச் சட்டம் மேற்கொண்டுள்ளது.
மனநல நோயாளிகளுக்கு மயக்க மருந்து இல்லாமல் மின்சார அதிர்ச்சி சிகிச்சை அளிப்பது, சங்கிலியால் பிணைத்தல், தலையை மொட்டை அடித்தல் போன்ற மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் புதிய மனநலச் சட்டம் தடை விதிக்கிறது. அங்கீகாரமற்ற மனநலச் சேவை மையம் நடத்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
தனி நபருக்கான சிகிச்சையை, அவரது குடும்பம் முழுவதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் குடும்ப சிகிச்சை, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
1992-ஆம் ஆண்டு முதல் உலக மனநல மருத்துவக் கூட்டமைப்பின் சார்பில், அக்டோபர் 10-ஆம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாண்புடன் மனநலம் காப்போம் (Dignity in Mental Health) என்பது 2015-ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தின் மையக் கருத்தாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மனநலம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். மனநலப் பாதிப்பும் உடல் நலப் பாதிப்பைப் போலத்தான். மதுவோ, போதைப் பொருளோ மனக் கவலைக்கு ஏற்ற மருந்தாகாது. எனவே, அவற்றைத் தவிர்ப்போம். மற்றவர்களுடன் பேசி மகிழுவோம்.
மனம் வெறுமையாக இருப்பதுபோல் இருந்தால் மகிழ்ச்சி தரும் நடவடிக்கைகளில் இறங்குவோம். திரைப்படம், விளையாட்டு, உடற்பயிற்சி, இசை, புத்தகம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுவோம். தனிமையைத் தவிர்த்தாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும்.
பொதுவாக, மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது. மனநலம் பாதித்த ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவையானது அவரை எந்த நிலையிலும் புரிந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பனே என உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டு கூறுகிறார்.
ஆரம்பக் கட்டத்திலேயே மனநலச் சேவை கிடைக்கப் பெற்றால் பெரும்பாலானவர்களுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும். நோய் வந்தபின் தடுக்காமல் வருமுன் காப்பதே சிறந்தது.
இன்று உலக மனநல தினம்.




Saturday, October 10, 2015

Govt move earns 74 unclaimed MBBS seats for Tamil Nadu students..TOI

CHENNAI: A smart move by Tamil Nadu government has not only prevented 74 MBBS seats lying unclaimed in All India Quota going waste, but also ensured that all of them were allotted to students from Tamil Nadu by the state government.

This windfall of more than 70 seats came Tamil Nadu's way, after the Centre's director-general of health services failed to complete online counselling for seats under its disposal, and Medical Council of India (MCI) published a list of surrendered seats under the All India Quota on September 1.

All states and colleges are supposed to earmark 15% of their sanctioned strength for All India Quota, to be allowed by DGHS on the basis of All India Pre-Medical Test (AIPMT) conducted by CBSE. If any of these All India Quota seats are not filled in three counselling sessions as laid down by the Supreme Court, they would be considered as surrendered/leftover seats and the state government concerned would be free to allot to its own students.

This year, however, after noticing that more than 70 seats are lying unallotted in All India Quota pool, Tamil Nadu government moved the Supreme Court and obtained an order granting one week to hold counselling and allot these seats. Hours before allotments were done on October 4 and 5, a single judge allowed a petition filed by a candidate who had secured 12,485th rank in the AIPMT and directed state authorities to fill the seats on the basis of merit list prepared by CBSE for All India Quota.

Health secretary and selection committee of directorate of medical education then filed the present appeal. Advocate-general of Tamil Nadu submitted that the singe judge erred in passing the impugned order, as it would not be possible for the state to take up the CBSE list and grant admission, as students were from different states and their reservation status was not in public domain. Also, the petitioner-candidate ranked 12,485 in AIPMT was at least 7,717 ranks below the last person allotted MBBS seats in Tamil Nadu.

On Wednesday, a division bench of Justice Satish K Agnihotri and Justice K K Sasidharan allowed the state appeal, saying, "the state of Tamil Nadu moved the Supreme Court to extend the deadline for completing the admission process by filling the seats surrendered by DGHC. The Supreme Court granted permission to complete the process. The state is, therefore, entitled to make admission from the state list and fill the vacant seats."

Though it is the prerogative of DGHS to conduct online counselling before the last date of September 30 and fill the seats, no such exercise was conducted, the judges said. "Since no such allotment was made before the cutoff date prescribed for completing admission, Tamil Nadu moved the Supreme Court to extend the deadline," the judges said, setting aside the single judge order and permitting the state government to fill the surrendered All India Quota seats by October 7, as directed by the apex court.

"Tamil Nadu government's initiative in approaching the Supreme Court helped all states to utilize the unallotted left over seats of All India Quota to their own students. It also prevented several hundred seats from going waste," special government pleader (education) D Krishnakumar told TOI.

வாழை உற்பத்தியில், ‘‘உலகின் முதல் இடத்தில் தமிழ்நாடு’’

ஒரு ஒளிமயமான இடத்தை நோக்கி தமிழ்நாடு பயணிக்கும் மகிழ்ச்சியான செய்தி அனைவரின் காதிலும் தேன் வந்து பாய்வதுபோல இருக்கிறது. அதில் ஒன்றாக வாழை உற்பத்தி திகழ்கிறது. உலகிலேயே வாழை உற்பத்தியில் இந்தியாதான் முதல்இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2 கோடியே 91 லட்சம் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 90 லட்சம் டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் வாழை சாகுபடி, விளைச்சல் அளவு, வாழை சாகுபடி பரப்பு போன்றவை உயர்ந்துகொண்டேயிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் 2 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. தேனி, திருச்சி, ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

பொதுவாக ‘‘வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும்’’ என்பார்கள். ஆனால், கவனமாக விவசாய பணிகளை கவனித்தால் வாழை வாழத்தான் வைக்கும், தாழவிடாது என்பதுதான் இப்போதைய விவசாயிகளின் எண்ணமாகும். மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மைத்துறைகள் தமிழ்நாட்டு வாழைசாகுபடியில் இன்னும் தீவிர கவனம் செலுத்தினால், உலகிலேயே வாழை உற்பத்தியில் முதல்இடத்துக்கு அடுத்து சில ஆண்டுகளில் தமிழ்நாட்டை கொண்டுவந்துவிடலாம் என்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக வாழை சாகுபடி என்று நினைத்தாலே தட்பவெப்ப நிலையோடு, தண்ணீர் வசதி அதிகமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுதான் விவசாயிகளுக்கு இருக்கிறது. ஆனால், இருக்கும் சொற்ப நீரைக்கொண்டு சொட்டு நீர் பாசனம், இயற்கை வேளாண்மை முறைகள், வித்தியாசமான அதிக விளைச்சல் தரும் ரகங்கள் சாகுபடி, இஸ்ரேல் நாட்டில் பயன்படுத்தும் வேளாண்முறைகள், வாழை சாகுபடிக்கு தேவையான நிதி உதவி போன்றவற்றை அளித்தால், தமிழ்நாட்டில் வாழை உற்பத்தி அபரிமிதமாக பெருகும் என்கிறார், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பரசுராமன்.

வாழையில் அறுவடைக்கு பின்பு ஏற்படும் இழப்புதான் தமிழ்நாட்டில் 40 சதவீதமாக இருக்கிறது. சீக்கிரம் அழுகும் பொருளான வாழையை ஒரே சீராக பழுக்கவைக்கும் வசதிகளும், குளிர்சாதன கிடங்குகளும் சாகுபடி செய்யும் இடங்களின் அருகாமையில் அமைக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி அதிகம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு 150 கண்டெய்னர்கள் மூலமாகத்தான் வாழை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இதுவரையில் மட்டும் 500 கண்டெய்னர்களுக்கு மேல் ஏற்றுமதி நடந்துவிட்டது. வாழையைப் பொறுத்தமட்டில் பழங்கள் மட்டுமல்ல, அதில் உள்ள எதையுமே தூக்கிப்போட்டுவிடமுடியாது. இலை, தண்டு, பூ, நார் என்று ஒவ்வொரு பாகத்துக்கும் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில்தான் வாழையில் பல ரகங்கள் இருக்கின்றன. நாட்டுப்பழம், மோரீஸ், மலைப்பழம், கசலி, நேந்திரம், கற்பூரவல்லி, மொந்தான், பூவன், பேயன், ரஸ்தாளி, செவ்வாழை என்று வாழைப்பழங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலும், பழமாக மட்டுமல்லாமல், அதைக்கொண்டு ஜூஸ், ஒயின், அல்வா, மில்க்ஷேக், சாக்லெட், ஐஸ்கிரீம் என்று பல பொருட்களை தயாரிக்க முடியும். எனவே, வாழை சாகுபடியை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், பதப்படுத்துவதற்கான வசதி, ஏற்றுமதி செய்வதற்கான வசதி, உபபொருட்களை தயாரிப்பதற்கான வசதிகளை உருவாக்க இதை ஒரு சிறப்பு திட்டமாக செயல்படுத்த மத்திய அரசாங்கம் உதவவேண்டும். அதை மாநில அரசு வலியுறுத்தவேண்டும்.
http://www.dailythanthi.com/Thalayangam

Friday, October 9, 2015

தேசிய பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்க்கும்: மோடிக்கு முதல்வர் கடிதம்



தேசிய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்க்கும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை (என்இஇடி) ஏற்கனவே மத்திய அரசு அறிமுகப்படுத்த முயன்றது. அப்போது தமிழக அரசு அதை கடுமையாக எதிர்த்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் அறிவிப்பை ரத்து செய்தது.

இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும்படி மத்திய அரசு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி அப்போதைய பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.

கடந்தாண்டு ஜூன் 3-ம் தேதி தங்களை நான் சந்தித்து அளித்த மனுவிலும் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளேன்.

இந்நிலையில், தற்போது பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தமிழக மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே வெளிப்படையான கொள்கை உருவாக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை சிறப்பாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் தொழிற்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இருந்த போது நகர்ப்புற வசதிபடைத்த மாணவர்களுக்கே சாதகமாக இருந்தது. கிராமப்புற மற்றும் எழை மாணவர்களால் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை.

இதை கவனத்துடன் பரிசீலித்த தமிழக அரசு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. இதனால். கிராமப்புற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

முதுநிலை மருத்துவ படிப்புகளை பொறுத்தவரை, மாணவர் சேர்க்கையின் போது, கிராமங்களில் குறிப்பாக மலை மற்றும் பழங்குடியின பகுதிகளில் பணியாற்றியவர்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

இதுதவிர, தமிழகத்தில் முதுநிலை மருத்துவம் முடிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி, மருத்துவ நிபுணர்கள் தேவையையும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால், தமிழக அரசின் மாணவர்கள் சேர்க்கை கொள்கை மற்றும் சமூக -பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளையும் செல்லாததாக்கிவிடும்.

எனவே எங்கள் கடும் எதிர்ப்பையும் தாண்டி, தேசிய நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்த முயற்சித்தால், அதை தடுக்க தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கைகளில் இறங்கும்.

தமிழகம் சார்பில் மத்திய அரசின் மறுபரிசீலனை மனுவிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்.

எனவே தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்துவது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதுடன், மருத்துவ கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை கொள்கையையும் பாதிக்கும் என்பதால் தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் கன மழைக்கு வாய்ப்பு


கோப்புப் படம்


தமிழகத்தில் வரும் 12-ம் தேதி முதல் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் கன மழை பெய்ய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை மட்டுமே பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 12-ம் தேதி முதல் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Thursday, October 8, 2015

நண்பர்களை நம்பர்களாக்கும் வாட்ஸ்ஆப் வாழ்க்கையைத் துறந்த தருணம்!

நண்பர்களை நம்பர்களாக்கும் வாட்ஸ்ஆப் வாழ்க்கையைத் துறந்த தருணம்!

அனுபுதி கிருஷ்ணா

"ஹலோ எழுத்தாளரே, எப்படி இருக்கிறீர்கள்?"

பழைய நண்பன் ஒருவனின் குரலை, காலையிலேயே கேட்க ஆச்சரியமாக இருந்தது. எனக்கும் பேச ஆசைதான். ஆனால் அதிகாலை நேரத்தில், பல மாதங்களுக்குப் பின்னர், பழைய நண்பனின் குரலைக் கேட்டால் எப்படி இருக்கும்? அதுவும் வருடத்துக்கு ஒரு தடவை (என்னுடைய பிறந்தநாளுக்கோ அல்லது அவனுடைய பிறந்தநாளுக்கோ), அதிகபட்சமாய் மூன்று நிமிடங்கள் பேசும் நண்பனின் குரல் அது!

பேராவலுடன் என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தேன். பெரியதாக ஒன்றுமில்லை. அவன் க்ரூப் அழைப்பை அனுப்பியதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் கூப்பிட்டிருக்கிறான். சீரியஸான பல கேள்விகள் மற்றும் பதில்களுக்குப் பிறகு, அது 'வாட்ஸ்ஆப் க்ரூப்' என்பது புரிந்தது. அதில் என்னைத்தவிர எல்லா முன்னாள் வகுப்புத் தோழர்களும் இருக்கிறார்களாம். ''நீ மட்டும் அதில் இல்லை, அதன் சந்தோஷங்களில் கலந்துகொள்ளவில்லை" என்றான் அவன். என்னால் சிரிக்கமட்டுமே முடிந்தது.

முதன்முதலாக நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன்; அதுவும் துளிகூட விருப்பமே இல்லாமல். தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருப்பதால், புதிதாக வரும் விஷயங்களைத் தெரிந்து கொள்வது கடினமாகி விடுகிறது. எனக்கு ஆர்க்குட் அறிமுகமான சமயத்தில், உலகமே ஃபேஸ்புக்கை நோக்கி நகரத்தொடங்கி இருந்தது. கஷ்டப்பட்டு ஃபேஸ்புக் அக்கவுண்டைத் திறந்தபோது, கூகுள் ப்ளஸ் வந்திருந்தது. அதுசரி டிவிட்டருக்கு என்ன ஆனது என்கிறீர்களா? கொஞ்ச நாளைக்கு அந்தப்பக்கம் போகாமலே இருப்போமே. அதனால் இயல்பாகவே வாட்ஸ்ஆப்பைப் பற்றிய எந்த அறிகுறியும் எனக்கு வரவில்லை. உறவுக்காரி ஒருத்தி அதை அறிமுகப்படுத்தி வைத்த பின்னரும், வாட்ஸ்ஆப் பற்றி பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.

சகாக்களின் நெருக்கடியை எந்த வயதிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. 35 வயதே ஆனாலும் கூட. என்னுடைய மருத்துவர், செவிலி, டெய்லர் என எல்லாருமே 'இதை வாட்ஸ்ஆப் பண்ணி விடுங்கள்' என்கின்றனர். அவர்கள் யாருமே வழக்கமான குறுஞ்செய்திகளை கண்டுகொள்வதாகக் கூடத் தெரிவதில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பல மாத வற்புறுத்தலுக்குப் பின்னர், என்னுடைய மருத்துவரையும், கடைக்காரர்களையும் நோக்கி ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு, வாட்ஸ்ஆப்பில் நுழைந்தேன். ஒரு அழகான காலையில், உலகத்தையே பெருந்தன்மையுடன் பார்த்த தருணம் அது.

ஆரம்பத்தில் வாட்ஸ்ஆப்பில் எதுவுமே எனக்குப் புரியவில்லை. அது என்ன என்று தெரிந்துகொள்ளவே பல நாட்களானது. நிலத்தை, உடையை, ஏன் அழகை வாங்கச் சொல்லிக் கூவும் விளம்பரங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. சம்பந்தமே இல்லாத க்ரூப்புகளில் இணைக்கப்பட்டேன். நாய்க்குட்டிகள், பூனை, குழந்தை, சமயத்தில் பன்றிக்குட்டிகளின் படங்கள் மட்டுமே அதில் பகிரப்பட்டன. நான் புதிதாகச் சேர்ந்ததற்கான எந்த அடையாளமும் அதில் காண்பிக்கப்படவில்லை.

''உன்னுடைய வருகையை முதலில் அறிவிக்க வேண்டும்'' என்றாள் ஒருத்தி. எனது முதல் நிலைத்தகவலை அதில் இட்டேன். "தவலை இப்போது கிணற்றின் வெளியே வந்துவிட்டது!" என்று. அந்த யுக்தி பலித்தது. ''பைத்தியம், அது தவலை இல்லை; தவளை'' என்று ஏராளமான செய்திகள் வந்து குவிந்தன. தொடர்ந்த சில நாட்களில் வருடக்கணக்காக என்னுடைய நண்பர்களாக இருந்தவர்கள், போனில் வெறும் நம்பர்களாகிப் போனார்கள். செல்பேசியின் திரையை விட்டு கண்ணை எடுக்காத போதை, என்னை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.

ஸ்மார்ட் போனையோ அல்லது சமூக ஊடகங்களையோ நான் எதிர்த்ததற்கான முக்கியக் காரணமே, உள்ளங்கையில் மறைந்துவிடும் ஒற்றைச் சாதனம் நம்மை அடிமையாக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான். உண்மையான உலகத்தை விட்டுவிட்டு மெய்நிகர் உலகத்தில் வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. ஆனால் எதை நினைத்து பயந்தேனோ அது நன்றாகவே நடந்தது.

ஒரு சில மாதங்களிலேயே, எதுவும் பேசுவதற்கு இல்லாத நிலையிலிருந்து, பேசுவதற்கும், எழுதுவதற்கும், டைப்புவதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் குவிந்தன. வீட்டு வேலைகளை தள்ளிப்போட்டேன். தூக்கம் குறைந்தது; கணவரையும், வீட்டையும் சேர்த்து குழந்தைகளையும் புறக்கணித்தேன். செல்பேசியோடு சேர்ந்து உறங்கி, அதனுடனேயே எழுந்தேன். சில நேரங்களில் தூக்கத்திற்கு இடையில் விழித்து போனைப் பார்க்கத் தொடங்கினேன். செல்பேசியை விட்டுத் தள்ளி இருக்கும் சமயங்களில்கூட, அதன் ஞாபகமாகவே இருந்தது. இவைகளோடு இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்தது.

குறுஞ்செய்தி அனுப்புவது, பகிர்ந்துகொள்வது, பேசுவது, அழுவது, சிரிப்பது என எல்லாமே மெய்நிகர் உலகத்தில் மட்டுமே நடந்தது. அன்றாட வாழ்க்கைப் பேச்சுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. இனி இதைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

ஒருமுறை, நெடு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய நண்பனைப் பார்த்தேன். வெகு நேரம் இருவரும் எதுவுமே பேசவில்லை. அவன் போனையே நோண்டிக் கொண்டிருக்க, நான் வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தேன். அந்த நொடியில்தான் இந்த வலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. வாட்ஸ்ஆப்பினுள் நுழையாமல், தனியாக அமர்ந்து, சுவர்களையே கொஞ்ச நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். 'அங்கே அவர்கள் எல்லோரும் பேசுவார்கள்; சிரிப்பார்கள்; சண்டை போட்டு ரசிப்பார்கள்' என்று தோன்றியது. உண்மையே இல்லாத மெய்நிகர் உலகம் என்னைக் கவர்ந்து இழுத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கு திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் வரும்போதெல்லாம், புத்தகம் படித்தேன்; கேக் தயாரித்தேன்; பேசாமல் தவறவிட்டிருந்தவர்களிடம் பேசினேன். அடிக்கடி அம்மா, மாமியாரின் நலம் விசாரித்தேன். கிசுகிசு பேசத் தோன்றிய போதெல்லாம், என் பெண்களுடன் கதை பேசினேன்.

ஒரு வழியாக அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என எல்லோரிடமும் இயல்பாகப் பேச முடிந்தது. வழக்கமான அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருந்தது. முன்னர் பேசியதைவிட இன்னும் தெளிவாக, ஆழமாக, அழகாக பேச முடிந்தது. அன்று தொடங்கி இப்பொழுது வரைக்கும், எல்லா சந்தோஷங்களையும் நிஜ உலகத்திலேயே பெற்றுக் கொள்கிறேன்.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

பாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்!

Return to frontpage

பிராணிகளில் சாதுவானது மாடு. தவிர, மனித இனத்துக்கு மிக நெருக்கமானதும்கூட. வயல்களில் உழவுக்கு உதவும் காளைகளாகட்டும், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட பாலைத் தரும் பசுக்கள், எருமைகளாகட்டும்; இதில் விதிவிலக்கு இல்லை. அப்படிப்பட்ட மாடுகள் இப்போது வகுப்புவாத அரசியலின் மையப் பொருளாக மாற்றப்பட்டிருப்பதுதான் துரதிர்ஷ்டம்.

சாலையில் பஸ்ஸில் ஒரு ஆடோ, மாடோ அடிபட நேரும்போது, மனிதத்தன்மையுள்ள யாரும் அதை வேடிக்கை பார்ப்பதில்லை. உத்தரப் பிரதேசத்தின் முஹம்மது ஜகி ஒரு உதாரணம். கிணற்றில் விழுந்த ஒரு பசுங்கன்றுக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து இறங்கி மீட்டிருக்கிறார். கிணற்றில் விழுந்து தவிப்பது ஒரு பசு, கோமாதா, தெய்வம் என்றெல்லாம் இல்லை. அடிப்படையில் அது ஒரு உயிர். அது பரிதவிக்கிறது. நம்மால் முடிந்த வரை காப்பாற்ற வேண்டும் என்கிற மனிதாபிமானம்; அக்கறை. பசுங்கன்று விழுந்த இடத்தில் ஆட்டுக்குட்டி விழுந்திருந்தாலும் முஹம்மது ஜகி அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார் என்பது தெளிவு. அதேசமயம், பிரியாணி சாப்பிடும்போது அவர் ஆட்டையோ, மாட்டையோ நினைத்துக்கொண்டிருக்க மாட்டார். அது தேவையும் இல்லை.

உலகம் முழுவதும் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒரு சமூகத்துக்குப் பசு மாமிசம் ஆகாது. ஒரு சமூகத்துக்குப் பன்றி மாமிசம் ஆகாது. ஒரு சமூகத்துக்குக் குதிரை மாமிசம் ஆகாது. எல்லோர் நம்பிக்கைகளும் முக்கியம். ஆனால், இந்த நம்பிக்கைகளுக்கான மதிப்புக்கு ஒரு எல்லை இருக்கிறது. நமக்குப் பிடிக்காததை நாம் சாப்பிடாமல் இருக்கலாம்; அடுத்தவரும் சாப்பிடக் கூடாது என்பது அநாகரிகம் மட்டும் அல்ல; அத்துமீறலும்கூட.

எப்படியும் மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில், அவர்களுடைய உணவுக் கலாச்சாரத்தில் தலையிடவும் நிர்ப்பந்திக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது; முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு. அதிலும் இந்தியாவில், ‘இந்துக்களுக்கு எதிரானது’, ‘இந்துக்களின் மனங்களைப் புண்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவது’ என்றெல்லாம் சொல்லி மாட்டுக்கறிக்குத் தடைச்சூழலைக் கொண்டுவர சங்கப் பரிவாரங்கள் முற்படுவது அபத்தத்திலும் அபத்தம். கேரளத்தில் மாட்டுக்கறி நுகர்வில் பேதங்கள் இல்லை; முஸ்லிம்களைப் போலவே தலித்துகளும் தங்கள் பண்பாட்டுக்கூறுடன் ஒட்டியதாக அதைக் கருதுகின்றனர். அப்படியென்றால், இவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா? இந்து மதம் என்பதே எல்லையற்ற கலாச்சாரங்களை உள்ளடக்கியது அல்லவா?

அடிப்படையில் உணவு என்பது உணவு. அவ்வளவுதான். இந்தியாவில் மக்களுக்கு இதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்க அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு உச்சகட்ட உதாரணம் ஆகியிருக்கிறது தாத்ரி சம்பவம். உத்தரப் பிரதேசத்தின் தாத்ரியில், முகம்மது அக்லக் என்பவர் வீட்டில் மாட்டுக் கறியைச் சாப்பிட்டதாகக் கூறி, அவரை வீடு புகுந்து அடித்துக் கொன்றிருக்கின்றனர்.

இந்துக் கோயிலில் கீர்த்தன் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போது, அங்கேயிருந்த சிலர், ‘நம்மை அவமதிப்பதற்காகவே பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பசுவைக் கொன்று கறி சமைத்திருக்கிறார்கள்’ என்று வெறியூட்டும் விதத்தில் கூறியிருக்கின்றனர். அதன் பிறகு, வெறிகொண்டு கிளம்பிய கும்பல், அக்லக்கின் வீட்டுக்குச் சென்று, அவர்கள் சொன்னது எதையும் காதில் வாங்காமல் அடித்துக் கொன்றிருக்கிறது.

நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்றதிலிருந்தே ‘உணவுக் கலாச்சாரத்தின் மீதான அடையாள அரசியல் வன்முறைகள்’ பெருகிக்கொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது முதலே, ‘பசுவதையைத் தடை செய்ய தேசிய அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. இந்தச் சட்டம் இயற்றும் அதிகாரம் இப்போது மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

ஜைனர்களின் பண்டிகையை முன்னிட்டு, ‘யாருமே இறைச்சி சாப்பிடக் கூடாது’என்று தடை விதித்ததும் விநாயக சதுர்த்தியின்போதும் இறைச்சி விற்பனையைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இறைச்சி என்பது சாப்பாட்டு மேஜையிலிருந்து இடம்பெயர்ந்து, ஊடகங்களின் மத்தியில் விவாதப் பொருளானது. பசிக்காகவும் ருசிக்காகவும் உண்ணப்படும் உணவு, இன்னொரு சமூகத்தவரின் மனங்களைப் புண்படுத்துவதற்காகத்தான் என்று அர்த்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சமூகங்களுக்கிடையேயான கசப்புணர்வையும் வெறுப்புணர்வையும் வளர்த்தெடுக்கும் கருவியாக உணவு உருமாற்றப்படுகிறது.

அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் மத அடிப்படையில் மக்களைத் தூண்டிவிடும் செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இத்தகைய சூழலில், “இந்தச் சம்பவத்துக்கு வகுப்புவாத முலாம் பூசாதீர்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.

வதந்தி ஒரு உயிரைப் பலிவாங்கியிருப்பதோடு மட்டுமல்ல; நாடு முழுவதும் தேவையற்ற சர்ச்சைகளைப் பரப்புகிறது. இதையெல்லாம் எப்படி சாதாரணமானதாகவோ, மதச்சாயங்களுக்கு அப்பாற்பட்டதாகவோ பார்க்க முடியும்? இதுபோன்ற அராஜகங்களுக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதும், தொடர்ந்து இத்தகைய அடாவடிகள் நடக்காமல் தடுப்பதும்தானே அரசின் கடமையாக இருக்க முடியும்?

அக்லக் கொல்லப்பட்டதற்கு வகுப்புச் சாயம் பூசக் கூடாது என்று கோரிக்கை விடுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உண்மை வெளிவராமல் தடுப்பதுடன், பிரச்சினையைத் திசை திருப்பவும் பார்க்கிறார். எந்தவிதமான அரசியல் சூழலில், எந்தவிதமான சமூகப் பின்னணியில் இது நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புறக்கணிப்பதானது இந்துத்துவாவினால் எழும் வகுப்புவாத வெறுப்புணர்வையும், மதச் சகிப்பற்ற தன்மையையும் புறக்கணிப்பதாகவே ஆகிவிடும். வன்முறைக் கும்பல்களின் வெறியாட்டத்துக்குத் தீனி போடுவோர், அவற்றின் வன்செயல்களுக்கும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

அரசாங்கம் மாடுகளை விட்டுவிடட்டும், அவை பாவம்! மாறாக, மக்கள் நலனில் கவனம் திரும்பட்டும். அதற்குத்தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்!

நெறிமுறை வேண்டும்

Dinamani


By ஜெ. ராகவன்

First Published : 08 October 2015 02:35 AM IST


நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.க்கள்) ஊதியம் மற்றும் இதர படிகளை மாற்றியமைப்பது தொடர்பாக மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு நிறுவியுள்ளது வரவேற்கத்தக்கது.
இந்த யோசனை ஒன்றும் புதிது அல்ல. 2005-ஆம் ஆண்டு அப்போது மக்களவைத் தலைவராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி, எம்.பி.க்களின் ஊதியம், இதர படிகளை உயர்த்துவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு குழுவை ஏற்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு எம்.பி.க்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை அவ்வளவுதான்.
எம்.பி.க்களின் ஊதியம் கடைசியாக 2010-இல் உயர்த்தப்பட்டது. அதாவது, எம்.பி.க்களுக்கு ஊதியமாக ரூ.50 ஆயிரம், தொகுதிப் படி மற்றும் அலுவலகப் படி தலா ரூ.45 ஆயிரம் என மொத்தம் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை இரண்டு மடங்காக அதாவது, ரூ.2.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும்.
இதுதவிர, அவர்களுக்கு தங்குமிடம், விமானம், ரயில் பயணம், மூன்று தொலைபேசி இணைப்பு, இரண்டு செல்லிடப்பேசி இவற்றுக்கான செலவுகளும் சலுகைகளாக வழங்கப்படுகின்றன.
இது இப்படியிருக்க, மக்களின் பிரச்னைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காதவர்கள், நாடாளுமன்றத்தை சரிவரச் செயல்படவிடாமல் செய்பவர்கள், தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்யாத மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த அளவு ஊதிய உயர்வு தேவையா என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எம்.பி., எம்.எல்.ஏ. பதவிக்குப் போட்டியிடும் ஒருவர், தேர்தலில் வெற்றிபெற்று பதவிக்கு வந்தவுடன் மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
இந்தநிலையில், அவர்களது ஊதியம் மற்றும் இதர படிகளை கணிசமாக உயர்த்தித்தர வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சொல்லப்போனால், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் நேர்மையாகச் செயல்படும் எம்.பி.க்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தற்போது வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர படிகள் மற்றும் சலுகைகளே போதுமானது. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை மட்டும் அவ்வப்போது உயர்த்தினால் போதும் என்ற கருத்தும் சில எம்.பி.க்களிடம் உள்ளது.
முன்பு ஊதியத்தைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டே அரசியல் மற்றும் அரசியல் சாராத பிரமுகர்கள் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால், இன்று எப்படியாவது எம்.பி.யாகிவிட்டால் நல்ல சம்பளம், படிகள் கிடைக்கும். அதிகாரமும் கைக்கு வந்துவிடும் என்ற எண்ணத்தில் பலரும் எம்.பி. பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.
நமது நாட்டில் எம்.பி.க்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம், மற்றும் இதர படிகள் மற்ற நாடுகளில் வழங்கப்படுவதைவிட குறைவாக இருக்கலாம். அவர்களின் பதவிக்கு ஏற்ப ஊதியம் இருக்க வேண்டும் என்பதும் நியாயமானதாக இருக்கலாம்.
அதற்காக அவர்களாகவே தங்களது ஊதியத்தை இரட்டிப்பாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது ஏற்புடையதல்ல. எம்.பி.க்களின் ஊதியத்தை நிர்ணயிப்பதில் ஒரு நெறிமுறை வேண்டும்.
ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அரசில் உயர் அதிகாரியாக பதவி வகிப்பவர்களின் ஊதியத்தை தொடர்புபடுத்தி எம்.பி.க்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
மெக்ஸிகோவில் எம்.பி.க்களுக்கு கணிசமான தொகை ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் வேறு எந்த தொழிலிலும் ஈடுபடக் கூடாது என்பது அந்த நாட்டு விதி. அமெரிக்காவில் எம்.பி.க்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களின் வெளி வருமானம் வாங்கும் சம்பளத்தில் 15 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது.
ஆனால், நமது நாட்டில் மட்டும்தான் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் பெறும் விஷயத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
நம் நாட்டில் மொத்தம் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் கோடீஸ்வரர்கள். மாநிலங்களவை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வரர்கள்.
ஒருமுறை எம்.பி.யானவர் மீண்டும் எம்.பி. தேர்தலில் போட்டியிடும்போது அவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக தோராயமான கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அதிகாரிகளும், ஊழியர்களும் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் பிடித்தம் செய்வதுபோல, எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வராத நாள்களிலும் அப்படியே வந்து நாடாளுமன்றத்தைச் செயல்படவிடாமல் தடுத்தாலும் அதை வேலை செய்யாத நாள்களாக கருத்தில் கொண்டு அவர்களின் ஊதியம் மற்றும் படிகளை பிடித்தம் செய்ய வேண்டும் என்ற யோசனையும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
நாடாளுமன்றம் என்பது மதிப்பு மிக்க இடம். அங்கு மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு குரல் கொடுக்கவும்தான் மக்கள் பிரதிநிதிகளாக எம்.பி.க்கள் செல்கின்றனர். ஆனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவதும், அவையைச் செயல்படவிடாமல் செய்வதும் அவர்களுக்கு அழகல்ல.
எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வை வழங்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதையும், அவர்களுக்கு நியாயமான ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும் என்பதையும் வரவேற்கும் அதேசமயத்தில், அவைக்கு ஒழுங்காக வராத எம்.பி.க்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்யவேண்டும், நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தடுக்கும் எம்.பி.க்களை திரும்ப அழைக்க வேண்டும் போன்ற யோசனைகளையும் விவாதித்துப் பரிசீலிக்க வேண்டும்.
எம்.பி.க்கள் விஷயத்தில் இது சாத்தியமா என்று சிலர் கேட்கலாம். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

விருதுக்கு அவமரியாதை!

Dinamani


By ஆசிரியர்

First Published : 08 October 2015 01:57 AM IST


உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி அருகே பசுவின் கறியை உண்டதற்காக ஒரு முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார் பண்டித நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷகல். அவரைத் தொடர்ந்து அசோக் வாஜ்பாயும் விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதேபோன்று, இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய எழுத்தாளர் கலபுர்கி கொலையில் தீவிர விசாரணையை வலியுறுத்தி, அவருடன் ஒரே மேடையில் கர்நாடக சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்ற ஆறு பேர் தங்கள் விருதுகளைத் திருப்பித் தந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த சாகித்ய அகாதெமி விருது பெற்ற இடதுசாரி சிந்தனை எழுத்தாளர்கள் தங்களது விருதையும் பரிசுப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றுகூடக் கோரிக்கைகள் எழுகின்றன.
சாகித்ய அகாதெமி விருது அரசியல் கட்சிகளின் பரிந்துரையால் வழங்கப்படுபவை அல்ல என்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். ஓர் எழுத்தாளன் ஏதாவது ஓர் அரசியல் கட்சியையோ, சித்தாந்தத்தையோ சார்ந்தவராக இருக்கலாம். ஆனால், விருது வழங்கப்படுவது அவரது படைப்புக்காகத்தானே தவிர, அவரது அரசியல் தொடர்புக்காக அல்ல.
சில நேரங்களில் சில எழுத்தாளர்களின் அரிய நூல்களுக்கு விருது அளிக்கப்படாமல், அவர் எழுதிய சாதாரண புத்தகத்துக்கு விருது அளிக்கப்படும்போதும்கூட, விருதுக்கான நிபந்தனைக்காக அப்படி அமைந்து விடுகிறது என்பதே உண்மை. ஆயினும்கூட, அந்த எழுத்தாளரின் ஒட்டுமொத்த படைப்பாக்கத்துக்கான விருதாகவே, கௌரவமாகவே அது கருதப்படுகிறது.
இந்தியாவில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, கிலாபத் விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசின் அநீதியான போக்கைக் கண்டித்து, அன்றைய பிரிட்டிஷ் அரசால் தனக்கு போயர் போர், ஜூலு போர், தென் அமெரிக்காவில் சமூக சேவை ஆகியவற்றுக்காக அளிக்கப்பட்டிருந்த விருதுகளைத் திருப்பித் தந்தார். அன்றைய காலகட்டத்தில், மகாத்மா காந்தியைப் பின்பற்றி, பலரும் தங்கள் விருதுகளை பிரிட்டிஷ் அரசுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். ராவ் பகதூர் பட்டங்களைத் துறந்தவர்களும் நிறையப் பேர். ஆனால், அது ஓர் அரசியல் போராட்டம். பிரிட்டிஷார் ஆட்சிக்கு எதிரான அந்தப் போராட்டத்தில் விருதுகளைத் தூக்கியெறிவதும்கூட, எதிரியின் மீது வீசப்படும் ஆயுதம்தான்.
ஆனால், இப்போது இந்தியாவில் நடப்பது மன்னராட்சி இல்லை. மக்களாட்சி. எல்லாரும் இந்நாட்டு மன்னர். இந்நிலையில் விருதைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் எந்த அரசை, அல்லது எந்த அரசியல் கட்சியை, எந்த அரசியல் தலைவரை ஓர் எழுத்தாளர் அவமானப்படுத்துவதாகக் கருத முடியும்?
ஓர் அரசியல்வாதி தனக்கு அளிக்கப்பட்ட பதவியை, கொடுக்கப்பட்ட விருதைத் தூக்கி எறிவதில் அர்த்தமுள்ளது. ஆனால், ஒரு படைப்பாளி தனக்கான விருதைத் திருப்பிக் கொடுத்த பிறகு, அவர் படைப்பாளி அல்ல என்றாகி விடுவாரா? அல்லது விருது பெற்ற அவரது படைப்பு இலக்கியஅங்கீகாரத்தை இழந்துவிடுமா?
ஓர் இலக்கியவாதியின் கடமை தொடர்ந்து எழுதுவதுதான். படைப்பாளிக்கு எழுத்து மட்டுமே ஆயுதம். சமூகத்தின் ஏற்றத்தாழ்வு, அரசியல் அநீதிகளை இன்னும் படு தீவிரமாக, காத்திரமான எழுத்தில் முன்வைக்க வேண்டும். விருதுகளைத் திருப்பித் தருவதைக் காட்டிலும், இத்தகைய எழுத்துதான் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தரும்.
எந்தவொரு நாடும், சர்வாதிகார நாடு உள்பட, எழுத்தாளனின் காத்திரமான எழுத்துகளைத்தான் சகித்துக்கொள்ள முடியாமல் திணறும். அதை ஒடுக்க நினைக்கும். உலக வரலாற்றில் கவிகளும், படைப்பாளிகளும் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும் இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் எழுத்தும் படைப்பும்தான் காரணம்.
அரசினால் எதிர்கொள்ள முடியாத ஆயுதம் எழுத்துதான். மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில், ஓர் ஆளும் கட்சி அநீதியை நிகழ்த்துமானால், ஒரு படைப்பாளி அதைத் தன் எழுத்தாலும் படைப்பாலும் எதிர்ப்பதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். விருதுகளைத் திருப்பித் தருவதால் அரசுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. மாறாக, அந்த விருது வேறொரு கட்சியின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டிருந்தால், அரசு அதை மகிழ்ச்சியுடன் வேடிக்கையாகவே பார்க்கும்.
தாத்ரி அருகே நடந்திருக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும்கூட காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் இதேபோன்ற வன்முறைகள் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடந்து வந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும்கூட இந்தியாவில் இத்தகைய தாக்குதல்கள் நடக்கவே செய்யும். இதற்காக இலக்கியவாதிகள் அனைவரும் எல்லா விருதுகளையும் திருப்பித் தருவது என்பது விருதை அவமதிப்பதாக இருக்குமே தவிர, அரசை எதிர்ப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இருக்காது.
மத்தியில் ஆளும் கட்சி மதவாத அரசியலுக்கு ஆதரவாக நிற்பதால்தான் தாத்ரி கொலை அல்லது கலபுர்கி கொலை என்று படைப்புலகம் கருதுமேயானால், அவர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை எழுத்தின் மூலம்தான் நடத்த வேண்டும். ஒரு படைப்பாளிக்கு எழுத்துதான் கூரிய வாள். விருது, வெறும் தாள்.

Tuesday, October 6, 2015

ஆதலினால் அன்பு செய்வீர்!


By அ. கோவிந்தராஜூ

First Published : 06 October 2015 01:27 AM IST


அன்பு ஆற்றல் மிக்கது. ஒரு குழந்தையின் அன்பால் பிளவுபட்ட குடும்பம் ஒன்று சேர்வது உண்டு. காதலனுக்கு மண்ணில் மாமலையும் ஒரு சிறு கடுகாய் தோன்றக் காரணம், காதலி காட்டும் அன்பின் வலிமைதான்.
மனைவி காட்டும் தன்னலமற்ற அன்பு, நெறி கெட்டுச் செல்லும் கணவனை நல்வழிப்படுத்தும் ஆற்றல் மிக்கது.
இன்றளவும் குடும்பம் என்னும் கட்டுக்கோப்பு குலையாமல் இருப்பதற்குக் காரணம், அன்னை பொழியும் அன்பின் வலிமைதான். குடும்பத் தலைவனாய் விளங்கும் தந்தை ஓய்வின்றி உழைப்பதும் ஆழ்மனதில் கிடக்கும் அன்பின் பேராற்றலால்தான்.
சாதி, மதம், இனம் பாராமல் அன்பு காட்ட வேண்டும். மற்ற எல்லா உயிர்களிடத்தும் அன்பைப் பொழிய வேண்டும். பகைவரையும் மன்னித்து அன்பு செய்ய வேண்டும்.
இந்த அன்பு நெறியைத்தான் நின்னோடு ஐவரானோம் என்று குகனையும், நின்னோடு அறுவரானோம் என்று அனுமனையும், நின்னோடு எழுவரானோம் என்று விபீடணனையும் இராமன் தம்பியராக்கிக் கொள்வதாய் கம்பன் படைத்துக் காட்டுகிறான்.
இவ்வன்பு நெறி தழைக்குமாயின் உலகமாந்தர் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் வாழலாம்.
அளவுக்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சே. இக்கூற்று அன்புக்கும் பொருந்தும். தாயும் தந்தையும் தம் குழந்தைகளிடத்து அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்தி, அதாவது செல்லம் கொடுத்து, குழந்தையின் போக்குக்கு விட்டு, பின்னர் துன்பப்படுவதுண்டு.
கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகையும் உண்டு. இது மிகவும் ஆபத்தானது. இது காலப்போக்கில் வெறியாக மாறிவிடும்.
மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக் கூடாது. மதத்தின் மீது அன்பு இருக்க வேண்டும். ஒரு போதும் மதவெறியாக மாறுதல் கூடாது.
நம் நாட்டில் இல்லறம் என்பது வற்றாத அன்பின் அடிப்படையில் அமைவது. ஆயினும், அவ்வற்றாத ஊற்று வரதட்சணைச் சிக்கல்களால் வறண்டு போவதைப் பார்க்கிறோம்.
செல்வ மகளையும் கொடுத்து, செல்வத்தையும் கொடுக்க ஏழைத் தந்தையால் இயலுமா? பாரதியார் கண்ணம்மாவை நோக்கி, "அன்பொழுக செல்லமடி நீ எனக்கு சேமநிதி நானுனக்கு' என்று கூறுவதைப்போல, அன்பு காட்டி மணம் புரியும் இளைஞர் கூட்டம் பெருக வேண்டும்.
வள்ளுவர் கூறுவது போல், அன்பு பண்பாகவும், அறம் பயனாகவும் உள்ள இல்லங்கள் பெருகின், நாட்டில் நலம் பெருகும், அமைதி நிலவும்.
கிணற்று நீர் இறைக்க இறைக்கத்தான் ஊறும். அதுபோல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டினால் அன்பு பெருகும்.
பிற உயிர்களிடத்து அன்பு காட்டி, அதனால் கிடைக்கும் இன்பத்தைச் சுவைக்க வேண்டும். இவ்வின்பத்தைச் சுவைத்தவர் தாயுமானவர். "அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே' என்று கூறுகிறார்.
காக்கை குருவிகள் எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று அஃறிணைப் பொருள்களிடத்தும் அன்பு காட்டியவர் பாரதியார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்பின் மிகுதியால் நெஞ்சு நெக்குருகப் பாடியவர் வள்ளலார்.
ஒரு முறை காந்தியடிகளின் சீடர்கள் சிலர், இரவு நேரத்தில் பசுந் தழையைக் கொத்துக் கொத்தாகப் பறித்து வந்தனர். அதைக் கண்ட காந்தியடிகள், மரங்களும் நம்மைப்போல் உயிருடையன. நம்மைப்போலவே வளர்கின்றன, முகர்கின்றன, உண்கின்றன, பருகுகின்றன, உறங்குகின்றன; அவை இரவில் ஓய்வு பெற்று உறங்கும்போது தழைகளைப் பறித்தல் தவறு என்று கூறினார்.
முன்னர் ஒருசமயம், அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மத மாநாட்டில் சுவாமி விவேகானந்தர், சகோதர அன்போடு, "அமெரிக்க நாட்டுச் சகோதரர்களே, சகோதரிகளே' என்று தொடங்கி உரையாற்றியபோது, அங்கிருந்தோர் தம் மெய்மறந்து செவிமடுத்தார்கள்.
நாடு, மொழி, இனம் கடந்து எல்லா நாட்டினரும் நம் உடன் பிறந்தார் என ஒவ்வொருவரும் எண்ணி வாழத் தொடங்கினால், உலகில் போர் ஏது, பூசல் ஏது?
அண்மைக் காலமாக மனித மனங்கள் பாலைவனங்களாக மாறி வருகின்றன. இறைவன் அன்பு மயமானவன் என எல்லா மதங்களும் போதிக்கின்றன.
மனித நேயமும் அன்பும் மீண்டும் பெருக்கெடுக்க வேண்டும், அதற்கான வழிகளைச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது உள்ளோம்.
கண்மூடித்தனமான அன்பு என்று ஒரு வகை உண்டு. இது மிகவும் ஆபத்தானது. மொழியின் மீது அன்பு இருக்க வேண்டும். மொழி வெறியாக மாறக் கூடாது.

கையறு நிலை!


Dinamani


By ஆசிரியர்

First Published : 06 October 2015 01:24 AM IST


நாடு முழுவதும் காய்கனி, உணவு தானியங்கள், பால் உள்ளிட்ட இருபதாயிரம் மாதிரிகளை மத்திய வேளாண் துறை ஆய்வு செய்ததில், அவற்றில் 18.7% மாதிரிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளில் 2.6% காய்கனி, பால், தானியங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பது தெரிய வந்திருக்கிறது. 12.5% மாதிரிகளில் இருந்த பூச்சிக்கொல்லி எச்சம், இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட பூச்சி மருந்துகளைச் சார்ந்தது என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.
இந்தப் பூச்சிக்கொல்லி எச்சம் அங்கக வேளாண்மையில் விளைந்த பொருள்களிலும் இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. காரணம், மண் முழுவதும் ரசாயன உப்பாகிக் கிடக்கிறது. புதிதாக உரம் போடவில்லை என்றாலும், நிலம் தன்னில் விளைவிக்கப்படும் பயிரின் மூலம்தான் ஏற்கெனவே கொட்டப்பட்ட உப்பை வெளியேற்ற முடியும். ஆகவே, அங்கக வேளாண்மையிலும் பூச்சிக்கொல்லி நச்சை அப்புறப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் யதார்த்த நிலைமை.
கடந்த பிப்ரவரி மாதம் தில்லி நீதிமன்றத்தில் தாக்கலான பொதுநல வழக்கில் மத்திய வேளாண் துறை அமைச்சகம் அளித்த அறிக்கை போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. நீதிமன்றம் அமைத்திருந்த குழுவானது, தில்லி நகரச் சந்தைகளில் பெற்ற உணவுப் பொருள், காய் கனிகளின் மாதிரிகளைத் தனியாக ஆய்வு செய்து, அனைத்திலும் பூச்சிக்கொல்லி எச்சம் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்திருந்தது.
சென்ற ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அல்போன்சா மாம்பழம் அனுப்ப முடியாமல் போனது. காரணம், அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி எச்சம். பல நாடுகளுக்கு நமது கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய் ஏற்றுமதி செய்யப்பட முடியாத நிலை இருக்கிறது. சவூதி அரேபியாவுக்கு நமது பச்சை மிளகாய் ஏற்பில்லை. காரத்தைவிட பூச்சிக்கொல்லி எச்சம் அதிகம்.
அண்மையில், கேரள வேளாண் பல்கலைக்கழக ஆய்வுக்கூடம் மேற்கொண்ட பரிசோதனைகளில் பல்வேறு காய், கனிகளில் பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதைப் பட்டியலிட்டது. கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் காய் கனிகள் அனுப்புவது தமிழ்நாடு என்பதால், தமிழ்நாட்டு காய் கனிகளில் அதிக பூச்சிக்கொல்லி எச்சம் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தியா முழுவதும் இதே நிலைமைதான் என்பது தெளிவாகியிருக்கிறது.
பசுமைப் புரட்சியின்போது அதிக அளவு ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிப் பயன்பாடு இந்திய வேளாண்மையில் இல்லாத அளவுக்குப் புகுத்தப்பட்டது. அதன் விளைவாக, தானிய உற்பத்தி பெருகியது. நாளும் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஈடுகொடுக்கவும், உர உற்பத்தியில் இந்தியா அன்னிய நாடுகளை எதிர்பார்க்காமல் தன்னிறைவு பெறவும் அன்றைய இந்திரா காந்தி அரசு எடுத்த பசுமைப் புரட்சி நடவடிக்கையைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை.
பசுமைப் புரட்சியின் விளைவாக இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற பிறகு ரசாயன உரத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு, பாரம்பரிய விவசாயத்துக்கு நாம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. பாரம்பரிய வேளாண்மையில் அதிக விளைச்சல் கிடைக்காது என்ற ஒரு வாதம் மட்டுமே தொடர்ந்து 40 ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தொடர்ந்து உர மானியம் வழங்கப்பட்டு உர நிறுவனங்கள் பலனடைகின்றன என்பது மட்டுமல்லாமல், மண்ணும் முழுமையாகப் பாழ்பட்டுக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பூச்சிக்கொல்லி ரசாயன உரங்களால் உண்ணும் உணவு விஷமாகி, உடலின் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் கல்லீரல், சிறுநீரகக் கோளாறுகள், புற்றுநோய், மலட்டுத்தனம் எல்லாமும் அதிகரித்த நிலைமை. உரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் குறைக்க நாம் முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, முடியவுமில்லை.
மாறாக, சிறுநீரக சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. சிறுநீரகத் திருட்டு ஒரு வணிகமாயிற்று. புற்றுநோய் மருத்துவமனைகள், புற்றுநோய் அறியும் பயாப்ஸி சோதனைக்கான ஆய்வகங்கள் புற்றீசலாக உருவாகியிருக்கின்றன. மலட்டுத் தனத்தைப் போக்கவும், செயற்கை கருவூட்டு வழங்கவும் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரம் நடக்கிறது. தம்பதிக்கு குழந்தைப்பேறு வழங்கும் செயற்கை கருவூட்டு மையங்கள் எல்லாமும் ஒவ்வொரு நகர்ப் பகுதியிலும் இரண்டு மூன்று உருவாகி, போட்டிப்போட்டு வியாபாரம் நடத்தின. இந்த நோய்களுக்கு அடிப்படைக் காரணமான ரசாயன உரம், பூச்சிக்கொல்லியை தவிர்ப்பதை அரசோ, வேளாண் துறையோ யோசிக்கக்கூட தயாராக இல்லை.
கடந்த 40 ஆண்டுகளாகவே பாரம்பரிய வேளாண்மையில் அக்கறையுள்ள அமைப்புகள் ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிக்கு எதிராகக் குரல் கொடுத்து அதன் தீமையை மக்களிடம் எடுத்துச் சென்றன. ஆனால், பரந்துபட்ட அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியவில்லை. இப்போது ஊடகங்களின் ஆதரவு சில ஆண்டுகளாகத்தான் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இயற்கை சாகுபடி, மாடித்தோட்டத்தில் காய்கனி உற்பத்தி, அங்கக வேளாண்மையில் ஈடுபடும் தகவல்கள், பேட்டிகள் என்று காட்சி ஊடகம், பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் இயற்கை வேளாண்மை குறித்த குரல் கேட்கிறது.
நமக்கு பாரம்பரிய வேளாண்மையின் நன்மை புரிகிறது. ஆனால், நமது மண் பாழ்பட்டுக்கிடக்கிறதே, என்ன செய்ய?

எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, இது தேவையில்லையே

logo


மத்திய அரசாங்கம் திடீரென இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவம் பொறித்த தபால் தலைகளை வெளியிடுவதில்லை என்று எடுத்த முடிவு, நாட்டில் பொதுவாக இந்த வீண் சர்ச்சை எதற்கு?, இது தேவையில்லையே? என்ற உணர்வுகளைத்தான் ஏற்படுத்துகிறது. ஆதிகாலத்தில் இருந்து மனிதனுக்கு தகவல் தொடர்பு மிக முக்கியமாக இருந்தது. தபால் மூலம் கடிதம் அனுப்பும் சீரியமுறை மனிதனின் தகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக வந்தது. அதன்பிறகு, டெலிபோன், தந்தி என்று எத்தனையோ வந்தாலும், சாதாரண மனிதனுக்கு தகவல் தொடர்பில் ஆபத்பாந்தவனாக தபால்தான் விளங்கியது. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், முதல் தபால் தலை 1947–ம் ஆண்டு நவம்பர் 21–ந் தேதி வெளியிடப்பட்டது. இப்படி நீண்டநெடிய வரலாறு கொண்ட தபால் தலைகளில், தொடர்ந்து பல தலைவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் அவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள் இப்போது வெளியிடப்பட்டுகொண்டு வருகிறது. சிலருக்கு ஒருமுறை மட்டும் அச்சடிக்கும் சிறப்பு தபால் தலை வெளியிடப்படும். சிலருக்கு தொடர்ந்து அவர்கள் உருவம் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுவரும்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய தகவல் தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத், ‘‘இத்தகைய சிறப்பு தபால் தலையில் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உருவம் பொறித்த அஞ்சல் தலைகள் இனி நிறுத்தப்படும். தபால் தலைகள் பற்றி முடிவெடுப்பதற்காக ஒரு ஆலோசனை குழு இருக்கிறது. அதில் பலதரப்பட்ட நிபுணர்கள் இருப்பார்கள். அந்த குழுதான் இந்த முடிவை எடுத்துள்ளது’’ என்று கூறியுள்ளார். தபால்தலை மட்டுமல்லாமல், இன்லேன்ட் கடிதத்தில் இந்திராகாந்தியின் உருவத்திற்கு பதிலாக இனி யோகா படம் இருக்கப்போகிறதாம். இந்த ஆலோசனைக்குழு இனி 24 தலைவர்களின் உருவம் பொறித்த தபால் தலைகள்தான் வெளியிடப்படும் என்று பட்டியலிட்டுள்ளது. அதில், ஏற்கனவே இருந்த பட்டியலில் உள்ள மகாத்மா காந்தி, ஜவஹர்லால்நேரு, டாக்டர் அம்பேத்கர், அன்னை தெரசா படங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் என்று அறிவித்துள்ளது. மற்ற தலைவர்களை பொறுத்தமட்டில், இந்த புதுப்பட்டியலில் சர்தார் வல்லபாய்படேல், மவுலானா ஆசாத், சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் ராஜேந்திரபிரசாத், ஜெயபிரகாஷ் நாராயண், பகத்சிங், தீனதயாள் உபாத்யாயா, ஷியாமா பிரசாத் முகர்ஜி, ராம் மனோகர் லோகியா, விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், பாலகங்காதர திலகர், மகாராணா பிரசாத், சிவாஜி போன்றோர் படங்கள் இடம்பெற்றிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு குடும்பமே இடம்பெற வேண்டுமா? என்று கேட்கிறார்கள். நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் பிரதமர்களாக இருந்தவர்கள். என்னதான் கருத்துவேறுபாடு இருந்தாலும், அவர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும், இப்போதுள்ள தகவல் தொழில்நுட்பத்தில் யாரும் தபாலை பெரிதாக பயன்படுத்துவதில்லை. மிகக்குறைந்தபட்ச பயன்பாடுதான் இருக்கிறது. அப்படியிருக்க, இதை எடுப்பதில் என்ன வந்துவிடப்போகிறது. இருந்துவிட்டு போகட்டுமே என்று நினைப்பதே நல்லது. நாட்டில் தொழில்வளர்ச்சி போன்ற எத்தனையோ முன்னேற்றங்களில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசாங்கம், இதைப்போன்ற சிறிய விஷயங்களை ஒரு பொருட்டாக நினைக்கவேண்டாமே. மேலும், இந்த பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற பெரும்பங்காற்றிய தலைவர்களின் பெயர்கள் விட்டுப்போய்விட்டதே, அதையும் இந்த பட்டியலில் சேர்க்கலாமே என்ற உணர்வுதான் மக்களிடம் இருக்கிறது.

Monday, October 5, 2015

Four years into international services, Trichy airport still looks wistfully at Gulf..TOI

TRICHY: As Trichy International Airport enters the fourth year of its international operations from Sunday, the non-inclusion of the airport in the BASA (Bilateral Air Services Agreement) continues to prevent foreign carriers from starting operations from the city to the Gulf countries.

While passenger traffic is increasing year on year with more services towards south east Asian countries, people from southern states still demand direct carriers to the Gulf. The overseas passenger traffic is set to cross 13 lakh this year.

BASA is an agreement between two countries which allows international commercial air transport between their territories. A senior official of the aviation department at the airport said every year, the agreement is revised based on capacity addition and the requirement of carriers. Several prominent Gulf carriers asked for seat allocation for Trichy, but it was never awarded.

According to data obtained from the Trichy International Airport and the directorate general of civil aviation, passengers have been increasing over the years and overseas passengers contribute majorly to this growth. The airport receives at least 1,000 passengers every day.

Trichy Airport, which has a 70-year-old history, handles about five major international flights, most of them flying to south east Asian countries and only one of them flying to gulf countries directly. Though Indians have been travelling to Gulf countries for work in huge numbers for several decades, Trichy still has just one Indian carrier flying to Dubai with a full capacity load.

"A large chunk of the population in the southern districts migrate to the Gulf to work as labourers. Trichy remains one of their connecting points and on a daily basis, at least 350 of them travel to and from Trichy to several places in the Gulf," said Khaleel Bhaqvi, secretary of the Kuwait- Tamil Islamic Community in Kuwait.

He added that prior to the awarding of 'international' status to the Trichy airport, Indian Airlines used to operate flights to Kuwait and Sharjah. But this was later dropped citing several reasons. Several representations have been sent to the ministry of civil aviation to revive the services.

A senior official from the airport said, "The runway needs to be at least 10,000 feet long to allow wide-bodies aircraft to land at the airport. For now, the airport only takes in narrow-bodies aircraft. Concerns about the danger of short runways have increased after the Mangalore air crash of 2010," they said.

இயற்கை வளங்களைக் காப்போம்!


Dinamani

By சா. ஷேக் அப்துல் காதர்

First Published : 05 October 2015 01:23 AM IST


இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரைப் பருக முடியாத நிலை உள்ளது. நீர், நிலம் இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது. நீர் நிலைகள் அழிந்தும், வன வளங்கள் அருகியும் வருவதால் நாம் இதுபோன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
÷25 ஆண்டுகளில் நாம் அனுபவித்து வந்த இயற்கை வளங்கள், இன்று அருகி வருவதைக் காண்கிறோம். நீர், மணல், வனங்கள், வன உயிர்கள், புல்வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். எனவேதான், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் அவற்றை தெய்வமாக வழிபட்டனர்.
÷இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள், வறண்ட நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் அருகி வருகின்றன.
÷தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரவருணி போன்ற நதிகள் நாட்டின் உணவு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகப் பகுதிகளில் பாய்ந்து கடலில் கலக்கும் தாமிரவருணி நதி, ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளால் மாசுபட்டு வருகிறது. பெருமளவில் மணல் அள்ளப்பட்டதால், தாமிரவருணி நதியில் பாறைகள் மட்டுமே மிஞ்சி
இருக்கின்றன. மணல் வளம் குறைந்ததால் நீரின் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.
÷தாமிரவருணி நதியின் போக்கு மாறியதால் பல இடங்களில் ஓடையாக காட்சியளிக்கிறது. நீர் நிலைகளில் மணல் எடுத்தல், வனங்களில் மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாக ஆக்கிரமித்தல் போன்ற மனிதனின் நடவடிக்கையினால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து வருவது உண்மை.
÷மனித உயிரினம் மட்டும் பெருகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பிற விலங்கினங்கள், தாவர வகைகள் குறைந்தும், அரிதாகியும் வருகின்றன. பல உயிரினங்கள் அவை இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் முன்பே அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதை உணர முடிகிறது.
÷சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மொத்த வனங்களின் பரப்பளவு 70,000 லட்சம் ஹெக்டேர். இந்தியாவில் ஆண்டுதோறும் 15 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அதாவது 30 சதவீதம் இருக்க வேண்டிய வனங்கள், தற்போது 19 சதவீதமாக உள்ளன. தமிழகத்தில் 13 சதவீதக் காடுகள்தான் இருக்கின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி, சீதோஷ்ண நிலையைச் சமன் செய்கின்றன.
÷பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருவதற்கு தட்பவெப்ப நிலை மாற்றம்தான் காரணம். அதிகரித்து வரும் வெப்பத்தால் உயிர்த் தாவரங்கள் அழியும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
÷அதிகரித்து விட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, இயற்கைப் பாசன முறையிலிருந்து விலகிச் சென்றதன் விளைவு, நிலப் பயன்பாட்டின் மாற்றம், காற்றை மாசுபடுத்தும் எரிபொருள்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கலந்த புகை, பெருமளவில் வெளியேற்றப்படும் கழிவு நீர் போன்றவை புவி மண்டலத்தை வெப்பமடையச் செய்கின்றன.
புவி வெப்பம் அதிகரிப்பதால் அதிக வெள்ளப் பெருக்கு, அதேநிலையில் கடும் வறட்சியையும் தருகிறது. தட்பவெப்ப நிலையில் உருவான மாற்றத்தால், போதிய நீர்வளம் இன்றி நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்பைத் தருகிறது. மழை வளம் குறைந்து விட்டது.
நதிகள் இன்றைய சூழலில் கழிவுகளைத் தாங்கும் பள்ளமாக மாறி வருவதுதான் வேதனையானது. பெருநகரங்களில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளில்
இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நீர் நிலைகளில் கலப்பதால், பிராணவாயு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழியும் சூழல் உள்ளது.
÷நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் அந்நகரங்களை அடுத்துள்ள கிராமங்களில் பெருமளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், மரங்களில் கூடுகட்டி வாழும் பறவையினங்கள், நிழலில் ஒதுங்கும் விலங்கினங்கள் தங்க இடமின்றி அழிந்துபோகின்றன.
÷மரங்கள் குறைந்ததால் வெப்பம் அதிகரித்து உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதால் இன்று அளவுக்கு அதிகமான வெப்பத்தை உணருகிறோம்.
÷இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை தருகிறது.
இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று.
÷எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை அழிவதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, October 4, 2015

ஃபேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்

nanayam.vikatan.com

இளைஞர்களின் இப்போதைய மிக அவசரமான வேலை என்று பார்த்தால் ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். லைவ் சாட்டிங்கில் இவை இரண்டும் தான் இந்தியாவைப் பொறுத்தவரை முதன்மையானவை.


ஆனால் வீடியோ வசதிகளில் ஃபேஸ்புக்கை பின்னுக்கு தள்ளி வாட்ஸ் அப் முன்னிலை வகிக்கிறது. 2004இல் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் இளைஞர்களின் இந்திரபுரியாக இருந்து வந்தது. இதன் மூலம் தொலைந்தவர்களைக் கூட கண்டுபிடிக்கலாம் என்ற அளவில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனாலும் வீடியோக்களுக்கு அவ்வளவு எளிதான வாய்ப்புகள் இதில் இல்லை.


அதற்குப் பின் சமீபத்தில் சந்தைக்கு வந்த வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தனிநபர் சாட்டிங்கில் ஆரம்பித்து, இன்று குழு சாட்டிங் வரை வளர்ந்துள்ள வாட்ஸ் அப், வேகமான வீடியோ மற்றும் புகைப்பட பகிர்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.


இந்த வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ பகர்தலில் ஃபேஸ்புக்கை முந்தியது வாட்ஸ் அப்.

பெண் எனும் பகடைக்காய்: மகள்கள் என்றும் மகள்களே!



மகள்களுக்கான தினம் என்று கடந்த வாரம் ஒரு தினம் வந்து போனது. எனக்கு மகள்கள் யாருமில்லை என்று சொல்ல மாட்டேன். அன்புடன் அம்மா என்றழைக்கும் பல அருமை மகள்கள் ஊரெங்கும் உண்டு. அவர்களில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்ற செய்தி என் காதுக்கு வந்தாலே பதறித் துடித்து விடுவேன். என்னாலான உதவிகளையோ, தொலைவில் இருக்கிறார்கள் என்றால் அன்பு மொழிகளையோ ஆறுதல் வார்த்தைகளையோ ஆலோசனைகளையோ வழங்குவதுண்டு. பெரும்பாலானவர்களின் இயல்பும் இதுவாகத்தான் இருக்கும்; இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

கடந்த சில ஆண்டுகளில் பிரியா, கோகிலா, காவேரி, நந்தினி, ரோஸி, விமலா, வைதேகி, தற்போது ரமணி தேவி இவர்கள் அனைவரும் தங்கள் ரத்த உறவுகளாலேயே ரத்த விளாறாக்கப்பட்டுக் காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள். இந்த மகள்கள் அனைவரும் அவர்களின் பெற்றோருக்கு ஏன் எதிரியாகிப் போனார்கள்? அல்லது அப்படி அவர்களை குரூரத் தன்மையுடன் அந்நியமாக்கியது எது? சாதி என்ற கண்ணுக்குத் தெரியாத சனியன்தானே? பெற்று வளர்த்த குழந்தைகளைவிட அது மேலானதா?

“நாலு பேருக்கு மத்தியில் வாழும்போது மற்றவர்களை அனுசரித்துத்தான் வாழணும்; அதுவும் சுத்தி வர சாதி சனமா இருக்கும்போது அவங்களுக்கு மத்தியில மானம் மரியாதையோட வாழணும்” இப்படி ஒரு பெண் கூறுகிறார்.

தங்கள் பிள்ளைகளின் ஆசை, விருப்பு, கனவு, எதிர்காலம் அனைத்தையும்விட இவர்கள் சொல்லும் ‘மானமும் மரியாதை’யும் அதிக மதிப்புடையவையா? சரி, பிள்ளைகளைக் கொன்று புதைத்தாயிற்று. விஷயமும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கைது, தண்டனை, சிறைவாசம் இவையெல்லாம் மிக மிக மரியாதைக்குரியவையா என்று நமக்குள் எழும் கேள்வி, அவர்களுக்குள் எழாதா? இல்லை, அவர்களே குறிப்பிட்டதுபோல அந்த சாதி சனம் வந்து காப்பாற்றுவார்களா?

சமீப காலமாகப் பெற்றவர்களா லேயே பெண் பிள்ளைகள் கொல்லப்படும் குரூரம் மனதைப் பதற வைக்கிறது. சாதித் தூய்மை தங்கள் பெண் பிள்ளைகளின் வழியாகத்தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பது என்ன மாதிரியான சிந்தனை? தங்கள் வழியாக வந்தவர்கள் என்பதைத் தாண்டி, தங்களின் உடைமைப் பொருளாகப் பிள்ளைகளைப் பார்ப்பதுதானே இங்கு பிரச்சினை. தங்கள் விருப்பம் எதுவோ அதை அவர்களின் மீது திணிக்க முயல்வதும் அவர்கள் மீறும்போது அவர்களை இல்லாமலே ஆக்குவதும் இப்போது தொடர்கதையாகிவருவது மிகுந்த கவலைக்குரியது.

இந்தியா முழுவதுமே காதல் திருமணங்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணங்கள் ஐந்து சதவீதம்கூட நடைபெறுவதில்லை. வடக்கே மிகுந்த கட்டுப்பாடுகளும் கட்டுப்பெட்டித்தனமும் நிறைந்திருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் கிட்டத்தட்ட 98 சதவீதத் திருமணங்கள் ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில்கூட சாதி மறுப்புத் திருமணங்கள் ஐந்து சதவீதத்தைத் தாண்டவில்லை.

பிற்போக்காளர்களால் இதைக்கூடத் தாங்க முடியவில்லை. வட மாநிலங் களில் கிராமத்துக்குக் கிராமம் ‘காப்’ பஞ்சாயத்துகள் முளைத்தன. சாதி மீறும் பெண்களைத் தேடிப் பிடித்துக் கொண்டுவந்து கொலை செய்கிறார்கள். இதற்கு ‘கவுரவக் கொலை’ என்று பெயர் வேறு. இதில் முதலிடம் பிடிக்க உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்கள் போட்டி போடுகின்றன. இப்போது தமிழகமும் இதில் சேரத் துடிக்கிறது போலும்!

கிராமங்களிலிருந்து கல்வியின் பொருட்டு வெளியேறும் மிகக் குறைந்த என்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே உடன் படிப்பவர்களுடனோ அல்லது பணியாற்றுபவர்களுடனோ காதல் வசப்படும் நிலை. கல்வி, நவீன சிந்தனைகள் உருவானதன் விளைவாகவே பெண் தனது இணையைத் தானே தேடும் முயற்சியில் இறங்கினாள். அவர்களிலும் திருமணம் என்ற பந்தத்தை நோக்கி நகர்பவர்கள் மிக மிகக் குறைவு. அதிலும் மாற்று சாதி நபர்களைக் காதலிப்பவர்கள் எண்ணிக்கை இன்னும் குறைவு. இந்தக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களாலேயே தங்கள் சாதித்தூய்மை கெட்டுப்போய் விட்டதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.

தடியெடுத்தவன் தண்டல்காரனா?

இது காலங்காலமாக நீடிப்பதுதான். நமது நாட்டார் தெய்வங்களில் பலர் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள். சாதித் தூய்மையைக் காப்பாற்றுவதற்காகக் கொன்றுவிட்டு பின் அவர்களைத் தெய்வமாக்கிவிடுகிறார்கள். இப்போதும், தங்கள் வீம்புக்கும் வெறுப்புக்கும் கொல்வதும் பின் தெய்வமாக்குவதும் தொடரலாமா? தமது ஆணவத்துக்காகக் கொன்றுவிட்டு அவளைத் தெய்வமாக்கினால், அவள் தெய்வமாகி தங்கள் சந்ததிகளைக் காப்பாற்றுவாள் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

தற்போது சம்பந்தப்பட்ட ஆண் தாழ்த்தப்பட்ட சாதி என்றால், அவனைக் கொன்று போடுவதும் நடைமுறையாக உள்ளது. தங்கள் மகள்களையே கொன்று புதைக்கும் கூட்டம், அன்னியர் வீட்டுப் பிள்ளைகளைக் கொல்வதற்கு யாரைக் கேட்க வேண்டும்?

மகளும் மனிதப் பிறவியே

பெண் சக்தி, தெய்வம் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் அப்படியெல்லாம் சொல்ல வரவில்லை. அவள் ரத்தமும் சதையும் உள்ள ஓர் உயிர். ஆண்களுக்குப் படைக்கப்பட்ட மூளைதான் அவளுக்கும் படைக்கப்பட்டுள்ளது. அதனால் சிந்திக்கும் திறனும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் திறனும் அவளுக்கும் உண்டு என்பதைப் பெற்றோர் புரிந்துகொண்டாலே போதும். மகள் இல்லாமல் வாழும் வாழ்க்கையை, மகள்களின் மனம் நிறைந்த சிரிப்பைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் சக மனிதர்களும் அவ்வாறானவர்களே என்று எண்ணினால் கோழியைப் போல அவர்களின் கழுத்தை அறுக்கும் எண்ணம் தோன்றாது.

கொசுறு: காட்டுமன்னார்கோயிலை அடுத்த கிராமம் ஒன்றில், காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்தாள் என்பதற்காக, அரிவாளை எடுத்து தன் பேத்தி ரமணி தேவியின் கழுத்தை வெட்டித் தள்ளி விட்டார் அவளின் ‘பாசக்கார தாத்தா’.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com


http://tamil.thehindu.com/society/women/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/article7720956.ece

ரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்லிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி!

ரூ.20 லட்சம் மோசடி: 'ஃப்லிப்கார்ட்' நிறுவனத்தை விழி பிதுங்க வைத்த வீராச்சாமி!

ஹை
தராபாத்திலுள்ள வனஸ்தலிபுரம்  காவல்துறையினர் விசாரித்து வரும் புகார் சற்று நூதனமானது. இந்த வழக்கு இணையவழி வர்த்தகம் செய்யும் நிறுவனமான ’ஃப்லிப்கார்ட்’, தனது வாடிக்கையாளர் ஒருவரின் மீது  அளித்ததாகும். ஹைதராபத்தைச் சேர்ந்த, 32 வயது மதிக்கத்தக்க, வீராச்சாமி ரெட்டி என்பவரே இந்தப் புகாரில் குற்றம் சாட்டபட்டவர்.
இவர் ‘ஃப்லிப்கார்ட்’ இணையதளத்தின் மூலமாகப் பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார். வாங்கிய பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் அவற்றைத் திருப்பி அளித்துவிட்டு அதற்கான  தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி ‘ஃப்லிப்கார்ட்’டில் உள்ளது. இந்த வசதியின் மூலம் தான் வாங்கிய பொருட்களை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, தொகையைத் திருப்பிச் செலுத்திவிடுமாறு ‘ஃப்லிப்கார்ட்’ டிடிம் விண்ணப்பித்திருக்கிறார்   வீராச்சாமி. நிறுவனமும் அவ்வாறேசெய்தது.

அப்படி திருப்பி அளிக்கப்பட்ட பொருட்களைச் சோதித்த போது தான் புரிந்தது, அவை எல்லாம் போலியானவை என்று. இதையே வழக்கமாக வைத்திருந்திருந்த வீராச்சாமி, ஒரு பொருளை இணையதளத்தில் ‘ஆர்டர்’ செய்வது. அது வீட்டிற்கு வந்தவுடன் அதைப் பிரித்து, அதற்கு பதிலாகப் போலியான ஒரு பொருளை உள்ளே வைத்து அட்டைப்பெட்டியை மூடி விடுவது. மீண்டும் ‘ஃப்லிப்கார்ட்’ டைத் தொடர்பு கொண்டு பொருளைத் திரும்பப் பெற்றுக் கொண்டுத் தொகையைச் செலுத்த விண்ணப்பிப்பது என வீராச்சாமி செம பிசியாக இருந்தார். 

இப்படி போலி மெயில்  கணக்குகள்,  போலி விலாசங்கள், போலி வங்கிக் கணக்குகள் என, 200 க்கும் மேற்பட்ட இத்தகைய பரிவர்த்தனைகளில், சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கு மேல் வீராச்சாமி பிளிப்கார்ட் நிறுவனத்தை ஏமாற்றியிருக்கிறார். நாளடைவில், இந்தப் பின்னணியை கண்டறிந்த அந்த நிறுவனம் காவல்துறையிடம் புகார் அளித்தது.

எத்தனைத் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மனித மனம் தவறான நோக்குடனேயே அதைக் கையாள்கிறது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பதற்கு வீராச்சாமியும் ஒரு உதாரணம்.
- ச.அருண்

http://www.vikatan.com/news/article.php?aid=53246

Saturday, October 3, 2015

புலி'க்கு வரிச்சலுகை மறுப்பு ஏன்?- அதிகாரிகள் கூறும் காரணங்கள்

Return to frontpage

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'புலி' படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு ஏன் என்பதற்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'புலி'. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்பது வெளியாகாமல் இருந்தது.

'புலி' படத்துக்கான வரிச்சலுகைக்கான காட்சியை சி.பழனி, ம.சி.தியாகராஜன், முனைவர் கா.மு.சேகர், டி.ஐ.மகாராஜன், ஏ.ஐ.ராகவன் மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். ஏன் வரிச்சலுகை அளிக்கவில்லை என்பதற்காக அவர்கள் கூறியிருக்கும் காரணங்கள்.

* திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளன.

* படத்தின் பாடல் காட்சியில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன.

* படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

* மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும் வெட்டிக் கொல்லுவது ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளது.

* திரைப்படம் முழுக்க வன்முறை அதிகரித்துள்ளது. ஆரம்பித்திலே இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது குழந்தை கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. மேலும், படம் முழுவதும் மூட நம்பிக்கைக்கு உயிர் ஊட்ட முளைத்திருப்பதால் வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.

இவ்வாறு வரிச்சலுகை அதிகாரிகள் அனைவருமே ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகளை மேற்கோள்காட்டி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Passenger lights up on flight from Muscat...times of india

MUMBAI: When seated in economy class, there are many things a passenger does to get a tad comfortable. Some twist and turn in their cramped seats. A passenger onboard a flight from the Middle East to India had a better idea. He coolly fished out a pack of cigarettes and, to the surprise of his co-passengers, out came a lighter. But just after the twain had met, onlookers reported him to the cabin crew and his plans to enjoy a cigarette in the sky went up in smoke.

It is not possible to fly on board a passenger aircraft without encountering a good number of no-smoking signs, apart from literature on the ban in lighting up. All of that seems to have escaped the notice of the passenger on Jet Airways Muscat-Mumbai flight 9W591 on Tuesday. "The said passenger, a Bangladeshi national, was in his seat when he casually took out a cigarette and a lighter and had just lighted it when cabin crew, who were alerted by co-passengers, had it extinguished," said an airline official.

The crew did not have any problems dealing with the passenger. "They warned the passenger, who by then realised that smoking was banned in an aircraft," the official added. But the passenger was not unruly and kept apologising through the flight.

A Jet Airways spokesperson confirmed the incident. "He tried to light a cigarette during the flight. The cabin crew took prompt action in line with Jet Airways safety regulations and prevented the passenger from smoking. On landing in Mumbai the passenger was met by security personnel for further action," said the airline response. It was learnt that the passenger was let off after a warning.

But the question that remains is how did the passenger manage to sneak in a lighter on board the aircraft. "It seems to be a lapse on part of security personnel at Bahrain airport. A lighter is one of the items banned in flights. It should have been confiscated at the airport itself," said an aviation security official.

In India, smoking in aircraft was banned sometime in the 1990s. Before that, there were smoking sections in aircraft flown in India and abroad. Smoking was identified as a flight safety hazard after it contributed to inflight fires and accidents (see box).

NEWS TODAY 20.09.2024