Wednesday, December 23, 2015

Monkey drives bus, rams it into 2 other vehicles

Monkey drives bus, rams it into 2 other vehicles

TOI

BREILLY: The simian menace in the city took a turn for the absurd on Monday afternoon, when a monkey got inside a parked bus, switched on the engine and took off in the second gear. The driver finally managed to regain control but not before the vehicle had hit two other buses parked nearby.

The bizarrely comic sequence of events began when the conductor of an Uttar Pradesh State Road Transport Corporation (UPSRTC) bus from Pilibhit left the vehicle at the old roadways station to look for passengers. With half an hour to go for departure, the driver decided to take a quick nap.


While the driver reclined on the last row, a monkey suddenly appeared and climbed inside the driver's cabin and managed to start the engine with the ignition key that was still in its slot. The driver, waking up, rushed towards the cabin and tried to chase the animal away. However, the panicked animal accidentally shifted the gear to the second level before jumping out of the bus.



Passengers seeing the pilotless vehicle headed their way ran helter-skelter, while the duty staff at the control room nearby were unable to find the reason behind the disturbance, according to UPSRTC regional manager SK Sharma. "The driver managed to regain control of the bus but not before it hit two other parked buses," said Sharma.


"Monkeys have become a regular menace at bus stations and workshops, where they often fiddle with vehicles undergoing repair. They have also damaged CCTV cameras at stations. Three years back we had taken the help of municipal authorities to get rid of them but they have returned," Sharma added.


The manager stated that UPSRTC is holding talks with municipal authorities to requisition the services of an agency to catch hold of the monkeys from around the bus station and transfer them elsewhere.

HC relief for six deemed universities

HC relief for six deemed universities

  • SPECIAL CORRESPONDENT
COMMENT   ·   PRINT   ·   T  T  

The High Court of Karnataka on Tuesday permitted six deemed-to-be universities to issue calendar of events for admission and to conduct independent entrance tests to select candidates for admission to professional courses offered by them. A vacation Division Bench comprising Justice Anand Byrareddy and Justice P.S. Dinesh Kumar passed the interim order on petitions filed by Yenepoya University, Mangaluru, and five other deemed-to-be universities questioning some provisions of the Karnataka Professional Educational institution (Regulations of admission and Determination of Fee) (Amendment) Act, 2015.
The provisions of the new Act treats the deemed-to-be universities under the University Grants Commission Act like any private professional colleges, prescribes methods for selection and admissions, and imposes condition that 25 per cent of their total intake should be reserved for the government quota.
A provision in the new Act had prevented them from holding independent entrance tests.
The petitioner-universities have contended that these provisions in the Act are not only unconstitutional, but also contrary to the verdicts of the apex court.
High Court
grants permission to issue calendar
of events for admission as well

Tuesday, December 22, 2015

தைராய்டு நோய் சந்தேகம் களைய

Return to frontpage

தேனி. மு. சுப்பிரமணி

தைராய்டு (Thyroid) எனப்படும் கேடயச் சுரப்பி சார்ந்து ஏற்படும் நோய்கள், தைராய்டு நோய்கள் எனப்படுகின்றன. கனடாவிலிருந்து செயல்படும் கனடா தைராய்டு அறக்கட்டளை (Thyroid Foundation of Canada) என்ற அமைப்பின் தளமும், பிரிட்டன் தைராய்டு அமைப்பின் தளமும் தைராய்டு குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கின்றன.

கனடா தைராய்டு அறக்கட்டளையின் இணையதளத்தில் தைராய்டு நோய் குறித்த உண்மைகள் (Thyroid Disease Facts), தைராய்டு செயல்பாடு (Thyroid Function), நோய் கண்டறிதல் (Clinical Diagnosis), தைராய்டு சுரப்புக் குறைவு (Hypothyroidism), தைராய்டு முடிச்சுகள் (Thyroid Nodules), தைராய்டு அழற்சி (Thyroiditis), அதி தைராய்டியம் (Hyperthyroidism), கண் நோய் (Eye Disease), தைராய்டு நோய், தாய்மையடைதலும் கருவளமும் (Thyroid Disease, Pregnancy & Fertility), குழந்தைப்பருவத் தைராய்டு நோய்கள் (Thyroid Disease in Childhood), தைராய்டு நோய் அறுவைசிகிச்சைகள் (Surgical Treatment of Thyroid Disease), தைராய்டு புற்றுநோய் (Thyroid Cancer) எனும் முதன்மைத் தலைப்புகளில் தைராய்டு நோய் குறித்த தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.

இவை தவிர, தைராய்டு நோய் குறித்த பிற வெளியீடுகள் எனும் தலைப்பில் தைராய்டு நோயுடன் தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த இணையதள முகவரி: http://www.thyroid.ca/

இதேபோலப் பிரிட்டன் தைராய்டு அமைப்பின் இணையதளத்தில் உட்சுரப்புத் தொகுதி (Endocrine System), பரிசோதனைகள் (Tests), அறிகுறிகள் (Symptoms), தைராய்டு சுரப்புக் குறைவு (Hypothyroidism), அதி தைராய்டியம் (Hyperthyroidism), தைராய்டு புற்றுநோய் (Thyroid Cancer), சிகிச்சைகள் (Treatments), உணவுக் கட்டுப்பாடும் ஊட்டச்சத்தும் (Diet and Nutrition), சிறுநீரகச் சுரப்பி பிரச்சினைகள் (Adrenal Problems), தொடர்புடைய உடல்நலக் குறைபாடுகள் (Associated Illnesses), சூழ்நிலை சார்ந்தவை (Environmental), குழந்தைகள் (Children) போன்ற முதன்மைத் தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. தைராய்டு நோய் குறித்த செய்திகள், புத்தகங்கள், பிற இணையதள இணைப்புகள் போன்ற தலைப்புகளிலும் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.

இதன் இணையதள முகவரி: http://www.thyroid-disease.org.uk/

பரிசோதனை ரகசியங்கள் 13 - எலிக் காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?.... டாக்டர் கு. கணேசன்

Return to frontpage

மழை, வெள்ளக் காலத்தில் ஏற்படுகிற தொற்றுநோய்களுள் எலிக்காய்ச்சல் மிக முக்கிய மானது. ‘லெப்டோஸ்பைரா' எனும் பாக்டீரியா கிருமிகள் நம்மைப் பாதிப்பதால் இது ஏற்படுகிறது. இந்தக் கிருமிகள் எலி, பெருச்சாளி, ஆடு, மாடு, பன்றி, பூனை போன்ற பல்வேறு விலங்குகளின் உடலில் வசிக்கும். இந்த விலங்குகளின் சிறுநீர் வழியாகக் கிருமிகள் வெளியேறும்.

மழைக் காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீடு, வீட்டைச் சுற்றி வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர் கழிவும் அதில் கலக்கும். அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா' கிருமிகள் இருந்தால் ‘எலிக்காய்ச்சல்’ என்று அழைக்கப்படுகிற ‘லெப்டோபைரோசிஸ்' (Leptospirosis) நோய் வரும்.

நோய் வரும் வழி

பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைவதுதான் அதிகம். எனவே பாதங்களில் விரிசல், பித்தவெடிப்பு, புண், சேற்றுப்புண் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருகிற வாய்ப்பு அதிகம். மாட்டுத் தொழுவங்களில் வேலை பார்க்கும்போது, ஆடு, மாடு மேய்ப்பிடங்களில் காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது விலங்குகளின் சிறுநீர்க் கழிவு மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து நோய் உண்டாக அதிக வாய்ப்பு உண்டு.

கிராமப்புறங்களில் விலங்குகளைக் குளிப்பாட்டும் அதே குளங்களில்தான் ஊர் மக்களும் குளிப்பார்கள். அப்போது அவர்களின் வாய், கண், மூக்கு வழியாகவும் இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து, எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்

இந்த நோயின் தொடக்கத்தில் சாதாரணத் தடுமக்காய்ச்சல் போலத்தான் அறிகுறிகள் காணப்படும். கடுமையான காய்ச்சல், தாங்க முடியாதத் தலைவலி, தசைவலி, உடல்வலி, கண்கள் சிவப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நோயின் முதல்கட்ட அறிகுறிகள். இவற்றில் ‘சிவந்த கண்கள்’ இந்த நோயை இனம் காட்டும் முக்கிய அறிகுறி. இந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை பெற்றுவிட்டால் நோய் உடனே கட்டுப்படும். தவறினால், நோய் தீவிரமாகும்.

குறிப்பாகக் கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை எனப் பல்வேறு முக்கிய உறுப்புகளை இந்த நோய் தாக்கும். இதன் விளைவாக நோயின் இரண்டாம் கட்ட அறிகுறிகள் தோன்றும். மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இந்தக் கட்டத்தின் முக்கிய அறிகுறிகள். இப்போதும் இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் இதயம் மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கு ஆபத்தைத் தரும்.

என்ன பரிசோதனை?

1. ரத்த அணுக்கள் பரிசோதனை (Complete Blood Count):

# காய்ச்சல் ஏற்பட்ட ஒரு வாரத்துக்குள் இந்த நோய்க்கான ரத்தப் பரிசோதனையைச் செய்தால், முடிவுகள் 90 சதவீதம் சரியாக இருக்கும்.

# வழக்கமான ரத்த அணுக்கள் பரிசோதனை செய்யப்படும்.

# ரத்த வெள்ளையணுக்களின் (Leucocytes) இயல்பான அளவு 4,000 11,000 / டெசி லிட்டர். நியூட்ரோபில் அணுக்களின் இயல்பான அளவு 60 - 70%. எலிக்காய்ச்சல் வந்தவருக்கு இந்த இரண்டு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

# தட்டணுக்களின் (Platelets) அளவு மிகவும் குறைந்திருக்கும்.

# இ.எஸ்.ஆர். (ESR) அளவு அதிகமாக இருக்கும்.

2. ‘இணையக அணுக்கள் பரிசோதனை’ (Microscopic Agglutination Test MAT):

# எலிக்காய்ச்சலை உறுதி செய்ய, இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் பயன்படுத்துகிற பரிசோதனை இதுதான்.

# எலிக்காய்ச்சல் வந்தவருக்கு இந்தக் கிருமிகளுக்கான எதிர் அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் உற்பத்தியாகும். இதைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை இது.

# இந்தப் பரிசோதனையில் இணையணுக்கள் விகிதம் 1 : 200 என்ற அளவுக்கும் 1 : 800 எனும் அளவுக்கும் இடைப்பட்டதாகவோ, அதிகமாகவோ இருந்தால் எலிக்காய்ச்சல் இருக்கிறது என்று அர்த்தம்.

3. ரத்த நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை (Blood Culture Test).

# காய்ச்சல் ஏற்பட்ட பத்து நாட்களுக்குள் இதைச் செய்து கொண்டால் முடிவு சரியாக இருக்கும்.

# ரத்தத்தை ஒரு வளர் ஊடகத்தில் வைத்துக் கிருமிகள் வளர்கின்றனவா எனப் பார்க்கும் பரிசோதனை இது.

# எலிக்காய்ச்சலை உறுதி செய்யவும் சரியான சிகிச்சையைத் தரவும் இது உதவுகிறது.

# ஆனால், இந்த முடிவுகள் தெரியச் சில வாரங்கள் ஆகும். அதற்குள் நோய் முற்றிவிடவும் வாய்ப்பு உண்டு. எனவேதான், இதை இரண்டாம் நிலைப் பரிசோதனையாக வைத்துள்ளனர்.

4. சிறுநீர்ப் பரிசோதனை

# நோயாளியின் சிறுநீரில் எலிக்காய்ச்சல் கிருமிகள் உள்ளனவா எனத் தெரிந்துகொள்ள உதவும் பரிசோதனை இது.

# நோய் தொடங்கிய எட்டு நாட்களுக்குப் பிறகுதான் இக்கிருமிகள் சிறுநீரில் வெளியேறும் என்பதால், அந்தக் காலகட்டத்தில் இதைச் செய்தால்தான் முடிவு சரியாக இருக்கும்.

# அதேநேரத்தில் ஒருமுறை பாசிட்டிவ் என இதன் முடிவு வந்துவிட்டால், பல மாதங்களுக்கு இது பாசிட்டிவ் என்றுதான் காண்பிக்கும். எனவே, இந்த இடைப்பட்ட காலத்தில் மீண்டும் இதை மேற்கொள்கிறவர்கள் நோய் இன்னும் இருப்பதாகத் தவறாக எண்ணிக்கொள்ள வாய்ப்புண்டு.

# இந்த விஷயத்தில் மருத்துவரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5. பி.சி.ஆர். (PCR) பரிசோதனை

# ரத்தத்தில் எலிக் காய்ச்சல் கிருமிகளின் டி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து நோயை நிர்ணயிக்கும் பரிசோதனை இது.

# 99 சதவீதம் மிகச் சரியாக நோயைக் கணிக்க உதவுகிறது.

# மிக நுண்ணிய தொழில்நுட்பம் கொண்டது.

# நோய் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் நோயை உறுதி செய்துவிடும். ஆனால், இதன் செலவு அதிகம்.

6. எலிசா ஐஜி.எம். (ELISA IgM) பரிசோதனை

# ரத்தத்தில் எலிக்காய்ச்சல் கிருமிகளுக்கான ஐஜி.எம். எதிர் அணுக்களைக் கண்டறியும் பரிசோதனை இது.

# அதிநவீனத் தொழில்நுட்பம் உடையது.

# காய்ச்சல் ஏற்பட்ட ஐந்தாம் நாளில், இதைச் செய்துகொள்ள வேண்டும்.

# பணச் செலவு அதிகம்.

# நோயை 90 சதவீதம் உறுதிப்படுத்துகிறது.

7. ‘கல்லீரல் செயல்திறன் பரிசோதனைகள்’ (Liver Function Tests LFT) :

# எலிக்காய்ச்சலால் கல்லீரல் பாதிப்பை உறுதிப்படுத்தும் பரிசோதனை இது.

# கல்லீரல் பாதிக்கப்படும்போது மஞ்சள் காமாலை ஏற்படும். இதை உறுதி செய்ய உதவும் முக்கியமான ரத்தப் பரிசோதனை இது.

# எலிக்காய்ச்சல் வந்தவருக்கு ரத்தப் பிலிருபின் அளவு அதிகமாக இருக்கும்.

# இத்தோடு ஏ.எல்.பி. (ALP), ஏ.எஸ்.டி. (AST), ஏ.எல்.டி. (ALT) ஜி.ஜி.டி. (GGT) பரிசோதனைகள் செய்யப்படும்.

# ரத்தத்தில் கல்லீரல் சுரக்கிற என்சைம்களை அளக்கும் பரிசோதனை இது.

# இந்த அளவுகள் அனைத்தும் அதிக அளவில் இருக்கும்.

8. மூளைத் தண்டுவட நீர்ப் பரிசோதனை (CSF Test).

# எலிக்காய்ச்சல் மூளையைப் பாதித்திருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள உதவும் பரிசோதனை இது.

# நோயாளியின் முதுகுத் தண்டுவடத்திலிருந்து, மூளைத்தண்டுவட திரவத்தை ஊசி மூலம் உறிஞ்சி எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

# எலிக்காய்ச்சல் மூளையைப் பாதித்திருந்தால் இந்தப் பரிசோதனையின் முடிவில் புரதம் அதிகமாக இருக்கும். குளுக்கோஸ் அளவு இயல்பாக இருக்கும்.

இவை தவிரச் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளனவா என அறியவும் பரிசோதனைகள் தேவைப்படும்.

பதின் பருவம் புதிர் பருவமா? 13 - சாய்த்துவிடும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் .......... டாக்டர் ஆ. காட்சன்

Return to frontpage

அவன்/அவள் ரொம்ப தைரியசாலிப்பா. இதுக்கெல்லாம் கலங்கிட மாட்டாங்க. ஒண்ணும் தப்பா நடக்காது. பார்த்துக்கலாம்’ என்று யாரைப் பற்றியும் தவறாகப் புரிதலை வைத்துக்கொள்ளக் கூடாது. இக்கட்டான சூழ்நிலைகளில் தைரியமானவர்கள்கூடச் சில நேரம் தடுமாறக்கூடும்.

தற்கொலை முயற்சிக்குப் பல நோக்கங்கள் உண்டு. பெரும்பாலும் மனதின் குழப்ப நிலையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும், உலகப் பிரச்சினைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கும். சில நேரம் தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ளவும், வீட்டிலுள்ளவர்களை மிரட்டவும் இதை ஒரு ஆயுதமாக விடலைப் பருவத்தினர் பயன்படுத்துவதுண்டு. சிலவேளைகளில் இந்த மிரட்டல் முயற்சிகள் உயிருக்கு ஆபத்தாகவும் முடிவடையும்.

எதிர்பாலினத்தின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவதற்கு, தற்கொலை முயற்சியை ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்திப் பார்ப்பது உண்டு. சிலர் தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே, ‘எதற்கும் ஒரு தற்கொலை முயற்சியைச் செய்துவிட்டால் பாதுகாப்பு’ என நினைத்து விபரீத முயற்சிகளில் இறங்குவார்கள்.

தற்கொலை ஒரு தியாகமா?

எமில் டர்ஹெய்ம் என்ற சமூக உளவியலாளர் தற்கொலைகளைப் பல வகைகளாகப் பிரித்துள்ளார். அதில் ஒருவகை சமுதாய நலனுக்காகவோ, மற்றவர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்திலோகூட சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குத் துணிவது. சமீபத்தில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவன் அப்படிப்பட்டவன். தான் தற்கொலைக்கு முயற்சித்ததற்கு, அவன் சொன்ன காரணம் வித்தியாசமானது. பொதுவாகவே அதிகப்படியான சட்டதிட்டங்களைப் பேசும் அவன், வகுப்பில் ஆசிரியர் மொபைல் போனில் பேசியதைத் தட்டிக்கேட்டுள்ளான். பின்பு, இந்தக் காரணத்தை எழுதி வைத்துவிட்டுத் தான் தற்கொலை செய்துகொண்டால், தனது சாவுக்குப் பின்னாலாவது இதுபோன்ற விதிமீறல்கள் ஏற்படாது என்பதுதான் அவனுடைய எண்ணம்.

இதுபோலப் பல இடங்களில் விவாதங்களில் ஈடுபடுவது அவனுக்கு வாடிக்கை. விசாரித்ததில் மனநலப் பாதிப்புகளுக்கான பல அறிகுறிகள் அவனிடம் இருந்தன. இன்னொரு சிறுவன் தான் செத்தாலாவது தனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்துவார் என்ற நம்பிக்கையில் விஷம் குடித்துள்ளான். இதுபோன்ற விபரீத முயற்சிகள் வளர்இளம் பருவத்தில் சில நேரம் வரலாம். ஆனால், இந்த முயற்சிகளால் எந்த மாற்றமும் ஏற்படு வதில்லை என்பதுதான் உண்மை.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

தற்கொலை எண்ணங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். ‘இவ்வளவு தைரியமானவனா இப்படிச் செய்தான்’ என்று சிலரைப் பற்றி கூறுவார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை எப்படிப்பட்டவரையும் சில வேளைகளில் சாய்த்துவிடும். ஆனால், வளர்இளம் பருவத்தினரில் சிலர் எப்போதும் ஆபத்தின் வட்டத்துக்குள்ளேயே இருப்பார்கள். படிப்பில் மந்தம், தங்கள் உடலமைப்பில் திருப்தியின்மை, தேர்வுகளில் அடிக்கடி தோல்வி, போதைப்பொருட்கள் பயன்பாடு, பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், சின்ன வயதில் தாயை இழந்தவர்கள், குழந்தைப் பருவத்தில் உடல், பாலியல்ரீதியிலான கொடுமைகளுக்கு ஆளானவர்கள் எளிதில் தற்கொலை எண்ணங்களுக்கு ஆட்பட வாய்ப்புண்டு.

ஏற்கெனவே குடும்ப நபர்கள் யாரேனும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பருவத்தினர் அதிகப் பாதிப்புக்குள்ளாகலாம். ஏனென்றால், தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் 5 - ஹைடிராக்சி டிரிப்டமைன் (5-HT ) என்ற ரசாயனத்தைத் தீர்மானிக்கும் மரபணுக் கள் முக்கியப் பங்கு வகிப்பதுடன், பரம்பரையாகப் பாதிக்கும் நிலையும் உள்ளது. ஒருவர் ஒருமுறை தற்கொலை மிரட்டலோ அல்லது தற்கொலை எண்ணத்தையோ வெளிப்படுத்தினால், அவர்கள் எப்போதுமே ஆபத்துக்கு உரியவர்கள்தான். அவர்களுடைய செயல்பாடுகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

குணரீதியான மாற்றங்கள்

வளர்இளம் பருவத்தினர் சிலருக்கு வேலையே அவ்வப்போதுத் தற்கொலை மிரட்டல்களிலும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாகத்தான் இருக்கும்.

குறிப்பிட்ட குணத்தோடு ஒன்றிப்போன அவர்களிடம், வேறு பல மாற்றங்களும் காணப்படும். யாரிடமும் ஒத்துப்போகாமல் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது, கையில் கிடைத்ததைத் தூக்கி எறிந்துவிடுவது, எளிதில் உறவுகளை முறித்துக்கொள்வது, தனக்கு மட்டுமே வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளும் இருக்கின்றன என்ற மனோபாவம், காதல் வலைகளில் மாறிமாறிச் சிக்கிக்கொள்வது, இளம் வயதில் பாலுறவு மற்றும் போதைப் பழக்கம் போன்றவற்றுடன் அடிக்கடி தங்கள் கையைப் பிளேடால் கிழித்துக்கொள்வது, சூடுபோட்டுக்கொள்வது, தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது ஆகிய குணநல மாற்றங்கள் ஒன்றுசேர்ந்து காணப்படலாம். இதற்குப் பார்டர்லைன் பெர்சனாலிட்டி குறைபாடு (Borderline Personality Disorder ) என்று பெயர். இவர்களுக்கு மாத்திரைகளோடு மனநல ஆலோசனையும் கட்டாயம் தேவை.

எந்த வகை ஆபத்தானது?

விடலைப் பருவத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளத் தேர்ந்தெடுக்கும் முறைகளில் இருக்கும் பல்வேறு காரணிகளை ஆராய்ந்தால், அவர் செய்த முயற்சி எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கணிக்கலாம். யாரும் இல்லாத, காப்பாற்ற வழியில்லாத இடங்களைத் தேர்வு செய்வது, ரயில் முன்னால் அல்லது மாடியிலிருந்து விழுவது, கடிதம் எழுதிவைப்பது, விஷம் அருந்தியதைக் கடைசிவரைக்கும் யாரிடமும் சொல்லாமல் இருப்பது போன்றவை தீவிரமான தற்கொலை எண்ணங்களின் வெளிப்பாடு.

ஒரு மாணவன் மருந்துக் கடையில் தூக்க மாத்திரை கேட்டிருக்கிறான். அவர்கள் இரண்டு மாத்திரைக்கு மேல் கொடுக்க மறுத்ததால், பல கடைகளில் இரண்டிரண்டு மாத்திரைகளாக, பல நாட்களாகச் சேகரித்துவைத்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இத்தகைய நபர்கள் கண்டிப்பாகத் தீவிர மனநல ஆலோசனைகளுக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இவர்கள் மனநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்க வாய்ப்பு அதிகம்.

(அடுத்த முறை: நிஜமாகக் கொல்லும் மூடநம்பிக்கைகள்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

Monday, December 21, 2015

பெண் எனும் பகடைக்காய்: அடைமழைக் காலத்தின் தவளைக் கச்சேரி .... பா. ஜீவசுந்தரி

Return to frontpage

பெண் என்பவள் புனிதம் மிக்கவள், தெய்வமாகப் போற்றப்பட வேண்டியவள், பொறுமையில் பூமா தேவி’ - இப்படியான வசனங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துவிட்டது. பெண்கள் இங்கே இரண்டு விதமாகக் கையாளப்படுகிறார்கள். ஒன்று தெய்வ நிலைக்குப் பெண்ணை ஏற்றி மிக உயரத்தில் தூக்கி வைத்துத் தொழும் ரகம். இரண்டு அதற்கு முற்றிலும் மாறாக, எந்த அளவுக்குக் கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குக் கேவலப்படுத்தும் ரகம்.

அருவருக்கத்தக்க வார்த்தைகளால் ஏசுவதும், அடிப்பதும், உதைப்பதும், அநாகரிகமாக பெண்களிடம் நடந்துகொள்வதும், கேவலமான முறையில் நடத்துவதும் இந்த ரகத்தில் வரும். இங்கு பெண் என்பவள் ஒரு சக உயிரியாக, தனக்குச் சமமானவளாகப் பார்க்கப்படுவதில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்டு ஒரு சக உயிராக ஏற்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மனித சமுதாயம் பல நூறு ஆண்டுகளைக் கடந்து, பரிணாம வளர்ச்சி பெற்றதாகச் சொல்லிக்கொண்டாலும், சில நேரங்களில் காட்டுமிராண்டி நிலையை விட்டு இன்னமும் தாண்டவில்லையோ என்ற சந்தேகமே வருகிறது. அதில் ஒன்றுதான் சமீபத்திய சிம்பு - அனிருத் என்ற இரு விடலைப் பையன்களின் பாட்டுக் கச்சேரி. அடைமழைக் காலத்தில் எழும் தவளைகளின் வாத்தியக் கச்சேரிகளைப் போல இந்தப் பெருமழைக்காலத்தில் விளைந்திருக்கிறது.

இருக்கும் வேலைகளையெல்லாம் விட்டு, இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், கண்டனம் எழுப்பவும் எனச் சென்னையின் மழை வெள்ளத் துயரத்தையே மடை மாற்றியிருக்கிறது இந்தப் பாட்டு. இசையும் நல்கவிதையும் இணைந்தால் அது காதுக்கும் மனதுக்கும் விருந்து. ஆனால், கேட்கவே நாராசமாய் உள்ல இந்தப் பாட்டின் மூலம் இந்த இளைஞர்கள் இருவரும் என்ன சொல்ல வருகிறார்கள் என்ற கேள்வியும் ஆத்திரமும் எழுகின்றன.

‘இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ என்பது வெறும் பாடல் வரி மட்டுமல்ல, இசையின் உன்னதத்தைச் சொல்லும் வரியும்கூடத்தான். எத்தனை எத்தனை பாடல்கள் நம் வாழ்க்கையோடு இயைந்து ஒன்று கலந்திருக்கின்றன! என் நண்பர் ஒருவர், தூரத்து உறவினரும்கூட. ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதனுடன் ஒன்றிக் கலந்து ஒரு கணம் அதோடு ஐக்கியமாகிவிடுவார். அந்த நேரத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி அவருள் குடிகொண்டுவிடும். பாடல் நிறைவு பெற்றதும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்.

என் தோழி ஒருத்தி, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடலைக் கேட்கும்போதெல்லாம் அதனுடன் இணைந்து சன்னமான குரலில் பாடுவாள். பாடலின் முடிவுக்குப் பின் சற்றே அமைதி. பின் வேலைகளில் மூழ்கிக் கரைந்துபோவாள். இப்படி எத்தனை எத்தனை உதாரணங்களைக் கண்ணாரக் கண்டிருக்கிறேன். நீங்களும் கண்டிருக்கக்கூடும்.

இப்போதும் இசைஞானி இளையராஜா இசையில் 80களில் வெளியான பாடல்கள் நம்மைக் கிறங்கடிக்கவில்லையா? எத்தனை எத்தனை லட்சம் ரசிக, ரசிகைகளின் மனங்களில் அந்தப் பாடல்கள் நிரந்தரமாகப் பதிவாகியிருக்கின்றன! எதைக் கொண்டு அதை எல்லாம் அழிக்க முடியும்? இரவு நேரங்களில் தாலாட்டித் தூங்க வைக்கும் மற்றொரு தாயாகவே அந்தப் பாடல்கள் திகழவில்லையா?

இரட்டை அர்த்தப் பாடல்கள், வசனங்கள் மலிவான பின் அவற்றை எல்லாம் கேட்கவே மனமும் காதும் கூசுகின்றன. நகைச்சுவை என்ற பெயரில் சில நடிகர்கள் பேசும் வசனங்களையும் கேட்டு அருவருத்தோம். ‘டாடி மம்மி வீட்டில் இல்ல’, ‘கொலை வெறி கொலை வெறிடா’, ‘அடிடா அவள’, ‘எவன்டி ஒன்னப் பெத்தான்’, ‘செல்ஃபி புள்ள… உம்மா…’ போன்ற ‘இலக்கியத் தரம்’ வாய்ந்த பாடல்களை எல்லாம் கேட்கவும் ரசிக்கவும் நாம் என்ன புண்ணியம் செய்தோம் என்றே சில நேரங்களில் தோன்றும்.

பெண்ணுறுப்பைக் குறிக்கும் ஒரு அருவருக்கத்தக்க ஆபாச வசைச் சொல்லை முதன்மைப்படுத்தி, பீப் ஒலியின் வழி அதை அரைகுறையாக மறைத்து, பாடல் நெடுக வாரி இறைத்திருக்கும் தன்மையை என்னவென்று சொல்வது? அருவருப்பின் உச்சம் இந்தப் பாடல். படத்தில் இடம் பெறவில்லை, அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை, தங்களுக்கே தெரியாமல் கசியவிடப்பட்டது என்று ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும் பெண் பற்றிய, உங்களின் பார்வை என்னவென்பதை இந்தப் பாடல் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

இலக்கிய நயத்துடன் பாடல்கள் புனையப்பட்ட காலத்திலும் பெண்ணை இயற்கையுடனோ, பெண்ணின் அங்கங்களைக் காய் கனிகளுடனோ ஒப்பிட்டு வர்ணிக்கப்பட்ட பாடல்கள் ஏராளம் உண்டு. இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு என்று எதிர்க் கேள்விகளும் எழுகின்றன. எவ்வளவு காலம்தான் பொறுத்திருப்பது? அதுவும் இந்த அளவுக்குப் போன பின்பும் எப்படிப் பொறூத்திருப்பது?

‘சமைந்தது எப்படி?’ என்று பெண்ணைப் பார்த்து கேள்வி எழுப்பிய பாடல் வெளியானபோது, பெண்கள் அமைப்புகள் கொதித்தெழுந்து கண்டிக்கவே செய்தன. ‘பிரம்மாண்ட இயக்குநர்’ ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்துக்கு வசனம் எழுதியவர் சுஜாதா என்றாலும், பெண்களின் எதிர்ப்புகளுக்குச் செவி சாய்த்து, வசனங்கள் ஒலியிழந்தன. படமும் மறு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணம் சொல்ல இப்படிப் பல படங்கள் உண்டு.

வரைமுறை தாண்டி, நாகரிக எல்லையைக் கடந்து செல்லும்போது அதைக் கட்டுப்படுத்த வேண்டிய, தட்டிக் கேட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. எப்போதும் போல் ‘பூமா தேவி’களாகப் பொறுமை காத்துக்கொண்டிருக்க முடியாது. உடல் உறுப்புகள் சார்ந்து என்றில்லை, பெண்களுக்கு எதிராகக் கருத்தியல் ரீதியாக எழுதப்படும் பாடல்களையும் பெண்கள் புறக்கணிக்க வேண்டும். தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.

பெண் உடல் என்பது வெறும் காமத்துக்குரியதாகவும், பெண்ணின் உடல் உறுப்புகள் கேளிக்கைக்கும் கேலிக்கும் உரியதாகவும் மாறிப் போயிருப்பது எவ்வளவு வருத்தத்துக்குரியது. சதைப் பிண்டமாக மட்டுமே பெண்ணைப் பார்க்கும் பார்வை மாறாமல் இருப்பதால்தான், பாலியல் வல்லுறவுகள் அவள் மீது நிகழ்த்தப்படுகின்றன. டீன் ஏஜ் பருவத்திலேயே குழந்தைகள் தடம் மாறிப் போகவும் ஆரம்பிக்கிறார்கள்.

நிர்பயா வழக்கில் நாம் கண்டதுபோல ‘டீன் ஏஜ்’ குற்றவாளிகள் உருவாகிறார்கள். ஆண் பிள்ளைகளுக்குப் பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுப்பது மிக மிக அவசியம் என்பதையே இந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. தவறு நிகழலாம்; ஆனால் அது தவறென்று சுட்டிக் காட்டப்படும்போது, அதை உணர்ந்து ஏற்பதற்கான மனோதிடம் வேண்டும். அதை விடுத்து மூர்க்கத்தனமாகப் பேசுவதும், சப்பைக்கட்டு கட்டுவதும் நியாயமாகாது.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

இவ்வளவு கட்டுப்பாடு தேவையில்லை

logo

மத்திய அரசாங்கம், வருமான வரி விதிப்பை எளிமையாக்கப்போகிறோம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு வருகிறது. அதுபோல, எல்லா பண பரிமாற்றங்களுக்கும் ‘பான்’ என்று கூறப்படும் ‘பெர்மனண்ட் அக்கவுண்டு நம்பர்’ அதாவது, ‘நிரந்தர கணக்கு எண்’ வைத்திருக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறது. பொதுவாக இதுபோன்ற அத்தாட்சிகளை வைத்திருந்தால், அதனால் தொல்லை இல்லை என்ற நிலை இருந்தால்தான், மக்களுக்கும் அதைப்பெற ஆர்வம் இருக்கும். ஆனால், இப்போது ‘பான்’ வைத்திருந்தால் அனைத்து வருமானவரி தொல்லைகளுக்கும் அடையாளம் காட்டுவதுபோல நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்குமேல் எந்த பொருளை வாங்கினாலும், விற்றாலும், பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலேயே நிதி மந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டிருந்தார்.

ஒரு லட்ச ரூபாய் என்பது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின்போது, சாதாரண செலவுகள் குறிப்பாக, 4 சவரன் நகை வாங்கினாலே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் போய்விடும். இப்போது புதிதாக மேலும் ஒரு உத்தரவு அமலுக்கு வருகிறது. வருகிற ஜனவரி 1–ந் தேதி முதல் ஓட்டல் பில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தாலோ, அல்லது வெளிநாட்டு பயண டிக்கெட்டு 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆனாலோ, கண்டிப்பாக ‘பான் எண்ணை’ குறிப்பிடவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், 2 லட்ச ரூபாய்க்குமேல் உள்ள ரொக்கப்பரிமாற்றங்கள், 10 லட்ச ரூபாய்க்குமேல் உள்ள அசையா சொத்துகள் வாங்குதல் என்று கையை விட்டுச் செய்யும் எல்லா செலவுகளுக்கும் ‘பான் எண்ணை’ குறிப்பிடவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோல, வங்கிக்கணக்குகள் தொடங்கவும் இனி ‘பான் எண்’ வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் எளிமையாக ஒரு சாதாரண குடும்பத்தினர், தங்கள் வீட்டு திருமணத்தை ஒரு திருமண மண்டபத்தில் நடத்தும் செலவைவிட, ஒரு சிறிய ஓட்டலில் நடத்தினால் செலவு குறையும் என்ற எண்ணத்தில் ஓட்டல்களில்தான் நடத்துகிறார்கள். எவ்வளவு சிக்கனமாக நடத்தினாலும், 50 ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆகிவிடும். அந்த பில்லுக்கான பணத்தை கட்டும்போது, ‘பான்’ எண்ணைக் குறிப்பிட்டு அதன்பிறகு வருமான வரித்துறை நோட்டீசுக்கு பதில் அளித்துக் கொண்டு இருக்கும் நிலை எங்களுக்கு தேவையா? என்பதே சாதாரண மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. மேலும், இதுபோல ரொம்ப கசக்கிப் பிழிந்தால் வரி ஏய்ப்பை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தது போலாகிவிடும். இப்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பல செலவுகளை தாராளமாக அனுமதித்தால்தான் வர்த்தகம் உள்ளிட்ட தொழில்கள் வளரும். அந்த வரிவிதிப்பில் அரசுக்கும் வருமானம் பெருகும். மேலும், கிராமப்புற மக்கள், படிக்காதவர்களுக்கு ‘பான்’ என்பது பற்றிய விழிப்புணர்வு இன்னமும் இல்லை. அதனால்தான் இவ்வளவு உத்தரவுகளுக்குப் பிறகும் நாட்டில் ஏறத்தாழ 21 கோடி மக்களிடம்தான் ‘பான்’ இருக்கிறது. பணப்பரிமாற்றம் என்பது அரசால் கொண்டுவரப்பட்டதுதான். செக்கோ, டெபிட் கார்டோ பயன்படுத்துவதைவிட, உடனடி பரிமாற்றத்தை எளிதாக்கும் வசதிகளைக்கொண்டது. ‘செக்’ கொடுத்தால் அது வங்கியில் ‘பாஸ்’ ஆகும் வரையில் பரிமாற்றத்தை தாமதப்படுத்தும். ஆனால், இப்போது பணம் என்ற வார்த்தையே ஒரு கெட்டவார்த்தையாக அரசு கருதுவதைப்போல, பணப்பரிமாற்றத்தை தவிர்க்கும் வகையில், இப்படி கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல. பணம் சுற்றி வந்தால்தான் பொருளாதாரம் வளரும். அதை இப்படி தடுப்பு அணைபோல தடுத்து விடக் கூடாது.

Saturday, December 19, 2015

வங்கிகளால் ஆன பயன்?

Dinamani


By வாதூலன்

First Published : 19 December 2015 01:21 AM IST


தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சென்னை உள்பட இதுவரை கண்டிராத பெருமழை அனைவரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.
தன்னார்வலத் தொண்டர்கள்; எதிர்க்கட்சிகள்; திரை நடிகர்கள்; அறக்கட்டளைகள் போன்ற பல துறையைச் சார்ந்தவர்கள் உதவி புரிந்திருக்கிறார்கள். பிற மாநிலங்களிலிருந்தும் போர்வைகள், உணவுப் பொருள்கள், அத்தியாவசிய மருந்துகள் குவிந்தன.
பொதுத் துறை வங்கிகளின் பங்கு இந்த விஷயத்தில் அவ்வளவு குறிப்பிடும்படியாக இல்லை என்பதை உறுத்தலுடன் பதிவு செய்தாக வேண்டும்.
அதுவும், "வளமான நாட்களில் கண் சிகிச்சை முகாம், முதியோர் நலன், நீரிழிவு சோதனை முகாம் என்றெல்லாம் கண்காட்சிகள் நிகழ்த்தி, தங்கள் திட்டங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் வங்கிகள், இந்த வரலாறு காணாத வெள்ளத்தின்போது ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்பது ஒரு புரியாத புதிர்.
ஒருவேளை, வங்கிகளுக்கே சிக்கல் நிறைய முளைத்தது காரணமாக இருக்கலாம் (உதாரணம்: வலைதள செயலிழப்பு; லாக்கருக்குள் நீர்.)
ஒரு சில வங்கிகள் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மைதான். இ.எம்.ஐ.யை கெடுத் தேதியில் செலுத்தாவிட்டால் அபராத வட்டி தொகை இல்லை; சேதமடைந்த கடன், டெபிட் அட்டைகளுக்கு மாற்று அட்டை, பிற வங்கிகளில் ஏ.டி.எம். பயன்படுத்தும்போது கட்டணம் கிடையாது. இத்தகைய சலுகைகள் வந்தபடியிருக்கின்றன. என்றாலும், நிகழ்ந்த சேதத்துக்கு இவை சோளப் பொறிக்கு ஒப்பானதுதான்.
ஒரு யதார்த்த நிலைமையை இங்கு குறிப்பிடலாம். குடும்பத்துக்குத் தூண் போலிருக்கும் தலைவர் இறந்து போனால், அந்தக் குடும்பத்துக்குச் சோகம் பதினைந்து நாள்கள்தான் இருக்கும்.
அதற்குப் பின்னர், கண் முன் பூதாகரமாக விரிந்து நிற்பது முதலில், நிதிநிலைமைதான். அத்தகைய "நிதிகளை' இருப்பில் வைத்துக் கொண்டு நாட்டுக்கு முதுகெலும்பு போலிருக்கும் தேசிய வங்கிகள், இதுபோன்ற பேரிடரில் முன்வந்து, இடுக்கண் களைய வேண்டாமோ?
ஒரு நிகழ்ச்சி நினைவு வருகிறது. அறுபது வயது எட்டினவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 1975-இல் இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியபோது, பலர் - குறிப்பாக வட நாட்டில் பாதிக்கப்பட்டார்கள்.
1977-இல் அவசரநிலை நீக்கப்பட்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் ஜனதா அரசு வெற்றி பெற்றது, அவசரநிலையால் ஜனதா அரசு வெற்றி பெற்றது. அவசரநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனி கடன் உதவி வழங்க வேண்டுமென்றும், அதற்கான "ஸ்டேட்மென்ட்' மூன்று மாதங்களுக்கொரு முறை அனுப்ப வேண்டுமென்றும் அரசு உத்தரவிட்டது.
இதேபோல், இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் நேர்ந்த கலவரங்களில் பல சீக்கியர்கள் வீடு வாசலை இழந்தார்கள். அத்தகையவர்களுக்கும் வங்கி ஒத்தாசை புரிந்தது.
மேற்சொன்ன இரண்டும் அரசியல் சாயம் கொண்டவை. ஆனால், இப்போது நடந்தது இயற்கையின் வெறியான சீற்றம். பாதிப்பின் தீவிரத்தைக் குறைப்பதில், அரசு வங்கிகளுக்கு முக்கியப் பங்குண்டு என அழுத்தமாகச் சொல்லலாம்.
என்ன தீர்வு? இன்றைய காலகட்டத்தில், ஏழை எளியவர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் எல்லா வீடுகளிலும் நவீன நுகர் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சலவை இயந்திரம், கணினி, வாகனங்கள் இவை யாவற்றையும் பெற வங்கிகள் கடன் தருகின்றன.
நுகர்பொருள் என்றால் மூன்றாண்டு தவணை; வாகனம் எனில் நாலாண்டு; வீடு என்றால் இருபது ஆண்டு, கால அளவு வேறுபடும். இந்த வெள்ளத்தில் மிகப் பலருக்கு நுகர்பொருள்கள் முற்றுமாக அழிந்தே விட்டன. வங்கிகள் புதிய பொருள் வாங்க கடன் கொடுக்கலாம்:
= நுகர் பொருள்களுக்குக் காப்பீடு இருந்தாலும், 30 சதவீதமே கிடைக்கும்; அதுவும் தனியான 'Householders Policy' இருந்தால்தான்.
= வாகனங்களுக்கு உறுதியாகக் காப்பீடு இருக்கும். இருந்தால்கூட தேய்மானத்தைக் கணக்கிட்டுத்தான் தொகை கிடைக்கும். வாகனத்தைச் செப்பனிட குறுகிய காலக் கடன் வழங்கலாம்.
= வீட்டு வெளிச் சுவரில் சேதம்; வெளிவாசல் கதவு சேதம்; வீட்டுக் கூரை இடிந்து விழுந்திருப்பது - இவற்றைச் சரி செய்ய வங்கிகள் தாராளமாகக் கடன் தரலாம்.
சான்றுகள் காண்பிப்பது எளிதான காரியம்தான், தினத்தாளில் வந்த செய்தி; புகைப்படம்; தங்களது ரேஷன் அட்டை இவை போதுமே. ஒருவேளை ரேஷன் அட்டையும் நாசமாகியிருந்தால், வங்கிகள் PAN எண்ணை வைத்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவங்கிகள் எல்லாம், Flood Relief என்ற ஒரு பிரிவு வைத்து, குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, ஓரளவு குறைந்த வட்டியில் (8 சதவீதம்) கடன் வழங்கலாம்.
மேற்சொன்ன மூன்று பிரிவில், தொழில், விவசாயம் இவ்விரண்டையும் சேர்க்கவில்லை. ஏனெனில், இவ்வகைக் கடன்களை வழங்கிக் கண்காணிப்பதற்கு, ஒவ்வொரு வங்கியிலும் தனியே இலாகாக்கள் இயங்குகின்றன.
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யலாம்; யந்திர பிற அடமானக் கடனை மறு சீரமைப்பு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு கடனையும் தனித்தனியாக பாவித்துத் தான் கடன் வழங்கப்படும்.
நிகழ்ந்திருப்பது மிகப் பெரிய சேதம், "வங்கிகளால் ஆன பயன் என் கொல் பேரழிவில் நேசக் கரம் நீளாவிடில்' என்ற புதுக் குறளுக்கேற்ப, பொதுத் துறை வங்கிகள் செயல்பட்டால் உசிதம்.

தேவை, சட்டத்திருத்தம்!


Dinamani


By ஆசிரியர்

First Published : 19 December 2015 01:15 AM IST


நிர்பயா வல்லுறவு மற்றும் கொலை வழக்கு இந்தியா முழுவதும் பேசப்பட்டதைப் போலவே, இந்த வழக்கில் விடுதலையாகவுள்ள இளம்வயதுக் குற்றவாளியும் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறார். இவரை விடுதலை செய்வதா, தண்டனையை நீட்டிப்பதா? என்கிற விவாதம் இந்தியா முழுவதும் பலதரப்பிலும் பல விதமாக விவாதிக்கப்படுகிறது.
2012, டிசம்பர் 16-ல் தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த இச்சம்பவத்தில் நிர்பயா வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் கைதான 6 குற்றவாளிகளில் ஒருவரான 18 வயதுக்கு உள்பட்டவர் வளரிளம்பருவக் குற்றவாளி, கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகளைக் கழித்துள்ளபோதிலும் அவரை விடுதலை செய்யக்கூடாது என்று நிர்பயாவின் பெற்றோரும் சமூக ஆர்வலர்களும் கோரிய மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தண்டனையை நீட்டிக்கவும் இயலாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த இளம்வயதுக் குற்றவாளிதான், அந்த 6 பேரில் மிகவும் மோசமாக நடந்துகொண்ட நபர். வல்லுறவுடன் நில்லாமல், இரும்புக் குழாய் மூலம் நிர்பயாவின் உறுப்பைச் சிதைத்த நபர். இச்செயல்தான் நிர்பயாவின் குடல் கிழியும்விதமாக படுகாயத்தை ஏற்படுத்தி, 13 நாள் சிகிச்சை பலனின்றி இறக்கக் காரணமாக இருந்தது. இந்த நபர், சம்பவம் நடந்த நாளில், 18 வயது நிரம்பாத இளம்வயதுக் குற்றவாளி என்பது இவருக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.
மற்றவர்களுக்கு மரண தண்டனை கிடைத்தும், இந்த இளம் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோதே, இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்தன. கொடுங்குற்றம் புரியும் இளம்குற்றவாளிகளை, வயதுவந்தவர்களாகக் கருதி, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மத்திய அரசு கடந்த மே மாதம், சிறார் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து மக்களவையில் மசோதா தாக்கல் செய்தது. "கொடுங்குற்றம் புரியும் சிறார்கள் 16 வயது நிரம்பியவராக இருந்தால், அவர் உளவியல் ரீதியாக சிறுவனாக இருக்கிறாரா, வளர்ந்த நபருக்குரிய மனப்பக்குவம் கொண்டிருக்கிறாரா என்பதை ஒரு உளவியல் குழு உறுதிப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அறிக்கையில் அவரை 18 வயதுள்ளவராகக் கருதி, வழக்கமான நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்' என்கிற இத்திருத்தங்களுடன் சட்ட வரைவு மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. மாநிலங்களவையில் இன்னும் நிறைவேறவில்லை.
சிறார் வயதைக் குறைக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு இருக்கிறது. ஒரு வழக்குக்காக சிறார் வயதைக் குறைத்து, இளம்வயதுக் குற்றவாளிகளை வழக்கமான நீதிமன்றத்தில் நிறுத்தத் தொடங்கினால் அதன் விளைவுகள் வேறுவிதமாக அமையும் என்று தன்னார்வ அமைப்புகள், சிறார் உளவியல் சார்ந்த ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கான சட்டத் திருத்தம் அமலுக்கு வராத நிலையில், நீதிமன்றமும் இந்த விவகாரத்தில், இளம்வயதுக் குற்றவாளியின் விடுதலையைத் தடுத்து நிறுத்தவோ அல்லது தண்டனையை நீட்டிக்கவோ செய்யாது.
இந்த இளம் குற்றவாளி 3 ஆண்டு தண்டனையுடன் வெளியேறுவதை நிர்பயாவின் பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த இளம்வயதுக் குற்றவாளியை விடுதலை செய்யக்கூடாது என்றுதான் நிர்பயாவின் பெற்றோர் நீதிமன்றத்தை அணுகினர். இந்த தீர்ப்பின் இறுதியில் நிர்பயாவின் தாய், "குற்றவாளி வென்றான். நாங்கள் தோற்றுவிட்டோம்' என்று கூறியிருக்கிறார். இந்த ஒரு வழக்கை நீதிமன்றம் விதிவிலக்காகக் கருதி, தண்டனை நீட்டிப்போ அல்லது விடுதலையை ரத்துசெய்யவோ உத்தரவிடுமெனில், இதே அளவுகோல் நாட்டின் அனைத்து சிறார்கள் மீதான பாலியல் வழக்குகளிலும் அளிக்கப்படும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் அச்சம்.
இந்தியாவில் குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளைச் சந்திக்கும் சிறார்கள், மொத்தக் குற்ற அளவில் 1.2% மட்டுமே. இவர்களில் கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கை மிகமிக குறைவு. ஆகவே, வயது வரம்பைக் குறைக்கக் கூடாது என்ற வாதம் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
இத்தகைய கொடுங்குற்றத்தில் ஈடுபடும் சிறார்களில் பெரும்பாலோர் ஏழ்மையில் உள்ளவர்கள். இவர்களது வாழ்க்கைச் சூழலும், அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொண்ட வன்முறைகள், பாலியல் தாக்குதல்கள்தான் அவர்களை மோசமானவர்களாக மாற்றுகிறது. இதற்கான தீர்வுகளும், இத்தகைய சிறார்களை மீட்டு, மறுவாழ்வு அளிப்பதிலும் கவனம் செலுத்தாமல், வெறும் வயது வரம்பைக் குறைக்கக்கூடாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆனாலும், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய நவீன உலகில், பாலியல் குற்ற வழக்குகளுக்கு ஆளாகும் மாணவர்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என தினமும் சிலர் கைதாகிக் கொண்டே இருக்கின்றனர். இரு நாள்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு மேனிலைப் பள்ளியில் 17 மடிக்கணினி திருடிய மூன்று மாணவர்களை விசாரித்தபோது, அவர்கள் ஒரு நாற்பது வயது நபரைக் கொன்று, 15 சவரன் திருடியதும் தெரியவந்துள்ளது.
16 வயது நிரம்பிய இளம்குற்றவாளியின் மனப்பக்குவம் 18 வயதைக் கடந்தவருக்கு உரியதா என்பதை உளவியல் குழு தீர்மானிப்பதும், அதன் பரிந்துரைப்படி வழக்கு விசாரணை நடத்தப்படுவதுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும். வல்லுறவுக் குற்றமாக மாற்றப்படும் இளம்வயது காதல்களுக்கும் இந்தக் குழு விசாரணையே நியாயம் கிடைக்கச் செய்யும்.
சிறார் சட்டத்தில் திருத்தங்கள் மிக மிக அவசியம்!

Friday, December 18, 2015

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை 56 ஆண்டுகளாக கணவர் பாசத்துடன் கவனித்து வருவது கேட்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்கிறது.

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran


பிஜீங்: கருத்து வேறுபாடு என்ற காரணம் காட்டி திருமணமான ஓரிரு ஆண்டுகளிலேயே விவாகரத்து வரை செல்லும் இளம்தம்பதிகள் மத்தியில, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை 56 ஆண்டுகளாக கணவர் பாசத்துடன் கவனித்து வருவது கேட்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்கிறது. கிழக்கு சீனாவின், ஷன்டாங் மாகாணம், சுஞ்சியாயூ பகுதியைச் சேர்ந்தவர் டூ யூவான்பா (89), இவரது மனைவி சோ யூவ். டூ யூவான்பா நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். திருமணம் நடந்த 5 மாதங்களில் சோ யூவ் மர்மநோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டார். பின்னர் அது முடக்குவாதம்போல் பாதிப்பை ஏற்படுத்தியது. அருகில் உள்ள டையன் நகரில் டூ யூவான்பா வேலை செய்து வந்தார். கடிதம் மூலம் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக மாறி உள்ளதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக டூ யூவான்பா வீடு திரும்பினார். தனது இளம் மனைவி தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தார். அவரால் திரும்பக்கூட முடியாததோடு, ஒரு சிறிய பொருளை கூட கைகளால் பிடிக்க முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த டூ யூவான்பாவின் நண்பர்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும்படி பலமுறை அவருக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால் டூ யூவான்பா இதனையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டதோடு கடைசி வரை தனது மனைவியை பராமரிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். தனது பணியில் இருந்து விலகிய முழு நேரத்தையும் நோய்வாய்ப்பட்ட மனவைியை கவனிப்பதிலேயே செலவழித்தார்.

விவசாயியாக இருந்து கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக அவர் தனது மனைவியை ஒரு குழந்தைபோல எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி கவனித்து வருகிறார். மனைவிக்கான உணவை ஸ்பூன் மூலமாக கொடுக்கும் டூ யூவான்பா, மனைவியின் இயற்கை உபாதைகளை கூட எந்த சலிப்பும் இன்றி தானே அகற்றி வருவது மனைவி மேல் கொண்டுள்ள அன்பின் உச்சம் எனலாம். பல்வேறு மருத்துவர்களிடமும் மனைவியை அழைத்து செல்லும் டூ யூவான்பா அவர் குணமடைவதற்காக 56 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார்.

டூ யூவான்பா தனது மனைவி மேல் கொண்டுள்ள பற்றை பார்த்து வியந்துபோகும் அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மூலிகை மருந்தை மனைவிக்கு கொடுப்பதற்கு முன்பாக அதில் விஷத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்வதற்காக முதலில் அதனை டூ யூவான்பா சுவைத்து விட்டுதான் மனவைிக்கு கொடுக்கிறார்.

Gadget addiction breaking your child’s back Sumitra Deb Roy | Dec 18, 2015, 01.00 AM IST

Times of India

MUMBAI: Children as young as three and four are queuing outside the spine and physiotherapy clinics in the city to deal with aches and pains triggered by obsessive use of gadgets. The rise in muskoskeletal problems are mainly caused by recurrent use of tablets, handheld games and mobile phones for texting, browsing or playing.

In the case of four-year-old Adeebh Kamble from Mazgaon, his gadget addiction manifested through continuous watering of eyes and an excruciating headache. When a visit to an eye specialist and eyedrops could not resolve the problem, the needle of suspicion turned to his daily activities, which involved spending almost every waking hour on his parents' phones. His mother Prachi admitted that Adeebh was introduced to the world of online videos, cartoons and rhymes at the age of eight months. "By the age of two, he was savvy with mobile phones," said the mother, who has cut down his phone usage to 10-15 minutes a day now.

Vidhi Kataria (4) from Opera House developed a severe back and neck pain within four months of her parents buying her a tablet. Her mother said they bought her the device only because she had no one to play with in the neighbourhood during summer vacations. "Besides the pain, it has badly affected her grades in school," said her mother Kavita, adding that often her gadget usage exceeded six to eight hours a day.

Sadiya Vanjara, who heads the department of physiotherapy and pain management at Noor Hospital, said there has been an alarming increase in the incidence of pain in the neck, shoulder, swelling of muscles from holding gadgets and even inability to sit and write for long hours, among children. "Children sit in a slouching position for hours altogether, causing discomfort to their back and spine, even affecting their posture. Swiping continuously on a screen obviously does not give them the required dexterity in the fingers or arm muscles. Further, the limited or non-existent outdoor activity robs them of the optimum vitamin and calcium levels," said Vanjara. Among more worrying side-effects, said spine surgeon Dr Samir Dalvi, is that children with such addiction could develop spondylitis early in the life.

The damage, however, may be much serious and beyond physical pain. Developmental paediatrician Dr Samir Dalwai narrated the case of a three-year-old child, who was wrongly diagnosed with autism when his actual problem was poor communication skills. "It emerged that the child would not even eat without watching online shows, and spent at least four hours daily. The child had poor eye contact, delayed speech and did not mingle with other children," Dr Dalwai said. He explained that the impact on a child due to obsessive gadget usage could be colossal. "It cuts off the child from learning normal communication, which happens from talking to mother, father or other family members. Gadgets just provide one-way interaction," he said. Dr Dalwai said that parents who often use gadgets as an incentive are mainly to blame. "Buy them a pet, not a touch pad," he suggested.

Psychiatrist Dr Harish Shetty said that a mobile phone can give a child unlimited access to the world of internet, games and porn. "Children do not know the balance and cannot cope with the pressure that comes with it," he said.

விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியது, அமெரிக்கா இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு

விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியது, அமெரிக்கா இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு

, 4:00 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 18,2015, 2:23 AM IST

வாஷிங்டன்,


எச்1பி விசா, எல்–1 விசா கட்டணங்களை அமெரிக்கா இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இதனால் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எச்1பி விசா, எல்–1 விசா

அமெரிக்க குடியுரிமை இன்றி அங்கு தங்கி பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினருக்கு 85 ஆயிரம் ‘எச்1பி விசா’ வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணிக்கையை 70 ஆயிரமாக குறைக்கக் கோரி அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் 2 எம்.பி.க்கள் மசோதா தாக்கல் செய்துள்ளனர். இது சட்டமானால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பும் தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அந்த துறையினருக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எச்1பி விசா மற்றும் எல்–1 விசா கட்டணங்களை அமெரிக்கா இரு மடங்காக உயர்த்தி உள்ளது.

4 ஆயிரம் டாலர்

இதன்படி எச்1பி விசாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு 4 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம்) சிறப்பு கட்டணம் விதிக்கப்படும். எல்–1 விசாவுக்கு சிறப்பு கட்டணமாக 4 ஆயிரத்து 500 டாலர் (சுமார் ரூ.3 லட்சம்) வசூலிக்கப்படும்.

ஒபாமா அரசு கொண்டு வந்துள்ள சுகாதார சட்ட அமலாக்கம் மற்றும் பயோ மெட்ரிக் டிராக்கிங் அமைப்பினை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு பொருந்தும்?

எச்1பி விசா மற்றும் எல்–1 விசா ஆகிய இரு விசாக்களுமே இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

எச்1பி விசாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு 4 ஆயிரம் டாலர் சிறப்புக்கட்டணம் யாருக்கு பொருந்தும் என்றால், குறைந்த பட்சம் 50 பணியாளர்களை கொண்டுள்ள நிறுவனம், அவர்களில் 50 சதவீதத்தினர் எச்1பி விசா அல்லது எல்–1 விசா பெற்றிருந்தால், அவர்களுக்கு பொருந்தும்.

இதே விதிமுறைதான் எல்–1 விசாவுக்கும் பொருந்தும்.

10 ஆண்டுகளுக்கு அமல்

முன்பு விசா கட்டணம் 5 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த முறை 10 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த விசா கட்டணம், செப்டம்பர் 30–ந் தேதியுடன் காலாவதியாகி விட்டது.

இப்போது இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்கள் விசா கட்டணமாக ஆண்டுக்கு 7 கோடி டாலர் முதல் 8 கோடி டாலர் வரை (சுமார் ரூ.469 கோடி முதல் 536 கோடி வரை) செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எச்1பி விசா கட்டணமாக 2 ஆயிரம் டாலர் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

பிரச்சினை எழுப்பினார் மோடி

விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது இந்திய–அமெரிக்க உறவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என அமெரிக்க பாராளுமன்ற தலைவர்களிடம் ஜனாதிபதி மாளிகை கவலை தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ளதால், இந்த கவலையை பொருட்படுத்தாமல் விசா கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளனர்.

இந்த நிலையில் பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் உடன்பாடு எட்டப்படுவதில் முக்கிய பங்காற்றிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், அப்போது விசா கட்டண உயர்வு பிரச்சினையை பிரதமர் மோடி எழுப்பியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விமான இன்ஜினில் சிக்கி இன்ஜினியர் பலி

மும்பை,:மும்பையில், ஏர் இந்தியா நிறுவன இன்ஜினியர், விமான இன்ஜினில் சிக்கி உயிரிழந்தார். மும்பை, சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 'ஏர் இந்தியா - 619' என்ற விமானம், ஐதராபாத்திற்கு புறப்பட இருந்தது.
இதையொட்டி, 'புஷ்பேக்' என்ற நடைமுறைப்படி, ஒரு வாகனம் விமானத்தை தள்ளி வந்து, ஓடுபாதையின் துவக்கத்தில் நிறுத்தியது. இப்பணிகளை, ஏர் இந்தியா நிறுவனத்தின் இன்ஜினியரான ரவி சுப்ரமணியன் மேற்பார்வையிட்டார். அப்போது, துணை விமானி, விமானம் புறப்படுவதற்கு அனுமதி கிடைத்து விட்டதாகக் கருதி, இன்ஜினை திடீரென இயக்கினார். இதையடுத்து, விமான இன்ஜினின் இறக்கைகள் அதிவேகமாக சுழலத் துவங்கின.
அப்போது ஏற்பட்ட பயங்கர ஈர்ப்புசக்தியில், ரவி சுப்ரமணியன் வேகமாக பின்னோக்கி இழுக்கப்பட்டு, இன்ஜின் இறக்கைகளில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி அறிந்ததும், விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் ஷர்மா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அஸ்வனி லோஹானி தலைமையில், விசாரணைக் குழுவை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 'உயிரிழந்த ரவி சுப்ரமணியனின் குடும்பத்திற்கு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

எப்படி நடந்தது?


இந்த விபத்து குறித்து, 'இண்டிகோ ஏர்' நிறுவன பராமரிப்பு மேலாளர் பிரதீப் சிங் ராவத் வெளியிட்டுள்ள மின்னஞ்சல் செய்தி:விமானிகளுக்கும், தரை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தை தள்ளிக் கொண்டு வந்து நிறுத்தியதும், இரு சக்கரங்களிலும், தடை கட்டைகள் வைக்கப்படவில்லை. அப்படி வைத்திருந்தால், விமானம் சிறிது கூட முன்னேறியிருக்காது.
விமானம் புறப்பட, 'சிக்னல்' வழங்காத நிலையில், விமான இன்ஜின் இயக்கப்பட்டது தவறு. விமானத்தை தள்ள உதவிய இரு உருளைகளை அகற்றும்படி, உதவியாளரிடம் ரவி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, அவை அகற்றப்பட்டன.
அதே நேரத்தில், விமானிக்கு, விமானத்தை இயக்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். உடனே, விமானியின் கட்டளைப்படி, துணை விமானி, இன்ஜினை இயக்கியுள்ளார். இறக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரவி சுப்ரமணியனை அவர்கள் கவனிக்க வாய்ப்பில்லை.
அப்போது, ரவி சுப்ரமணியன் காதில், 'ஹெட்செட்' அணிந்திருந்ததால், இன்ஜின் சத்தமும் அவருக்கு கேட்டிருக்காது. அதனால் தான், பின்புறத்தில் விமானம் நகர்ந்து வருவது அவருக்கு தெரியவில்லை. அதே சமயம், அவருக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த உதவியாளர், கீழே படுத்து, உயிர் பிழைத்துள்ளார். இவையெல்லாம் நொடிப் பொழுதில் நடந்து விட்டன; இது, முழுக்க முழுக்க மனிதத் தவறால் ஏற்பட்ட உயிரிழப்பு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழருக்கு பெருமை; கனடா நாட்டில், ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்; நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர்


சென்னை,

கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

ஐகோர்ட்டு நீதிபதி

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார்.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்தார். 1995-ம் ஆண்டு முதல் வக்கீல் தொழிலை தொடங்கினார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு வெற்றி பெற்றார்.

வர்த்தக உறவு

தேசிய கெனடியன் பார் அசோசியேசன் மற்றும் அதனுடைய பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களில் வள்ளியம்மை பணியாற்றி உள்ளார். மேலும் இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட செய்தார்.

வக்கீல் தொழிலுடன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் சட்டக்கல்வியை வள்ளியம்மை பயிற்றுவித்தார். வானொலி, தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட சமுதாய கலாசாரங்களை பற்றி தொடர் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார். இவருடைய சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி இருக்கின்றன.

தமிழர்களுக்கு பெருமை

பிரிட்டிஷ் கொலம்பியா மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

மும்பை விமான நிலையத்தில் விமான என்ஜினுக்குள் சிக்கி பலியானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் விமானி, துணை விமானி மீது நடவடிக்கை



மும்பை,


மும்பை விமான நிலையத்தில் விமான விபத்தில் சிக்கி பலியானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக அந்த விமானத்தை இயக்கிய விமானி, துணை விமானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வல்லுனர்

மும்பை சத்ரபதி சிவாஜி உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் ஐதராபாத் செல்வதற்காக ஏ.ஐ. 619 என்ற விமானம் தயார் நிலையில் இருந்தது. இதையொட்டி, விமானத்தின் என்ஜின் அருகே ரவி சுப்பிரமணியன் என்ற தொழில்நுட்ப வல்லுனர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, விமானத்தின் சக்கரத்துடன் பொருத்தப்பட்டிருந்த ‘டோபார்’ கருவியை அகற்றுமாறு தன்னுடைய உதவியாளர் ஷிண்டேயை அவர் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, டோபார் கருவி அகற்றப்பட்டது.

இந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘சிக்னல்’ கிடைத்து விட்டதாக துணை விமானி தெரிவித்தார். அதன் பேரில் விமானி, விமானத்தை இயக்கினார். விமானம் நகர தொடங்கியதும், என்ஜினின் சுழற்சி வேகத்தால் ஏற்பட்ட காற்றின் மூலம், தரையில் நின்றுகொண்டு இருந்த ரவிசுப்பிரமணியன் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டார்.

உடல் சிதைந்து பலி

இதில், அவர் என்ஜினுக்குள் சிக்கி திக்குமுக்காடினார். மேலும், அங்கிருந்த கூர்மையான பிளேடுகள் அவரை துண்டு, துண்டாக சிதைத்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதறி பலியானார். பின்னர் சிதறிய அவரது உடல் பாகங்கள் என்ஜினின் பின்பகுதி வழியாக வெளியேறியது. பிரேத பரிசோதனை கூட செய்ய முடியாத அளவுக்கு அவரது உடல் சிதைந்து விட்டது.

அதிர்ஷ்டவசமாக கீழே நின்று கொண்டிருந்த அவரது உதவியாளர் ஷிண்டே உயிர் தப்பினார். சம்பவத்தை பார்த்து சுதாரித்து கொண்டு தரையில் அமர்ந்ததால், அவர் எந்தவொரு காயமும் இன்றி மயிரிழையில் தப்பினார். சிக்னல் கிடைத்ததாக தவறுதலாக கருதி என்ஜினை இயக்குமாறு துணை விமானி கூறிய தவறான தகவலால் ஏற்பட்ட விளைவே இந்த விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, விமானி, துணை விமானி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

விமான என்ஜினில் சிக்கி பலியான தொழில்நுட்ப வல்லுனர் ரவி சுப்பிரமணியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 54 வயதான அவர், மும்பை சுன்னாப்பட்டியில் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு விமான போக்குவரத்து இணை மந்திரி மகேஷ் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு ஏர் இந்தியா விமான நிறுவன தலைவர் அஷ்வானி லோகானி தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, அஷ்வானி லோகானி உடனடியாக மும்பை விரைந்தார். நேற்று மும்பையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

இழப்பீடு

எங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம். ரவி சுப்பிரமணியனின் மறைவையொட்டி, இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அவருடைய குடும்பத்தினருக்கு வழங்கினோம். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் கொடுக்கிறோம். ரவி சுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (இன்று) நடக்கிறது.

இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா விமான அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகையால், இந்த தருணத்தில் அதற்கான காரணம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையல்ல.

இவ்வாறு அஷ்வானி லோகானி தெரிவித்தார்.

Tuesday, December 15, 2015

தயக்கமும் சுணக்கமும் ஏன்?

Dinamani


By ஆசிரியர்

First Published : 15 December 2015 01:05 AM IST


உச்சநீதிமன்றத்தின் 43-ஆவது தலைமை நீதிபதியாக தீரத் சிங் தாக்கூர் பதவி ஏற்றிருக்கிறார். கடந்த 2009 முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் நீதிபதி தாக்கூர் 2017 ஜனவரி 4-ஆம் தேதி இந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் தீரத் சிங் தாக்கூருக்கு அரசியல் பின்னணியொன்று உண்டு. இவரது தந்தை தேவிதாஸ் தாக்கூர், காஷ்மீரத்தில் பிரபலமான வழக்குரைஞராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, அந்த மாநில அரசியலிலும் மிகவும் செல்வாக்குப் படைத்தவராகத் திகழ்ந்தவர். ஷேக் அப்துல்லா அமைச்சரவையில் தேவிதாஸ் தாக்கூர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் நிதியமைச்சராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். அஸ்ஸாம் மாநில ஆளுநராகவும் சில காலம் பதவி வகித்தவர்.
தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுக் கொண்டவுடன் நீதிபதி தீரத் சிங் தாக்கூர் வெளிப்படுத்தி இருக்கும் கருத்துகள் வரவேற்புக்குரியவை. "சகிப்புத் தன்மை இல்லாத நிலைமை' என்கிற பிரச்னை எதிர்க்கட்சிகளாலும், சில அறிவுஜீவிகளாலும் எழுப்பப்பட்டு, இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் வாழ்வது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.' சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் காலம், நீதித் துறையில் சுதந்திரம் பாதுகாக்கப்படும் காலம், அடிப்படை உரிமைகள் அனைவருக்கும் உறுதி செய்யப்படும் நிலைமை தொடரும் காலம் அப்படியொரு அச்சம் யாருக்கும் ஏற்பட வேண்டிய அவசியமில்லை, என்பதுதான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் வெளியிட்டிருக்கும் கருத்தின் சாராம்சம்.
"பலதரப்பட்ட நம்பிக்கைகளும் கலாசாரங்களும் உள்ள சமுதாயத்தின் அடிநாதமாக சகிப்புத்தன்மையும், ஒருவரை மற்றவர் மதிக்கும் பண்பும் காணப்படுவது உறுதி' என்று எடுத்துரைத்திருக்கும் தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் கூறியிருக்கும் இன்னொரு கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசியல் சட்டப் பாதுகாப்பு என்பது நமது குடிமக்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் வாழும் பிற நாட்டினருக்கும் பொருந்தும் என்பதுதான் அது.
பொதுவாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்பவர்கள் அனைவரும் சுட்டிக்காட்டிப் பேசும் நீதித் துறையின் அடிப்படைப் பிரச்னை பற்றி உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எதுவுமே பேசாதது வியப்பை ஏற்படுத்துகிறது. இவருக்கு முன்னால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தவர்கள் அனைவரும் தங்களது முதல் சவால் என்று அறிவித்துப் பணியைத் தொடங்கி, தொடங்கிய இடத்திலேயே விட்டுவிட்டு ஓய்வுபெற்ற அந்தப் பிரச்னை, நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றியது.
நீதிபதி ஏ.எஸ். ஆனந்தில் தொடங்கிக் கடந்த கால் நூற்றாண்டு காலமாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த 14 நீதிபதிகளும், பதவி ஏற்றுக் கொண்டவுடன், தங்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்தான் என்று தவறாமல் தெரிவித்திருக்கிறார்கள்.
நிரம்பி வழியும் இந்திய சிறைச்சாலைகளில் அடைந்து கிடப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அநேகமாக நிரபராதிகளாக இருக்கக் கூடும். செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்கள் பிணையில் வெளியே வந்து விடுகிறார்கள். சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி விடுதலையும் பெற்று விடுகிறார்கள். ஆனால், ஏழைகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று தெரிவிக்கும் அரசியல் சாசனத்தின் 14-ஆவது பிரிவு மறுக்கப்பட்டு சிறைகளில் விசாரணைக் கைதிகளாகத் தொடர்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் காணப்படும் தகவலின் அடிப்படையில் 2009 முதல் 2013 வரையிலான ஐந்தாண்டுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் உண்மை, நீதித் துறையில் அனுமதிக்கப்பட்ட அளவிலான நீதிபதிகள் இல்லை என்பதுதான். நீதித் துறையின் அனைத்து நீதிபதி நியமனங்களும் முறையாக நிரப்பப்பட்டால், தேங்கிக் கிடக்கும் வழக்குகள் கணிசமாகக் குறைந்துவிடும். அதைச் செய்வதில் ஏன் தயக்கமும் சுணக்கமும் என்று தெரியவில்லை.
2009-இல் தேங்கிக் கிடந்த வழக்குகளின் எண்ணிக்கை 3.03 கோடி. 2013 கடைசியில் இதுவே 3.17 கோடியாக அதிகரித்திருந்தது. அத்தனை நீதிபதி நியமனங்களும் செய்யப்பட்டு, முறையாகவும், விரைவாகவும் வழக்குகள் விசாரிக்கப்பட்டிருந்தால் தேங்கி இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை வெறும் 1.12 கோடியாக மட்டுமே இருந்திருக்கும். நீதிபதிகள் ஓய்வு பெறும் காலம் முன்கூட்டியே தெரியும் என்கிற நிலையில், ஆறு மாதத்திற்கு முன்பே அந்த இடத்தை நிரப்புவதற்கான முயற்சியில் ஏன் நீதித் துறை ஈடுபடுவதில்லை என்பதுதான் கேள்வி.
உச்சநீதிமன்றத்தில் 66,349 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 45,89,920 வழக்குகளும், கீழமை நீதிமன்றங்களில் 2,75,66,425 வழக்குகளும் ஆக மொத்தம் 3,22,22,694 வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்கிறது உச்சநீதிமன்ற இணையதளப் புள்ளிவிவரம். 2017 ஜனவரி மாதம் தீரத் சிங் தாக்கூர் பதவி ஓய்வு பெறும்போது இந்த எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருதால் அதுதான் இவரது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
இவருக்கு முன்னால் பதவி வகித்தவர்கள் சொன்னார்கள், செய்யவில்லை. தீரத் சிங் தாக்கூர் சொல்லவில்லை. அதனால், செய்கிறாரா என்று பார்ப்போம்!

தவறான மருத்துவம்!


Dinamani

By ஆசிரியர்

First Published : 14 December 2015 01:21 AM IST


இன்றைய சூழலில் பொதுமக்களை மிகவும் பாதிக்கும் பிரச்னை மருத்துவ வசதி. குறிப்பாக, மருத்துவச் செலவு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல தொடங்கப்பட்ட பிறகு, மருத்துவம் என்பது சேவை என்பது போய், இளைய தலைமுறை மருத்துவர்கள் மத்தியில் அது வெறும் வியாபாரமாக மட்டுமே கருதப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறி வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மேலைநாடுகளில் மருத்துவம் வியாபாரமாக மட்டுமே கருதப்படுவது என்பது உண்மை. ஆனால், அங்கே மருத்துவ காப்பீடு பரவலாக்கப்பட்டு காப்பீடு மூலம் அனைத்து மக்களும் வசதி பெறுவதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தவறான மருத்துவமோ, மருத்துவர்களின் கவனக் குறைவோ, மருத்துவ தர்மத்தை மீறுவதோ, மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள் பெரும் தொகையை இழப்பீடாக பெறுகிறார்கள். டேபிள் டென்னீஸ் வீரர் சந்திரசேகரும் நடிகை ஸ்ரீதேவியும் உதாரணங்கள்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த தலைமுறை மருத்துவர்களிடம் காணப்பட்ட சேவை மனப்பான்மையும், அர்ப்பணிப்பு உணர்வும் புதிய மருத்துவர்கள் பலரிடம் காணப்படவில்லை என்பது பரவலாக உள்ள குற்றச்சாட்டு, அதேநேரத்தில், இளைய தலைமுறை மருத்துவர்கள் சிலர், ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்துவதும், இலவச சிகிச்சை வழங்குவதும், வலிய போய் கிராமங்களில் சேவை புரிவதும் பாராட்டுக்குரிய, மறுக்க முடியாத உண்மை. இதற்கு திருஷ்டி பரிகாரமாக, வியாபார நோக்கில் செயல்படும், கவனக் குறைவுடன் சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் பலர், இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்.
சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் 130 மருத்துவர்கள் மீது தொழில் தர்மத்தை மீறியதற்காகவும், தவறான சிகிச்சை முறைகளை கையாண்டதற்காகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டது வரவேற்க வேண்டிய செயல்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உண்மையில் நடக்கப் போவது என்னவென்றால், இந்த ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெறும் காகிதத்தால் இருக்கப் போகிறது என்பதும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இதனால் கிஞ்சித்தும் பாதிக்கப்படப் போவதில்லை என்பதுதான்.
தொழில் தர்மத்தை மீறுகின்ற மருத்துவர்கள், கவனக் குறைவாக சிகிச்சை அளிப்பவர்கள் ஆகியோர் தண்டிக்கப்படுவது என்பது அவசியம். காரணம், அவர்கள் மனித உயிர்களை வைத்து விளையாடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, தங்களை நம்பி சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளின் நம்பிக்கையை தகர்க்கிறார்கள் என்பதும்கூட. இதை பொறுப்புணர்வுடன் மருத்துவம் பார்ப்பவர்கள் வலியுறுத்துவார்கள் என்பது நிச்சயம்.
கவனக்குறைவுடன் செயல்படுகின்ற, தொழில் தர்மத்தை மீறுகின்ற மருத்துவர்கள் குறித்து புகார் வந்தால் அதை விசாரிக்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்திய மருத்துவக் கழகத்துக்கு அதிகாரம் உண்டு. ஒரு மாதத்திலிருந்து 7 ஆண்டுகள் வரை அந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவக் கழகம் தடை விதிக்க முடியும். இந்த வழிமுறைகள் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டவை. இதற்கான வழிமுறைகளையும் நடைமுறைகளையும் செயல்படுத்தும் பொறுப்பு இந்திய மருத்துவக் கழகத்துக்கும் மாநில மருத்துவக் கழகங்களுக்கும் தரப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலவரம்புக்குள், மருத்துவர்கள் மீது கூறப்படும் புகார்களை விசாரித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு மாநில மருத்துவக் கழகங்களுக்கு உண்டு. அப்படி எடுக்கப்பட்ட முடிவின்மீது அதிருப்தி இருக்குமேயானால், மருத்துவர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ இந்திய மருத்துவக் கழகத்திடம் மேல்முறையீடு செய்யலாம்.
இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறையில் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்பது கேள்விக்குறி. மிகக் குறைந்த அளவு மருத்துவர்கள்தான் தண்டிக்கவோ, கண்டிக்கவோப் படுகிறார்கள். புகார் தெரிவித்தவர்கள் விசாரணை என்கிற பெயரில் அலைக்கழிக்கப்படுவதும், நெடுந்தூரம் பயணித்து ஒவ்வொரு விசாரணையை எதிர்கொள்வதும் வேதனையான உண்மை. இவ்வளவு செய்த பிறகும், கடைசியில் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்கிற நிஜத்தை அவர்கள் எதிர்கொண்டாக வேண்டும்.
தவறிழைத்ததற்காக இந்திய மருத்துவக் கழகம் தண்டிக்கப் பரிந்துரைத்தவுடன், சம்பந்தப்பட்ட மருத்துவர்களின் பதிவு தற்காலிக முடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், மாநில மருத்துவக் கழகங்கள் அந்த மருத்துவர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெறுவதற்காக காலம் தாழ்த்துவது என்பது வழக்கமாகிவிட்டது.
நீதிமன்ற தடை உத்தரவு பெற்றுவிட்டால், தவறிழைத்த மருத்துவர்கள் தொடர்ந்து தொழில் நடத்த முடியும். அந்த தடை நீங்குவதற்கு பல ஆண்டுகள் கடந்து விடும் என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் சலித்து ஓய்ந்துவிடுவார்கள். சில புகார்களில் இந்திய மருத்துவக் கழகம் தண்டித்தப் பிறகு, மறு விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டு, தண்டனையிலிருந்து தப்பியவர்களும் உண்டு.
மருத்துவம் என்பது மகத்தான சேவை. பல மருத்துவர்கள் நோயாளிகளால் தெய்வமாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். மருத்துவத்தை சேவையாகவும் தொண்டாகவும் மேற்கொள்பவர்கள் சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருந்து போற்றப்படுகிறார்கள். இந்த நிலையில், இந்திய மருத்துவக் கழகம் தவறிழைக்கும் மருத்துவர்களை இனம் கண்டு தண்டிக்காமல் விட்டால் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் மருத்துவர்களையும் மக்கள் வெறுக்கும் நிலைமை ஏற்பட்டு விடும்.

மீண்டும் அ.தி.மு.க.,வில் நட்ராஜ் ஒரே நாளில் மாறியது முடிவு


அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து, நேற்று முன்தினம் நீக்கப்பட்ட, முன்னாள் டி.ஜி.பி., ஆர்.நட்ராஜ், நேற்று இரவு, மீண்டும் கட்சியில் இணைத்து கொள்ளப்பட்டார்.
தனியார், 'டிவி' சேனல் நிகழ்ச்சியில், சமீபத்திய மழை வெள்ளம் தொடர்பாக, தமிழக அரசின் செயல்பாடுகளை, நட்ராஜ் என்பவர் கடுமையாக விமர்சித்தார். அவர், அ.தி.மு.க., உறுப்பினரும், முன்னாள் டி.ஜி.பி.,யுமான நட்ராஜ் என, தவறாக ஒளிபரப்பாகி விட, அதை வைத்து, அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் கட்சியின் பொது செயலர் ஜெயலலிதா.
இந்நிலையில், 'டிவி' ஒளிபரப்பில் நடந்த தவறு என தெரிய வந்ததும், நடராஜ் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவதாக, நேற்று இரவு, ஜெயலலிதா அறிவித்தார்.இது குறித்து முதல்வர் ஜெய
லலிதா வெளியிட்ட அறிக்கையில்,' தென் சென்னை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் டி.ஜி.பி., ஆர்.நட்ராஜ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்
படுகிறது. தொடர்ந்து அவர் கட்சியின் உறுப்பினராக செயல்படுவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக நமது நாளிதழுக்கு ஆர்.நட்ராஜ் அளித்த பேட்டி:'டிவி' நிகழ்ச்சியை பொறுத்தவரையில், எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யாரோ, ஒரு நடராஜன், எதையோ சொல்வதற்கும், எனக்கும் என்ன தொடர்பு?
அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டு, அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படும் கருத்துக்களை, எப்படி வெளியிட முடியும்; முதலில், அப்படியொரு சிந்தனையே, எனக்கு எட்டாதே.
முதல்வர் மீது எப்போதும் எனக்கு மரியாதையும், நம்பிக்கையும் உண்டு. அவர் தான் எனக்கு எல்லாமே கொடுத்தார். நான் பொறுப்பில் இருந்த காலகட்டங்களில், எல்லா விஷயங்களிலும், அவர் மெச்சும் படியாகத்தான் பணியாற்றி உள்ளேன்.
அந்த அடிப்படையில் தான், அவர் வழிநடத்தும் கட்சியில் இணைந்தேன். என்னால் முடிந்த அளவுக்கு, இதய சுத்தியோடு, கட்சிப் பணியாற்றி வந்தேன். எந்த இடத்திலும், சிறு நெருடலும் இல்லாமல் தான் நடந்து கொண்டேன்.
சென்னையை சுருட்டி வீசிய மழை, என் வாழ்வையும் யாரோ, ஒரு நடராஜன் மூலம், சுருட்டி வீசி விட்டது. சம்பந்தப்பட்ட பேட்டிக்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத நிலையில், வேறு எந்த சர்ச்சைக்கும் நான் போக மாட்டேன்; அமைதி தான் ஒரே வழி.
இவ்வாறு அவர் கூறினார்.இப்படி பேட்டியளித்த சில மணி நேரத்தில் நட்ராஜ் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

- நமது நிருபர் -

அழிவுக்கு காரணம் ஆக்கிரமிப்புதான்

logo

ஒட்டுமொத்த இந்தியா மட்டுமல்லாமல், உலகத்தையே கருணையோடு தமிழ்நாட்டை பார்க்கவைக்கும் வகையில், கனமழை பெய்து வெள்ளம்... வெள்ளம் எங்கு பார்த்தாலும் வெள்ளம் என்ற அளவில், ஒரு சமுத்திரத்தை போன்ற தோற்றத்தை சென்னை உள்பட தமிழகத்தில் உருவாக்கிவிட்டது. ஏரிகள் எல்லாம் நிறைந்து கரைபுரண்டு ஓடி, தங்கள் பாதையைவிட்டு திரும்பிய இடத்திற்கெல்லாம் சென்று சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இயற்கையின் பேரிடருக்கு யாரையும் காரணமாக சொல்லமுடியாது என்றாலும், பல சேதங்கள் நிச்சயமாக ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்டதுதான் என்பதை யாரும் மறுத்துவிடமுடியாது. நேற்று முன்தினம் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி வெங்கையா நாயுடு கூட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், அந்த பகுதியில் பொறுப்பாக இருந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்னையில் முன்பு மாநகராட்சி இணை ஆணையாளராக அபூர்வா இருந்தபோது பல ஆக்கிரமிப்புகளை துணிச்சலாக அகற்றி ஆக்ஷன் அபூர்வா என்று பெயர் பெற்றார்.

சென்னையை அடுத்த முடிச்சூர் இப்போது வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. இந்த தண்ணீரை எப்படி வடிகட்டுவது, எங்கே போய்விடுவது என்று எல்லோரும் தவித்தனர். இந்த நேரத்தில் நிவாரண பணிகளை மேற்பார்வையிட அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா அதிரடி நடவடிக்கை எடுத்தார். அந்த வெள்ளத்துக்கு காரணமாக இருந்த அடையாறு ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களையும் ஜே.சி.பி. இயந்திரங்களைக்கொண்டு இடித்து அகற்றினார். ஆக, அதிகாரிகள் நினைத்தால் எந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றமுடியும் என்பதை இரு பெண் அதிகாரிகளும் நிரூபித்து விட்டார்கள்.

இவ்வளவு பெரிய சேதத்திற்கும் காரணம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புதான் என்பதை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிலையத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள நீர்நிலைகள், திறந்தவெளி இடங்கள் போன்றவற்றில் 4–ல் ஒருபகுதி கட்டிடங்களாக மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளனர். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,600 ஏரிகள் ஒருகாலத்தில் இருந்த நிலைமாறி, இப்போது 3 ஆயிரம் ஏரிகள்தான் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 19 ஏரிகள் 1980–ம் ஆண்டுகளில் 1,130 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்து, இப்போது 645 ஹெக்டேருக்கும் குறைவாக ஆக்கிரமிப்பால் சுருங்கிவிட்டது. இந்தநிலை சென்னையில் மட்டும் இல்லை, தமிழ்நாடு முழுவதுமே ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய இடமாக நீர்நிலையாகத்தான் இருக்கிறது. அரசாங்கங்களே பல நீர்நிலைகளில் கட்டிடங்களை கட்டிவிட்டன. பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் ரேஷன் கார்டு, மின்சார வசதி, பட்டா போட்டு கொடுத்த அதிகாரிகள் நிச்சயமாக தண்டனைக்குரியவர்கள்தான். சென்னையிலும், முடிச்சூரிலும் இரு பெண் அதிகாரிகள் நினைத்தால் ஓரிரு நாட்களில் எல்லா ஆக்கிரமிப்புகளையும் இடித்து தள்ளமுடியும் என்றநிலை இருக்கும்போது, அதே சட்டத்தை கையில் எடுத்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுத்தால், பாதிக்கப்படப்போவது ஆயிரக்கணக்கானவர்கள் என்றாலும், பாராட்டப்போவது 7 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக்கொண்ட ஒட்டுமொத்த தமிழகமும்தான். ஆக, வெள்ளத்திற்கு மீட்பு, நிவாரணம் ஆகிய பணிகளுக்கு அடுத்து சீரமைப்பை மேற்கொண்டு இருக்கும் தமிழக அரசு, ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட ஊக்குவிக்கவேண்டும். அதிகாரிகளையும் வெங்கையா நாயுடு சொன்னதுபோல, ஆக்கிரமிப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்க வேண்டும்.

Saturday, December 12, 2015

புதின் பருவமா, புதிர்ப் பருவமா 11: காளையை அடக்க என்ன செய்யலாம்?


  
1
ஓவியம்: முத்து
ஓவியம்: முத்து
இளம் வயதில் சமூகவிரோதச் செயல்களைச் சார்ந்து இளைஞர்கள் தடம் புரள்வது பற்றி கடந்த வாரம் பார்த்தோம். இந்தப் பிரச்சினைகளுக்கான காரணத்தைப் புரிந்துகொண்டு, பெற்றோர்களும் ஆசிரியர்களும் இளைஞர்களிடம் எப்படி மாற்றத்தைக் கொண்டுவரலாம்?:
* வகுப்புகளில் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து, ஒருவர் மாற்றி ஒருவரை தலைமைப் பொறுப்பை ஏற்கவைத்துப் பள்ளி சார்ந்த பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்கலாம். சிறுவயதில் தலைமைப் பண்பு வளரும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* பள்ளிகளில் நல்லொழுக்க வகுப்புகளைப் பாடமாக நடத்துவதைவிட சிறு குழு விவாதங்களாகவோ, நாடகங்களாகவோ (Role play) நடத்தலாம்.
* பள்ளிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை வேறுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அது அவர்களுடைய தனித்தன்மையைப் பாதிப்பதுடன் காழ்ப்புணர்ச்சியையும், தாழ்வுமனப்பான்மையையும் அதிகப்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டும்.
* மற்றவர்களிடம் பேசிப் பழகும் திறன் (Interpersonal skills), இதுபோன்ற வளர்இளம் பருவத்தினரிடம் பெரும்பாலும் குறைவாகக் காணப்படும். சிறுவயதிலேயே, மனதில் தோன்றும் பிரச்சினைகளை ஆரோக்கியமான வார்த்தை வடிவில் வெளிப்படுத்தும் திறனை வளர்க்க உதவ வேண்டும். மேலும் பிரச்சினைகளை விட்டு விலகிச் செல்வதைவிட, அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* பொழுதுபோக்குக்காகச் சினிமா தியேட்டர்களை நாடி செல்வதைவிட ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கு வளர்இளம் பருவத்தினரை அவ்வப்போது அழைத்துச் சென்று, மற்றவர்களுக்கு உதவக் கற்றுக்கொடுக்க வேண்டும். மனித உயிரின் முக்கியத்துவத்தை இது அவர்களிடம் உணர்த்தும்.
* Attention defecit and hyperkinetic disorder (ADHD) என்று அழைக்கப்படும் அதீதத் துருதுருப்பு, கவனக்குறைவு மற்றும் அதிக எழுச்சிக்கு ஆளாகும் குழந்தைகள் வளர்இளம் பருவத்தில் அதிக அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், இப்படிப்பட்ட அறிகுறிகள் உள்ள குழந்தைகளை மனநல மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவது நல்லது.
* இது போன்றவர்களிடம் தீவிரக் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே போதைப்பொருள் பழக்கத்தைக் கண்டுபிடிக்க முடியும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஆரம்ப நிலையிலேயே மனநலச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது, நிலைமை கைமீறிச் செல்வதைத் தடுக்கும்.
(அடுத்த முறை: வாழ்க்கை வாழ்வதற்கே)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர் 
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

NEWS TODAY 20.09.2024