Friday, December 18, 2015

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை 56 ஆண்டுகளாக கணவர் பாசத்துடன் கவனித்து வருவது கேட்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்கிறது.

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran


பிஜீங்: கருத்து வேறுபாடு என்ற காரணம் காட்டி திருமணமான ஓரிரு ஆண்டுகளிலேயே விவாகரத்து வரை செல்லும் இளம்தம்பதிகள் மத்தியில, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை 56 ஆண்டுகளாக கணவர் பாசத்துடன் கவனித்து வருவது கேட்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்கிறது. கிழக்கு சீனாவின், ஷன்டாங் மாகாணம், சுஞ்சியாயூ பகுதியைச் சேர்ந்தவர் டூ யூவான்பா (89), இவரது மனைவி சோ யூவ். டூ யூவான்பா நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். திருமணம் நடந்த 5 மாதங்களில் சோ யூவ் மர்மநோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டார். பின்னர் அது முடக்குவாதம்போல் பாதிப்பை ஏற்படுத்தியது. அருகில் உள்ள டையன் நகரில் டூ யூவான்பா வேலை செய்து வந்தார். கடிதம் மூலம் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக மாறி உள்ளதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக டூ யூவான்பா வீடு திரும்பினார். தனது இளம் மனைவி தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தார். அவரால் திரும்பக்கூட முடியாததோடு, ஒரு சிறிய பொருளை கூட கைகளால் பிடிக்க முடியாத அளவுக்கு உடல் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த டூ யூவான்பாவின் நண்பர்கள் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும்படி பலமுறை அவருக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால் டூ யூவான்பா இதனையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டதோடு கடைசி வரை தனது மனைவியை பராமரிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். தனது பணியில் இருந்து விலகிய முழு நேரத்தையும் நோய்வாய்ப்பட்ட மனவைியை கவனிப்பதிலேயே செலவழித்தார்.

விவசாயியாக இருந்து கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக அவர் தனது மனைவியை ஒரு குழந்தைபோல எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி கவனித்து வருகிறார். மனைவிக்கான உணவை ஸ்பூன் மூலமாக கொடுக்கும் டூ யூவான்பா, மனைவியின் இயற்கை உபாதைகளை கூட எந்த சலிப்பும் இன்றி தானே அகற்றி வருவது மனைவி மேல் கொண்டுள்ள அன்பின் உச்சம் எனலாம். பல்வேறு மருத்துவர்களிடமும் மனைவியை அழைத்து செல்லும் டூ யூவான்பா அவர் குணமடைவதற்காக 56 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார்.

டூ யூவான்பா தனது மனைவி மேல் கொண்டுள்ள பற்றை பார்த்து வியந்துபோகும் அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மூலிகை மருந்தை மனைவிக்கு கொடுப்பதற்கு முன்பாக அதில் விஷத்தன்மை இல்லை என்பதை உறுதி செய்வதற்காக முதலில் அதனை டூ யூவான்பா சுவைத்து விட்டுதான் மனவைிக்கு கொடுக்கிறார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...