Friday, December 4, 2015

வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
2
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:15 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:20 AM IST
பூந்தமல்லி,
மழை வெள்ளம் காரணமாக வண்டலூர்–மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
முடக்கம்தொடர் கனமழை காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவில் உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும் குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
வண்டலூரிலிருந்து மீஞ்சூர் செல்லும் சாலை வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் நிறைந்த தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
படகுகள் மூலமாக...திருமுடிவாக்கம் பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெளிவட்ட சாலை மெரினா கடற்கரை போல் காட்சி அளிக்கிறது. தொழிற்சாலைகளுக்கு சென்ற ஊழியர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். அவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெறுகிறது. படகுகள் செல்ல முடியாத நிறுவனங்களில் உள்ளவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
திருமுடிவாக்கம் துணை மின் நிலையத்திற்குள் மழைநீர் அதிகளவில் புகுந்ததால், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள 30–க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று 3–வது நாளாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. அந்த பகுதி மக்கள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
சாலைகள் துண்டிப்புஅடிப்படை தேவைகளான தண்ணீர், பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். குன்றத்தூரிலிருந்து பூந்தமல்லிக்கு வெளிவட்ட சாலை வழியாக சில அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
குன்றத்தூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர், போரூர், பூந்தமல்லி, தாம்பரம் செல்லும் முக்கிய சாலைகள் அனைத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...