Friday, December 4, 2015

ஆலந்தூர் பகுதியில் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆலந்தூர் பகுதியில் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
3
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
ஆலந்தூர்,
ஆலந்தூர் பகுதியில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்கவேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கைசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஆலந்தூர் பகுதியில் கடந்த 3 தினங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், குடிநீர் எதுவுமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
ஆலந்தூரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தான் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் குறைந்தபட்சம் 3 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும் என கடந்த 3 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.
2 மணி நேரமாவது....ஆனால் வேளச்சேரி, கிண்டி, தரமணி ஆகிய பகுதியில் மழைநீர் வடிந்தால் தான் மின்சாரம் வழங்கப்படும். உங்கள் கோரிக்கை எதுவும் ஏற்கமுடியாது என அதிகாரிகள் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
பரங்கிமலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கமலமுத்து மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு பொதுமக்கள், தனியார் நிறுவனத்திற்கு 4 மணி நேரம் மின்சாரம் வழங்கிய அதிகாரிகள், பொதுமக்களுக்காக குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும். 3 தினங்களாக நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறினர்.
சாலை மறியல்ஆனால் உதவி பொறியாளர் செந்தில், உயர் அதிகாரிகள் மின்சாரம் வழங்க தடை விதித்து உள்ளதால், நான் எதுவும் செய்யமுடியாது என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர், பாலாஜிநகர் உள்பட பல பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக அவற்றை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...