Friday, December 4, 2015

வெள்ள சேதம் காரணமாக மத்திய அரசு அறிவிப்பு; தமிழகம் முழுவதும் 11-ந்தேதி வரை சுங்கவரி வசூலிப்பு ரத்து

புதுடெல்லி,

வெள்ள சேதம் காரணமாக தமிழகம் முழுவதும் 11-ந் தேதி வரை சுங்கவரி வசூலிப்பதை மத்திய அரசு ரத்து செய்தது.

சுங்கவரி ரத்து

தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கவரி வசூல் மையங்களில் வருகிற 11-ந் தேதி வரை வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நேற்று தேசிய சாலைபோக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி உத்தரவிட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.

நிவாரணப் பணிகளுக்காக...

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு முகமைகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

இந்த பணிகளை எளிமையாக்கும் விதமாக சுங்கவரி வசூல் மையங்களில் வரி வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...