Saturday, December 12, 2015

கணக்கெடுக்கும் பணி தீவிரம்: ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை- வங்கிக் கணக்கு தொடங்கவும் ஏற்பாடு; பயனாளிகள் மகிழ்ச்சி .... ப.முரளிதரன்

வெள்ள நிவாரண உதவி வழங்கு வதற்கான கணக்கெடுப்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. நிவாரணத் தொகையை ஒரு வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினர் கூறுகின்றனர். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வீட் டுக்கே வந்து கணக்கு தொடங்க படிவம் வழங்கப்படுவதால் பய னாளிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
தமிழகத்தில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு ரூ.5 ஆயிரமும், குடிசை களை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரண உதவி யாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இத்தொகை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
இதுதவிர, ரேஷன் கடைகள் மூலம் 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.
பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்குவதற்காக, பாதிக்கப்பட்ட இடங்களில் கணக் கெடுப்பு பணியில் வருவாய் துறை யினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சென்னை புழல் பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட் டுள்ள வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வீடு வீடாக கணக்கெடுப்பு
வெள்ளத்தால் வீடு சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம், உடைமைகள் சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இரண்டும் சேதம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிவாரண உதவி சரியான பயனாளிகளுக்குச் சென்று சேரவேண்டும் என்பதற்காக வருவாய் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பெயர், வீட்டு முகவரி, அடையாளச் சான்று போன்ற குறிப்பிட்ட தகவல்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன.
வங்கிக்கணக்கு இருந்தால்..
வங்கிக் கணக்கு வைத்திருந்து, அதற்கான ஆவணங்களை இழந் தவர்கள் தங்கள் பெயர், வங்கி கிளை ஆகிய விவரங்களை கூறினால் போதும். அதன் அடிப் படையில், குறிப்பிட்ட வங்கிக்குச் சென்று அவர்களது மற்ற விவரங்கள் பெறப்பட்டு, வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை போடப்படும்.
கணக்கு இல்லாவிட்டால்..
இதுவரை வங்கிக் கணக்கு தொடங்காமல் இருப்பவர்கள், புதிதாக கணக்கு தொடங்க நாங் களே படிவம் வழங்குகிறோம். இதை பூர்த்தி செய்து முன்னோடி வங்கியில் சமர்ப்பித்து, வங்கிக் கணக்கு தொடங்கலாம். கணக் கெடுப்பு முடிந்த ஒரு வாரத்துக்குள் இந்த நிவாரண உதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து முன்னோடி வங்கி அதிகாரிகள் கூறிய போது, ‘‘வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் நிவாரண உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அருகே வசிக்கும் மக்களுக்கு வங்கிகளில் கணக்கு தொடங்குவது சம்பந்த மாக வங்கிகளுக்கும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. மழை வெள்ளத் தில் வங்கி பாஸ்புக் தொலைந்து விட்டாலும்கூட, அவர்களது வங்கிக் கணக்கில் பணம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
பயனாளிகள் மகிழ்ச்சி
இதுபற்றி புழல் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலித் தொழிலாளி கூறும்போது, ‘‘வெள் ளத்தில் என் குடிசை வீடு முழு வதுமாக சேதம் அடைந்துவிட்டது. எனக்கு எந்த வங்கியிலும் இதுவரை கணக்கு இல்லை. என் வீட்டுக்கு கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கித் தருவதாக கூறியுள்ளனர். மக்கள் சிரமப்படாமல், இருக்கும் இடத் துக்கே வந்து வங்கிக் கணக்கும் தொடங்கித்தந்து, அதில் நிவாரண பணத்தைப் போட நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக் கிறது’’ என்றார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...