Friday, December 4, 2015

வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
7
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 4:45 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
பூந்தமல்லி,
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ–வை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
மக்கள் அவதிதொடர் கனமழையால் சென்னை புறநகர் பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதில் குறிப்பாக போரூர், மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, திருமுடிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம் உள்ளிட்ட முக்கிய ஊர்களும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன.
மின்சாரம், குடிநீர், பால், உணவுகள் என அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் கடந்த 3 நாட்களாக கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நிலை குறித்து தெரிந்து கொள்ளமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக விலைபெரும்பாலான பகுதிகளில் வீடுகளின் முதல்மாடி வரை தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகள் முற்றிலும் சேதமடைந்து இருப்பதால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வசிக்க முடியாத சூழலால் மூட்டை முடிச்சுகளுடன் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அகதிகள் போல் வெளியேறி வருகின்றனர்.
பால்கடை, பெட்ரோல் பங்குகள், ஏ.டி.எம் சென்டர் போன்ற எல்லாஇடங்களிலும் பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. குறிப்பாக பால் அரை லிட்டர் ரூ.50, 20 லிட்டர் குடி தண்ணீர் ரூ.150–க்கும் விற்கப்படுகிறது. இதனை வாங்க முடியாமல் மழைநீரை குடித்தும், ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் உணவுகளை வாங்கி வைத்துக்கொண்டு சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பொதுமக்கள் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.
முற்றுகைஇந்த நிலையில் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை பூந்தமல்லி எம்.எல்.ஏ. மணிமாறன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். பொதுமக்கள் கொந்தளிப்புடன் இருந்ததால் அவர்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அவர் மோட்டார்சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார்.
மேலும் சில இடங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்ளாத பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...