Friday, December 4, 2015

வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும் சென்னை புறநகர்வாசிகள் கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள் இயக்கம்

வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும் சென்னை புறநகர்வாசிகள் கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள் இயக்கம்
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
1
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 5:00 AM IST
பதிவு செய்த நாள்:
வெள்ளி, டிசம்பர் 04,2015, 12:21 AM IST
ஆலந்தூர்,
சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
வீடுகளை மழைநீர் சூழ்ந்ததுசென்னை மற்றும் புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பழவந்தாங்கல், மடிப்பாக்கம், நங்கநல்லூர், பள்ளிக்கரணை, நீலாங்கரை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், உள்ளகரம், வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்கட்டளை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மீனம்பாக்கம் குளத்துமேடு பகுதியில் உள்ள 500–க்கும் மேற்பட்ட குடிசைவீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
நங்கநல்லூர், பழவந்தாங்கலில் மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆலந்தூர் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். நங்கநல்லூர் நேரு காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. அந்த பகுதிகளை மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் என்.மகேசன், கவுன்சிலர் ஹேமா பரணிபிரசாத் ஆகியோர் பார்வையிட்டனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்.
தண்ணீரை வெளியேற்றினர்ஆதம்பாக்கம் நிலமங்கை நகர், சக்தி நகர், பாலாஜி நகர், வேல் நகர், பாரத் நகர், சுரேந்தர் நகர், தில்லைகங்கா நகர், டி.என்.ஜி.ஒ.காலனி, ஆலந்தூர் ராஜா தெரு, கண்ணன் காலனி, புளியந்தோப்பு வேளச்சேரி, ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி, பெரியார் நகர், நேரு நகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
ஆதம்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மாநகராட்சி கவுன்சிலர்கள் எம்.ஆர்.நரேஷ்குமார், வி.கோபாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்றினார்கள்.
வேளச்சேரி அம்பேத்கர் நகர், ஏ.ஜி.எஸ்.காலனி, நேதாஜி காலனி, தண்டீஸ்வரன் நகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. வேளச்சேரி நேதாஜி காலனியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அங்குள்ளவர்களை மீட்க மாநகராட்சி சார்பில் படகுகள் விடப்பட்டன.
சித்தாலபாக்கம்சித்தாலபாக்கம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், பனையூர் குப்பம், துரைப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், நன்மங்கலம் வீரமணி நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த பகுதிகளை கே.பி.கந்தன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
உள்ளகரம்–புழுதிவாக்கம் பகுதிகளில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கே.ஜெயசந்திரன், ஜெ.கே.மணிகண்டன் ஆகியோர் ஈடுபட்டனர்.
நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் மழைநீர் அதிகமாக தேங்கி இருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி கணக்கு தணிக்கை குழு தலைவர் நீலாங்கரை முனுசாமி தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றினார்கள்.
பெரும்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேறியதால் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இந்த பகுதியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஊராட்சி மன்ற தலைவர் சுகாசினி ரங்கராஜன் ஆகியோர் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேடவாக்கம்மேடவாக்கத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ப.ரவி தலைமையில் ஊராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் ராஜேஷ் நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருந்தது. நன்மங்கலம் பகுதியில் ஏரியில் இருந்து வெளியேறும் நீருடன் கழிவுநீரும் சேர்ந்ததால் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மடிப்பாக்கம், மேடவாக்கம், கீழ்க்கட்டளை, முவரசம்பட்டு உள்பட புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் வீடுகளை சூழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே வராததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சாலை மூடப்பட்டதுசின்னமலையில் இருந்து கிண்டி கத்திப்பாரா வரை சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அடையாறு ஆற்றில் அதிகமான தண்ணீர் சென்றதால் மணப்பாக்கம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடியிருப்பு, முகலிவாக்கம், நந்தம்பாக்கம் பர்மா காலனி, எம்.ஜி.ஆர்.நகர், உட்கீர்ட்கவுண்ட், கணபதிபுரம், பரங்கிமலை துளசிங்கபுரம் போன்ற பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டோண்மெண்ட் திருமண மண்டபம், பள்ளி கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. நந்தம்பாக்கம் காவல் நிலையம் நீரில் மூழ்கியது. இதனால் பரங்கிமலையில் இருந்து போரூர் செல்லும் பூந்தமல்லி–மவுண்ட் சாலை மூடப்பட்டது.
கத்திப்பாராவில் இருந்து தாம்பரத்துக்கு பஸ்கள்கிண்டியில் இருந்து ஈக்காட்டுதாங்கல், போரூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். தேனீர் விடுதி, சிறிய ஓட்டல்களில் கூட்டம் அலை மோதியது. ஆதம்பாக்கத்தில் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், மனோகரன் ஆகியோர் உணவு வழங்கினார்கள். மழையால் பாதிக்கப்பட்ட ஆலந்தூர் பகுதி மக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் எம்.ஆர்.சீனிவாசன் உணவு வழங்கினார். அத்தியாவசிய பொருட்களான பால் உள்பட எதுவும் கிடைக்காமல் பொதுமக்கள் அலைந்தனர்.
சின்னமலையில் இருந்து நடந்து கத்திப்பாரா வரை வந்த பொதுமக்களுக்காக மாநகர பஸ்கள் தாம்பரம் வரை இயக்கப்பட்டன. செல்போன் இணைப்புகள் சரிவர கிடைக்காததால் மக்கள் அவதிப்பட்டனர். தொலைபேசி நிலையங்களில் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பேசிச் சென்றனர்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...