Sunday, January 10, 2016

நிதி ஆளுமையில் நீங்கள் எப்படி?

 Return to frontpage


எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்கிற வாசகம் ஒரு வரி நகைச்சுவையாக பலரும், பல இடத்திலும் சொல்லியிருக்கிறோம், சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தைகளைக் கேட்டு சிரிப்பதற்கான பொருள் இருக்கிறதா என்றால் எதுவும் கிடையாது. இதை திரைப்படக் காட்சியோடு பொருத்தி வெறும் நகைச்சுவையாக கடந்துபோவதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.
எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்பதுதான் உண்மை. வேலைகளை திட்டமிடுவது என்பது, வேலைகளை பாதி செய்து முடித்ததற்கு சமமானது என்கிறனர் அறிஞர்கள்.
இது பொதுவான அனைத்து இடத்துக்கும், சூழலுக்கும், வேலைக்கும் பொருந்தும் என்றாலும், இந்த புது ஆண்டு தொடக்கத்தில் நமது வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்ப பிளான் பண்ணுவது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக வரவு, செலவு பொருளாதார விஷயங்களில் குழப்பமில்லாமல், தெளிவான திட்டத்துடன் இருந்தால் தனிநபர்களின் வாழ்க்கை இலக்குகளில் சிக்கல் இருக்காது என்கின்றனர் குடும்ப நிதி ஆலோசகர்கள்.
பொருளாதார விஷயங்களில் இந்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய திட்டங் கள், அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்காக நிதி ஆலோச கர்கள் தரும் விளக்கங்கள் இது.
இந்த ஆண்டில் வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், வெளிநாட்டுச் சுற்றுலா போக வேண்டும் என கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சில வேண்டும்கள் அதிகரித்திருக்கலாம். இந்த அனைத்து தேவைகளையும் அடைவதற்கு தேவை ஒரு முறையான திட்டமிடுதல். அதை இந்த புது ஆண்டிலிருந்தாவது தொடங்குவோம்.
கடன்களை முடியுங்கள்
தனிநபர்களின் பொருளாதார திட்ட மிடுதல்களில் முதன்மை கடமையாக வலியுறுத்தப்படுவது கடன்கள் இல் லாமல் இருப்பதுதான். ஒவ்வொரு கடனையும் அவ்வப்போது அதற்குரிய கால அவகாசத்தில் முடிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கடன்களை திருப்பி செலுத்துவதில் நாணயமானவர் என்கிற பட்சத்தில்தான் புதிய கடன்களை வாங்கு வதற்கான தகுதி தீர்மானிக்கப்படும். அப்போதுதான் நிதிச் சார்ந்த இலக்கு களை எளிதாக திட்டமிட முடியும்.
வருமானத்தை அதிகப்படுத்துங்கள்
கூடுதல் வருமானத்தை உறுதிப் படுத்த வேண்டும். மாதாந்திர சம்பளக்காரர்கள் என்றால் உங்கள் வேலை நேரம் போக, மீதி நேரங்களில் இரண்டாவது வருமானத்துக்கு வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனித் திறமைகளை வருமானமாக்கும் வழிகளை திட்டமிடுங்கள். சொந்த தொழில் என்றால் தொழிலில் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடுங்கள்.
சேமிப்பை தொடங்கவும்
ஒவ்வொரு மாதமும் சேமிப்பது பழக்கமாகட்டும். சென்ற ஆண்டில் செய்த தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். செலவு களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். அவசியமில்லாத செலவுகளை மேற் கொள்ள ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கலாம்.
எழுதி வைக்கவும்
ஒவ்வொரு செலவையும் எழுதி வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு செலவாகிறது, அதில் தேவையில்லாத பழக்கங்களுக்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறோம் என்பது தெரிய வரும். கணக்கில்லாமல் செலவு செய்வது மாத திட்டமிடலில் துண்டு விழ வைக்கும்.
இதுபோல நமது சேமிப்பு, முதலீடுகள், வங்கி கணக்கு விவரங்கள், காப்பீடு போன்ற நிதி சார்ந்த ஆவணங்களை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதி வைப்பதும் தெரிந்து கொள்ளச் செய்வதும் முக்கியமானது. ஒருவருக்கு மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்கிற ரகசியம் கடைபிடிப்பதை இந்த வருடத்திலிருந்து கைவிடுங்கள்.
வீண் செலவுகள்
வீண் செலவுகள் என்று எதுவுமில்லை. ஆனால் அதை எப்போது செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வீண் செலவா, இல்லையா என்பது முடிவு செய்ய முடியும். ஆன்லைன் ஸ்டோரில் ஆபர் கிடைக்கிறது என்பதற்கான கடன் வாங்கி பொருட்களை வாங்குவது வீண் செலவுதான் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். நோக்கமில்லாமல் மால்களுக்கு சென்று பொருட்களை வாங்குவது, நமக்கு உபயோகப் படாத கருவிகளை அந்தஸ்துக்காக வாங்குவது போன்ற செலவுப் பழக்கங்களையும் குறைக்க வேண்டும்.
காப்பீடுகள்
காப்பீடுகளின் அவசியம் குறித்து தெரிந்து வைத்திருந்தாலும் அதன் முழு பலனை அனுபவிப்பதற்கு திட்டமில்லை. வருமானம் ஈட்டுபவர்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸூம், குடும்பத்திற்கு போதுமான மருத்துவ காப்பீடு திட்டங் களையும் இந்த ஆண்டிலாவது திட்ட மிடுங்கள்.
வருமானம் ஈட்டும் இளவயதினருக் கான டேர்ம் காப்பீட்டின் பிரீமியத் தொகை ஒப்பீட்டளவில் குறைவானது என்பது முக்கியமானது.
அவசர தேவைகள்
அவசரகால தேவைகளுக்கான நிதி ஒதுக்குவது முக்கியமானது. இதை சேமிப்பு போல கருதி கை வைக்காமல் இருக்க வேண்டும். சாதாரணமாக சமாளிக்கக்கூடிய செலவுகளுக்கு இதில் கை வைக்க கூடாது. இப்படி ஒரு தொகையை ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிற எண்ணம் பலருக்குமே இருப்பதில்லை. ஆனால் அவசியம் என்கிறனர் அனுபவசாலிகள்.
முதலீடுகள்
இதுவரை முதலீடுகள் மேற்கொள் வது குறித்து யோசிக்காதவர்கள் இனிமேலா வது யோசிக்க வேண்டும். மாத திட்டமிடலில் இதற்கும் ஒரு தொகை ஒதுக்குங்கள். குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இதற்கு ஒதுக்க வேண்டும். நிதி சார்ந்த முதலீடு திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என முதலீடு திட்டங்களை பிரித்து மேற்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட், தங்கம் என ஒரே முதலீட்டில் கவனம் செலுத்துவது சரியான வழியல்ல. எதிர்கால நலன்கள் பொருட்டு முதலீடுகள் அவசியம்.
ஓய்வு கால நிதி
ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதி யாக வைத்துக்கொள்ளவும் நிதி ஒதுக்க வேண்டும். வருமானம் ஈட்டும் வரை தற்போதைய வாழ்க்கைத் தரம் இருக்கும். அதற்கு பிறகு இதே வாழ்க்கைத் தரத்தை நீடிக்க வேண்டு மெனில் ஓய்வுகால நிதி ஒதுக்கீடு தேவை. இதற்கு என்று பிபிஎப், என்பிஎஸ் திட்டங்கள் உள்ளன.
பட்ஜெட் போடுங்கள்
இலக்கில்லாத பயணம் கடைசியில் எந்த இடத்துக்கும் சென்று சேராது என்பார்கள் அதுபோல திட்டமிடா மல் செய்கிற செலவுகளால் எந்த பழக்கத்தையும் கடை பிடிக்க முடியாது. வருமானத்துக்கும் செலவுக்குமே சரியாக இருக்கிறது அப்பறம் எதற்கு திட்டமிடுவது என யோசிக்க வேண்டாம். நிதி கையாளுவதில் நமது திறமை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வதற்குகூட திட்டமிடுதல் அவசியமாகிறது.
மாதந்தோறும் குடும்பத்திற் கான பட்ஜெட் முன் கூட்டியே எழுத வேண்டும். இதனால் செலவுகளுக் கான முன்னுரிமையை திட்டமிட லாம். கடந்த காலங்களில் உங்கள் நிதி ஆளுமை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்படியான உறுதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிதி ஆளுமை என்பது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை ஆண்டின் முடிவில் அறிந்து கொள்வீர்கள்.

உருளைக்கிழங்கைக் கைவிடலாம்; உறவுகளை?

Return to frontpage

வாழ்க்கையில் நமக்குப் பிரியமானவை என்று சில விஷயங்கள் உண்டு. பிரியமானவற்றை எப்போது கைவிடுவது, எப்போது விடாபிடியாகக் கடைப்பிடிப்பது என்ற தேர்வு முக்கியமானது.

என் பிரியங்களில் முக்கியமானது உருளைக்கிழங்கு. ஆரோக்கியமான உணவான அது பல வீண் பழிகளுக்கு உள்ளாகிவந்திருப்பது தனிக்கதை. சிறுவயது முதலே உருளைக்கிழங்கின் ருசி உணர்ந்துவிட்ட நான் அதை எந்த ரூபத்திலும் எந்த வேளையிலும் எப்படியும் சாப்பிடத் தயங்க மாட்டேன். உருளைக்கிழங்கை ஊறுகாயாகவோ பாயசமாகவோ செய்தால்கூட நான் விரும்பி உண்பேன். வாரத்தில் பத்து முறையாவாவது உருளைக்கிழங்கை உண்பவனாக சுமார் 40 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறேன்.

அந்தப் பிரியத்தை நான் கைவிட்டு 28 மாதங்களாகின்றன. வாரத்தில் ஒரு வேளை இப்போதெல்லாம் உருளைக்கிழங்கை சாப்பிடுவதே அபூர்வம். அதுவும் அதை ஒரு மணி நேரம் வெந்நீரில் ஊறவைத்து அதிலிருக்கும் பொட்டாசியத்தின் அளவைக் குறைக்கும் ‘லீச்சிங் முறை’யைக் கையாண்டு சமைத்த பின்னரே சாப்பிட வேண்டும். காரணம் இரு வருடங்கள் முன்னர் என் சிறுநீரகங்கள் செயலிழந்ததுதான்.

டாயாலிஸுடன் ஒரு போர்

அப்போது மருத்துவர்கள் அடுத்த 15 நாட்களுக்குள் நான் டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்றார்கள். நான் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு டயாலிசிஸ் செயவதைத் தவிர்க்க விரும்புகிறேன் என்றேன். அதற்கான உணவுக் கட்டுப்பாடு ஆலோசனைகளைப் பெற்றேன். அதன்படிதான் உப்பையும் உருளைக்கிழங்கையும் கைவிட்டேன். உப்பிட்ட உருளை முதல், கோஸ், அவரை, சௌசௌ, வடை, பஜ்ஜி எல்லாமே எனக்கு மிகவும் பிரியமானவை. இப்போது அவை என் வாழ்க்கையில் முக்கியமானவையாக இல்லை. அந்தப் பிரியங்கள் மீதான பற்று எனக்கு அற்றுவிட்டது.

இன்னொரு பிரியத்தையும் நான் கைவிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். கூட்டம் நிரம்பிய இடங்களுக்குச் செல்வது, அதிகமான மனிதர்களுடன் சந்தித்து உறவாடுவது முதலியன தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அது. காரணம் அங்கெல்லாம் எளிதில் எனக்கு ஏதேனும் தொற்று ஏற்படலாம். அதற்கு சிகிச்சை தருவது சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிக்கலானது என்றார்கள்.

எனவே திரையரங்கு களுக்குச் செல்வது, பொதுகூட்டங்களில் பங்கேற்பது, திரளான மாணவர்களுடன் பயிற்சிகள் நடத்துவது, வீட்டு முன் அறையில் 20 பேருடன் நாடகப்பயிற்சி செய்வது, ஏசி டிவி ஸ்டூடியோக்களுக்கு செல்வது எல்லாமே எனக்கு ஆபத்தானவை என்றார் ஒரு மருத்துவர்.

மனிதர்களைக் கைவிட முடியுமா?

இந்தப் பிரியத்தை நான் கைவிட மறுத்துவிட்டேன். தொடர்ந்து பல மனிதர்களை சந்திப்பதும் உறவாடுவதும் உரையாடுவதும் குழுவாகச் செயல்படுவதும் என் பள்ளிக் காலம் முதலான என் பிரியங்களில் ஒன்று. என் மனதுக்குப் பிரியமான இதை நான் செய்ய முடியாமல் போனால், நான் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டு மோசமான நோயாளியாவேன் என்று நான் கருதுகிறேன். அப்போது ஒரு வேளை என் உடல் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், என் மனம் துருப்பிடித்து சிதைந்துபோய்விடும். எனவே இந்தப் பிரியத்தைநான் கைவிடவில்லை. ஞாநி

கடந்த இரு வருடங்களில் மாதம் மும்மாரி வீதம் டிவி நிலையங்களில் கருத்துமாரி பொழிந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் இடங்களுக்குப் பல முறை சென்றேன். நூற்றுக்கணக்கானவர்களுடன் தொடர்ந்து பேசினேன். உறவாடினேன். மிகக் கடுமையான தொற்று ஏற்படும் ஆபத்து உடைய இடங்கள் என்று சொல்லப்பட்ட இரு குடிசைப் பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காகச் சென்றேன். எங்கள் ‘பரீக்‌ஷா’ நாடகக் குழு வாராவாரம் சந்தித்துப் பயிற்சிகள் செய்கிறது. பல வெளியூர்களுக்கு சென்று நாடகங்கள் நடத்தினோம். எல்லா இடங்களிலும் என் உணவுக் கட்டுப்பாடு தொடர்ந்தது. அதேசமயம், மனமலர்ச்சி விரிவடைந்தது. நோயை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக் கிறேன்; டயாலிஸிஸை இன்றுவரை தவிர்த்து வருகிறேன்.

சில பிரியங்களை நாம் கடந்து போக வேண்டும். சில பிரியங் களை கடைசி வரை கட்டிப்பிடித்து உடன் வைத்திருக்க வேண்டும். எதை, எப்படி என்ற தேர்வே வாழ்வைத் தீர்மானிக்கும்.

- ஞாநி, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

அண்ணாபல்கலையில் பட்டமளிப்பு விழா

DINAMALAR

சென்னை, :சென்னை, அண்ணா பல்கலையின், 36வது பட்டமளிப்பு விழா, ஜன., 20ல் நடக்கிறது. இந்த பட்டமளிப்பு விழாவை, டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத மழை, வெள்ள பாதிப்பால் விழா தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜன., 20ல் பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது. அண்ணா பல்கலை வளாகத்தில், விவேகானந்தா கலையரங்கில் நடக்கும் விழாவில், தமிழக அரசின் அப்துல் கலாம் விருது பெற்ற, 'இஸ்ரோ' விஞ்ஞானி வளர்மதி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., ஆகியவற்றில் முதல் தரம் மற்றும் தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு மட்டும், நேரடியாக பட்டம் வழங்கப்படும். பிஎச்.டி., முடித்தவர்களுக்கும் நேரடியாக பட்டம் வழங்கப்படும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை: சுஷ்மா

dinamalar

புதுடில்லி : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: தற்போது இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டுமென யோசனை தெறிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு பெண்களை அனுப்ப தனியார் நிறுவனங்களுக்கு இனி அனுமதியில்லை. அரசு ஏஜென்சிகள் மூலம் மட்டுமே இனி அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, January 9, 2016

இன்று வெளிநாடுவாழ் இந்தியர் தினம்

Dinamani

வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2003-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915. அதன் நினைவாக அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும், இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும் இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக்காட்டவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'ப்ரவசி பாரதிய சம்மான்' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.

தாவரத்தைக் காப்பாற்றும் அசைவப் பூச்சிகள்


Dinamani

By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 09 January 2016 03:38 AM IST


பூச்சிகளில் அதென்ன சைவம்? அசைவம்? உயிரியல் விஞ்ஞானம், உயிரினங்களை மாமிச பட்சிணிகள் என்றும் சாகபட்சிணிகள் என்றும் இரண்டாகப் பிரிக்கின்றது. இதைத்தான் நாம் சைவம், அசைவம் என்று தமிழில் வகைப்படுத்தியுள்ளோம். விவசாயம் செழிக்க அசைவப் பூச்சிகளின் ஆற்றலை அறிவதே நம் நோக்கம். சைவப் பூச்சிகள் பசுமைகளின் எதிரிகள். அசைவப் பூச்சிகளே விவசாயிகளுக்கு நண்பர்கள்.
பூச்சிகளில் எவை சைவம், எவை அசைவம் என்று கண்டறிந்து அசைவத்தை வளர்த்துப் பசுமையைக் காப்பாற்றுவதே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம். இது சரியாக நிகழ்ந்தால் விஷமான பூச்சி மருந்துகளுக்கு வேலையே இல்லை. பூச்சி மருந்துகளைக் கையாளாமல் பருத்தி உற்பத்தியைப் பெருக்கிய பெருமையைப் பெறும் ஒரு இளவயது மங்கை மனீஷாவை, வட இந்திய ஊடகங்கள் விளம்பரப்படுத்தியுள்ளன.
ஹரியாணா மாநிலத்தில் ஜிண்ட் மாவட்டத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பருத்தி விளைச்சலை உயர்த்தும் "ஜிண்ட் பாக்கேஜ் திட்டம்' பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிலும் பரவி விட்டதால் பூச்சி மருந்து முதலாளிகள் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கண்கலங்கி நிற்கின்றனர். இதன் பின்னணியில் இருக்கும் வேளாண் விஞ்ஞானி சுரீந்தர் தலாலின் விடாமுயற்சியால் இந்த வெற்றி என்பது மிகையல்ல.
மங்கை மனீஷா குருவை மிஞ்சிய சிஷ்யையாக உருவாகிவிட்டதால் மனீஷா "கீட் மாஸ்டராணி' (பூச்சி மாஸ்டர்) என்று செல்லமாக உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படுகிறார். பருத்தி விவசாயத்தை நாசம் செய்வது வெள்ளை ஈக்கள். இந்த வெள்ளை ஈக்களின் பரம எதிரி சிரை சோபா (Chry Sofa) எனப்படும் ஒரு செம்பொறி வண்டு. ஒரு செம்பொறி வண்டு நாளொன்றுக்கு 150 வெள்ளை ஈக்களை உண்கின்றனவாம்.
தீதார் போரா என்ற பூச்சி பச்சை இலைப் பூச்சியின் முட்டைகளை உண்ணுமாம். எந்தப் பூச்சிக்கு எந்தப் பூச்சி எதிரி என்று கண்டுபிடித்து, எதிரிப் பூச்சிகளின் ஒட்டுண்ணியை விடுவதில் மனீஷா வல்லவராம். எனினும், பூச்சிகளை வளர்க்கப் பசுமை வேண்டும். ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைப் பசுமையிலிருந்துதானே தொடங்க வேண்டும்!
பஞ்சபூத சக்திகளில் நீருக்கு நிகரான சக்தி சூரிய சக்தி. உலகுக்கே ஒளிவழங்கும் சூரிய பகவான் இல்லாவிட்டால் உலகே இருண்டுவிடும். மனிதர்கள், விலங்குகள், பட்சிகள், பூச்சிகள் அவை மாமிச பட்சிணியானாலும் சாக பட்சிணியானாலும் - தசைகளை இயக்க இயந்திர சக்தி, நரம்புகளை இயக்க மின்சக்தி, உடலை வளர்க்க ரசாயன சக்தி, உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க வெப்ப சக்தி என்று சகல ஜீவராசிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள எல்லா சக்திகளுக்கும் சூரிய சக்தியே மூலாதாரம்.
இனி வருங்காலத்தில் மரபுசாரா எரிசக்தியை நாம் சூரிய பகவானிடமிருந்துதானே பெற்றாக வேண்டும். எனினும், சூரிய சக்தியை உள்வாங்கிப் பேராற்றலைப் பெற்றுப் பசுமையை வளர்த்து உலகைக் காப்பாற்றும் அற்புத சக்தியை மரங்களும் செடி, கொடிகளும் பெற்றுள்ளன.
புவியின் பசுமைப் போர்வையையும், உணவுகளையும் தாவரங்கள் சூரியசக்தியை உள்வாங்கி ஒளிச்சேர்க்கை செய்வதால்தான் உலகமே இயங்குகிறது.
இவ்வாறு உலகம் இயங்க மூலகாரணம் சூரியன் என்பதால்,
"பரிதியே, பொருள் யாவர்க்கும்
முழு முதலே
பொன் செய் பேரொளித்திரளே,
அனைத்து ஜீவர்க்கும் பிரம்ம ஒளியே
ஒளிக்கு ஒளியே, ஒலி நுழையும்
விண்ணில்
ஒளியாய் நிற்பவனே, வாழியவே...'
என்பது வேத வாக்கியம். வேளாண்மையில் சூரியன் அருளால் நிகழும் ஒளிச்சேர்க்கையினால் பசுமையைக் காப்பாற்றுவது அசைவப் பூச்சிகளே. சைவத்தை வாழ வைப்பது அசைவம் என்கிறது விருட்சாயுர் வேதம். குணபத்தை (Dead Bodies) ரசமாக்கி, நுண்ணுயிரிகளாக்கி வேரில் ஏற்றிக்கொண்டு மரங்கள் காய்ப்பதாகவும், தாவரங்கள் தானியங்களை வழங்குவதாகவும் விருட்சாயுர் வேதம் குறிப்பிட்டுள்ளது.
தாவரங்களில் பசுமை ஏற்படும்போது அப்பசுமையை உண்ண வரும் சைவப் பூச்சிகளை உண்டு தாவரங்களைக் காப்பாற்றும் அசைவப் பூச்சிகளைப் பற்றி அறிய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு. ஒவ்வொரு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் பூச்சியியல் துறை உண்டு. இத்துறையை ENTOMOLOGY என்பர்.
ஆனால், இத்துறை நிபுணர்கள் இயற்கையை மதிப்பதில்லை. பூச்சிமருந்து நிறுவனம் வழங்கும் உயிர்க்கொல்லிகள் பற்றியே மாணவர்களுக்குப் போதிப்பார்கள். பூச்சிமருந்துக் கம்பெனி வழங்கும் கமிஷன் பெறுவதில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள்.
ஒரு பயிருக்குப் பூச்சிமருந்து அடிப்பதால் பயிருக்குத் தீமை செய்யும் பூச்சிகளுடன் நன்மை செய்யும் அசைவப் பூச்சிகளும் இறந்து விடும். எவ்வளவுதான் மருந்து அடித்தாலும் இலைகளின் பின்புறத்தில் உள்ள முட்டைகள் அழிவதில்லை. அவை பூச்சியாகி மீண்டும் தாக்கும்போது அசைவப் பூச்சிகள் இல்லாததால் பசுமை இழந்து விளைச்சல் குறைகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் தப்பிப் பிறந்த பூச்சியியல் நிபுணர் சுரீந்தர் தலால் இயற்கையோடு இணைந்து ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தைப் பருத்தி விவசாயிகளிடம் கற்பித்து பஞ்சாப் - ஹரியாணா, ராஜஸ்தான் பருத்தி விவசாயிகளைத் தற்கொலையிலிருந்து மீட்டுள்ளார்.
2007-ஆம் ஆண்டிலிருந்து 2013-இல் அவர் இறக்கும் வரை பஞ்சாப் - ஹரியாணா - ராஜஸ்தான் மாநில எல்லைகளை ஒட்டிய பருத்தி மாவட்டங்களில் உள்ள 18 கிராமங்களில், சுமார் 200 பருத்தி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக அடிப்படையில் அசைவப் பூச்சிகளை அடையாளப்படுத்தும் பயிற்சியை வழங்கியுள்ளார். இவர் வழங்கிய பயிற்சியில் 50 பெண்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் கீட்மாஸ்டராணி மனீஷா.
ஒளிச்சேர்க்கை மூலம் தாவரம் சமைக்கும் உணவைப் பற்றி சுரீந்தர் தலால் செய்துள்ள நுட்பமான ஆய்வு வியப்புக்குரியது. "ஒரு தாவரம் நாளொன்றுக்கு 4.5 கிராம் உணவு சமைக்கிறது. இதில் அதன் பங்கு 3 கிராம். சுமார் 1.5 கிராம் பூச்சிகளுக்கு ஒதுக்குகிறதாம். பூச்சிகளுக்கு உணவு வழங்கும் கடமை பருத்திச் செடிக்கும் உண்டு.
இந்த உணவு வேர், தண்டு, இலைப் பகுதிகளில் உள்ளன. இந்த உணவில் பூச்சிக்கு கால் பங்கு உண்டு. கால் பங்கு உணவை சைவப் பூச்சிகள் தின்பதால் பயிருக்கு நஷ்டம் இல்லை. ஆனால், கால் பங்குக்கு மேல் சைவப் பூச்சிகள் தாவரங்களை உண்டால் தாவரம் பலம் குன்றும்.
ஆகவே சைவப் பூச்சிகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அசைவப் பூச்சிகளின் ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டுவது அவசியம். அதேசமயம், வயல்வெளிப் பயிற்சியில் கணிசமான அளவில் அசைவப் பூச்சிகளை அடையாளம் செய்துவிட்டால் ஒட்டுண்ணி அட்டையும் வேண்டாம். பூச்சிமருந்தும் வேண்டாம்.'
இவ்வாறே பயிர்களை அழிக்கும் சைவப் பூச்சிகளின் எண்ணிக்கை ரசாயன உரப் பயன்பாடு கூடும்போது அவையும் கூடுகின்றன என்று கூறிய தலால், ஒரு புதிய பருத்தி பாக்கேஜ் திட்டத்தை ஹரியாணாவில் உள்ள ஜிண்ட் மாவட்டத்தில் நிடானா என்ற கிராமத்தில் அறிமுகம் செய்து வெற்றி கண்டதைத் தொடர்ந்து அது "ஜிண்ட் பாக்கேஜ்' என்று பிரபலமாகிவிட்டது.
வேளாண்மைத் துறை சிபாரிசு செய்யும் பேக்கேஜ் திட்டத்தின்படி ஒரு ஏக்கர் பருத்திக்கு 2 மூட்டை (100 கிலோ) டி.ஏ.பி., 4 மூட்டை (200 கிலோ) யூரியா, 1 மூட்டை பொட்டாஷ் (40 கிலோ), 10 கிலோ துத்தநாகம் (ஜிங்க்) என்பது கணக்கு. ஆனால், தலால் வகுத்துள்ள கணக்கில் ஏக்கருக்கு 15 கிலோ டி.ஏ.பி., 15 கிலோ யூரியா, 1 கிலோ பொட்டாஷ், 3 கிலோ துத்தநாகம் போதுமானது.
அடி உரமாக இயற்கை இடுபொருள்களை வழங்கிய பின்னர் ரசாயன உரத்தை கீழ்க்கண்ட அளவில் -- 2.5 கிலோ டி.ஏ.பி., 2.5 கிலோ யூரியா, 100 கிராம் பொட்டாஷ் 500 கிராம் பொட்டாஷ் சேர்ந்த 5.6 கிலோ கலப்பு உரங்களை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 டேங்க் ஸ்ப்ரே செய்யுமாறு கூறுகிறார். இவ்வாறு பருத்தி பயிரிட்டுக் காய்க்கும் வரை 6 முறை ஸ்ப்ரே செய்யுமாறு சிபாரிசு செய்துள்ளார்.
ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்துடன் மிகக் குறைந்த அளவு ரசாயனப் பயன்பாடும் இணைந்து பருத்தியின் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளதும் புலனாயிற்று. அதே அளவு ரசாயன உரங்களை வலியுறுத்திய துறை சார்ந்த வயலில் ஒரு காயில் 3.5 கிராம் பஞ்சுதான் கிடைத்தது. அதேசமயம், தலால் சிபாரிசு செய்த குறைந்த அளவு ரசாயன உரப் பயன்பாட்டில் ஒரு காய்க்கு 5 கிராம் பஞ்சு கிடைக்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து தலால் மறைவுக்குப் பின் அவரது பாக்கேஜ் திட்டத்தையும், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி, அவர் நினைவாக "சுரீந்தர் தலால் கீட் சட்சாரத் மிஷன்' என்ற பெயரில் ஏராளமான கிளைகளுடன் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் எல்லைப்புற பருத்தி மாவட்டங்களில் பருத்தி உற்பத்தியாளர் விவசாய சங்கம் அகாவத்தின் தலைமையில் செயலாற்றி வருகிறது (கீட் என்றால் பூச்சி என்று பொருள்).
பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மாநில எல்லை மாவட்டங்களில் அதிக அளவில் பருத்தி விளைகிறது. இதுநாள் வரையில் அம்மாவட்டங்களில் உள்ள பருத்தி விளையும் கிராமங்களில் "வெள்ளை ஈ' தாக்குதலால் 75 சதவீதம் விளைச்சல் பாதிப்புற்றதால் அதைக் கட்டுப்படுத்த அதிக அளவில் பூச்சி மருந்தையும், ரசாயன உரப் பயன்பாட்டையும் அரசின் வேளாண்மைத் துறை சிபாரிசு செய்து வருகிறது. அரசின் சிபாரிசுகளை ஏற்று அவ்வாறு செய்தும்கூட "வெள்ளை ஈ' கட்டுப்படுவதாயில்லை.
இம் மூன்று மாநிலங்களிலும் ஏற்பட்ட சேத மதிப்பு ரூ.4,500 கோடி மதிப்புள்ள பருத்தி. பி.ட்டி பருத்தி பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் தாங்க முடியாத உரம் - பூச்சிமருந்துச் செலவினால் கடனாளியாயினர். சுமார் 20 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கெல்லாம் தக்க தீர்வை சுரீந்தர் தலால் கீட் சட்சாரத் மிஷன் வழங்கி வருகிறது.
பருத்தி விவசாயிகளின் துயர் நீங்கி வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த இளவயது மங்கை மனீஷா போல் ஆயிரக்கணக்கில் மனீஷாக்கள் தோன்றிவிட்டால் இந்தியா பருத்தி உற்பத்தியில் புதிய எல்லையைத் தொட்டு விடும்.

சூரிய சக்தியை உள்வாங்கிப் பேராற்றலைப் பெற்று பசுமையை வளர்த்து உலகைக் காப்பாற்றும் அற்புத சக்தியை மரங்களும் செடி, கொடிகளும் பெற்றுள்ளன.

மாடுகளை அலங்கரிக்க பிளாஸ்டிக் பூக்கள்: வரவேற்பு குறைந்துவரும் பாரம்பரிய நெட்டி மாலை

Return to frontpage


வி.சுந்தர்ராஜ்


மாட்டுப் பொங்கலின்போது கால் நடைகளை அலங்கரிக்க தற் போது பாலித்தீன் பூக்கள், காகிதப் பூக்களை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கியதால் பாரம்பரிய நெட்டி மாலைகளுக்கு மவுசு குறைந்து வருகிறது.

மாட்டுப் பொங்கலன்று மாடு களைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து விவசாயிகள் அழகு பார்ப்பார் கள். பொங்கலையொட்டி கால் நடைகளுக்கு அணிவிப்பதற் காகவே பிரத்யேகமாக தயாரிக் கப்படும் நெட்டி மாலைகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

இந்த நெட்டி மாலை தயாரிப்புத் தொழிலில் திருவாரூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் உள்ள சுமார் 120 குடும்பங்கள் கடந்த நான் கைந்து தலைமுறைகளாக ஈடு பட்டுள்ளன.

பெரும்பாலும் விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டுமே இந்த நெட்டி மாலைத் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக குளங்கள், ஏரிகள், வாய்க்கால் பகுதிகளுக்குச் சென்று அங்கு வளர்ந்திருக்கும் நெட்டியை (ஒரு வகையான தாவரம்) அறுத்துக் கொண்டு வந்து அதனை பக்குவமாக காய வைத்து பின்னர், துண்டு துண்டு களாக நறுக்கி, சாயமேற்றி, அதனை மாலையாக்கி விற்பனை செய்கின்றனர்.

ஆனால், கடந்த சில ஆண்டு களாக பாலித்தீன் மாலைகளும், காகித மாலைகளும் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருவதால், பாரம்பரியமாக மாடு களுக்கு அணிவிக்கப்படும் நெட்டி மாலைகளுக்கு பொது மக்களிடம் வரவேற்பு குறைந்து விற்பனை மந்தமாக உள்ளது.

இதுகுறித்து நெட்டி மாலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கோவிந்த சாமி கூறியபோது, “எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் இந்த நெட்டி மாலை தயாரித்து, விற் பனை செய்து வருகிறேன். முன் பெல்லாம், ஏரி, குளங்களில் அதிக அளவில் நெட்டிகள் கிடைக்கும்.

தற்போது மீன் வளர்ப்பதற்காக நீர் நிலைகள் குத்தகைக்கு விடப் படுவதால் நெட்டிகள் அழிக்கப் படுகின்றன. இதனால் முன்பு போல அதிக அளவு நெட்டிகள் கிடைப்பதில்லை. ஒருசில இடங்களில் கிடைக்கும் நெட்டி களைச் சேகரித்து மாலையாக தயாரித்து வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய் கிறோம். இங்கிருந்து தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு நெட்டி மாலைகள் அனுப்பப்படு கிறது.

இதில் காசு மாலை, ரெட்டை மாலை, தாண்ட மாலை என 3 வகைகள் உண்டு. இந்த மாலைகளை ரூ.5 முதல் ரூ.15 வரை நாங்கள் விற்பனை செய்கிறோம். இதை குடிசைத் தொழிலாக 2 மாதத்துக்கு மட்டுமே செய்கிறோம்.

வியாபாரிகளிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு தொழிலை செய்வதால், போதிய கூலி கிடைப் பதில்லை. இந்த தொழிலைப் பாதுகாக்கும் விதமாக எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் இத்தொழில் நலிவடையாமல் இருக்கும்” என்றார்.

80 கோடி பேரை ஈர்த்த பேஸ்புக் மெஸஞ்சர்

ஐஏஎன்எஸ்

அதிவேகமாக வளர்ந்து வரும் மொபைல் செயலிகளில், பேஸ்புக் குக்கு அடுத்தபடியாக பேஸ்புக் மெஸஞ்சர் இடம்பிடித்துள்ளது. தற்போது மாதம்தோறும் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியை கடந் திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளத்தில் ‘பேஸ்புக்’ முதலிடத்தை பிடித்துள்ளது. மொபைல், இணையதள பயன்பாட்டாளர்களிடம் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக ‘பேஸ் புக்’ வளர்ந்து வருகிறது. அதன் மற்றொரு செயலியான (ஆப்) பேஸ்புக் மெஸஞ்சரும் தற் போது முக்கிய இடத்தை பிடித்துள் ளது. கடந்த நவம்பர் இறுதி வரை இதனை 50 கோடி பேர் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டே மாதங்களில் பயன்பாட் டாளர்களின் எண்ணிக்கை தற் போது 80 கோடியை கடந்திருப்ப தாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி குறித்து அமெரிக்காவை சேர்ந்த நீல்சன் நிறுவனம் 13 வயதுக்கு அப்பாற்றப்பட்ட மொபைல் பயன்பாட்டாளர்களிடம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்மார்ட்போன் செயலிகளில் ‘பேஸ்புக்’ கடந்த 2015-ம் ஆண்டு மீண்டும் முதலிடத்தை பிடித்தது. மாதம்தோறும் சராசரியாக இந்த செயலியை 12.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டை விட, இது 8 சதவீத கூடுதல் வளர்ச்சியாகும். இதே போல், வீடியோ காட்சிகளை பதிவேற்றுவது முதல் இசை, செயலிகள் டிஜிட்டல் சம்பந்தமான அனைத்து பயன்பாடுகளையும் பகிர்ந்து கொள்வதில் அதிக அள விலான நுகர்வோரை இந்த ஆண்டு பேஸ்புக் மெஸஞ்சர் ஈர்த்துள்ளது. 2014-ம் ஆண்டை காட்டிலும், 31 சதவீத வளர்ச்சியை கடந்த ஓராண்டில் பேஸ்புக் மெஸஞ்சர் எட்டி பிடித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் மெஸஞ்சரின் தலைவர் டேவ் மார்க்கஸ் கூறும் போது, ‘‘உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் மெஸஞ்சர் செயலியை, எங்களது குழு உருவாக்கியதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டு இறுதியில் மாதம்தோறும் மெஸஞ்சரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 80 கோடியாக அதிகரித்துள்ளது என்ற செய்தி எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது’’ என்றார்.

பேஸ்புக் மெஸஞ்சருக்கு அடுத்தபடியாக 9.7 கோடி பயன்பாட்டாளர்களை கொண்டு, ‘யூ டியூப்’ 2வது இடத்தை பிடித்துள்ளது.

Friday, January 8, 2016

Only 3 TN varsities adopted UGC norms on V-C selection, says govt. .... SURESHKUMAR

Return to frontpage

The State government has informed the Madras High Court that only three out of the 22 State universities have adopted the University Grants Commission (UGC) guidelines in respect of appointment of Vice-Chancellors.

The government itself was yet to adopt the UGC Regulations of 2010 which comprehensively deal with qualifications for appointment of teachers and Vice-Chancellors in universities.

The government made these submissions before the First Bench of Chief Justice S.K. Kaul and Justice Pushpa Sathyanarayana on a public interest litigation (PIL) petition moved by former Anna University Vice-Chancellor M. Anandakrishnan and Change India, a voluntary organisation. The petitioners approached the court challenging a notification given by the Madurai Kamaraj University to fill the post of Vice-Chancellor, in which they did not prescribe the eligibility norms for candidates as per the UGC regulations.

The petitioners alleged that since largescale corruptions were taking place in various universities, to prevent scandals universities must follow the UGC Regulations so that credible persons were appointed to the post of Vice Chancellor.

The court had directed the State to file an affidavit explaining the position of all 22 universities in respect of adopting the UGC guidelines.

On Thursday, the government submitted that only three universities had “partially” adopted these guidelines.

Objecting to this, the UGC counsel said when the universities received huge financial grants from the UGC they are bound by its regulations.

The judges then questioned the UGC counsel if the apex regulatory body had any powers to take action against erring universities and if so, whether it has acted against any institution so far.

Defending the Madurai Kamaraj University notification, its counsel contended: “The universities are mandated to follow the norms of the UGC only after the guidelines are adopted by the respective State governments. But in the given case, the norms are yet to be adopted by the government.”

Moreover, he contended that the Vice-Chancellor is not a teaching staff but an academic head and principal executive officer of the university.

The UGC norms would be applicable only in the appointment of teaching staff, counsel argued.

Countering this, counsel for the petitioners contended that, “Since the Vice-Chancellor is the academic head, the norms are applicable to such appointments also.”

Defending the eligibility criteria prescribed by the search committee which says that both professors and associate professors with an experience of 10 plus years can apply for the post of Vice-Chancellor, university’s counsel said: “Most of the affiliated colleges of the university do not have a designated post of professor. Such post is available only at the university level. Hence, to avoid narrowing down the eligibility criteria, the committee decided to include associate professors with over 10 years of experience.”

Recording the submissions, the Bench directed the respective counsel to file a synopsis of their arguments in not more than three pages and posted the matter to January 25 for further hearing.



‘Govt. yet to adopt the regulations which deal with qualifications for appointment of teachers, V-Cs’

S.Rly gearing up for Mahamaham: GM


The Southern Railway, keeping in mind that lakhs of people from across the country will throng the temple town of Kumbakonam for the “Mahamaham” festival scheduled next month, is gearing up to meet demands of the devotees.

The Southern Railways has already initiated effective steps for the creation of passenger amenities in Kumbakonam Railway Station, Vashishta Johri, General Manager, Southern Railway, told presspersons here on Thursday after inspecting the Salem Railway Junction.

The escalators will be commissioned at the Kumbakonam Railway Station shortly. All the other infrastructure facilities will be created well ahead of the “Mahamaham’ festival, considered the Kumbh Mela of South India.








Replying to a question, the General Manager said the Railways is working out the details of operating special trains from different parts of the country to Kumbakonam. The list of special trains will be finalised keeping in mind the demand.

காற்றில் கலந்த இசை 37: இசைக் கலைஞனின் வெற்றிக் கனவுகள்! .;... வெ. சந்திரமோகன்

பாரதிராஜா இளையராஜா கூட்டணியின் 6-வது படம் ‘நிழல்கள்’. 1980-ல் வெளியான இப்படத்தின் கதை, வசனத்தை மணிவண்ணன் எழுதியிருந்தார். எண்பதுகளின் பிரச்சினைப் பட்டியலில் உச்ச ஸ்தானத்தில் இருந்த ‘வேலையில்லாத் திண்டாட்டம்’தான் படத்தின் முக்கியக் கரு. பல்வேறு காரணங்களுக்காகத் தோல்வியடைந்த படம். ஒரே ஒரு காரணத்துக் காகக் காலத்தைக் கடந்து நிற்கிறது: இசை!
இளையராஜா ரசிகர்களைப் பொறுத்தவரை அவரது பாடல்கள் தொடர்பான தேடல் முடிவற்றது. பாடல் பிரபலமானதாக இருக்கும். ஆனால், அதன் காட்சி வடிவத்தைப் பார்த்திருக்க முடியாது. அதேபோல், படம் வெளியாகியிருந்தாலும் காட்சிப்படுத்தப்படாமல் போன அற்புதமான பாடல்களும் உண்டு. அவற்றில் ஒன்று ‘நிழல்கள்’ படத்துக்காக ஒலிப்பதிவு செய்யப்பட்ட ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ பாடல். நுட்பமான உணர்வு வெளிப்பாட்டுக்கென்றே அவதரித்த எஸ். ஜானகி பாடியது.
ஜானகியின் ஆலாபனையுடன் தொடங்கும் பாடலின் முகப்பு இசையில், சொல்லப்படாத காதலின் வலியை உணர்த்தும் வீணை இசை ஒலிக்கும். மனதுக்குள் பாடிக்கொள்ளும் ரகசியக் குரலில் தொடங்கும் பாடல், மெல்ல உருக்கொண்டு விஸ்வரூபம் எடுக்கும். முதல் நிரவல் இசையில், ஒற்றை வயலின், பெண் குரல்களின் கோரஸ், வீணையின் விகசிப்பு என்று பெண் மனதின் புலம்பல்களைப் பிரதிபலிக்கும் இசைக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா.
சரணத்துக்கு முன்னதாக ஒலிக்கும் புல்லாங்குழல், அவநம்பிக்கையில் பிதற்றும் மனதைப் படம்பிடித்துக் காட்டும். இரண்டாவது நிரவல் இசையில், காதல் மனதின் உக்கிரத்தை உணர்த்தும் வயலின் இசைக்கோவையை ஒலிக்கவிடுவார். உக்கிரமான மனது உடைந்து உருகி வழிவதைப் போன்ற ஒற்றை வயலின் அதைத் தொடரும். காதலின் தவிப்பைத் துல்லியமாக வெளிப்படுத்தும் இப்பாடல், பின்னர் ‘சித்தாரா’ எனும் தெலுங்குப் படத்தில் பயன்படுத்தப்பட்டது. ‘வெண்ணெல்லோ கோதாரி’ என்று தொடங்கும் அப்பாடல் எஸ். ஜானகிக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
சருகுகளைச் சுழல வைக்கும் தென்றல், மெலிதான தூறல், மாலை நேரப் பொன்னிற மேகங்களின் நகர்வு, திரளும் மேகங்களின் உரசல்களில் கண்ணைப் பறிக்கும் மின்னல். இந்தக் காட்சியை இசைக் குறிப்புகளால் உணர்த்த முடியுமா? இப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலின் முகப்பு இசையை ஒரு முறை கேளுங்கள். தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன் பாடிய இப்பாடல் மிக நீண்ட முகப்பு இசையைக் கொண்டது. தாளச் சுழற்சியில் மிருதங்கத்தை ஒலிக்க வைத்த மற்றொரு பாடல் இது.
முதல் நிரவல் இசையில் சிணுங்கும் வயலின். வயலின் இசைக்கோவையின் முடிவில் திருமண மேளதாளம் என்று பாடலின் சூழலுக்கேற்ற இசை ஒலிக்கும். இரண்டாவது நிரவல் இசையில் வயலினுக்கும் புல்லாங்குழலுக்கும் இடையிலான உரையாடலை இசைக் குறிப்புகளால் எழுதியிருப்பார் இளையராஜா. உமா ரமணன் பாடும்போது அதை ஆமோதித்து ரசிப்பதுபோல், ‘ம்ம்..’ என்று தீபன் சக்கரவர்த்தியின் ஹம்மிங் ஒலிக்கும். அவர் பாடும்போது உமா ரமணனின் ஹம்மிங் இன்னொரு அடுக்கில் ஒலிக்கும். அபாரமான இசை வளமும், கற்பனைச் செறிவும் இத்திரைப்பாடலுக்குக் காவிய அந்தஸ்தை வழங்கின.
வைரமுத்துவின் முதல் பாடல் என்று அறியப்படும் ‘பொன் மாலைப் பொழுது’ பாடல் இப்படத்தின் சிறப்புகளில் ஒன்று. வாழ்க்கையை ரசிக்கும் இளம் கவிஞனின் பார்வையில், விரியும் நகரக் காட்சிகளின் மாலை நேரத் தொகுப்பு இப்பாடல். கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று ரசனையான இசைக் கருவிகளாலான முகப்பு இசையைத் தொடர்ந்து, கம்பீரமும் பாந்தமும் நிறைந்த குரலில் பாடலைத் தொடங்குவார் எஸ்பிபி. ‘வான மகள் நாணுகிறாள்…’ எனும் வரிகளிலேயே தமிழ்த் திரையுலகில் தனது வருகையைப் பதிவுசெய்துகொண்டார் வைரமுத்து.
பல்லவியைத் தொடர்ந்து பொன்னிற அடிவானத்தின் கீழ் இயங்கும் உலகை, பறவைப் பார்வையில் பார்க்கும் உணர்வைத் தரும் வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷன் ஒலிக்கும். இப்பாடலின் நிரவல் இசையில் சற்று நேரமே ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார், நினைவுகளின் தொகுப்பைக் கிளறிவிடும். படத்தில் சந்திரசேகரின் பாத்திரம் இசைக் கலைஞன் என்பதாலோ என்னவோ இப்படத்தின் எல்லாப் பாடல்களிலும் ஒற்றை வயலினுக்குப் பிரத்யேக இடமளித்திருப்பார் இளையராஜா.
தன்னை அழுத்திக்கொண்டிருந்த அவமதிப்புகளை, தோல்விகளைத் தகர்த்தெறிந்துவிட்டு வெற்றியை ருசிப்பதாகக் கனவுகாணும் இசைக் கலைஞனின் குதூகலம்தான் எஸ்பிபி பாடிய ‘மடை திறந்து’ பாடல். ஆர்ப்பரித்துப் பொங்கும் புதிய அலையாக ஒலிக்கும் வயலின் இசைப் பிரவாகத்துடன் பாடல் தொடங்கும். ஒவ்வொரு அணுவிலும், நரம்பை முறுக்கேற்றும் இசைத் தெறிப்புகள். வெற்றிக் கனவின் பிரதேசங்களினூடாகப் பயணம் செய்யும் அக்கலைஞனின் மனவோட்டங்களைப் பிரதிபலிக்கும் இசை.
அடிவானச் சூரியனைத் தொட முயல்வதுபோல் நெடுஞ்சாலையில் விரையும் வாகனத்தைக் காட்சிப்படுத்தும் வயலின் இசைக்கோவையைத் தந்திருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில் ஹார்மோனியத்திலிருந்து எலெக்ட்ரிக் கிட்டாருக்குத் தாவும் இசை அவரது முத்திரை. ‘விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்’ எனும் வரிகளை இளையராஜா பாடுவதாக பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை பொருத்தமான காட்சி அது!
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: மத்திய அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: மத்திய அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

பிடிஐT+  

  • மத்திய அரசின் அறிவிக்கையை பத்திரிகையாளர் ச

    ந்திப்பில் வெளியிட்ட தமிழக பாஜக தலைவர்கள் | படம்: தமிழிசை சவுந்தரராஜனின் ஃபேஸ்புக் பக்கம்.
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "இந்த அறிவிக்கை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேதியில் இருந்து கரடி, குரங்கு, புலி, காளை ஆகிய விலங்குகளை காட்சிப்படுத்தவோ அல்லது பழக்கப்படுத்தி வித்தையில் ஈடுபடுத்தவோ கூடாது.
இருப்பினும், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டி, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் எருதுவண்டி போட்டிகள் ஆகியவற்றுக்காக காளைகளை பழக்கப்படுத்தி, காட்சிப்படுத்த அரசு அனுமதிக்கிறது.
அதேவேளையில் எருதுவண்டி போட்டிகளை 2 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைவான சரியான வழித்தடத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.
ஜல்லிக்கட்டை பொருத்தவரை வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் 15 மீட்டர் தூரத்துக்குள் அடக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதா என்று ஒவ்வொரு காளை மாடும் கால்நடை பராமரிப்பு துறையால் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காளை மாடுகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். காளை மாடுகளுக்கு ஊக்க மருந்துகள் வழங்கப்படுவதை தடுக்க கூடுதல் கண்காணிப்பு வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்த தகவலை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என அனுமதி வழங்கி நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த ஒரு விவகாரத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. | முழு விவரம்தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி: ட்விட்டரில் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

உயர் கல்வியின் கழுத்தில் விழுந்திருக்கும் சுருக்கு!

Return to frontpage



பிரின்ஸ் கஜேந்திர பாபு


இந்தியாவில் இனி உயர் கல்வி பயில விரும்பும் மாணவர் களில் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவை மறந்துவிட வேண்டியிருக்கலாம். பள்ளிப் படிப்புடன் தங்கள் கல்வியை நிறுத்திக்கொண்டு, கிடைக்கும் வேலைகளில் சொற்ப சம்பளத்துடன் வாழ்க்கையை மேற்கொள்ள நேரலாம். கல்வியில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அரசுக் கல்வி நிறுவனங்கள் நலிவடைந்து தனியார் கல்வி நிறுவனங்களே எல்லா இடத்திலும் வியாபித்துவிடலாம். நினைத்தாலே பயங்கரமாக இருக்கும் இச்சூழல் சாத்தியமாக நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம். ஆம், காட் (GATT ‘GENERAL AGREEMENT OF TARIFFS AND TRADES’) ஒப்பந்தத்தின்கீழ் உயர் கல்வி வர ஒப்புக்கொள்ளும் நாடுகளில் இதுதான் நடக்கும். இந்தியாவும் இந்த அபாயத்தில்தான் இருக்கிறது. கென்யா தலைநகர் நைரோபியில் கடந்த டிசம்பர் 15 முதல் 19 வரை நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் இதற்கான முயற்சிகள் நடந்தன.

காட் என்றால் என்ன?

1930-ல் அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட நாடுகளில் கடும் பொருளாதார மந்தம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டெழும் நேரம் இரண்டாம் உலகப் போர் மூண்டது. தொழில்புரட்சியின் பயனாய் வளர்ச்சியடைந்த நாடுகள் தத்தம் உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காப்பாற்ற வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி (Tariff) விதித்தனர். இதனால், பன்னாட்டில் கிளை பரப்பத் துடித்த பெரும் தொழிலதிபர்கள், தங்கள் வியாபார வளர்ச்சிக்கு, லாபவெறிக்கு இது தடையாக இருக்கும் என்று கருதினர். விளைவு, இரண்டாம் உலகப் போர் முடிவடையும் சூழலில் காட் எனப்படும் வரியில்லா வாணிபத்துக்கான ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தனர்.

1947-ல் உருப்பெற்று, 1995 வரை இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உற்பத்தியாகும் பொருட்களைத் தாண்டி விவசாயம், நெசவு உள்ளிட்ட பல துறைகளிலும் விரிவாக்க முயற்சித் தனர். இவர்கள் சொன்னதெல்லாம் இப்படி ஒப்பந்த மிட்ட நாடுகள் அவர்களுக்குள் தங்கு தடையின்றி வாணிபம் செய்துகொள்ளலாம் என்பதே. இது விரிவடைந்த ஒப்பந்தமாக மாறும்போது ஒரு அமைப்பின் கீழ் இதைக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவ்வாறு 1995-ல் உருவானதுதான் உலக வர்த்தக அமைப்பு!

இந்தியா இதில் எப்படிச் சிக்கியது?

1980-களில் இந்தியா உலக வங்கியிடம் கடன் வாங்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல மீள முடியாத அளவு கடன், உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து பெறப்பட்டது. பொறியில் சிக்கிய எலியாகக் கடன் வாங்கிய நாடுகள் ஒவ்வொன்றும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளாக வேண்டிய நிலை உருவானது. 1996-ல் இந்தியா இதன் உறுப்பு நாடானது. இதன் கீழ் காட் கொண்டுவரப்பட்டது. காட்ஸ் (GENERAL AGREEMENT ON TRADE IN SERVICES) உருவானது. சேவையில் வர்த்தகத்துக்கான பொது ஒப்பந்தம் அனைத்து சேவைத் துறைகளையும் சந்தைக்குத் திறந்துவிட மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும்.

2004 ஜனவரி மாதம் தொடக்க விருப்பமாக மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளில் சந்தையை அனுமதிக்க, இந்தியாவால் விருப்பம் தெரிவிக்கப் பட்டது. 2005 ஆகஸ்ட் மாதம் கல்வி உள்ளிட்ட சேவைத் துறைகளில் சந்தையை அனுமதிக்க இந்தியா விருப்பம் தெரிவித்தது.

இந்த ஒப்பந்தத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லுங்கள்…

விருப்பம் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என்ற வடிவில் நடைபெறும் செயல்பாடு, உலக வர்த்தக அமைப்பின் விதிகளாலும் காட்ஸ் ஒப்பந்த ஷரத்துக்களாலும் கட்டுப்படுத்தப்படும். விருப்ப நிலையில் ஒரு நாடு விலகிக்கொள்ள முடியும். விருப்பம் என்பது ஒப்பந்தமாக மாறிவிட்டால், திரும்பப் பெற இயலாது என்று காட்ஸ் ஒப்பந்த விவர ஆவணங்களைக் கூர்ந்து படிக்கும்போது தெரியவருகிறது.

அப்படியென்றால், ஒரு அரசு தவறு செய்துவிட்டது என்பதால், மக்கள் தேர்தலில் அந்த அரசை மாற்றி, புதிய அரசைத் தேர்ந்தெடுத்தாலும், முந்தைய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தைப் பிந்தைய அரசுகள் திரும்பப் பெற இயலாது. அதாவது, இந்த நாட்டு மக்கள் தங்கள் இறையாண்மையை இழக்கிறார்கள் என்று பொருள்.

கல்வியில் சந்தையை அனுமதிக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டால், சட்டப்படி கல்வி ஒரு வணிகப் பொருளாகிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் கல்வி விற்பனைக்குரிய சந்தைப் பொருள் அல்ல என்ற 1993 உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது நடைமுறையில் உள்ளது. காட்ஸ் ன் கீழ் கல்வி வந்தால் இந்த நிலை மாறிவிடும்.

என்ன விளைவுகள் ஏற்படும்?

நமது அரசு நடத்தும் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் பெறும் அரசு மானியம், உதவித் தொகைகள் இல்லாமல்போகும். ஏனெனில், சந்தையில் ஆடுகளம் சமமாக இருக்க வேண்டும். நிதி முதலீட்டாளர்களின் நலன் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என இந்த ஒப்பந்தம் கூறுகிறது. மானியங்கள் முற்றிலுமாக விலக்கிக்கொள்ளும் வரை பேச்சுவார்த்தை தொடரும் என்கிறது.

அடிப்படையில் கல்வி என்பதன் பொருளையே இந்த ஒப்பந்தம் மாற்றிவிடுகிறது. பொதுநலன், மனித மேம்பாடு, சமூக வளர்ச்சி ஆகிய இலக்குகள் கொண்ட பொதுச் சொத்தாகக் கருதப்படும் கல்வி ‘வணிகப் பொருளாக’ மாற்றப்படுகிறது.

அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் சர்வதேசப் பாடத் திட்டம் என்ற பெயரில் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் தேவைக்கு அல்லாமல், பன்னாட்டு நிதி மூலதனம் கொண்டுவரும் நிறுவனங்களும் திறன் மிக்க ஊழியர்களைத் தயார் செய்யவே உதவிடும் என யுனெஸ்கோ வெளியிட்ட ஆவணம் எச்சரிப்பதோடு உலக மொழிகள் அனைத்தும் அழியும் அபாயம் ஏற்படும் என்று கூறுகிறது. குறிப்பாக, அமெரிக்க ஆங்கில மொழி மட்டுமே பாட மொழியாக இருக்கும் எனவும் கூறுகிறது.

சமூக ஒடுக்குமுறை நிறைந்த இந்த நாட்டில், பெண் என்றாலே செலவு என்ற கருத்தோட்டம் கொண்ட நாட்டில், மானியம், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு ஆகியவை கூடாது எனச் சொல்லும் GATS ஒப்பந்தத்தில் கல்வி பேசப்பட்டால் சமூக நீதியின் பால் உருவான அனைத்துச் சட்டங்களும் திட்டங்க ளும் செல்லாது என்ற நிலை ஏற்படும். இந்திய நீதிமன்றங்கள்கூட இதில் தலையிட முடியாது.

வளர்ந்த நாடுகளின் நிலை என்ன?

ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் பேராசிரியர்கள் ஒன்றுகூடி இதே கோரிக்கையைத் தத்தம் அரசுகளுக்கு வைத்தார்கள். பேராசிரியர் ஜேபிஜி திலக் எழுதி யுனெஸ்கோ வெளியிட்ட ஆவணம், கல்வியை விற்பனைப் பொருளாகக் கருதுவதோடு உள்நாட்டு வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். காட்ஸ் ன் விருப்ப ஒப்பந்தத்தை உறுதிப் படுத்தியிருப்பவை அமெரிக்கா, சீனா போன்ற மிகச் சில நாடுகளே. வளர்ந்த நாடுகள் என்பதால் தங்க ளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்று நினைத்துச் சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஆனால், அமெரிக்காவால்கூட இந்த ஒப்பந்தத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது என்கிறார் திலக்.

அப்படியானால், தப்பிக்க வழியே இல்லையா?

இந்தப் பேராபத்திலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு. கல்வியைச் சந்தைப் பொருளாக்க இந்தியா 2005-ல் தெரிவித்த விருப்பத்தைத் திரும்பப் பெறுவது. கல்வியை இந்த ஒப்பந்தத்தின் கீழ் சந்தைப் பொருளாக்கும் பேச்சுக்கு இடமேயில்லை என்ற உறுதியான வாக்குறுதியை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அளிக்கச் செய்வது.

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் கல்வியை காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் கொண்டுவரக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். தேசியத் தகுதித் தேர்வு சாரா கல்வி உதவித்தொகையை ரத்து செய்ய முயற்சிகள் நடப்பதை எதிர்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் போராடிவருகிறார்கள். காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் கல்வி கொண்டுவரப்படக் கூடாது என்றும் குரல் கொடுத்துவருகிறார்கள்.

அரசு செய்ய வேண்டியது என்ன?

மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு சமத்துவச் சமூகத்துக்கு காட்ஸ் ஒரு தடைக் கல் என்பதை உணர்ந்து, இந்திய அரசு தான் தெரிவித்த விருப்பங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். நடந்து முடிந்த நைரோபி மாநாடு எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் முடிவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதகமான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, கழுத்தில் கயிறு இறுகுவதற்கு முன் கல்வி காப்பாற்றப்பட வேண்டும்.

- பிரின்ஸ் கஜேந்திர பாபு

தொடர்புக்கு: spcsstn@gmail.com

நெல்லையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி; காயம் 28 - ஓட்டுநர் தூங்கியதால் விபத்து

Return to frontpage

திருநெல்வேலியில் இன்று காலை ஆம்னி சொகுசுப் பேருந்து ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்தனர். ஓட்டுநர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு, "காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி சொகுசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அதிகாலை 5.30 மணியளவில் பேருந்து வள்ளியூர் அருகே வந்தபோது சாலையின் நடுவே இருந்த கான்க்ரீட் தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் இறந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்தவர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், போலீஸ் டி.ஐ.ஜி. அன்பு மற்றும் எஸ்.பி. விக்ரமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்" எனக் கூறியுள்ளது.

ஓட்டுநர் தூங்கியதால் விபரீதம்:

விபத்து குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் கூறும்போது, "முதற்கட்ட விசாரணையில், மிகவும் சோர்வடைந்திருந்த ஓட்டுநர் பேருந்தை இயக்கும்போதே தூங்கியதால் வண்டி அவர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது" என்றார்.

கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகம்:

இந்த விபத்தில் 10 பேர் பலியான நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

விபத்தில் சிக்கியவர்களுக்கான மீட்பு, நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு கேரள மாநிலம் தெற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி மனோஜ் ஆப்ரஹாமுக்கு அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.

ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உடனடியாக அமலுக்கு வந்தது

the hindu tamil

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளில் அசுத்தம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மத் திய அரசு மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள் ளவும், பாதுகாப்பு பணிகளை மேம்படுத்தவும் சமீபத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணிகள் சிலர் அசுத்தம் செய்து வருகின்றனர். அவ்வாறு அசுத்தம் செய் பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ், பராமரிப்பு அதிகாரிகள் மூலம் இது தொடர் பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட் டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல இடங்களில் இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த அபராத தொகையான ரூ.500 தற்போது ரூ.5 ஆயிரமாக உயர்ந்திருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில் நிலையங்களை தூய்மை யாக வைத்துக் கொள்ள வேண்டுமென தொடர்ந்து விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதையும் மீறி அசுத்தம் செய்யும் பயணிகளிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது, இதற்கான அபராத தொகையை ரயில்வே வாரியம் உயர்த்தியுள்ளது. சென்ட்ரல் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் இது நடை முறைக்கு வந்துள்ளது. விரைவில் மற்ற ரயில் நிலையங்களிலும் இது படிப்படியாக நடைமுறைப் படுத்தப்படும்’’ என்றனர்.

மறுபரிசீலனை தேவை

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தின் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, “அபராத தொகையை உயர்த்தினால் மட்டுமே ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியாது. முதலில் ரயில் நிலையங்களில் குப்பை தொட்டிகளை நிறுவ வேண்டும். போதிய அளவில் கழிப்பறைகள் அமைக்க வேண்டும். அபராத தொகையை உயர்த்தியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: மத்திய அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: மத்திய அரசு அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

 
  • ஜல்லிக்கட்டு | கோப்புப் படம்
    ஜல்லிக்கட்டு | கோப்புப் படம்
  • மத்திய அரசின் அறிவிக்கையை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட தமிழக பாஜக தலைவர்கள் | படம்: தமிழிசை சவுந்தரராஜனின் ஃபேஸ்புக் பக்கம்.
    மத்திய அரசின் அறிவிக்கையை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட தமிழக பாஜக தலைவர்கள் | படம்: தமிழிசை சவுந்தரராஜனின் ஃபேஸ்புக் பக்கம்.
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு வெள்ளிக்கிழமை அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "இந்த அறிவிக்கை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேதியில் இருந்து கரடி, குரங்கு, புலி, காளை ஆகிய விலங்குகளை காட்சிப்படுத்தவோ அல்லது பழக்கப்படுத்தி வித்தையில் ஈடுபடுத்தவோ கூடாது.
இருப்பினும், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போட்டி, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் எருதுவண்டி போட்டிகள் ஆகியவற்றுக்காக காளைகளை பழக்கப்படுத்தி, காட்சிப்படுத்த அரசு அனுமதிக்கிறது.
அதேவேளையில் எருதுவண்டி போட்டிகளை 2 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைவான சரியான வழித்தடத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.
ஜல்லிக்கட்டை பொருத்தவரை வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் 15 மீட்டர் தூரத்துக்குள் அடக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு தகுதியானதா என்று ஒவ்வொரு காளை மாடும் கால்நடை பராமரிப்பு துறையால் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். காளை மாடுகள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். காளை மாடுகளுக்கு ஊக்க மருந்துகள் வழங்கப்படுவதை தடுக்க கூடுதல் கண்காணிப்பு வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்த தகவலை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தினார். தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என அனுமதி வழங்கி நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த ஒரு விவகாரத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. | முழு விவரம்தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி: ட்விட்டரில் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

Thursday, January 7, 2016

மனசு போல வாழ்க்கை 32: அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே! ....டாக்டர். ஆர். கார்த்திகேயன்



இரவு நேரம் ஒரு அற்புதமான பொழுது.

பகல்நேரம் செயல்படுவதற்கான பொழுது என்றால் இரவுநேரம் ஓய்வுக்கும் உறக்கத்துக்குமானது. பகல்நேரம் உலகுக்கானது என்றால் இரவுப் பொழுது நமக்கும் நமது குடும்பத்தினருக்குமானது. ஒவ்வொரு இரவுத் தூக்கமும் தற்காலிக மரணம் போலத்தான். ஒரு பகலின் பரபரப்பு எல்லாம் முடிந்து மற்றுமொரு பகல் புதிதாய்ப் பிறப்பதற்கு இந்த மோனநிலை நமக்குத் தேவைப்படுகிறது.

நல்ல தூக்கம் இல்லாதபோது உடலும் மனமும் சீர்கெட்டுவிடுகின்றன. இதைக் கண்டுபிடிக்க மருத்துவ அறிவியல் தெரிய வேண்டாம். மூதாதையரின் பாரம்பரிய அறிவே போதும்.

போலிப் பகலாகும் இரவு

இன்றைய தலைமுறையினர் படும் பல அவதிகளுக்குக் காரணம் தூக்கமின்மைதான். வேகமான வாழ்க்கை இரவை விழுங்கிவிட்டது. பகல் முடிந்தும் இரவை ஒரு போலிப் பகலாக உருவாக்குகிறது.

ஐந்து மணிக்கு வேலையை முடித்து ஆறு மணிக்கு வீடு வந்தால் குடும்பத்துடன் உறவாடி உணவருந்தி இரவு பத்துக்குத் தூங்கச்சென்றால் மறு நாள் பளிச்சென்று விடியும்.

இன்று வேலையும் சாலையின் நெரிசலும் எட்டு மணிக்கு முன்பாக வீடு திரும்ப விடுவதில்லை. ஒரு காபி குடித்துவிட்டு டி.வி. சீரியல்களில் உட்கார்ந்தால் பத்து மணிக்குத்தான் தாமதமான, ஆனால் கனமான சாப்பாடு. பிறகு வாட்ஸ் அப் செய்திகளும் கிரிக்கெட்டும் பார்க்கிறோம். ஆடல், பாடல், கேம் ஷோக்களைப் பார்த்து அயர்ந்துபோகிறோம். அதற்குப் பிறகு படுப்பதற்கு செல்கையில் நடுஇரவு ஆகிவிடுகிறது.

படுக்கையில்தான் எல்லா வலிகளும் பெரிதாகத் தெரிகின்றன. சாலை வெளிச்சங்களும் இரைச்சல்களும், அண்டை வீடுகளின் டி.வி சத்தங்களும் தூங்க விடாது. அப்போதுதான் பாக்கி உள்ள அனைத்து வேலைகளையும் மனம் பட்டியல் போடும். கண்ணை மூடியபின் வரும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் செய்தியையும் பார்க்கத் தூண்டும். வெட்டிச் செய்தி என்று தெரிந்த பின்னும் பதில் போட வைக்கும். பின்பு ஃபேஸ்புக் போகத் தூண்டும். ஃப்ரிட்ஜில் தண்ணீர் குடித்துவிட்டு வருகையில் ‘தூக்கம்தான் வரவில்லையே? ஏதாவது வேலை பார்த்தால் என்ன?” என்று லேப்டாபை எடுக்க வைக்கும். பின் அயர்ச்சியில் படுக்கையில் விழும்போது ‘சீக்கிரம் எழுந்திருக்க வேண்டுமே!’ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்.

சிந்தனைகளைக் கழட்டுங்கள்

வாழும் முறையில் மாறுதல்களை ஏற்படுத்தாமல் உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ள முடியாது. இதற்கு என்ன செய்யலாம்?

என் பரிந்துரைகள் இதோ:

ஏ.ஆர். ரஹ்மான் மாதிரியான பிஸியான பிரமுகர்களில் ஒருவராக நீங்கள் இல்லாதவரை பகல் பொழுது வேலைக்கும் இரவுப் பொழுது ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லிக்கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போது உங்கள் வேலை பற்றிய சிந்தனைகளையும் கழட்டி வைக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை கொடுத்துக் கொள்ளுங்கள்.

தாமதமானால் டீ, காபிக்குப் பதிலாக நேராக உணவுக்குச் செல்லுங்கள். நல்ல குளியலுக்கு பிறகு உண்ணும் மென்மையான இரவுச் சாப்பாடு உங்களுக்கு இளைப்பாறுதல் தரும். டி.வியைக் குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மன நலம் காக்கப்படும். வீட்டில் உள்ளவர்களிடம் பேசுங்கள். அவசியச் செய்திகள், அழைப்புகள் முடிந்தபின் கைபேசியை தள்ளி வையுங்கள்.

தூக்கத்துக்குத் தயார் செய்தல் முக்கியம். படுத்த பிறகு குடும்பம், அலுவலகம், அக்கம் பக்கம் என செய்திகள் பகிர்வது உங்களை நல்ல உணர்வுகளுடன் தூங்க வைக்காது. குறிப்பாக, தீராத பிரச்சினைகளை விவாதிக்க வேண்டாம். இயலாமை, எரிச்சல், குழப்பம் போன்ற உணர்வுகள் சிந்தனைகளைப் பெருக்கி மனதை அமைதி இழக்கச் செய்யும். மனதைக் காலி செய்து, கழுவித் துடைத்து தூக்கத்துக்குத் தயார் செய்தல் அவசியம். எந்த சிந்தனையும் இல்லாது வரும் அந்த உறக்கம் அவ்வளவு நிர்மலமாக இருக்கும்!

கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை நல்லது. அல்லது நல்ல இசை போதும். நன்றி கூறுதல், தியானம், அஃபர்மேஷன் என எது உங்கள் மனதுக்குப் பிடித்ததோ அதைச் செய்து மற்ற சிந்தனைகளை ஓட்டிவிடுங்கள். நீங்கள் எந்த நேரம் தூங்க ஆரம்பித்தீர்கள் என்று தெரியாத அளவுக்கு உறக்கத்துக்குள்ளே நழுவியிருப்பீர்கள்.

நல்ல தூக்கம் மறு நாள் எழும்போது ஒரு சாதனை உணர்வைத் தரும். எழுந்தவுடன் பசியும் புத்துணர்ச்சியும் வர வேண்டும். மனித அத்துமீறல்கள் இல்லாத வனப்பகுதிகளில் வாழும் விலங்குகளில் அவற்றைப் பார்க்கலாம்.

அலாரத்தைப் பார்த்து அலறி எழுந்து, அவசரத்தில், வேகத்தில், கோபத்தில் ஓடும் அட்ரினல் வாழ்க்கை முறை உங்களை விரைவில் வயோதிகத்தில் தள்ளிவிடும். எதிர்மறை எண்ணங்களை எளிதில் கொண்டு வந்துவிடும். வேகம் விவேகம் அல்ல என்பது சாலைகளுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்தான்.

வேகத்தை மட்டுப்படுத்த நம் இரவுகளை சமன்படுத்துவோம். ஆறு முதல் எட்டு மணி நேர அமைதியான இரவுத்தூக்கம் அவசியம். வளர்ந்த நாடுகளை பின்பற்றும் நாம் ஒன்றை மறந்துவிடுகிறோம். தூக்க மாத்திரைகள் அதிகம் நுகரப்படும் தேசங்கள் அவை. ரசாயன மருந்துகளின் துணை இல்லாமல் தூங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும் வரலாம். மறந்துவிட வேண்டாம்.

என் சிறு பிராயத்தில் சிலோன் ரேடியோ மிகப் பிரபலம். அதில் வரும் ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சியை நாங்கள் தவற விட மாட்டோம் அதில் அடிக்கடி ஒலிபரப்பாகும் பாடல், “தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...அமைதி உன் நெஞ்சில் நிலைக்கட்டுமே..!” ஒவ்வொரு முறையும் அந்த பாடல் முடிகையில் தூங்கிப்போன நிலையில் இருக்கும் உடலும் மனமும். இப்படி ஒரு தலைமுறையையே அமைதிப்படுத்தி தூங்க வைத்த பாடல்கள் உண்டு.

நீங்கள் உங்கள் பிள்ளைக்குத் தரும் பெரு வரம் நல்ல தூக்கம். அதற்கான இடையூறுகளைக் களைந்து, நல்ல சூழலை அமைத்து, நல்ல முன்மாதிரிகளாய் நீங்கள் தூங்க ஆரம்பித்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பின்பற்ற மாட்டார்களா என்ன?

தொகுப்பு: gemba.karthikeyan@gmail.com

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு


ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

நம் பாட்டன், பூட்டன்களை பராமரிப்போம்!

டி.எல்.சஞ்சீவிகுமார்

தினமும் நாம் காலையில் எழுந்ததும் என்ன செய்கிறோம்? பல் விளக்குகிறோம். காலைக் கடன்களை முடிக்கிறோம். அழுக்குப்போக குளிக்கிறோம். சிக்கெடுத்து தலை வாருகிறோம். மேற்பூச்சிகள் தனி. அப்புறம் உணவு உட்கொள்கிறோம். அவரவர் வசதி கேற்ப நடை பயிற்சி, யோகா, தியானம் என உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறோம். கொஞ்சம் உடல் நலம் கெட்டாலும் மருத்துவரிடம் ஓடுகிறோம். இப்படி எல்லாம் செய்யாவிட்டால் சீக்கிரமே சீக்காளியாகி இறந்துப்போவோம். சரி, நமக்கு உணவைக் கொடுப்பது யார்? உடலை வளர்ப்பது யார்? நீர்நிலைகள்தானே. அவை இல்லாவிட்டால் சூனியமாகிபோவோம். இன்றும் உயிரோடு இருக்கும் நமது பாட்டன், பூட்டன்கள்போலத்தான் இந்த நீர் நிலைகள் எல்லாம்.

ஆம், ஏரிகள், குளங்களுக்கும் உயிர் உண்டு. இது அறிவியல்பூர்வமான உண்மை. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஏரி, குளங்களை அப்படிதான் வரையறுத்துள்ளது. ஏரிகள், குளங்கள் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியோடு ஒப்பிடப்படுகின்றன. அவை ஓர் உயிரினத்தைப் போல புவி யியல்ரீதியாக நிலப் பரப்புகளில் ஏற்படும் இயற்கை மாற்றங்களால் அல்லது மனிதனால் பிறக்கின்றன. காலப் போக்கில் உயிரினங்களைப் போலவே பல்வேறு வடிவங்களில் பரிணாம மாற் றங்களுடனும் பல்லுயிர் பெருக்கத் துடனும் வளர்கின்றன. அவை தங்க ளுக்கான உணவாக ஆறுகளில் அடித்து வரப்படும் வண்டலில் இருந்து வளத்தைப் பெறுகின்றன. அந்த வளத்தில் பாசிகள், நீர்த் தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நுண்ணுயிரிகளை வாழ வைக்கின்றன. எனவே, ஏரிகளும் குளங்களும் உயிரினங்களே என்கிறது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை. 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச ஏரிகள் சுற்றுச்சூழல் கமிட்டி ஜெய்ப்பூரில் நடத்திய 12-வது உலக ஏரிகள் மாநாட்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. இது ‘ஜெய்ப்பூர் பிரகடனம்’ என்றழைக்கப்படுகிறது.

ஆனால், நம் உடலை பராமரிப் பதைப் போல ஏரி, குளங்களைப் பரா மரிக்கிறோமா? நமக்கு தலைவாருவது போல ஏரியை தூர் வார வேண்டாமா? நம் உடலில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதைப்போல குளத்தில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா? ஆகாயத் தாமரைகள் ஒன்றிரண்டாக வளரும்போது முளையி லேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா? எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர் பார்க்கலாமா? அரசாங்கத்தை நடத்து வது அரசியல்வாதிகள்தானே. அவர் களா வந்து நீர் நிலைகளை சரிசெய்யப் போகிறார்கள். நீர் நிலைகளைப் பராமரிக்க ‘நமக்கு நாமே’ திட்டம் உட்பட எவ்வளவோ திட்டங்கள் இருக் கின்றன. மக்களாகிய நாமே... குறிப்பாக, விவசாயிகளே களம் இறங்கலாமே.

தமிழகத்தில் ஒவ்வொரு ஏரியின் எல்லைகளையும் குறைந்தது நான் கைந்து கிராமங்களாவது பங்குபோடு கின்றன. அந்தந்த கிராமங்களில் வேலையை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்கி ஒவ் வொன்றாக செய்யலாம். மெதுவாய் குப்பைகளைப் பொறுக்குவோம். அப்புறம் ஆகாயத் தாமரைகளை அகற்று வோம். பெரியதாக எல்லாம் வேண்டாம். சின்ன சின்னதாய் செய்வோம். சிறுக சிறுக சேமிப்போம். சிறு துளி பெருவெள்ளம். சிறியதே அழகு. ஊர் கூடி தேர் இழுப்போம். காந்தியும் ஜே.சி.குமரப்பாவும் வலியுறுத்திய கிராமப் பொருளாதாரத் தத்துவம் இதுதானே.

இப்படி எல்லாம் செய்யாமல்தான் எத்தனையோ ஏரிகளை, குளங்களை, நதிகளை இருக்குமிடம் தெரியாமல் அழித்துவிட்டோம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ளது உப்பலோடை. இந்த ஓடை இருந்த இடம் தெரியாமல் காடு மாதிரி மண்டிக் கிடக்கிறது கருவேல மரங்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் இரண்டு நதிகளே எங்கே என்று தெரியவில்லை. திருநெல்வேலியில் இரண்டு முக்கூடல்கள் உண்டு. ஒன்று திருப்புடைமருதூர், இன் னொன்று சிவலப்பேரி முக்கூடல். ஒரு காலத்தில் திருப்புடைமருதூர் முக்கூட லில் கடனா நதி, வராக நதி, தாமிரபரணி மூன்றும் கலந்தன. அதனால்தான், அது முக்கூடல் என்று பெயர் பெற்றது. ஆனால், இப்போது மூன்று நதியில் வராக நதி எங்கே போனது? அது எங்கே இங்கே கலக்கிறது? ஒரு சிலர் கல்லிடைக்குறிச்சி சாலையில் இருக்கும் கடம்பை வழியாக ஓடிவந்து வெள்ளாளங்குடியின் கருணை கால் வாயில் (மஞ்சலாறு அல்லது எலுமிச்சையாறு) கலப்பது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னொரு சாரார், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதியுடன் ராமா நதி கலக்கிறது. அது வராக நதியாக இருக்கலாம் என்கிறார்கள். இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை.

இன்னொரு முக்கூடல் 16-ம் நூற் றாண்டில் எம்நயினார் புலவர் முக்கூடற் பள்ளு பாடிய சீவலப்பேரி முக்கூடல். அந்தக் காலத்தில் ஏரி, குளங்களைப் பராமரித்த பள்ளர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. ஆனால், வேளாண்மைக்கு ஆதாரமாகத் திகழ்ந்த பள்ளர்களைப் போற்றவே அழகர் பெருமாள் முக்கூடலுக்கு வந்தார் என்று சொல்லும் அருமையான படைப்பு முக்கூடற் பள்ளு. இங்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் பஞ்சந்தாங்கி பகுதியில் உற்பத்தியாகி குற்றாலம் அருவியாகக் கொட்டி, 14 அணைக்கட்டுகளை நிரப்பி தென்காசி, கங்கைகொண்டான் வழியாக சிவலப்பேரியில் தாமிரபரணியுடன் கலக்கிறது சிற்றாறு. இன்னொரு பக்கம் கழுகுமலை பகுதியில் இருந்து ராஜாபுதுகுடி, தலையால் நடந்தான் குளம், கங்கைக்கொண்டான் வழியாக கயத்தாறு இங்கே வந்துச் சேர்ந்தது. இவ்வாறாக தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு மூன்றும் சங்கமம் ஆனதால் மூக்கூடல் என்றழைக்கப்படுகிறது. ஆனால், இன்று அந்த கயத்தாறு எங்கே போனது?



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அருகே உப்பலோடையில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்கள். | படங்கள்: எம்.லட்சுமி அருண்

கங்கைக்கொண்டானில் இருந்து புளியம்பட்டி செல்லும் பாதையில் வடகரை கிராமத்தின் வடக்குப் பக்க மாக இருக்கிறது பராக்கிரம பாண்டி யன் குளம். இதன் மூலம் வடகரை, கிழக்கோட்டை, கைலாசபுரம், வேப்பங் குளம், கொடியங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பாசனம் பெறுகின்றன. கழுகுமலையில் இருந்து ஓடிவரும் கயத்தாறு பராக்கிரம பாண்டியன் குளத்தில் இணைகிறது.

ஆனால், இந்தக் குளம் தூர் வாரப்படாமல் சீமை கருவேல மரங்களில் ஆக்கிரமிப்பில் தனது முழுக் கொள்ளளவை இழந்துவிட்டது. தண்ணீர் அடுத்தடுத்தக் குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களும் அழிக்கப் பட்டுவிட்டன. கயத்தாற்றின் ஓட்டமே குளத்துடன் நின்றுப்போனது. இதனால் அந்த ஆறு சிவலப்பேரி முக்கூடலில் சங்கமிக்காமல் பராக்கிரம பாண்டியன் குளத்திலேயே மூழ்கிவிட்டது.

இதனால், பெருமழைக் காலங்களில் கயத்தாற்றில் தண்ணீர் பெருகும்போது அது வேறு வழியில்லாமல் பராக்கிரம பாண்டியன் குளத்தில் இருந்து பின் வாங்கி வடகரை, புளியம்பட்டி, கங்கை கொண்டான் கிராமங்களை மூழ் கடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு பெய்த மழையின்னபோதும் இப்படி தான் கங்கைக்கொண்டான் - புளியம் பட்டி இடையே இருக்கும் தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்தது. இருபக்கமும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த மக்களை தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டனர். என்ன செய்வது? ஆற்றின் பாதையை அழித்த வினைக்கு அனு பவிக்கிறோம்.

அரவமில்லா ஓர் அத்துமீறல்!

Dinamani



By ப. இசக்கி

First Published : 14 December 2015 01:27 AM IST


"குற்றத் தடுப்பு' என்ற பெயரில் தனியார் மற்றும் பொது இடங்களில் "குளோஸ்டு சர்க்கியூட் டெலிவிஷன் காமிரா'வை (சிசிடிவி) பொருத்தி வைத்துக் கொண்டு அடுத்தவர்களின் அந்தரங்கங்களை உற்றுப்பார்க்கும் அநாகரீகம் அதிகரித்து வருகிறது.
பொது இடங்களில் மக்களைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும் சிசிடிவி காமிராக்களைப் பொருத்துவதை தமிழக அரசு கடந்த 2012 டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது.
அரசு, தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள், உணவகங்கள், திரையரங்குகள், வியாபார நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், பஸ் நிலையங்கள் என காமிரா பொருத்த வேண்டிய இடங்களாக ஏராளமானவை அரசின் உத்தரவு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், தனியான வீடுகள் தவிர பொதுமக்கள் வந்துபோகும் எந்த இடமாக இருந்தாலும் அங்கு சிசிடிவி காமிராவைப் பொருத்த வேண்டும் என்பதுதான் உத்தரவின் சுருக்கம்.
இந்த உத்தரவை சாக்காகக் கொண்டு இப்போது சகட்டு மேனிக்கு சிசிடிவி காமிராக்களைப் பொருத்தி, பொதுமக்களை ஒருவித பதற்றத்துக்கு ஆளாக்கி வருகின்றனர் என்றால் அது மிகையில்லை. பொது பயன்பாட்டு கட்டடங்களின் வாசலில் நுழையும்போதே கண்ணில் படும்படியாக "கண்காணிப்பு காமிரா சுழன்று கொண்டிருக்கிறது' என்ற அறிவிப்பு அதட்டுகிறது. சில இடங்களில் "தயவு செய்து சிரியுங்களேன், காமிரா ஓடிக் கொண்டிருக்கிறது' என்று ஒரு செல்லமான மிரட்டல்.
பொது இடங்களில் குற்றங்களில் ஈடுபடுவோரை அடையாளம் காண இந்த சிசிடிவி காமிரா உதவிகரமாக இருக்கலாம். குற்றங்களில் ஈடுபடுவோர் ஒரு சிலர்தான். அதற்காக, அங்கு கூடும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கானவர்களை காமிரா மூலம் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருப்பது என்பது எஞ்சியவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவது ஆகாதா? தான் எப்போதும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பது குற்ற நோக்கம் இல்லாத ஒருவருக்குத் தேவையில்லாத பதற்றத்தையே ஏற்படுத்தும்.
தனி மனித சுதந்திரம் பற்றி பேசும் பொதுநல அமைப்புகள்கூட இந்த சிசிடிவி காமிரா விஷயத்தில் மெளனம் காப்பது வேடிக்கையாக இருக்கிறது.
பொது இடங்களில் இளம் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வயதான பெண்கள் என பலரும் இருப்பார்கள். இந்தக் கால இளம்பெண்கள் பலர் உடையில் சுதந்திரமானவர்கள். கட்டடத்தின் உயரமான இடத்தில், ஒரு மூலையில், ஏதோ ஒரு கோணத்தில் சுழலும் காமிரா ஒவ்வொருவரையும் எப்படி படம் பிடிக்கும் என்பதை யார் அறிவர்? குற்றவாளிகளைக் கண்டறிய காட்சிகளை திருப்பி பார்க்கும்போது அதில் எந்த காட்சி எப்படி பதிவாகி இருக்கிறது, அதை யார் எப்படி பார்ப்பார்கள்? அந்த காட்சிகள் தவறாக பயன்படுத்தப்படாது என்பதற்கு உத்தரவாதம் உண்டா? விஷமிகளால் அவை சமூக ஊடங்களுக்கு செல்லாது என்பதற்கு யார் உத்தரவாதம்? சரி, அசம்பாவிதம் ஒன்றுமே நடக்காவிட்டாலும்கூட, காமிராவில் பதிவான காட்சிகள் எல்லாம் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுகின்றனவா? அவை எப்படி அழிக்கப்படுகின்றன?
இதற்கான எந்த விதிமுறைகளும் அரசு உத்தரவில் இல்லை. எனவே, காமிரா பதிவுகள் தவறாக பயன்படுத்தப்படாது என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.
சரி, வியாபார நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் முதலாளிகள் என்றார் காந்தி. அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்பதை விட்டுவிட்டு அனைவரும் திருடர்கள் என்பதுபோல "மூன்றாவது கண்' கொண்டு கண்காணித்துக் கொண்டிருப்பது என்ன நாகரிகம்? அது வாடிக்கையாளர்களை அவமதிக்கும் செயல் ஆகாதா? வர்த்தக நிறுவனத்தினர் இதை உணர வேண்டாமா? கடைகளில் திருட்டு நடக்கிறது என்றால் கவனமுடன் இருக்க வேண்டியது ஊழியர்கள்தான். உஷாரான ஊழியர்கள் இருக்கும் கடைகளுக்கு திருடர்கள் நுழைய முடியுமா?
இந்த சிசிடிவி காமிரா கலாசாரம் ஒரு வகையில் காவல் துறையினரின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலே.
பொது இடத்தில் குற்றம் செய்தவரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் அதற்கு சிசிடிவி காமிரா பொருத்தப்படாததை காரணமாக கூறுவது அண்மைக்காலத்தில் அதிகரித்து வருகிறது. காமிரா இருக்கும் இடங்களில் நடந்த குற்றங்களைத் துப்புதுலக்க அவற்றை மலைபோல நம்பும் போலீஸார், அவை தொழில்நுட்ப காரணங்களால் சரியாக இயங்கவில்லை என்றால் விசாரணையில் நிலைகுலைந்து போவதும் உண்டு. காவல் துறையினர் வழக்கமாக மேற்கொள்ளும் பகல் மற்றும் இரவு நேர ரோந்துப் பணிகளும் குறைய வாய்ப்புண்டு. அதற்காக காமிராவே வேண்டாம் என்பது பொருள் இல்லை.
திருவிழா நேரங்களில் கடைவீதிகளில் காமிராவைப் பொருத்தி காவல் துறையினர் கண்காணிப்பார்கள். பெருங்கூட்டத்தில் தவறு செய்வோரை எளிதில் அடையாளம் காண அது உதவலாம்.
முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்பு, விலை உயர்ந்த பொருள்கள் பாதுகாக்கப்பட்டுள்ள இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என 24 மணி நேர பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் காமிரா இருக்கலாமே தவிர, அரவமில்லா இந்த அத்துமீறல் மற்ற இடங்களில் அவசியமா என்பதை பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

NEWS TODAY 20.09.2024