Saturday, January 9, 2016

இன்று வெளிநாடுவாழ் இந்தியர் தினம்

Dinamani

வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2003-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாள் இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த சேர்ந்த நாள் ஜனவரி 9, 1915. அதன் நினைவாக அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நாளின் நோக்கம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒன்று கூடி தமக்குள்ளும் மத்திய அரசுடனும் மாநில அரசுடனும் கலந்துரையாடவும், இடைத்தொடர்புகளை மேற்கொள்ளவும் இந்திய நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் எவை என்பதை எடுத்துக்காட்டவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 'ப்ரவசி பாரதிய சம்மான்' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...