Sunday, January 24, 2016

கன்னத்தில் 5 அறைகள்: பலாத்கார குற்றவாளிகளுக்கு பஞ்சாயத்து அளித்த தண்டனை

THE HINDU TAMIL

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை, 5 முறை கன்னத்தில் அறைந்த பின் விடுவித்துள்ளது உள்ளூர் பஞ்சாயத்து.

பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த இச்சிறுமி பள்ளிக்கு செல்லும்போது 3 பேரும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை விசாரித்த உள்ளூர் பஞ்சாயத்து மேற்கண்ட அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பக்பத் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பலாத்கார குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேர் மற்றும் கிராம பஞ்சாயத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஹரியாணாவில் சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை 5 முறை ஷூவால் அறைந்த பின் பஞ்சாயத்து விடுவித்த சம்பவம் சில வாரங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் தற்போது உ.பி.யில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...