Sunday, January 24, 2016

கன்னத்தில் 5 அறைகள்: பலாத்கார குற்றவாளிகளுக்கு பஞ்சாயத்து அளித்த தண்டனை

THE HINDU TAMIL

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை, 5 முறை கன்னத்தில் அறைந்த பின் விடுவித்துள்ளது உள்ளூர் பஞ்சாயத்து.

பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த இச்சிறுமி பள்ளிக்கு செல்லும்போது 3 பேரும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை விசாரித்த உள்ளூர் பஞ்சாயத்து மேற்கண்ட அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பக்பத் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பலாத்கார குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேர் மற்றும் கிராம பஞ்சாயத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஹரியாணாவில் சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை 5 முறை ஷூவால் அறைந்த பின் பஞ்சாயத்து விடுவித்த சம்பவம் சில வாரங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் தற்போது உ.பி.யில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment

Can BCI halt enrolment of an entire graduating batch?

Can BCI halt enrolment of an entire graduating batch? Manan Kumar Mishra Rizmi Lia M. Chennai. 15.08.2026 On Thursday, Bar Council of India ...