Sunday, January 24, 2016

சென்னையை சிங்கப்பூராக மாற்றும் செயல்திட்டம் எங்களிடம் உள்ளது: அன்புமணி ராமதாஸ் தகவல்..THE HINDU TAMIL

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ பிரச்சாரம் மற்றும் பொதுமக்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியின் 3 நாள் பயணத்தை அன்புமணி ராமதாஸ் சென்னையில் நேற்று தொடங்கினார். புரசைவாக்கம் தானா தெருவில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார் படம்: ம.பிரபு


பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ பிரச்சாரம் மற்றும் பொதுமக்களின் கருத்துக் கேட்பு நிகழ்ச்சியின் 3 நாள் பயணத்தை அன்புமணி ராமதாஸ் சென்னையில் நேற்று தொடங்கினார். புரசைவாக்கம் தானா தெருவில் பொதுமக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தார் படம்: ம.பிரபு


சென்னையை சிங்கப்பூராக மாற்றும் செயல்திட்டம் எங்களிடம் உள்ளது என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ‘நாம் விரும்பும் சென்னை’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று தொடங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ், ‘நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும்’ என்ற தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். பின்னர் மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

இந்தப் பிரச்சாரத்தின்போது, சூளைமேடு நெடுஞ்சாலை, காந்தி சிலை அருகே கூடியிருந்த மக்களிடம் அன்புமணி பேசியதாவது:

பாரம்பரிய சிறப்புகொண்ட, 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னையை திமுக, அதிமுக கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக நாசம் செய்துவிட்டன. சென்னையை நீடித்த, வளர்ந்த நகரமாக மாற்றுவதற்கான பிரச்சார இயக்கம் இது. நாம் விரும்பும் சென்னை எப்படி இருக்க வேண்டும் என நம் அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் அரசியல் செய்யவோ, ஓட்டு கேட்கவோ இந்தப் பிரச்சார இயக்கத்தை தொடங்கவில்லை.

அடுத்த 6 மாதங்கள் இந்தப் பிரச்சாரம் நடக்கும். சென்னை பெருநகர் முழுவதும் பயணம் செய்து மக்களிடம் கருத்து கேட்டு ஒரு ஆவணத்தை தயாரித்து அரசிடம் வழங்க இருக்கிறோம். சென்னையை சிங்கப்பூராக மாற்ற முடியும். அதற்கான செயல்திட்டம் எங்களிடம் இருக்கிறது.

கடந்த 2010-ல் அண்ணா பல்கலைக்கழகம் ரூ.2.17 கோடி செலவில் ஓர் ஆய்வு நடத்தி சென்னையை மேம்படுத்துவதற்கான செயல்திட்ட அறிக்கையை வழங்கியது. அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டதால் இப்போது கடும் வெள்ள சேதத்தை நாம் சந்திக்க நேரிட்டது.

மழை நீரை கடலில் விட்டுவிட்டு மறுபடி கடலில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டத்தை 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துகின்றனர். இது திமுக, அதிமுக கட்சிகள் கொள்ளையடிப்பதற்கான திட்டம்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

அன்புமணியின் விழிப்புணர்வு பிரச்சார பயணம் இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கிறது.

No comments:

Post a Comment

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...