Thursday, January 7, 2016

மறைந்துபோன பண்டிகை கால வாழ்த்து அட்டை பரிமாற்றம்: வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மோகத்தால் குறைந்துபோன அஞ்சல் சேவை ...ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Return to frontpage

பண்டிகை கால வாழ்த்துகள் ஜாதி, மதம், மொழி, கலாச் சாரத்தைக் கடந்து ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தின. கடிதங்கள் மூலம் அனுப்பும் வாழ்த்துகள் என் றும் அழியாமல் நினைவில் நிற் பவை. அன்பான உணர்வையும் வாழ்த்து அட்டைகள் ஏற்படுத்தின. அவற்றை் வாழ்நாள் முழுவதும் மலரும் நினைவுகளாக போற்றி பாதுகாக்கும் பழக்கம் மக்களி டையே இருந்தது.

அதனால், பொங்கல் பண்டிகை, தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் கடைகள், தபால் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனையும் அமோகமாக இருக்கும்.

தற்போது இ-மெயில், ஃபேஸ்புக், சமீபத்திய ‘வாட்ஸ் அப்’ உள் ளிட்ட மின்னணு தகவல் பரிமாற் றங்களின் வளர்ச்சியால் வாழ்த்து அட்டை பரிமாற்றம் தற்போது முற்றி லும் மறையத் தொடங்கிவிட்டது.

இதுகுறித்து தேசிய விருது பெற்ற கோவை அஞ்சல் அலுவலர் ந.ஹரிஹரன் கூறியதாவது:

தமிழகத்தில் 1970-ம் ஆண்டில் தபால் அலுவலகங்கள் மூலம் 69 லட்சத்து 72 ஆயிரம் வாழ்த்து அட்டைகள் பட்டுவாடா செய்யப்பட் டன. இது 1980-ம் ஆண்டில் 78 லட்சத்து 82 ஆயிரமாகவும், 1990-ம் ஆண்டில் 85 லட்சத்து 27 ஆயிர மாகவும் பல மடங்கு அதிகரித்தன.

2010-ம் ஆண்டில் இ-மெயில் ஃபேஸ் புக் மோகத்தின் அதிகரிப்பால் வெறும் 2 லட்சத்து 60 ஆயிரமாக வாழ்த்து அட்டை பரிமாற்றம் குறைந்துவிட்டது. நடப்பாண்டு (2015) ‘வாட்ஸ் அப்’ வளர்ச்சியால் தமிழக தபால் நிலையங்களில் வெறும் சில ஆயிரங்களாக வாழ்த்து அட்டைகள் பரிமாற்றம் குறைந்துவிட்டது. 2007-ம் ஆண் டில் ரூ.5 மதிப்பீட்டில் சிறப்பு வாழ்த்து அஞ்சல்தலைகளை வெளி யிட்டது. தற்போது குடும்பமாக, குழுவாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் குறைந்துவிட்டன.

அனைவரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், செல்போன் உள்ளிட்ட நவீன தகவல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. உணர்வுபூர்வ மான விழா கொண்டாட்டங்கள், தகவல் பரிமாற்றங்கள் குறைந்து விட்டன.

அதனால், அஞ்சல் நிலையங்களில் வாழ்த்து அட்டைகளின் விற்பனை நிறுத்தப்பட்டது. கடை களில் விற்பனை செய்யப்படும் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பும் பழக்கமும் மக்களி டையே குறைந்துவிட்டன என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...