Sunday, January 24, 2016

சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநருக்கு குடியரசுத் தலைவர் கவுரவம்

மரியஜீனா ஜான்சன்

சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் மரியஜீனா ஜான்சன் சிறந்த பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் விருந்து வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து, சத்தியபாமா பல் கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகமும், பேஸ்புக் சமூக வலைதளமும் இணைந்து நடத்திய போட்டியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நூறு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஷ்டிரபதி பவனில் நேற்று மதிய விருந்தளித்து கவுரவித்தார்.

இதில் சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் இயக்குநர் முனைவர் மரியஜீனா ஜான்சன் கல்வித் துறைக்கான சாதனையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முனைவர் மரியஜீனா ஜான்சன் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட் டங்களை செயல்படுத்தி வருகிறார். “என் சனிக்கிழமை பல்கலைக் கழகம்” என்ற பள்ளிகள் தத்தெடுப் புத் திட்டத்தின் மூலம் நலம்பாக்கம் கிராம பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரப்பாக்கம் துவக்கப்பள்ளி, கண்ணகிநகர் அரசுப்பள்ளி, எழில் நகர் அரசுப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகள் பலன் பெற்றிருக்கின்றன.

விருது பெற்ற முனைவர் மரிய ஜீனா ஜான்சன் கூறும்போது, “இந்த விருது பெண் இனம் முழுமைக்கு மானது. கல்வித்துறைக்காக விருது வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...