Friday, January 8, 2016

ரயில் நிலையங்களில் அசுத்தம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உடனடியாக அமலுக்கு வந்தது

the hindu tamil

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளில் அசுத்தம் செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மத் திய அரசு மேற்கொண்டு வருகிறது. ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள் ளவும், பாதுகாப்பு பணிகளை மேம்படுத்தவும் சமீபத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. ஆனாலும், பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணிகள் சிலர் அசுத்தம் செய்து வருகின்றனர். அவ்வாறு அசுத்தம் செய் பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீஸ், பராமரிப்பு அதிகாரிகள் மூலம் இது தொடர் பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென உத்தரவிடப்பட் டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல இடங்களில் இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த அபராத தொகையான ரூ.500 தற்போது ரூ.5 ஆயிரமாக உயர்ந்திருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில் நிலையங்களை தூய்மை யாக வைத்துக் கொள்ள வேண்டுமென தொடர்ந்து விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதையும் மீறி அசுத்தம் செய்யும் பயணிகளிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது, இதற்கான அபராத தொகையை ரயில்வே வாரியம் உயர்த்தியுள்ளது. சென்ட்ரல் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் இது நடை முறைக்கு வந்துள்ளது. விரைவில் மற்ற ரயில் நிலையங்களிலும் இது படிப்படியாக நடைமுறைப் படுத்தப்படும்’’ என்றனர்.

மறுபரிசீலனை தேவை

இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத் தின் தலைவர் டி.சடகோபன் கூறும்போது, “அபராத தொகையை உயர்த்தினால் மட்டுமே ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியாது. முதலில் ரயில் நிலையங்களில் குப்பை தொட்டிகளை நிறுவ வேண்டும். போதிய அளவில் கழிப்பறைகள் அமைக்க வேண்டும். அபராத தொகையை உயர்த்தியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...