Friday, January 1, 2016

சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்,,,dinamani

சென்னை வெள்ள நிவாரணம்: ரூ.10 கோடி திரட்டிய சிங்கப்பூர் ஊடகங்கள்

First Published : 01 January 2016 01:03 AM IST
சென்னை வெள்ள நிவாரணத்துக்காக சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் சார்பில் 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அந்நாட்டைச் சேர்ந்த "மீடியா கார்ப்' என்ற நிறுவனம் வெளியிட்ட செய்தி: சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்துக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு "மீடியா கார்ப்' நிறுவனத்தின் கீழ் இயங்கும் வசந்தம் தொலைக்காட்சியும், ஒலி பண்பலை அலைவரிசையும் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டன. "லிட்டில் இந்தியா ஷாப்கீப்பர்ஸ்', "ஹெரிடேஜ் அúஸாசியேஷன்' உள்ளிட்ட நிறுவனங்களும் அந்தப் பணிகளில் இணைந்து பணியாற்றின.
 ஹிந்து அறக்கட்டளை வாரியம், நற்பணி பேரவை, சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவுவிடுதிகள் சங்கம், சிங்கப்பூர் தமிழ் சமூகத்துக்கான தேசியப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் நிவாரண நிதி திரட்டும் பணிகளுக்கு பெரும் பங்காற்றின.
 இதுவரை 2,14,000 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சென்னை வெள்ளத்துக்கு நிவாரண நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...