Monday, May 16, 2016

ஆங்கிலம் அறிவோமே - 109: பேட்டை ராப்பா இல்லை ஹிப் ஹாப்பா?


மீண்டும் சில rebusகளை அளிக்கலாமே என்று பல வாசகர்கள் விருப்பப்பட்டதால் இதோ அவ்வகைப் புதிர்கள் இரண்டு. உங்கள் விடைகளை உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊரின் பெயருடன் உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

1. STANDS

0 2 3 4 5 6

2. L1IFE1TIM1E

------------------------------------

என் உறவினர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘This house is bigger than Ramanan’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு விஷயங்களை ஒப்பிடும்போது அந்த ஒப்பிடலில் தெளிவு இருக்க வேண்டும்.

ஒரு வீட்டைப் பார்க்கிறீர்கள். ரமணனின் வீட்டைவிட இது பெரியது என்றால் This house is bigger than Ramanan என்று சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் இந்த வீடு ரமணனைவிட (அவர் வீட்டைவிட அல்ல) பெரியது என்றாகிவிடும். எனவே This house is bigger than the house of Ramanan என்றோ This house is bigger than that of Ramanan என்றோ கூற வேண்டும்.

The speed of the new car is higher than the old car என்பதுபோல் குறிப்பிடுபவர்கள் உண்டு. ‘பழைய காரைவிட’ புதிய காரின் வேகம் அதிகம் என்பது தவறு. பழைய காரின் வேகத்தைவிட புதிய காரின் வேகம் அதிகம் என்பதுதானே சரி? எனவே The speed of the new car is higher than that of the old car. இங்கே speed என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதை ‘that’ என்ற வார்த்தையின் மூலம் குறிக்கிறோம்.

------------------------------------

“ட்ரூப் என்றால் குழு என்றுதானே அர்த்தம்?’’. இந்தக் கேள்விக்கு இப்படி விளக்கமளிக்கலாம்.

Troupe என்ற வார்த்தையை பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை மகிழ்விக்கும் நடிகர்கள், நடனக் கலைஞர்கள், சர்க்கஸ் கலைஞர்கள் ஆகியோரின் குழுவைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

Troop என்பது பொதுவாக போர்ப் படையைக் குறிக்கிறது. U.N. peace keeping Troops. குறிப்பிட்ட மக்களையோ, மிருகங்களையோ குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுகிறது. A troop of secret Agents, A troop of mischievous monkeys.

------------------------------------

Silicon, Silicone இரண்டும் ஒன்றா?

Silicon என்பது ஒரு தனிமம். ஆக்ஸிஜன், கார்பன் போல. இது மணலின் முக்கியப் பகுதி.

டிரான்ஸிஸ்டர் மற்றும் கணினி சிப்களில் உள்ள முக்கியப் பொருள் சிலிகான். இதனால்தான் அமெரிக்காவில் மின்னணுத் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள இடத்தை சிலிகான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்கிறார்கள்.

Silicone என்பது ஒரு கூட்டுப் பொருள். கார்பன், சிலிகான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் கலந்தது. செயற்கைக் கால்களில் இது ஒரு முக்கியப் பொருள். இதை சிலிகோன் என்று உச்சரிக்கிறார்கள்.

------------------------------------

Neither என்ற வார்த்தைக்குப் பிறகு nor என்பதும், either என்ற வார்த்தைக்குப் பிறகு or என்பதும் அந்த வாக்கியத்தில் இடம்பெறும் என்பது தெரிந்ததுதான். ஆனால் பலரும் தெளிவாகத் தெரிந்து வைத்திராத இதுபோன்ற ஜோடி வார்த்தைகள் (correlatives) உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

No sooner என்ற வார்த்தைகள் இடம் பெற்றால் than என்ற வார்த்தையும் அந்த வாக்கியத்தில் கட்டாயம் இடம் பெறவேண்டும்.

Scarcely என்ற வார்த்தை இடம் பெறும்போது before என்ற வார்த்தை இடம் பெறும்.

Hardly என்ற வார்த்தை இடம் பெற்றால் when என்ற வார்த்தை தொடரும்.

இந்த மூன்றின் பயன்பாடுகளையும் விளக்கும் வாக்கியங்கள் இவை.

1. No sooner had we reached the station, than the train started.

2. We scarcely reached the station before the train started.

3. We had hardly gone to the station when the train started.

------------------------------------

இசை, நடனம் போன்ற கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு வாசகர் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான ஆங்கில விமர்சனங்களில் காணப்படும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்தும், புரியாமலும் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த வார்த்தைகளோடு மேலும் சில (இதே துறையைச் சேர்ந்த) வார்த்தைகளின் பொருளை யும் புரிந்து கொள்வோமே.

Maestro என்றால் மிகவும் மதிக்கத்தக்க இசையை உருவாக்குபவர் என்று அர்த்தம்.

Bass அல்லது Alto என்றால் அது (ஆண்) பாடகரின் குரல் கீழிருந்து மேலே செல்வதை உணர்த்துகிறது (ஆரோகணம்).

பாலே நடனம் என்று நாம் கூறுவதை ஆங்கிலத்தில் Ballate என்பார்கள். ரஷ்யாவில் பிரபலமான இந்த நடனத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால் Ballad என்பது கதையை விவரிக்கும் ஒரு பாடல்.

Concert என்றால் கச்சேரி. அதாவது மக்களை நேரடிப் பார்வையாளர்களாகக் கொண்ட மேடை இசை நிகழ்ச்சி.

Fusion என்றால் அது இரண்டு வெவ்வேறு இசை வடிவங்கள் இணைவதைக் குறிக்கிறது. என்றாலும் Jazz மற்றும் Electric Rock இருவகைகளின் இணைப்பைத்தான் Fusion என்று குறிப்பிட்டனர். நம் கச்சேரிகளில் இடம் பெறும் ஜூகல்பந்தி என்பதும் இதுபோன்ற இருவேறு இசை வடிவங்களின் இணைப்புதானே.

ஆப்ரா எனப்படும் Opera என்பது இசை வடிவ நாடகம். பின்னணி இசை ஒலித்துக்கொண்டே இருக்க மேடையில் தோன்றுபவர்கள் சொந்தக் குரலில் பாடுவார்கள். Diva என்பவர் இதுபோன்ற பிரம்மாண்டமான ஆப்ராவில் பங்குகொள்ளும் முக்கிய பின்னணிப் பாடகி.

Rap என்பது பாப் இசையை அடிப்படையாகக் கொண்ட இசை மற்றும் நடன வடிவம். Hip hop இசையை rap இசை என்பார்கள். மற்றபடி பேட்டை ராப் பற்றி நீங்கள் அறிவீர்கள்!

காபரே நடனம் என்றால் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு ஆடும் ஆட்டம் என்ற பிம்பம் நம் மனதில் பதிந்திருக்கிறது. எனினும் Cabaret என்பது மதுவகம் அல்லது ஹோட்டல்களில் ஆடப்படும் நடனம், அவ்வளவே. எனினும் நடைமுறையில் நம் பிம்பம்தான் சரியானது.

காயர் (Choir) என்பது பாடகர்களின் குழுவைக் குறிக்கிறது. முக்கியமாக மாதா கோவில்களில் இடம்பெறும் இசைப் பாடல்களை கூட்டாகப் பாடுபவர்களைக் குறிக்கிறது. .

------------------------------------

“Fun என்றாலே சிரிப்பும் கும்மாளமும்தானே” என்று தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் நண்பரிடம் ஒரு சில விளக்கங்களைக் கூறுவது அவசியமாகிறது.

Fun என்றால் அதில் நகைச்சுவையோ, வெடிச் சிரிப்போ இருந்தாக வேண்டும் என்பதில்லை. Fun என்றால் உற்சாகம். அதாவது enjoyment. கீழே உள்ள வாக்கியங்களைப் படித்தால் மேலும் தெளிவாகும்.

It was fun seating on the wall near the sea.

It is more fun to go with friends than to go out alone.

Just for fun, we painted our faces.

ஆனால் funny என்ற வார்த்தைக்குப் பொருள் ‘சிரிப்பை வரவழைக்கக்கூடிய’ என்பதாகும். You do look funny in that red dress.

சிப்ஸ்

ஒருவரை Portly என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்? அவர் பருமனாக இருக்கிறார் என்று அர்த்தம். Plump.

நெற்றிக்கு இருபுறமும் உள்ள பகுதிகளை எப்படிக் குறிப்பிடுவது? Temples.

Your victory is momentary whereas our victory will be momentous” என்று ஒரு கதையில் படித்தேன். இரண்டு விக்டரிக்களுக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்

Momentary victory என்பது தாற்காலிகமான வெற்றி. Momentous victory என்பது திருப்புமுனையான, மிக முக்கியமான வெற்றி.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com


என்னதான் புதிய புதிய துறைகளும் வேலைகளும் நாள்தோறும் உருவாகிக்கொண்டிருந்தாலும் இன்றும் பலர் மனதில் ஐஏஎஸ் ஆகும் கனவு சிறகடித்துப் பறந்துகொண்டுதான் இருக்கிறது. அரசு வேலைகளில் உச்சபட்ச பதவி அடைய சிவில் சர்வீஸஸ் என்றழைக்கப்படும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதுவது சிறந்த வழி எனலாம். வரும் ஆகஸ்ட் 7-ல் நடக்கவிருக்கும் சிவில் சர்வீஸஸ் பிரிலிம்ஸ் எனப்படும் முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு இதோ வந்துவிட்டது. இந்தத் தேர்வு தொடர்பான தகுதி, பாடத் திட்டம், தேர்வு விவரங்கள், தேர்வு நடத்தப்படும் முறை ஆகியவை குறித்த அத்தனை தகவல்களையும் ஆண்டுதோறும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிடுகிறது. அதே போல இந்தாண்டும் வந்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் முதன்மை தேர்வில் இடம்பெறும் விறுப்ப தேர்வு தாளில் தற்போது அமல்படுத்தவில்லை. சென்ற ஆண்டு நடத்தப்பட்ட அதே முறையில்தான் இம்முறையும் நடக்கவிருக்கிறது.

பிரிலிம்ஸ் எழுவது எப்படி?

யுபிஎஸ்சி தேர்வில் உள்ள மூன்று அடுக்கு தேர்வுகளில் முதலாவது பிரிலிம்ஸ். முதல் கட்டத் தேர்வான பிரிலிம்ஸ்-ஐ எதிர்கொள்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

முதலில் ஆன்லைன் விண்ணப்பத்தை யூபிஎஸ்சி இணையதளமான www.upsconline.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 27 மே 2016. 1076 காலி இடங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிலிம்ஸ் தேர்வில் வெல்லத் தொடர்ந்து சொல்லப்படும் மந்திரம், கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஜிஎஸ் (General Studies) பொது ஆய்வுகள் தேர்வுத் தாள்களை வைத்துத் தயாராவதுதான். யுபிஎஸ்சி அமைப்பானது சிவில் சர்வீஸ் மட்டுமல்லாமல் எஸ்எஸ்சி, சிஏபிஎஃப் போன்ற பல தேர்வுகளை நடத்துகிறது. அவற்றிலும் பொது ஆய்வுகள் கேள்வித்தாள் உண்டு. சொல்லப்போனால் யுபிஎஸ்சி இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் மீண்டும் மீண்டும் கேள்வித் தாளை வடிவமைக்கிறது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகையால் இந்தத் தேர்வுகளின் ஜிஎஸ்- களை வைத்துப் பயிற்சி மேற்கொள்வது உச்சிதம். இந்தக் கேள்வித் தாள்கள் அனைத்தும் யுபிஎஸ்சி இணையதளத்தில் உள்ளன. இதைவிட்டுவிட்டு வியாபார நோக்கத்துக்காகப் பயிற்சி மையங்கள் சொல்லும் அத்தனையும் படித்துக்கொண்டே இருப்பதில் பிரயோஜனம் இல்லை.

மனதில் நிறுத்த வேண்டியவை

தற்போது ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் (இந்திய வனப் பணி) ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் பொதுவான பிரிலிம்ஸ் தேர்வுதான். ஆகையால் சுற்றுச்சூழல், சூழலியல், அடிப்படை அறிவியல் தொடர்பாகப் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. அடுத்து, அறிவியல் பின்புலத்திலிருந்து வந்து பரீட்சை எழுதுபவர்களுக்கு வரலாறு, அரசியல், பொருளாதாரம் குறித்துக் கடினமான நுணுக்கமான கேள்விகளை எதிர்கொள்வது சவாலாக இருப்பதால் அவை எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பொது நிகழ்வுகள், சமகாலச் செய்திகள் தொடர்பான கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன.

எப்படித் தயாராகலாம்?

பொது அறிவு குறித்துக் கேட்கப்படுபவை பெரும்பாலும் கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த தேச, சர்வதேசச் சம்பவங்கள்தான். அதே நேரத்தில் வெறும் புள்ளிவிவரங்களாகவும் தகவல்களாவும் மட்டும் படித்தால் போதாது. ஒரு செய்தியின் வெவ்வேறு கோணங்களைக் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொண்டு படிப்பது நல்லது.

சரியாக திட்டமிட்டால் ஐஏஎஸ் ஆகலாம்!


பண்டைய, மத்தியக் கால இந்திய வரலாற்றைச் சமூக, கலாசார, சமய அடிப்படையில் ஆழமாகப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

நவீன இந்திய வரலாற்றில் விடுதலைப் போராட்டம், அரசியலமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும், சமூக மத இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு ஆகியவை குறித்த தெளிவான புரிதல் தேவை.

புவியியலில் அத்துப்படியாக பொதுத் தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) 6-ம் வகுப்பு முதல் +2 வரையிலான புவியியல் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.

இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண்மை, தொழிற்துறை, சேவைத் துறைகளின் அத்தனை செயல்பாடுகளையும் ஊன்றிக் கவனிப்பது முக்கியம். இதைக் காட்டிலும் பட்ஜெட், பொருளாதாரக் கணக்கெடுப்பு குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.

பொது அறிவியலில் என்சிஇஆர்டி பள்ளி பாடப் புத்தகங்களிலிருந்து தூய அறிவியல் (Pure Science) குறித்துக் கேள்விகள் கேட்கப்படும். அதேபோல உயிரித்தொழில்நுட்பம், மரபணு பொறியியல், மருத்துவத் துறையில் நிகழும் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட செயல்முறை அறிவியலிலிருந்தும் (Applied Science) கேள்விகள் கேட்கப்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கஷ்டப்பட்டு படிப்பதைவிடவும் திட்டமிட்டுப் படிப்பதுதான் வெற்றிக்கானத் தாரக மந்திரமாகச் சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப் அழைப்பு சேவை

THE HINDU

மெசேஜிங் சேவைகளில் பிரபலமாக இருக்கும் வாட்ஸ் அப் குரல் வழி வசதி பற்றிக் கொஞ்ச காலமாகவே பேசப்பட்டுவருகிறது. இந்த வாட்ஸ் அப் காலிங் வசதி இப்போது பயனாளிகளுக்கு அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் மெசஞ்சரின் சமீபத்தில் வடிவில் இதைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளேவில் இருந்து இதை டவுன்லோடு செய்துகொள்ளலாம். (வர்ஷென் 2.11.561)

இந்த வசதியை நிறுவும் முறை சுபலமானது. முதலில் கூகுள் பிளேவில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். ஆனால் இதன் பிறகு வேறு ஒரு பயனாளியிடம் இருந்து அழைப்பு வந்தால்தான் இந்த சேவை ஆக்டிவேட் ஆகும். எனவே சக பயனாளிகளிடம் கோரிக்கை அவைத்து அவர்கள் அழைத்த பிறகு , வாட்ஸ் அப்பின் செயலியில் அரட்டை வசதிக்கு அருகே கால் செய்யும் வசதியைப் பார்க்கலாம்.

அதிகார்பூர்வ செயலிகளை மட்டுமே வாட்ஸ் அப் அங்கீகரிப்பதால் கூகுளில் பிளேவில் இருந்து அல்லது வாட்ஸ் அப் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யவும்: இதனிடையே ஐபோனிலும் இந்த வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளது!

டவுன்லோடு செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.whatsapp&hl=en

இணையத்தின் நிறம் என்ன?


இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் மனதில் நீல நிறத்தில் தோன்றிக்கொண்டிருக்கலாம். பலவிதமான நீல நிறங்கள். கூகுள் இணைப்புகளில் பார்க்கும் நீலம்! பேஸ்புக் நீலம்! ட்விட்டர் நீலம்! இன்ஸ்டாகிராம் நீலம்!

இப்போது ‘ஏன் நீலம்?' என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். ஆனால் அதை விட இன்னொரு முக்கியமான கேள்வி இருக்கிறது. இணைய இணைப்புகளின் நிறம் என்ன என்பதுதான் அது. இதற்கான பதிலும் நீலம்தான். தீர்மானமாக நீலம். ஏனெனில் இணையத்தின் ஆரம்ப காலம் தொட்டு இணைப்புகள் நீல நிறத்தில்தான் இருந்து வருகின்றன‌.

எதற்கு இந்த நிற ஆராய்ச்சி என்று கேட்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. முன்னணி தேடியந்திரமான கூகுள் இணைய இணைப்புகளின் நிறத்தை அதன் வழக்கமான நிறமான நீலத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாற்றிப் பார்க்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சோதனை இணைய அபிமானிகள் பலரை அதிருப்தியில் ஆழ்த்தி, ‘எங்கே எங்கள் நீல நிறம்’ என்று பொங்க வைத்திருக்கிறது. அதனால்தான் இணைய இணைப்புகளின் நிறம் பற்றிய கேள்வி எழுந்துள்ளது.

நீங்களேகூட ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு யோசித்துப் பார்த்தால், ‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக கூகுள் தேடல் இணைப்புகள் நீல நிறத்தில்தான் தோன்றுகின்றன' என்று பதில் சொல்வீர்கள். கூகுள் என்றில்லை, ஆதிகால அல்டாவிஸ்டா, லைகோஸ் உள்ளிட்ட எல்லா தேடியந்திரங்களிலும் இணைப்புகளின் நிறம் நீலம்தான்.

இதை நீங்கள் கவனிக்காமலே இருந்தாலும் சரி, உங்கள் மனது நீல நிற இணைப்புகளுக்குப் பழகியிருக்கும். இணைய முகவரிகள் பச்சை வண்ணத்தில் அமைந்திருக்கும். அது மட்டும் அல்ல ஏற்கெனவே கிளிக் செய்யப்பட்ட இணைப்பு எனில் அதன் வண்ணம் ஊதா நிறத்தில் மாறுபட்டிருப்பதையும் உங்கள் இணைய மனது பதிவு செய்திருக்கும்.

இணையத்தைப் பொறுத்தவரை இணைப்புகளின் நிறம் என்பது நீலம்தான்!

அதனால்தான் கூகுள் இந்த நிறத்தை மாற்றும் சோதனையில் ஈடுபட்டிருப்பது இணைய உலகில் சலசல‌ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேடல் முடிவுகளில் வரிசையாக இடம்பெறும் முடிவுகளின் பட்டியலை வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாகக் கருப்பு நிறத்தில் தோன்ற வைத்துள்ளது. இப்படி நிறம் மாறியிருப்பதைப் பார்த்த பல இணையவாசிகள் திடுக்கிட்டு போயிருக்கின்றனர். ஒருசிலர் இது குறித்த அதிருப்தியையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதற்காக ’பிரிங் பேக் தி ப்ளு’ (#BringBackTheBlue) எனும் ஹாஷ்டேகுடன் இந்தக் கருத்துகளை ட்விட்டரில் குறும்பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.

இணையக் கிளர்ச்சியாக இது வெடிக்கவில்லை என்றாலும் நிச்சயம் பரவலான அதிருப்தி ஏற்பட்டுள்ள‌து. இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக கூகுள் இந்த மாற்றத்தைப் பரவலாகக் கொண்டுவர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அல்லது சோதனை அளவிலேயே கைவிட்டாலும் வியப்பதற்கில்லை.

இப்போதைக்கு இணையவாசிகள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்று மட்டும் வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது. கூகுள் இது தொடர்பாக வெளிப்படையாகப் பதில் அளிக்கவில்லை, ஆனால் சின்னச் சின்னதாகச் சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்வது வழக்கம் என்று மட்டும் கூறியிருக்கிறது.

உண்மைதான்! கூகுள் இது போன்ற சோதனைகளை நடத்துவது புதிதல்ல. எழுத்துரு தொடங்கி சின்னச் சின்ன விஷயங்களில் கூகுல் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக இணைப்புகள் மற்றும் ஜிமெயில் விளம்பர இணைப்புகளுக்காக 41 வகையான நீல நிறங்களை கூகுள் பரிசோதனை செய்து பார்த்துத் தற்போது பயன்பாட்டில் உள்ள குறிப்பிட்ட நீல நிறத்தைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

எந்த நிறத்தைப் பயனாளிகள் அதிகம் கிளிக் செய்கின்றனர் என சோதித்துப் பார்த்து அதனடிப்படையில் கூகுள் செயல்பட்டதாகவும், இதன் காரணமாக ஆண்டுக்கு 200 மில்லியன் கூடுதலாக விளம்பர வருவாய் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதே போல இணைப்புகளின் கீழே தோன்றும் சிவப்புக் கோட்டையும் நீலமாக மாற்றியிருக்கிறது. இந்த முறையும் இதே போன்ற வருவாய் நோக்கம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கூகுள் மட்டும் அல்ல, ஃபேஸ்புக் கூட இது போன்ற சோதனையைப் பயனாளிகள் மத்தியில் மேற்கொள்ளும் வழக்கம் கொண்டிருக்கிறது. இதனிடையே கூகுள் கணக்குப் பக்கத்தில் ‘லாக் இன்' செய்து வெளியே வந்தால் இந்தச் சோதனையில் இருந்து விடுபட்டு, நீல இணைப்புகளுக்கு மாறிக்கொள்ளும் வசதி இருப்பதாகவும் கூகுள் விவாதக் குழுக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

நிற்க, இணைப்புகளின் நிறம் அத்தனை முக்கியமா எனும் கேள்வி எழலாம். நீல நிற இணைப்புகள் என்பது இணையப் பாரம்பரியமாகவே இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டிய விஷயம். 1990களில் ‘www' அறிமுகமான காலம் முதல் இணைய இணைப்புகள் நீல நிறத்திலேயே அடையாளம் காட்டப்படுகின்றன.

இணையத்தின் தந்தை எனப் போற்றப்படும், வலையை உருவாக்கிய‌ பிரிட்டன் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ, கருப்பு நிற எழுத்துக்களுக்கு மத்தியில் பளிச்செனத் தெரிவதற்காக இணைப்புகளை நீல நிறமாக தோன்றச் செய்தார். ஆரம்ப கால பிரவுசர்களான மொசைக் போன்றவற்றில் இணைப்புகளுக்கு இதே நிறம் பயன்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரே கூட, ஹைபர் லிங்க் வசதிக்கு நீல நிறமே பயன்பட்டிருக்கிறது.

அது மட்டும் அல்ல, இணையத்தில் நிறங்கள் என்பவை பொதுவான சில அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இணையக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பார்த்தால், நீல நிற இணைப்பு என்பது தற்போது பயன்பாட்டில் உள்ள பக்கங்களைக் குறிக்கிறது. அடர் நீல நிறம் என்றால் ஏற்கெனவே விஜயம் செய்த இணையப் பக்கங்களைக் குறிக்கும். சிவப்பு நிற இணைப்பு எனில் அந்தப் பக்கம் விக்கிப்பீடியாவில் இல்லை எனப் பொருள். வெளிர் சிவப்பு என்றால்,

இப்போது இல்லாத ஆனால் நீங்கள் ஏற்கெனவே விஜயம் செய்த பக்கம் என்று பொருள். இன்னும் நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. விக்கிப்பீடியாவில் இதற்கான விரிவான பட்டியலைப் பார்க்கலாம்.

ஆக, இணையம் தனக்கென‌ பொதுவான சில செயல்பாட்டு நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நலனுக்காக அதைச் சோதனைக்கு உள்ளாக்கலாமா என்ற கேள்வியையும் இணைய வல்லுந‌ர்கள் எழுப்புகின்றனர்.

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:
அவகாசம் கேட்கிறது திமுக:விளக்கம் அளித்தது அதிமுக

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டதற்காக தேர்தல் ஆணையம் கோரிய விளக்கத்தை அளிக்க திமுக கால அவகாசம் கோரியுள்ளது.
அதேசமயம், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விளக்கத்தை அதிமுக அளித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் களம் இறங்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளில் மக்களைக் கவரும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான உரிய நிதி ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதி வலியுறுத்துகிறது.
தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பானது அப்படியே தேர்தல் நடத்தை விதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சிகளுக்கு நோட்டீஸ்:
 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட இரண்டு பிரதான கட்சிகளுமே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் சில இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை இரண்டு கட்சிகளும் குறிப்பிடப்பிடவில்லை என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம், இரண்டு கட்சிகளும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அவகாசம் கேட்டது திமுக:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அதிமுக தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விளக்கத்தை அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் பெரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான பி.வெற்றிவேல் கோரிக்கை மனுவை அளித்தார். அதன் விவரம்:
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவோம் என்ற விளக்கத்தை அளிக்காமல் பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமலும், விளக்கம் ஏதும் கூறாமலும் மேலும் இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டுள்ளனர். இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
எனவே, இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் அனைத்து வேட்பாளர்களையும் தகுதி இழப்பு செய்து உத்தரவிட வேண்டும் என்று தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா விளக்கம்
தேர்தல் பிரசாரத்தின்போதே, அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.
""எந்த வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்பும், அதைப் பற்றி நூறு தடவை அல்ல, ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி தருவேன். என்னால் நிறைவேற்ற முடியும் என்றால்தான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது, தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்'' என்று உறுதி அளித்திருந்தார்.
தேர்தல் விடுமுறையை ஈடுசெய்ய விதிமீறும் ஐ.டி., நிறுவனம்

பதிவு செய்த நாள்: மே 15,2016 21:36

எழுத்தின் அளவு:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, சென்னையில் உள்ள தனியார், ஐ.டி., நிறுவனம், தேர்தல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஊழியர்களை, மே, 21ல் பணிக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியுள்ளது.'அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தேர்தல் நாளன்று, அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பதால், மற்றொரு விடுமுறை நாளில் பணி செய்து, அதை

ஈடுசெய்யுமாறு சில, ஐ.டி., நிறுவனங்கள் கூறிஇருந்தன; இது குறித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் கிளைகளை உடைய, சர்வதேச ஐ.டி., நிறுவனம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தன் ஊழியர்களுக்கு, விடுமுறை தினமான, 21ம் தேதி சனிக்கிழமை பணிக்கு வரக் கூறி, ஒரு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளது.

அதில், 'அலுவலக தேவை இருப்பதால், மே, 21ல் அனைவரும் பணிக்கு வரவேண்டும்; உங்கள்

ஒத்துழைப்புக்கு நன்றி' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் செய்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என, ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.- நமது நிருபர் -
நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' 19ம் தேதி தற்காலிக சான்றிதழ்

பதிவு செய்த நாள்: மே 16,2016 05:09

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அதிகாரிகள் மேலும் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. lதேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்தேர்வர்கள் மே, 19ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம் மே, 21ம் தேதி முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு பள்ளிகள் மூலம், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மே 23ல் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்:மத்திய இடைநிலை கல்வி

வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 23ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில், பிளஸ் 2 தேர்வுகள்

நடத்தப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் மே, 23ல் வெளியாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், 55 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 15 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

- நமது நிருபர் -
நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்

பதிவு செய்த நாள்: மே 15,2016 21:3

சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியை பயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது. இதனால், வரும் ஆண்டுகளில் இந்த பல்கலைகளுக்கு மானியம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் மத்திய, மாநில அரசின் பல்கலைகளுக்கு, பல்வேறு திட்டங்களுக்காக, யு.ஜி.சி., யில் இருந்து ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படுகிறது.

ஆராய்ச்சி திட்டங்கள்:இந்த நிதியில், ஆராய்ச்சி படிப்புகள் துவங்க வேண்டும்; புதிய ஆராய்ச்சி திட்டங்கள் கொண்டு வர லாம்; புதிய பாடப்பிரிவுகளும் துவங்கலாம். இந்நிலையில், பல்கலைகளின் நிதி செலவீடு குறித்த அறிக்கையை, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பல அரசு பல்கலைகள், யு.ஜி.சி., ஒதுக்கிய நிதியை செலவு செய்யாதது தெரிய வந்துள்ளது.
அறிக்கை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கு, 7.76 கோடி; கோவை பாரதியார் பல்கலைக்கு, 5.97 கோடி; சென்னை பல்கலைக்கு, 10.88 கோடி; சேலம் பெரியார் பல்கலைக்கு, 5.06 கோடி ரூபாய் என, நான்கு ஆண்டுகளில் மொத்தம், 29.67 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, பல்கலைகள் செலவு செய்யாததால் செலவு குறித்த அறிக்கையை வழங்கவில்லை.

அதே நேரம், காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை அண்ணா பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை, அம்பேத்கர் சட்ட பல்கலை ஆகிய பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி., நிதியை செலவு செய்து, 29.67 கோடி ரூபாய்க்கான செலவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன.

இந்த பல்கலைகளுக்கு மட்டும், வரும் கல்வியாண்டில் மானியம் வழங்க, யு.ஜி.சி., முடிவு
 உள்ளது. செலவு அறிக்கை தாக்கல் செய்யாத, நான்கு பல்கலைகளுக்கும் மானியம் நிறுத்தப்படும் என தெரிகிறது.- நமது நிருபர் -

ரூ.105 கோடி பறிமுதல்;ரூ.48 கோடி திருப்பி அளிப்பு

இதுவரை ரூ.105 கோடி பறிமுதல்;ரூ.48 கோடி திருப்பி அளிப்பு

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.105.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.48 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 13-ஆம் தேதியன்று வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.14.38 லட்சமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பொருள்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2.62 கோடியாகும்.

தேர்தல் நடத்தை விதி நடைமுறை அமலானதிலிருந்து, இதுவரை மொத்தம் ரூ.105.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.47.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.105.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.48 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 13-ஆம் தேதியன்று வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.14.38 லட்சமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பொருள்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2.62 கோடியாகும்.

தேர்தல் நடத்தை விதி நடைமுறை அமலானதிலிருந்து, இதுவரை மொத்தம் ரூ.105.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.47.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Friday, May 13, 2016

எம்ஜிஆர் 100 | 64

எம்ஜிஆர் 100 | 64: மக்களின் அடிமை நான்!

மதுரையில் நடந்த விழாவில் தடுப்பைத் தாண்டி மேடையின் நுனிக்கு வந்து, மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
M.G.R. எப்போதும் மக்களோடு மக்களாகவே இருந்தார். தமிழகத்தின் முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தபோதும் தன்னை மக்களிடமிருந்து அப்பாற்பட்டவராக அவர் நினைத்ததோ, செயல்பட்டதோ இல்லை.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.

காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண் டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராள மானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப் பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக கையில் மனுக்களு டன் ஓரமாக நின்றனர். காவல்துறையினர் அவர் களை போகச் சொல்லியும் மறுத்தனர். ‘‘மனுக் களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. ‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.

மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அதிகாரிகளிடம் விவரம் கேட்டார். ‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார். தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்து பெற்றுக் கொண்டார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண் டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்; மனுக்கள் கொடுத்தவர்கள் உட்பட.

‘படகோட்டி’ படத்தில் ஒரு காட்சி. இரு மீனவ குப்பங்களுக்கிடையே பகை நிலவும். ஒரு குப்பத்தின் தலைவரான எம்.ஜி.ஆரும் எதிரி குப்பத்தைச் சேர்ந்த தலைவரின் மகளான நடிகை சரோஜா தேவியும் காதலிப்பார்கள். இதற்கு எம்.ஜி.ஆரின் குப்பத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்கள் விருப்பப்படி தனது காதலை தியாகம் செய்ய எம்.ஜி.ஆர். முடிவு செய்வார்.

அதனால் வருத்தப்படும் சரோஜா தேவி, ‘‘எனது காதல் கருக வேண்டியதுதானா?’’ என்று கேட் பார். அதற்கு எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்…

‘‘நான் தனிமனிதனல்ல. மக்களுக்கு கட்டுப் பட்டவன். நான் தலைவன் அல்ல. தலைவன் என்ற பெயரில் மக்களின் அடிமை நான்.’’

அப்படி, மக்களின் அடிமையாக தன்னைக் கருதி சேவை செய்ததால்தான் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்

எம்.ஜி.ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் ‘கல்கண்டு’ பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன். ஒருமுறை தமிழ்வாணன் இப்படிக் கூறினார்: ‘‘ஒரு குழந்தை முன் பத்து நடிகர்களின் படங்களை போட்டால் அது எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், அவரது சிரிப்பில் உண்மை இருக்கிறது!’’

Thursday, May 12, 2016

எம்ஜிஆர் 100 | 63: சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...

அழுதபடி குறைகளை கூறும் மூதாட்டியை எம்.ஜி.ஆர். தேற்றுகிறார்.


எம்ஜிஆர் 100 | 63: சொன்னதையும் சொல்லாததையும் செய்தவர். ஆனால்...


M.G.R. பிறர் கஷ்டப்படுவதை காண சகிக்காதவர். அவர் கண் முன்னால் யாரும் துன்பப்படுவதைப் பார்த்தால், அவர்கள் கேட்காவிட்டாலும் உடனடியாக உதவி செய்வார். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி; அரசு மூலம் திட்டங்களை செயல்படுத்தி உதவி செய்ய வேண்டும் என்றாலும் அதற்காக மத்திய அரசிடம் உரத்துக் குரல் கொடுக்கவும் தயங்க மாட்டார்.

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, 1980 ஜனவரி மாதம் கர்நாடகாவில் குண்டு ராவ் முதல்வரானார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்றே தன்னை அறிவித்துக் கொண்டவர். பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரை அழைத்துக் கொண்டே இருந்தார். ஒருமுறை குண்டுராவின் பிறந்த நாளன்று பெங்களூருக்கு சென்று அவரை வாழ்த்த எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

அதற்காக தனது TMX 4777 எண் கொண்ட அம்பாசிடர் காரில் மனைவி ஜானகி அம்மை யார் மற்றும் ஜானகி அம்மாளின் சகோதரர் மகள் லதா ஆகியோருடன் ஒருநாள் மதியம் பெங்களூர் புறப்பட்டார். பின்னால் ஒரு வேனில் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றனர்.

பெங்களூர் சென்று அங்குள்ள ‘வெஸ்ட் எண்ட்’ ஓட்டலில் இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 9 மணிக்கு குண்டுராவின் வீட்டுக் குச் சென்ற எம்.ஜி.ஆர்., அவருக்கு பரிசளித்து வாழ்த்தினார். அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார் குண்டுராவ். எம்.ஜி.ஆருக்கும் உடன் வந்தவர்களுக்கும் விருந்தளிக்கப்பட்டது. சாப்பிட்டுவிட்டு, காரில் எம்.ஜி.ஆர். சென்னைக்கு புறப்பட்டார்.

இப்போது போலவே அப்போதும் சுட்டெரிக் கும் கோடைகாலம். உச்சி வெயில் நேரத்தில் ஓசூர் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் ஒரு மூதாட்டியும் பத்து வயது சிறுமியும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறு காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்தனர். பத்து தப்படி ஓட்டமும் நடையுமாக செல்வதும் பிறகு, வெயிலுக்காக ஓரமாக ஒதுங்கி நின்று மீண்டும் நடப்பதுமாக இருந்தனர். அவர்களை தூரத்தில் வரும்போதே காரில் இருந்து எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அவர்கள் அருகில் கார் வந்ததும் டிரைவரை நிறுத்தச் சொன்னார். முன் சீட்டில் அமர்ந்திருந்த உதவியாளரைவிட்டு அந்த மூதாட்டியை விசாரிக்கச் சொன்னார்.

காரில் இருந்து இறங்கி விசாரித்த உதவியாளரிடம் அந்த மூதாட்டி, ‘‘தூரத்தில் இருந்து புல்லை அறுத்துக் கட்டி தலையில் சுமந்துபோய் விற்றால் தலைச்சுமைக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். வெயிலுக்கு கால் சுடுதுய்யா. அதான் நின்று நின்று செல்கிறோம்’’ என்றார். அவர் கூறியதை எம்.ஜி.ஆரிடம் உதவியாளர் தெரிவித்தார். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., காரில் இருந்த ஜானகி அம்மையார், அவரது உறவினர் லதா ஆகியோர் அணிந்திருந்த செருப்புகளை கழற்றச் சொன்னார். அதோடு, தன் பையில் இருந்த கணிசமான பணத்தையும் உதவியாளரிடம் கொடுத்து மூதாட்டியிடமும் சிறுமியிடமும் கொடுக்கச் சொன்னார். அதை பெற்றுக்கொண்ட மூதாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது, காரின் கருப்புக் கண்ணாடியை இறக்கிவிட்டு மூதாட்டியை எம்.ஜி.ஆர். வணங் கினார். அவரை பார்த்த பிறகுதான் தனக்கு உதவி செய்தது எம்.ஜி.ஆர். என்றே அந்த மூதாட்டிக்குத் தெரிந்தது. நன்றி கூட தெரிவிக்காமல் பிரமை பிடித்தவர்கள் போல மூதாட்டியும் சிறுமியும் பார்த்துக் கொண்டிருக்க, சிரித்தபடியே எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

எம்.ஜி.ஆர். மீது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். இலங்கைத் தமிழர் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி மிகவும் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். பேசிக் கொண்டிருக்கும்போது ராஜீவ் எழுந்துவந்து ‘மைக்’கை சரி செய்தார். மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்திருந்தார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்திக்க எம்.ஜி.ஆர். டெல்லி சென்றார். தமிழக அரசு அதிகாரிகளை அழைத்து, ‘‘எல்லா பள்ளி பிள்ளைகளுக்கும் சீருடை வழங்க பிரதமரிடம் மாநில அரசின் சார்பில் நிதி கேட்கலாம் என்று இருக்கிறேன். எவ்வளவு தேவைப்படும் என்று கணக்கிட்டு வாருங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதிகாரிகள் கணக்கிட்டு 120 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

ராஜீவ் காந்தியுடனான சந்திப்பின்போது, எம்.ஜி.ஆரின் மற்ற எல்லாக் கோரிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார். சீருடைத் திட்டத்துக்கு மானியம் வழங்குவதை மட்டும் ஏற்கவில்லை. ‘‘பின்னர் பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. ‘‘தமிழ்நாட்டுக்கு மானியமே வேண்டாம்’’ என்று எழுந்துவிட்டார்.

பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஆர்.கே.தவான் தொடர்பு கொண்டு, ‘‘மாலையில் வேண்டுமானால் நீங்கள் மீண்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். ராஜீவை மீண்டும் சந்திக்க புறப்படும் முன் அதிகாரிகளிடம், ‘‘பிரதமர் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் பார்ப்போம். இல்லாவிட்டால் தமிழக அரசின் நிதி நெருக்கடியை மக்களிடம் சொல்லி, வீட்டுக்கு கொஞ்சம் பணம் வாங்கி நாமே சீருடைத் திட்டத்தை செயல்படுத்துவோம்’’ என்றார் எம்.ஜி.ஆர்.!

ஆனால், அதற்கு அவசியம் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அன்பு, மதிப்பு காரணமாக மத்திய அரசின் சார்பில் மானியம் வழங்க ராஜீவ் காந்தி சம்மதித்துவிட்டார். ‘‘சிறுவயதில் ஒருவேளை சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். அதனால்தான் சத்துணவோடு சீருடையும் கொடுக்க விரும்புகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

இந்த திட்டங்களையெல்லாம் தேர்தல் அறிக் கையில் வாக்குறுதியாக அவர் சொன்னதில்லை. எம்.ஜி.ஆர். சொன்னதை செய்தார்; சொல்லாத தையும் செய்தார். இவற்றைவிட முக்கியமாக...

செய்ததை சொல்ல மாட்டார்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்


முதல்வராக இருந்தபோது பாட்டாளி மக்கள், ஏழைகள் ஆகியோரின் நலனுக்கு எம்.ஜி.ஆர். முன்னுரிமை கொடுப்பார். ஓசூர் அருகே மூதாட்டியும் சிறுமியும் வெயிலில் தவிப்பதை பார்த்ததாலோ என்னவோ, கல்லிலும் முள்ளிலும் வேகாத வெயிலிலும் வெறும் காலுடன் நடந்து கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஏழைகளுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். செயல்படுத்தினார்!

Wednesday, May 11, 2016

பரோட்டா பார்சலுக்குள் பணம் பட்டுவாடா : அரசியல் கட்சிகள் அதிரடி


ChennaiOnline

சென்னை,மே 10 (டி.என்.எஸ்) வரும் மே 16ஆம் தேதி தமிழக சட்டபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெட்பாளர்கள் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதைவிடவும் அதிரடியான முறையில் சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் பகுதியில் மதிய வேளைகளில் மக்களுக்கு பரோட்டா வாங்கிக் கொடுக்கும் கட்சி நிர்வாகிகள், அந்த புரோட்டா பார்சலுக்குள் ஆயிரம் ரூபாய் நோட்டையும் வைத்து கொடுக்கிறார்களாம்.

இதுமட்டும் இன்றி, இட்லி பார்சல், இனிப்பு பார்சல் உள்ளிட்ட உணவுப் பொருட்களோடு தான் தற்போது பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறதாம்.

தேர்தல் கமிஷன் அதிரடி: ரூ.92 கோடி பறிமுதல்


DINAMALAR 

சென்னை:தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில், 92 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:ஒவ்வொரு தொகுதியிலும், 20 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இக்குழுக்கள், 12ம் தேதி முதல், பறக்கும் படையாக செயல்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது,

ஒருநாள் முன்னதாக, 11ம் தேதியேகளமிறங்க உள்ளனர்.
ஓட்டுச்சீட்டுஒவ்வொரு தொகுதியிலும், மூன்று, 'ஷிப்ட்'களாக, 24 மணி நேரமும், 25 பறக்கும் படையினர், ரோந்து வந்தபடி இருப்பர். பாதுகாப்புக்கு, 300 கம்பெனி
துணை ராணுவ வீரர்கள்வந்துள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
வேலுார் மாவட்டத்தில், ஒரு தொகுதியில், வேட்பாளர் புகைப்படத்தை மாற்றி அச்சிட்டதால், அங்கு புது ஓட்டுச்சீட்டு அச்சிடப்படுகிறது. தமிழகம் முழுவதும், 190 இடங்களில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், 26 கோடி ரூபாய் சிக்கியது.

பறக்கும் படை,நிலை கண்காணிப்புக்குழு, வருமானவரித் துறை நடத்திய சோதனையில் இதுவரை, 92 கோடி ரூபாய் சிக்கி உள்ளது. தொடர்ந்து முக்கிய தலைவர்கள் வீடுகளிலும், சோதனை நடந்து வருகிறது.2 பெண்கள் கைதுசென்னை நந்தனத்தில், எஸ்.என்.ஜே.,


டிஸ்ட்லரீஸ் நிறுவனத்தில், 3.52 கோடி ரூபாய்; புழுதிவாக்கம், அ.தி.மு.க., கவுன்சிலர் வீட்டில், 42 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.முதன்முறையாக, சென்னை அண்ணா நகரில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த, இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

553 கோடீஸ்வரர்கள் போட்டி; 283 பேர் மீது கிரிமினல் வழக்கு - தமிழக வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு அமைப்பு தகவல்

Return to frontpage
புதுச்சேரியில் 96 கோடீஸ்வர வேட்பாளர்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். 283 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என்று தனியார் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ்’ (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் குறித்து ஏடிஆர் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 1,107 பேர். இதில் 997 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம். 110 பேரின் பிரமாணப் பத்திரங்கள் தெளிவாக இல்லை.

வசந்தகுமார் முதலிடம்

தமிழக தேர்தலில் மொத்தம் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடு கின்றனர். இதில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்துகள் உள்ளன. அவருக்கு அடுத்து சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு ரூ.170 கோடிக்கு சொத்துகள் உள்ளன.

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 3-வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.113 கோடி.

கட்சிவாரியாக அதிமுக 156, திமுக 133, பாமக 72, பாஜக 64, தேமுதிக 57, காங்கிரஸ் 32, வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத் துள்ள கோடீஸ்வரர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக மதிப்பிடும் போது பெரிய கட்சிகளின் வேட்பாளர் களது சராசரி சொத்து மதிப்பு ரூ.4.35 கோடியாக உள்ளது.

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் கருப்பன், திருக்கோவி லூர் பாஜக வேட்பாளர் தண்டபாணி ஆகியோர் தங்களுக்கு எவ்வித சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மொத்த வேட்பாளர்களில் 114 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 284 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

283 பேர் மீது கிரிமினல் வழக்கு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 157 பேர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 5 பேர் மீது கொலை வழக்கும் 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.

கட்சிவாரியாக திமுக 68, பாமக 66, அதிமுக 47, தேமுதிக 41, காங்கிரஸ் 10, பாஜக 26, மார்க்சிஸ்ட் 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

சுமார் 28 தொகுதிகளில் மூன் றுக்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கல்வித் தகுதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 454 பேர் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்ப தாகவும் 488 பேர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்ப தாகவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.

6 வேட்பாளர்கள் தாங்கள் படிக்கத் தெரிந்தவர்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். 6 பேர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

வயது விவரம்

வேட்பாளர்களில் 537 பேர் 25 வயது முதல் 50 வயதுக்கு உட் பட்டவர்கள். 458 பேர் 51 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டவர் கள். 2 பேர் 80 வயதுக்கு மேற் பட்டவர்கள்.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 997 வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 96 பேர் மட்டுமே உள்ளனர்.

புதுச்சேரி நிலவரம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர் தலில் மொத்தம் 344 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 343 வேட்பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 343 வேட்பாளர்களில் 96 பேர் கோடீஸ்வரர்கள். கட்சி வாரியாக என்ஆர் காங்கிரஸ் 21, காங்கிரஸ் 18, பாஜக 8, அதிமுக 18, பாமக 5 மற்றும் 16 சுயேச்சை கோடீஸ்வர வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.49 கோடி.

94 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 204 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை அளிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக 68 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. கட்சி வாரியாக பாஜக 8, என்ஆர் காங்கிரஸ் 8, காங்கிரஸ் 6, அதிமுக 6, பாமக 6, நாம் தமிழர் கட்சி 3 மற்றும் 11 சுயேச்சை வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

189 வேட்பாளர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 111 பேர் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருப்பதாக கூறியுள்ளனர்.

8 பேர் படிக்கத் தெரிந்தவர்கள் என்றும் 8 பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

25 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட 221 வேட்பாளர்களும் 51 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்ட 122 வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த வேட்பாளர்களில் 22 பேர் பெண்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் மறுப்பு

இணையதள செய்திப் பிரிவு
Return to frontpage
பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த (ஒப்படைக்க) பிரிட்டன் மறுத்துவிட்டது. தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது பிரிட்டன்.

பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத மல்லையா தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அவரது பாஸ்போர்ட்டை இந்தியா முடக்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவை, நாடு கடத்தக் (தங்களிடம் ஒப்படைக்க) கோரி பிரிட்டன் அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.

'விஜய் மல்லையாவுக்கு எதிராக, கிரேட்டர் மும்பையில் உள்ள நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்துள்ளதாக அமலாக்கத் துறை எங்கள் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மல்லையாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. எனவே, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய வெளியுறவுத் துறை விளக்கியிருந்தது.

இந்த நிலையில், தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள் காட்டி, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்ட தகவல்:

'குடியேற்றச் சட்டம் 1971-ன் படி, தங்கள் நாட்டில் ஒருவர் தங்குவதற்கு செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் அவசியமில்லை. அதாவது, தங்கள் நாட்டுக்குள் நுழையும்போதும், அங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் காட்டப்படும் பாஸ்போர்ட்டில் உள்ள காலாவதியாகும் காலம் வரை பிரிட்டனில் ஒருவர் தங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மல்லையா மீதான குற்றச்சாட்டுகளின் தன்மையை பிரிட்டன் அரசு புரிந்துகொள்கிறது. அதையொட்டி, சட்ட ரீதியிலான ஒத்துழைப்பு வழங்க பிரிட்டன் தயாராக இருக்கிறது. மேலும், நாடு கடத்தல் தொடர்பான இந்தியாவின் கோரிக்கை குறித்து சட்ட ரீதியிலாக பரிசீலித்து வருவதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது' என்று அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் பணத்தைத் திரும்பப் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கடந்த மார்ச் 2 ம் தேதி டெல்லியிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'போடுவோம் ஓட்டு.. வாங்கமாட்டோம் நோட்டு'- தமிழகம் முழுவதும் 1.60 கோடி பேர் உறுதிமொழி ஏற்பு

Return to frontpage

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என தமிழகம் முழுவதும் 1.60 கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 16-ம் தேதி நடக்கிறது.முந்தைய தேர்தல்களில் ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. அதேநேரத்தில், பணம் வாங்கக் கூடாது என வாக்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதற்காக இளைஞர் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என பெற்றோரை வற்புறுத்துமாறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு கோடி வாக்காளர்கள் ‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்கச் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத் தில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி ஏற்றனர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒவ்வொரு துறையின் செயலாளர் கள், துறை பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர். மாநிலம் முழு வதும் மத்திய, மாநில அரசு அலு வலகங்கள், தனியார் நிறுவனங் கள், கல்லூரிகள், ரயில் நிலையங் கள், பேருந்து நிலையங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொகுதிகள்தோறும் வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஏற்பாட்டின் பேரில் குறைந்தபட்சம் 100 வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர். இவை தொடர்பான புகைப்படங்கள் தேர்தல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி, அரிமா சங்கங்களிலும் அவற்றின் உறுப் பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 2.34 கோடி வாக்காளர்களை உறுதிமொழி ஏற்கச் செய்ய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. 1.60 கோடி பேர் உறுதிமொழி ஏற்றுள்ளனர்’’ என்றார்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் பி.சந்தரமோகன் தலைமையில், ‘100 சதவீதம் வாக்களிப்போம்’, ‘போடுவோம் ஓட்டு.. வாங்க மாட்டோம் நோட்டு’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், 1,560 மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

இப்படி முடித்தார் கலைவாணர்..

இப்படி முடித்தார் கலைவாணர்..


இப்போதெல்லாம் தேர்தல் பிரச் சாரங்களில் கண்ணியக்குறைவான விமர்சனங்களும் தனிமனித தாக்குதல் களும் அதிகரித்துவிட்டன. திமுக தலை வர் கருணாநிதி பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், முதல்வர் ஜெய லலிதா பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் பரவலான கண்டனத்தைப் பெற்றன. இதையெல்லாம் பார்க்கும்போது அந்தக்கால தேர்தல் பிரச்சாரங்களை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை.

1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். அந்தத் தேர்தலில்தான் திமுக முதன் முறையாக போட்டியிட்டது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். இந்தத் தேர்தலில் இன்னொரு சுவாரஸ் யமும் நடந்தது. காங்கிரஸை ஆதரித்து பெரியார் பிரச்சாரம் செய்தார். டாக்டர் சீனிவாசன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும் காங்கிரஸுக்காக அவரையும் பெரியார் ஆதரித்தார்.

அண்ணாவை ஆதரித்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சைக் கேட்க காஞ்சிபுரமே திணறும் அளவுக்கு கூட்டம் கூடியிருந்தது. மைக்கை பிடித்த கலைவாணர், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை வானளாவப் புகழ்ந்தார். டாக்டர் தொழிலில் அவரது திறமை, கைராசி மற்றும் மக்களுக்கு அவர் செய்துவரும் சேவைகளை பாராட்டினார். இதைக் கேட்டதும் திமுகவினர் முகத்தில் ஈயாடவில்லை. ‘என்னடா இது? அண் ணாவுக்கு வாக்கு கேட்க வந்துவிட்டு, இப்படி காங்கிரஸ் வேட்பாளரை புகழ்ந்து பேசுகிறாரே?’ என்று அவர்கள் முகத்தில் கவலை ரேகைகள்.

சீனிவாசனை பாராட்டிக் கொண்டே சென்ற கலைவாணர் தனது பேச்சை இப்படி முடித்தார்...

‘‘அப்படிப்பட்ட திறமையும் கைராசியும் மிக்க, நல்லவரான டாக்டர் சீனிவாசனை சென்னைக்கு அனுப்பி அவரது வைத்திய திறமையை இழந்துவிடாதீர்கள். அவரை காஞ்சிபுரத்திலேயே வைத்துக் கொள் ளுங்கள். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் நோய் களை தீர்க்க பேரறிஞர் அண்ணாவை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுத்து சென்னைக்கு அனுப்புங்கள்’’

திமுகவினரின் ஆரவாரம் அப்போதே வெற்றி கோஷமானது. தேர்தலில் அண்ணா வென்றார். என்னதான் தீவிர பிரச்சாரம் என்றாலும் அதிலும் ஒரு கண்ணியம் இருந்தது.

ஹூம்... என்னத்தைச் சொல்ல? ‘நல்ல தம்பி’ படத்தில் வரும் கலைவாணரின் பாடல் வரிகளிலேயே சொன்னால்... ‘அது அந்தக் காலம், அது அந்தக் காலம்’.

எம்ஜிஆர் 100 | 62: பொருளாதாரம் தெரியாதவர்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்மணியை முதல்வர் எம்.ஜி.ஆர். அக்கறையோடு விசாரிக்கிறார். அருகில் ஹண்டே.

எம்ஜிஆர் 100 | 62: பொருளாதாரம் தெரியாதவர்!

M.G.R. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்...டாக்டர் எச்வி.ஹண்டே.

‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது மூதறிஞர் ராஜாஜி சொன்ன வாசகங்கள்தான் இவை. 1971-ம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு திமுகவிடம் கடும் தோல்வியை சந்தித்தன.

அதிமுகவையும் திமுகவையும் சமதூரத்தில் வைத்துப் பார்த்த காமராஜருக்கு, ராஜாஜியின் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. சுதந்திரா கட்சியில் இருந்த டாக்டர் எச்.வி. ஹண்டேயை அழைத்து தனது அதிருப்தியை ராஜாஜியிடம் தெரிவிக்குமாறு காமராஜர் கூறினார்.

அதற்கு ராஜாஜியின் பதில், ‘‘காமராஜரும் எம்.ஜி.ஆரை ஆதரிக்க வேண்டும்’’ என்பதே. அவரது பதிலோடு தன்னை சந்தித்த ஹண்டே யிடம், ராஜாஜியை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து பேசுவதாகக் கூறியிருக்கிறார் காமராஜர். ‘‘ஆனால், அதற்குள் ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்’’ என்கிறார் டாக்டர் ஹண்டே. ‘‘அடுத்த சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றி, ராஜாஜியின் கணிப்பை உறுதிப்படுத்தியது’’ என்றும் கூறுகிறார்.

சட்டப்பேரவையில் அப்போதைய திமுக அரசை எதிர்த்து சுதந்திரா கட்சியின் பேரவைத் தலைவராக இருந்த ஹண்டேயின் செயல்பாடுகளை பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘ராஜாஜி என்னை ஆதரித்தார். அவரது விருப்பப்படி நீங்கள் அதிமுகவில் சேர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, 1973 ஜூன் 19-ம் தேதி அதிமுகவில் ஹண்டே சேர்ந்தார். அதிமுகவின் முதல் தலைமை நிலையச் செய லாளர் ஆக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை ஹண்டே இழந்தாலும், அவரை அமைச்சரவை யில் சேர்த்துக்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் தனது அரசியல் எதிரிகளைக்கூட கடுமையாகப் பேசி ஹண்டே பார்த்தது இல்லை. எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களின் தொகுதிகளுக்கும் பாரபட்ச மில்லாமல் அரசின் திட்டங்களை எம்.ஜி.ஆர். செயல்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு அனுபவம் ஹண்டேவுக்கே உண்டு.

திமுக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் புலவர் கோவிந்தன். கருணாநிதிக்கு நெருக்கமானவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஹண்டே இருந்தபோது, அவரை புலவர் கோவிந்தன் சந்தித்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தனது செய்யாறு தொகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்தார்.

அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை ஹண்டே சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்தப் பணிகளை உடனே நிறைவேற்றுங்கள். புலவர் கோவிந்தன் நல்ல மனிதர். அவர் திமுகவில் இருந்தாலும் நீங்கள் செய்யாறு தொகுதிக்கு நேரடியாகச் சென்று பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். இந்த பதிலால் ஹண்டேயின் மதிப்பிலும் மனதிலும் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

தன் மீது வீசப்படும் கடுமையான விமர்சனங்களுக்குக் கூட எம்.ஜி.ஆர். கோபப்பட மாட்டார். அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு அவர் அளிக்கும் பதில் மிகக் கூர்மையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார். ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.

அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’

‘‘எம்.ஜி.ஆர். சொன்னது கரெக்ட்தானே’’ என்கிறார் டாக்டர் ஹண்டே!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


மூதறிஞர் ராஜாஜி நகைச்சுவை உணர்வு உடையவர். எம்.ஜி.ஆரும் அப்படியே. அதிமுகவைத் தொடங்கிய புதிதில் ராஜாஜியின் ஆசியை பெறுவதற்காக அவரை எம்.ஜி.ஆர். சந்தித்தார். படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துவிட்டு ராஜாஜியை பார்க்கச் சென்றபோது தாமதமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஷூட்டிங்கினால் தாமதமாகிவிட்டது’’ என்றார். அதற்கு, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறிப்பிடும் வகையில் ‘‘ஷூட்டிங்தான் ஏற்கெனவே முடிஞ்சுடுத்தே‘‘ என்று சிலேடையாக ராஜாஜி சொல்ல, ரசித்து சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

Tuesday, May 10, 2016

குறள்

குறள் இனிது: பேச்சு பேச்சாக இருக்கணும்!


பேச்சு பேச்சாக இருக்கணும்! எனது நண்பர் ஒருவர் வேலையில் சேர்வதற்கான தேர்வின் ஒரு பகுதியாக குழு விவாதத்தில் பங்கேற்கச் சென்றார். ‘நம் நாட்டில் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டுமா' எனும் தலைப்பு. 8 பேர் இருந்த அக்குழு 45 நிமிடத்துக்குள் விவாதித்து ஒருமித்த கருத்தைச் சொல்ல வேண்டும்.

சட்டம் படித்திருந்த அவர் கூட்டம் தொடங் கியதும் தனக்குத்தான் பல விஷயங்கள் தெரியுமென்றும் அதனால்தானே தலைவராக இருப்பேன் என்றும் அடம்பிடித்தார். மற்றவர்களுக்கோ ஏக எரிச்சல். ஏனெனில் விடாமல் பேசிக் கொண்டேயிருந்தார். மற்றவர் பேசினால் இடைமறிப்பார். அவர்கள் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்க விடமாட்டார். இதனால் அக்குழுவால் தம் முடிவைத் தகுந்த காரணங்களுடன் தேர்வாளர்களிடம் சொல்ல முடியாமலேயே போயிற்று.

உண்மையில் நண்பருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. ஆனால் அவரது அணுகுமுறையால் அவரது பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை.

நாம் என்ன பேசுகிறோம் என்பதுடன் எப்படிப் பேசுகிறோம் என்பதும் முக்கியமில்லையா? அருமையான அறுசுவை உணவென்றாலும் அன்புடன் இடாததால் உண்பவர் மறுத்துவிட்டால் அவ்வுணவின் பயனென்ன? சொற்களின் வெற்றி கேட்பவரின் ஏற்பில் தானே உள்ளது?

உங்களது அன்றாட வாழ்க்கையிலும் இவ்வாறான மனிதர்களைச் சந்தித்து இருப்பீர்கள். அவர்கள் படித்திருக்கலாம்; அறிவாளியாக, அனுபவசாலியாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பேசினால் நமக்குக் கேட்கப் பிடிக்காது. பேச்சின் தொணி அப்படி!

வர்த்தக நிறுவனங்கள் நடத்தும் புதிய நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். சில உயரதிகாரிகள் ‘25% இலக்கு என்பது சவால்தான். ஆனால் உங்களைப் போலத் திட்டமிட்டு வேலை செய்பவர்கள் சாதித்துக் காட்டுவீர்கள்’ என்கிற ரீதியில் பேசி பெரிய இலக்குகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வைத்து விடுவார்கள்.

எனது நண்பர் போன்றவர்கள் ‘என்ன இது கூட முடியாதா, இதுவரை தூங்கி வழிந்தது போதும். இனியாவது வேலை செய்யுங்கள்' என்று ஏற்கெனவே சிறப்பாய்ப் பணியாற்றிய சிலரைப்பழித்து, அதே 25% இலக்கை கசப்பாக்கி வந்தவர்களை வாதாடவும் மறுக்கவும் வைத்து விடுவார்கள்!

பேச்சைக் கேட்பவர்கள் கருத்தை ஏற்கும்படியாகவும், மாறுபட்ட கருத்துடையவர்களின் மனம் புண்படாதபடி இனிமையாகவும் பேசுவதே நாவன்மை என்கிறார் வள்ளுவர். கேட்பவர்கள் மயங்கும் படியும், கேளாதவர்கள் ஏங்கும் படியும் பேசுவதே சொல்வன்மை என்று இக்குறளுக்குப் பொருள் கொள்வோரும் உண்டு. கிருபானந்த வாரியார், குன்றக்குடி மூத்த அடிகளார், நானி பல்கிவாலா போன்றவர்களின் பேச்சைக் கேட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்! கருத்தின் ஆழம், செய்திகளின் பரிமாணம், அள்ளி வீசும் புள்ளிவிபரங்கள், இழையோடும் நகைச்சுவை, சொல்லின் வீச்சு..அடாடா..ள

இன்றைய சூழலில், நீங்கள் தொலைக்காட்சியில் ஆன்மிக உரையோ இலக்கியச் சொற்பொழிவோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கையில் ரிமோட் இருந்தாலும் அடுத்த சானலுக்கு மாறாமல், உடனே நண்பர்களிடம் அதைப் பார்க்கச் சொன்னால், அப்படிப் பேசுபவர் நாவன்மை உடையவர் எனலாமா?

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல் (குறள் 643)

somaiah.veerappan@gmail.com

மரண தண்டனையைத் தீர்மானிப்பது எது?

மரண தண்டனையைத் தீர்மானிப்பது எது?


மரண தண்டனைக்கு எதிராக எழும் குரல்கள், அதன் பின்னே இருக்கும் குரூரத் தன்மை, நிரபராதிகள் தண்டிக்கப்படும் வாய்ப்புகளைப் பற்றித் தொடர்ந்து பேசிவருகின்றன.
இந்தச் சூழலில் டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை, மரண தண்டனை விதிக்கப்படுவதில் சமூகக் காரணிகளும் பொருளாதார நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிக்கையில், மரண தண்டனை விதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் என்றும் கல்வியறிவு இல்லாதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களில் பலர் சிறுபான்மை இனத்தவர்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 385 பேரில் 241 பேர் முதல் முறை குற்றவாளிகள். இவர்களில் பலர் குற்றம் நடந்த சமயத்தில் சிறாராக இருந்தவர்கள். எனினும், தங்கள் வயதை நிரூபிக்கப் போதுமான ஆவணங்கள் இல்லாததால், தூக்குக் கயிற்றை எதிர்பார்த்துச் சிறையில் கிடக்கிறார்கள்.
வயதில் இளையவர்களுக்கும், முதியவர்களுக்கும் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது நியாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய விதி. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களில் 54 பேர், 18 முதல் 21 வயதுள்ளவர்கள். 60 வயதைக் கடந்த ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிறுபான்மையினத்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்கள், பத்தாம் வகுப்பைக் கூடத் தாண்டாதவர்கள் போன்றோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தன் பதவிக் காலத்தில் கருணை மனு அளித்திருந்த மரண தண்டனைக் கைதிகள் தொடர்பாகத் தனது அலுவலகம் நடத்திய ஆய்வு ஒன்றைப் பற்றிப் பேசும்போது, மரண தண்டனைக் கைதிகளில் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருப் பவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “ஏன் இத்தனை ஏழைகள் மரண தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள்?” என்று அவர் வருத்தத்துடன் கூறியது குறிப்பிடத் தக்கது. திட்டமிட்டே இவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறதா அல்லது நிறுவனமயமான முன்முடிவுகள் காரணமாக அமைகின்றனவா என்ற கேள்விகளை, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிக்கை எழுப்பியிருக்கிறது.
மூன்று மாணவிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட தருமபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பேருந்தை அவர்கள் எரிக்கவில்லை என்றும், குழு வன்முறையின் தாக்கத்தில் இந்தச் செயலில் அவர்கள் ஈடுபட்டதாகவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. எந்தக் காரணத்துக்காகவும் மரண தண்டனையிலிருந்து தண்டனைக் குறைப்பு செய்யப்படுவது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், நீதியின் இறுதிப் படி வரை சென்று தண்டனைக் குறைப்பு பெறும் அளவுக்குப் பலருக்குப் போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.
பொருளாதார வசதி கொண்டவர்களால் இறுதிக் கட்டம் வரை சென்று மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்பதும், அது சாத்தியமாகாததால் பலர் வேறு வழியின்றி மரண தண்டனையை எதிர்கொள்கிறார்கள் என்பதும் விரிவான விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள். தண்டனை என்ற பெயரில் ஒருவருடைய உயிரை அரசே பறிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் விரைவில் விடை தேட வேண்டிய தருணம் இது!

எம்ஜிஆர் 100 | 61 - முப்பிறவி எடுத்தவர்! தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


கழுத்தில் கட்டுடன் மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆரிடம் பரங்கிமலை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்து பெறப்பட்டபோது எடுக்கப்பட்ட படம். குனிந்தபடி எழுதுபவர் என்.வி.நடராசன்.

M.G.R. முப்பிறவி எடுத்தவர் என்று அவரது ரசிகர்கள் புகழ்வது வழக்கம். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிழைத்தது இரண்டாவது பிறவி என்றும் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியது மூன்றாவது பிறவி என்றும் கூறுவார்கள். அப்படி இரண்டாவது பிறவி எடுப்பதற்கு முன் அவரது உயிருக்கு ஆபத்து வந்த நாள் 1967 ஜனவரி 12. அன்றுதான் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார்.

நாடகத்துறையிலும் வயதிலும் எம்.ஜி.ஆரை விட மூத்தவர் எம்.ஆர்.ராதா. அவரை எம்.ஜி.ஆர். எப்போதும் அண்ணன் என்றுதான் மரியாதையுடன் அழைப்பார். எம்.ஜி.ஆர். மீது எம்.ஆர்.ராதாவும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். 1966-ம் ஆண்டில் எம்.ஆர்.ராதா அளித்த பேட்டியில், ‘‘படப்பிடிப்பு நடக்கும்போது மற்றவர்களையும் ‘ஜோர்’ படுத்தி வேலை வாங்குகிறவன் நான். இதே பழக்கம் எம்.ஜி.ஆரிடமும் இருந்ததைப் பார்த் தேன். இந்த ஒரு காரியத்திலேயே அவரை எனக்குப் பிடித்துவிட்டது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் சண்டைக் காட்சிகள் படமானபோது அவரது திறமை மெச்சத்தக்கதாயிருந்தது. எம்.ஜி.ஆர். தன்னுடைய நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கிறார். அமெரிக்க, இந்தி நடிகர்களைப் பார்த்து காப்பி செய்கிற வழக்கம் அவரிடம் கிடையாது. ஆகையினாலே எம்.ஜி.ஆர். ஒரு ஒரிஜினல் நடிகர்’’ என்று புகழ்ந்துள்ளார்.

அண்ணன், தம்பியாக இருந்தவர் களிடையே அரசியல் புகுந்தது. அரசியல் மாறுபாடு இருந்தாலும் எம்.ஜி.ஆர். யாரையும் விரோதியாக கருதியதில்லை. 1967-ம் ஆண்டு தேர்தல் சமயம். ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சிறப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்,‘‘தேர்தல் நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதற்கு பதிலளித்த பேரறிஞர் அண்ணா, ‘‘எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது. ஒருமாதம் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். அவர் முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள் கழகத்துக்குக் கிடைக்கும்’’ என்று பேசினார்.

அந்தத் தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரையும் காங்கிரஸையும் தந்தை பெரியார் ஆதரித்தார். ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில், ‘‘பச்சைத் தமிழர் ஆட்சியைக் கவிழ்க்க அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ராஜாஜி போன்றவர்கள் திட்டமிடுகிறார்கள்’’ என்று பெரியார் பேசியதாக திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் பதிவு செய்துள்ளார். கூட்டத்தில் எம்.ஆர்.ராதா வின் பேச்சிலும் எம்.ஜி.ஆர். மீதான கோபம் வெளிப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த நிலையில், ஜனவரி 12-ம் தேதி மாலை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச ‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தின் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக எம்.ஜி.ஆருக்கு தகவல் கிடைத்தது. பிரசாரத்துக்குப் புறப்பட வேண்டிய நிலையிலும், வீட்டுக்கு வந்த எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர். வரவேற் றார். வாசுவுடன் பேசிக் கொண்டிருக் கும்போது எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. பின்னர், எம்.ஆர்.ராதா தன்னையும் சுட்டுக் கொண்டார். இருவரும் பிழைத்தது தெரிந்த கதை.

‘எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு அரசியல் கோபம் இருந்தது’ என்பது ஆர்.எம்.வீரப்பனின் உறுதியான கருத்து. ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு உள்ளே சிகிச்சைக்குச் செல்லும்போது, ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணன் என்பவரிடம் எம்.ஆர்.ராதா தனது சட்டைப் பையில் இருந்து எடுத்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரணையில் ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணன் சாட்சியம் அளித்தார். MSZ 1843 என்ற காரில் ரத்தகாயத்துடன் வந்த எம்.ஆர்.ராதாவை சப் இன்ஸ்பெக்டர் துரை என்பவரின் உத்தரவுப்படி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு சென்றதாகவும் ஆஸ்பத் திரிக்கு உள்ளே செல்லும்போது, எம்.ஆர்.ராதா தன்னிடம் கடிதத்தை கொடுத்ததாகவும் லட்சுமணன் கூறினார். 4 பக்க கடிதத்தை அவர் நீதிமன்றத்தில் படித்தார். எம்.ஆர்.ராதா கைப்பட எழுதியிருந்த அந்த நீண்ட கடிதத்தின் ஒரு சில பகுதிகள் இவை:

‘ஜனவரி 8-ம் தேதி தந்தை பெரியார் தலைமையில் கூட்டம் நடந்து கொண் டிருந்தது. நம் தோழர்கள் உயிர்தானம் செய்ய வேண்டும் என்று நான் உரை யாற்றினேன். மகாநாடு முடிந்து நான் போகும்போது, ‘‘உயிர்தானம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாரே எம்.ஆர்.ராதா அவர்கள், இவர் முதலில் செய்தால் பிறகு நாம் செய்வோம்’’ என்று கிண்டலாகவும் சிரித்துக் கொண்டும் சிலர் பேசினார்கள். உயிர்தானம் செய்வதற்கு ஒரு இயக்கம் இந்த எலெக் ஷனுக்குள் நம் நாட்டில் தேவை. அதற்கு நான் தலைமை தாங்கத் தயார். நல்ல ஆட்சியை, நல்லவர்களைக் கவிழ்ப்பதற்குரிய சதிகாரர்களின் உயிரை ஒன்றோ, இரண்டோ எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் உயிர்தானம் செய்யும் இயக்கத்தின் கொள்கை. நான் செய்கிறேன். நீங்களும் இதுபோல் செய்ய வேண்டும். செய்வீர்களா?’

இதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். வழக்கு நடந்து எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா தனது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டது உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது கழுத்தில் கட்டுப்போட்டபடி இருக்கும் எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுத்து தேர்தல் பிரச்சார சுவரொட்டியாக ஒட்டலாம் என்று ஆர்.எம்.வீரப்பன் யோசனை தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் படம் மட்டுமே இடம் பெற்ற சுவரொட்டிகள் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தின. பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது.

‘தர்மம் தலை காக்கும்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகள் சரோஜாதேவி. அவர்களது வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரின் தலைக்கு மேல் இருக்கும் அலங்கார விளக்கு விழும்போது அவரை சரோஜாதேவி காப்பாற்றுவார். அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஆர். ராதா, ‘‘தர்மம் ஒருமுறைதான் தலை காக்கும்’’ என்று எச்சரிப்பார். புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து விட்டு, காரை ஓட்டியபடி எம்.ஜி.ஆர் திரும்பும்போது இந்தப் பாடல்…

‘தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கொடுத்தது காத்து நிற்கும்...’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




1967 தேர்தலில் படுத்துக் கொண்டே பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று சாதனை படைத்தார். 54,106 ஓட்டுக்கள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை அவர் தோற்கடித்தார்.

Monday, May 9, 2016

FEATURES » EDUCATION PLUS

NEET order: what's in store

What the Supreme Court’s ruling on the National Eligibility-cum-Entrance Test means for the various stakeholders.

The Supreme Court recently gave the green signal for the CBSE to hold the National Eligibility-cum-Entrance Test (NEET) for the year 2016-17 in two phases for admission to undergraduate medical and dental courses. The long-awaited decision on NEET has evoked mixed response from students and various stakeholders.

The discussion over single entrance exams has been there for long, and every time it has faced various challenges. Students who have not been exposed to competitive exams (like in Tamil Nadu) and students whose syllabus of class XI and XII is not aligned with the CBSE will surely be at a disadvantage writing the test in the second phase.

The single entrance exams will also deprive States or private colleges of their rights to conduct separate exams and admit students as per their own procedures. There are also regional sentiments at play in opposing the decision of the apex court. But, the issue has to be analysed in a broader perspective and in the interests of the large student fraternity. In the current system, a student has to go through multiple exams. Syllabus differences, date clash, different exam patterns, remote exam centres and so on, make it more burdensome for students. But a single entrance exam system holds the promise of taking away a lot of stress and saving money. Further, it can help in removing the unethical practices of private seat allotments. And, most importantly, it can pave the way for a selection based on merit.

Why, then, is there so much furore against the Supreme Court ruling in favour of a single medical entrance exam? One reason is the timing of the exam. Until a few days ago, medical aspirants were focussing on an exam they thought they were eligible for and had been preparing for based on a pattern. Now, all of a sudden, they have an all-new pattern to contend with. Tamil Nadu students are not familiar with multiple-choice questions; the State has done away with entrance examinations for professional courses. Maharashtra, Andhra Pradesh, Telengana, and Gujarat conduct common entrance examinations based on their own higher secondary syllabus.

There is a marked difference in the difficulty level of questions asked in State common entrance exams and the AIPMT/NEET. Also, the time given for preparation for NEET Phase-II exam may not be sufficient for students, especially for those who had been concentrating only on State CETs.

The intention of moving towards a single entrance exam is welcome, but ideally, NEET should be implemented uniformly across all States, superseding all examinations from 2017, instead of 2016. This way, teachers and students will get sufficient time for preparation. Meanwhile, as the NEET storm takes time to subside, students should aim to give their best for the second phase of the exam.

The writer is Director, Aakash Educational Services.

Saturday, May 7, 2016

U-turn: MCI Okay With Separate Tests for Now

Published: 07th May 2016 03:10 AM
Last Updated: 07th May 2016 09:29 AM

NEW DELHI: Taking a U- turn, the Medical Council of India, which had opposed some States’ plea to conduct separate entrance tests for MBBS and BDS courses, told the Supreme Court on Friday that the colleges could be permitted to continue with their tests, “but only for this year”.

Solicitor-General Ranjit Kumar told a bench headed by Justice A R Dave that the Centre would be convening a meeting of all stakeholders in a day or two on issues related to the National Eligibility Entrance Test-I (NEET) and would apprise the court of the outcome on May 9.During the brief hearing, the court made it clear that students who appeared in the NEET on May 1 couldn’t be permitted to reappear in NEET-II, to be held on July 24.

The bench, in its oral observation, hinted that it might consider allowing States conducting their own tests to continue with the admission process for the current academic year. The court, however, reserved its final decision till May 9. In the interim order, the court reiterated its earlier view. “It is clarified that no examination shall be permitted to be held for admission to MBBS or BDS courses by any private college or association or any private/deemed university.”

The apex court had commenced the hearing on the pleas of State governments, Association of Karnataka Medical Colleges and minority institutions such as the Christian Medical Colleges in Vellore and Ludhiana, seeking its go-ahead for holding separate entrance exams for MBBS and BDS courses.

The States, including Tamil Nadu, Andhra Pradesh, Telangana and Uttar Pradesh, argued that there were differences in syllabi for the State tests and the NEET. The CBSE had informed the court that the first phase of the NEET was conducted without any glitches and that around 6.5 lakh students took the test.

On April 29, the court said the entrance test for 2016-17 would be held as per the schedule through the NEET, on May 1 and July 24.

Syllabi not same, say State Government

Opposing the Medical Council’s decision to have a single test, States, including Tamil Nadu, Andhra Pradesh, Telangana and Uttar Pradesh, argued that there were differences in syllabi for the State tests and NEET.

On April 29, the Supreme Court said the entrance test for 2016-17 would be held as per the schedule through NEET on May 1 and July 24.

The CBSE had informed the apex court that the first phase of NEET was conducted without any glitches and that around 6.5 lakh students attended the test.

- It is clarified that no examination shall be permitted to be held for admission to MBBS or BDS courses by any private college or any private/deemed university — SC interim order

எம்ஜிஆர் 100 | 60- நாடகக்கலை மீதான பிரியம்!

‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதுகிறார் ஆர்.எஸ். மனோகர். | ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 60- நாடகக்கலை மீதான பிரியம்!

M.G.R. திரைப்படத்துறையிலும் அரசியல்துறையிலும் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கி மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திய நாடகக் கலையின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர். நாடகங்களை ஊக்குவித்தவர். நாடக உலகில் இருந்து திரைப்படங்களில் நடிக்க வந்தவர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு தனி அன்பு உண்டு.

நாமக்கல்லில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் அவர். சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர். படிக் கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற் பெயரே மறைந்துபோய் நாடகத்தில் நடித்த பாத்திரப் பெயரே நிலைத்துவிட் டது. அவர்தான் பின்னர் 1951-ல் ‘ராஜாம் பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ராமசாமி சுப்பிரமணியம் மனோகர் என்ற ஆர்.எஸ்.மனோகர்.

எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். ‘காவல்காரன்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக மனோகர் நடித்திருப்பார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும் மனோகருக்கும் குத்துச்சண்டை நடக்கும்.

படப்பிடிப்பின்போது மனோகரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு குத்துச்சண்டை தெரியுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘ஏதோ கொஞ்சம் தெரியும்’’ என்றார் மனோகர். இரண்டு மூன்று ஷாட்கள் முடிந்ததும் மனோகரின் பஞ்ச், தான் குத்துவதை தடுப்பது ஆகியவற்றை கவனித்த எம்.ஜி.ஆர். மனோகரிடம், ‘‘ஏன்யா பொய் சொல்றே? பெரிய சாம்பியன் மாதிரி ஃபைட் பண்றே’’ என்று கூறியபடியே அவரை செல்லமாகக் குத்தினார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்ப தற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாட கத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட் களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம். மனோ கரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாட கங்களுக்கு தேவையான பொருட்களை எவ் வளவு வேண்டு மானாலும் வாங் கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னு டைய செலவு’’ என்றார். மகிழ்ச் சியில் திக்கு முக்காடிப் போய்விட்டார் மனோகர். தனது நாடகங் களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, படிகளில் உருண்டு விழ இருந்த மனோகரை எம்.ஜி.ஆர். சரியான நேரத் தில் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.

நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வத்துக்கு ஒரு உதார ணம். ஒருமுறை சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் மனோகரின் நாடகங்கள் பதின்மூன்று நாட் களுக்கு தொடர்ந்து நடந்தன. எல்லா நாட்களும் எம்.ஜி.ஆர். வந்து நாடகங்களைப் பார்த்தார்.

அடாது மழை பெய்தாலும் விடாமல் நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்ததும் உண்டு. அதே என்.கே.டி. கலா மண்டபத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் சார்பில் ‘சத்திய தரிசனம்’ என்ற நாடகம் நடந்தது. அது திறந்தவெளி அரங்கம். தனது மனைவி ஜானகி அம்மையாருடன் வந்து நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் அருகே இருந்த கட்டிடங்களில் போய் ஒண்டிக் கொண்டனர். எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் மழையில் நனைந்தபடியே அமர்ந்திருந்தனர்.

இதைப் பார்த்துவிட்டு சகஸ்ரநாமம், ‘‘மழை காரணமாக நாடகத்தை நிறுத்திக் கொள்கிறோம். இன்னொரு நாள் இதை நடத்துவோம்’’ என்று அறிவித்தார். நனைந்த உடையுடன் மேடையேறிய எம்.ஜி.ஆர்., ‘‘அடாது மழை பெய்தாலும் நாடகம் பார்க்கத் தயாராக இருந்தேன். நீங்கள்தான் நிறுத்திவிட்டீர்கள். பார்த்தவரை நாடகம் சிறப்பாக இருந்தது. மீண்டும் நடத்தும்போது சொல்லுங்கள் வருகிறேன்’’ என்று பேசினார்.

அதன்படியே, பெரம்பூர் ஐ.சி.எஃப். திடலில் மறுபடியும் ‘சத்திய தரிசனம்’ நாடகம் நடந்தபோது எம்.ஜி.ஆர். சென்று பார்த்து கலைஞர்களை கவுரவித்தார்.

எம்.ஜி.ஆருடன் மனோகர் பல படங் களில் சண்டைக் காட்சிகளில் நடித் துள்ளார். என்றா லும், ‘உலகம் சுற்றும் வாலி பன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் சாதுர்யத்தைக் காட்டும் இடை வேளைக்கு முந்தைய ரசமான காட்சி ரசிகர்களைத் துள்ள வைக் கும்.

கதைப்படி, அணுசக்தி ஆராய்ச்சி குறிப்பின் ஒருபகுதி ஹாங்காங் கில் உள்ள ஒருவரின் வீட்டில் இருக்கும். டைம் பீஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் குறிப்பை வாங்கிக் கொள்ள எம்.ஜி.ஆர். அங்கு செல்வார். வில்லன் அசோகனின் கையாளாக வரும் மனோகரும் அந்தக் குறிப்பை அடைவதற் காக நாய் வியாபாரி போல, பெரிய கன்றுக் குட்டி சைஸில் இருக்கும் இரண்டு முரட்டு நாய்களுடன் அங்கு வருவார்.

மனோகர் வந்திருப்பதன் நோக்கத்தை நொடியில் எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டு விடுவார். புருவங்களை உயர்த்தி, உதடுகளை லேசாக விரித்து, மூச்சை உள் ளிழுத்து புன்முறுவல் பூக்கும்போதே, தாக்குதலை சமாளிக்க அவர் தயாராகிவிட்டார் என்பதை உணர்ந்து தியேட்டர் அமர்க்களப்படும். தொடர்ந்து மனோகருக்கும் எம்.ஜி.ஆருக்கும் வாக்குவாதம் நடக்கும். எம்.ஜி.ஆர். நடந்து கொண்டே அறையின் மூலைக்கு சென்று கண்ணாடி ஜன்னலின் வழியே கீழே நோட்டம் விட்டுத் திரும்புவார்.

ஒரு கட்டத்தில் கோபமடையும் மனோகர், வீட்டின் சொந்தக்காரரை பார்த்து விரலை சொடுக்கியபடி, ‘‘சார், அப்படீங்கறதுக்குள்ளே, அவர் கையில் உள்ள டைம் பீஸை நாய் கொண்டுவந்துடும். பாக்கறீங்களா?’’ என்று சவால் விடுவார்.

இதை எதிர்பார்த்தவராய், மின்ன லாய் பாய்ந்து சென்று ஏற்கெனவே நோட்டமிட்டு வைத்திருந்த கண்ணாடி ஜன்னலின் வழியே குதித்து எம்.ஜி.ஆர். அங்கிருந்து தப்புவார். அதற்கு முன் அவர் சொல்லும் வசனம் குத்துமதிப் பாகத்தான் காதில் விழும். அந்த அளவுக்கு அணை உடைத்த பெரு வெள்ளமாய் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலும் ஆரவாரமும் தியேட்டரை நிரப்பும். மனோகரைப் பார்த்து எம்.ஜி.ஆர். சொல்லும் அந்த வசனம்...

‘‘நாய்களோட திறமையை அவர் பார்க்கட்டும், என்னோட திறமையை நீ பாரு!’’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


மனோகர் நாடகங்களில் தந்திரக் காட்சிகள் ரசிகர்களைக் கவரும். அவற்றை பார்த்து ரசிக் கவே ஏராளமான மக்கள் வரு வார்கள். சென்னையில் என்.கே.டி. கலா மண்டபத்தில் தொடர்ந்து அவரது நாடகங்களை பார்த்த எம்.ஜி.ஆர்., கடைசி நாள் நிகழ்ச்சி யில் மனோகருக்கு ‘நாடகக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...