Monday, October 2, 2017

Name and fame won’t suffice for political success: Rajini

Star-studded gathering:Actors Rajinikanth, Kamal Haasan and Prabhu at the inaugural of the Sivaji Ganesan memorial in Chennai on Sunday.R. RaguR_Ragu  

Maybe Kamal knows what it takes, but he won’t tell me, says the film star, evoking no response from his long-time associate in the film world

Tamil film superstar Rajinikanth, who some months ago hinted about his impending entry into politics, on Sunday used a public function to subtly take on his potential political rival from the film industry, Kamal Haasan.
Participating in the function organised to inaugurate thespian Sivaji Ganesan’s memorial at Adyar, Rajinikanth suggested that now that his long-time associate in the film world, Kamal Haasan, has decided to make a foray into politics, the latter would not share his thoughts on politics with him.
“Sivaji Ganesan sir had taught his juniors in the field a lesson. He had contested in elections from his home constituency, and lost. But this was not a humiliation for him, but [it was] for the electors there. This made all of us realise that for one to be successful in politics, mere name and fame from being in the film industry was not enough,” the actor said, adding, “There is something more needed to be successful in politics, and only the public knows what it is.”
Politics and success
In a lighter vein, Rajinikanth said that he did not know what it was that was needed to be successful in politics. “Maybe Kamal knows. However, even if he knows, he won’t tell me. He might have told me if I had asked him two months ago (when Kamal Haasan had not made his political intentions clear),” he said. Kamal Haasan was also on stage.
While this was met with loud cheers, Rajinikanth continued, “Even if I go and tell him — Anna [brother], I’m your younger brother, please tell me — he will tell me to join him, and that he will then explain.”
In his tribute to Sivaji Ganesan, Mr. Rajinikanth said that at a time when how one should act was predefined, Sivaji Ganesan created a revolution as far as all aspects of acting were concerned.
‘No one could stop me’
When his turn to address the gathering came, Kamal Haasan, a self-professed fan of Sivaji Ganesan, did not respond to Rajinikanth’s comments, and instead said that no one could have stopped him from attending the event.
The actor has been critical of the AIADMK government, and over the past few weeks, has been underscoring the need to fight corruption.
“If I had not been an actor, I would have still been a fan of Sivaji Ganesan and I would have been here, waiting to see the inauguration of the memorial,” he said.
Declaring that no one was being forced to respect Sivaji Ganesan, Mr. Haasan stated that Tamilians were not thankless people, and that the actor would always be remembered in the State. “There are many who have followed in his footsteps. I am here as a fan of his and not as an artist,” he said.
Earlier, Rajinikanth and Kamal Haasan, who were among the audience, were invited by Fisheries Minister D. Jayakumar to come on to the stage. The actors appeared reluctant, but later shared the dais with Deputy Chief Minister O. Panneerselvam.
Mr. Jayakumar, who has been highly critical of Kamal Haasan in view of the latter’s attacks on the government, presented a shawl to the actor on the occasion, while Mr. Panneerselvam did the honours for Rajinikanth.

No more reservation charts

Initiative aims at saving paper, keeping coaches tidy

The Railways, as part of a Go Green policy, has decided to stop pasting reservation charts on train coaches. It will be implemented on a trial basis for three months.
A senior official of the Chennai division of Southern Railway, said the initiative was a pilot project to keep the coaches neat and clean and to do away with defacing them with materials such as paste. “Passengers whose tickets are confirmed or in the waiting list or last-minute confirmations, are already receiving SMS of the seating arrangements. So there will not be any difficulty in identifying the coaches,” added the official.
The official further said that the measure would also save paper. The trial would be implemented in five cities — Chennai, New Delhi, Kolkata, Mumbai and Bengaluru.
However, a section of train passengers’ associations and consumer activists voiced their displeasure with the concept, fearing that it could cause a lot of confusion.
T. Sadagopan, a consumer activist from Pattabhiram, said that the plan to stop pasting reservation charts would create confusion, especially among senior citizens who may not be tech-savvy. Though the passengers are receiving SMS about the ticket details, the chart is still necessary, he added.
The Indian Railway had in March last year, planned to do away with the reservation charts under the Go Green policy, but had to drop it after negative feedback.

It’s holiday season again

Tourists at the Bryant Park in Kodaikanal.FILE PHOTO: G. Karthikeyan.  

Big spurt in arrival of tourists in Kodaikanal

Thanks to cool weather, mist-covered valleys and cloud-capped peaks, the second holiday season has picked up momentum in Kodaikanal. Arrival of tourists registered a sharp increase this weekend.
The crowd was heavy at major tourism locations. The lake, one of the most popular spots, attracted a huge crowd. Tourists thronged Bryant Park with Horticulture Department creating a ‘train’ made of flowers to entertain children.
Last year, the department had created a blue Kurinji garden inside the park by planting more than 200 saplings. “Now, they have started blooming,” said R.C. Raja Priyadharsan, Horticulture Officer in Bryant Park. “The Kurinji plant, which blooms once in 12 years, blossomed in 2006. While the next flowering season is 2018, several plants have started blooming this year due to climate change and their own blooming cycle.”
Tourists got an opportunity to see Kurinji flowers inside the park this season. Earlier, they had to go to interior villages or to the valley, 3,000 feet below Coakers Walk to see the flowers.
The park received more than 6,000 visitors on Saturday. Revenue through sale of ticket at Bryant Park was Rs. 1.56 lakh. The blooming of Agave Attenuate plant was another star attraction this season as it blooms either in winter or summer once a decade, the officer said.
Cab operators and hoteliers were in jubilant mood because of the sudden spurt in arrival of tourists. Almost, all rooms in major hotels were booked. Arrival of tourists from Kerala and Karnataka was also high.
The number of vehicles crossing the toll gate manned by Kodaikanal Municipality crossed 1,500 against 350 to 500 during normal days. Many tourists from Chennai, Kerala and Karnataka too visited the hill. The second season closes by October-end or the first week of November.
Flight services affected as heavy rain lashes Chennai

V Ayyappan| TNN | Oct 1, 2017, 10:56 IST


Chennai received 25.3mm rainfall from 8.30am on Saturday till 8.3am on Sunday.

CHENNAI: Two flights were diverted and 14 flights, including nine international flights, were delayed due to heavy rain and poor visibility at Chennai airport in the early hours of Sunday.

Chennai received 25.3mm rainfall from 8.30am on Saturday till 8.3am on Sunday. The city received heavy rain between 3.30am and 5am on Sunday, Met officials said.

At Chennai airport, four arrivals and 10 departures were delayed from half an hour to two hours. The scheduled arrivals between 2am and 3.50am and scheduled departures between 1am and 6.45am were delayed.

Airport sources said a British Airways flight from London and an Etihad Airways flight from Abu Dhabi, scheduled to arrive around 3.50am, were diverted to Hyderabad.

A Chennai-London British Airways flight, which was scheduled at 5.30am, departed at 9am while a Chennai-Abu Dhabi Etihad Airways flight, scheduled for 4.50am, departed at 7.40am because of diversion.

A Kuwait Airways flight from Kuwait City and a Qatar Airways flight from Doha were delayed by an hour while red eye domestic flights from Delhi and Mumbai reached an hour late while a Pune-Chennai SpiceJet flight scheduled to land at 3.20am arrived at 5.30am.

LATEST COMMENTChennai airport is built over sewage lines, which get flooded when it pours as it happened a couple of years ago.Alas in Chennai and in whole of India roads, airports,schools ,hospitals and all ameni... Read Mores ramakrishnsn

Six international departures were delayed, including the two flights that were diverted. The delayed departures included Thai Airways flight to Bangkok, Kuwait Airways flight to Kuwait City, Air India flight to Sharjah, an IndiGo flight to Singapore.

However, early morning departures after 5.30am from the airport were not affected.
I don’t know secret to succeed in politics but Kamal Haasan might know, Rajinikanth says

Abdullah Nurullah| TNN | Updated: Oct 1, 2017, 14:54 IST

HIGHLIGHTS

Rajinikanth says legendary actor Sivaji Ganesan taught his followers a valuable lesson in politics
Sivaji Ganesan taught us fame and money are not enough to succeed in politics, he says
He says Kamal might know the secret to succeed in politics

Rajinikanth and Kamal Haasan at the inauguration of the Sivaji Ganesan memorial in Chennai on Sunday (TOI photo by Ramesh Shankar)



CHENNAI: Superstar Rajinikanth on Sunday took a dig at actor Kamal Haasanwho is planning to enter politics. Speaking at the inauguration of the memorial of legendary Tamil actor Sivaji Ganesan in Chennai, Rajinikanth said it takes more than fame and money to succeed in politics.

"Legendary actor Sivaji Ganesan taught his followers a valuable lesson in politics", said Rajinikanth. The superstar said Sivaji Ganesan, who had stood and lost in his own constituency, proved that fame and money alone were not enough to succeed in politics.

As Kamal looked on, Rajinikanth said, "To succeed in politics, there needs to be something more. Only the people know what that is. I promise I don't know. I think Kamal Haasan knows what that is. Even if he does, he will not tell me."

Rajinikanth went on to joke that Kamal would have told him what that (secret) was if he had asked him two months ago. It was in July when Kamal began his scathing attack on the ruling AIADMK government in Tamil Nadu.

"When I asked him what that is, Kamal Haasan said that he would tell me if I went with him," the superstar said.

Kamal Haasan did not respond to Rajinikanth's jibes during his speech.

TOP COMMENTFilm stars think that are best actors in reel life and in reality politicians are best actor in real lifeAppa Durai

Kamal said, "Sivaji Ganesan is an actor who transcended state, national and continental boundaries. Even if I had not become an actor, I would have been at this event as a film buff. Nobody could have stopped me from coming here today."

Kamal went on to add that he was one of the thousands of actors trying desperately to adhere to the standards set by Sivaji Ganesan.
தமிழகத்தில் மழை நீடிக்கும்

By DIN | Published on : 02nd October 2017 04:28 AM |



வளி மண்டலத்தின் மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வட கர்நாடகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. கேரளம், லட்சத்தீவு, தெற்கு உள் கர்நாடகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, மேல் அடுக்கில் சுழற்சி காரணமாக, சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: அரபிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றார் அவர்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 140 மி.மீ., பதிவாகியுள்ளது. பூண்டி மற்றும் செங்குன்றத்தில் 130 மி.மீ., சோழவரம், தாமரைப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 100 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. பொன்னேரியில் 90 மி.மீ., திருவள்ளூரில் 80 மி.மீ., பூவிருந்தமல்லி, செம்பரம்பாக்கம், தாம்பரத்தில் தலா 50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டாக்டர் கைது: இளைஞர் படுகாயம்

Published : 30 Sep 2017 18:22 IST

மு.அப்துல் முத்தலீஃப்சென்னை

அண்ணா நகரில் மது போதையில் தனது சொகுசு ஆடி காரில் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டி வந்து வாலிபர் மீது மோதிய டாக்டர் பின்னர் தப்பிக்க நினைத்து காரை வேகமாக ஓட்டியதில் சிக்னல் கம்பம் மீது மோதி போலீஸில் சிக்கினார்.

சென்னை அண்ணா நகர் காவல் நிலையம் அருகே பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் குமரன்(47) தனக்கு சொந்தமான விலை உயர்ந்த ஆடி காரில் நேற்று இரவு 3 மணி அளவில்அண்ணா நகர் 3 வது அவின்யூ சாலையில் வந்துள்ளார். போதையில் காரை ஓட்டியதில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் கண்ணுக்குத் தெரியவில்லை. வேகமாக மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வியாசர்பாடியை சேர்ந்த சத்யராஜ்(28) தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய டாக்டர் குமரன் நிதானத்தில் இல்லாததால் தான் ஒரு மருத்துவர் எனபதையும் மறந்து உயிருக்கு போராடும் இளைஞரை காப்பாற்றாமல் அங்கிருந்து தனது காரில் தப்பித்து வேகமாக சென்றார். கார் அண்ணா நகர் ரவுண்டானா அருகில் வேகமாக திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையின் அருகே இருந்த சிக்னல் மீது மோதியது.

இதில் போக்குவரத்து சிக்னலும் காரும் பலத்த சேதமடைந்தது. கார் மோதிய சத்தம் கேட்டு போலீஸார் வெளியே வந்து காருக்குள் போதையில் இருந்த டாக்டரை மீட்டனர். படுகாயத்துடன் சாலையில் கிடந்த இளைஞர் சத்யராஜை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சம்பவத்தை நேரில் பார்த்த பெரம்பூரை சேர்ந்த ஜெகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த சத்யராஜ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்றும், பணி முடிந்து வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு உள்ளது. மேலும் காரை ஒட்டி வந்தது டாக்டர் குமரன் என்பது தெரிய வந்தது.

காரை பறிமுதல் செய்த போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீஸார் போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்று மீண்டும் விபத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.

டாக்டர் மறுப்பு

நான் அந்த இளைஞர் மீது மோதவும் இல்லை குடித்து விட்டு வாகனம் ஓட்டவும் இல்லை என்று டாக்டர் குமரன் மறுத்துள்ளார்.

இது குறித்து 'தி இந்து' தமிழ் சார்பில் டாக்டர் குமரனிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

விபத்தின் போது என்ன நடந்தது?

நான் வழக்கமாக பணி முடிந்து காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது முன்னால் பைக்கில் சென்ற அந்த இளைஞர் தடுமாறி வலது புறம் காரின் மீது விழ இருந்தார். அவர் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக வலப்புறம் திருப்பினேன். அந்த இளைஞர் பயந்து போய் அவராக இடது புறம் போய் விழுந்தார். என்னுடைய கார் திடீர் என்று வலப்புறம் திருப்பியதால் என் கண்ட்ரோலை இழந்து ரவுண்டானா மீது மோதப்போக அதை தவிர்க்க இடது புறம் திருப்பும் போது என் கண்ட்ரோலை மீறி கார் சிக்னல் கம்பம் மீது மோதியது. இது தான் நடந்தது.

நீங்கள் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதவில்லையா?

கண்டிப்பாக இல்லை. அவர் மீது மோதாமல் இருக்கத்தானே வலது புறம் திருப்பினேன்.

நீங்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதாக போலீஸ் அறிக்கை சொல்கிறதே?

நான் மது அருந்தி வாகனம் ஓட்டவில்லை.

உங்களுக்கு மது அருந்தியதற்கான சோதனை நடத்தப்பட்டதாக போலீஸ் அறிக்கையில் போட்டிருக்கிறார்களே?

எனக்கு எந்த சோதனையும் நடத்தவில்லை.

கைது செய்யப்பட்டது உண்மையா?

நான் கைது செய்யப்படவில்லை. இரவே நான் வீட்டுக்குச் சென்று விட்டேன். மதியம் ஒரு ஆபரேஷன் கூட செய்தேன். இவை எல்லாம் போலீஸார் ஏன் சொல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை.

இவ்வாறு டாக்டர் குமரன் தெரிவித்தார்.
சிவாஜியின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது: கவிஞர் வைரமுத்து

Published : 01 Oct 2017 18:29 IST




சிவாஜியின் பெயரோடு கலைஞர் கருணாநிதியின் பெயர் கலந்திருப்பது கலை உண்மை எனவே அவரது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:


சிவாஜியின் பெயரோடு கலைஞரின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி சிலையைக் கலைஞர்தான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதைத் தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிவாஜி பீடத்தில் இடம்பெற்றிருந்த கலைஞரின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும். ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்?

சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி சிவாஜிதான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கன்னியாகுமரியில் கலைஞர் ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயனப் பூச்சுப் பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும்.

சிலையைச் சிலையாகப் பார்க்க வேண்டும்; அரசியலாகப் பார்க்கக் கூடாது. சிவாஜி சிலையைக் கடற்கரை காமராசர் சாலையில் கலைஞர் நிறுவியபோது அந்தச் சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன்.

சிலை மறுநிலைநாட்டம் செய்யப்பட்டாலும் அந்தச் சிலையோடு கலைஞரின் பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கலைஞரின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கலைஞரின் திருப்பெயரைத் தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாகத் தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.
டி.ஆர் - தன்ஷிகா சர்ச்சை: மன்னிப்புக் கோரிய விதார்த்

Published : 01 Oct 2017 18:24 IST

ESAKKI MUTHU_50090



‘குரங்கு பொம்மை’ பத்திரிகையாளர் சந்திப்பில் விதார்த் பேசிய போது... | கோப்புப் படம்

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு சர்ச்சைத் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார் விதார்த்

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், 'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பு மேடையிலிருந்த இயக்குநர் வெங்கட்பிரபு, கிருஷ்ணா, விதார்த் உள்ளிட்ட படக்குழுவினரையும் சமூக வலைதளத்தில் கடுமையாக சாடத் தொடங்கினார்கள்.

இது குறித்து விதார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

'விழித்திரு' நிகழ்ச்சியில் நடந்தது பற்றி என் தரப்பு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன். டி.ராஜேந்தர் சார் போன்றவர்களின் நடிப்பைப் பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். டி.ராஜேந்தர் சார் ஒருவரை இவ்வாறு புண்படுத்திப் பேசி நான் இதுவரை பார்த்ததில்லை. தன்ஷிகாவுக்கு அன்று நடந்தது நம் அனைவரையுமே உலுக்கி விட்டது.

இவையெல்லாம் ஜோக் போலத்தான் தொடங்கியது. டிஆர் எப்போதும் அவரது அடுக்கு மொழிக்கும் பளிச்சென உதிர்க்கும் வார்த்தைகளுக்கும் புகழ்பெற்றவர், அவர் மேடையில் சிலரை கேலியும் செய்துள்ளார். நாம் அனைவரும் இதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டோம். ஆனால் இது ஒருநேரத்தில் சீரியசாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று நாங்கள் உணர்ந்த போது அனைத்தும் கையை மீறி விட்டது.

நானும் மற்ற முக்கியஸ்தர்களுடன் மேடையில்தான் இருந்தேன். ஆனால் சரியான நேரத்தில் அதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இதனால் தன்ஷிகாவையோ அல்லது எந்த ஒருவரையோ புண்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.

எனக்கு தன்ஷிகாவை கடந்த 3 ஆண்டுகளாக நன்றாகத் தெரியும். அவரைப் போன்ற ஒரு தங்கமான நபரைப் பார்க்க முடியாது. பொதுவாக பிரஸ் மீட்கள், ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிகளில் சிறிது கூடுதல் நேரம் இருந்து விட்டு வருவது வழக்கம். ஆனால் அன்றைய தினம் நடந்தது எனக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்த நான் உடனடியாக கிளம்பி விட்டேன். நான் அங்கேயே இதற்காக எதிர்வினை புரிந்திருக்க வேண்டும், அதற்காக தன்ஷிகாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் அனைவரும் ஒரு குடும்பம், எங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்கள், பத்திரிகை தரப்பு ஆதரவு தேவை. உங்களது ஆதரவுக்காக நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் எப்போதும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
பிக் பாஸ் வெற்றியாளராக ஆரவ் தேர்வு: சமூகவலைத்தளத்தில் பெருகும் எதிர்ப்பு

Published : 01 Oct 2017 15:40 IST

ESAKKI MUTHU_50090



'பிக் பாஸ்' வெற்றிக் கோப்பையுடன் ஆரவ்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். அதில் ஸ்ரீ மற்றும் நமீதா இருவரும் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஓவியா "ஹாய் ஆரவ், எப்படி இருக்க.. நீ ரொம்ப உடல் மெலிந்து விட்டாய்" என்று மட்டுமே பேசினார்.

இறுதிப் போட்டியாளர்கள் நால்வரில் முதல் ஆளாக, கணேஷ் வெங்கட்ராம் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹரிஷ் வெளியேற்றப்பட்டார். சிநேகன் மற்றும் ஆரவ் இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று கமல் அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தார்.

இறுதியாக வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டு கோப்பையும், 50 லட்ச ரூபாய் பணமும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி என்று பேசினார் ஆரவ்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருடனும் 'அண்ணாத்தா ஆடுறார்' பாடலுக்கு நடனமாடினார் கமல். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் அனைத்தையும் கமல் அணைக்க நிகழ்ச்சி முடிவுற்று. விரைவில் அடுத்த சீசனில் சந்திக்கலாம் என்பதோடு முடித்துவிட்டார்கள்.

சமூகவலைத்தளத்தில் சர்ச்சை

பிக் பாஸ் இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதே, சமூகவலைத்தளத்தில் வெற்றிக் கோப்பையுடன் ஆரவ் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலரும் இதற்கு தகுதியானவர் அல்ல என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறி வருகிறார்கள்.

மேலும், ஆரவ்வின் ட்விட்டர் பக்கத்தில் "இது தான் எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு" என்று ட்வீட் செய்தார். அதற்கு பதிலடியாக பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஓவியாவால் மட்டுமே இது உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று பலரும் பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன்: அரசியல் வருகைக் குறித்து கமல்

Published : 01 Oct 2017 18:23 IST

ESAKKI MUTHU_50090




ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன் என்று அரசியல் வருகைக் குறித்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கமல் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று நடந்த நிகழ்வில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் தனது பேச்சுக்கு இடையே, அரசியல் வருகைக் குறித்து கமல் சூசகமாக பேசினார். அதில் கமல் பேசியதாவது:

இந்நிகழ்ச்சிக்கு நீங்கள் காட்டிய அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். இந்நிகழ்ச்சியை கண்டு கொண்டிருக்கும் ஆறரைக் கோடி மக்களுக்கு நன்றி. அந்த ஆறரைக் கோடி எட்டு கோடியாக வேண்டும் என்பது ஆசை. இது முடிவல்ல துவக்கம்.

தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கு வருவேன், வந்தே தீருவேன். வருவேன், வருவேன் என்கிறீர்களே என்னவாக வருவேன் என்று கேட்காதீர்கள். தொண்டர் அடிப்பொடியாக வருவேன். ஆசையில் வருவதில்லை அன்பில் வருகிறேன். வெறும் ஆர்வத்தில் வருவதல்ல, கடமையில் வருகிறேன்.

இங்கு கிடைத்த அதே அன்பு, அங்கும் கிடைக்கும் என்பதற்கான அச்சாரம் எனக்கு கிடைத்துவிட்டது. இனி என்ன வேலை எனக்கு என கேட்க மாட்டேன். உங்கள் வேலைத் தான் என் கடமை, என் வாழ்வு. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னால் நடிக்கிறேன். நடிக்க வேண்டாம் உனக்கு கொடுத்திருக்க வேலையைப் பார், அந்த சேவகம் செய் என்று சொன்னால் செய்கிறேன்.

நீ அதுக்கு லாயிக்கில்லை, வேறு ஆள் பார்த்துக் கொள்கிறோம் என்றால் நன்றி. அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா செய்கிறேன். இது மேடையில் உங்களை கைதட்ட வைப்பதற்காக சொல்லவில்லை. என் மனதின் ஆழத்திலிருந்து வரும் வார்த்தை.

எனக்கு வேண்டிய பணத்தை, சுகத்தை, வளத்தை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். அதற்கான நன்றியைச் சொல்ல இந்த வாழ்க்கைப் போதாது. அதற்கு கைமாறாக எது செய்தாலும் போதாது. உங்கள் சேவையில் சாவது தான் இந்த நல்ல கலைஞனுக்கு நல்ல முடிவு

இவ்வாறு அவர் பேசினார்.
தீபாவளி பட்டாசு சீட்டு நடத்துபவர்களுக்கு வருமா... கிடுக்கிப்பிடி? ஊரறிந்த ரகசியம் வருவாய் துறைக்கு தெரியாதாம்

பதிவு செய்த நாள்02அக்
2017
00:31




தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பட்டாசு சீட்டு நடத்துபவர்கள், அதற்கான பரிசு பொருட்களுடன் பட்டாசு பெட்டிகளை இருப்பு வைக்க துவங்கி விட்டனர். உரிய பாதுகாப்பு இன்றி, வீடுகளில் பெருமளவில் அடுக்கி வைக்கப்படும் பட்டாசு பெட்டிகளால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர்கள் செயலில் இறங்கினால், இதை, கட்டுப்படுத்த முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ராக்கெட் வேகத்தில் உயரும் பட்டாசு விலையால், நடுத்தர வர்க்கத்தினர், தீபாவளி பண்டிகையில் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி கொடுக்க திணறுகின்றனர்.இந்த சூழலை சாதகமாக்கி கொண்ட நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் சீட்டு நிறுவனங்கள் பகுதிவாசிகளிடம் தீபாவளி பட்டாசு சீட்டு நடத்தி, பணம் வசூலித்து வருகின்றன.

கொள்ளை லாபம்வசூலாகும் பணத்தை தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். லாபத்தின் ஒரு சொற்ப தொகையுடன், சீட்டு சேர்ந்தவர்களுக்கு, தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு பெட்டிகளை வழங்கி வருகின்றன. இந்த பட்டாசு சீட்டில், கொள்ளை லாபம் கிடைப்பதால், புற்றீசலாக ஏராளமானோர் பட்டாசு சீட்டு நடத்துவதில் இறங்கியுள்ளனர்.போட்டி காரணமாக, பட்டாசு பெட்டிகளுடன் பரிசு பொருட்களாக, இனிப்பு, பித்தளை சாமான்கள், தங்க நகைகள் என, நீளும் பட்டியலில், தற்போது ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களும் இடம் பிடித்துள்ளன.

மாதந்தோறும் பணத்தை செலுத்துவதன் மூலம், சமையல் எண்ணெய் முதல், பலகாரம் வரை பட்டாசு உட்பட ஒரு மாத்திற்கான மளிகை சாமான்களும் கிடைப்பதால், தீபாவளிக்கு போன்ஸ் கிடைக்காத கூலி தொழிலாளியும், பண்டிகையை கோலாகலமாக கொண்டாட முடிகிறது.தன் வீட்டு குழந்தைகள், அடுத்த வீட்டு குழந்தைகள் கொளுத்தும் வாண வேடிக்கையை பரிதாபமாக பார்த்து ஏங்கும் நிலை இன்றி, கவுரவமாக பட்டாசுகளை தன் வீட்டு வாசலில் வெடித்து மகிழ்கின்றனர். இந்த மகிழ்ச்சியே, பட்டாசு சீட்டு நடத்துபவர்களின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.

இதனால், சீட்டு நடத்துபவர்களுக்கும், சீட்டு சேர்பவர்களுக்கும் என, இருதரப்பிலும் மகிழ்ச்சி தான். ஆனால், பட்டாசு பெட்டிகளை சிவகாசியில் இருந்து, மொத்தமாக வங்கி வந்து, குடியிருப்புகளுக்கு மத்தியில், வீடுகளில் இருப்பு வைக்கும் சீட்டு கம்பெனிகளால், அருகில் குடியிருப்பவர்கள் தான் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

நடவடிக்கை தேவைகுறைந்தபட்சம், 500 பெட்டிகள் வரையிலான பட்டாசுகளை இருப்பு வைக்கும் இடத்தில், உரிய பாதுகாப்பு அம்சங்களை இவர்கள் கடைப்பிடிப்பது இல்லை. பட்டாசு கடைகளை வைப்பவர்கள் வருவாய் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்பது விதிமுறை.பட்டாசு கடைகளை விட அதிகளவில் வியாபாரம் நடத்தும், இந்த சீட்டு நிறுவனங்கள் ரகசியமாக இருப்பு வைக்கும் பட்டாசுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.
கிராமங்கள் தோறும் தங்கியிருந்து பணியாற்றும் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியார்களுக்கு, பட்டாசு சீட்டு நடத்துபவர்கள் யார் என்பதும், அவர்கள் இருப்பு வைக்கும் இடமும் தெரியாமல் போக வாய்ப்பு இல்லை.வருவாய் துறையினரும், போலீசாரும் உரிய முறையில் இவர்களை கண்டறிந்து, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். பெரும் விபரீதம் ஏற்படும் முன்பாக நடவடிக்கை தேவை என்பது சமூகஆர்வலர்களை எதிர்பார்ப்பாக உள்ளது.

பட்டாசு கடைகள் வைப்பவர்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து, அதற்கேற்ப பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் உரிமம் வழங்கப்படும். ஆனால், விதிகளை மீறி பட்டாசு இருப்பு மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீடுகளில் வைத்து பட்டாசு வினியோகம் செய்பவர்கள் குறித்து, இதுவரை எந்த புகாரும் வரவில்லை.-என்.ஜெயராமன், திருத்தணி கோட்டாட்சியர்

- நமது நிருபர் -
சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளி ஆட்கள் பணியாற்ற தடை
பதிவு செய்த நாள்01அக்
2017
23:46

'சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளி ஆட்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, வெளியாட்களை பணியில் ஈடுபடுத்தினால், பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, பதிவுத்துறை, ஐ.ஜி., குமரகுருபரன் எச்சரித்துஉள்ளார்.

தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிக்காக, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், பத்திரங்களை பதிய, பொது மக்கள் நேரடியாக அணுக முடியாத சூழல் நிலவுகிறது. மிக சரியாக பத்திரங்களை தயாரித்து சென்றாலும், சார் - பதிவாளர்கள் ஏற்பதில்லை.
தங்களுக்கு வேண்டிய, ஆவண எழுத்தர் வாயிலாக சென்றால் மட்டுமே ஏற்கின்றனர்.

பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள், சொந்தமாக சம்பளம் கொடுத்து, வெளி ஆட்களை பணியில் அமர்த்தி உள்ளனர். இது, லஞ்ச ஊழலுக்கே வழிவகுக்கும் என, பொது மக்கள் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன், அனைத்து, டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: 

 சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளி ஆட்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. சுற்றறிக்கையின் இணைப்பாக அனுப்பப்பட்டுள்ள சான்று படிவத்தில், 'எங்கள் அலுவலகத்தில், வெளி ஆட்கள் யாரும் பணியில் இல்லை' என, சார் - பதிவாளர்கள், எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்து, தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்

 வெளி ஆட்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சார் - பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: இந்த சுற்றறிக்கையின் வாயிலாக, சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளி ஆட்கள் பணியில் இருப்பதை, ஐ.ஜி., ஒப்புக்கொள்கிறார். பல்வேறு சார் - பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிய வேண்டியவர்களை, அயல் பணி என, தலைமையகத்திலேயே வைத்துக் கொள்கின்றனர். இதனால், ஏற்படும் காலியிடம், அதற்கான பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாட்டையும், ஐ.ஜி.,யே சுட்டிக்காட்டினால் நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
சமையல் காஸ் விலை அதிரடி உயர்வு
சென்னை: பண்டிகைகள் வரிசை கட்டும் நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலை, இரண்டு மாதங்களில், 123.50 ரூபாய் உயர்ந்துள்ளது.



இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆகிய, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; வணிக பயன்பாட்டுக்கு, 19 கிலோ என, இரண்டு வகையான காஸ் சிலிண்டர்களை வினி யோகம் செய்கின்றன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும்,எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் சிலிண்டர் விலையில், மாற்றம் செய்கின்றன.

இதன்படி, சென்னையில், செப்., 1ல், வீட்டு சிலிண்டர் விலை, 607 ரூபாய்க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, 1,167 ரூபாய்க்கும் விற்பனையானது.எண்ணெய் நிறுவனங்கள், செப்., 28ல், காஸ் ஏஜென்சிகளுக்கான கமிஷன் தொகையை உயர்த்தின. இதனால், வீட்டு சிலிண்டருக்கு, 47.48 ரூபாயாக இருந்த கமிஷன், ரூ.1.41 உயர்ந்து, 48.89 ரூபாயானது. இதனுடன், வரியும் சேர்த்து, வீட்டு சிலிண்டர் விலை, இரண்டு ரூபாய் அதிகரித்து, செப்., 29 முதல், வீட்டு சிலிண்டர் விலை, 609 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, நேற்று முதல், காஸ் சிலிண்டர் விலையில், மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, 609 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, 47.50 ரூபாய் உயர்ந்து, 656.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில், 1,167 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, 77.50 ரூபாய் அதிகரித்து, 1,244.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது: சென்னையில், ஆகஸ்டில், வீட்டு சிலிண்டர், 533 ரூபாய்; வணிக சிலிண்டர், 1,052 ரூபாய்க்கும் விற்பனையானது. இரண்டு மாதங்களில் மட்டும், வீட்டு சிலிண்டர் விலை, 123.50 ரூபாயும், வணிக சிலிண்டர் விலை, 192 ரூபாயும் உயர்ந்துள்ளது.

இதனால், பண்டிகைகாலத்தில் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. இதனால், மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக மாகி விடும். எனவே, சிலிண்டர் விலையை குறைக்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'வீட்டு காஸ் சிலிண்டருக்கு, வரி இல்லாமல் இருந்தது. தற்போது, ஜி.எஸ்.டி.,யில், 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அவற்றின் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது' என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் இன்று முதல் குப்பை சேகரிப்பு முறையில் மாற்றம்
பதிவு செய்த நாள்02அக்
2017
05:56




சென்னை: காந்தி ஜெயந்தி நாளான இன்று(அக்.,2) முதல், சென்னையில், குப்பை சேகரிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளிலேயே, குப்பையை, மட்கும் மற்றும் மட்காத குப்பையாக தரம் பிரித்து பெறப்படும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. அதே சமயம், ஒரே வளாகத்தில், தினமும், 100 கிலோவிற்கு மேல் குப்பையை உருவாக்கினால், அந்த நிர்வாகமே, குப்பையை மறுசுழற்சி செய்துகொள்ள வேண்டும்.

திடக்கழிவு மேலாண் மை விதியின் படி, நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கு மேலாக குப்பையை உருவாக்கும் வணிக வளாகங்கள், திருமணமண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் குப்பையை, மாநகராட்சி இனி வாங்காது.அந்தந்த நிறுவனங்களே, குப்பையை, மறு சுழற்சி செய்யவோ, உரம் தயாரிக்கவோ வேண்டும்.

காந்தி ஜெயந்தி நாளான இன்று முதல், இத்திட்டம் அமலுக்கு வருகிறது. வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து, அனைத்து நாட்களிலும், மக்கும் குப்பையையும்; புதன்கிழமை மட்டும், மக்காத குப்பையையும், மாநகராட்சி ஊழியர்களிடம், பொதுமக்கள் வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியின், 15 மண்டலங்களிலும் சேர்த்து, தினமும், 5,000 டன் குப்பை சேர்கிறது.
கொட்டிய கன மழையால் மக்கள் நிம்மதி : குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என நம்பிக்கை
பதிவு செய்த நாள்
அக் 02,2017 00:21

குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தினருக்கு, நிம்மதி தரும் வகையில், கன மழை கொட்டி தீர்த்தது. தமிழகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், கடலுார் போன்ற வட மாவட்டங்களில், இரண்டு ஆண்டுகளாக பருவ மழை ஏமாற்றியதால், ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. வட மாவட்டங்களில், ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.

 நேற்று முன்தினம் இரவும், சென்னை, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கன மழை கொட்டியது. 

இதனால், முக்கிய குடிநீர் ஆதாரமான புழல், செங்குன்றம், சோழவரம் போன்ற ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக, எண்ணுாரில்,14 செ.மீ., மழை பதிவானது. பூண்டி, 13; சோழவரம், 12; தாமரைப்பாக்கம், 11; ஸ்ரீபெரும்புதுார், 10; பொன்னேரி, 9; திருவள்ளூர், 8; பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், தாம்பரம், 5; திருத்தணி, 4; கேளம்பாக்கம், விமான நிலையம், அடையாறு, 3; மற்ற இடங்களில், 1 முதல், 2 செ.மீ., மழை பதிவானது.

நாளை காலை, 8.30மணி வரை உள்ள, 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை காரணமாக, ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

விமானங்கள் தாமதம் : சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல், நேற்று காலை, 6:30 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், குவைத், சார்ஜா, கொழும்பு, லண்டன் ஆகிய வெளிநாட்டு நகரங்களில் இருந்து வந்த விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், ஐதராபாதிற்கு திருப்பி விடப்பட்டன. இதேபோல், புனே, அந்தமான், மற்றும் ஐதராபாத் நகரங்களில் இருந்து, சென்னை வந்த விமானங்கள், அருகில் இருந்த விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

நேற்று காலை, 6:30 மணிக்கு நிலைமை சீரானதும், பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட, 14 விமானங்கள், நேற்று காலை, 7:30 மணி முதல், சென்னையில் தரையிறங்கின.
விமானங்கள் தாமதத்தால் பயணியர் சிரமப்பட்டனர்.
10 நாள் விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு
பதிவு செய்த நாள்01அக்
2017
23:47


சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அன்றே, மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்., ௨௨ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று, காந்தி ஜெயந்தி விடுமுறை. 10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், குழந்தைகள். எனவே, நாளை பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது. மேலும், டெங்கு அதிக அளவில் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. விடுதிகள், பள்ளி வளாகங்களில் குடிநீர் தொட்டிகள், நீர் தேக்கி வைக்கப்படும் இடங்களை, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். கல்வி நிறுவன வளாகங்களில், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில், தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள், உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில், உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

சென்னை: நாளை(அக்.,3) அதிகாலையில் மெட்ரோ ரயில்


பதிவு செய்த நாள்02அக்
2017
00:58




சென்னை : சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்கா வரையும்; விமான நிலையம் முதல் சின்னமலை வரையும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், 'ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்காக, வெளியூர் சென்றோர், சென்னை வருவதற்கு ஏதுவாக, வரும், 3ம் தேதி அதிகாலை, 5:00 மணியில் இருந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஷீரடி ஏர்போர்ட்: நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பதிவு செய்த நாள்
அக் 02,2017 01:11



ஷீரடி: மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று(அக்.,01) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஷீரடி - மும்பை இடையேயான முதல் விமான சேவையை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் ஷீரடிக்கு யாத்திரை வரும் நிலையில் அவர்களில் 10 சதவீதம் பேர் விமான சேவையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்


சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அக்டோபர் 02, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட அளவிலான அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உரிய நேரத்தில் விரைந்து கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு உரம், விதை ஆகியவற்றை தேவையான அளவு வழங்கிட வேண்டும்.

பொதுப்பணித்துறையின் மூலம் புதியதாக தொடங்கப்பட உள்ள கட்டிடப்பணிகள், ஊரக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பிரதான சாலை மற்றும் கிராம சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக டெங்கு காய்ச்சலை உண்டாக்கக்கூடிய ஏடிஎஸ் கொசுக்கள் திறந்து வைக்கப்பட்ட நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களின் பங்களிப்புடன் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நிலவேம்பு குடிநீரை பள்ளி, கல்லூரிகளிலும், பஸ் நிலையம், ரெயில் நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வழங்கிட வேண்டும். அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் குறித்த கால அளவில் தூய்மை செய்து குளோரினேசன் செய்ய வேண்டும். சுகாதார வளாகங்களை பராமரிக்கவும் மற்றும் கழிவுநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யவும் வேண்டும். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சென்று சேர்வதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செந்தமிழ்ச்செல்வன், துணை இயக்குனர்(சுகாதாரம்) பூங்கொடி உள்ளிட்ட அனைத்துத்துறை மாவட்ட அளவிலான முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வீட்டில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட ஓட்டை உடைசல் பஸ்களால் பயணிகள் பெரும் தவிப்பு



ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் ஓட்டை உடைசல்களாக இருந்ததால் பயணத்தின் போது பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.

அக்டோபர் 02, 2017, 04:15 AM
சென்னை,

பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையையும் போக்குவரத்து கழகம் அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்த பஸ்களில் பயணிகள் இரவு முழுவதும் அதாவது தொடர்ந்து 13 மணிநேரம் பயணம் செய்ய முடியுமா? என்பது பற்றி எவரும் பார்ப்பதாக தெரியவில்லை. வருமானத்தை அதிகரிப்பதில் தான் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர பஸ்களின் நிலை குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இதனால் 12 மணிநேரம், 14 மணிநேரம் பயணம் செய்யும் பயணிகளின் அவலநிலை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 29-ந் தேதி மாலை 4½ மணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டுக்கு புறப்பட்டு சென்ற விரைவு பஸ்சில் இருக்கை சரி இல்லை என்று கண்டக்டரிடம் பயணிகள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறப்பு பஸ்களை இயக்கும் விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்கப்படுவதாக பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்று இயக்கப்படாது என்று உறுதி அளித்தார். ஆனால் அதனையும் மீறி ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்குவது தொடர் கதையாகி வருகிறது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் முறையாக பரா மரிக்காமல் வெகு தூரங்களுக்கு இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களை ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு என்ற காரணத்திற்காக பயணிகள் விரும்பி செல்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான பஸ்களில் இருக்கைகள் முறையாக இல்லாததால் 13 மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்யும் முதியவர்கள், பெண்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் முதுகு வலி, கால்வலி ஏற்பட்டு மருத்துவ செலவுக்கு உள்ளாகின்றனர்.

பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று மருத்துவமனையை நாடி செல்லும் அவல நிலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் தள்ளி விடுகின்றன.

பஸ் கண்டக்டரிடம் இதுபற்றி புகார் அளித்தால், இருக்கை சரி இல்லை என்றால் பஸ்சை விட்டு கீழே இறங்குங்கள் என்றும், ஆன்-லைனில் டிக்கெட் வாங்கினால் அதற்கான கட்டணத்தை அரசு விரைவு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் போய் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கின்றனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வருமானத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற ஓட்டை உடைசல் பஸ்களை பண்டிகை காலம் மட்டும் அல்லாது எப்போதும் இயக்க வேண்டாம். பயணிகளின் உயிரோடு விளையாடுவதை அரசு விரைவு போக்குவரத்து கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களை நாடுவதை தவிர பயணிகளுக்கு வேறு வழி தெரியவில்லை.

இவ்வாறு பயணிகள் கூறினார்கள்.
டெய்லரை கூறு போட்ட கறிக்கடைக்காரர் கைது

பதிவு செய்த நாள்02அக்
2017
01:00


சென்னை : சென்னை, முகப்பேர் பகுதியில், டெய்லரை கண்டம் துண்டமாக வெட்டி கால்வாய் ஓரம் வீசிய கறிக்கடைக்காரர், கைது செய்யப்பட்டார்.
சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர், பாபு, 45; டெய்லர். இவரது மனைவி, கிரிஜா, 40. இவர்களுக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

தலையில்லா சடலம்:

கருத்துவேறுபாடு காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன், மனைவியை பிரிந்த பாபு, சென்னை, முகப்பேர் மேற்கு, 3வது பிளாக் பகுதியில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில், வாடகை வீட்டிலும் தங்கி வந்தார். டெய்லர் கடைக்கு எதிரே, நொளம்பூரைச் சேர்ந்த, வெங்கடேஷ் என்பவர் நடத்தி வரும் கறிக்கடை உள்ளது. இந்த கடையில், பல்லாவரத்தைச் சேர்ந்த, முகமது ரசூல், 22, என்பவர், தங்கி வேலை பார்த்து வந்தார். மாதத்திற்கு ஒரு சில நாட்கள் மட்டுமே, வெங்கடேஷ் கடைக்கு வருவார்.
இந்நிலையில், செப்., 26ல், முகப்பேர் மேற்கு, 3வது பிளாக் பகுதியில், கால்வாய் ஓரம், கோணியில், கை, கால், தலை ஏதுமில்லாத, ஆண் சடலம் கிடந்தது.அடுத்தடுத்த நாட்களில் போலீசார், முகப்பேர் மேற்கு, பன்னீர் நகர் பகுதியில், தலை மற்றும் ஒரு கை தவிர, மற்ற உடல் பாகங்களை கைப்பற்றினர். ஆனால், இறந்தது யார் என, அடையாளம் காண முடியவில்லை.

போலீஸ் திணறல்:

சினிமா, 'கிரைம்' காட்சிகள் போல், மனித உடலை கூறுபோட்டு, கால்வாய் ஓரம் மற்றும் முட்புதரில் வீசப்பட்டு கிடந்தது, முகப்பேர் பகுதி மக்களை பீதியடையச் செய்தது. போலீசாரும், கொன்றது யார், கொல்லப்பட்டது யார் என, கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகப்பேர் மேற்கு பகுதி முழுவதும் விசாரணை நடந்தது வந்தது. அப்போது, டெய்லர் தங்கி வந்த வீட்டு உரிமையாளர், 'பாபுவை, இரண்டு நாட்களாக காணவில்லை; ஆனால், அவர் தங்கி இருந்த வீட்டில், விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது' என, போலீசாரிடம் கூறியுள்ளார்.

அதேபோல், டெய்லர் கடை உரிமையாளர் ஜாகிர் உசேனும், 'பாபுவை காணவில்லை; அதே போன்று, எதிரே உள்ள கறிக்கடையில் வேலை பார்த்த, முகமது ரசூலையும் காணவில்லை' என, போலீசாரிடம் கூறியுள்ளார்.இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், முகமது ரசூல் யார் என, விசாரிக்க துவங்கினர். அவன் பல்லாவரம், ஜி.எஸ்.டி., சாலை, நேரு தெருவை சேர்ந்தவர் என்பதும், அவர் மீது பல்லாவரம், மறைமலை நகர் காவல் நிலையத்தில், நான்கு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.அவர், பல்லாவரம் பகுதியில் பதுங்கி இருப்பதை, மொபைல் போன் சிக்னல் வழியாக, போலீசார் உறுதி செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது ரசூலை, போலீசார், சினிமா பாணியில் துரத்திச்சென்று, துப்பாக்கி முனையில் பிடித்தனர்.

பணம் கேட்டு நச்சரிப்பு:

விசாரணையில், டெய்லர் பாபுவை கொன்றதை ஒப்புக்கொண்டான்.அவர், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: இருவரும், தினமும் ஒன்றாக சேர்ந்து, மது அருந்துவோம். பாபுவுக்கு, எவ்வளவு குடித்தாலும் பத்தாது. எப்போதும், போதையிலேயே இருக்க விரும்புவார். அதற்காக, என்னிடம் பணம் கேட்டு நச்சரிப்பார். இதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன், பாபுவை, 'உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என, கூறினேன். அப்போதும், அவர் தொல்லை கொடுத்து வந்தார்.செப்., 25ல், காலை மற்றும் மதியம், மது குடிக்க பாபுவுக்கு பணம் கொடுத்தேன். அன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு மீண்டும் கதவை தட்டி பணம் கேட்டார்.

தலை மீட்பு:

இதனால் ஆத்திரத்தில், கடைக்குள் அழைத்து, தாக்கினேன்; அவர் இறந்துவிட்டார். பின், அவரது உடலை கூறு போட்டு, ஆறு கோணி பையில் வைத்து, ஒவ்வொன்றாக துாக்கிச்சென்று, கால்வாய் ஓரம் வீசிவிட்டு மாயமாகிவிட்டேன். இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். முகமது ரசூல் கைதுக்கு பின், முகப்பேர் மேற்கு பகுதியில், முட்புதரில் கிடந்த பாபுவின் தலையை, போலீசார் கைப்பற்றினர்.
புற்றீசல் போல் பெருகும் மதுக்கடைகள்'மது'ரை:போதையில் பொங்கி வழியும் குடிமகன்கள்
பதிவு செய்த நாள்
அக் 02,2017 02:05



மதுரை;மதுரையில் மூடப்பட்ட மதுக்கடைகள் எல்லாம் மீண்டும் புற்றீசல் போல் திறக்கப்பட்டு வருகிறது. போதையில் பொங்கி வழியும் 'குடிமகன்'களின் கூட்டத்தால் மதுரையே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.சில மாதங்களுக்கு முன் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட குடியிருப்பு பகுதிகளில் புதிய டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த பொதுமக்கள் புதிதாக அமைத்த மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர். இப்பிரச்னைக்கு பின் மதுக்கடைகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், மதுரையில் தற்போது மூடப்பட்ட மதுக்கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் அடுத்து, அடுத்து மூன்று மதுக்கடைகள் 'பட்டை'யை கிளப்பிக் ண்டிருக்கிறது.குடிமகன்களின் தொல்லையால் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் பெண்கள் தலைகாட்ட அஞ்சுகின்றனர். திறந்த வெளி பார் போல் இங்குள்ள கடைகள் உள்ளன. உள்ளே இருந்து குடிப்பது யார், என்ன ரகம் குடிக்கிறார்கள் என்பது வரை பளிச் என தெரிகிறது. 

பஸ் ஸ்டாண்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் இதை வேடிக்கை பார்க்கும் அவலம் உள்ளது. இந்த கடைகளுக்கு எங்கும் இல்லாத வகையில் இரண்டு வழிப்பாதை வேறு. இதே, போல் மதுரை ஆத்திகுளம் - புதுார் ரோட்டில் வீடுகளுக்கு நடுவே, புதுநத்தம் ரோடு திருப்பாலை கோயில் மற்றும் பள்ளிக்கு அருகில், நரிமேட்டில் பள்ளி அருகே என, பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மதுக்கடைகள் தடையின்றி செயல்பட்டு வருகிறது.இது போன்ற பொது இடங்களில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது என்று தெரிந்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடைகளை திறப்பது, திறந்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. 

இந்த லட்சணத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவங்களும் நடக்கிறது. மது விஷயத்தில் அதிகாரிகள் மயங்கி விடாமல் மக்கள் கூடும் இடங்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு மூடுவிழா நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அறை கிடைக்காமல் பயணிகள் திணறல்:போக்குவரத்து நெரிசலில் தவிப்பு
பதிவு செய்த நாள்02அக்
2017
01:40

கொடைக்கானல்;கொடைக்கானலில் தொடர் விடுமுறையில் குவிந்த சுற்றுலாபயணிகள ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறை கிடைக்காமல் திணறினர். சிலர் குழந்தைகளுடன் பஸ்ஸ்டாண்ட்டில் தங்கினர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது.தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். இதனால் ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் திணறினர்.ரூ.800 க்கு பெறுமான அறைகள் ரூ.2,500 லிருந்து ரூ.3,000 வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டது. ரிசார்ட்ஸ்கள் அனைத்தும் ஆன் -லைனில் புக்காயின. சுற்றுலாபயணிகள் வருகையால் தனியார் காட்டேஜ்களுக்கு கொண்டாட்டமாகியது. 

5 பேர் தங்கக்கூடிய காட்டேஜ்கள் ரூ. 12.000 லிருந்து ரூ.20.000 வரை பேரம் பேசப்பட்டன. வேறு வழியின்றி சுற்றுலாபயணிகளும் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பல சுற்றுலாபயணிகள் பஸ்ஸ்டாண்ட் மற்றும் அடைக்கப்பட்ட கடைகளில் வெளியே துாங்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. உணவகங்களில் பொருட்களின் விலையை கூட்டி ஓட்டல் உரிமையாளர்கள் கல்லா கட்டினர்.

கொடைக்கானலுக்கு அதிகளவு வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோட்டின் இருபக்கமும் மணல் மற்றும் செங்கல் ஏற்றி செல்லும் பிக்அப், லாரி வாகனங்களின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசாரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டினர். 

நகரில் ஒரு வழிப்பாதை இல்லாததால், பயணிகள் வாகனங்களிலேயே பல மணிநேரம் திணற வேண்டி இருந்தது.
அரசியல், களமிறங்க,ஆயத்தமாகும்,கமலுக்கு,ரஜினி, சூடு!

சென்னை:அரசியல் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு சூடு வைக்கும் வகையில், ''சினிமா செல்வாக்கால், அரசியலில் ஜெயிக்க முடியாது; அதற்கு மேல் ஒன்று உண்டு. அது, என்ன என மக்களுக்குத்தான் தெரியும்,'' என, சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில், ரஜினி பேசினார். 'முரசொலி' பவள விழாவில், 'தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' என, சீண்டிய கமலுக்கு பதிலடியாக அமைந்த ரஜினியின் பேச்சு, விழாவை விவாத மேடையாக்கியது.




சென்னை, அடையாறில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு, தமிழக அரசு, 2.8 கோடி ரூபாயில், மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது பிறந்த நாளான நேற்று, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மணி மண்டபத்தை திறந்து வைத்து பேசியதாவது:

சிவாஜி கணேசன் மணி மண்டப விழாவில் பங்கேற்றதன் மூலம், நாம் அனைவரும் பெருமை அடைந்துள்ளோம். அண்ணாதுரை, ஈ.வெ.ரா., போன்றவர்களால், பாராட்டப் பட்டவர் சிவாஜி.

பல உதவிகள்

வரலாற்று தலைவர்கள், கடவுள்களை நாம் நேரில் பார்த்தது இல்லை. அவர்களை, நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜி. செவாலியே உள்ளிட்ட பல விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்.

திரையுலகில், மூன்றாவது தலைமுறையாக, அவரது குடும்பத்தினர் சிறப்பு சேர்த்து வருகின்றனர். தமிழக அரசு, திரைத் துறைக்கு, பல உதவிகளை செய்து வருகிறது. 1993 முதல், சிவாஜி கணேசன் பெயரில் விருதையும் வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் ரஜினி பேசியதாவது:

மணிமண்டபத்தை திறந்து வைத்த பன்னீர்செல்வம் அதிர்ஷ்டசாலி; அது, பல , தடவை நிரூபணமாகி உள்ளது. காலம் காலமாக நிலைத்து நிற்கும் இந்த சிறப்பை, பன்னீர்செல்வம் பெற்றது பாக்கியம். நடிப்புலக சக்கரவர்த்தியாக விளங்கிய சிவாஜி கணேசன் நடை, உடை, பாவனை என, அனைத்திலும் புரட்சி செய்தார்.உலக அளவில், இவரைப் போல் யாரும் நடிக்க முடியாது என்ற சிறப்பை பெற்றவர். வெறும் நடிப்பு மட்டுமே, இவருடைய சிறப்பு இல்லை. வரலாற்று நாயகர்கள், புராணத் தலைவர்களை மக்களின் கண் முன் நிறுத்தியவர்.

அதனாலேயே, இவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்த போது, நெற்றியில் திருநீறு பூசி நடித்து வெற்றி கண்டவர்.

பெருமையானது

இறந்த பின், சிலர் மண்ணாவர்; சிலர் சாம்பல் ஆவர். ஆனால், சிலையான சிவாஜியுடன் பழகி இருப்பது, நமக்கு பெருமையான விஷயம். அரசியல், சினிமா இரண்டும் இணைந்த விழா இது. நடிப்பு மட்டுமின்றி,அரசியல் பாடத்தையும், சிவாஜி சொல்லி கொடுத்து உள்ளார். சிவாஜி தனி கட்சி துவங்கி, தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோற்றார். அது, அவருக்கு கிடைத்த அவமானம் அல்ல; அத்தொகுதி மக்களுக்கு ஏற்பட்ட அவமானம்.

அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ், செல்வாக்கு, பணம் மட்டும் போதாது. அதற்கு மேல் ஒன்று உண்டு. அது என்னவென மக்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு தெரியாது; அந்த ரகசியம் கமலுக்கு தெரிந்து இருக்கலாம் என, நினைக்கிறேன்.அதை, இப்போது கேட்டால் சொல்ல மாட்டார்; 'என்னுடன் வா சொல்கிறேன்' என்கிறார். ஒரு வேளை இரண்டு மாதத்திற்கு முன் கேட்டு இருந்தால், சொல்லியிருப்பார் என, நினைக்கிறேன். சிவாஜி கணேசனுக்கு புகழ் சேர்ந்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு நன்றி.இவ்வாறு ரஜினி பேசினார்.

தன்மானம்

'சினிமா செல்வாக்கால் ஜெயிக்க முடியாது' என்ற ரஜினியின் பேச்சு,அரசியலில் களமிறங்க ஆயத்தமாகும் கமலுக்கு, சூடு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆக., 10ல், சென்னையில் நடந்த, 'முரசொலி'

பவள விழாவில், ரஜினி மேடையில் அமராமல், பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார். கமல், தன் பேச்சில், 'எனக்கு தற்காப்பை விட தன்மானம் முக்கியம்' எனபேசி, ரஜினியை மறைமுகமாக கிண்டலடித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த விழாவில் ரஜினி பேசியுள்ளார். சிவாஜி மணி மண்டப திறப்பு விழா, அரசியல் விவாத மேடையாகி விட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

நடிகர் கமல் பேசியதாவது:

மாநில, தேசிய, ஆசிய எல்லைகளை கடந்த உலக நடிகர் சிவாஜி. நான் நடிகனாகவில்லை என்றால், ஒரு ரசிகனாக வெளியே இருந்து, இந்நிகழ்ச்சியை பார்த்து இருப்பேன். நடிப்பை கற்றுக் கொடுத்து, என்னை போன்ற பலரின் வாழ்க்கையை மேம்படுத்திய, கலைஞனுக்கு நன்றி செலுத்தும் விழா இது.

எத்தனை அரசுகள் வந்தாலும், சிவாஜி கணேசனை மதித்தே ஆக வேண்டும். இதை, வற்புறுத்தியோ, கெஞ்சியோ, மிரட்டியோ கேட்க வேண்டியதில்லை. மணி மண்டபம் அமைத்து,விழா எடுத்த அரசுக்கும், அரசியலுக்கும் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் பிரபு பேசுகையில்,''சிவாஜி மணி மண்டபம் திறப்பு விழாவால், ஜெயலலிதாவின் கனவு நனவாகி உள்ளது. சிவாஜி சிலையை அமைத்த, கருணாநிதியின் பெயரும், கல்வெட்டில் இடம் பெற வேண்டும்,'' என்றார்.விழாவில், அமைச்சர்கள் ஜெயகுமார், ராஜு, பாண்டியராஜன், பெஞ்சமின், மயிலாப்பூர், எம்.எல்.ஏ., நட்ராஜ், நடிகர்கள் நாசர், விஷால், சுஹாசினி உள்ளிட்ட திரையுலகினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

எதிரும், புதிரும் கைகோர்ப்பு

* எதிரும், புதிருமாக கடுமையாக விமர்சித்து கொண்ட அமைச்சர் ஜெயகுமாரும், நடிகர் கமலும், மேடையில், கை குலுக்கி, சிரித்து பேசினர். கமலுக்கு, ஜெயகுமார் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்
* மணிமண்டபம் திறப்பு விழா முடிந்து, வி.ஐ.பி.,க்கள் சென்றதும்,
ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள், சிவாஜி சிலை முன் நின்று, புகைப்படம் எடுத்தனர். சில ரசிகர்கள், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்
* மெரினா கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட சிவாஜி சிலை, மணிமண்டபத்தின் வெளியே நிறுவப்படாமல், உள்ளே நிறுவப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்
* மணிமண்டபத்தின் உள்ளே, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில்
பிரபலமான நடிகர்களுடன், சிவாஜி கணேசன் உள்ள புகைப்படங்கள் இடம் பெறவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது
* மணிமண்டப வாசல், வடக்கு திசை பார்த்து, வாஸ்து அடிப்படையில்அமைக்கப்பட்டுள்ளது.
சிலையும், வடக்கு நோக்கியே அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கடற்கரை சாலையில், சிவாஜி சிலை, வடக்கு நோக்கியே நிறுவப்பட்டிருந்தது.
தூய்மையான கோயிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேர்வு!

செ.சல்மான்

ஈ.ஜெ.நந்தகுமார்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை இந்தியாவில் சுத்தமான கோயிலாக மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதனால் மதுரை மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு காரணமான மதுரை கலெக்டர் வீரராகவராவையும், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகரையும், அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

தூய்மை பாரதம் திட்டத்தை மதுரை மாவட்டத்தில் தீவிரமாக செயல்படுத்திய மாவட்ட நிர்வாகம், கடந்த சில நாள்களாக தூய்மையே சேவை திட்டத்தை இடைவெளி இல்லாமல் செயல்படுத்தி வருகிறார்கள். வைகை ஆற்றைஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் பங்களிப்புடன் இரண்டு நாள்களாக சுத்தம் செய்து டன் கணக்கில் குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாது பள்ளிகளில் கலெக்டரே நேரடியாக இறங்கி சுத்தம் செய்தார். அவருடைய சுறுசுறுப்பை பார்த்து மற்ற அதிகாரிகளும் , பொதுமக்களும் களத்தில் இறங்கினார்கள்.




மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஐநூறு மீட்டர் சுற்றளவில் பிளாஸ்டிக், பாலித்தீன் பயன்பாட்டுக்கு தடை போட்ட மாநகராட்சி நிர்வாகம் மீறி பயன்படுத்தினால் சம்பந்தப்படவர்களுக்கு அபராதம் வித்திக்க தொடங்கியது. அதுபோல் கோயிலுக்குள் குப்பைகளை போடுபவர்களை எச்சரித்து வளாகம் முழுவதும் குப்பைக்கூடைகளை வைத்தனர். வரும்காலத்தில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோயிலை சுற்றி யாரும் அசுத்தம் செய்துவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டார்கள்.



கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் மிக உறுதியாக செயல்பட்டதால் சுத்தமான கோயிலாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர்ராஜு, உதயகுமார், எம்.எல்.ஏக்கள், கலெக்டரையும், கமிஷனரையும் பாராட்டினார்கள்.
"பார்த்தோம், பார்க்கவில்லை.." அதிரவைத்த அமைச்சர்களையும் விசாரிக்குமா விசாரணை கமிஷன்?

vikatan

ஜெ.பிரகாஷ்



தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒருவருடத்தைக் கடக்கவிருக்கும் நிலையில், அவரது மரணத்தில் எழும் சர்ச்சைகளும், அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பங்களுமே இன்றைய சமூக வலைதளங்களுக்கும், பத்திரிகை உலகுக்கும் செய்தியாக இருக்கிறது. ஜெ-வின் மரணத்துக்குப் பிறகு தமிழக அரசியலே மாற்றம் கண்டது. அந்த நேரத்தில், அவருடைய மரணம் பற்றி விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால், அவர் நின்ற தொகுதி (ஆர்.கே.நகர்) காலியாக அறிவிக்கப்பட்டு... இடைத்தேர்தல் வந்ததால், அவற்றையெல்லாம் மறந்துபோயினர் நம் அரசியல்வாதிகள். அதற்குப் பின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகத் தகவல் சொல்லப்பட, அந்தத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்திவைத்தது தேர்தல் ஆணையம். இடையில் மீண்டும் அ.தி.மு.க-வில் பல நாடகங்கள் அரங்கேற... திரும்பவும் பூதாகரமாய் வெடித்திருக்கிறது ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விவகாரம். இதையடுத்து, ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாய் அறிவிப்பை வெளியிட்டார்.

இதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், '' 'ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன்' அறிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து தர்மயுத்தத்தை முடித்துக்கொண்டு இரு அணிகளும் இணைந்து, சச்சரவின்றி ஊழல் அத்தியாயத்தைத் தொடங்கப் போடுகிற மோசடித் திட்டம்'' என்று தெரிவித்திருந்தார். அதேபோல் நடிகர் ஆனந்தராஜும், ''இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷன், மக்களுக்கு மிகப்பெரிய கண்துடைப்பாகத்தான் இருக்கும். இதன்மூலம் யாரும் எதையும் புதிதாகத் தெரிந்துகொள்ளப் போவதில்லை. அ.தி.மு.க-வில் இருக்கும் அணிகள் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவே மாறிமாறித் திட்டம் தீட்டுகின்றன. ‘பன்னீர்செல்வம் கேட்டதற்காக விசாரணை கமிஷன் அமைக்கவில்லை’ எனச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து விசாரிக்க நினைத்திருந்தால் அதை முன்பே செய்திருக்க வேண்டும். அதோடு, ஓய்வுபெற்ற நீதிபதியைவைத்து இதை விசாரிப்பதில் என்ன நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. அப்படி விசாரணை அமைக்கப்பட்ட எந்த வழக்குகளும் முடிவுக்கு வந்ததுமில்லை'' என்று தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், ''ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால், அதைச் சந்திக்கத் தயார்'' என்று அப்போலோ மருத்துவமனையின் செயல் தலைவர் பிரதாப் சி.ரெட்டி அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர், ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. எனவே, விசாரணை கமிஷன் அமைத்தால், அதைச் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாகத் தற்போது நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி தற்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வின் நீதித்துறை உறுப்பினராக உள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான விவகாரம் 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தபோது, ''கர்நாடக நீதிமன்ற முடிவுகளில் சென்னை நீதிமன்றம் தலையிட முடியாது'' என்று தீர்ப்பளித்தவரும் ஆறுமுகசாமிதான்.

'கமிஷனின் விசாரணை அறிக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படவேண்டும்' என்று கூறப்பட்டுள்ள நிலையில், அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது அ.தி.மு.க-வினர் பலரும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட்டனர். அந்தச் சமயத்தில், ''அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையில் அம்மாவைப் (ஜெ.வை) பார்தோம்; அம்மா இட்லி சாப்பிட்டாங்க... சட்னி சாப்பிட்டாங்க... நலமாக இருக்காங்க" என்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால், இப்போது ''அம்மாவை (ஜெ-வை) மருத்துவமனையில் நாங்கள் யாரும் பார்க்கவேயில்லை. நாங்கள் சொன்னது பொய். எங்களை மன்னித்துவிடுங்கள்'' என்று பல்டி அடிக்கிறார் அதே அமைச்சர். இதற்கு விடைகொடுக்கும் வகையில், ''நாங்கள் எல்லோருமே பார்த்தோம்'' என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸோ, ''அம்மா, என்னைப் பார்த்து கையசைத்து வாழ்த்தினார்'' என்கிறார்.

''ஜெ-வின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கும் வேளையில், அவர் வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-வும் இப்படி ஆளுக்கொரு கருத்தைச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அரசாங்கம், விசாரணை கமிஷனை அமைத்தபிறகும் இவர்கள் சொல்லும் பலவித கருத்துகளால் மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆக, அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக விசாரணை கமிஷன் கொடுக்கும் அறிக்கை இருக்க வேண்டும். அதில், எம்.எல்.ஏ., அமைச்சர்கள் சொன்ன தகவல்கள் உண்மையா என்று ஆராயப்பட வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கின்றனர் அ.தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள்.

பதில் சொல்லுமா விசாரணை கமிஷன்?
சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா!

சி.ய.ஆனந்தகுமார்
கோ.ராகவேந்திரகுமார்

இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடியிருக்கும் அந்த மைதானத்தில், தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர். அடுத்த நொடி ஒரு பெரியவர், மிக நீளமான சாட்டையை வேகமாக சுழற்றியபடி அந்தப் பெண்கள் மீது வீசினார். ஒரு சில பெண்கள் அந்தச் சாட்டையடியை 3 முறைக்கும் மேல் தாங்கினர். சிலர் ஒரே அடியில் வலிதாங்க முடியாமல், அலறியடித்தபடி ஓடினர். திருச்சி அருகே நடந்த பெண்களுக்கு பேய் விரட்டிய காட்சிதான் அது.




திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள தாத்தையங்கார்பேட்டை அடுத்துள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்குள்ள அச்சப்பன் கோயிலில் நடக்கும் பெண்களுக்கு சாட்டையால் அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நேற்று காலை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோர வீரபத்திரர், மதுரை வீரன், வெடிகாரக்குள்ளன், மகாலட்சுமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று காலை சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றன. தெய்வங்களின் பஞ்சலோக சிலைகள் ஊஞ்சலில் வைக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து சுவாமிகளை வழிப்பட்டனர். பிறகு சுவாமி சிலைகளைப் பல்லக்கில் வைத்து பக்தர்கள் காட்டுக் கோயிலுக்கு சுமந்து சென்றனர். அங்குப் பூசாரிகள் பாரம்பரிய உடை அணிந்து தப்பு அடித்து ஆடினர். பின்னர் கோயில் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்தார்.

அதனைத் தொடர்ந்து பெண்களைச் சாட்டையால் அடித்து பேய்களை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரி கையில் மிக நீளமான சாட்டையை சுழற்ற ஆரம்பித்தார். அருகில் இருந்த பூசாரிகள் மட்டை போன்று நீளமான குச்சியை கையில் வைத்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில், காட்டுக்கோயில் மைதானத்தில் தலைவிரிகோலமாக நீண்ட வரிசையில் மண்டியிட்ட பெண்கள் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்தபடி அமர்ந்தனர்.



அடுத்து அந்தப் பூசாரி, வேகமாகச் சாட்டையை சுழற்றி அடிக்க, ஒரு சில பெண்கள் நான்கு, ஐந்து முறை சாட்டையால் அடி வாங்கினர். சிலர் ஒரு அடியிலேயே பதறியடித்து ஓடினர்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர்,

“ஆயுத பூஜைக்கு அடுத்த நாளான விஜயதசமி அன்று ஆண்டுதோறும் அச்சப்பன் கோயிலில் சாட்டை அடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இங்குச் சாட்டையால் அடிவாங்கினால் திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், வேலைவாய்ப்பு, கல்வியில் சிறந்து விளங்க முடியும், கடன் பிரச்னை அகலும், தொழில் வளர்ச்சி அடைய முடியும், விவசாயம் செழிக்கும், என்ற நம்பிக்கையில் இங்குப் பக்தர்கள் சாட்டையால் அடி வாங்குகின்றனர். இது தவிர பேய் பிடித்தவர்கள், பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாட்டையடி வாங்கினால் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை” என்றார்.

இந்தச் சாட்டை அடி திருவிழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் அமர்ந்து வேண்டுதல் நிறைவேறவும், நிறைவேறிய வேண்டுதலுக்காக நேர்த்திக் கடன் செலுத்தும் வகையிலும் பெண்கள் சாட்டையடி பெற்றனர். திருச்சி, நாமக்கல், துறையூர், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தாத்தாக்கள் ஆளுவதற்கு பேரன்கள் ஓட்டுப்போடுகிறார்கள்.

இளம் வாக்காளர்களை ஆளும் முதிய அரசியல்வாதிகள்..! இது ஜனநாயக முரண்

ஐஷ்வர்யா கே.பாலசுப்பிரமணி




தாத்தாக்கள் ஆளுவதற்கு பேரன்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ஆம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு பக்கம் நாட்டின் 75 சதவிகிதம் பேர் 40 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறை வாக்காளர்கள். இன்னொருபுறம் இந்திய அரசியல்வாதிகளில் 80 சதவிகிதம் பேர் 70 வயதைக் கடந்தவர்கள்.

விடுதலைப்போராட்டம்

இந்தியாவின் அரசியல் எழுச்சியை ரீவைண்ட் செய்து பார்த்தால், அதில் சில சூழல்கள்தான் இளைஞர்களை அரசியலை நோக்கி இழுத்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட கால சூழலில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அரசியலுக்குள் வந்தார்கள். நாடு விடுதலை பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டும் அவர்களிடம் இருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அரசியலுக்குள் அவர்கள் கலந்தார்கள்.

இன்றைக்கு முதிய அரசியல்வாதிகள் என்ற அடைமொழியோடு இருக்கும் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், நல்லகண்ணு போன்றோர் அந்த வரிசையில் இடம்பெறுள்ளவர்கள்.

இளைஞர்களை ஈர்த்த பெரியார்

தமிழகத்தில் தமிழர்களின் இன உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமை பெரியார். பார்ப்பனிய எதிர்ப்பு, தன்மானம், பெண் விடுதலை, பகுத்தறிவு என தமிழர்களிடையே இன மான உணர்ச்சியை தட்டி எழுப்பியவர் பெரியார். அவரின் பின்னால் அப்போது இளைஞர்களாக இருந்த அண்ணா, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் அணிவகுத்தனர்.

பெரியாரின் வழித்தோன்றலாக வந்த அண்ணா இந்தி எதிர்ப்பு எழுச்சியில் இளைஞர்களை ஈர்த்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, இந்தி மொழிக்கு எதிரான எழுச்சியை முன்னெடுத்தவர் அண்ணா. அவரைப் பின்பற்றி அரசியலுக்கு வந்த இளைஞர்கள்தான் இன்றைக்கு தி.மு.க, அ.தி.மு.க-வில் இருக்கும் முதிய அரசியல்வாதிகள். சுதந்திரப் போராட்ட காலத்து அரசியல் சூழலும், இந்தி எதிர்ப்பு அரசியல் சூழலும் இந்தியாவில், தமிழகத்தில் இப்போது இல்லையா.

நேர்மையானவர்கள் வருவதில்லை

இந்தச் சூழல் குறித்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணுவிடம் கேட்டோம். “தனிப்பட்ட முறையில் நான் சிறுவயதிலேயே அரசியலுக்கு வந்தவன். எங்கள் காலத்தில் நாங்கள் அரசியலுக்கு இழுக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. ஆனால், தற்போது அப்படி ஒரு சூழல் இல்லை. மற்றொரு புறம் கட்சிக் களத்தில் பணியாற்றும் இளைஞர்கள் எவ்வித பின்னணியும் நோக்கமும் இல்லாமல் இருக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் ஆபத்து.



இங்கே அரசியல் வேறு மாதிரி இருக்கிறது. நேர்மையானவர்கள் இதற்குள் வருவதில்லை. அரசியலில் காலம் காலமாக இருப்பவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சிக்குப் போட்டி போடுகிறார்கள். அரசியல் என்றால் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பது மட்டுமில்லை. மக்களின் தேவைகளுக்காக உறுதியான காரணங்களுடன் போராடுவதும் அரசியல்தான். ஜல்லிக்கட்டு தடை நீக்கக் கோரி தமிழ் மக்களின் உரிமைக்காக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்று திரண்டார்கள். அது ஒரு மாபெரும் எழுச்சி.நெடுவாசலில் விவசாயத்தைக் காப்பதற்காக களம் இறங்கியிருக்கிறார்கள். எதற்காக குரல்கொடுக்க வேண்டும் என்கிற தெளிவு இளைஞர்களிடம் இருக்கிறது. அது அரசியல் களத்தில் கட்சிப்பணியில் இருந்தபடிதான் செயலாற்ற வேண்டும் என்று இல்லை” என்கிறார்.

அரசியல்தான் மற்ற எல்லாவற்றுக்கும் ஆளுமையாக இருக்கிறது. ஆளுமைகளுக்கு எல்லாம் ஆளுமை என்று சொல்லலாம். அதிக அளவு தந்திரங்கள், எண்ணற்ற சூழ்ச்சிகள், கணக்கில் அடங்கா அவமானங்களைக் கொண்டதுதான் அரசியலாக இருக்கிறது. இது எல்லாவற்றையும் தாண்டி பதவி சுகத்தை அனுபவிப்பதற்குள் அரசியல்வாதிகளுக்கு வயதாகி விடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் கூட பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாகத்தான் இருக்கின்றனர். எம்.எல்.ஏ- பதவிக்காக போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதைத் தாண்டியவர்களாகத்தான் இருக்கின்றனர். லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 60 வயது ஆனவர்களுக்குத்தான் வாய்ப்புகளே கிடைக்கின்றன. இது அரசியல் முதிர்ச்சியாக கருத்தப்படுகிறது. அடிமட்டத் தொண்டனாக இருந்து மக்களைப் புரிந்து கொண்டு லோக்சபா வரை செல்வதற்கு அரசியல் அனுபவம் தேவைப்படுகிறது என்கின்றனர். மற்ற துறைகளைப் போலவே சம்பளமும், பதவியும் உடனே கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பும் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் அது சாத்தியம் இல்லை.

2021-ல் இளைஞர்கள் இறங்குவார்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் யுவராஜிடம் பேசினோம். "தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் 

இருக்கும் திராவிடக் கட்சிகள் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அளிக்கவில்லை. தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இளைய தலைமுறையினர்களை சிந்திக்கவிடவில்லை. மற்ற மாநிலங்களைப் போல அவ்வளவு எளிதாக மக்களால் தலைவர்களைச் சந்திக்கவும் முடியாது. அதனாலேயே இளைஞர்களுக்கும் அரசியலைப் பற்றி ஒரு தெளிவான சிந்தனை இல்லாமல் இருந்தது. அந்த சூழல் இப்போது முற்றிலுமாக மாறி வருகிறது. இளைஞர்கள் அரசியல் பற்றி நிறையப் பேசுகிறார்கள். தங்கள் தலைவர்களிடம் நேரடியாகச் சொல்ல முடியாததை சமூக வலைதளங்களின் வழியாகச் சொல்லும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. தற்போது இல்லையென்றாலும் 2021 தேர்தலில் முழுக்க முழுக்க இளைஞர்களின் பங்கு நிச்சயம் இருக்கும். இளைஞர்களுக்கான தேவைகள் மற்றும் சிந்தனைகளுடன் அந்த தேர்தல் அமையும். அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன" என்கிறார்.

எவ்வளவு செலவழிக்க முடியும்?

இளைஞர்கள் அரசியலுக்கு வரத் தயங்குவதற்கு பொருளாதாரச் சூழலும் ஒரு காரணியாக இருக்கிறது என்கிறார் எழுத்தாளர் சரவணன்

சந்திரன், “வயதானவர்களுக்குத்தான் அரசியல் என்ற புரிதல் இன்றும் இருக்கிறது. இரண்டாவது முக்கியப் பிரச்னை இளைஞர்களின் பொருளாதாரப் பிரச்னை. தனது குடும்பத்திற்கான எந்தவிதப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் வயதானவர்கள் நிறைந்துள்ள ஒரு துறையில் இளைஞர்களால் கால்பதிக்க முடியாது. பொருளாதாரப் பின்புலம் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கட்சிகள் அதற்கான இடத்தை அளிப்பதில்லை. தற்போது தமிழகத்தில் இருக்கும் கட்சிகள் தங்கள் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்பளிப்போம் என்று இப்போதுதான் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கட்சியின் செல்வாக்குள்ள எம்.எல்.ஏ-க்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் தொகுதிகளில் நிலச்சுவாந்தார்கள் போலதான் செயல்பட்டுவருகிறார்கள். அவர்களை மீறி எந்தச் செயலும் மக்களால் செய்ய இயலவில்லை என்பதே நிதர்சனம்.

இப்படி அரசியலில் சேரமுடியாதவர்கள் ரசிகர் மன்றங்களில் இணைகிறார்கள், ரசிகர் மன்றங்கள் தேவை இல்லை என்பவர்கள் அதிலிருந்து வெளியேறுகிறார்கள் ஆனால் அவர்களுக்கு தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் இடம் தராதபோது சிறுகட்சிகளில் இணைகிறார்கள். மாநிலத்தில் கட்சிகள் தங்களிடம் இணைபவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, “உங்களால் எவ்வளவு செலவழிக்க முடியும்?” என்பதே. ஆனால் எந்த இளைஞனிடம் கோடிக் கணக்கில் பனம் இருக்கிறது. அதனால் அவர்களும் இடம் தரமாட்டார்கள், இவர்களும் வரமாட்டார்கள்" என்கிறார்.

ஒருங்கிணைக்கும் தலைவர் இல்லை

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கடந்த பின்னர், காங்கிரஸ் ஆட்சிகாலங்களில் ஊழல் மலிந்து விட்டது என்ற பரவலான குற்றசாட்டு எல்லா மட்டத்திலும் இருந்து வந்தது. இதை அறுவடை செய்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநிலத்தின் முதல்வர் வரை உயரமுடிந்தது ஜனநாயகத்தின் ஆச்சர்யங்களில் முதன்மையானது. ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சுதா என்ன சொல்கிறார்?

"சுதந்திரப் போராட்டம் போலவோ, இந்தி எதிர்ப்புப் போலவோ, ஊழல் எதிர்ப்பு போன்ற ஒரு சூழல் தமிழகத்தில் இப்போது இல்லை

இப்போது தமிழகத்தில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், தாமிரபரணிக்காக நடக்கும் போராட்டம், மீனவர்கள் போராட்டம் இவைகளில் எல்லாம் இளைஞர்கள் பெரும் அளவில் பங்கேற்கின்றனர். இனிமேல் அதுபோன்ற போராட்டங்கள் தொடரும் என்றே கருதுகின்றேன். ஆனால், இளைஞர்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு தலைமை தமிழகத்தில் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் கட்சிகளில் 50 சதவிகிதம் அளவுக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் ஊடகங்கள் வாயிலாக அரசியல் ரீதியான விழிப்புஉணர்வு ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்கள், இரண்டு முறைகளுக்கு மேல் அந்தப் பதவியில் வகிக்க முடியாது. ஆனால், இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ச்சியாக ஒருவரே முதல்வராக இருந்திருக்கிறார்கள். இருந்து வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதிய தலைவராக இருந்து மறைந்த ஜோதிபாசு மேற்கு வங்கத்தில் 23 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி 19 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 16-வது ஆண்டாக முதல்வராக இருக்கிறார். டெல்லியில் ஷீலா தீட்சித் 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்திருக்கிறார், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா 15 ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறார்.

கட்சித் தலைவர்களை எடுத்துக் கொண்டால், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா 60 வயதானவர். தி.மு.க தலைவர் கருணாநிதி 92 வயதானவர். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 64 வயதானவர். ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ 72 வயதானவர்தான். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் 64 வயதானவர். இப்படி தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே 60 வயதைக் கடந்தவர்கள்.

வயது நிர்ணயம் தேவை

இளைஞர்களின் அரசியல் எண்ணத்தில் சலிப்பு ஏற்படுவதற்கு காரணம் இதுதான். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருக்கிறது. ஆனால், அரசியல்வாதிகளின் ஓய்வு என்பது அவர்களாக பார்த்து அரசியலில் இருந்து விலகுவது அல்லது அவர்கள் உயிரோடு இருக்கும் வரை தொடர்கிறது. அரசியலிலும் இது போன்று வயது நிர்ணயிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக எழத்தான் செய்கிறது. இது குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால் சாமியிடம் கேட்டோம். "இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதை மறுக்க முடியாது. அரசியல் குறித்த புரிதல் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசியல்வாதிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு வயது நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது வரவேற்க தகுந்த ஒன்று" என்றார்.



சுயநல அரசியல்

டிஜிட்டல் உலகை சிருஷ்டிக்கும் பல கோடி ரூபாய்கள் வர்த்தகம் செய்யும் ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர்களின் வயது 30-க்குள் இருக்கிறது. இந்தியாவில் சிறந்த சி.இ.ஓ-க்கள் பட்டியலில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். ஃபேஸ்புக், வாட்ஸ் அப்-களில் அரசியல்வாதிகளை இளைஞர்கள் பகடி செய்கிறார்கள். மோடியின் மதவாதத்தை கிழிக்கிறார்கள், கருணாநிதியின் குடும்ப அரசியலை போட்டுத்தாக்குகிறார்கள். காங்கிரஸ் ஊழலை கலாய்கிறார்கள். ஆனால், அவர்கள் கள அரசியலில் இறங்க தயங்குகிறார்களா? அரசியல்வாதிகளிடம் இருந்து இளைஞர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவி நல்லிசை அமிழ்துவிடம் கேட்டோம். " தமிழகத்தின் முதிய அரசியல்வாதியான நல்லகண்ணுவை ஒதுக்கி விட முடியாது. ஆனால், அதே நேரத்தில் இன்றைக்கு புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தீபாவையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரைக்கும் இளைஞர்கள் ஒருவித தயக்கம் காரணமாக அரசியலில் பங்கேற்காமல் இருந்திருக்கின்றனர். இப்போது அதற்கான முன்னேற்புகள் இருப்பதாகக் கருதுகிறேன். காலம், காலமாக அரசியல்வாதிகளாக இருப்பவர்கள், தங்களுக்கு எது நல்லதோ அதைத்தான் செய்கிறார்கள். அதை விடுத்து மக்களுக்கு என்ன நன்மையோ அதைச் செய்பவராக இருக்கவேண்டும். பொதுநலமாக பேசும் அரசியல்வாதிகள் சுயநலமாகத்தான் செயல்படுகின்றனர்" என்கிறார்.

தீர்மானிப்பது யார்?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை எழும்பூர் கவின் கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கே.நவ்சாத். அவர் என்ன சொல்கிறார். "இளைஞர்கள் விரும்பக் கூடிய சூழலாக அரசியல் இல்லை. படிப்பு, வேலை என்று ஏற்கனவே திட்டமிடப்பட்ட பாதையில்தான் இளைஞர்கள் செல்கின்றனர். இந்தப் பாதையைக் கூட ஒரு இளைஞனின் பெற்றோரோ அல்லது சமூகமோதான் தீர்மானிக்கிறது. பிறரால் திட்டமிடப்பட்ட பாதையில்தான் நாங்கள் செல்கிறோம். சினிமா, கிரிக்கெட் போல ஒரு டாபிக் ஆகத்தான் அரசியலைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அரசியல் படிப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இத்தனை லட்சம் இளைஞர்கள் பங்கேற்றது என்பதே ஆச்சர்யமான விஷயம்தான். வாழ்வியல், கலாசாரம் சார்ந்தது என்பதால் பங்கேற்றனர் என்று வேண்டுமானால் சொல்லலாம். இளைஞர்களை ஒருங்கிணைத்து அரசியல் முன்னெடுக்கப்பட்டால், குறைந்த அளவில்தான் இளைஞர்கள் முன்வருவார்கள் என்று கருதுகின்றேன்" என்றார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற இன்னொரு இளைஞர் சக்திவேல், "தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கூறுவதற்கே தயக்கமாக இருக்கிறது. அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் பரவாயில்லை என்ற மனநிலை இருக்கிறது. அதற்காக அவரை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தம் இல்லை. புதிதாக ஒரு கட்சி, இளைஞர்களுக்கான கட்சி வராதா என்று என்னைப் போன்ற இளைஞர்களிடம் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது" என்கிறார்.

தமிழகத்துக்குத் தலைமையேற்கப்போகும் இளம் தலைவர் யார் என்று தொலைகாட்சிகளில் ஒரு தேடல் வைத்தாலாவது இளம் தலைவர் கிடைப்பாரா?

NewsToday 18.10.2024