Sunday, October 22, 2017

பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினருக்கு எதிராக வழக்கு


சென்னை:இந்திய பல் மருத்துவ கவுன்சிலின், தமிழக உறுப்பினராக, டாக்டர் பாலாஜி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல் மருத்துவ கவுன்சிலில், அனைத்து மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளும், உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கவுன்சிலில், தமிழக பிரதிநிதி பதவி காலியாக இருந்ததால், சென்னையைச் சேர்ந்த, பாலாஜி பல் மருத்துவமனையின் இயக்குனர், டாக்டர் பாலாஜி, புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, தமிழக சுகாதார துறை, ௨௦௧௭, செப்டம்பரில் பிறப்பித்தது.
டாக்டர் பாலாஜியின் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல் மருத்துவர் துக்காராம் என்பவர், மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், 'டாக்டர் பாலாஜிக்கு எதிரான குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது; மற்ற டாக்டர்களுக்கு எதிராக, அவதுாறு பரப்பி உள்ளார். அவரை நியமித்த உத்தரவை, ரத்து செய்ய
வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, சுகாதார துறை செயலர், பல் மருத்துவ கவுன்சிலுக்கு,
டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
முதுகலை மருத்துவ விடைத்தாள்கள் மீண்டும் திருத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை:முதுகலை மருத்துவ மாணவர்களின் விடைத்தாள்களை, மீண்டும் மதிப்பீடு செய்ய, புதுச்சேரி பல்கலைக்கு அனுப்பும்படி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த, டாக்டர் பாலமுருகன் தாக்கல் செய்த மனு:முதுகலை மருத்துவ படிப்பில் சேர்ந்து, ௨௦௧௭ மே மாதத்தில், இறுதி ஆண்டு தேர்வு எழுதினேன். நான் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வை நன்றாக எழுதியிருந்தேன்; விடைத்தாள்களின் நகல்களை 
பெற்றேன்.

மீறியுள்ளது

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, முதுகலை மருத்துவ கல்வியில், விடைத்தாள்களை நான்கு மதிப்பீட்டாளர்கள் திருத்த வேண்டும். இந்த நடைமுறையை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மீறியுள்ளது.குறைந்தபட்ச மதிப்பெண்களை, அனைத்து பாடங்களிலும் பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, ௫௦ சதவீதத்துக்கு குறைவாக பெற்றுள்ளேன்.

'தியரி பேப்பர்'களை, இரண்டாவது, மூன்றாவது முறையாக, மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது, மூன்றாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பின்பற்றும் நடைமுறை, குழப்பத்துக்கு வழி வகுக்கிறது.

அதனால், 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெறாத மாணவர்களுக்கு, இரண்டாவது, மூன்றாவது மதிப்பீட்டு முறை மறுக்கப்படுகிறது. மருத்துவ கவுன்சில் நிர்ணயித்தபடி, இரண்டாவது, மூன்றாவது முறை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால், சரியான தகுதியை பெற்றிருக்க முடியும்; தேர்ச்சியும் பெற்றிருக்க முடியும்.எனவே, என் விடைத்தாள்களை, இரண்டாவது, மூன்றாவது முறையாக மதிப்பீடு செய்யும்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று, மேலும் நான்கு முதுகலை மருத்துவ மாணவர்கள், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜரானார்.

தள்ளிவைப்பு

நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்களின் அசல் விடைத்தாள்களை, 'கோடிங் ஷீட்' இல்லாமல், புதுச்சேரி பல்கலைக்கு அனுப்ப, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த விடைத்தாள்களை திருத்த, மதிப்பீட்டாளரை, புதுச்சேரி பல்லை நியமிக்க வேண்டும்.அவர், ௨௨ம் தேதிக்குள், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து முடிக்க வேண்டும். இவ்வழக்கில், புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் சேர்க்கப்படுகிறார். விசாரணை, நாளைக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விமானத்தில் தீப்பற்றி எரிந்த மொபைல் போன்


புதுடில்லி:டில்லி - இந்துார் இடையிலான, 'ஜெட் ஏர்வேஸ்' தனியார் விமானத்தில், பயணி ஒருவரது மொபைல் போன், திடீரென தீப்பற்றி எரிந்தது.

டில்லியிலிருந்து, ம.பி., மாநிலம், இந்துாருக்கு, நேற்று முன்தினம் இரவு, ஜெட் ஏர்வேஸ் தனியார் விமானம், 120 பயணியருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, பயணி ஒருவரது மொபைல் போன், திடீரென, தீப்பற்றி எ ரியத் துவங்கியது. இதனால், பயணியர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் காணப்பட்டது.இதையடுத்து, விமானத்தில் இருந்த, தீயணைக்கும் கருவியை இயக்கியபோது, அது, வேலை செய்யவில்லை. இதனால், ஒரு டிரேயில், தண்ணீரை கொட்டி, அதில், மொபைல் போனை போட்டு, தீ அணைக்கப்பட்டது.

சிறிது நேரத்தில், அந்த விமானம், பத்திரமாக, இந்துாரில் தரை இறங்கியது. விமானத்தில் இருந்த தீயணைக்கும் கருவி, வேலை செய்யாதது குறித்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிராக புகார் அளிக்கப் போவதாக, பயணியர் தெரிவித்தனர்.
சிக்னலை தாண்டி சென்ற ரயிலை பின்னோக்கி நகர்த்திய ஊழியர்கள்

மும்பை:மஹாராஷ்டிராவில், குறிப்பிட்ட எல்லையை தாண்டி சென்று நின்ற ரயிலை, 40 ஊழியர்கள் சேர்ந்து பின்னோக்கி தள்ளி, சரியான இடத்தில் நிற்க வைத்த சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இரு தினங்களுக்கு முன், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்துக்கு, 16 பெட்டிகளுடன், மும்பை - லக்னோ சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில், சிவப்பு சிக்னலை தாண்டி சென்று நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, மும்பை மண்டல ரயில்வே மேலாளர் முகுல் ஜெயின் கூறியதாவது:சிவப்பு சிக்னலை கவனிக்காமல், ரயிலை ஓட்டிச் சென்ற ஓட்டுனர், தனக்கு முன், ரயில் பாதையில் தண்டவாளம் இல்லாததை கவனித்ததும், ரயிலை நிறுத்தினார்.

அதற்குள், ரயிலின் கடைசி பெட்டி, நடைமேடையை கடந்துவிட்டது. அந்த வழித்தடத்தில் இருந்து, விரைவு வழித்தடத்திற்கு மாறுவதற்கு, தண்டவாளம் இல்லாததால், ரயிலை பின்னோக்கி நகர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. ரயில் இன்ஜினின், பின்னோக்கி நகர்த்தும் திறன் குறைவாக இருந்ததால், மணிக்கு, ஐந்து, கி.மீ., வேகத்தில் ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டது. அத்துடன், 40 ரயில்வே ஊழியர்களும் இணைந்து, ரயில் பெட்டிகளை பின்னோக்கி தள்ளி, நடைமேடை பகுதிக்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில், சிக்னலை மதிக்காமல் சென்ற ரயில் ஓட்டுனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


'ஸ்மார்ட்' கார்டு பெறாமல் அலட்சியம் 20 லட்சம் பேருக்கு ரேஷன், 'கட்'

'ஸ்மார்ட்' கார்டுக்கு, சரியான விபரம் தராமல் அலட்சியமாக உள்ள, 20 லட்சம் பேருக்கு, ரேஷன் பொருட்களை நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது.



தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இவற்றை பெற, ரேஷன் கார்டு அவசியம். காகித வடிவிலான ரேஷன் கார்டுக்கு பதில், ஏப்., முதல், கையடக்க வடிவில், பிளாஸ்டிக், 'ஸ்மார்ட்' கார்டு வழங்கப் படுகிறது. அதற்கு, உணவு துறை, பல முறை வலியுறுத்தியும், பலர் சரியான விபரங்கள் தராமல் உள்ளனர்.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்மார்ட் கார்டு

பணி தாமதமாகும் என்பதால், 2016 இறுதியில், ஏற்கனவே இருந்த பழைய கார்டின் ஆயுள் காலத்தை, 2017 டிச., வரை நீட்டித்து, உள் தாள் ஒட்டப்பட்டது. ஸ்மார்ட் கார்டு தர, மக்களிடம் இருந்து வாங்கிய, 'ஆதார்' அட்டையில், புகைப்படம், பெயர் விபரங்கள் சரியாக இல்லை. அவற்றை சரியாக தரும்படி,தொடர்ந்து கேட்க பட்டு வருகிறது. ஆனால், பலரும் அலட்சியமாக உள்ளனர்.

தற்போது, ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களுக்கு, அதன் அடிப்படையிலும், வாங்காதவர்களுக்கு, பழைய கார்டின் அடிப்படையிலும் பொருட்கள் வழங்கப்படுகின்றன. பழைய கார்டின் செல்லத்தக்க காலம், டிசம்பருடன் முடிகிறது. இதுவரை, 1.70 கோடி ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், 23 லட்சம் கார்டுதாரர்கள், சரியான விபரங்கள் தராததால், அவர்களின் கார்டுகள் அச்சிடப்படவில்லை. அதில், 20 லட்சம் பேர், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இந்த, 20 லட்சம் நபர்கள், மற்ற மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வேலைக்காக வந்தவர்கள். அவர்கள், சென்னையிலும், சொந்த ஊரிலும், தனித்தனி

ரேஷன் கார்டு வாங்கி உள்ளனர். ஆதார் விபரம் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு தருவதால், அவர்கள் அதை, சொந்த ஊரில் வாங்கி விட்ட னர். தற்போதைய கெடுபிடிகளால், சென்னை யில், இரண்டாவது கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருப்பதாக தெரிகிறது.டிச., மாதத்திற்கு பின், உள்தாள் ஒட்டப்படாது.

இதனால், ஸ்மார்ட் கார்டு வாங்கியவர்களுக்கு தான் பொருட்கள் கிடைக்கும். எனவே, இது வரை, சரியான விபரங்களை தராதவர்களுக் கும், ஸ்மார்ட் கார்டு வாங்காதவர்களுக்கும், ஜனவரி முதல் ரேஷன் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
மாணவர்களின் வயது சிக்கலுக்கு தீர்வு சி.பி.எஸ்.இ., அறிவிப்பால் உற்சாகம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் மாணவர் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பொறுத்தவரை, பல ஆண்டுகளாக வயது குழப்பம் நிலவுகிறது. 
பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் போது, சம்பந்தப்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இடம் கொடுக்க விருப்பம் இல்லாவிட்டால், வயதை காரணம் காட்டி, மாணவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது வழக்கமாக உள்ளது.

திருப்பி அனுப்பும்

நான்கரை வயது அல்லது ஐந்து வயது முடியும் முன், சி.பி.எஸ்.இ., பள்ளியில், 1ம் வகுப்பில் சேர மாணவர் சென்றால், 'மார்ச், 31ல், ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும்' என, அட்மிஷன் வழங்காமல், மாணவர்களை பள்ளிகள் திருப்பிஅனுப்பும். ஆனால், தமிழக பாடத்திட்ட மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வயது வரம்பு பிரச்னைக்கு, சி.பி.எஸ்.இ., தீர்வை அறிவித்துள்ளது.'பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் வயது பற்றி குழப்ப வேண்டாம்; பள்ளிகள் எந்த மாநிலத்தில் செயல்படுகின்றதோ, அந்த மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றலாம்' என, தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ்2 படிக்கும் மாணவர்கள், பொது தேர்வு எழுதுவதற்கான, ஆன் - லைன் பதிவுக்கான, சி.பி.எஸ்.இ., சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளில், இது, தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

தேர்வு எழுத வாய்ப்பு

இதன்படி, தமிழகத்தில், ஜூலை,31ல், 14வயது முடிந்தோர், 10ம் வகுப்பு தேர்வையும்; 16 வயது முடிந்தோர்,பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம். இந்த வயதையும் விட குறைவாக இருந்தால், மருத்துவ தகுதி சான்றிதழ் வாங்கி கொடுத்தால், தேர்வை எழுத வாய்ப்பு உள்ளது.அதே போல், ஜூலை, 31ல், நான்கு வயது முடிந்தோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர முடியும். எனவே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வயது பிரச்னையில் தவிக்கும் மாணவர்களுக்கு உற்சாகமான தீர்வு கிடைத்து உள்ளது.
பயணியருக்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை:'போலி முகவர்களிடம் ரயில் டிக்கெட் வாங்காதீர்' என, தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.தீபாவளி மற்றும் விசேஷ நாட்களையொட்டி, ரயிலில் டிக்கெட் கிடைக்காத பயணியர், போலி முகவர்களிடம், டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால், ரயில்களில், விஜிலென்ஸ் சோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது.'போலி முகவர்களிடம் டிக்கெட் வாங்கி, ரயிலில் பயணம் செய்தால்,விஜிலென்ஸ் சோதனையில் சிக்கி, அபராதம் செலுத்த நேரிடும்' என, தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.


எம்.டி., சித்தா படிப்பு தரவரிசை வெளியீடு


சென்னை:முதுநிலை, எம்.டி., சித்த மருத்துவப் படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுஉள்ளது.சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள, சித்த மருத்துவக் கல்லுாரிகளில், 2017 -- 18ல், மூன்றாண்டு, எம்.டி., சித்தா படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பித்தோரில், 194 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணையதளத்தில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு உள்ளது. 'மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'ஆதார்' எண் கட்டாயம் சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் ௨ பொதுத் தேர்வு எழுத, 'ஆதார்' எண் கட்டாயம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பள்ளி அளவிலான தேர்வு ரத்து செய்யப்பட்டு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில், ௧௦ மற்றும் பிளஸ் ௨ வகுப்புகளில், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, 'ஆன் - லைனில்' பதிவு செய்யும்படி, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.
மிக முக்கியமாக, மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். ஆதார் இல்லாவிட்டால், ஆதார் எடுப்பதற்கான பதிவு எண் குறிப்பிட வேண்டும்; அதுவும் இல்லாவிட்டால், அவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்து, சுய உறுதிமொழி படிவம் பெற வேண்டும் என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.

- நமது நிருபர் -
ஒரு மாதத்திற்குள் 1,044 டாக்டர்கள் நியமிக்கப்படுவர்: விஜயபாஸ்கர்

திருவண்ணாமலை:''தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், ஒரு மாதத்திற்குள், 1,044 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், டெங்கு ஒழிப்பு பணி குறித்து, நேற்று முன்தினம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், காலி பணியிடங்கள், தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. எம்.பி.பி.எஸ்., படித்த, 300 டாக்டர்கள், 744 எம்.டி., - எம்.எஸ்., போன்ற முதுநிலை சிறப்பு டாக்டர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. ஒரு மாதத்திற்குள், 1,044 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாமல், தமிழகத்தில் மட்டும், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்படுகின்றனர். 
அதன்படி, தமிழகத்தில் இந்த தேர்வு வாரியம் மூலம், இதுவரை, 23 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

சித்த மருத்துவர்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. தேர்வு பெற்ற சித்த மருத்துவர்கள், 
விரைவில் பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

வரவிருக்கும் விசேஷங்கள்


  • அக்டோபர் 25 (பு) சூரசம்ஹாரம்
  • நவம்பர் 04 (ச) குருநானக் ஜெயந்தி
  • டிசம்பர் 01 (வெ) மிலாடி நபி
  • டிசம்பர் 02 (ச) திருக்கார்த்திகை
  • டிசம்பர் 17 (ஞா) அனுமன் ஜெயந்தி
  • டிசம்பர் 25 (தி) கிறிஸ்துமஸ்
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி விளக்கம்


spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்
புதுடில்லி: பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்குபவர்களும், டிச.,31க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக மீடியாக்களில் தகவல் வெளியானது.
உடனடியாக:

இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 
அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமில்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், 2017 ஜூன் 1ல் அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், யார் யாருக்கெல்லாம் பொருந்துமோ அவர்களது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகும். இனியும், வங்கிகள் காத்திருக்காமல், ஆதார் இணைப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி


 'ஆதார்,கட்டாயமில்லை', ஜார்க்கண்ட் அரசு, அதிரடி
ஜாம்ஷெட்பூர்:'ரேஷன் கடைகளில், உணவு தானியங்களை பெற, ஆதார் கட்டாயமில்லை' என, ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜார்க்கண்டில், முதல்வர், ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, பட்டினியால் பலியானதாக தகவல் பரவியது. அரசு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமி, மலேரியாவால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.ஆனால், 'ஆதார் எண் இணைப்பில் தாமதம் ஏற்பட்டதால், ரேஷன் கடையில் பொருட்கள் கிடைக்காததே, சிறுமியின் பட்டினி சாவுக்கு காரணம்' என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், 'ஜார்க்கண்ட் மாநிலத்தில், ரேஷன் கடைகளில், உணவு தானியங்களை பெற, குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது, கட்டாயமில்லை' என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.உணவுத் துறை அமைச்சர், சர்யு ராய் கூறுகையில், ''ஆதாருக்கு பதில், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை, ரேஷன் கடைகளில் பதிவு செய்து, உணவு தானியங்களை பெற்றுக் கொள்ளலாம்,'' என, தெரிவித்துள்ளார்.

Saturday, October 21, 2017

Rajasthan passes ordinance seeking to protect judges, babus from judicial probe


By PTI  |   Published: 20th October 2017 09:19 PM  |  

Rajasthan Chief Minsiter Vasundhara Raje | File Photo
JAIPUR: The Vasundhara Raje government has passed an ordinance which seeks to protect both serving and former judges, magistrates and public servants in Rajasthan from being investigated for on-duty action without its prior sanction.
The Criminal Laws (Rajasthan Amendment) Ordinance, 2017, promulgated on September 7, also seeks to bar the media from reporting on accusations till the sanction to proceed with the probe is obtained.
"No magistrate shall order an investigation nor will any investigation be conducted against a person, who is or was a judge or a magistrate or a public servant," reads the ordinance which provides 180 days immunity to the officers.
If there is no decision on the sanction request post the stipulated time period, it will automatically mean that sanction has been granted.
The ordinance amends the Criminal Code of Procedure, 1973 and also seeks to curb on publishing and printing or publicising, in any case, the name, address, photograph, family details of the public servants.
Violating the clause would call for two years imprisonment.

காதலரின் நண்பர்களுடன் நட்பு நல்லதா?

Published : 20 Oct 2017 11:23 IST

யாழினி

ங்கள் காதலரின் நண்பர் உங்களுக்கும் நண்பரா? அப்படியானால், உங்கள் காதலரின் நண்பர்களுடன் பழகுவதில் எந்த அளவுக்குக் கவனமாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அது உங்களுக்கும் உங்கள் காதலருக்குமான உறவை மேம்படுத்தும். காதலரின் நட்புவட்டத்துடன் பழகுவதற்குச் சில வழிமுறைகள்:

சகஜமான பழக்கம்

ஒருவேளை, நீங்கள் சோஷியலாக இருப்பதை விரும்பாத நபர் என்றால், உங்கள் காதலரின் நண்பர்களைச் சந்திக்கும் நிகழ்வு நிச்சயம் கடினம்தான். இதுவே நீங்கள் ‘எக்ஸ்ட்ரோவேர்ட்’ நபர் என்றால் இந்தச் சந்திப்பு எளிதானதாக இருக்கும். முதல் சந்திப்பைக் கடந்துவிட்டால், உங்கள் காதலரின் நட்பு வட்டத்தைப் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். அதன் பிறகு நடக்கும் சந்திப்புகள் அவர்களை உங்கள் நண்பர்களாகவும் மாற்றிவிடவும் வாய்ப்பு உண்டு.

வாங்க பழகலாம்

மற்ற உறவுகளைவிட நட்பு நீண்ட காலத்தைக் கொண்டது. உங்கள் காதலருக்கு அவருடைய நண்பர்களை நீண்ட காலமாகத் தெரிந்திருக்கலாம். உங்கள் காதலர் உண்மையிலேயே உங்களைப் பற்றி சீரியஸாக இருக்கிறார் என்றால், முதலில் உங்களை அவருடைய நட்பு வட்டத்தில்தான் அறிமுகப்படுத்துவார். இந்த அறிமுகம்தான் உங்கள் உறவுக்கான நீண்ட கால அடித்தளத்தை அமைப்பதற்கான அறிகுறி. இதை மனதில்கொண்டு, அவருடைய நண்பர்களை உங்கள் நண்பர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்.

நாட்டாமை வேண்டாம்

நண்பர்கள் எப்படியிருந்தாலும் நண்பர்கள்தான். உங்கள் காதலரிடம் அவருடைய நண்பர்களின் நடவடிக்கைகளைப் பற்றித் தொடர்ந்து குறை சொல்லாதீர்கள். அது நிச்சயம் உங்கள் உறவிலும் பிரதிபலிக்கும். அவருடைய நண்பர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது வித்தியாசத்தை கண்டாலோ தவறாகத் தோன்றினாலோ உடனடியாக அதை உங்கள் காதலரிடம் சொல்ல வேண்டாம். சில வாரங்கள் காத்திருங்கள். ஏனென்றால், நீங்கள் அவசரப்பட்டுக்கூட அவருடைய நட்பு வட்டத்தைப் பற்றிய தவறான முடிவுக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. காதலருடைய நட்புவட்டம் பற்றிய சிக்கல் தொடர்ந்து உங்களுக்கு இருந்தால், அதை உங்கள் காதலரிடம் மனம்விட்டுப் பேசலாம். அது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.

நட்புக்கும் எல்லை

உங்கள் காதலரின் நட்புவட்டம் உங்களுக்கும் உங்கள் காதலருக்குமான ‘குவாலிட்டி டைம்’மை முற்றிலும் எடுத்துக்கொள்கிறதா? அப்படியானால், அடிக்கடி நட்பு சந்திப்புகளை தவிர்க்கலாம். ஆனால், அதேநேரம் உங்கள் காதலரை அவருடைய நண்பர்களைச் சந்திக்கவே கூடாது என்று கட்டுப்பாடெல்லாம் விதிக்காதீர்கள். இந்த நட்பு சந்திப்புகள் உங்கள் காதலரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவும் என்பதையும் மறக்க வேண்டாம்.
ஒருவேளை, உங்களால் உங்கள் காதலரின் நட்பு வட்டத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், அதைப் பற்றி உங்கள் காதலரிடம் தெளிவாகப் பேசிவிடுங்கள். அவர்களுடனான சந்திப்புகளையும் குறைத்துக்கொள்ளலாம். ஆனால், உங்கள் காதலரைப் பற்றித் தெரிந்துகொள்ள அவருடைய நண்பர்களைவிட வேறு யாரும் உங்களுக்குப் பெரிதாக உதவ முடியாது. அதனால், அவர்களுடன் நட்பு பாராட்ட உங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்யுங்கள்.

மெர்சலில் மோடி வெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் உள்ளன: எச்.ராஜா

Published : 20 Oct 2017 16:16 IST




நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள 'மெர்சல்' படத்தில் பொய்களின் அடிப்படையில், வெறும் மோடி வெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளிவந்த 'மெர்சல்' திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா ஆகியவற்றை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


இதற்கு தமிழக பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய அரசின் திட்டங்களை குறை சொல்ல நடிகர் விஜய்க்கு தகுதி இல்லை என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

மேலும் பாஜக எம்.பி., இல.கணேசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மெர்சலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தை விமர்சித்து எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன் விவரம், "மெர்சல் படத்தில் பொய்களின் அடிப்படையில் வெறும் மோடி வெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையின் அடிப்படையில் விமர்சனங்கள் இருந்தால் அதை பாஜக வரவேற்கும். ஆனால் மோடிக்கு எதிராக ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கும் திட்டமிட்ட சதியாக காட்சிகள் அமைந்துள்ளன. இது ஏற்புடையதல்ல.

முதலில் ஜிஎஸ்டி புதிய வரி அல்ல. மேலும் அடிப்படை தேவைக்கானப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிங்கப்பூரில் 7% ஜிஎஸ்டி இருக்கும் போது மருத்துவம் இலவசம் என்று பொய் பேசியுள்ளார்.

அடுத்து சாராயத்திற்கு வரியில்லை என்கிறார். தமிழகத்தில் சாராயத்திற்கு 250% வரை வரி விதிக்கப்படுகிறது.

எனவே விஜய்யின் வசனங்கள் பிரதமர் மோடியை குறிவைத்து திட்டமிட்ட ரீதியில் அவதூறு பரப்பும் செயலே ஆகும்.

ஸ்டார் டிவியில் தீபாவளிப் பண்டிகை அவசியமா, ஆடம்பரமா என்று பட்டிமன்றம் நடத்தியதையும் விஜய் கோயில் கட்டாமல் மருத்துவமனை கட்டலாம் என்று வசனம் பேசியதையும் தனித்தனியாக பார்க்க முடியாது.

கடந்த 20 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ள சர்ச்சுகள் 17500, மசூதிகள் 9700, இந்து கோவில்கள் 370. சர்ச்சுகள் கட்டாமல் மருத்துவமனை கட்டலாம் என்று ஏன் வசனம் இல்லை.


ஹெச். ராஜா பதிவிட்டுள்ள பதிவு

இந்துக்களை தங்களின் இலக்காக்கித் தாக்குகின்றவர்கள் பல உருவில் வருகின்றனர் என்பதையே இச்சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்ப்புத் தீயில் பிறந்த அரசியல் தலைவர் மோடி. நெருப்பில் பூத்த மலர் தாமரை. இந்த பூச்சாண்டி எங்களை மெர்சலாக்காது" என்று கூறியுள்ளார்.


'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை  எழுந்து நின்று வரவேற்கணும்'

லக்னோ: 'அரசு அலுவலகங்களுக்கு வரும், அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்க வேண்டும். அதேபோல், அவர்கள் திரும்பும் போதும் இந்த மரியாதையை அளிக்க வேண்டும்' என, உத்தர பிரதேச அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. அரசு அதிகாரிகளுக்கு, மாநிலத் தலைமை செயலர், சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் போது, அவர்களை எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்க வேண்டும். அவர்கள் திரும்பிச் செல்லும் போதும், இந்த மரியாதையை அளிக்க வேண்டும்.

மக்கள் பிரச்னை தொடர்பாக அவர்கள்கேட்கும் விபரங்களை உடனடியாக தர வேண்டும். அவர்கள் குறிப்பிடும் பணிகளை முன்னுரிமை அடிப்படை யில் நிறைவேற்ற வேண்டும்.

தங்களால் செய்ய முடியாத பணிகள் குறித்து, தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும். மரியாதை

அளிக்கும் இந்த மரபு குறித்து பலமுறை குறிப்பிட்டும், சில அதிகாரிகள் அவமரியாதை செய்வதாக புகார் கள் வந்துள்ளன.இந்த மரபுகளை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பார்த்து எடுத்த படிப்பு: படிக்க சென்றால் ஏமாற்றம் : அதிர்ச்சி தந்த பல்கலை

மதுரை: அண்ணா பல்கலை கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பகுதிநேர படிப்பு, கட்டணம் செலுத்திய பின் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலையில் 2017-2018ம் கல்வியாண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட்டில் நடந்தது. இதில் அண்ணா பல்கலை மதுரை மண்டலத்தில் பகுதிநேர எம்.இ., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பை மாணவ, மாணவிகள் தேர்வு செய்தனர். இதன்பின் அதற்கான கட்டணமும் செலுத்தினர்.
இதற்கான வகுப்புகள் செப்.,6ல் துவங்க இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர் கூறியதாவது:
சென்னையில் ஆக.,21ல் நடந்த பொறியியல் கலந்தாய்வின்போது இப்படிப்பு காண்பிக்கப்பட்டது. அதை நம்பி தேர்வு செய்தோம். 6.9.2017 வகுப்புகள் துவங்க வேண்டும். ஆனால் 'போதிய எண்ணிக்கையில் மாணவர் சேராததால் இப்படிப்பு ரத்து செய்யப்பட்டது,' என 26.9.2017ல் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேறு கல்லுாரியில் சேருமாறும் அறிவுறுத்தப்பட்டது. கலந்தாய்விற்கு முன்பே இதுகுறித்து தெரிவித்திருந்தால் வேறு கல்லுாரிகளை தேர்வு செய்திருப்போம். தற்போது ஓராண்டு வீணாகியுள்ளது.
இதே பல்கலையில் முழுநேரம் எம்.இ., படிப்பிலும் இதுபோல் குறைந்த மாணவர் சேர்ந்துள்ள நிலையில் அதற்கான வகுப்பு நடக்கிறது. இதுகுறித்து அண்ணா பல்கலை பதிவாளர் மற்றும் உயர்கல்வி செயலாளருக்கும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, என்றனர்.
அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறியதாவது: இப்பிரச்னை மதுரை மட்டுமல்ல திருச்சி, கோவை, நெல்லை மண்டலத்திலும் உள்ளது. பகுதிநேரம் எம்.இ., படிப்புகள் சுயசார்பு (செல்ப் சப்போர்டிங்) அடிப்படையில் நடத்தப்படுகின்றன.
அரசு விதிப்படி சுயசார்பின் கீழ் நடக்கும் படிப்பில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் சேர்ந்தால் தான் அதை நடத்த முடியும். சம்பந்தப்பட்ட எம்.இ., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பகுதிநேரம் படிப்பில் மூன்று மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால் இக்கல்வியாண்டு மட்டும் இப்படிப்பு தற்காலிகமாக நடத்த இயலவில்லை. சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் உயர் கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது, என்றனர்.
பணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி : ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல்

கோவை: ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், மெத்தனமாக நடப்பதால், ஊதிய உயர்வு பெறுவதில், சிக்கல் நீடிப்பதாக, தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் உட்பட, அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, சம்பளம் நிர்ணயித்து வெளியிடப்பட்டது. இதற்கு, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய சூழலில், இச்சம்பளத்தை பெற முடியாத நிலைஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு உட்பட, பல கல்விசார் ஆவணங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரு கின்றன.
இப்பணிகளுக்காக, மாவட்ட கருவூலத்துறை அலுவலகங்களில், ஆசிரியர்களின் பணிசார்ந்த ஒட்டுமொத்த தகவல்கள் அடங்கிய, பதிவேடுகள் உள்ளன. இதை டிஜிட்டல் மயமாக்கும் பணியை மேற்கொள்வதில் தாமதம் தொடர்கிறது.
இதனால், ஆசிரியர்களின் தகவல்களை தொகுப்பதில், சிக்கல் நீடிப்பதால், புதிய ஊதியத்தை வரையறுக்க முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் விழி பிதுங்கியுள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில நிர்வாகி கூறியதாவது:
ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் தான், அனுபவம், பணியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, பதவி உயர்வு உள்ளிட்ட, அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.
இப்பதிவேடு, மாவட்ட கருவூலத்துறை அலுவலகங்களில் உள்ளதால், புதிய ஊதியம் நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 
கடந்த ஜூன் மாதமே நிர்ணயிக்கப்பட்ட வளரூதியம் கூட, பெற முடியாத நிலை உள்ளது.
இச்சிக்கலுக்கு உடனடியாக, தீர்வு காணப்பட்டால் மட்டுமே, அடுத்த மாதத்தில் இருந்து, நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதியம் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'பெஞ்ச்' தேய்க்கும் ஆசிரியர்கள் யார்? : 23ம் தேதி முதல் ஆலோசனை துவக்கம்

தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் இன்றி, உபரியாக இருக்கும் ஆசிரியர்களை கண்டறிவதற்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, சென்னையில் நடக்கிறது.
தமிழகத்தில், 24 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளிகளில், 63 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்; 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ௨௩ மாணவர்களுக்கு, ஓர் ஆசிரியர் என, உள்ளனர். ஆனால், மத்திய அரசு விதிகளின்படி, ௩௫ மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என, 43 ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தால் போதும். தற்போது, இப்பள்ளிகளில் கூடுதலாக, 20 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர்.

பட்டியல் தயாரிப்பு : பல பள்ளிகளில், ஒரு மாணவர் முதல்,10 மாணவர்கள் வரை உள்ளனர். அவற்றில், இரு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளும் உள்ளன. 

எனவே, உபரியாக, 'சும்மா' இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களை, ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிக்கு மாற்றலாமா என, தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆலோசிக்கிறது. இதற்காக, மாவட்ட வாரியாக, அனைத்து பள்ளிகளிலும், வகுப்பு வாரியாக படிக்கும் மாணவர்களின் சரியான எண்ணிக்கையை, உரிய ஆதாரத்துடன் வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். 

அறிவுறுத்தல் : எந்த தில்லுமுல்லும் இன்றி, பட்டியலை தயாரித்து, சென்னையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டு உள்ளது.இந்த உபரி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், அக்., 23-30 வரை, மாவட்ட வாரியாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

- நமது நிருபர் -
'வங்கி கணக்கு எண்ணுடன்  ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'

புதுடில்லி:'வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்கு பவர்களும், டிச.,31க் குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டில்லியில் செயல்படும், செய்தி இணைய தளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது.
ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்: வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், ௧ல், மத்திய அரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்கள், புதிதாக கணக்குதுவக்குபவர்கள்,



தங்கள் ஆதார் எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.இவ்வாறு, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாநில செய்திகள்

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு


மெர்சல் படத்தில் இடம்பெற்று உள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 20, 2017, 04:00 PM

சென்னை,

‘மெர்சல்’ திரைப்படத்தில் மத்திய அரசின் நல்ல திட்டங்களை குறை சொல்லி தவறான கருத்து பரப்பப்படுகிறது. படத்தில் உள்ள தவறான கருத்துகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். இதேபோன்று பிற பாரதீய ஜனதா தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பா.ஜனதா சார்பில் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை தவறாக விமர்சனம் செய்யப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தில் இடம்பெற்று உள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தன்னிடம் உறுதியளித்து உள்ளதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறிஉள்ளார்.
மாநில செய்திகள்

அரசியல் லாபம் தேடக்கூடாது நடிகர் விஜய்க்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்



சினிமா துறையை தவறாக பயன்படுத்தி அரசியல் லாபம் தேடக்கூடாது என நடிகர் விஜய்க்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 21, 2017, 04:30 AM
நாகர்கோவில்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜனநாயக வழியில் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால் தான் சார்ந்திருக்கக்கூடிய ஒரு துறையை தவறாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தவறான விஷயங்களை கொண்டு சென்று, அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.

தற்போது நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள ‘மெர்சல்‘ படத்தில் அரசியல் விமர்சனங்களை தொடங்கி வைத்திருப்பது சினிமாவுக்கும் நல்லதல்ல, அரசியலுக்கும் நல்லதல்ல. சினிமா பார்க்க வரக்கூடிய ரசிகர்கள் அந்தந்த நடிகருடைய நடிப்பு திறமைக்காக வருகிறார்களே தவிர, அரசியலுக்காக வருவது இல்லை.

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள பல வசனங்கள் உண்மைக்கு மாறான, தவறான கண்ணோட்டத்தை கொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். இது வருத்தத்துக்குரிய விஷயம். சம்பந்தப்பட்டவர்கள் அதுபோன்ற வசனங்களை நீக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

கமல்ஹாசன், விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான கருத்துக்களை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால், நீங்கள் சினிமாவில் பொய்யான ஒரு விஷயங்களை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நடிகர் கமல்ஹாசன் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக தற்போது கூறிய கருத்தை நான் அறிந்தேன். தற்போதைய கருத்துக்கு நாளை அவர் மன்னிப்பு கேட்பார். பணமதிப்பிழப்பு பற்றி ஆரம்பத்தில் பாராட்டினார்கள். ஜி.எஸ்.டி. பற்றி பாராட்டினார்கள்.

தற்போது தவறு என்று சொன்னால் ஒரு அரசியல்வாதியின் நிலைப்பாடு என்ன? அரசியலில் ஒரு கருத்தை சொன்னால் ஆழ யோசித்துச் சொல்ல வேண்டும். நேற்று சொன்னதற்கு இன்று மன்னிப்பு கேட்கிறேன் என்று இருக்கக்கூடாது.

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி திடமாக இருந்தபோது எதிர்ப்புகள் வந்தது உண்டா? ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை இதுபோன்ற சந்தேகங்கள், எதிர்ப்புகள் உண்டா? பலம் பொருந்திய தலைமை இல்லாமல் போகும்போது திடீர் தலைவர்கள் உருவாவதற்கான முயற்சி இது.

அந்த முயற்சியில் யார் அதிகமாக ‘நெகட்டிவ்’ கருத்துகளை பேசுவது என்பதில் பெரிய போட்டி நடக்கிறது. அதனால் மத்திய அரசின் திட்டங்கள் ஒன்றும் வரக்கூடாது என்று பேசுகிறார்கள். தமிழக ஆட்சியிலும் திடமான தலைமை இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

NEWS TODAY