Sunday, October 22, 2017

பயணியருக்கு ரயில்வே எச்சரிக்கை

சென்னை:'போலி முகவர்களிடம் ரயில் டிக்கெட் வாங்காதீர்' என, தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.தீபாவளி மற்றும் விசேஷ நாட்களையொட்டி, ரயிலில் டிக்கெட் கிடைக்காத பயணியர், போலி முகவர்களிடம், டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால், ரயில்களில், விஜிலென்ஸ் சோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது.'போலி முகவர்களிடம் டிக்கெட் வாங்கி, ரயிலில் பயணம் செய்தால்,விஜிலென்ஸ் சோதனையில் சிக்கி, அபராதம் செலுத்த நேரிடும்' என, தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY