Sunday, October 22, 2017

முதுகலை மருத்துவ விடைத்தாள்கள் மீண்டும் திருத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை:முதுகலை மருத்துவ மாணவர்களின் விடைத்தாள்களை, மீண்டும் மதிப்பீடு செய்ய, புதுச்சேரி பல்கலைக்கு அனுப்பும்படி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த, டாக்டர் பாலமுருகன் தாக்கல் செய்த மனு:முதுகலை மருத்துவ படிப்பில் சேர்ந்து, ௨௦௧௭ மே மாதத்தில், இறுதி ஆண்டு தேர்வு எழுதினேன். நான் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வை நன்றாக எழுதியிருந்தேன்; விடைத்தாள்களின் நகல்களை 
பெற்றேன்.

மீறியுள்ளது

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, முதுகலை மருத்துவ கல்வியில், விடைத்தாள்களை நான்கு மதிப்பீட்டாளர்கள் திருத்த வேண்டும். இந்த நடைமுறையை, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மீறியுள்ளது.குறைந்தபட்ச மதிப்பெண்களை, அனைத்து பாடங்களிலும் பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்தமாக கணக்கிடும் போது, ௫௦ சதவீதத்துக்கு குறைவாக பெற்றுள்ளேன்.

'தியரி பேப்பர்'களை, இரண்டாவது, மூன்றாவது முறையாக, மதிப்பீடு செய்திருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது, மூன்றாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தவில்லை. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பின்பற்றும் நடைமுறை, குழப்பத்துக்கு வழி வகுக்கிறது.

அதனால், 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெறாத மாணவர்களுக்கு, இரண்டாவது, மூன்றாவது மதிப்பீட்டு முறை மறுக்கப்படுகிறது. மருத்துவ கவுன்சில் நிர்ணயித்தபடி, இரண்டாவது, மூன்றாவது முறை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால், சரியான தகுதியை பெற்றிருக்க முடியும்; தேர்ச்சியும் பெற்றிருக்க முடியும்.எனவே, என் விடைத்தாள்களை, இரண்டாவது, மூன்றாவது முறையாக மதிப்பீடு செய்யும்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று, மேலும் நான்கு முதுகலை மருத்துவ மாணவர்கள், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன் ஆஜரானார்.

தள்ளிவைப்பு

நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர்களின் அசல் விடைத்தாள்களை, 'கோடிங் ஷீட்' இல்லாமல், புதுச்சேரி பல்கலைக்கு அனுப்ப, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த விடைத்தாள்களை திருத்த, மதிப்பீட்டாளரை, புதுச்சேரி பல்லை நியமிக்க வேண்டும்.அவர், ௨௨ம் தேதிக்குள், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து முடிக்க வேண்டும். இவ்வழக்கில், புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் சேர்க்கப்படுகிறார். விசாரணை, நாளைக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Pilots drank bottled water purchased from outside vendor

Pilots drank bottled water purchased from outside vendor  The pilots also consumed bottled water purchased from an outside vendor.  British ...