Friday, November 3, 2017


All physical contact not harassment: Delhi HC

Abhinav Garg| TNN | Nov 3, 2017, 06:51 IST

HIGHLIGHTS

The HC said there should be context while defining a physical contact as sexual in nature.
Plainly, a mere accidental physical contact, even though unwelcome, would not amount to sexual harassment, the court said.



NEW DELHI: Unwelcome or accidental physical contact without undertones of a sexual nature doesn't amount to sexual harassment, the Delhi high court has ruled.

Upholding the clean chit given to a former CRRI scientist with regard to a complaint of an ex-colleague against him, the HC said there should be context while defining a physical contact as sexual in nature. The woman scientist had challenged the clean chit given by the CRRI internal complaints panel to her colleague, whom she had accused of sexual harassment. Undoubtedly, physical contact or advances would constitute sexual harassment provided such physical contact is a part of the sexually determined behaviour. Such physical contact must be in the context of a behaviour which is sexually oriented. Plainly, a mere accidental physical contact, even though unwelcome, would not amount to sexual harassment. Similarly, a physical contact which has no undertone of a sexual nature and is not occasioned by the gender of the complainant may not necessarily amount to sexual harassment," Justice Vibhu Bakhru noted.

Both the scientists were working in the Central Road Research Institute (CRRI) .

In her complaint, the woman had referred to an incident of April 2005 when the man entered the laboratory where she was working, grabbed her arm, snatched the samples from her hand and threw them on the floor.He also pushed her out of the room. She maintained that this was an unwelcome physical contact that would amount to sexual harassment.

But the internal complaints committee concluded that "it was a case of altercation in the background of the uncongenial environment prevailing in the division."

The committee also held that though it was deplorable the way male scientist held her arm and threw the material in her hand in a fit of anger, the same "would not qualify as a sexual harassment."

HC saw substance in the stand of the committee and agreed that "all physical contact cannot be termed as sexual harassment and only a physical contact or advances which are in the nature of an "unwelcome sexually determined behaviour" would amount to sexual harassment."

Justice Bakhru also rejected the woman's second ground of appeal where she had challenged the constitution of the committee and the disciplinary authority, saying that it finds no infirmity in their set up.

19-year-old preparing for UPSC gang-raped in Bhopal for 3 hours

TNN | Updated: Nov 3, 2017, 02:38 IST

HIGHLIGHTS

The spot where she was raped has some of the busiest roads and rail tracks.
Thousands of cars drove past just 100 metres from where she was stripped, tied up and raped repeatedly.

The survivor shuttles between her hometown, about an hour’s journey from Bhopal, every day as she is preparing for the UPSC exams.


BHOPAL: For three hours, a 19-year-old college girl was tied up and raped by four men, who took breaks for tea and gutka before returning to assault her repeatedly under a bridge in the heart of Bhopal.

What happened after the rapists let her go was no less horrifying. Three police stations refused to take her complaint — although both her parents are in police — and a GRP officer mocked her for "coming with a filmy story".

The parents — her father is a sub inspector with a security force and mother with the CID — and the girl nabbed two of the suspects in a dramatic daylight scuffle on Wednesday. Only then was a complaint registered. An embarrassed police force suspended SI R N Tekam of MP Nagar police station on Thursday for not accepting her complaint.

The horrifying gang rape has shaken Bhopal, where people take pride in their city as one of the safest for women. The spot where she was raped has some of the busiest roads and rail tracks — the bustling Habibganj station is just 100 metres away, and an RPF post just 50m away. Thousands of cars drove past just 100 metres from where she was stripped, tied up and raped repeatedly. Yet, no one heard a thing.

The survivor shuttles between her hometown, about an hour's journey from Bhopal, every day as she is preparing for the UPSC exams.

On Tuesday evening, the complaint notes, after her coaching classes got over, she began her short walk along the tracks towards Habibganj station. Around 7pm, a man now identified as Golu Bihari Chadhar — out on bail after being charged in her infant daughter's murder — grabbed her by her hand. She kicked out and felled him. Angry, Golu called out to an accomplice, Amar Ghuntu, and the two of them started dragging her towards a nullah. The girl kept fighting and hit both of them with a stone.

Furious, they hit her with a stone as well, tied her up, and raped her. After around 15 minutes, Golu went to fetch gutka and cigarettes, the complaint notes, leaving Amar to watch over her. Amar and Golu are brothers-in-law and married to two sisters.

The girl asked for some clothes because hers had been torn to shreds. Golu went back and got some clothes, perhaps of his wife's — and also brought along two others to join in. She was raped again, this time Rajesh and Ramesh allegedly joining the other two. The horror went on till 10pm when the brothers-inlaw finally allowed her to dress and leave — but after she had handed over her earrings, watch and phone.

She somehow walked to the RPF outpost at Habibganj station and called her parents. Her father was already looking for her. Seeing how traumatised she was, he took her home. The next morning, the family went to MP Nagar to file a complaint. An SI went to check the spot and told them to go to Habibganj police station, staff from where redirected them to Habibganj GRP. It is at the third stop that an officer mocked the girl, saying she was "making up a filmy story".

TOP COMMENTHang the rapists immediatelyPrithviraj Patil

"While coming from Habibganj, my daughter saw two of the rapists loitering in front of Mansarowar Complex, which is around 500 metres from the spot of crime," said the mother. The cop parents and the feisty survivor chased down Amar and Golu and nabbed them. "We handed over the duo to GRP Habibganj," said the mother.

"It's one of the worst experiences of my life. If I, as a policewoman, have to face such problems in filing my daughter's gangrapecomplaint, I can't imagine what a common man goes through," said the mother. "SHO GRP Mohit Saxena and SI Uikey misbehaved with us and said they wouldn't file any case. SI Uikey alleged that we were making a 'false filmy complaint'," she added.

Water level of Pallavaram Big Lake & updates

Posted on : 02/Nov/2017 18:29:54






The Pallavaram big lake is a reservoir spread across 200 acres land area or 87.12 lakh sq. ft.

It is present in Pallavaram on the eastern part of Railway Track between Chrompet and Pallavaram.

The lake has got dried up and the industrial waste waters ejected out of leather factors in Chrompet and garbage dumped along the lake are to be rebuked for the same.

Lakshmi Nagar and Ganapathipuram are the areas lying close to the lake. These are used as burial site to perform funeral rituals.

The big lake, though ‘big’ in its name, does not contain any water in it.

There is a load linking Chrompet or Pallavaram and Thoraipakkam via the center of the lake. In a few areas of the lake, there are bore wells dug for draining water out of the lake for commercial water supply needs.

அரசுப் பள்ளியில் குளம் போல் தேங்கிய மழைநீர்

By DIN  |   Published on : 03rd November 2017 03:45 AM 
school

திருவேற்காடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது .
சென்னை புறநகர் பகுதியான திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட பல இடங்கள் சமீபத்தில் பெய்த தொடர் கன மழையால் வெள்ளக்காடானது. 
இந்நிலையில், கோலடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மழைநீர் அகற்றப்படாமல் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. 
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நகராட்சி உடனடியாக, நடவடிக்கை எடுத்து, பள்ளி வளாகத்தில் உள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சென்னை பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

By DIN  |   Published on : 03rd November 2017 06:20 AM  |
சென்னை பல்கலைக் கழக அனைத்து தேர்வுகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக் கழக துனைவேந்தர் அறிவித்துள்ளார்.
கனமழையை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழக தேர்வுகளை ஒத்திவைத்து அறிவித்தி இருந்தது.

இப்படியும் ஏமாற்றுகிறார்கள்! உஷார் ரிப்போர்ட்!


By ஹரிஹரசுதன் தங்கவேலு  |   Published on : 02nd November 2017 01:25 PM 
scam

உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு இளைஞரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது?
'வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா ?”
'இல்லைங்க , இன்னும் இல்லை'
'சார்! அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா ?”
'இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா ?”
'நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்க்காவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை சொல்லுங்கள்!” (ஆதார் எண்ணை சொல்கிறார்,)
'ஆதார் எண் தந்தத்திற்கு நன்றி, உங்கள் எண் இந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுவிட்டது வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதை செய்தால் மட்டுமே நீங்கள் தான் இந்த மொபைல் எண் உபயோகிப்பாளர் என எங்களால் உறுதி செய்துகொள்ளமுடியும்,”
’என்ன பண்ணணும்ங்க?’
'உங்களது சிம் கார்டில் உள்ள 20 இலக்க சிம் எண்னை மெஸேஜில் SIM என டைப் செய்து ஏர்டெல்லின் 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பவும், அனுப்பிய பிறகே உங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுமையடையும்’
’(யோசிக்கிறார்) 'மேடம் ! சிம்மு போனுக்குள் இருக்குது, அந்த நம்பர் எனக்கு தெரியாதுங்களே’
'கவலை வேண்டாம் சார், உங்கள் சிம் நம்பரை இப்போது உங்களுக்கு மெஸேஜில் அனுப்பியுள்ளேன், அதை அப்படியே 121 என்ற எங்களது சேவை மைய எண்ணிற்கு அனுப்பவும், நன்றி’
'121 க்கு தானுங்க அனுப்பனும், வேற எங்கியும் இல்லீங்களே, ஏன்னா ஊர் பூரா முடிச்சவிக்கு பசங்க புதுபுதுசா ஏமாத்தறானுக, அதான் கேக்குறங்க’
'சார், இது ஏர்டெல்லின் அதிகார பூர்வ அழைப்பு, 121 எங்களது அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையம், அதற்க்கு மட்டுமே அனுப்பினால் போதும். நன்றி’
இப்படி நமக்கு ஒரு போன் வந்தா எத்தனை பேர் 121-க்கு சிம் நம்பர் அனுப்பியிருப்போம், கிட்டத்தட்ட எல்லோருமே, இல்லையா? அதே போலத்தான் இவரும் அனுப்பியிருக்கிறார், அனுப்பிய சிலமணிநேரங்களில் இவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து 10000, 20000 என சரமாரிக்கு பணம் உருவப்பட்டு, இவர் சேர்த்து வைத்திருந்த Fixed Deposits உட்பட 1.30 லட்சங்களை மொத்தமாக 18 மணி நேரத்தில் அபேஸ் பண்ணிவிட்டார்கள், ஐயோ, இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா, சாத்தியமே1
உங்கள் வங்கி கணக்குகளின் இணைய சேவை பாஸ்வேர்ட் மாற்றுவது, ஏடிஎம் பின் நம்பர் மாற்றுவது, புதிய அக்கவுண்டகளை இணைத்தல், பண பரிமாற்றம் என எதை இணைத்தாலும், மாற்றினாலும் அவை எல்லாமே ஒன்றே ஒன்றை அடிப்படையாக கொண்டே மாற்ற முடியும், அது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP, அந்த OTP-யை பெற்றே மேற்சொன்ன மோசடியை நிகழ்த்தியிருக்கிறார்கள், எப்படி ?
ஏர்டெல் 3G-யில் இருந்து 4G சிம்முக்கு உங்கள் எண்ணை மாறுங்கள், ஃப்ரீ ஃப்ரீ என ஊர் பூரா கூவிக் கொண்டிருக்கிறது, இதற்காக ஒரு சேவையை தொடங்கியது, வாடிக்கையாளருக்கு இலவசமாக 4G சிம் கார்டுகளை தர தொடங்கியது, அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், SIM என டைப் செய்து 20 இலக்க புது சிம் எண்னை 121 க்கு அனுப்பிவிட்டால் இரண்டு மணிநேரத்தில் புதிதாக தரப்பட்ட 4G சிம்மில் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும், பழைய சிம்மை தூக்கி போட்டுவிட்டு இதை செருகி 4G தரத்தில் உபோயோகிக்கலாம்.
இந்த சேவையை தான் இந்த திருடர்கள் உபயோகித்து கொண்டனர், ‘எனக்கு சிம் நம்பர் தெரியாதுங்க’ என்ன சொல்லியதும் அவர்கள் அனுப்பினார்கள் பாருங்கள் ஒரு சிம் நம்பர், அது உங்கள் போனில் நீங்கள் பேசி கொண்டிருக்கும் சிம்மின் 20 இலக்க எண் அல்ல, அவர்கள் கை வசம் ஆக்டிவேட் ஆக தயார் நிலையில் உள்ள ஒரு 4G சிம். அவர்கள் அனுப்பிய மெஸேஜை 121 க்கு நீங்கள் அனுப்பியதால் சிலமணி நேரங்களில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவர்கள் சிம்மில் உங்கள் எண் ஆக்டிவேட் ஆகிவிடும், பிறகு OTP என்ன, உலகமே உங்களிடம் பேச நினைத்தாலும் எல்லா அழைப்புகளும் அவனுக்குத் தான் போகும். எவ்வளவு எளிமையாக, நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்!
மேற்சொன்ன மோசடியில் முதல் 3000 உருவப்பட்ட போதே ICICI க்கு சொல்லி அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்க சொல்லியிருக்கிறார் இளைஞர், ஆனால் ICICI தேமே என 18 மணிநேரம் தேவுடு காக்க, அதற்குள் மொத்த வைப்பு தொகையையும் சுருட்டிவிட்டார்கள், இந்த மாதிரி நூதன, எளிமையான, மிக மிக நம்பிக்கை தரும் வகையில் நீங்களும் ஏமாற்றப்படலாம், எக்காரணம் கொண்டும் உங்கள் சிம் கார்ட் நம்பர் உட்பட, OTP எண், PIN நம்பர் போன்றவைகளை யாரிடமும் பகிராதீர்கள், மோசடி பேர்வழிகளிடம் இருந்து, கவனமாக உங்கள் கையிருப்பை காத்திடுங்கள். நன்றி.
நன்றி : ஹரிஹரசுதன் தங்கவேலு / ஷான் கருப்பசாமி 

6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


By DIN  |   Published on : 03rd November 2017 04:49 AM  |

rain-flood


தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ.3) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

வெள்ளக்காடானது சென்னை


By DIN  |   Published on : 03rd November 2017 04:43 AM  
chennai
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையச் சாலையில் வெள்ளத்தில் நீந்தி வரும் கார் .

சென்னையில் வியாழக்கிழமை (நவ.2) மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை (நவ.3) காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி அதன் அளவு அதிகரித்து பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
154 மி.மீ. மழை: வானிலை ஆராய்ச்சி மைய கணக்கீட்டு அளவின்படி வியாழக்கிழமை (நவ.2) காலை 8.30 மணி முதல் நள்ளிரவு வரை 154 மி.மீ. மழை பதிவானது; மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.3) காலை 8.30 மணிக்கு (12 மணி நேரம்) கணக்கிடும்போது, 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 200 மில்லி மீட்டரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையின் விகிதமும் அதிகரிப்பு: வியாழக்கிழமை மாலை மழை பெய்யத் தொடங்கியபோது அதன் விகிதம் 1 மணி நேரத்துக்கு 7 சதவீதமாக இருந்தது; வியாழக்கிழமை இரவு மழையின் விகிதம் 1 மணி நேரத்துக்கு 10 சதவீதம் என அதிகரித்து நள்ளிரவில் 20 சதவீதத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் மின் வெட்டு: மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க சென்னை நகரின் பல இடங்களில் வியாழக்கிழமை இரவு மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை சாலையின் இருபுறமும் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கி நின்றது. இதனால், தலைமைச் செயலகம், நீதிமன்றம், துறைமுகம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் என முக்கிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பணிகளை முடித்து வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பொது மக்களும் ஆங்காங்கே வெகு நேரம் காத்திருந்தனர்.
பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்: கனமழை காரணமாக, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சென்னை பாரிமுனையில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டது. இதனால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் ரயில்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன. அலுவலகப் பணிகளை முடித்து சென்னை கடற்கரை, கோட்டை ரயில் நிலையங்களில் இருந்து மாலை 6 மணிக்கு ரயில் ஏறிய பல ஊழியர்கள் இரவு 9 மணிக்கே வீடுகளுக்குச் சென்று சேர்ந்தனர். 

மாயமான வருமான வரி அதிகாரி சிறு காயங்களுடன் மீட்பு

கிருஷ்ணகிரி: காணாமல் போன, கோவை வருமான வரி அதிகாரி, கிருஷ்ணகிரி அருகே காயங்களுடன் மீட்கப்பட்டார். கோவை, பீளமேடு கவுதமபுரியை சேர்ந்தவர் சிவக்குமார், 38; கோவை வருமானவரி அலுவலகத்தில், துணை ஆணையராக பணிபுரிகிறார். கடந்த மாதம், 13ல் அலுவலகம் சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. அவரின் தம்பி ராம்குமார் புகாரின்படி, பீளமேடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அச்ச மங்கலம் கூட்ரோடு அருகில், உடலில் சிறு காயங்களுடன் சிவக்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே ரோந்து சென்ற ஊர்க்காவல்படையினர் அவரை மீட்டு, கந்திக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில், போலீசார் சேர்த்தனர். ராம்குமாருக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் ஒப்படைத்தனர்.

குப்பையில், 'ஆதார்' அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி


குப்பையில், 'ஆதார்' அட்டைகள்: மக்கள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், குப்பையில் வீசப்பட்டு கிடந்த, 'ஆதார்' அட்டைகள் மற்றும் முக்கிய கடிதங்களை பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி, பழைய பேட்டை பகுதியில், நேற்று காலை, குப்பை அள்ளும் பணியில் நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். நேதாஜி சாலையில், மூன்று பிளாஸ்டிக் பைகளில் வீசப்பட்டிருந்த குப்பையை அள்ளும் போது, ஆதார் உட்பட முக்கிய ஆவணங்கள் இருந்ததை பார்த்தனர். பையை கீழே கொட்டி பார்த்த போது, ஏராளமான கடிதங்களும், பிரிக்கப்படாத ஆதார் அட்டைகளும் இருந்தன. அவை, கனகமுட்லு தபால் அலுவலகத்தில் இருந்து, பொதுமக்களுக்கு வழங்க எடுத்து வந்தவை என்பது தெரிந்தது. மேலும், 50க்கும் மேற்பட்ட ஒரிஜினல் ஆதார் அட்டைகள், வங்கியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய, ஏ.டி.எம்., கார்டின் பின் எண்கள், நகை அடமான கடனுக்கு வட்டி கட்ட வேண்டிய கடைசி நாளுக்கான அழைப்பு கடிதங்கள் கிடந்தன. அத்துடன், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விபர கடிதங்கள், எல்.ஐ.சி., கடிதங்கள் என, முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், பிரிக்கப்படாமல், பண்டல்களாக கட்டி போடப்பட்டிருந்தன.
கிருஷ்ணகிரி கோட்ட தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர், சுப்பாராவ் கூறுகையில், ''குப்பையில் வீசப்பட்ட கடிதங்கள் மற்றும் ஆவணங்கள், 2015 மற்றும், 2016ல் டெலிவரி செய்ய வேண்டியவை. ''இது எவ்வாறு நடந்தது என, துறை ரீதியாக விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில் வீசப்பட்ட கடிதங்களை, டெலிவரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

மணக்கோலத்தில் தேர்வெழுதிய பாலிடெக்னிக் மாணவி


மணக்கோலத்தில் தேர்வெழுதிய பாலிடெக்னிக் மாணவி
விழுப்புரம்: பாலிடெக்னிக் மாணவி, மணக்கோலத்தில் வந்து, தேர்வு எழுதினார்.
விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்தை சேர்ந்த வினோதினி; கப்பியாம்புலியூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கிறார். கடந்த, 26ம் தேதி துவங்கிய, தொழில்நுட்பக் கல்லுாரிகளுக்கான வாரிய தேர்வை எழுதி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை, 7:30 மணிக்கு, வினோதினிக்கு, கடலுார் மாவட்டம், திருவந்திபுரத்தில் திருமணம் நடந்தது. இதைதொடர்ந்து, நேற்று நடந்த, 'டிஜிட்டல் கம்யூனிகேஷன்' தேர்வை எழுதுவதற்காக மணமகள் புறப்பட்டார். காலை, 9:00 மணிக்கு, வினோதினி மணக்கோலத்தில், தன் கணவருடன் காரில் வந்து, தேர்வு எழுதினார்.

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


சென்னை: 'வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - ௪ தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் 
கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர். வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - ௪ தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.
தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது.
இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது.
எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து. ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் அபிஷேக முன்பதிவு


நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், 2018க்கான, தினசரி அபிஷேகத்திற்கு, நவ., 5ல் முன்பதிவு துவங்கவுள்ளது. நாமக்கல், ஆஞ்சநேயர் கோவில் மூலவருக்கு, தினமும் காலை, 9:00 மணிக்கு, 1,008 வடை மாலை சாத்தப்படும். பின், சுவாமிக்கு அபி ேஷகம் செய்யப்படும். தற்போது, ஐந்து கட்டளைதாரர்கள் இணைந்து, அபிேஷகம் செய்யலாம். அதற்கு, தினசரி, ஐந்து பேர் முன்பதிவு செய்யலாம். ஒருவருக்கு கட்டணமாக, 6,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
வரும், 2018க்கான முன்பதிவு, 5 முதல் துவங்குகிறது. முழு தொகையையும் செலுத்துபவர்களுக்கு மட்டும் ரசீது வழங்கப்படும்; உபயதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதே போல், தங்கத் தேர், புஷ்பங்கி மற்றும் வெண்ணை காப்பு அலங்காரம் போன்றவற்றுக்கு, தனித்தனியாக முன்பதிவு நடக்கிறது.
நரசிம்ம சுவாமி திருக்கல்யாணம், ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட நாட்களில் நடக்க உள்ளது. இதற்கு, 2,500 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!

 கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் 3,825 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்!
பெரம்பலுார்:கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், இன்று, அன்னாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போர் வெற்றியின் அடையாளமாக கட்டப்பட்டது. இக்கோவில் உலக பிரசித்தி பெற்றது; புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும்,ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று, 75 கிலோ எடை உள்ள, 51 மூட்டை என, 3,825 கிலோ அரிசியால் சாதம் சமைத்து, காலை, 9:00 மணி முதல், கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி, மாலை, 6:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும், ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது, இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.இந்த ஆண்டும் இன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் இரவு, 9:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். 

மீதமுள்ள சாதம், ஏரி, குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். நாளை, மூலவருக்கு ருத்ரா பிஷேகமும் நடைபெற உள்ளது.

சித்தா டாக்டர்கள் கைது வேண்டாம் : கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
'சித்தா டாக்டர்களை, போலி டாக்டர்கள் என கைது செய்யக்கூடாது. அவர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கலாம்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அலோபதி மருத்துவத்தில், டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை குணப்படுத்த, மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சித்த மருத்துவத்தில், நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு வழங்கப்படுகிறது.

நிலவேம்பு குடிநீர் : இந்நிலையில், 'இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது; நோயாளிகளை, அலோபதி டாக்டர்களிடம் பரிந்துரைக்க வேண்டும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி, ஆயுஷ் டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 
இதுகுறித்து, ஆயுஷ் டாக்டர்கள் நல சங்க தலைவர், செந்தமிழ்செல்வன் கூறியதாவது:
இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம், 1970ன், 17வது பிரிவில், சித்தா டக்டர்கள் அலோபதி மருத்துவம் அளிக்க அனுமதி உள்ளது. மேலும், டெங்கு போன்ற காய்ச்சலுக்கு, அலோபதியில் மருந்துகள் இல்லாத நிலையில், சித்தா தான் கைகொடுத்துள்ளது. சித்த மருத்துவமான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவற்றை, அலோபதி டாக்டர்கள் தருகின்றனர். அவர்களை, போலி டாக்டர்கள் என, கைது செய்யவில்லை. தமிழக அரசு, ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், எங்களுக்கு உரிமைகள் இருந்தும், எங்களை வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போலி டாக்டர்கள் : சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெங்கு காய்ச்சலுக்கு, சித்தா டாக்டர்கள் உள்ளிட்ட, ஆயுஷ் டாக்டர்கள் சிகிச்சை அளிக்கலாம்; அவர்களை, போலி டாக்டர்கள் என, கைது செய்யக்கூடாது. அவர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சித்தா டாக்டர்கள், அலோபதி சிகிச்சை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, மின் வாரியம், 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்துள்ளது.



புதிய மின் இணைப்புக்கு லஞ்சம், பணியில் அலட்சியம் உள்ளிட்ட, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள், பொறியாளர்கள் மீது, மின் வாரியம், இடமாறுதல், 'சஸ்பெண்ட்' ஆகிய நடவடிக்கைகளை எடுக்கிறது. சஸ்பெண்ட் செய்யும் நபர், அரசியல் சிபாரிசுடன், சில தினங்களில், மீண்டும் பணியில் சேர்ந்து விடுகிறார். இதனால், நடவடிக்கை என்பது, கண்துடைப்பு நாடகமாக இருப்பதாக, மக்கள் கருதுகின்றனர்.

சென்னை, கொடுங்கையூரில், நேற்று முன்தினம் நடந்த மின் விபத்தில் சிக்கி,

இரு சிறுமியர் உயிரிழந்தது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.அதற்கு காரணமான, மூன்று பொறியாளர்கள், ஐந்து ஊழியர்களை, மின் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. இதற்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்து, 'டிஸ்மிஸ்' செய்யும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
சென்னை, தலைமை செயலகத்தில், கொடுங்கையூர் மின் விபத்து தொடர்பாக, மின் துறை அமைச்சர், தங்கமணி மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், நேற்று, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில், மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, அலட்சியமாக செயல்படும் பொறியாளர்களை, 'டிஸ்மிஸ்' செய்ய, மின் வாரியத்திற்கு, அரசு தரப்பில் ஒப்புதல் அளித்ததாக தெரிகிறது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான், தவறுகள் குறையும். ஆனால், மின் வாரியத் தில், சஸ்பெண்ட் செய்யும் நபர், ஆட்சியாளர் களின் உதவியுடன், இரு தினங்களில்

வேலைக்கு வந்து விடுகிறார். அந்த விபரம், பலருக்கு தெரியாது.இதனால், வழக்கம்போல் பலர் அலட்சியமாக உள்ளனர். இதனால், வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மின் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட காரணமாகும் பொறியாளர், ஊழியர்கள் மீது, உச்சபட்ச தண்டனையாக, 'டிஸ்மிஸ்' செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்:

சென்னை, கொடுங்கையூரில், மழைநீரில் மின் வினியோக பெட்டி மூழ்கி இருந்தது. அதில் ஏற்பட்ட மின் கசிவால், மழைநீரில் மின்சாரம் பாய்ந்தது. இது தெரியாமல், மழைநீரில் நடந்து சென்ற, பாவனா மற்றும் யுவஸ்ரீ என்ற சிறுமியர், மின்சாரம் தாக்கி, பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த சம்பவம் குறித்து, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கறிஞர், ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டார்.

இதையடுத்து, 'அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அதற்கு, சிறப்பு பிளீடர், ராஜகோபாலன், ''மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என, 8 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். பலியான சிறுமியரின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்கப்படுகிறது,'' என்றார். 

அதைத் தொடர்ந்து, நீதிபதிகள், 'மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இழப்பீடு வழங்குவது உட்பட, சம்பவம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்' என, அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணை, இன்றும் தொடர்கிறது. 

- நமது நிருபர் -

டாக்டரின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து!


டாக்டர்,பரிந்துரை,சீட்டு,இல்லாமல்,மருந்து,விற்றால்,கடை உரிமம்,ரத்து
'டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, மருந்து கொடுக்கும் கடைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. 

வட கிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு, டாக்டர்களின் ஆலோசனை பெறாமல், பொதுமக்கள் தாமாக மருந்து, மாத்திரை வாங்கி உட்கொள்வதால், நோய் வீரியம் பெற்று, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 
உத்தரவு:

இந்நிலையில், 'டாக்டர்களின் அனுமதி சீட்டு இல்லாமல், மருந்துகள் விற்கக் கூடாது' என, சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். ஆனாலும், மருந்து கடைகளே, நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப, மருந்துகளை விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
நடவடிக்கை:

இது குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 52 ஆயிரம் மொத்த, சில்லரை மருந்து விற்பனை கடைகள் உள்ளன. டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி, மருந்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி, மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் அங்கீகாரத்தை, ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளோம். மருந்து கடைகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு


புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது. 
அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். 
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

சென்னை மழை பாதிப்பு: களத்தில் இறங்க தயாராகும் இளைஞர்கள்...!


Chennai,rain,சென்னை,மழை
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என பலர் களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர். 

சென்னையில் நேற்று மாலை தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு, வாகன நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

கடந்த 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ நேரடியாக இளைஞர்களும், தன்னார்வலர்களும் களமிறங்கியது போல் தற்போது அது போன்ற சூழ்நிலையே நிலவுவதால் நேற்று இரவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை செய்ய இளைஞர்கள் களத்தில் இறங்கினர். பலர் தங்கள் சமூக வலைதளத்தில் தங்கள் வீடுகளில் இடம் இருப்பதாகவும், தேவைபடுவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் பதிவிட துவங்கினர். பலர் நிவாரண பணிகள்,பொருட்கள் சேகரிப்பது, விநியோகிப்பது குறித்தும் ஆலோசிக்க துவங்கினர். 

பல வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சென்னை மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் பெறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று இரவு நடிகர் விஷால் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். 

மேலும் இன்று பல இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், என பலர் களத்தில் இறங்கி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை

சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை
சென்னை: சென்னை, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வருவாய் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கூறியிருப்பதாவது: வெள்ளத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் தத்தளித்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இன்று(நவ.,3) விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காவிட்டால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

news today 23.10.1024