Friday, November 3, 2017


சென்னை மழை பாதிப்பு: களத்தில் இறங்க தயாராகும் இளைஞர்கள்...!


Chennai,rain,சென்னை,மழை
சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் என பலர் களத்தில் இறங்க தயாராகி வருகின்றனர். 

சென்னையில் நேற்று மாலை தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு, வாகன நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 

கடந்த 2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ நேரடியாக இளைஞர்களும், தன்னார்வலர்களும் களமிறங்கியது போல் தற்போது அது போன்ற சூழ்நிலையே நிலவுவதால் நேற்று இரவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளை செய்ய இளைஞர்கள் களத்தில் இறங்கினர். பலர் தங்கள் சமூக வலைதளத்தில் தங்கள் வீடுகளில் இடம் இருப்பதாகவும், தேவைபடுவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் பதிவிட துவங்கினர். பலர் நிவாரண பணிகள்,பொருட்கள் சேகரிப்பது, விநியோகிப்பது குறித்தும் ஆலோசிக்க துவங்கினர். 

பல வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சென்னை மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் பெறப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று இரவு நடிகர் விஷால் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். 

மேலும் இன்று பல இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர், என பலர் களத்தில் இறங்கி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

news today 23.10.1024