Wednesday, April 17, 2019

தமிழகத்தில் தற்போது எங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது?

By DIN  |   Published on : 17th April 2019 12:52 PM  | 
தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று கொடைக்கானல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.


இந்த நிலையில், இன்று தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

அதன்படி, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை முருகன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலத்தக் காற்றுடன் கன மழை வருகிறது.

ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் இன்று முற்பகல் 11 மணியளவில் கன மழை பெய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, பிங்கர்போஸ்ட் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் இன்றும் மழை கொட்டியது. ஆனந்தபுரி, நாயுடுபுரம், அண்ணாநகர், வட்டகாணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து வறட்சியான வானிலை நிலவிய நிலையில் தற்போது மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை மக்கள் கோடை வெப்பத்தால் வாடி வதங்கினாலும், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்ற செய்தியைக் கேட்டு மனம் குளிர்ந்துள்ளனர்.
•••
நேற்றைய மழைச் செய்தியைப் பார்க்கலாமா?

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை இரவு கோடை மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யாததால், கடும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டு வந்தனர். இதனால், மலைப் பகுதிகளில் காட்டுத் தீப்பிடித்து எரிந்தது. இந் நிலையில், கடந்த 2 நாள்களாக கொடைக்கானலில் பகலில் கடுமையான வெயிலும், மாலையில் குளிர்ந்த காற்றும் வீசியது. இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மழை பெய்தது. இடி, மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

பேச்சிப்பாறை அணை பகுதியில் பலத்த மழை

குமரி மாவட்டத்தின் அணைப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
குமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயிலும், வெப்பமும் நிலவி வருகிறது. வெயில் காரணமாக பயிர்கள் கருகுவதோடு, குடிநீர் ஆதாரங்களும் வறண்டு வருகின்றன. 

விவசாயிகளும், மக்களும் மழையை எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாள்களாக மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கார்மேகம் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. 

இதில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் திற்பரப்பு, குலசேகரம், அருமனை, திருவட்டாறு, வேர்க்கிளம்பி, தக்கலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து, குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது.
அருப்புக்கோட்டையில் பலத்த மழை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாகவே கடும் வெயில் அடித்து வந்தது. இதனால் படிப்படியாக வெப்ப நிலை உயர்ந்து கடந்த ஒரு வாரமாக வெப்ப நிலை 100 டிகிரியைக் கடந்து சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் இளநீர், மோர், பனை நுங்கு, பத நீர் உள்ளிட்ட இயற்கையான பானங்களையும் குளிர்பானங்களையும் மிகுந்த ஆவலுடன் அருந்தி வந்தனர். இதனிடையே செவ்வாய்க்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு பிற்பகல் சுமார் 3 மணிக்குத் தொடங்கி சுமார் 40 நிமிடங்கள் வரை பலத்த மழை பெய்தது. அதிகம் காற்று வீசாமல், இடி மின்னல் இல்லாமல் பெய்த இம்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இம்மழையால் அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் கோடை வெப்பம் தணிந்து இதமான குளிர்ந்த தட்பவெப்பம் நிலவியது. பல மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் பெய்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிறார்!

By DIN | Published on : 17th April 2019 11:33 AM 

சென்னை: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, கோடைக்காலம், கோடை மழை போன்ற வார்த்தைகளை பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். கோடை மழை என்பது மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்துக்குள் பெய்யும். இதே சமயத்தில் கோடை வெயில் காரணமாக வெப்பமும் அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக நாட்டின் மத்திய மற்றும் வடமேற்கு மாநிலங்களில் அதிக வெப்பம் பதிவாகும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை வானிலை ஆய்வு மையம் மட்டும் மார்ச் 15ம் தேதி கோடை மழை பற்றிய செய்திகளை வெளியிடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த மழையும் பெய்யவில்லை. ஆனால் தற்போது மெதுவாக தமிழகத்தில் மழை தொடங்கியுள்ளது. நேற்று கன்னியாகுமரியில் தெறிக்கவிடும் வகையில் மழை பெய்துள்ளது.


சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர், தெற்கு கடற்கரைப் பகுதிகளாக வேதாரண்யம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்து வரும் 10 நாட்களில் குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது மழை பெய்யும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மட்டுமே இந்த சமயத்தில் மழையை பார்க்காமல் போகப்போகின்றன.

இந்த மழையால் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்கள்தான் பெரும் மழையைப் பெறப் போகின்றன. அதே சமயம் கடற்கரையை ஒட்டியிருக்கும் மாவட்டங்கள் எப்போதுமே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அல்லது புயல் சின்னம் உருவானால் மட்டுமே மழை வாய்ப்பு பெறும்.

தேர்தலன்று மழை பெய்யுமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே கன்னியாகுமரி மக்கள் நாளை வாக்களிக்க செல்வதாக இருந்தால் காலையிலேயே சென்று வாக்களித்து விட்டு வருவதால் மழையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கன்னியாகுமரியைப் பொறுத்தவரை மழை மாலை 4 மணிக்கு மேல்தான் தொடங்கும். இதேப்போல கன்னியாகுமரி, திருநெல்வேலை மறறும் தென் தமிழக மாவட்டங்களிலும் நாளை மாலை மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னைவாசிகள் மனதை கனமாக்கிக் கொண்டு படிக்கலாம்..
கடந்த சில நாட்களைப் போலவே அடுத்து வரும் நாட்களும் வெப்பம் நிறைந்த நாட்களாகவே அமையும். சென்னையைப் பொறுத்தவரை தட்பவெப்ப நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சவுதி - இரு இந்தியர்கள் மரண தண்டனை விவகாரம்!

By RKV | Published on : 17th April 2019 01:10 PM   dinamani

சவுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டில் ஹர்ஜீத் சிங், சத்விந்தர் சிங் எனும் இரு சீக்கியர்கள் குடித்து விட்டு சண்டையிட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்கள். முதலில் அது ஒரு நியூசன்ஸ் வழக்காகப் பதிவாகி விசாரணைக்கு உள்ளானது. ஆனால், விசாரணையின் போது தான் தெரிய வந்தது, அவர்கள் குடித்து விட்டுச் சண்டையிட்டது மட்டுமல்லாமல் அதற்கும் முன்பே திருடிய பணத்தைப் பங்கு பிரிக்கும் தகராறில் தங்களது கூட்டாளியைக் கொலை செய்த விவகாரம்.



இந்தியாவின் லூதியானாவில் இருந்து சவுதி சென்றடைந்த ஹர்ஜீத் சிங், சத்விந்தர் சிங் மற்றும் ஆரிஃப் இமாமுதீன் மூவரும் கூட்டாளிகள். நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபடுவது தான் இவர்களின் தொழில். அப்படி கொள்ளையடித்த பணத்தைப் பங்கு பிரிக்கும் போது தகராறு ஏற்பட்டதில் முதலிருவரும் இணைந்து ஆரிஃப் இமாமுதீனைக் கொன்று விடுகிறார்கள். கொலையைச் செய்து விட்டு சில வாரங்கள் அதை மறைத்தும் இருக்கிறார்கள். பிறகெப்படியோ குடியின் காரணமாக நேர்ந்த தெருச்சண்டையில் குட்டு வெளிப்பட உடனே அவர்களைக் கொத்தாக அள்ளிச் சென்று சிறையிலடைத்தது சவுதி காவல்துறை. சவுதியைப் பொருத்தவரை நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபடுவதும் கூட மரண தண்டனைக்குரிய குற்றமே! (இதை அவர்கள் சட்டப்படி ஹிராபா என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது நெடுஞ்சாலைகளில் திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டால் உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்கிறது சவுதி சட்டம்)

அத்துடன் இவர்கள் கொள்ளையடித்ததோடு தங்கள் கூட்டாளியைக் கொலை செய்து அதையும் மறைக்க முயன்றார்கள் எனும் குற்றமும் சேர்ந்து கொள்ள 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று கைது செய்யப்பட்டு ரியாத் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்களது குற்றத்துக்கான வழக்கு விசாரணை 2017, மே 31 ஆம் நாள் நடைபெற்றது. அப்போது இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு விசாரணையின் போது தூதரக அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது தான் இருவருக்கான தண்டனை நெடுஞ்சாலைக் கொள்ளையின் அடிப்படையில் தீர்ப்பாகக் கூடும் என முடிவானது. அதைத் தொடர்ந்து இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து இந்த வழக்கின் போக்கை அறிந்து வந்தனர். ஆயினும் இம்மாத தொடக்கத்தில் சவுதி சிறையில் இருக்கும் இரு சீக்கியர்களையும் அவர்களுடைய குடும்பத்தினர் தேடத் துவங்கியதும் இந்தியத் தூதரக அதிகாரிகள் மீண்டும் இந்த வழக்கின் போக்கை அறிய சவுதி அரசை தொடர்பு கொண்ட போது தான் தெரிய வந்திருக்கிறது... நெடுஞ்சாலைக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்திற்காக சம்மந்தப்பட்ட அந்த இரு சீக்கியர்களுக்கும் கடந்த ஃபிப்ரவரி மாதம் 28 ஆம் நாள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விஷயம்.

இரு நாட்டு அரசு நடைமுறைகளின் படி சவுதி அரசு, அயல்நாட்டில் இருந்து பணிக்காக சவுதி வந்து அங்கு குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டனை பெறவிருக்கும் கைதிகளுக்கு, தண்டனையை நிறைவேற்றும் முன் அவர்களுடைய தாய் நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆயினும் குறிப்பிட்ட இந்த வழக்கில் அந்த நடைமுறைகள் எதையும் சவுதி அரசு பின்பற்றியதாகத் தெரியவில்லை. அவர்கள் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் அளிக்காமலேயே தண்டனையை நிறைவேற்றி இருப்பதுடன், மரண தண்டனையில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் உடலையும் தாய்நாட்டுக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கும் இத்தகைய தண்டனைகளில் சவுதி அரசு பின்பற்றும் கடுமையான சட்டங்களையே அந்நாட்டுத் தூதரக அதிகாரிகள் முன்வைக்கிறார்கள்.

சவுதிக்கு பணி நிமித்தம் 2013 ஆம் ஆண்டு வாக்கில் லூதியானாவில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த இரு சீக்கியர்களின் கதை இப்படி முடிந்தது. அவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றம் பற்றித் தெரிய வந்தது கூட சத்விந்தர் சிங்கின் மனைவி சீமா ராணி, சவுதியில் இருக்கும் தன் கணவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று அளித்த பெட்டிஷனின் பின்னேயே இந்தியத் தூதரரக அதிகாரிகளுக்குத் தெரிய வந்திருக்கிறது. இல்லையேல் இன்னும் கூட அவர்களுக்கு இந்த உண்மை தெரிய வந்திருக்க வாய்ப்பில்லை. சீமாராணியின் பெட்டிஷனின் பின்பு தான் கழுத்தை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அந்த இரு சீக்கியர்களின் உடலை அளிக்கக் கோரி இந்தியத் தூதரகம் சவுதி அரசைக் கேட்டுக் கொண்டது. ஆயினும் அதற்கு சவுதி அரசு ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கும் சவுதியின் கடுமையான சட்டங்களே காரணம் எனக் கூறப்படுகிறது.

மேற்கண்ட வழக்கில் அந்த இரு சீக்கியர்களும் செய்தது குற்றம். முதல் குற்றம் வேலை நிமித்தமாகச் சென்ற நாட்டில் குழு சேர்ந்து கொண்டு நெடுஞ்சாலைகளில் திருட்டில் ஈடுபட்டது. இரண்டாவது குற்றம் கொள்ளையில் பங்குத்தகராறு காரணமாகக் கூட்டாளியைக் கொன்றது. இத்தகைய இரு குற்றங்களையும் செய்து விட்டு இன்று இந்தியாவில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி பெயிலில் வெளிவந்தோ அல்லது காசை வாரி இறைத்து சந்தேகத்தின் பேரில் ஒட்டுமொத்த வழக்கில் இருந்தே வெளிவந்தோ ஜாலியாக ஊரைச் சுற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்னாரால் தான் கொலை நிகழ்ந்திருக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டும் கூட மேல்முறையீட்டுக்கு மேல் முறையீடாகச் செய்து அரசியல், பண பலம் மற்றும் அதிகார பலத்தால் வழக்கில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக உலவக்கூடிய கொடுங்குற்றவாளிகள் இந்தியாவில் பலர் இருக்கக் கூடும். அவர்களை சட்டத்தால் ஒன்றுமே செய்ய முடிந்ததில்லை.

ஆனால், சவுதி அரசில் அப்படி எந்த அவலமும் நேராமல் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள இரு இந்தியர்களுக்கும் முறைப்படி தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை எண்ணி எல்லாம் சட்டப்படி தான் நடந்திருக்கிறது என்று ஆறுதல் கொள்வதா? அல்லது குறைந்தபட்சம் தண்டனை நிறைவேற்றம் குறித்து சவுதியில் இருக்கும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் அளித்து விட்டு இவர்கள் தண்டனையை நிறைவேற்றி இருக்கலாமே! இதென்ன தாய்நாட்டுக்கே தெரியாமல் இரு இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதென்றால் அது எப்பேர்ப்பட்ட அராஜகம், அநியாயம்? என்று ஒரு இந்தியனாகப் பொங்கி எழுவதா? என்பது தான் விளங்கவில்லை.

பிளஸ் 2-வுக்குப் பிறகு: நாளை நமதே!


Published : 16 Apr 2019 10:29 IST

ம.சுசித்ரா


நீங்கள் ஆவலோடும் பதைபதைப்போடும் எதற்காகக் காத்திருந்தீர்களோ, அந்தத் தருணம் இன்னும் சில தினங்களில் வந்துவிடும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள்தாம் அது.

நீங்கள் எதிர்பார்த்திருந்த மதிப்பெண்களுக்கும் வரப்போகும் மதிப்பெண்களுக்கும் இடையில் இருக்கப்போகும் இடைவெளிதான் உங்களுடைய உயர்கல்வியையும் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கப்போகிறதா? அப்படி எந்த அவசியமும் இல்லை என்பதை எடுத்துச்சொல்லும் முயற்சியே இது.

பிளஸ் 2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதை முடிவெடுப்பதற்கு முன்னால் உங்களை நீங்களே உற்றுக் கவனிப்பதற்கான அவகாசம் இது.

அவரவர் விருப்பம், திறமை, வசதி, இன்றைய கல்விச் சூழல் – பணிச் சந்தையின் போக்கு குறித்த விழிப்புணர்வு இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் சில கதாபாத்திரங்களின் ஊடாக அலசி ஆராய்வோம் வாருங்கள்.

#1 பிரியா

படிப்பிலும், கலைத் திறனிலும் பிரியா ‘ஆல் ரவுண்டர்’. இயற்பியல்-வேதியியல்-கணிதம் ஆகிய வற்றை உள்ளடக்கிய பிரிவில் பிளஸ் 2-வில் 96 சதவீதம் பெற்றதால் பிரபலப் பொறியியல் கல்லூரி ஒன்றில் கணினி அறிவியலில் கண்ணை மூடிக்கொண்டு சேர்ந்தார்.

நாட்கள் உருண்டோடிய பிறகுதான் தனக்கான படிப்பு இதுவல்ல என்பது பிரியாவுக்குப் புரிந்தது. அதிலும் கட்டிடக்கலை குறித்து நடத்தப்பட்ட ஒரு பயிலரங்கத்தில் கலந்துகொண்டபோதுதான் அத்துறையில் தனக்கு இருக்கும் ஈர்ப்பு புலப்பட்டது.

அனுபவம் சொல்லும் சேதி:

வெவ்வேறு பாடப் பிரிவுகளில் உள்ள அடிப்படைகளைக் கற்பிப்பதற்கான களம்தான் பள்ளி. ஆகையால் உயர் மதிப்பெண் எடுத்தால் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்புகளே உகந்தவை என்ற முடிவுக்கு வருவது நல்லதல்ல.

இயற்பியல்-வேதியியல்-கணிதம் ஆகிய பாடங்களில் நாட்டம் கொண்டவர்களுக்கு முன்னால் பொறியியலுக்கு அப்பால் இருக்கும் இதர உயர்கல்விப் படிப்புகளும் வாய்ப்புகளும்:

அழகியலில் நாட்டம், துல்லியமாக வடிவங்களை உற்றுநோக்கும் திறன், ஒரு சிறிய இடத்தைக்கூடத் திறம்படப் பயன்படுத்தும் ஆற்றல் ஆகியவை உடையவர்களுக்குக் கட்டிடக்கலை பொருத்தமான படிப்பு.

இதைப் படித்தால் நகரத் திட்டமிடல், நகர வடிவமைப்பு, ‘லேண்ட்ஸ்கேப்’ கட்டிடக்கலை, உள் அலங்கார வடிவமைப்பு, தொழிற்சாலை வடிவமைப்பு உள்ளிட்ட பல வாய்ப்புகள் உள்ளன.

தர்க்கரீதியாகச் சிந்திக்கும் திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன், திட்டவட்டமாக எதையும் அணுகும் பார்வை ஆகியவை இயற்பியல் பாடத்தோடு நெருங்கிய தொடர்புடையவை.

இவற்றில் நீங்கள் கில்லாடி என்றால் இயற்பியலில் வழங்கப்படும் பட்டப் படிப்புகளைப் படித்து ஜியோ பிசிக்ஸ், கம்ப்யூடேஷனல் பிசிக்ஸ், இகோனோ பிசிக்ஸ், டிஃபன்ஸ், ஏரோஸ்பேஸ், ஹை எனர்ஜி பிசிக்ஸ், மெடிக்கல் பிசிக்ஸ், பையோ பிசிக்ஸ், நியூகிளியர் பிசிக்ஸ், டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் பிரகாசிக்கலாம்.

அதேபோல வேதியியல் படிப்பவர்களுக்காகவும் அனலெடிகல் கெமிஸ்ட்ரி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, என்விரான்மெண்டல் கெமிஸ்ட்ரி, ஃபுட் கெமிஸ்ட்ரி, ஃப்ளேவர் கெமிஸ்ட்ரி, இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, மெட்டலர்ஜி, சர்ஃபேஸ் கெமிஸ்ட்ரி எனப் பரந்துபட்ட பணிவாய்ப்புகள் உடைய துறைகள் காத்திருக்கின்றன.

பள்ளியில் படித்த கணக்குகளுக்குச் சரியான விடையெழுதி நூற்றுக்கு நூறு குவிக்க முடிந்தது என்பதாலேயே கணிதவியல் மேதை என்று கற்பனை செய்துகொள்வதும் தவறு. பள்ளிக் கணக்கில் சோபிக்கவில்லை என்பதால் அது நமக்குச் சுட்டுப்போட்டாலும் வராது என்று வருந்துவதும் தவறு.

உங்களுக்குப் பகுப்பாய்வுத் திறனும் தர்க்கவியலும் வாய்க்கப்பெற்றால், எண்களை ஆராய்வதில் அபரிமிதமான காதல் இருக்குமேயானால் மிகவும் சிக்கலான கணிதப் புதிர்களுக்கு விடை கண்டு பிடிக் கும் பேராவல் இருக்குமானால் கணிதவியல் பட்டப் படிப்பில் மகிழ்ச்சியாக இணையலாம். இதன்மூலம் ஆக்சு வேரியல் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், வங்கித் துறை, காப்பீட்டு துறை, நிதித் துறை, பங்குச் சந்தை, வானியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதிக்கலாம்.

#2 ராஜேஷ்

பத்தாம் வகுப்புவரை ராஜேஷ் அறிவியல், கணிதப் பாடங்களில் சுமாராக மதிப்பெண் எடுத்துவந்தான். மறுபுறம் தமிழ் மொழியில் பேசுவதிலும் எழுதுவதிலும் நடப்பு செய்திகளை வாசித்து நண்பர்களோடு அதுகுறித்து விவாதிப்பதிலும் நாட்டம் இருந்துவந்தது. ஆனால், அவனுக்கு ‘படிப்பே வராது’ என்று சக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டான்.

பிளஸ் 1-ல் வணிகவியல் பிரிவைத் தேர்ந்தெடுப்பதா கலைப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதா என்று குழம்பினான். தனக்குக் கலைத் துறையில் ஆர்வம் இருந்தும் ஏனோ வணிகவியலைத் தன்னுடைய நண்பர்கள் தேர்ந்தெடுக்கவே, அவனும் தேர்ந்தெடுத்தான். அதைத் தொடர்ந்து சம்பிரதாயமான பட்டப் படிப்பாக ஏதோ ஒன்றைப் படித்துக்கொண்டிருக்கிறான்.

அனுபவம் சொல்லும் சேதி:

அறிவியலும் கணிதமும் வந்தால் மட்டுமே அறிவாளிகள் என்ற தட்டையான புரிதல் பலரின் எதிர்காலத்தைச் சூனியமாக்கிவிடுகிறது.

மொழி ஆளுமையும் கலை ஆர்வமும் உள்ளவர்கள் அநேகத் துறைகளுக்குத் தேவைப்படுகிறார்கள். தங்களுடைய தனித்தன்மையைப் புரிந்துகொண்டு தன்னிச்சையாக முடிவெடுத்தால், அவர்கள் பிரகாசிக்கக்கூடிய துறைகளில் சில:

மொழியில் ஆர்வம் கொண்டவர்கள் மொழியியல் துறைகளைத் தேர்ந்தெடுப்பது சகஜம். அதுபோக, சிறப்பாக எழுதவும் பேசவும் முடிந்தால், படைப்பாற்றலுடன் புதிய சிந்தனைகளை முன்வைக்க முடிந்தால், உலக நிலவரங்களை அலசி ஆராயும் திறன் இருக்குமேயானால் இதழியல், சட்டப் படிப்பு, ஊடகவியல், வெகுஜனத் தொடர்பியல், விஷுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளைத் தாராளமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

செய்தித்தாள் - தொலைக்காட்சி நிருபர், செய்தி ஆசிரியர் ஆகலாம். சட்டப் படிப்புக்குப் புத்திசாதுர்யத்துடன் தர்க்கரீதியாக ஒவ்வொன்றையும் அலசும் திறனும் இக்கட்டான சூழலைச் சமயோசிதப் புத்தியுடன் கையாளும் ஆற்றலும் அவசியம். இன்றைய சூழலில் இதைப் படிப்பவர்களுக்கு நீதிமன்றத்தில் மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கேள்வி கேட்போமா?

பிரியா, ராஜேஷைப் போல உங்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கதை, பல அனுபவங்கள் இருக்கும். அவற்றை நிதானமாகத் திரும்பிப் பாருங்கள். உயர்கல்வி என்ற பரந்துவிரிந்த பரப்புக்குள் அடியெடுத்து வைப்பதற்கு முன்னால், ‘நான் இதைத்தான் படிக்க விரும்புகிறேனா?’, ‘இந்தப் பாடம் குறித்து நான் எவ்வளவு தெரிந்துவைத்திருக்கிறேன்?’, ‘இந்தப் படிப்புக்குரிய பணிவாய்ப்புகளும் சம்பள நிலவரமும் என்ன?’, ‘என்னுடைய கனவுப் பணிவாழ்க்கைக்கு இந்தப் படிப்பு இட்டுச்செல்லுமா?’, ‘ஏற்கெனவே இதைப் படித்துவருபவர்களுடன் கலந்துரையாடிவிட்டேனா?’, ‘இந்தப் படிப்பை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?’, ‘இதற்குச் செலவழிக்க வேண்டிய கல்விக் கட்டணம் எவ்வளவு?’ என்பன போன்ற கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

“சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன் என்ற முடிவுக்கு வந்த எல்லா விஷயங்களுக்கு முன்பாகவும் ஒரு கேள்விக்குறியை நான் அவ்வப்போது தொங்கவிடுவது உண்டு” என்றார் தத்துவ அறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

நீங்களும் இப்போதே உங்களுடைய உயர்கல்வி குறித்தும் எதிர்காலம் குறித்தும் இடையிட்டுச் சில கேள்விகளை எழுப்பி அலசி ஆராய்ந்து அதன் வழியாக உங்களை அறிந்துகொள்ளுங்கள். ‘நாளை நமதே!’ என்று உரக்கச் சொல்லுங்கள்.

தொடர்புக்கு:

susithra.m@thehindutamil.co.in



Tuesday, April 16, 2019


வண்டலூர் பூங்காவுக்கு ஏப்.18-இல் விடுமுறை


By DIN | Published on : 16th April 2019 06:00 AM

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி, வரும் வியாழக்கிழமை (ஏப்.18) வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ளதால், அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்களிக்கும் வகையில், வியாழக்கிழமை (ஏப். 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பராமரிப்புப் பணிக்காக பூங்கா வழக்கம்போல், செவ்வாய்க்கிழமையும் (ஏப். 16) மூடப்படும் என பூங்கா நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓட்டுப்பதிவு நாளில் உல்லாச சுற்றுலா; பொறுப்பற்ற வாக்காளர்களால் சிக்கல்

Added : ஏப் 16, 2019 02:56

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, 18ம் தேதி, நடக்கிறது. அதற்கு முதல் நாள், 17ம் தேதி மகாவீர் ஜெயந்தி. மறுநாளான, 19ல் புனித வெள்ளி, 20, 21 சனி, ஞாயிறு என்பதால், தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை வருகிறது.

ஓட்டுப்பதிவு நாளன்று, அந்தந்த தொகுதியை சார்ந்தவர்களை தவிர, அன்னியர்கள் இருக்கக் கூடாது என்பது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. பிரசாரத்துக்கு வந்த, வெளி மாவட்டம் மற்றும் வேறு தொகுதிகளைச் சேர்ந்த, அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள், தொகுதியில் இருந்து வெளியேற்றப்படுவர். கண்காணிப்பை மீறி, அவர்கள் தங்கியது கண்டறியப்பட்டால், சிறைத் தண்டனைக்கும் வழியுண்டு. 100 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக, இந்த முறை, தேர்தல் ஆணையம், பல புதுமையான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறது.

அதைப் பொருட்படுத்தாமல், ஐந்து நாள் விடுமுறையை பயன்படுத்தி, சுற்றுலா செல்வதற்கு ஆயத்தமாகும் வாக்காளர்களும் உள்ளனர். வெயில் போட்டு தாக்குவதால், ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு, பச்சமலை போன்ற இடங்களுக்கு செல்வதற்கு, இவர்கள் தயாராகின்றனர். சிலர், ஆன்மிக தலங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

'சுற்றுலா வாகனங்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகி வருகின்றன. ஆனால், அதை மீறி, தங்கள் சொந்த வாகனங்களில் வாக்காளர்கள் சென்றால், அதை தடுப்பது கடினம். 'இருப்பினும், சுற்றுலா தலங்களில் இருந்து, வெளித்தொகுதி வாக்காளர்கள் என்ற முறையில், அவர்களை வெளியேற்ற முடியும்' என்கின்றனர் அதிகாரிகள்.

'ஓட்டுப்பதிவு நாளன்று, உல்லாச சுற்றுலா செல்வது அபத்தமானது. ஒவ்வொரு ஓட்டும் விலைமதிப்பற்றது என்பதை, வாக்காளர்கள் அனைவரும் உணர வேண்டும். 'ஐந்து ஆண்டுகளுக்கான தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சியை முடிவு செய்வதற்கு, உல்லாச சுற்றுலாவை தவிர்க்கக் கூடாதா...' என்று கேள்வி எழுப்புகின்றனர், தேசத்தை நேசிக்கும் வாக்காளர்கள்.

'ஆன்லைன்' ஓட்டு? தூதரகம் விளக்கம்

Updated : ஏப் 16, 2019 01:23 | Added : ஏப் 16, 2019 01:22

புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில், என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், 'ஆன்லைன்' வழியாக ஓட்டளிக்க முடியாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

'லோக்சபா தேர்தலில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஆன்லைனின் ஓட்டளிக்கலாம்' என்ற தகவல், சமூக வலைதளங்களில், வேகமாக பரவியது. இதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டுக்கான இந்திய துாதர் விபுல் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 'ஆன்லைனில்' ஓட்டளிக்க முடியாது. தேசிய வாக்காளர் சேவை தளத்தில் பதிவு செய்தவர்களின் பெயர், தொகுதியின் வாக்காளர் பட்டியலிலும் இருப்பது உறுதியானால், அவர்கள் நேரடியாக, தொகுதிக்கு சென்று ஓட்டளிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது:வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்கலெக்டர் ரோகிணி உத்தரவு

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 04:30 AM
சேலம்,


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பிரசாரம் இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர், அவர்களை சார்ந்தோர் இன்று மாலையுடன் தங்களது பிரசாரங்களை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது.

சமுதாய கூடங்கள், விருந்தினர் மாளிகைகள், சத்திரங்கள் போன்ற இடங்களை வாக்காளர்கள் வாக்கு சேகரிக்கும் விதமாக பயன்படுத்தக்கூடாது. தேர்தல் தொடர்பான பிரசாரங்கள், பயணங்கள் ஆகியவற்றுக்கு வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் பிரசாரம் ஓய்வதால் அந்தந்த தொகுதி வாக்காளர்களை தவிர, மற்ற நபர்கள், வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் போன்றவற்றிலும் வெளி ஆட்கள் யாரையும் தங்க வைக்கக்கூடாது.

பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் வரப்பெற்றவுடன் ஒருசில நிமிடங்களில் பறக்கும் படை குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று துரித நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக அந்த குழுக்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு வலியில்லாமல் இன்சுலின் செலுத்தும் முறை விரைவில் அறிமுகம்ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ பேட்டி


குழந்தைகளுக்கு வலியில்லாமல் இன்சுலின் செலுத்தும் முறை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர் டாக்டர் தர்மராஜன் கலந்துகொண்டனர்.

பதிவு: ஏப்ரல் 16, 2019 04:15 AM

சென்னை,

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சர்க்கரை நோய் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ‘குளுக்கோமீட்டர்’ மற்றும் ‘குளுக்கோ ஸ்டிரிப்ஸ்’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர் டாக்டர் தர்மராஜன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர் ஜெயந்தி பேசியதாவது:-

குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் குறைபாடு முறையான சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் உடலுறுப்புகள் பாதிப்படையும். சர்க்கரை நோய் குறைபாடை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் கட்டுப்படுத்த முடியும். குழந்தைகளுக்கு வலியில்லாமல் இன்சுலின் செலுத்தும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோரிடம் ‘குளுக்கோமீட்டர்’ மற்றும் 50 ‘குளுக்கோ ஸ்டிரிப்ஸ்’ வழங்கப்பட்டது. பின்னர் ‘குளுக்கோமீட்டர்’ பயன்படுத்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அரசர் சீராளர், பேராசிரியை டாக்டர் பூவழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Teacher promotions should be based on performance and capacity: Madras HC

DECCAN CHRONICLE.

Published  Apr 16, 2019, 12:57 am IST

The judge said it was more unfortunate to record that the people in general were not having any respect or trust on the government schools.

Madras High Court

Chennai: The Madras high court has said the assessment of performance and merit in teaching capacity and work performances must be the criteria for granting further promotions and further service prospects.

“Suitable amendments in Rules are required in this regard, especially in respect of the teachers working in government schools”, said Justice S.M.Subramaniam while disposing of a petition from a teacher, challenging the introduction of Aadhar Enabled Biometric Attendance System in government schools.

The judge said the teaching performance, regular attendance, the talent in teaching and the merit level are all to be assessed and based on such assessment, the promotions and other prospects are to be provided. It must be merit cum seniority and it should never be seniority alone. Unless such drastic measures are taken by the government, it may not be possible to provide better education to the children, studying in government schools by improving standards in the government schools, the judge added.

The judge said it was more unfortunate to record that the people in general were not having any respect or trust on the government schools. The parents were not interested in sending their children to government schools. The reasons were to be certainly looked into by the government and appropriate measures were to be taken. When the government was spending huge amount for the development of the government schools, and if such an opinion was allowed to continue against government schools, then the state also failing in its duty to implement the constitutional perspectives, the judge added.
'Conduct probe against educational authorities in event of complaint of corruption'

DECCAN CHRONICLE. | J STALIN

Published  Apr 16, 2019, 1:10 am IST

The government schools were capable of being elevated as high ranking institutions.

Madras High Court

Chennai: Pointing out that there is a growing trend of corruption amongst the higher authorities in education department, the Madras high court has said the vigilance and anti-corruption department must conduct investigations against authorities of the education department in the event of any inputs or otherwise.

Justice S.M.Subramaniam said though the present petition is filed, questioning the Aadhar enabled biometric attendance system, this court is bound to discuss all the issues connected with such discipline, in view of the fact that imparting quality education to the children of our great nation, is the future of our nation. Imparting best education is the ambition of our constitution. Unless the Constitutional courts show some sensitiveness in such matters, the courts are failing in its duty to thrive hard to achieve the Constitutional goals, the judge added.

Observing that there may be opinion that the court is little bit deviating the issues raised in the writ petition, the judge said, “Judges are not goldsmiths. Goldsmiths can create ornaments as per the orders placed by their customers. Judges are bound to look in and around the society and in the event of noticing the unconstitutionality or illegality or paralyzation of developmental activities, then duty mandates on the constitutional courts to initiate appropriate action for the purpose of eradicating or to declare such activities as unconstitutional. Thus, it is not as if, the constitutional courts while exercising the powers under Article 226 of the Constitution of India must decide only the relief and the pleadings, the judge added.

The judge said the excellence in education was expected to be achieved only on the performance of the teachers in imparting education to the children in government schools. The government schools were capable of being elevated as high ranking institutions. However, this can be achieved if the teachers and the authorities of the education department have taken an oath. However, these teachers and administration was not at all interested. They were much interested in their personal gains than thinking about the development of our great nation. These teachers were self concentrated and not interested in imparting best education to the children. Though these teachers were highly qualified and capable of teaching, they were neglecting their duties by committing misconduct of dereliction of duty, the judge added.

The judge said in the case on hand, if a teacher has chosen to challenge the full proof attendance system introduced by the government, how one can expect from a teacher that they will teach discipline to their own students.
IndiGo Delhi-Mumbai flight makes mid-air 'turn back'

The A320 NEO aircraft operated by IndiGo has faced a series of problems earlier with engine vibration being one of them.

Published: 12th April 2019 04:13 PM 

By IANS

NEW DELHI: Budget carrier IndiGo's Delhi-Mumbai flight had to perform a mid-air "turn back" manoeuvre due to excessive vibration from the aircraft's engine number two, industry insiders privy to the development said on Friday.

However, an airline official said that the aircraft had suffered a bird hit en-route from Delhi to Mumbai on Wednesday.

The A320 NEO aircraft operated by IndiGo has faced a series of problems earlier with engine vibration being one of them.


Industry sources said that at least 15 cases of mid-air engine problems have been reported in the A320 NEOs operated by IndiGo and GoAir since January.

Engine vibration resulting in mid-air turn backs has emerged as the most common and serious safety issue with the P&W engine powered NEOs of late.

The country's aviation regulator is said to be examining the incident.

Wednesday's incident comes days after the budget passenger carrier's Delhi-Istanbul flight had to be diverted to Kuwait.

The airline that time had said that an engine snag had hit its A320 NEO aircraft which was en-route from Delhi to Istanbul.
Government told to verify properties of teachers, staff of schools in Tamil Nadu
Court asks how those opposing bio-metric attendance would teach students discipline

Published: 16th April 2019 03:06 AM |

Madras High Court 

Express News Service

CHENNAI : Taking strong objection to the opposition by a teacher for introduction of bio-metric attendance in schools, the Madras High Court has directed the government to verify details of the movable and immovable properties of the teaching and non-teaching staff working in government and aided schools with reference to the declaration made by them in service records.

If any discrepancies are identified, suitable action shall be taken through the department of Vigilance and Anti-Corruption and under Discipline and Appeal Rules, Justice S M Subramaniam said.
The judge gave this direction while passing orders on a writ petition from R Annal, a teacher working in a government school in Nagercoil, challenging the scheme, on Monday.

“If a teacher has chosen to challenge the foolproof attendance system introduced by the government, how can one expect from a teacher that she/he will teach discipline to their own students?. The larger question, which arises in the mind of the court, is over the growing indiscipline in government schools and educational institutions across the State,” the judge said.


Annal had filed the writ petition challenging the introduction of Aadhaar-Enabled Biometric Attendance System (AEBAS) in government and government-aided schools. She sought to declare the GO, dated October 25, 2018, which introduced the new system, as unconstitutional, violative of the Aadhaar Act, 2016 and contrary to the Supreme Court’s order passed in September 2018.

Rejecting the plea, the judge said that stringent measures to maintain discipline were highly essential in view of the growing indiscipline brought to the notice in public domain. The constitutional courts are duty-bound to issue certain directions to the government to regulate discipline and decorum in government schools and educational institutions.
Read more at Medical Dialogues: Total Shortage of 6 Lakh doctors, 20 Lakh nurses in India: 

Read more at Education Medical Dialogues: Telangana private medical colleges demand 3 year fee as bank guarantee 

Read more at Medical Dialogues: Controversy: MCI alleges fraud by Airtel in misleading medical colleges in DMMP Scheme 

DENA CEO MOVES TO IOB

Vijaya Bank’s chief is new MD & CEO of Canara Bank

TIMES NEWS NETWORK

Mumbai:16.04.2019

R A Sankara Narayanan has been appointed MD & CEO of Canara Bank until January 2020, following a government notification issued on Monday.

In a notice to the stock exchanges, Canara Bank said that Narayanan took charge on the same day. He was earlier the chairman of Bengaluru-based Vijaya Bank, which merged with Bank of Baroda with effect from April 1.

He was to take charge earlier. However, following the announcement of the election dates, the government had to obtain clarifications before announcing the appointment.

Meanwhile, Karnam Sekar, former MD and CEO of Dena Bank, will take over as MD and CEO of Indian Overseas Bank (IOB) from July 1 until June next year. Sekar will function as officer on special duty and whole-time director with IOB till the end of June this year.

During Narayanan’s tenure as MD of Vijaya Bank, the public sector lender was one of two banks to have consistently reported a net profit. He is a postgraduate in public administration with an MBA in finance. He began his career with Bank of India as a direct recruit officer in 1983 and rose up the ranks and served in overseas assignments in Tokyo and Singapore.

Jet crisis leaves staff with little to pay kids’ fees, loans

Quitting No Option As Other Airlines Either Not Hiring Or Offering Half Pay

Saurabh Sinha & Manju V TNN

16.04.2019

March 16, 2019, is a day Jet Airways’ Captain Amit Rai* isn’t going to forget soon. That morning, he received a message posted by an aircraft maintenance engineer (AME) on a WhatsApp group seeking financial help for his son who was being treated in a Delhi hospital for aplastic anemia, a condition in which the human body stops producing enough new blood cells.

“Request has been made to HR (to) release my three months’ pending salary. It is still pending. The suggested treatment is bone marrow transplant which (will) cost over ₹25 lakh. I am left with no choice (but) to make an appeal to all my colleagues to help in this dire hour,” read the WhatsApp from the AME, who had exhausted his entitlement for hospitalization expenses. But even as the cash-strapped management and pilots scrambled to arrange funds, the young boy passed away.

While passenger woes have been highlighted in the media, the impact of the nearcollapse of a big company that employs over 14,000 people goes much deeper. Since January, Jet has deferred pay cheques for those in the highincome bracket — pilots, AMEs and senior management — but in March, salaries dried up for everyone.

Sukhbir Singh, 45, who works as Jet’s loader supervisor at Delhi airport, says his finances are already fraying. His daughter has just given her Class 12 exam, and son is now in Class 10. “I had to pay for my daughter’s coaching classes so that she could get admission in law but there’s not enough to pay my son’s school fees. I have requested them to give me time. Hope they see what our condition is,” said Singh, who earns ₹28,000-38,000 a month as loader.

Even quitting isn’t an option since the sudden surge of people looking for jobs has sent salaries plummeting. “Those who went to other airlines were offered half their current salary,” said Singh.

Besides employees on the roll, Jet also employs 6,000 plus contract workers. They may be the worst hit, says Deepak Gaikwad, managing director, Target Hospitality, which supplies 1,200 contract workers to Jet at five airports, including Mumbai. “Workers from remote villages join us as an airline job is considered prestigious,’’ he said. They live in slums around the airports in Sahar, Kurla, Andheri and earn around ₹14,000 a month.

Among those who are fretting over their missing pay checks and outstanding EMIs are pilots who joined Jet Airways in the past two years. Under the Jet cadet program launched in June 2017, a student pays ₹88 lakh to the airline to earn a Commercial Pilot License and then be trained to fly a Boeing 737.

(*Name changed on request)



IN A TIGHT SPOT: Jet Airways pilots, engineers and cabin crew gathered outside the airline office in Siroya Centre at Andheri in Mumbai and made a plea to SBI to release the promised funds
TIMES IMPACT

Collector visits 85-year-old 1st time voter to show him how to vote

Shanmughasundaram.J@timesgroup.com

16.04.2019

Eighty-five-year-old Kanniyappan and his family were in for a surprise when a team of officials led by Tiruvannamalai district collector K S Kandasamy visited them at their small hut at Maruthadu village in Vandavasi taluk on Monday afternoon.

TOI had reported (Freed from bonded labour, this TN man will vote for 1st time in his life) on Saturday that the octogenarian, his daughter Karuppayi, in her 60s, and her two sons and daughtersin-law would vote for the first time in their life. Their problem was they did not know how to vote.

They were freed from bondage on September 22, 2017 from Veerambakkam in the district after being exploited in woodcutting and charcoal making units in remote villages in Kancheepuram and Tiruvannamalai for several decades. The only politicians they have heard of are MGR, M Karunanidhi and “Amma”.

“We reached their hut to educate them on the voting process. We took the EVM set and VVPAT to their house and explained to them how to vote,” Kandasamy told TOI. He, along with assistant returning office of Vandavasi assembly constituency A N Lavanya explained the whole process to each of the seven voters in the family.

The family members took turns to have a feel of the EVM. The officials spent little over an hour with the family. Kanniyappan searched for some known party symbols on the EVM. Since it was a model EVM, there was no political party symbol on the machine. “We explained to them that the symbols they search for would be there in the EVM machines at the polling booth,” Kandasamy said. “When asked why they had not voted all these years, they said they had no voter ID card and no one told them about voting. They said they had to do work to take care of kids. Hence, never bothered about voting,” said Kandasamy quoting Kanniyappan.

Volunteers of an NGO helped the family obtain ration card and EPIC (electors’ photo identity card) after producing their release certificate that was issued by the revenue department. “We received the voter ID two months ago but did not know about the voting procedure until the officials came home and taught us today,” said Rajendran, a family member.

Kanniyappan’s family is not alone. Kuppan and nine others from three families, who were rescued from bondage, are also going to vote for the first time. They are in Sitheri village in Kelur panchayat of Polur constituency. “We have directed the VAO concerned to reach those families and explain the process to them,” said the collector.


NEVER TOO LATE TO VOTE: Tiruvannamalai collector K S Kandasamy with Kanniyappan at Maruthadu village in Vandavasi
Southern Railway to lease suburban trains

Siddharth.Prabhakar@timesgroup.com

Chennai:16.04.2019

Is it possible for a group of companies or educational institutions to rent a suburban train from Chennai, and also brand it with their name?

As far as officers in Southern Railway are concerned, the answer is a resounding yes.

Railway officials are also open to the idea of running an air-conditioned EMU after approval from the railway board, at a premium.

Officials of Krea University, which is set to come up near Sri City about 75km from Chennai, held talks with railway officials last month regarding this, highly placed sources said.

Sources told TOI that the university had approached SR looking at possibilities of transporting 100-200 of its teaching and non-teaching staff from Chennai on a special suburban train.

The nearest railway station to Sri City is either Tada or Sullurpeta, travelling to each of which takes about two hours by regular suburban service from Chennai Central.

The logic behind the approach was that most of the executives who travel to Sri City either hire or drive their own cars from the city, which takes 2-3 hours one way. Not only is this tiresome, but also expensive.

Sources said that after initial discussions, railway officials offered a bouquet of options.

One of them was running an exclusive coach on a suburban train. Another was a three-coach suburban special exclusively for the university staff. This would be manned by a railway protection force (RPF) officer and a ticket collector and would stop at any station of the university’s choice.

Add-on facilities like branding the train, putting up notice boards inside for announcements, installing coffee vending machines and others were offered.

For this, SR had proposed a cost of about ₹1 lakh for a round trip, which would work out to ₹65 per person. Though this is costlier than a regular suburban train ticket, it’s cheaper than what a cab would cost for a trip to Sri City, sources said. Talks are still on, the sources added.

Such proposals come basically from railway’s pedestrian earnings from suburban services, which comprises 50 per cent of SR’s total passenger traffic.

For instance, in 2018-19, SR carried 410 million suburban passengers which earned ₹207 crore, while the remaining 427 million non-suburban passengers earned ₹5,000 crore.

“Corporates can also bear this expense from their CSR funds, while benefit through the branding,” railway sources said.

The logic behind the approach was that most of the executives who travel to Sri City either hire or drive their own cars from the city, which takes around three hours one way
Judges visit Puzhal prison to counsel 150 prisoners

TIMES NEWS NETWORK

Chennai:16.04.2019

In a first, about 40 judges and magistrates from Chennai, Tiruvallur and Kancheepuram districts provided counselling for first-time offenders who are detained inside the Puzhal prison on Saturday.

The judiciary officers, led by Justice P N Prakash of the Madras high court, visited the prison. About 150 first-time offenders, escorted by the prison officials and police personnel, queued up inside an auditorium at the prison complex.

A senior prison officer said that an initiative to take a new leaf by giving them the right path in their career had been launched.

“This is the first time in the prison’s history that judges and magistrates are conducting counselling classes for the criminals inside the prison,” he said.

Addressing the prisoners, Justice Prakash advised the judiciary officers to consider releasing first-time offenders and criminals while being produced before the court for extending the remand period, with an objective of rehabilitating them.

The total session was for about three hours, during which the judges and magistrates spent about five to 10 minutes counselling each prisoner. The prisoner was escorted by a policeman and a prison staff while they were giving counselling to them at separate desks temporarily modifying the auditorium into a counselling centre.

Though the first-time offenders detained in prison will not be released immediately from the jail, they were given hopes to get themselves released at the earliest, so that they can lead a normal life like others.

The first-time criminals were asked to present themselves before the magistrate concerned, while being produced in the court for considering extension of the remand period. This was to ensure that the judges could consider granting them bail on giving an undertaking before the judiciary officer.



About 150 first-time offenders were present for the counselling session at Puzha prison
Staff can’t resist biometric attendance, says Madras HC

Move To Raise Efficiency, Says Court

TIMES NEWS NETWORK

Chennai:16.04.2019

Teachers and nonteaching staff of government schools cannot oppose the advanced Aadhaar-based biometric attendance system that the government thought fit to introduce to ensure foolproof attendance in the state’s public services, the Madras high court has said.

Justice S M Subramaniam, dismissing a petition filed by R Annal, a teacher in government high school at Vembanoor in Nagercoil, pointed out that there were several allegations in the public domain in respect of the conduct, efficiency level, negligence and dereliction of duty on the part of teachers in government schools across the state. The judge ordered expeditious implementation of biometric attendance, meritcum-seniority based promotions and asset verifications and vigilance proceedings for teaching and non-teaching faculty at government schools.

Growing indiscipline among public servants prompted the state government to introduce such technology for the purpose of improving the efficiency level in public administration, Justice Subramaniam said.

“The Aadhaar-enabled biometric attendance system is systematically being implemented by the government of India, high courts and other public institutions across the country. When the government thought it fit to introduce such an advanced system for ensuring fool-proof attendance system in public services, it cannot be objected to by a teacher, who is expected to be a role model for young children,” the judge added.

Rejecting Annal’s contention that she did not have an Aadhaar number and that insisting on her using biometric scheme would be violative of her fundamental right to privacy, Justice Subramaniam said: “If the petitioner is willing to continue as a public servant, then she is bound to abide by the service conditions. If she is not willing to undergo such system, which has been introduced by the government in the public interest, then she has to take a decision whether to continue in service or to leave the service.”

Fundamental Rights ensured under Part III of the Constitution are subject to certain reasonable restrictions and no fundamental right is absolute, the judge said. “The State can impose certain reasonable restrictions in order to protect the rights of all citizens,” he added.

Comparing the performance of government school teachers to that of their counterparts in private schools, Justice Subramaniam said a number of private schools were highly successful despite the fact that teachers in such private schools were receiving far lower salaries than those being paid to teachers in government schools.

It is in this context that the judge said assessment of performance and merit in teaching capacity and work performances must be the criteria for granting further promotions and other benefits.

Monday, April 15, 2019

Chennai: Showroom asked to pay for wrong car registration number 

DECCAN CHRONICLE.


Published Apr 13, 2019, 3:48 am IST

The showroom staff wrongly allotted registration number TN-19 AD- 2852 instead of TN 19 AD- 2842 on May 11, 2017.

The petitioner P.Seethalakshmi of Guduvancheri, submitted that she wished to purchase a new car for her home needs in April 2017.

Chennai: The District Consumer Disputes Redressal Forum, Chengalpattu, Kancheepuram District directed a car showroom to pay a compensation of Rs 30,000 to a woman for wrongly allotting registration number of a new vehicle purchased by her two years ago. The showroom staff wrongly allotted registration number TN-19 AD- 2852 instead of TN 19 AD- 2842 on May 11, 2017.

The petitioner P.Seethalakshmi of Guduvancheri, submitted that she wished to purchase a new car for her home needs in April 2017. She purchased the Maruti Suzuki Celerio Zxi AMT

for Rs.5,35,075 from Vishnu Cars Private Limited, Chrompet. On April 26, 2017 the vehicle was registered with the RTO, Chengalpattu. Branch Manager, E outlet, Vishnu Car Private Limited, handed over the Maruti Suzuki Celerio with the number TN-19 AD 2852.

On May 11, 2017 the vehicle was taken by sales executive Mohammed Farooq to the showroom for fixing accessories. When it was delivered she had noticed the vehicle's registration number was changed from TN?19 AD?2852 to TN - 19 AD?2842 without even informing her. She stated that the action of the showroom caused her mental agony. She sought a direction to MD and Branch Manager, E-outlet, Vishnu Car Private Limited, Chrompet to pay a compensation of Rs 9 lakh for committing deficiency in service and hardship.

In the reply, the MD and Branch Manger admitted that registration of vehicle with concerned RTO was done by staff of the concerned showroom. Before fixing the accessories, the complainant was informed about the change in registration number of the car. The mistake was committed due to miscommunication between the RTO agent and the staff. The showroom staff found that the car registration number bearing TN?19?AD- 2852 was wrongly given instead of TN?19?AD?2842, which was orally communicated to her on May 11, 2017.

The bench comprising President J.Justin David and member K.Prameela, said the sale executive came to the house of the complainant and informed that they wanted to place some accessories in the vehicle and took it to the service centre. But the staff have not placed any accessories in the vehicle and in turn they changed the registration number. The action amounts to negligent act. The bench directed the MD and Branch Manger to pay Rs 30,000 for causing mental agony to her due to the deficiency in service.
Indian student dies at Bangladesh medical college, flight carrying mortal remains takes off from Dhaka

The 22-year-old girl was "suffering from epilepsy for a long time, but she stopped receiving medicine recently," the report quoted a doctor as saying.

Published: 15th April 2019 12:19 AM

By PTI

DHAKA: An aircraft carrying the mortal remains of an Indian girl, who was pursuing her MBBS degree from a private medical college in Bangladesh, took off from Dhaka on Sunday.

Quratul Ain, a fourth-year MBBS student from Jammu and Kashmir's Anantnag district, died on Saturday after suffering a seizure at the hostel of Tairunnessa Memorial Medical College (TMMC) in Bangladesh's Ghazipur district, according to bdnews24.com.

"Our thoughts are with the dear ones of Ms. Quaratul Ain. Air India flight AI 229 carrying her mortal remains has taken off from Dhaka," the Indian High Commission here tweeted on Sunday.

The 22-year-old girl was "suffering from epilepsy for a long time, but she stopped receiving medicine recently," the report quoted a doctor as saying.


Following her death, the family and former JK chief ministers Mehbooba Mufti and Omar Abdullah sought External Affairs Minister Sushma Swaraj's help to bring back Quratul's body.

Meanwhile, Swaraj also tweeted, "The family should not worry. With the efforts of Indian High Commission in Dhaka, the mortal remains of Ms. Quaratulain MBBS student from Anantnag are on board and the flight has taken off. My Officers are waiting at the Kolkata Airport to receive her mortal remains."

Chennai: Electronics firm, dealer directed to pay Rs 15000

Shreeraj Electronics, the authorised service centre of Panasonic, did not return the TV, instead gave an estimate of Rs 55,128 to repair it. 


Published: 13th April 2019 05:24 AM 

By Express News Service

CHENNAI : A consumer forum here has directed Panasonic and its dealer as well as authorised service centre, to pay a compensation of Rs 15,000 to a city resident after a TV he purchased, was repaired within a year. The forum, in a recent order, also directed the company to repair the TV free of cost. L Anantharaj, a resident of Thiruvanmiyur, had purchased the TV in 2010 from a dealer, Shah Electronics, at a cost of Rs 64,000. He submitted in the forum that the power switch of the TV was repaired within the warranty period.

However, Shreeraj Electronics, the authorised service centre of Panasonic, did not return the TV, instead gave an estimate of Rs 55,128 to repair it. Aggrieved by this, Anantharaj approached the District Consumer Disputes Redressal Forum, Chennai South. The company or the service dealer did not appear before the forum despite notices and the forum gave its order, setting them as ex-parte. The forum presided by M Mony, directed that both, Shreeraj and Shah electronics along with Panasonic India service manager are jointly and severally liable to return the mentioned TV after due repair within one month free of cost and to pay a sum of Rs 15,000 for causing mental agony to the complainant
RGUHS to grant permanent affiliation to its colleges 

Staff Reporter 

 
Bengaluru, April 15, 2019 00:00 IST
 
Around 650 colleges are affiliated to the university.file photo

It will be given to those with good infrastructure and teaching facilities; the varsity will, however, reserve the right to conduct surprise inspections

The Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) plans to grant permanent affiliation to its colleges if they are found to have good infrastructure and teaching facilities.

Around 650 medical, dental, nursing, ayurveda, homeopathy, unani pharmacy, physiotherapy, and other allied health sciences colleges are affiliated to the university. At present, the local assessment committees visit each college every year and recommend to the university to grant or reject affiliation.

Criteria

S. Sacchidananda, Vice-Chancellor of RGUHS, said the university had proposed that colleges, which fulfil certain criteria, will be granted permanent affiliation. “We are currently mulling over the idea of providing affiliation to such colleges either once in three or five years. The final decision will be taken at the upcoming syndicate meeting,” he said.

The university will, however, reserve the right to conduct surprise inspections when it deems necessary. The university statutes have a provision to grant permanent affiliation, but it has not been done by the university so far.

Dr. Sacchidananda said that granting permanent affiliation would help both the college managements as well as the university. “There are many colleges that are par excellence and there is no need to inspect them every year. We will save on our resources and our staff can devote time to scrutinising colleges that are not up to the mark,” he said. He also added that the college managements can pay the fees and submit all relevant documents once every few years once this is approved. He said that once a few colleges get permanent affiliation, other colleges would also strive to get the same, which would improve the quality of colleges as there are higher standards required to get this tag.

The move has been welcomed by college managements. “The documentation to get affiliation is very laborious and time consuming. The university should strive to ensure that the assessment is simplified and transparent so that it would reduce red tape in the process,” the principal of a private medical college in Bengaluru said.

There are many colleges that are par excellence and there is no need to inspect them every year. We will save on our resources and our staff can devote time to scrutinising colleges that are not up to the mark. S. Sacchidananda, Vice-Chancellor of RGUHS

Sunday, April 14, 2019

சித்த மருத்துவத்தில் புரட்சி ஏற்பட வேண்டும்; நீதிமன்றத்தில் விசாரணைக்கு அமர்ந்தாலே ரத்த அழுத்தம் வந்துவிடும்: நீதிபதி என்.கிருபாகரன்

Published : 11 Apr 2019 14:05 IST

கி.மகாராஜன்மதுரை




உயர் நீதிமன்ற கிளையில் சித்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசுகிறார் நீதிபதி என்.கிருபாகரன்.


சித்த மருத்துவத்தில் புரட்சி ஏற்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி என்.கிருபாகரன் கேட்டுக்கொண்டார்.

மதுரை தேனி மாவட்ட சித்த மருத்துவத் துறை மற்றும் வழக்கறிஞர்கள் சங்கம் (மகா) இலவச ஆயுஷ் மருத்துவ முகாம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

முகாமிற்கு நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமை வகித்தார். மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நிர்வாகி நீதிபதி என்.கிருபாகரன் பேசியதாவது:

"எப்போது ஆங்கில மருத்துவத்தை இறக்குமதி செய்தோமோ, அப்போதே நோய்களையும் இறக்குமதி செய்துவிட்டோம். இந்த மண்ணுக்கு ஏற்ற உணவு, வாழ்க்கை அடிப்படையில் வந்ததே சித்த மருத்துவம். இதைக் கணக்கிட்டே நம் முன்னோர்கள் இந்த மண்ணில் விளைந்த உணவுப் பொருட்களையும், அதைச் சாப்பிடும் முறைகளையும் வகுத்து, 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற வாழ்க்கை தத்துவத்தை சொல்லிச் சென்றனர். இதை காலப்போக்கில் பின்பற்றாததால் பல நோய்களுக்கு ஆளாகிறோம்.

இதனால், சித்த மருத்துவத்தில் புரட்சி ஏற்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு அமர்ந்தாலே ரத்த அழுத்தம் வந்துவிடும். இதனால் நீதிமன்ற வளாகத்துக்கு ரத்த அழுத்த மருத்துவம் அவசியம். இங்கு சித்த மருத்துவப் பிரிவு தொடங்கியதில் இருந்து நீதிமன்ற வளாகத்தில் ரத்த அழுத்தம் குறைந்துவிட்டது. இதிலிருந்து சித்த மருத்துவப் பிரிவின் மகத்துவம் தெரிகிறது. நம்மால் முடிந்த அளவு சித்த மருத்துவ வளர்ச்சிக்கு உதவ வேண்டும். நீதித்துறையும் சித்த மருத்துவத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கும்".

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.

இலவச ஆயுஷ் மருத்துவ முகாமில் எலும்பு திறன் அறிதல், சர்க்கரை நோய் கண்டறிதல், தோல் நோய்கள், வர்ம சிகிச்சைகள், மூட்டு சிறப்பு சிகிச்சைகள், பெண்கள் நலன் சார்ந்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மூலிகை மற்றும் மருந்து மூலப் பொருட்கள், அரிய ஓலைச் சுவடிகள், மருத்துவத்துக்குப் பயன்படும் மலர்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன.

உயர் நீதிமன்றக் கிளை சித்த மருத்துவப் பிரிவு சித்த மருத்துவ அலுவலர் சி.சுப்பிரமணியன் உட்பட 30-க்கும் மேற்பட்ட சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யோகா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ரூ.3 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
உயிர்பிச்சை அளித்தவளுக்குப் பாடைக் காவடி

Published : 15 Mar 2018 10:24 IST

வி.சுந்தர்ராஜ்




மார்ச் 25 பங்குனித் திருவிழா

தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், தெய்வங்கள் அதை நிறைவேற்றித் தருவதாக நம்புவதும், அந்த நன்றிக் கடனுக்காக நேர்த்திக் கடன் செலுத்துவதும் காலம்காலமாக நடந்துவரும் வழக்கம்தான். குழந்தை பிறந்தால் தொட்டில் கட்டுவது, அபிஷேக ஆராதனைகளைச் செய்வது, கோயிலுக்குப் பொருட்கள் வாங்கிக்கொடுப்பது, பால்குடம் எடுப்பது, காவடி என்றுதான் பெரும்பாலும் இருக்கும். ஆனால், தன் உயிரைப் பிழைக்கவைத்த தெய்வத்துக்கு, பூரண குணமானதும் பாடை கட்டி அதில் பிணம் போல் படுத்துக்கிடந்து, கோயிலைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் முறை வலங்கைமானில் உள்ளது.

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வலங்கைமான் ஊரின் சாலையோரத்திலேயே சீதளாதேவி மகா மாரியம்மன் கோயிலில் இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்படுகிறது.

வலங்கைமான் மகா மாரியம்மன் உருவில் சிறியவள், எளிமையானவள். ஆனால், தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிவதில் அவளைவிடப் பெரியவர் எவரும் இல்லை என்ற நம்பிக்கையை பக்தர்களிடம் விதைத்திருப்பவள்.

குழந்தை வடிவில் வந்தாள்

சுமார் 220 ஆண்டுகளுக்கு முன் வலங்கைமான் அருகே உள்ள அடைக்கலங்காத்த அய்யனார் கோயில் அருகில் ஒரு குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை வலங்கைமானில் உள்ள ஏழைப் பெண் ஒருவர் வளர்த்து வந்தார். இந்த நிலையில் அந்தக் குழந்தை வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.

அன்று இரவு ஊர் மக்களின் கனவில் வந்த அந்தக் குழந்தை, ‘எனக்கு உடல் இல்லையே தவிர, உயிர் இருக்கிறது’ என்று கூறி மறைந்தது. மற்றொரு முறை ஊரில் உள்ள பெண் ஒருவரின் மீது அருள் வடிவில் வந்த அம்மன், ‘நான்தான் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவர்களுக்கு அபயம் தந்து காப்பேன்’ என அருளியது.

இதைக் கேட்டதும் ஊர் மக்கள், குழந்தைக்குச் சமாதி எழுப்பினர். இந்தக் குழந்தை சீதளாதேவி மகா மாரியம்மனாக இருந்து அருளாட்சி புரிந்துவருகிறாள். நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து வைத்தபடி வீர சிம்மாசனத்தில் மகா மாரியம்மன் வீற்றிருக்கிறார். வலது மேற்கரத்தில் உடுக்கையும் வலது கீழ்க்கரத்தில் கத்தியும் இடது மேற்கரத்தில் சூலமும் இடது கீழ்க்கரத்தில் கபாலமும் வைத்திருக்கிறார். அம்மனின் இரு தோள்களிலும் நாகங்கள் உள்ளன.

இத்தலத்தின் உள் சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், இருளன், பேச்சாயி, பொம்மி, வெள்ளையம்மாள் உடனுறை மதுரை வீரன் சுவாமி சன்னிதிகள் அமைந்துள்ளன. வாய் பேச முடியாத குழந்தைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து மாரியம்மனுக்கும் பேச்சாயி அம்மனுக்கும் தனித்தனியாகச் சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. உடலில் எந்தப் பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கப்பிரதட்சிணம் வருவது இந்தத் தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

பாடைக் காவடி நேர்த்திக் கடன்

தங்களது வேண்டுதல் நிறைவேறி, பாடைக் காவடி செலுத்தும் பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பார்கள். ஒருவர் இறந்தால் எவ்வாறு பாடை கட்டி அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறதோ அதே போலவே இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்படும்.

கோயிலின் அருகில் ஓடும் குடமுருட்டி ஆற்றில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் நீராடுவார்கள். பின்னர், அவர் ஒரு பாடையில் படுக்க வைக்கப்படுவார்; அலங்கரிக்கப்பட்ட படையின் முன் பக்தரின் உறவினர் தீச்சட்டி ஏந்தி வருவார். பாடையின் முன் தாரை தப்பட்டை அடித்து, அதை நால்வர் தூக்கிக்கொண்டு கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வருவார்கள்.

அப்போது பாடையில் படுத்திருப்பவரின் தலையில் தாடையுடன் சேர்த்து துணி கட்டப்பட்டிருக்கும். கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். நெற்றியில் காசு ஒட்டப்பட்டிருக்கும்.

கோயிலின் முன் மண்டபத்தில் பாடையைக் கொண்டுவந்து இறக்கியதும். கோயில் பூசாரி வந்து அன்னையை வேண்டிக்கொண்டு. அபிஷேக நீரைப் பாடையில் இருப்பவரின் மீது தெளித்து விபூதி பூசி எழச் செய்வார். பங்குனி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்த விநோதப் பாடைக் காவடி திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பாடைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

விழாக்களின் முக்கியமானதாகப் பங்குனி மாதத்தில் நடைபெறும் பாடைக் காவடி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். உயிருக்குப் போராடுபவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், ‘எனக்கு உயிர்ப்பிச்சை கொடு தாயே!’ என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், மாரியம்மனுக்குப் பாடைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

சென்னையில் ஒரு திருக்கடையூர்

Published : 21 Feb 2019 10:55 IST


கீழப்பாவூர் கி. ஸ்ரீ முருகன்




மார்க்கண்டேஸ்வரர் - மரகதவல்லி

பிரகலாதனின் பேரன் பாணாகரன் சிவபக்தன். சிவபெருமானிடம் வேண்டிப் பெற்ற சாளக்ராம லிங்கங்களைத் தினமும் பூஜித்தபின் ஆற்றில் விட்டுவிடுவான். ஆற்றிலிடப்பட்ட லிங்கங்களைப் பிற்காலத்தில் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து, முனிவர்கள் வழிபட்டு வந்துள்ளனர். பாணாசுரன் பூஜித்ததால் பாணலிங்கம் என அழைக்கப்படும் சாளக்ராம லிங்கம் சிவசாந்நித்யம் மிகுந்தது. அவற்றுள் ஒன்று ஷீர நதியிலும் (பாலாறு) கிடைத்துள்ளது. பூலோகவாசம் செய்தபோது மகாலட்சுமி உள்பட சப்த மகரிஷிகளும் இந்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.

மார்க்கண்டேய முனிவரும் தம்முடைய ஆயுளை நீட்டிப்பதற்காகத் தலங்கள்தோறும் சென்று ஈசனை வழிபட்டுவந்தபோது, ஷீர நதிக்கரையிலுள்ள இந்த பாணலிங்கத்தையும் வழிபட்டு, எமபயம் நீங்கி நீண்ட ஆயுள் பெற்றுள்ளார். இந்த புராணப் பெருமை கொண்ட திருத்தலம் சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் அமைந்துள்ள மகப்பேறீஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் மார்க்கண்டேஸ்வரர் கோயில்.

தொண்டை மண்டலத்தில் காஞ்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்த சிவபக்தனான சம்புவராயன் என்ற அரசன் வாரிசின்றி வருந்தினான். தம் பக்தனின் துயர்தீர்க்க முன்வந்த ஈசன்அரசன் கனவில் தோன்றி, “ஷீர நதிக்கரையில் மகாலக் ஷ்மியும் சப்த மகரிஷிகளும் மார்க்கண்டேய முனிவரும் பூஜித்த லிங்கம் உள்ளது. அங்கு சிவ-விஷ்ணு ஆலயம் அமைத்து வழிபடு, மழலைச் செல்வம் பெறுவாய்” என்று கூறினார். அதன்படி ஷீர நதிக்கரைக்கு வந்த சம்புவராயன் அங்கே கவனிப்பாரின்றிக் கிடந்த ஈசனுக்கு, நான்கு ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு ராஜகோபுரங்களுடன் ஆலயம் அமைத்தான். மார்க்கண்டேஸ்வரரை மனமுருகி வழிபாடு செய்தான்.

தொண்டை மண்டல பாணியில் கருவறை

ஈசனின் கருணையால் சம்புவராயருக்குப் புத்திரப்பேறு வாய்த்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய சம்புவராயன் ஈசன் எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரத்தை மகப்பேற்றை வழங்கும் சந்தானமங்கலம் என்று பெயரிட்டார்.



மகாலக் ஷ்மி

தம்முடைய வேண்டுதலை வெற்றிபெறச் செய்த ஈசனை சித்தேஸ்வர், சிதானந்தேஸ்வரர் என்றும், அம்பிகையை மரகதவல்லி, சந்தான கௌரி என்றும்அழைத்து மகிழ்ந்தான். குழந்தைக்கு மல்லிநாதன் என்று பெயரிட்டான். மல்லிநாதன் இளைஞரானதும் இவ்வாலயத்துக்கு விரிவாக்கப் பணிகள் செய்துகொடுத்துப் பெருமிதம் கொண்டான்.

தொண்டை மண்டல பாணியில் கஜப்பிருஷ்டக் கருவறை அமைப்பு கொண்ட இவ்வாலயம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தாமரை வடிவ ஆவுடையார் பீடத்தில் மார்க்கண்டேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இங்கு வரும் பக்தர்களின் எம பயத்தை அகற்றி, நீண்ட ஆயுள் தருகிறார்.

ஈசனுக்கான நித்ய பூஜைக்குத் தேவையான தீப எண்ணெய், புஷ்ப மாலைகள், பூஜைப்பொருட்கள் வழங்கி அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது இவ்வாலயத்தின் மரபு. மார்க்கண்டேஸ்வரரை வழிபடுவோருக்கு உடல் ஆரோக்கியம், மன அமைதி, தொழில் வளம், பதவி உயர்வு போன்ற பலன்கள் கிட்டுகின்றன. மேலும், எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கும் இத்தல ஈசன் நல்வழி காட்டுவதாக பலன் அடைந்த பக்தர்கள் கூறுகிறார்கள்.

சத்புத்திர பாக்கியம்

அம்பாள் வரதஹஸ்த நாயகியாக, நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி வீற்றிருக்கிறார். இவ்வன்னையை ஐந்து திங்கள் கிழமை, ஐந்து தீபங்கள் வீதம் ஏற்றி வழிபடத் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. 11 அல்லது 21 எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலை கோத்து அணிவித்து வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கி, மகப்பேறு வாய்க்கிறது. கணவரின் ஜென்ம நட்சத்திரத்தன்று, காலையில் உணவருந்தாமல் தம்பதியாக வந்து வழிபடத் தொடங்கி, பின்னர் ஐந்து வெள்ளிக்கிழமை இவ்விதம் வழிபட்டால் சத் புத்திர பாக்கியம் ஏற்படுகிறது.

திருக்கடையூருக்கு இணையானது இத்தலம். எனவே, இங்கு ஆயுஷ் ஹோமம் செய்து ஆயுள் நீட்டிப்புப் பெறலாம் என்பது ஐதிகம். மேலும், சஷ்டியப்தப் பூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகமும் செய்து கொள்ளலாம்.

இவ்வாலயத்தில் வில்வ மரத்தடியில் ஏழடி உயரத்தில், நின்ற திருக்கோலத்தில் மகாலக் ஷ்மித் தாயார் எழுந்தருளியுள்ளது கூடுதல் சிறப்பு. பவுர்ணமி தோறும் மாலை 6 மணிக்கு மகாலக் ஷ்மிக்கு 11 வகை அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.

காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக இங்கு சித்திர குப்தர்தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். சுமார் இரண்டரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலம் கொண்டுள்ள சித்திர குப்தரை கேதுவுக்கு ப்ரீதியாக கொள்ளு தீபம் ஏற்றி வழிபடலாம். சித்திர குப்தரை வழிபடுவதற்கு பௌர்ணமி உகந்த நாள். அன்று வணங்கினால், புண்ணியங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

எப்படிச் செல்லலாம்?
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்துஅம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும்வழியில் கோல்டன் பிளாட்ஸ்பேருந்து நிறுத்தம் அருகிலுள்ளது மேற்கு முகப்பேர். இங்கு மங்கள்ஏரி அருகேயுள்ள பாரதிதாசன் 2-ஆவது தெருவில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கு முகப்பேருக்கு பேருந்து வசதியும் உள்ளது.
தாம்பத்யம் என்றால் என்ன? புரிந்து கொள்ளாத முரட்டுக் கணவர்கள் & சஞ்சலத்துடன் போராடும் மனைவிகளின் நிலை மாறாதா?!

By கார்த்திகா வாசுதேவன் | Published on : 13th April 2019 01:01 PM

இந்த உலகில் கணவர்களுக்கும், மனைவிகளுக்குமான உளவியல் பிரச்னைகளும், புனிதமான திருமண பந்தத்தின் மீதான வரம்புகள் மீறப்படுகையில் அந்த இருவருக்குள்ளும் நிகழும் அபாயகரமான மாற்றங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் யுகம் யுகமாகத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றைச் சீராக்கிக் கொள்ள வேண்டும் இந்த சமூகத்தின் முன்... உதாரண தம்பதிகளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முனைப்பு வெகு சிலருக்குத்தான் இருக்கிறது. இன்னும் சிலரோ, ஏதோ பிறந்தோம், கடமைக்கு திருமணம் செய்தோம், பிள்ளைகளைப் பெற்றோம் இதோ பிடிக்கிறதோ, இல்லையோ ஏனோ, தானோவென்றாவது வாழ்ந்து தீர்த்து விட்டுப் போய் விடலாம் என்று விட்டேற்றியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இப்படி புரிதலில்லாத சாத்வீகர்கள் வாழும் இதே உலகில் ரஜோ குணத்துடன் அனுதினமும் சண்டையிட்டுக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு வாழும் தம்பதிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்துக்காகவும், சமரசத்துக்காகவும் குவியும் கூட்டமே அதற்கு அத்தாட்சி.


இன்னும் உங்களுக்கு உதாரணங்கள் வேண்டுமெனில் அகமதாபாத்தில் நடந்த கதையைக் கேளுங்கள்...

அந்தப்பெண் மெத்தப் படித்தவர். மத்திய அரசின் ஏதோ ஒரு நிறுவனத்தின் கீழ் சயன்டிஸ்ட்டாகப் பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 14 வயதிலும், 10 வயதிலுமாக இரு ஆண்குழந்தைகள் உண்டு. கணவர் ஏதோ ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிராந்தியப் பிரதிநிதியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த இருவருக்குமான பிரச்னை திருமணத்திற்குப் பிறகு தொடங்கியதில்லை. திருமணத்திற்கு முன்பே தனக்கு கணவராகப் போகிறவர் பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்க நேரிடும் போது அங்கிருக்கும் பெண்களில் சிலரிடமும் வரம்பு மீறிய உறவு கொண்டிருந்த விஷயம் மனைவியாகப் போகும் இந்தப் பெண்ணுக்குத் தெரிய வந்திருக்கிறது. அப்போதே திருமணத்தை தடுத்து நிறுத்தி வேறு மாப்பிள்ளை பார்த்திருக்கலாம். ஆனால், ஏனோ இவர் அப்படிச் செய்யவில்லை. திருமண நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் இப்போது போய் திருமணத்தை தடுத்து நிறுத்தினால் குடும்பத்தில் குழப்பம் வரும் என்று கருதியோ என்னவோ, கணவராகப் போகும் நபரைக் கண்டித்து இனிமேல் இப்படியான நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது. திருமணத்திற்குப் பின் ஒழுக்கத்துடன் மனைவியுடன் மட்டுமே வாழ்வைப் பகிர்ந்து கொண்டு தாம்பத்யத்தைப் புனிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் விஷயத்தை மறைத்து அந்த ஆணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார் அந்த அப்பாவின் பெண்.

சம்மந்தப்பட்ட ஆணின் பெற்றோருக்கு எல்லா விவகாரங்களும் தெரியும். ஆயினும் அவர்கள் தங்கள் மகனைக் கண்டித்ததாகத் தெரியவில்லை. போதாக்குறைக்கு மகனுக்கும், மருமகளுக்கும் ஏதாவது சண்டை, சச்சரவு என்றால் அவர்களது ஆதரவு மகன் சார்பாகவே இருந்திருக்கிறது. திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து அவர்களுக்கும் விவரம் தெரியும் பக்குவம் வந்தபிறகும் தன் கணவனின் நடவடிக்கை மாறாத காரணத்தால் இப்போது மனைவிக்கு வாழ்க்கை வெறுத்தது. பலன்... கணவர் கண்ட கண்ட பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதால், தன்னால் இனி அவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியாது, பச்சையாகச் சொல்வதென்றால் இனிமேல் கணவருடன் தாம்பத்யம் வைத்துக் கொள்ள முடியாது என்று அந்த மனைவி முடிவெடுக்கிறார். இப்போது கணவர் என்ன செய்திருக்க வேண்டும்? தன் தவறை உணர்ந்து மனைவியிடம் மன்னிப்புக் கேட்டு மேற்கொண்டு அதே தவறைச் செய்யாதிருந்திருக்க வேண்டும். ஆனால், இந்த முரட்டு முட்டாள் கணவன் செய்ததென்ன தெரியுமா?

தன்னுடன் படுக்கையைப் பகிர மறுத்த மனைவியை எட்டி உதைத்திருக்கிறார். எங்கே என்று கேட்டு விடாதீர்கள். தாம்பத்யத்தின் புனிதம் காக்கப்பட வேண்டிய அத்தனை உடல் பாகங்களிலும் பெற்ற தாயிடம் கூட காட்டிப் பகிர்ந்து கொண்டு அழ முடியாத அளவுக்கு மோசமான காயங்கள். கன்னத்தை கடித்துக் குதறியதோடு உனக்குப் பாடம் கற்பிக்கவே நான் இதையெல்லாம் செய்கிறேன் என்ற வெறிக்கூச்சல் வேறு.

அத்தனையிலும் உச்சம்... மனைவியை படுக்கையறையின் நான்கு சுவர்களுக்குள் தான் கொடுமைப் படுத்துவது வெளியில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்தாருக்கும் கேட்கக் கூடிய பட்சத்தில் குற்றம் தனதென்று ஆகி விடக்கூடாது என்று, மனைவி தன்னை அடிப்பதால் தான் அழுது போராடுவதைப் போன்று போலியான ஓலத்தை வேறு எழுப்பியிருக்கிறான் அந்தக் கணவன். எத்தனை சைக்கோத்தனமான எண்ணம் என்று பாருங்கள்!

இப்படியொரு கணவனை இன்னும் அந்தப்பெண் மன்னிக்கத்தான் வேண்டுமா? இதுவும் கூட முதல்முறை அல்ல, இதே போன்று பலமுறை அவள், அந்தக் கணவனால் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறாள். விஷயம் காவல்துறை புகார் வரை சென்று இரண்டொரு முறை கணவரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து கண்டித்து, இனி இது போன்ற முரட்டுத் தனமான நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் காவல்துறை நடவடிக்கைக்குப் பயந்து அந்த நிமிடம் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டு வீட்டுக்குத் திரும்பிய ஒரு சில வாரங்களுக்குள் மீண்டும் அந்தக் கொடுமைகளை எல்லாம் அரங்கேற்றத் தொடங்கியிருக்கிறான் அந்தக் கணவன். இதில் தாம்பத்யத்தின் புனித பிம்பத்திற்கு இடமெங்கு விட்டு வைத்திருக்கிறார்கள் இவனைப் போன்றவர்கள்?!

தாம்பத்யம் என்பது எப்போதுமே வற்புறுத்தலின் பால் நிகழக்கூடாது. பூ மலர்வதைப் போலவோ அல்லது தென்றல் தழுவுவதைப் போலவோ, இளங்காற்றுக்கு இலைகள் ஒத்திசைவாய் அலைவுறுதல்போலவோ இரு உயிர்களுக்குள் அந்த வேட்கை முகிழவேண்டும். அது தான் திருப்தியான தாம்பத்ய உறவாக இருக்கக் கூடும் என அகப்பொருள் நூல்களில் தெள்ளத் தெளிவாக அனைத்தும் அறிந்த சான்றோர் பலர் பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால், நம் மூட மனங்கள் மட்டும் எப்போதும் அதைப்புரிந்து கொள்ள முயல்வதே இல்லை. பழுக்கத் தாமதமாகும் பழங்களை தடி கொண்டு பழுக்க வைக்க நினைத்தால் என்ன ஆகும்? அப்படித்தான் நம் நாட்டில் தாம்பத்ய உறவை அணுகுகிறார்கள்.

ஒரு பக்கம் மனோதத்துவ விளக்கம் என்ற பெயரில் உணர்வுகளின் அடிப்படையில் அல்லாமல் வெறுமே உடல் தேவைகளை மட்டுமே கணக்கில் கொண்டு கணவன், மனைவிக்கிடையில் தினமும் அல்லது இருவருக்கும் தேவைப்படும் போதெல்லாம் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதே ஆரோக்யமானது என்கிறார்கள். ஒரு வேளை கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அன்றோ அல்லது அதைத் தொடர்ந்த சில நாட்களோ தாம்பத்ய உறவில் நாட்டம் இல்லையென்றால் அப்போது இம்மாதிரியான நிர்பந்தங்கள் மன உளைச்சலை ஏற்படுத்தாதா? அல்லது மேற்சொன்ன முரட்டுக் கணவன் போன்றோர் தங்களது மனைவிகளை வதைக்க இதையும் ஒரு காரணமாக நீதிமன்றத்தில் முன் வைக்கப் பட மாட்டாதா?

இதை டொமஸ்டிக் வயலன்ஸ் என்கிறார்கள். வீட்டுக்குள் நடக்கும் வரை இது டொமஸ்டிக் வயலன்ஸ். வீட்டில் மனைவி இடம் தராத போது வெளியில் தாம் சந்திக்கும் பெண்களிடமும் இதே விதமாக ஆண்கள் நடந்து கொள்ள முற்பட்டால் அதற்குப் பெயர் பாலியல் வன்கொடுமை. இதென்ன கொடுமை. இரண்டுமே ஒன்று தானே!

இரண்டுக்குமே ஒரே விதமான தண்டனைகளை அளித்தாலும் தவறில்லையே!

கணவன், மனைவி இருவரும் மனமொப்பி இணைவது தான் தாம்பத்யம். அப்படியல்லாமல் இருவரில் எவர் ஒருவர் தேவைக்காகவும் மற்றவர் பூரண சம்மதமின்றி நிர்பந்தப்படுத்தப் பட்டால் அதன் பெயர் பாலியல் வன்முறை தான். இதை உலகத்தின் அத்தனை கணவன், மனைவிகளும் உணர வேண்டும்.

விவாகரத்துகளை உற்சாகப்படுத்துவதாக நினைத்து விடத் தேவையில்லை. நிச்சயமாக மேற்கண்ட சம்பவத்தில் இப்போது அந்த மனைவி என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அவள் மீண்டும் தனது நடத்தை தவறிய கணவனுடன், முரட்டு, முட்டாள் கணவனுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டுமா?

அந்த வாழ்க்கை சரி இல்லையென்றால் அதிலிருந்து விலகி இருக்க அவளுக்கு சட்ட ரீதியாக உரிமை இல்லையா?

கணவனைப் பிரிந்து வாழும் மனைவிகளை இந்தச் சமூகம் நடத்தும் மனப்பான்மை நிச்சயம் மாற வேண்டும். கணவர்கள், மனைவிகளைப் புரிந்து கொள்ள முயலவேண்டும். நான் குறிப்பிடுவது மேற்கண்ட சைக்கோக்களை அல்ல. அவன் விஷயத்தில் அந்தப் பெண் விவாகரத்துக்கு அப்ளை செய்து விட்டு தன் வேலையிலும், குழந்தைகள் வளர்ப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கலாம். இனிமேலும் அவன் திருந்துவதற்கு வாய்ப்புகள் அளிக்கத் தேவை இராது என்றே தோன்றுகிறது. அந்தப் பெண்மணி இம்முறையும் காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறார். அவர்களின் கதை இங்கொன்றும் புதிதில்லை. பெரும்பாலான குடும்பங்களில் உள்ள நிலவரம் தான். அந்த நிலை மாற வேண்டும்.

இப்போதும் பெண்களின் அல்லது மனைவிகளின் பால் தவறில்லை முழுத் தவறும் கணவர்களது தான் என்று சொல்ல முற்படவில்லை.

இங்கே வலியுறுத்த விரும்புவது தாம்பத்யம் குறித்த நமது சமூக மனப்பான்மை மாற வேண்டும் என்பதையே!

கணவன், மனைவி என்றால் தினமும் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதில்லை. அத்துடன் கணவனுக்கோ, மனைவிக்கோ மனநிலை இடம் தராவிட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நிர்பந்தப்படுத்தியாவது அந்த உறவில் ஈடுபட்டே ஆக வேண்டும் என்பதும் இல்லை. அகமதாபாத் தம்பதிகள் விவகாரத்தில் தாம்பத்ய உறவுக்கு மனைவி மறுத்தது தான் கணவனின் கொடூரத் தனத்திற்கு காரணமாக முன் வைக்கப்பட்டிருக்கிறது.

நாம் எப்போது நளாயினியை கற்புக்கரசியாகக் காட்டிக் கொள்ள விழைந்தோமோ அன்று தொடங்கியது இந்தப் பிரச்னை.

குஷ்டரோகியான கணவன், வேசி வீட்டுக்குச் செல்ல விரும்பினான் என்று அவனைக் கூடையில் சுமந்து சென்று வேசி வீட்டில் விட்டு வந்தால் நளாயினி எனும் பேதை. அவள் நம் இந்தியத் திருநாட்டின் கற்புக்கரசி என்றால் அவளாக் கூடையில் வைத்து சுமந்து செல்லப்பட்ட கணவன் யார்? உண்மையில் மனைவியின் உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் அவனை நளாயினி என்ன செய்திருக்க வேண்டும்? என்று தானே இதில் விவாதங்கள் கிளைத்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இன்றும் கூட நளாயினியையும், மாதவிக்கு கோவலனை விட்டுக் கொடுத்த கண்ணகியையுமே நாம் கற்புக்கரசிகளாகக் கொண்டாடிக் கொண்டிருப்பதால் தான் நம் தேசத்துப் பெண்கள் இப்போதும் அநியாயக் கணவர்களிடத்தில் அடியும், உதையும் பட்டு சித்ரவதைப்பட்டுக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நரகத்தில் உழன்று கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டுமென்றால் பெண்ணை அவளது முடிவுகளுக்காக சதா விமர்சிக்கும் நம் சமூகத்தின் மனப்பான்மை மாறியே தீர வேண்டும்.

இல்லையேல் இது ஒரு தொடர்கதையாகி சமூகத்தில் புரையோடிப்போன நோய்களில் ஒன்றாகும்.

Image courtesy: spikedkoolaid.com
மறந்துபோன மரபும் மண்வாசமும்

By கிருங்கை சேதுபதி | Published on : 13th April 2019 02:43 AM

தமிழ்ப் புத்தாண்டு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) பிறக்கிறது. தைப் பொங்கல் மற்றும் சித்திரையின் முதல் நாள்கள் தமிழர்களுக்குச் சிறந்த திருநாள்கள். வேளாண் தொழிலை கைக்கொண்ட தமிழகக் கிராமங்களில் உயிர்ப்பான நன்னாள்கள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதில் எவ்வளவு உறுதி இருக்கிறதோ, அவ்வளவு உறுதி, சித்திரை முதல் நாளில் செய்யும் எந்தப் பணியும் ஆண்டு முழுவதும் வரும், வளரும் என்கிற நம்பிக்கையிலும் இருக்கும்.

நாளை விடியும்பொழுதில் முடியும் தமிழ் ஆண்டு, புதிதாய் ஒரு புத்தாண்டைக் கொண்டுவரும். அது 60 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. இப்போது மீளவும் வருகிறது. அதாவது, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் பூமி சுற்றியவாறு தொடங்கிய இடத்துக்கே வந்துசேருகிற 60-ஆவது ஆண்டு.

அடுத்த பயணத்தை பூமி ஆரம்பிப்பதுபோலவே, தன் பயணத்தையும் தடையில்லாமல் நடத்திக்கொள்ள தமிழர்கள் இதனை முன்வைத்துக்கொள்வது வழக்கம்.

உழவையே முதன்மையாய்க் கொண்ட கிராம மக்கள், எங்கிருந்தாலும் தங்கள் தாய்க் கிராமத்துக்கு வந்துவிடுவார்கள். பொதுவாய்ப் பார்த்து நிச்சயித்த, புனித வேளையில், புத்தாடை உடுத்தி, பொன் ஏர் பூட்ட வயல்வெளிகளுக்குக் கிளம்புவார்கள்.

குடும்பத் தலைவரின் வலக்கரத்தில், உழுபடைக் கருவியான கொழு இருக்கும். மற்றொரு கையில் தண்ணீர் நிறைந்த செம்பு; கூடவே, வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, தீப்பெட்டியும்... குடும்பத்  தலைவியின் தலையில் கூடை. அதில் குப்பை. (குடும்பம் நடத்துதல் என்ற பொருண்மையில், எப்படித்தான் புகுந்த வீட்டில் குப்பை கொட்டப் போகிறாளோ? என்று கேட்பார்களே, அது இதுதான் என்று சொல்வதுபோல).  புதிதாய்த் திருமணம் முடித்த தம்பதியர் என்றால், கூறைப் புடவையும், பட்டு வேட்டியுமாக புதிய மணமக்களைப்போலவே தோன்றுவர். பார்ப்பவர்களின் நலம் விசாரிப்பும் வாழ்த்துப் பரிமாறலும் வெட்கம் கலந்த மகிழ்வைக் கொண்டுவரும்.
அறுவடை முடிந்த பயிர்த்தாள்களின் அடிப்பகுதியுடன் வயல்வெளி இருக்கும். வரப்புப் புல்வெளியைப் பங்குனி வெயில் பதம்பார்த்த காரணத்தால், காய்ந்த பசுமையோடு தோற்றம் அளிக்கும். நண்டுகள் இன்றி, அதன் பொந்துகள் காற்று வாங்கிக் கிடக்கும் வரப்புகளில் நடந்தபடி ஒரு குறிப்பிட்ட வயலில் இறங்குவார்கள். அதுதான் நாற்றங்கால்.
ஈசானிய மூலை பார்த்து, குடும்பத் தலைவி கொண்டுவந்த குப்பையைக் கொட்டுவார். குடும்பத் தலைவரோ, வெற்றிலை, பாக்கை விரித்து, பத்தியைப் பற்றவைத்து கொண்டுவந்த நீரை ஊற்றி, கொழு கொண்டு உழுது கும்பிடுவார். குழந்தைகளுக்கும் கைபிடித்துச் சொல்லிக் கொடுப்பார்.

நான் பள்ளிக்குச் சென்று, பேனா பிடிப்பதற்கு முன்பு, நாற்றங்காலில் அப்பாவின் கரம் பிடித்துக் கொழு கொண்டு எழுதியது தான் முதல் பாடம். வகுப்பறையில், ஏரினும் நன்றாம் எருவிடுதல் என்ற திருக்குறளைப் பயிலும்போதெல்லாம் இதுவே நினைவில் எழும்.
நெடிதுயர்ந்து நிற்கும் பறம்புமலையின் திருக்காட்சி முன்தோன்றும். மேற்குத்திசையில், அழகர்மலைகளின் அடுக்குகள் மங்கலாய் நீளத் தோன்றும்.

மார்கழி மாதத்து அறுவடைக்காலத்தில், குன்றெனக் குவிந்து கிடக்கும்
நெற்குவையின்முன் வைக்கோலைக் கையில் ஏந்தி வலம் வரச்சொல்லி, பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த மங்கலத்தொடர் மனதில் எழும்.
பொலி பொலி, பிரான்மலை உயரம் அழகர்மலை நீளம், பொலி பொலி என்கிற மங்கல மந்திரம் அது.

நெல்பல பொலிக பொன் பெரிது சிறக்க, விளைக வயலே, வருக இரவலர், பால் பல ஊறுக பகடு பல சிறக்க என்று பாடும் ஐங்குறுநூற்றுப்பாடலின் உணர்வும்,பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம் என்று நம்மாழ்வார் அருளிச் செய்த அருள்மொழியும் இணைந்து பிறந்த வாழ்வியல் மந்திரம்.
அழகர்மலையாம் திருமாலிருஞ்சோலை நீளத்துக்கும், பறம்புமலையாம் பிரான்மலை உயரத்துக்கும் நெல் விளைத்து வறுமைப்பிணி நீக்க எம்முன்னோர்கள் எடுத்த முயற்சியை என்தலைமுறையிலும் தொடர்வேன் என்று சொல்வதற்கான முன்ஒத்திகை இது.

நாற்றங்காலில் நீர்இட்டு உழுத கொழுவின் சேறு புதிய வேட்டியில் பட்டுவிடாமல், வீடு கொண்டுவருவது தனி இலாவகம். வழியில், ஏரிட்டாச்சா? என்று கேட்டு மகிழ்வார்கள். பொங்கல்திருநாளில், பால் பொங்கிற்றா? என்று கேட்பதற்கு நிகரான மங்கல விசாரிப்பு இது.

கொழுவை உள்வீட்டில் வைத்துக் குலதெய்வம் போற்றும் காலை வழிபாடு முடிவடைய மதிய உணவு தயாராகும். அதில், வாழ்க்கை என்பது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் என்பதை உணர்த்திக்காட்ட வேப்பம்பூ ரசமும் பாயாசமும் இடம்பெற்றுவிடும். ஒருவகையில் உடலின் சமநிலை பேணக் கொடுக்கும் உணவாம் மருந்து அது. எல்லாம் அந்தக் காலம்.
ஆண்டு தவறாமல் ஏரிட்டுக் காத்த வயல்வெளிகள், தரிசுகள். இயற்கை உரமான பழங்குப்பை. இப்போது சுத்தமாய் இல்லை. பழைய கட்டடக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டி, பிளாட்போடும் செயல் கண்டு நொந்து மனந்தளர்ந்த கிராமத்துப் பெரியவர்கள் இப்போதும் ஒரு சடங்குபோல், ஏரிட்டுத் திரும்புகின்றனர்.

இந்த ஆண்டும் மழை பெய்து வேளாண்மை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையோடு, பஞ்சாங்கம் புரட்டும் அவர்களைப் பார்த்து உக்கிரம் கொண்ட கதிரவன் உச்சிவான் நோக்கிப் பயணம் கொள்கிற இந்த வேளையில், பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போயினவே என்ற பட்டினத்தடிகளின் வாசகம் மனதைக் கவ்வுகிறது.
வியர்வைப் பிசுபிசுப்பில் பழைய நினைவுகள் மீள எழுவதன் சுவடே அறியாமல், ஹாப்பி டமில் நியூ இயர் என வரும் குறுஞ்செய்தி பார்க்க செல்லிடப்பேசி திரைக்குள் மூழ்குகிறோம், காலமும் அதனோடு சேர்ந்து மூழ்குகிற சோகம் உணராமல்!
டோல்கேட்டில் அனுமதி மறுப்பு தேர்தல் அலுவலர்கள் வாக்குவாதம்

Added : ஏப் 14, 2019 00:34

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி டோல்கேட்டில், கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதி மறுத்ததால், தேர்தல் அலுவலர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கு, ஏ.கே.டி., பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. அங்கு, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் ஓட்டு பதிவு செய்கின்றனர்.இதற்காக, பிற பகுதிகளில் இருந்து அலுவலர்கள், வேன்களில் வந்து செல்கின்றனர். அதன்படி, கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை பயிற்சி முடித்த அலுவலர்கள், வேன்களில் புறப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி - சேலம் புறவழிச்சாலை மாடூர் டோல்கேட்டில், மாலை 3:45 மணியளவில், மூன்று வேன்களில் சென்ற தேர்தல் அலுவலர்களிடம், ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். தேர்தல் பணியில் இருப்பதால் கட்டணம் செலுத்த முடியாது என கூறியதை ஏற்க மறுத்த ஊழியர்கள், அதற்குரிய ஒப்புகை சீட்டு தேவை எனவும், இல்லாவிட்டால் கட்டணம் செலுத்துமாறு கூறி, வேனை அனுமதிக்க மறுத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த தேர்தல் அலுவலர்கள், டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த டி.எஸ்.பி., ராமநாதன் தலைமையிலான போலீசார் சென்று, பேச்சு நடத்தினர். அப்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் வாகனங்களை, கட்டணமின்றி அனுமதிக்குமாறு டோல்கேட் நிர்வாக ஊழியர்களிடம் பரிந்துரைக்கப் பட்டது. அதையடுத்து, 3 வேன்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
குளிக்காத கணவனிடம் இருந்து விவாகரத்து கோரிய மனைவி

Added : ஏப் 13, 2019 22:08

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில், தொடர்ந்து ஒரு வாரமாக குளிக்காததால், துர்நாற்றம் வீசும் கணவனிடம் இருந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி, நீதிமன்றத்தை நாடியுள்ளார். ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. போபாலை சேர்ந்த, 25 வயதுள்ள இளைஞனும், 23 வயது இளம்பெண்ணும், காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், ஓராண்டுக்கு முன் திருமணம் செய்தனர்.மனு தாக்கல்இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த மாதம், இருவரும், பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில், விவாகரத்து பெற விரும்புவதாகக் கூறி, போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
குடும்ப நல நீதிமன்ற ஆலோசகர் ஷைல் அவஸ்தி கூறியதாவது:இளம்பெண் அளித்த மனுவில், 'கணவன் ஒரு வாரமாகியும் குளிக்காமல், தாடியை அகற்றாமல் இருப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. குளிக்கும்படி கூறினால், உடலிலும், உடையிலும் வாசனை திரவியத்தை பயன்படுத்துகிறார்' என, குற்றஞ்சாட்டியிருந்தார். கணவனுடன் சேர்ந்து வாழும்படி, பெற்றோர் கூறிய அறிவுரையை, அந்தப் பெண் ஏற்கவில்லை. கணவன், மனைவி இருவருக்கும் தனித்தனியாக ஆலோசனை வழங்கியும், சமரசம் ஏற்படவில்லை.

உத்தரவுஇதையடுத்து, இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, ஆர்.என்.சந்த், கணவன், மனைவி இருவரும் ஆறு மாதங்களுக்கு, தனித்தனியாக வாழும்படி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவுப்படி, கணவன், மனைவி இருவரும், ஆறு மாதங்கள் தனியாக வாழ வேண்டும். அதன் பின், அவர்களுக்கு, சட்டப்படி விவாகரத்து வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

டி.எம்.இ., பணியிடம்

ஏப் 13, 2019 

சென்னை : 'மருத்துவக் கல்வி இயக்குனர் பதவிக்கு, விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக, எட்வின் ஜோ உள்ளார். இவரது பதவிக்காலம், ஜூலையுடன் முடிகிறது. இதனால், தகுதியான மருத்துவக் கல்லுாரி டீன்கள் மற்றும் பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல, காலியாக உள்ள, தர்மபுரி, துாத்துக்குடி உள்ளிட்ட மருத்துவமனைகளின் டீன்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முன்னர் போல, மருத்துவ கல்வி இயக்குனர் நியமனத்தில் சர்ச்சை எழாமல், பணி மூப்பு அடிப்படையில், தகுதியான மருத்துவக் கல்வி இயக்குனர் நியமிக்கப்படுவார்' என்றனர்.

NEWS TODAY 02.10.2024