Thursday, December 29, 2016

உண்மைக்குப் பின்னால்...

சமூக வலைதளங்கள் மிகப் பெரிய தகவல் புரட்சிக்கு வித்திட்டிருக்கின்றன என்பதில் ஐயப்பாடே இல்லை. இவ்வளவு அதிவிரைவாகத் தகவல் பரிமாற்றம் நடைபெறக்கூடும் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்னால் யாரும் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பல மத்திய ஆசிய நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்குக்கூட இந்த சமூக வலைதளங்கள் காரணமாக இருந்திருக்கின்றன என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.
இந்தியாவிலேயே எடுத்துக் கொண்டால் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தால் அகில இந்திய அளவில் இளைஞர்களையும், நடுத்தர வர்க்கப் பொதுமக்களையும் ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டமாக மாற்ற முடிந்ததென்றால் அதற்கு சமூக வலைதளங்களின் பங்குதான் காரணம். காவல்துறையினரின் அத்துமீறல், அரசு அதிகாரிகளின் அதிகார மீறல், நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் போன்றவை சமூக வலைதளங்களால் வெளிச்சம் போடப்படுவதால், தவறு இழைப்பவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அதே நேரத்தில், தவறான செய்திகளைப் பரப்புவதிலும், பொய்ப் பிரசாரங்களை முடுக்கி விடுவதிலும் சமூக வலைதளங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன எனும்போது, இந்த வளர்ச்சி மனித சமுதாயத்திற்கு நன்மை பயக்குமா இல்லையா என்று யோசிக்க வைக்கிறது. தனிநபர் குறித்த அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பி அவர்களது நற்பெயருக்கு நிரந்தரக் களங்கத்தை சமூக வலைதளங்களால் ஏற்படுத்த முடியும் என்பது பல நிகழ்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை தீர்மானித்ததில் முகநூல் முக்கியப் பங்கு வகித்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முகநூலை பயன்படுத்தி, தவறான படங்களை, போலி ஆவணங்களை, பொய்யான தகவல்களைத் திட்டமிட்டுப் பரப்பியதாகத் தெரியவந்துள்ளது. முகநூல் நிறுவனத்தின் தலைவர் மார்க் சுக்கர்பெர்க், தங்களது நிறுவனத்தின் முகநூல் பதிவுகளில் பெரும்பான்மையானவை நம்பகத்தன்மை உடையவை என்று கூறினாலும், தவறான தகவல்கள் எதுவும் பரப்பப்படவில்லை என்று அறுதியிட்டுக் கூற முன்வரவில்லை.
தவறான சமூக வலைதளப் பரப்புரையில் சமீபத்தில் சிக்கிக் கொண்டவர் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக சிரியாவில் பாகிஸ்தான் செயல்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரித்திருக்கிறது என்று சமூக வலைதளங்
களில் பரபரப்பாக ஒரு தவறான தகவல் பரவியது. இதனை அதிகாரபூர்வமாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது என்றுகூட அந்த சமூக வலைதள செய்தி உறுதிப்படுத்தியது.
இந்தத் தவறான செய்தியை உண்மையென்று நம்பி, இஸ்ரேல் தூதரகத்திடம் விளக்கம்கூடக் கேட்காமல், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர், "எங்களிடமும் அணு ஆயுதம் இருக்கிறது. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்' என்று பேட்டியே கொடுத்துவிட்டார். சமூக வலைதளச் செய்தி அடிப்படை இல்லாததது, தவறாகப் பரப்பப்படுகிறது என்பது தெரிந்ததும், அவ
மானத்தால் மெüனம் காக்கிறார் கவாஜா ஆசிப்.
மேலே குறிப்பிட்ட சம்பவத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டுவிட முடியாது. சில தவறான தகவல் பதிவுகள் சர்வதேசப் பிரச்னையாக மாறுவதற்கான வாய்ப்பு நிறையவே உண்டு. ராஜீய உறவுகளில் அனுமானங்களேகூட வெறுப்பை உருவாக்கிப் போரில் போய் முடிந்த சரித்திரம் ஏராளம் உண்டு.
அரசியலில் எதிரிகளை ஏளனப்படுத்த, தவறான பிம்பங்களை ஏற்படுத்த, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்ப முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்றவை பயன்படுத்தப்படுவது எண்ணிப் பார்க்க முடியாத அளவு அதிகரித்திருக்கிறது. இதற்காகக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் சமூக வலைதளங்
களின் மூலம் எதிரிகளை நையாண்டி செய்வது, நகைப்புக்குரியவர்களாக்குவது என்று செயல்படுகிறார்கள். புகைப்படங்கள் கணினியின் மூலம் மாற்றம் செய்யப்படுகின்றன. எப்போதோ எடுத்த புகைப்படங்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன. ஜுர
வேகத்தில் இவை பரப்பப்படுவதால் இவற்றைத் தடுப்பதும் அசாத்தியமாகி விடுகிறது.
அச்சு ஊடகம், காட்சி ஊடகம் போன்றவற்றில் எந்தவொரு செய்தி பெறப்பட்டாலும் அது நிருபர், தலைமை நிருபர், உதவி ஆசிரியர், செய்தி ஆசிரியர், ஆசிரியர் என்று பல தணிக்கைகளுக்கும், உறுதிப்படுத்தலுக்கும் பிறகுதான் வெளியிடப்படுகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் எந்தவித வரைமுறையும் இல்லாமல், பொய்யும், அவதூறும் பரப்பப்படுகின்றன. தவறைச் சுட்டிக்காட்டுவதற்குள் அவை லட்சக்கணக்கானவர்களுக்கு மறுபதிவு செய்யப்பட்டு விடுவதால், பொய் உண்மையாக உலவுவதைத் தடை செய்ய முடியவில்லை.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆங்கில அகராதி, "உண்மைக்குப் பின்னால்' (டர்ள்ற் பழ்ன்ற்ட்) என்கிற வார்த்தையை இந்த ஆண்டுக்கான சர்வதேச வார்த்தையாக அறிவித்திருக்கிறது. உண்மைக்கும் பொய்க்கும் இடையேயுள்ள நிலையைத்தான் இந்த வார்த்தை குறிக்கிறது. இது சமூக வலைதளச் செய்திகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் வார்த்தை.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமூக வலைதளம் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. பொதுக் கருத்தை உருவாக்கு
வதில் பெரும் பங்கு வகிக்கிறது. முகநூல், கூகுள், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்றவை தவறான தகவல்களைப் பரப்புவதற்கும், பிடிக்காதவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பி அவ
மானப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதை எப்படி தடுப்பது என்பது குறித்த விவாதம்தான் இன்றைய உடனடித் தேவை!
AIADMK meet to urge ‘reluctant’ Sasi to be gen secy
Chennai: For those who witnessed the 'sacrifice' of Congress leader Sonia Gandhi saying no to the Prime Minister post in 2004, the AIADMK general council meet in Chennai on Thursday may give a deja vu.

Three weeks after the death of J Jayalalithaa, after virtually every senior leader of the AIADMK has pleaded with V K Sasikala to take over the reins, the long-time resident of Poes Garden appears to be reluctant. The general council -- a gathering of some 2,000 office bearers of the party's units at various levels -- at Vanagaram is expected to pass a resolution asking 'Chinnamma' to accept the post. But she may just keep away from the meeting.

Sasikala has reasons to be reluctant, at least for the time being: There has been dissent against her leadership, at the lower tiers of the organisation. "Sasikala has still not given her consent, but we are certain there would not be any contest for the post," said AIADMK spokesman C Ponnaiyan. "So far no nomination has been received by the party." Earlier in the day, party rebel Sasikala Pushpa's husband was bashed up by party cadres when he came to submit the RS member's nomination for the party general secretary post.

The party may have its game plan but it has to fulfil the norms laid down by the Election Commission of India to transact organisational tasks. To ensconce Sasikala in the post, the party may have to amend its by-laws that say the general secretary candidate should have been a member of the party for five years without a break. Sasikala does not satisfy this norm because of her expulsion from the party in 2011. Jayalalithaa expelled Sasikala, her husband M Natarajan and 13 other members of the family in December 2011, alleging "treacherous acts," but re-inducted Sasikala alone after her public apology in March 2012. Sasikala had accompanied Jayalalithaa at the party's executive committee meet in June this year.


Ponnaiyan said the by-laws need not be amended. The party's legal team had argued before the Madras high court (on a petition filed by Sasikala Pushpa last week, seeking to restrain the election of Sasikala), that there was no break in her membership since the action was duly cancelled by the party leader. The case has been reserved for judgement. Countering those doubting Sasikala's experience in party matters, some leaders argue that she had played a role in political decisions that Jayalalithaa took during their three decades of association.

Ponnaiyan said the general council is unlikely to transact any business except endorsing the statement of income and expenditure. Senior leaders who back Sasikala seem to have brought around some lower rung leaders who were murmuring in protest.


AIADMK Trichy urban district secretary and tourism minister Vellamandi N Natarajan said, "We are certain that only Chinnamma can steer the party after Amma." Incidentally, Trichy saw a number of banners put up by rebels supporting Jayalalithaa's niece Deepa Jayakuumar.

In the western belt, dominated by the Gounder community, which helped elect 47 MLAs, there is no sign of discontent. The prominent leaders of the region, including ministers Edappadi K Palaniswami, S P Velumani, P Thangamani and senior leader K A Sengottaiyan support Sasikala.

Wednesday, December 28, 2016

மர்மம் எதுவும் இல்லை!

By டாக்டர் எல்.பி. தங்கவேலு 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தது மிகவும் வருத்தத்துக்குரியது. அதைக் காட்டிலும் வருத்தமளிப்பது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை பற்றியும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளைப் பற்றியும் பத்திரிகை, வாரஇதழ், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகப் பரப்பப்படுகிற மோசமான விமர்சனங்களும் கருத்துகளும். இவை மருத்துவ சமுதாயத்தினரிடையே மிகுந்த வேதனையையும் ஒருவித விரக்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில் மூச்சுத்திணறல், ஜுரம் மற்றும் மயக்கநிலை போன்ற காரணங்களுக்காக அப்பல்லோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, உயிர்காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அடுத்தநாள் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கை சுவாசக் கருவியும் அகற்றப்பட்டது. ஓரளவு இயல்புநிலை திரும்பி இருந்தது.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் "நுரையீரல் தொற்று மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு' காரணமாக முதல்வர் அனுமதிக்கப்பட்டார். விரைவில் குணமாகி வீடு திரும்புவாரென்று அறிக்கையும் வெளியிடப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் சார்பாக இருதய சிகிச்சை நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள், சுவாச சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள், நாளமில்லா சுரப்பி மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேற்கூறிய குழுவில் இடம்பெற்றிருக்கும் மருத்துவர்கள், அந்தந்தத் துறையிலேயே மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்கள்.
செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. அன்று திடீரென்று அவருடைய உடல்நிலையில் மீண்டும் தொற்றுநோய் அதிகமாகியும், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம் போன்றவற்றில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு அனைத்து உயிர்காக்கும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நுரையீரல் மட்டுமல்லாமல் இதயத் தசைகளிலும் குறிப்பாக "மைற்றல் வால்வு' போன்ற இடங்களிலும் தொற்று நோய்க்கிருமிகள் பரவியிருப்பதைக் கண்டறிந்தார்கள். அதற்குத் தேவையான சிகிச்சையை அளித்து தொற்று நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள்.
"எய்ம்ஸ்' மருத்துவமனையிலிருந்து சுவாச நோய் நிபுணர், தீவிர சிகிச்சை நிபுணர், இதய சிகிச்சை நிபுணர் ஆகிய புகழ்வாய்ந்த மருத்துவ நிபுணர் குழுவும் அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து சிகிச்சையில் ஈடுபட்டனர்.
செயற்கை சுவாசத்தை எளிதாக்குவதற்காக மூச்சுக் குழலில் "டிரக்கியாஸ்டமி' அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. லண்டனிலிருந்து புகழ் பெற்ற தீவிர சிகிச்சை நிபுணர் ரிச்சர்ட் ஜான் பீலே என்பவரும் வரவழைக்கப்பட்டார்.
இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை குணப்படுத்துவதில் நிபுணர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு ஒரு குறைபாடு குணமானால் வேறொரு குறைபாடு உருவாகிவிட வாய்ப்புண்டு. அதைக் கண்டறிவது, எதிர்கொள்வதுதான் டாக்டர் பீலேயின் சிறப்புத் தேர்ச்சி.
அப்பல்லோ மற்றும் "எய்ம்ஸ்' மருத்துவக் குழுவினர் டாக்டர் பீலேவின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு சிகிச்சையை சிறப்பாகத் தொடர்ந்தார்கள். "எய்ம்ஸ்' மருத்துவக் குழுவினரும், லண்டன் மருத்துவரும் தேவைப்படும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து தேவையான அளவிற்கு தங்கியிருந்து சிகிச்சை அளித்தார்கள்.
சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து மூன்று அனுபவம் வாய்ந்த பெண் ஃபிசியோதெரபிஸ்டுகளும் வரவழைக்கப்பட்டு பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னால் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் மூலமாகத் தொற்றுநோய் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று தெரிவித்தார்கள். செயற்கை சுவாசமும் தேவைப்படும்போது மட்டும்தான் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்கள்.
உடல்நிலையில் ஏற்பட்ட தொடர் முன்னேற்றம் காரணமாக நவம்பர் 6-ஆம் தேதி ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் அறிக்கையே வெளியிட்டார்.
இந்நிலையில், நவம்பர் 19-ஆம் தேதி தனி வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டார். நவம்பர் 25-ஆம் தேதி மீண்டும் மருத்துவமனைத் தலைவர் ஜெயலலிலதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், 90 சதவீத நேரங்களில் செயற்கை சுவாசக் கருவிகள் இல்லாமல் சுவாசிக்கிறார் என்றும், அவருக்குத் தற்போது தேவைப்படுவது பிசியோதெரபியும், நல்ல உணவும் மட்டும்தான் என தெரிவித்தார்.
இவ்வாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கையில் டிசம்பர் 4-ஆம் தேதி மாலையில் ஜெயலலிதாவுக்கு திடீரென மூச்சுத் திணறலும், "கார்டியாக் அரெஸ்டு'ம் ஏற்பட்டது. அப்போது அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவரும் அந்த அறையில் இருந்திருக்கிறார்.
இருதயம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் குழுவினர் அனைவரும் ஒருங்கிணைந்து செய்திருக்கிறார்கள். சுவாசத்தையும், நுரையீரல், இருதய வேலைகளையும் செய்யக் கூடிய "எக்மோ' என்ற கருவியை இணைத்து மீண்டும் இருதயத்தையும், நுரையீரலையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. இத்தனையும் பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா உயிரிழந்தார்.
இந்நிலையில், சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் பிழைத்திருப்பார் என்ற குற்றச்சாட்டு தவறானது.
இதில், மருத்துவமனைக்கு உரியமையாளரான தனி மருத்துவரோ, வெளியில் இருந்து வரும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவரோ, பிற மருத்துவ சிகிச்சை நிபுணர்களோ யாருடைய தூண்டுதலின்பேரிலோ அல்லது தனது சிந்தனைக்கு உள்பட்டோ நோயாளிக்குத் தவறான சிகிச்சை அளிக்கக் கூடிய முடிவை எடுத்துவிட முடியாது என்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் அப்பல்லோவில் சிகிச்சை அளித்த 15 மருத்துவர்களும் மிகவும் அனுபவமும், திறமையும், உலகத்தில் எந்த மருத்துவரோடும் ஒப்பிடக்கூடிய அளவுக்குத் தகுதியும் படைத்தவர்கள்.
75 நாள்கள் தங்கள் வீடு, குடும்பத்தை மறந்து மருத்துவமனையிலேயே தங்கி எப்படியாவது முதல்வரை குணப்படுத்திவிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் இரவு பகலாக அந்த மருத்துவர்கள் பணியாற்றினர். அத்துடன், இந்தக் குழுவினரோடு தில்லி "எய்ம்ஸ்' மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை நிபுணர், இருதய சிகிச்சை நிபுணர், சுவாச நோய் சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட புகழ் பெற்ற குழுவினரும் இணைந்து பணியாற்றினர்.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகப் புகழ்வாய்ந்த லண்டன் கய்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ரிச்சர்ட் ஜான் பீலேயும் பங்குகொண்டு இந்தக் குழுவினருக்கு பல ஆலோசனைகளை வழங்கிச் செயல்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து மூன்று பெண் பிசியோதெரபிஸ்டுகளும் அப்பல்லோ பிசியோதெரபிஸ்டுகளுடன் இணைந்து பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கினர்.
அப்பல்லோ மருத்துவமனை அனைத்து வசதிகளும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த "டெர்ஷியரி கேர்' மருத்துவமனையாகும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறை இருப்பதாகவோ தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவோ சொல்வது அப்பல்லோ மருத்துவமனையை மட்டுமா குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மருத்துவத் துறையையே கேவலப்படுத்துவது போலவும், குறை கூறுவது போலவும்தான் கருத வேண்டியதிருக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது நோயாளியின் விருப்பமின்றியோ, அனுமதி இன்றியோ அவரது நோயைப் பற்றியோ, சிகிச்சை முறை குறித்தோ முழுவதுமாக வெளியிடுவது நோயாளியின் தனிப்பட்ட உரிமையைப் பறிப்பதாகும். ஜெயலலிதாவே மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி மறுத்திருந்தால் அவர்களால் எப்படி வெளியிட்டிருக்க முடியும்?
அடுத்ததாக, அவரது உடல்நலம் தேறி வருகையிலோ அல்லது தனி அறைக்கு மாற்றப்பட்டபோதோ அவரது புகைப்படத்தையோ அல்லது விடியோவையோ வெளியிட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் மக்கள் முன் எப்படித் தோன்ற வேண்டும் என்பதில் தனிக் கவனமும், அக்கறையும் கொண்டவர்கள். அவர்கள் மருத்துவமனையில் நோயாளியாக இருக்கும் கோலத்தில், மருத்துவமனை உடைகளோடும், சிகிச்சைக் கருவிகளோடும் இருக்கும் புகைப்படத்தையோ, விடியோவையோ ஒருபோதும் மக்களுக்கு காட்ட விரும்பமாட்டார்கள். குணமாகி வீடு திரும்பியபின் எடுக்கப்படும் படங்களை மட்டும்தான் வெளியிட விரும்புவார்கள்.
தனது உடையிலும், தோற்றத்திலும் அதிக கவனம் செலுத்துபவர் ஜெயலலிதா. அவரைப்போல தன்னம்பிக்கை உடைய ஒருவர், நாம் பூரணமாக குணமடைந்து திரும்புவோம் என்கிற நம்பிக்கையுடன்தான் இருந்திருப்பார்.
அப்படி இருக்கும்போது, நரைத்த தலையுடனும் நோயாளிக் கோலத்துடனும் தனது புகைப்படம் வெளிவருவதையோ, தன்னைத் தனது அமைச்சர்களேகூட சந்திப்பதையோ அவர் நிச்சயம் விரும்பி இருக்க மாட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களில் அவரைக் காண ஆளுநர் உள்பட எந்த அரசியல் தலைவரையும் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும்போது கடுமையான தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியைப் பார்ப்பதற்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதிப்பதில்லை. தனி வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு வந்தவர்களைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வது முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம்.
மருத்துவர்கள் தங்களுடைய தளராத முயற்சியாலும், திறமையாலும் மரணத்தின் பிடியிலிருந்த ஜெயலலிதாவை மீட்டபின் எதிர்பாராதவிதமாக அவரை இழந்துவிட்டோம். மருத்துவர்களும், மருத்துவமனையும் செய்த பணியைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, கொச்சைப்படுத்தாமல் இருந்தாலே போதும்.
மருத்துவர்களின் நடத்தையில் சந்தேகம் எழுப்புவதை இதற்குப் பிறகாவது விமர்சகர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எங்களுக்கு மருத்துவம் தொழில் கிடையாது. இது ஒரு வேள்வி, தவம். எங்களை மலிவு அரசியலுக்குள் இழுக்காமல் சேவையாற்ற விடுங்கள்.
கட்டுரையாளர்,
உறுப்பினர், இந்திய மருத்துவ கவுன்சில்.

சேகர் ரெட்டி கருப்புப்பணத்தை மாற்றியது எப்படி தெரியுமா?

By DIN  |   Published on : 28th December 2016 01:37 PM  |
சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழக ஆட்சியின் அடித்தளத்தையே தகர்க்கும் அளவுக்கு வலுவான பல ஆதாரங்களை சேகர் ரெட்டி வீட்டிலிருந்து வருமானவரித்துறை கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் இணைய ஊடகங்களில் வெளியாகியிருக்கின்றன.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பதவியில் இருந்து வந்த சேகர் ரெட்டி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, திருப்பதி தேவஸ்தான உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்கு மாற்றாக தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை கொடுத்து வெள்ளை பணமாக மாற்றியுள்ளார் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த 8-இல் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ரூ.147 கோடி பணம், 178 கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்னர். இந்த புதிய ரூபாய் நோட்டுகளை அவருக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் லோதா கொடுத்து தெரியவந்தது. இதில் லோதாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ரூ.34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள்பேரில், சேகர் ரெட்டி, கே.சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து, டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி முன்பு நேரில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சேகர்ரெட்டி, சீனிவாசுலு ஆகியோருக்கு 15 நாள் காவலும், மற்ற மூவருக்கும் 5 நாள் காவலும் கேட்டு சிபிஐ சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 5 பேரும் ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து சேகர் ரெட்டிக்கும் தமிழக தலைமைச் செயலர் இருந்த ராமமோகன ராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து ராம மோகன ராவ் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சட்ட விரோதமாக இருந்த பணம், சொத்துக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து தமிழக அரசு ராமமோகன ராவை தலைமைச் செயலர் பதவியிருந்து இடைநீக்கம் செய்து புதிய தலைமைச் செயலரை நியமித்தது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சாமானிய மக்கள் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம்  ரூபாய் பெறுவதற்கே சிரம்பட்டுக் கொண்டிருக்கும் போது இவர்களிடம் 34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் விசாரணை இன்னும் முடிவடையாததால் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக சிபிஐ தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இதையடுத்து ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், இதற்கிடையே சேகர் ரெட்டி திருப்பதி உண்டியல் பணத்திலும் கை வைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினராக இருந்த சேகர்ரெட்டி, அந்த செல்வாக்கை பயன்படுத்தி திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு அதற்கு மற்றாக தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான கருப்பு பணத்தை கொடுத்து மாற்றியுள்ளார். இதற்கு சிலர் உதவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த செயலுக்கு ஆந்திர அரசின் வாகனமும் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தான உண்டியல் பணம் மூலம் கருப்பு பணம் மாற்றப்படுவதை அறிந்த வங்கி அதிகாரிகள், குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பு உண்டியலில் போடப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக. சார்பில் போட்டியிட்ட 234 வேட்பாளர்களில் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தவிர மற்ற 197 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுகளுக்காக தலா ரூ.4 கோடி வீதம் சேகர் ரெட்டி கொடுத்ததாகவும், இதற்கான ஒப்புகை ஆவணத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கையெழுத்து வாங்கி கோப்பாக தயாரித்து வைத்திருந்ததாகவும், அவற்றை வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் செய்திகள் வெளியாகி வருகின்றன.
வருமான வரித்துறையினர் விசாரணைக்குப் பின் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை வியூகமே அமைத்து கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கு.க பெண்ணுக்கு குவா குவா - இழப்பீடு வழங்க உத்தரவு


திருவாரூர் - திருவாரூர் மாவட்டம் விளமல் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது மனைவி ஜெயசுதா(35).

2005ல் ஜெயசுதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் கர்ப்பமடைந்த ஜெயசுதாவிற்கு 2007 மே 27ம் தேதி திருவாரூர் விஜயபுரத்தில் உள்ள அரசு தாய் சேய் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து, அவர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜெயசுதா மீண்டும் கர்ப்பமாகி ஆண் குழந்தை பிறந்தது.

இதுதொடர்பாக அவர் அரசு மருத்துவமனையில் கேட்டபோது, ஆயிரம் பேரில் 17 முதல் 30 நபர் வரை அறுவை சிகிச்சை தோல்வியடைந்து கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, மருத்துவமனை நிர்வாகம் உரிய விளக்கமும், ரூ. 8 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்று திருவாரூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் ஜெயசுதா மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்ற தலைவர் ஜெயசந்திரன், உறுப்பினர்கள் ரமேஷ், சிவசங்கரி ஆகியோர், ‘கருத்தடை செய்த ஜெயசுதா மீண்டும் கர்ப்பமானதால், இது மருத்துவமனை மருத்துவர்களின் சேவை குறைபாடு என்று தெரியவருகிறது.

மன உளைச்சலுக்காக ரூ. 50 ஆயிரமும் சேவை குறைபாட்டிற்காக ரூ. 50 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் ஜெயசுதாவிற்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்க வேண்டும்.

கால தாமதம் செய்து தொகை கொடுக்கும் பட்சத்தில் 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்

மார்ச் 31-க்கு பின் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும்: மத்திய அரசு


புதுடெல்லி:

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.அதற்கு பதில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.பழைய ரூ.500,ரூ.1000 வைத்திருக்க கூடாது

பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதற் கான கால அவகாசம் நாளை மறுநாள் (30-ந்தேதி) முடிகிறது.அதன்பிறகு அதாவது 31-ந்தேதியில் இருந்து ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கக் கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் கை இருப்பு வைத்து இருப்பது குற்றமாகக் கருதப்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது. அப்படி வைத்து இருப்பவர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து கணக்குகளை தெரிவித்து உரிய வரி கட்ட மத்திய அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. இத்தகைய சலுகைகளையும் மீறி அதிக பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய் துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையை அமல்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவசரச் சட்டத்துக்கான அம்சங்களை அதிகாரிகள் தயாரித்தனர். பிறகு அது மத்திய அரசிடம் ஒப்படைக் கப்பட்டது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்பட்டது. பிறகு அந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அதிக அளவில் வைத்து இருப்பவர்கள் மார்ச் 31-ந்தேதி வரை அவற்றை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுத்துள்ளனர். அதன் பிறகும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்க அந்த அவசரச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 10 தாள்களுக்கு மேல் பழைய ரூ.500, ரூ.1000 வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது. சராசரியாக ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒருவரிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் எந்த அளவுக்கு பிடிபடுகிறதோ அதே மாதிரி 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு மார்ச் 31-ந்தேதிக்குப் பிறகு ஒருவர் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கை இருப்பு வைத்திருந்தால் அவருக்கு 5 மடங்கு தொகையான ரூ.25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.

மிக அதிக அளவில் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகள் வைத்து இருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவும் அவசரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் எந்த அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்து இருக்கிறாரோ அதற்கு ஏற்ப சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பழைய நோட்டுகளின் சட்ட விரோத நடமாட்டத்தை தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வர உள்ளது. ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதம் தொடர்பான தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அதாவது பழைய ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் கையிருப்பு வைத்திருப்பவர்களுக்கு 50 நாட்கள் கெடுவான நாளை மறுநாளுக்கு பிறகு அபராதம் விதிக்கப்படுமா? அல்லது மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு அதிக பழைய நோட்டுகள் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்பது தெளிவுபடுத்தப்பட வில்லை.

இதுபற்றி நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இனி யாரும் அதிக அளவில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வைத்திருக்க முடியாது. பழைய நோட்டுகள் வைத்து இருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் ஒப்படைத்து விட வேண்டும். 30-ந்தேதிக்கு பிறகு பழைய நோட்டுகள் மாற்றப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும்.

ரிசர்வ் வங்கியில் 31-ந்தேதி வரை பழைய நோட்டுகளை மாற்றலாம். ஆனால் குறைந்த தொகைக்கே மாற்ற முடியும். 30-ந்தேதிக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இந்த அபராத நடவடிக்கை மூலம் திரட்டப்படும் பணத்தை நீர்ப்பாசனம், வீட்டு வசதி, கழிவறைகள், உள் கட்டமைப்பு, கல்வி சுகாதாரம் திட்டங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜன் தன் கணக்கில் ரூ.100 கோடி: அதிர்ந்த பெண் கடிதம் மூலம் மோடிக்கு தகவல்

ஐஏஎன்எஸ்

பாரத ஸ்டேட் வங்கியின் மீரட் கிளையில் உள்ள தன்னுடைய ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ.100 கோடி இருப்பதைக் கண்ட ஷீத்தல் யாதவ் என்ற பெண், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

தன்னுடைய கணக்கில் ரூ.100 கோடி வரவு வைப்பு குறித்து ஷீத்தல் யாதவ், வங்கி அதிகாரிகளிடம் சென்று பலமுறை புகார் கொடுக்க முயற்சித்தும், அதிகாரிகள் பிறகு பார்க்கலாம் என்று தொடர்ந்து அலைக்கழித்த பிறகு அவர் பிரதமர் அலுவகத்தை நாடியுள்ளார்.

இந்தப் புகாரை ஷீத்தல் யாதவின் கணவர் சிலேதர் சிங் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்திய ஸ்டேட் வங்கியின் மீரட், ஷர்தா சாலை கிளையில் ஷீத்தல் யாதவ் பெயரில் ஜன் தன் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. அதில் தன்னுடைய வரவு செலவுக் கணக்குகளை கவனித்து வந்தார் ஷீத்தல்.

டிரான்ஸ்ஃபார்மர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார் ஷீத்தலின் கணவர். அங்கேயே பேக்கேஜிங் பிரிவில் மாதம் 5,000 ரூபாய் சம்பளத்துக்கு பணிபுரிகிறார் ஷீத்தல்.

கடந்த டிசம்பர் 18-ம் தேதி, அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஐசிஐசிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றவர் அதிர்ச்சியால் உறைந்துள்ளார். அவரின் கணக்கில் ரூ.99,99,99,394 வரவு வைக்கப்பட்டிருந்தது.

உடனே வங்கிக்குச் சென்று அங்கிருந்த அதிகாரியிடம் ஷீதல் இதைக் கூற, அவரோ கிளை மேலாளர் வந்த பிறகு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று முறை வங்கிக்குச் சென்ற ஷீத்தல் குடும்பத்துக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

உள்ளூர் வங்கி அதிகாரியிடம் பதில் கிடைக்காததால் மன உளைச்சல் அடைந்த சிங், படித்த நபர் ஒருவரை அணுகி பிரதமர் அலுவலகத்துக்கு மெயில் அனுப்ப உதவும்படி கேட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய சிங், ''டிசம்பர் 26 அன்று பிரதமர் அலுவலகத்துக்கு ஈ-மெயில் அனுப்பினோம். ஜன் தன் கணக்கில் ரூ. 50,000 பணத்தை மட்டுமே வரவு வைக்கமுடியும் என்ற நிலையில், அதில் ரூ.100 கோடி எப்படி வந்தது என்ற பிரச்சினையை பிரதமர் அலுவலகமே தீர்த்துவைக்க முடியும்'' என்று கூறியவர், தன்னுடைய ஏடிஎம் ரசீதுகளையும், வங்கி பாஸ்புக்கையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க வங்கியை நாடியபோது, அதிகாரிகள் பேச மறுத்துவிட்டனர்.

NEWS TODAY 08.06.2026